நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#3
வீட்டிற்குள் அவர்கள் நுழைந்த போது வீடே இரண்டாகிக் கிடந்தது. அத்தனை வேலையாட்களையும் போட்டு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தான் யுகேந்திரன்.
அண்ணனைக் கண்டதும் அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
“அண்ணா. என்ன இத்தனை சீக்கிரமா வந்துட்டே? அம்மா. அண்ணன் வந்துட்டான்.”
வனிதாமணிக்கும் ஆச்சர்யமாயிருந்தது. மகனுக்கு முடியலையோ என்ற கவலையுடன் கையில் தேநீர் கோப்பையுடனே வந்துவிட்டார். அவன் மட்டும் அருந்த மாட்டான் என்று மற்றவர்களுக்குமே எடுத்து வந்து கொடுத்தார்.
“என்னப்பா முடிலையா?”
“நான் பக்கத்தில் இருக்கும்போது அவரைக் கவனிக்காமல் விட்டுருவேனா ஆன்ட்டி?”
மகேந்திரனைப் பதில் சொல்ல விடாமல் தான் முந்திக் கொண்டு சொன்னாள் சாருலதா.
‘அது சரி. நீ நினைத்தது நடக்கிற வரையில் அவனைக் கவனிச்சுதானே ஆகனும்.’

மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டாள்.
“இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுடுச்சும்மா. அதான் சீக்கிரம் வந்துட்டேன். ஆமா. யுகேன். என்ன வீட்டையே தலைகீழா புரட்டிப்போட்டிருக்கே? இந்த மாதிரி வேலை எல்லாம் நீ செய்ய மாட்டியே?”
நாளைக்கே கிருஷ்ணாவை அழைத்து வரலாம்னு இருக்கேன் அண்ணா. அதான் கிருஷ்ணாவுக்குப் பிடித்த மாதிரி இப்ப மாத்தறேன். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம். கிருஷ்ணாவுக்கு வீடு நீட்டா இருந்தாதான் பிடிக்கும்.”
‘வீடே இல்லாத அந்த கிருஷ்ணாவுக்கு நீட்டான வீடுதான் பிடிக்குமா? அப்படிப்பட்டவனை நாம பார்த்தே ஆகனும். இன்னிக்கு வீட்டுக்கு போக வேண்டாம்.’
முடிவெடுத்தவள் அதை செயலாற்றுவது போல்
“அத்தான். நாளைக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொன்னீங்கள்ல. அதனால் நானும் இங்கேயே தங்கிடுறேன். அப்பதான் நாம சேர்ந்து போக வசதியா இருக்கும்.”
யாருடைய சம்மதத்தையும் கேட்காமல் விருந்தினர் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவளுக்கு இங்கே தங்குவதற்கு ஏதாவது சாக்கு கிடைத்தால் போதும். அட்டைப் போல் ஒட்டிக்கொள்வாள். பல்லைக்கடித்தவாறே தன் வேலையைத் தொடர்ந்தான் யுகேந்திரன்.
அன்றைய இரவு உணவுக்குப் பிறகு தனது அறைக்கு வந்தவன் சன்னல் கதவை மூட எத்தனிக்கையில் தோட்டத்தில் மகேந்திரன் உலவுவது தெரிந்தது.
அவனும் சென்றான்.
“என்னண்ணா? தூக்கம் வரலையா?”
“என்னவோ மாதிரி இருந்துச்சு. அதான் காற்று வாங்க வந்தேன். ஆமா நீ தூங்கலையா?”
“தூங்கத்தான் போனேன். உன்னைப் பார்த்ததும் வந்தேன்.”
“இன்னும் கல்லூரி திறக்க ஒருவாரம் இருக்கே? அதற்குள் உன் ஃப்ரண்டை வரச் சொல்லிட்டியா?”
குரலில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது கேட்டான்.
“ஆமா அண்ணா. யாருமேயில்லாத ஹாஸ்டலில் எத்தனை நாள்தான் இருக்கிறது? அதான் உன் சம்மதம் கிடைச்ச உடனே வரச்சொல்லிட்டேன்.”
தனது சம்மதம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பான்?
ஏதாவது ஒரு வகையில் முயன்று சம்மதம் பெற்றிருப்பான்.
“நம்ம வசதி வாய்ப்பு பற்றி கிருஷ்ணாவுக்கு தெரியுமா?”
மீண்டும் குரலில் எதையும் வெளிக்காட்டாத தன்மை.
“அதெல்லாம் தெரியும் அண்ணா.”
பதில் சொன்ன தம்பியை முறைத்துப்பார்த்தான்.
“ஐயோ அண்ணா. நல்லா பழகிய பிறகுதான் சொன்னேன். நீ கிருஷ்ணாவை நம்பலாம்.”
“சரி போ. தூங்கு. இன்னிக்கு உனக்கு அதிகமான வேலையாச்சே.”
அக்கறையுடனே சொன்னான்.
அவன் தயக்கத்துடனே சென்றான்.

றுநாள் காலை.

சீக்கிரமே கண் விழித்துவிட்ட யுகேந்திரன் குளித்துக் கிளம்பி நேரே சமையல் அறைக்குச் சென்றான்.

அவனைக் கண்டதும் ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்த்தார் வனிதாமணி.

“போம்மா.”

வெட்கமுடன் தாயுடன் செல்லச் சிணுக்கம் கொண்டான்.

அவர் அவனது தலையைக் கலைத்துவிட்டார்.

அவர் முகம் உடனே சிந்தனையில் ஆழ்ந்தது.

“என்னாச்சும்மா?”

“நீ பாட்டுக்கு கிருஷ்ணான்னு மட்டும் சொல்லி அனுமதி வாங்கச் சொல்லிட்டியே.”

“ஆமா. அவனுக்கு அக்கறை இருந்தா அவனே விசாரிச்சுக்கட்டும்னுதான் அப்படி சொன்னேன். அவன்தான் கிருஷ்ணாவோட குடும்பம் பற்றியோ கிருஷ்ணாவைப் பற்றியோ விசாரிக்கலையே. பெரிய இவன் மாதிரி நம்ம செல்வ நிலைமைப் பற்றி சொன்னியான்னு மட்டும்தான் கேட்டான். ஏம்மா. நானும்தான் கேட்கறேன். எல்லாருமே பணக்காரங்ககிட்ட பழகினா பணத்திற்காக மட்டும்தான் பழகுவாங்களா? ஏன் எல்லாரையும் சந்தேகத்தோடு பார்க்கிறான்?” மனம் தாளாமல் புலம்பினான்.

“சரி சரி புலம்பாம போ.”

“உனக்கு மூத்த மகனைப்பற்றி குறை கூறினாலே ஆகாதே.”

“டேய் அரட்டை. கிருஷ்ணா வருவதற்கு நேரமாச்சே. போன் செய்து விசாரிக்கலாமான்னுதான் உன்னை போகச் சொன்னேன்.”

உடனே அவன் முகம் மலர்ந்தது.

“இதோ பார்க்கிறேன்மா.”

அவன் சொன்ன வினாடி வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றது.

அர்த்தத்துடன் தன் அன்னையைப் பார்த்துவிட்டு வாசலுக்கு ஓடினான்.

அவனது ஓட்டத்தை பார்த்துக்கொண்டே மாடியிலிருந்த இறங்கிய மகேந்திரனின் கண்களில் வாசலில் டாக்சியை அனுப்பிவிட்டு சிரித்துப் பேசிக்கொடிருந்த இருவரும் பட்டனர்.

கடைசியில் அவன் பயந்த மாதிரியே நடந்துவிட்டதே.

அவன் முகம் இறுகியது.






தொடரும் . . .
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி ராசு - by johnypowas - 21-02-2019, 01:13 PM



Users browsing this thread: 18 Guest(s)