Romance ஓகே கண்மணி
அவன் சென்ற பின் நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் ராஜியை ரொம்பவே பாதித்தது.அவளையும் அறியாமல் அடிக்கடி சிரித்துக்கொண்டாள்.அப்போது அவளுடைய இருமணமும் வெளியே வந்தது.

அவளுடைய கேட்ட மனம் என்னடி புதுசா அவனை நினைச்சு நினைச்சு சிரிக்க.என்ன அவனை லவ் பண்ணிட்டியா.ச்சீ.என்னமோ பெருசா சபதம் போட்ட.அவ்ளோதானா நீ என்றது.

ஆமாடி.அவ லவ் பண்ரா.நாந்தான் அப்படி திரும்ப திரும்ப நினைக்க வச்சேன்.அவளும் லவ் பண்ணுவா.என்றது அவளுடைய நல்ல மனம்.

அவன் உன் வாழ்க்கையை கெடுத்தவண்டி.உன்ன ஏமாத்திருக்காண்.

இல்ல அவன் உன்னைய லவ் பன்றான்.உன்னை எப்போதுமே ஏமாத்தள.உன்ன அவன் எப்பவாவது கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கிடுறானா.நேத்துகூட உனக்காக எவ்ளோ பண்ணினான்.

எல்லாம் நடிப்பு.கஷ்டப்படுத்தாதவன் தான் அன்னைக்கு கிஸ் பண்ணினானா.

அதுஅது தெரியாம நடந்தது.

தெரிஞ்சுதான் நடந்துருக்கு.

நான் சொல்றத கேளு.நான் எப்போதும் உனக்கு நல்லதுதான் சொல்லுவேன்.பேசாம அவனை லவ் பண்ணினதை ஓத்துக்கிட்டு சந்தோசமா இருக்க வழிய பாரு.

நான் சொல்றதை கேளு.அவனை நீ லவ் பண்றதா சொல்லி அசிங்கப்படாத.நீ அவன் விட்ட சவால்ல தோத்து போய்டுவ.

இப்படியாக இரு மனங்களின் சண்டையில் அவளுடைய ஈகோ என்கிற கெட்ட எண்ணமேவ வெற்றிகொண்டது.இனி மீதம் உள்ள நாட்கள் வரை கார்த்திக்கிடம் கொஞ்சம் தள்ளி இருப்பதே இருவருக்கும் நல்லது என்று முடிவெடுத்தால் ராஜி.

பரபரப்பாக வேலைகளை பார்த்துகொண்டிருந்த கார்த்திக் நேற்று ராஜியுடன் நடந்த சம்பவங்கள் நியாபகத்திற்கு வந்து இம்சித்தது.

அவனுக்கு உடனே ராஜியிடம் பேசவேண்டும் போல் இருந்தது.

போனை எடுத்து ராஜிக்கு டையல் செய்தான்.கார்த்திக்கின் நம்பரை பார்த்த ராஜிக்கு ஏனோ அவனுடன் பேச விருப்பம் இல்லாமல் தோன்றியது.போனை அட்டென்ட் செய்த ராஜி

ஹலோ சொல்லு கார்த்திக் என்றாள்.

ஒன்னும் இல்ல ராஜி.சும்மா உன்கிட்ட பேசணும்போல இருந்துச்சு.அதான் கால் பண்ணேன்.சாப்பிட்டாச்சா.

ம்ம் சாப்பிட்டேன்.

சரி சரி.அம்மா என்ன பண்றாங்க.

அத்தை பக்கத்துவீடு வரை போயிருக்காங்க.

ஓஹ் சரி சரி.

வேற என்ன.

ஏன் ராஜி ஒருமாதிரி பேசுற.பேச பிடிக்கலையா.

மனதில் நினைப்பதை அப்படியே சொல்கிறானே என்று எண்ணியவள்

அப்படிலாம் ஒன்னும் இல்ல.கொஞ்சம் தலைவலி அவ்ளோதான்.

சரி டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு.ஈவினிங் பேசிக்கலாம்.பாய்.

ம்ம் சரி.என்று போனை கட் செய்தாள்.அவளுக்கு குழப்பமாக இருந்தது.ஆனாலும் அவளது ஈகோ தெளிவாக சொல்லியது நான் கார்த்திக்கை லவ் பண்ணலை.

ராஜியின் பேச்சில் தெரிந்த மாற்றம் கார்த்திக்கிற்கு தெளிவாக தெரிந்தது.ஆனால் எதுவாக இருந்தாலும் அவன் போக்கிலே செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வேளையில் ஆழ்ந்தான்.

அப்போது அவன் செல்லுக்கு ஹாய் என்று மெசேஜ் வந்தது.

வாட்ஸ்அப் பார்த்தவன் புது நம்பராக இருந்தது.DP பார்த்தவன் அதில் நயன்தாரா போட்டோ இருந்தது.ஆன்லைன் வேறு காட்டியது.

பிரென்ட் யாராவது இருக்கும் என்று அப்படியே வைத்துவிட்டு வேலைகளை கவனித்தான்.

மீண்டும் என்ன பேசமாட்டீங்களா.அவ்ளோ பிசியா என்று மெசேஜ் வந்தது.

ப்ச் இதுவேற என்று நெட்டை ஆப் செய்தான்.அரைமணி நேரம் கழித்து அந்த நம்பரில் இருந்து கால் வந்தது.

அட்டென்ட் செய்தவன் ஹெலோ என்றான்.

எப்படி இருக்கீங்க என்றது ஒரு பெண்குரல்.

யாருன்னு சொல்லுங்க.

எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் எஎல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் என்றது எதிர்முனை.

பேசாமல் போனை கட் செய்துவிட்டு சைலென்டில் போட்டுவிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ண சென்றான் கார்த்திக்.

பின் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேடி ரூமிற்கு சென்றான்.

ஆனால் ராஜி கார்த்திக்கிடம் இருந்து முடிந்த அளவுக்கு தப்பிக்க சாந்தாவுடனே இருந்தாள்.

இவனாக வழிய சென்று பேசினாலும் அவள் ஒருவார்த்தையில் பேசி பதில் தருவாள்.

இப்படியாக இரவு வரை சென்றது.ராஜியின் ஒதுக்கம் கார்த்திக்கை என்னவோ செய்தது.ரூமில் இருவரும் படுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் தூங்காமல் இருந்தனர்.

அப்போது ராஜியின் வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் வந்தது.சத்தம் கேட்டு போனை எடுத்த ராஜி மெசேஜை பார்த்தாள்.

ஹாய் ராஜி.திஸ் இஸ் ரமேஷ்.ஐ ம் சாரி டு டிஸ்டர்பிங் யு என்று வந்திருந்தது. . . . . . . . . .
மெசேஜை பார்த்த ராஜிக்கு தூக்கி வாரி போட்டது.

இவன் எதுக்கு இப்போ தேவை இல்லாம என்ட்ரி ஆகுறான்னு நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்த்தாள்.

கார்த்திக்கின் மூச்சு சீராக வருவதை பார்த்து தூங்குவதை உறுதி செய்துகொண்டு ரமேஷுக்கு டைப் செய்தாள்.

என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சிது

நம்ம பிரென்ட் கஸ்தூரி கிட்ட உண்ண பத்தி விசாரிப்பான்.அவதான் சொன்னா.முதல்ல அவ தரமாட்டேன்னு தான் சொன்னா.நான் தான் கெஞ்சி கஷ்டப்பட்டு வாங்குனேன்.

சரி எதுக்கு வாங்குன.எதுக்கு நீ என்கிட்டே பேசணும்.

என்ன ராஜி இப்படி பேசுற.

பிறகு எப்படி பேச சொல்ற.எனக்கு மேரேஜ் ஆகிட்டு உனக்கு தெரியுமா.

தெரியும் ராஜி.இப்போ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கும்னும் எனக்கு தெரியும்.நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.ப்ளீஸ் நாளைக்கு பேசலாமா.

உனக்கு எவ்ளோ தைரியம்.எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்.இனிமேல் என்கூட பேச ட்ரை பண்ணாத.அண்ட் அடுத்தவங்க பெர்சனல் விஷயத்துல மூக்கை நொழைக்கிறது அநாகரிகம்.டோன்ட் மெசேஜ் மீ.பை.

ராஜி நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.ப்ளீஸ் ராஜி.நாளைக்கு ஒருதடவை மட்டும் பேசு.அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

மெசேஜை பார்த்துவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கார்த்திக்கை பார்த்தாள்.அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.பின் அவளும் தூங்கியும் போனாள்.

மறுநாள் வழக்கம் போல கார்த்திக் துணிகளை அயன் செய்து வைத்து விட்டு வழக்கம் போல அவனை ஆபிஸிற்கு அனுப்பி வைத்தாள்.

இருவரும் அன்று காலை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அன்று காலை ஆபிசில் வைத்து நேற்று வந்த அதே நம்பரில் இருந்து கால் வந்தது.போனை அட்டென்ட் செய்த கார்த்திக்

ஹலோ வணக்கம்.சொல்லுங்க என்றான்.

ஹலோ நான் மான்வி பேசுறேன்.

எந்த மான்வி.

அதான் அன்னைக்கு கே எப் சி ல,பர்த் டே பார்ட்டி,சக்தி பிரென்ட்,ட்ரீட்.

ஒஹ் ஆமா ஆமா.சொல்லுங்க என்ன விஷயம்.எதாவது ஹெல்ப் வேணுமா.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

நீங்க ஏன் என்கிட்ட பேசணும்.எதுனாலும் சக்திகிட்ட சொல்லுங்க.வைக்கிறேன்.

ஹலோ ஹலோ ஒரு நிமிஷம்.வச்சிடாதீங்க.

உங்களுக்கு என்ன வேணும்.ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க.

முதல்ல இந்த வாங்க போங்கன்னு சொல்றதை நிறுத்துங்க.நான் உங்களைவிட சின்ன பொண்ணுதான்.சோ என்ன நீ,வா ன்னே சொல்லலாம்.இல்ல பேர் சொல்லி கூப்பிடுங்க.

இதை பாருங்க.உங்களுக்கு என்ன ப்ராப்ளேம்.எனக்கு ஆயிரம் வேலை இருக்குது.உங்களுக்கு என்ன வேணும்.என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுது.

சக்திகிட்ட தான் வாங்குனேன்.ப்ளீஸ் அவகிட்ட சொல்லிடாதீங்க.எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களை பத்தி சக்தி நிறைய சொல்லிருக்கா.அதான் உங்ககூட பழகலாம்னு.

இதை பாருங்க எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.தயவுசெஞ்சு என்ன தொந்தரவு பண்ணாம போய் படிக்கிற வழிய பாருங்க.
என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

வேளைகளில் மூழ்கி இருந்த கார்த்திக்கை ஆபிஸ் பாய் வந்து உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருப்பதாக சொல்ல யாரென்று இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சரி வரேன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை மூடிவைத்து விட்டு சென்றான்.

அங்கு பார்த்தாள் மான்வி நின்று கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.இதுவேற இம்சை பண்ணிகிட்டு என்று மனதில் நினைத்துக்கொண்டு கோவத்தை வெளிக்காட்டாமல்

இங்க எதுக்கு வந்த என்றான்.

உங்களை பார்க்கதான்.

அய்யோ என்ன ஏன் நீங்க பாக்கணும்.உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

சம்பந்தம் இல்ல.இனிமேதான் சம்பந்தம் படுத்திக்கிடனும்.என்னோட ட்ரீட்க்கு நீங்க எதுக்கு காசு கொடுத்தீங்க.

தெரியாம கொடுத்துட்டேன்.படிக்கிற பொண்ணுங்க செலவுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு கொடுத்தேன்.போதுமா.இனிமேல் தொந்தரவு பண்ணாம கிளம்பு.

அப்படிலாம் கிளம்ப முடியாது.நாங்க உங்க கிட்ட கேட்டோமா.செலவுக்கு காசு இல்ல.பில் கொடுங்கன்னு.

இப்போ என்ன பண்ணனும் அதுக்கு.

சிம்பிள் என்கூட ஒரு கப் காபி சாப்பிடுங்க போதும்.

ஏய் இம்சை இம்சை.நான்தான் சொன்னேனே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு.அப்புறம் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.

அப்படித்தான் பண்ணுவேன்.நீங்க வந்தா விட்டுடுறேன்.

வரமுடியாது போடி என்று சொல்லிவிட்டு நடந்து சென்றான் கார்த்திக்.

நீங்க வரலைன்னா நீங்க வரவரைக்கும் இங்கதான் நிப்பேன்.என் பிடிவாதம் பத்தி உங்களுக்கு தெரியாது.வேணும்னா சக்திகிட்ட கேளுங்க என்று அவன் போகும்வரை கத்தினாள் மான்வி.

அவள் கூறியது எதையும் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தான் கார்த்திக்.

மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும்மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும் அவனது AD கால் செய்ய மீண்டும் ஆபிஸ் சென்றான் கார்த்திக்.

அங்கு ஆபிஸ் வாசலில் மான்வி சொன்னது போலவே தனது ஸ்கூட்டியிலே நின்று கொண்டிருந்தாள்.அப்போது தான் அவள் சொன்னதே நியாபகத்திற்கு வர அவளை பார்த்தான் கார்த்திக்.

கார்த்திக்கை பார்த்த மான்வி ஹாய் என்றாள்.

அவளை முறைத்துக்கொண்டு ஆபிஸ் சென்றவன் தனது லேப்டாப் ஓபன் செய்து மெயிலை படித்துவிட்டு பார்வேர்ட் செய்தான்.பின் சக்திக்கு கால் செய்து உன் பிரென்ட் மான்வி தன்னை சந்திக்க வந்திருப்பதையும் அவள் பேசியதையும் சொன்னான்.மேலும் சக்தியையும் திட்டினான்.

சாரி கார்த்திக்.அவள் ஏன் அப்படி பண்ணினானு எனக்கு தெரியலை.நம்ம பேமிலி மேட்டர் எல்லாம் அவளுக்கு தெரியும்.அவ உன்கிட்ட எதோ சொல்ல நினைக்கிறா.அன்னைக்கு கூட நீ பில் கொடுத்ததுக்கு ரொம்ப பீல் பண்ணினா.ப்ளீஸ் கார்த்திக் அவ என்னோட குளோஸ் பிரென்ட்.ப்ளீஸ் கோவப்படாம அவகிட்ட பேசி அனுப்பி வை கார்த்திக். என்றாள் சக்தி.

சரி என்னமோ பன்னி தொலைக்கிறேன்.எல்லாம் உன்னை சொல்லணும்.நீ மட்டும் இப்போ கைல கிடைச்ச கொன்னுடுவேன்.சரி வை.

தேங்ஸ் கார்த்திக்.அவளுக்கு அப்பா அம்மா மட்டும்தான்.அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பார்த்தாள் பொறாமையா இருக்குன்னுகூட சொல்லுவா.கொஞ்சம் அவ மனசு கஷ்டபடாத மாதிரி பேசு கார்த்திக்.

சரி நான் பாத்துக்கிடுறேன்.அப்புறம் இந்த விஷயத்தை உங்க அக்கா கிட்ட சொல்லி தொலைச்சிடாத.டின்னு கட்டிடுவா.

கண்டிப்பா சொல்ல மாட்டேன்.சரி பை என்று கட் செய்தாள் சக்தி.

பின் மான்வி இடம் சென்ற கார்த்திக் காபி சாப்பிட போகலாமா என்றான்.

இதை முதல்லையே சொல்லிருக்கலாம்ல.நான் சாப்பிடாம கூட நிக்குறேன்.மனசு மாறுறதுக்குள்ள வாங்க போகலாம்.என்றாள் மான்வி.

அவள் சாப்பிடவில்லை என்று சொன்னதும் அவள் மீது லேசான இரக்கம் வந்தது கார்த்திக்குக்கு.

பின் இருவரும் ரெஸ்டாரெண்ட் சென்றனர்.மெனு கார்டை பார்த்து நெய் ரோஸ்ட்,பன்னீர் மசாலா,சிக்கென் ரோஸ்ட் ஆர்டர் செய்து விட்டு உனக்கு என்றான் கார்த்திக்.

பசில இருக்குறது நானு ஒருவார்த்தை என்ன சாப்பிடுறானு கேக்காம ஆர்டர் செய்யுறத பாரு என்று நினைத்துக்கொண்டு எனக்கு ஒரு கப் கோல்டு காபி என்றாள் மான்வி.

அப்போது கார்த்திக்கும் எனக்கும் ஒரு கப் காபி என்றான்.

பேரர் சென்றுவிட தாங்ஸ் என்கூட காபி சாப்பிட வந்ததற்கு என்றாள் மான்வி.

உனக்காகலா வரலை.சக்தி சொன்னா அதான் வந்தேன்.

எப்படியோ வந்திங்கள்ள.அதுவரைக்கும் சந்தோசம்.சக்தி உங்களை பத்தி நிறைய சொல்லிருக்கா.உங்க மேரேஜ்க்கு தான் என்னால வரமுடியலை.சாரி.

பரவா இல்லை.உங்க வீட்ல எத்தனை பேரு.

நான்,அம்மா,அப்பா அவ்ளோதான்.

அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப பிடிக்குமோ.

ம்ம்ம் ஆமா.உங்க லவ் மேட்டெர்கூட எனக்கு தெரியும்.சான்ஸே இல்லை.ரியலி கிரேட் நீங்க.

போதும் போதும்.

அப்போது ஆர்டர் செய்தது வந்துவிட எல்லாவற்றையும் எடுத்து மான்வி பக்கம் எடுத்துவைத்தான்.காபியை மட்டும் அவன் எடுத்துக்கொண்டான்.

எதுக்கு நீங்க ஆர்டர் பண்ணினதை என்கிட்ட வைக்கிறீங்க.எனக்கு வேண்டாம்.நீங்க சாப்பிடுங்க.

எனக்கு சாப்பிடுறதுக்கு வாங்கலை.நீதான் இப்போ பசில இருக்க.சாப்பிடு என்று அவள் பக்கம் நீட்டினான். இல்ல வேண்டாம்.

ஷ்ஷ்ஷ் சாப்பிடு.இன்னைக்கு ஒரு நாள் டையட் பாக்காம சாப்பிடு.ம்ம்ம்.

தாங்ஸ்.

எதுக்கு.

நான் இன்னும் சாப்பிடலை அத கூட கேக்காம நீங்க ஆர்டர் பண்றிங்கன்னு நினைச்சேன் பட் எனக்குத்தான் ஆர்டர் பன்னிருக்கிங்கனு சொன்னதும் சந்தோசமா இருந்தது.அதான்.

அதெல்லாம் இருக்கட்டும் சாப்பிடு.

அப்போது அவளுக்கு புரை ஏற பாத்து பாத்து மூச்சை நல்லா வேகமா இழுத்து விடு என்றான் கார்த்திக்.

மூச்சை இழுத்துவிட்டு சரியான பின் கார்த்திக் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தாள் மான்வி.

அவளது கண்களின் ஓரம் கண்ணீர் வடிவதை பார்த்த கார்த்திக் என்னாச்சு சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா.இந்தா கூட கொஞ்சம் தண்ணி குடி என்றான்.

இல்ல வேண்டாம்.சாப்பாடு ஒன்னும் காரம் இல்ல.சும்மா.

ஆர் யு ஓகே.

ம்ம்ம்ம்.எங்க வீட்ல நான் மட்டும்தான்.அப்பா அம்மா ரொம்ப செல்லம்.எனக்கு எல்லாமே இருக்கு.பட் டெய்லி ஏதோ இல்லாதது மாதிரி இருக்கும்.இவ்ளோத்துக்கும் அப்பாவும் அம்மாவும் என்னை அவ்ளோ தாங்குவாங்க.எனக்கும் அவ்ளோ பிடிக்கும் அவுங்களை.

சரி அப்றம் ஏன்.மேல சொல்லு.

ஆனாலும் டெய்லி சண்டை போடுறதுக்கு அண்ணனோ தம்பியோ,இன்னொரு அம்மா மாதிரி அக்காவோ தங்கச்சியோ,பொண்ணு மாதிரி பாத்துகிட அத்தையோ சித்தியோ,தோலோட தோளில் கைபோட்டு பேச முறைப்பையனோ எனக்கு கிடையாது.என்னோட சந்தோஷம் துக்கம் புல்லா அப்பா,அம்மாவோட மட்டும் தான்.அதான் இன்னைக்கு நீங்க அப்படி பண்ணின உடனே அழுகை வந்துடுச்சு.

உறவுகளுக்காக ரொம்ப ஏங்கி போய் இருக்கிற ஒரு பொண்ண போய் தப்பா நினைச்சிட்டோமோ என்று தன்னைத்தானே கடிந்துகொண்ட கார்த்திக்

அதுக்குத்தான் என்கூட பேச ட்ரை பண்ணினியா என்றான்.

ஆமா.சக்தி உங்களை பத்தி,அவ ரெண்டு அக்கா பத்தி சொல்லும் போதெல்லாம் எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும்.ஆனா வருத்தமாவும் இருக்கும்.நானும் இந்த மாதிரி பாமிலில இல்லையேன்னு.அதான் இந்த ஒருநாள் ஆச்சும் உங்க கூட ஸ்பென்ட் பண்ணலாம்னு இப்படி பண்ணேன்.நான் உங்களை லவ் எல்லாம் பண்ணலை.பயப்படாதிங்க.நான் எதாவது தப்பா பிஹேவ் பண்ணிருந்தா என்ன மன்னிச்சிடுங்க.

இட்ஸ் ஓகே.பரவா இல்லை நானும் சாரி.நீ என்ன சொல்ல வரேன்னு கேக்காம பேசினதுக்கு.

ஓகே.அப்புறம் எப்படி இருக்காங்க ராஜி அக்கா.

அவளுக்கென்ன ராணி மாதிரி இருக்கா.


இப்படியே இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தனர்.கார்த்திக் பில் கொடுக்க தனது கார்டை எடுக்க,அவனை தடுத்து மான்வி தனது கார்டை கொடுத்து பில் செட்டில் செய்தாள்.பின் சரி மான்வி பாக்கலாம்.இந்த ஒரு நாள் உன்கூட பேசினது ரொம்ப சந்தோசம்.இனி எப்போதுலா உனக்கு என்கூட பேச தோணுதோ அப்போ எனக்கு கால் பண்ணு.எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்டே கேளு ஓகேவா.

ம்ம் ஓகே அண்ணா என்றாள் மான்வி.

அம்மா தாயே நீ கார்த்திக்னு பேர் சொல்லியே கூப்பிடு.நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்.

இல்ல எனக்கு இதான் பிடிச்சிருக்கு.அதனால நான் அப்படித்தான் கூப்பிடுவேன் அண்ணா.

ஓஹ் சேப்டி.ஒன்னும் பயப்படாத.ஒருவனுக்கு ஒருத்தி கொறவனுக்கு கொறத்தி.இதான் நம்ம பாலிசி.நமக்கு எப்போதுமே ராஜி தான்.

மான்வி சிரித்துக்கொண்டே ரொம்ப காமெடியா பேசுறீங்க.அப்படிலா ஒன்னும் இல்லை.சரி பிரென்ட் போதுமா என்றாள் மான்வி.

இது பெட்டெர்.ஓகே பாக்கலாம் பாய் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்
[+] 8 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 1 Guest(s)