Romance ஓகே கண்மணி
கார்த்திக் சென்ற உடன் ஹே கார்த்திக் யாருடி அவன்.ட்ரீட்க்கு வாங்கன்னு தான சொன்னேன் அதுக்கு போய் இப்படி சொல்லிட்டு போறான்.

ஹே கார்த்திக் என்னோட மாமா பையன்.அவன் இப்படிலா ஒதுங்கி போகுற ஆளே கிடையாது.முன்னாடிலா எங்க அக்கா பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் இன்ட்ரோ பண்ணி வைன்னு எங்க அக்காகிட்ட எவ்ளோ கெஞ்சுவான் தெரியுமா.அவன் ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியல.

ம்ம்ம்ம் சரி.சாரு பாக்க சூப்பரா இருக்காரே.சிங்கிளா.

ஏன் நீ ட்ரை பண்ண போறியாக்கும்.

ஏன் ட்ரை பண்ணாதான் என்ன.

ட்ரை பண்ணு.ஆனா எங்க அக்காகிட்டையும் ஒருவார்த்தை கேட்டுக்கோ.

ஏன் அதான் நீயே சொல்லிட்டல்ல.அப்புறம் ஏன் உங்க அக்காகிட்ட கேட்கணும் என்றாள் சுஜி.

ஹலோ ஓவரா கனவு காணாதீங்க.எங்க அக்கவைத்தான் அவன் கல்யாணம் பண்ணிருக்கான்.

ஏய் அப்ப நீ முன்னாடி எங்ககிட்ட சொன்னதெல்லாம் என்று மான்வி கேட்க.

ஆமா.இவனேதான்.

உங்க அக்கா கண்டிப்பா அன்லக்கிடி.ஆனா நீ சொன்னதை வச்சி பாக்கும்போது இன்னும் ரெண்டுபேத்துக்கும் நடுவுல பிரச்சனை இருக்கும் போலையே.

ஆமாடி.எங்க அக்காகிட்ட அதை பத்தி இன்னைக்கு பேசணும்னு நினைச்சேன்.சரி அவளாவே சொல்லட்டும்னு விட்டுட்டேன்.

இடையில் கௌசல்யா சக்தி அவரு நம்பர் கொடேன் என்று தயங்கிக்கொண்டே போனை எடுக்க அவளை பார்த்த மற்ற அனைவரும் சிரித்துவிட்டனர்.

அடிப்பாவி கொஞ்ச விட்டா எங்க அக்காவுக்கே சக்களத்தியா வந்துடுங்க போல.கொன்னுடுவேன்.
உங்களுக்குத்தான் எத்தனை பேரு ட்ரை பன்றாங்க.அப்புறம் என்னடி.

ஏய் அவுங்கல்லாம் சும்மா டைம் பாஸ் பண்றவங்க.அழகை மட்டும் பார்த்து மச்சான் எப்படி இருக்கா பாரு,செம கட்டைடா அப்படின்னு மத்த பொண்ணுங்களை சொல்லிட்டு,நம்மள சின்சியரா லவ் பண்றதா சொல்லுவாங்க.உங்க மச்சி மாதிரி ஒருத்தன் கிடைப்பானா. என்றால் மான்வி.

அம்மா தாயே இத்தோட இதை விட்டுடுங்க.அதையும் இதையும் சொல்லி எங்க அக்கா லைஃப்ல கும்மி அடிச்சிடாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டாள் சக்தி.

சரி சரி சேன்ஜ் த டாப்பிக் அனைவரும் சொல்லிவிட்டு ட்ரீட்டை முடித்துவிட்டு பில் செட்டில் செய்ய சென்றனர்.

தனது கார்டை எடுத்து மான்வி கொடுக்க.உங்க பில் ஆல்ரெடி செட்டில் பண்ணிட்டாங்க மேம் என்றான் கேஷியர்.

யாரு என்று அவள் கேட்க இப்போ ஒருத்தர் உங்க கிட்ட நின்னு பேசிட்டு இருந்தாரே அவருதான்.

சரி என்று சொல்லிவிட்டு சக்தியிடம் வந்த மான்வி ஹே சக்தி உங்க மச்சி பில் செட்டில் பண்ணிட்டாராம்டி. என்றாள்.

அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம். அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம்.

இல்லடி இது என்னோட ட்ரீட்.இதுக்கு அவர் பே பண்ணினா இது அவரோட ட்ரீட் மாதிரி ஆகிடாது.

விடுப்பா.இப்போ என்ன உன் சார்பா நான் கொடுத்ததா நினைச்சுக்கோ.

நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.சரி வா கிளம்பலாம்.

ஐயோ இப்படி தெரிஞ்சிருந்தா கூட அஞ்சு ஆறு பார்சல் வாங்கிருக்கலாமே. என்று ரம்யா சொல்ல அனைவரும் ஹோ என்றனர்.

ஏய் அலையாதீங்கடி.கிளம்பலாம் வாங்க என்று தங்களது ஸ்கூட்டியில் கிளம்பினர்.

புத்தகத்தை படித்து கொண்டிருந்த ராஜி மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசிக்க அதில் அத்தை மற்றும் முறைப்பெண் என்ற உறவில் அதிக இண்ட்டர்ஸ்ட் எடுத்து கார்த்திக் படித்தது தெரிந்தது.

அந்த பக்கத்தில் மட்டும் ரெட் கலர் பெண்ணினால் அதிகமா கோடிட்டு இருந்தான்.

பையன் ரொம்ப ரசனைக்காரனாதான் இருக்கான் என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.

பின் ராஜி அப்படியே தூங்கியும் போனாள்.ஈவினிங் வந்தது.

வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.

கதவை திறந்த ராஜி என்ன இன்னைக்கு சீக்கிரமாவே வந்தாச்சு என்றாள்.

இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிட்டு.அதான் வந்துட்டேன்.இந்தா என்று வாங்கி வந்த மல்லிகை பூவை அவளிடம் கொடுத்தான்.

என்னது.

மல்லிகை பூ.சாமிக்கு போட்டுடு.

சாமிக்கு மட்டும்தானா.

ஆமா.நீதான் நான் வாங்கிட்டு வந்தா வைக்க மாட்டியே.

அது போன மாசம்.இது இந்த மாசம்.நானும் வைப்பேன்.

சிரித்துக்கொண்டே சரி வச்சுக்கோ.யப்பா இதை உனக்கு கொடுக்கிறதுக்குள்ள முடியலடா சாமி.சரியான பிசாசு ராஜி நீ.

அது அப்படித்தான்.நான் பிசாசாவே இருந்துட்டு போறேன்.சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வா.காபி கலந்து தரேன்.

ம்ம் சரி.இன்றும் ராஜி இரண்டு ஸ்பூன் சீனியைஎ அதிகமாக கலந்தாள் ராஜி.

பிரெஷ் ஆகிவிட்டு வந்த கார்த்திக் காபியை வாங்கி குடித்தவன் சுகர் அதிகமாக இருப்பதை அறிந்தவன்

ராஜி.பொண்ணுக ரொம்ப சந்தோசமா இருந்தா அதை சாப்பாட்டுல தான் காட்டுவாங்க.நீ ரொம்ப சந்தோசமா தானே இருக்க.

ஏன் இப்படி கேக்குற.

இல்ல.இன்னைக்கும் காபில சுகர் அதிகமாக இருக்கு.அதான் கேட்டேன்.

எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான்.கடவுளே இவன் சொன்ன மாதிரியே லவ் பண்ணிடுவோமோ.ம்ம்ஹ்ம்வ மாட்டேன்.கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது.

அப்படிலா ஒன்னும் இல்லை.தேவை இல்லாம கண்டதையும் கற்பனை பண்ணிக்காத.

ம்ம்ம்ம் சரி.சரி.

இல்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது.

நான் என்ன நினைச்சேன்.

இல்ல நீ சரி சரின்னு ஏதோ நினைச்ச அதை சொன்னேன்.

நான் என்ன நினைச்சேன் தெரியுமா.

வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்.

இல்ல நான் சொல்லுவேன்.

நான் கேக்க மாட்டேன் என்று அவன் எதிரில் கேட்பது போல நின்றாள்.

கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு கேக்குறதுக்கு நிக்குற.

நான் ஒன்னும் கேக்குறதுக்கு நிக்கலை.கப்பை கொடு வாஷ் பண்ணனும்.அதான் நிக்குறேன்.

சரி அதுக்குத்தான் நிக்குறன்னு எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் சொல்லிடுறேன்.நாளைக்கு அப்பாவும் அம்மாவும் வராங்க.அதான் சொல்ல வந்தேன்.

சரி என்று மட்டும் சொன்னவள் அதன் பின் என்னது அதையும் மாமாவும் வரங்காளா.

ஆமா.அதான நானும் சொன்னேன்.

இல்ல ஏதோ ஞாபகத்துல.சரி எப்ப வராங்க.

நாளைக்கு காலைல.என்னையும் லீவ் போட சொன்னாங்க.

எதுக்கு.

நாளைக்கு ஏதோ விரதமாம்.அதான் இருக்க சொன்னாங்க.

சரி.நான் அப்போ நாளைக்கு வீட்டை கிளீன் பண்ணி வச்சிடுறேன்.இன்னைக்கு மளிகை சாமான் எல்லாம் தீர்ந்து போச்சு. வாங்கணும் கார்த்திக்.

ஓகே.ஒன்னு பண்ணு எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வை.அப்றமா நான் வாங்கிட்டு வந்துடுறேன்.

ஓகே.

பின் இருவரும் சேர்ந்து லிஸ்ட் போட்டு கார்த்திக் வாங்குவதற்கு சென்றான்.

அதன் பின் அன்றைய இரவு அதிக பேச்சுகளுடனும் சின்ன சின்ன சண்டைகளுடனும் முடிந்தது. மறுநாள் காலை கார்த்திக்கின் அப்பாவும்,அம்மாவும் யாத்திரை முடிந்து வந்துவிட கார்த்திக்கும் ராஜியும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டனர்.

பின் பயணம் பற்றி ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.பின்னர் குளித்துவிட்டு காலை உணவு முடிந்தது.

பின் சாந்தா மருமகளிடம் வந்து என்னமா ரெண்டுபேரும் சந்தோசமா இருந்திங்களா.என்றாள்.

ம்ம்ம் சந்தோசமா இருந்தோம் அத்தை என்று வராத வெட்கத்தை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.

சரிம்மா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது.எதாவது நல்ல செய்தி உண்டாம்மா.

ராஜிக்கு திடுக்கென்றானது.இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிந்தது.இப்போ புது பிரச்சனையா என்று நினைத்துக்கொண்டாள்.

இல்லத்தை.நாங்களும் அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கோம்.என்று ஒரு பொய்யை சொல்லி வைத்தாள்.

நாங்களும் அங்க ஒவ்வொரு தெய்வத்துக்கிட்டையும் அதான்மா வேண்டிக்கிட்டோம்.அதுக்கு ஒரு சாமியார் சொன்னாரு அந்த முருகனை நினைச்சிட்டு தினமும் அவருக்கு தினமும் தீபம் போட சொன்னாரும்மா.நீயும் கொஞ்சம் சிரமம் பாக்காம செய்யுமா.

கண்டிப்பா செய்யுறேன் அத்தை.எனக்கும் அதான் வேணும்.

பின் இருவரும் யாத்திரையில் நடந்த விஷயங்கள்,அங்கு சென்ற கோவில்களின் சிறப்புகள் என்று பேசிக்கொண்டேஎ மதிய சாப்பாட்டை தயார் செய்தனர்.

கார்த்திக்கும் அப்பாவிடம் இதையே பேசிக்கொண்டிருந்தான்.அப்படியாக அவர்கள் பேசிக்கொண்டது நேரம் போனதே தெரியவில்லை.

பின் ஆண்கள் இருவருக்கும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.ராஜியையும் சாப்பிட சொல்ல இல்லத்தை நான் அப்புறமா சாப்பிட்டுக்கிடுறேன் என்றாள்.

ஓஹ் புருஷன் சாப்பிட்டதை சாப்பிடணும்னு ஆசை படுறியா.சரி படிச்ச பொண்ணு இதெல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சுட்டேன்.சரிம்மா கொஞ்சம் பொறு.நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் சாந்தா.

ஐயோ இது வேறயா.இந்த கண்ராவி வேரைய.என்று நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்க்க அவன் ராஜியை பார்த்துவிட்டு கண்ணடித்துவிட்டு மாட்டினடி இன்னைக்கு என்று கண்ணாலையே சொன்னான்.

அத்தையிடம் வேண்டாம் என்று சொன்னால் ரெண்டு பேருக்கும் நடுவில் உள்ள பிரச்சனை தெரியதுக்கு காரணமாகிவிடும்.எல்லாம் என் தலை விதி என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் ராஜி.

கார்த்திக் இப்போது தேவைக்கு அதிகமாக சாதத்தை வைத்து பிசைந்துகொண்டிருந்தான்.

கறிகளும் அதிகமாக வைத்துவிட்டு வேண்டும் என்றே வாயில் வைத்துவிட்டு இலையில் வைத்தான்.பின் புறை ஏறுவதுபோல் செய்ய வாயில் இருந்து சோற்று பருக்குகள் இலையில் விழுந்தது.பின் தண்ணீரை எடுத்து குடித்தான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு ஆத்திரத்தில் அழுகையாக வந்தது.கார்த்திக் வேண்டும் என்றே தன்னை பழிவாங்குகிறான் என்று அவன்மேல் ஆத்திரமாக வந்தது.

தண்ணீர் எடுக்க செல்வது போல் கிச்சன் சென்று கண்ணீரை துடைத்துவிட்டு வந்தான்.

அப்போதும் கார்த்திக் வேண்டும் என்றே அதுபோல் செய்ய ராஜி என்ன செய்வது என்பதுபோல் சேலை முந்தியை கைகளால் சுருட்டி கொண்டே பதற்றத்துடன் நின்றாள்.

ராஜியை பார்த்த கார்த்திக் அவளுடைய இந்த நிலையை பார்க்க அவனுக்குள் ஏதோ செய்தது.ராஜியும் முகம் அருவருப்பாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

ராஜியை பார்த்துக்கொண்டே மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தவன் தெரியாமல் கை தவறி விடுவது போல் கிளாசை இலையில் விட்டான்.தண்ணீர் முழுவதும் இலையில் கொட்ட சட்டென்று எழுந்துகொண்டான்.

ச்ச தெரியாம கொட்டிட்டு.சாரி சாரி என்றான்.

என்னடா அந்த பொண்ணு எவ்ளோ ஆசையா இருந்துச்சு.இப்படி பண்ணிட்ட என்றார் கார்த்திக்கின் அப்பா.

சாந்தாவும் தன் பங்கிற்கு அதையே சொல்ல

தெரியாம கை தவறிட்டு.விடுங்க வேற இலையில சாப்பிட்டா என்ன.இன்னொருநாள் பாத்துக்கலாம். என்றான் கார்த்திக்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு இப்போதுதான் உயிரே வந்தது.உதட்டில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு பரவா இல்லை மாமா.இன்னொருநாள் சாப்பிட்டுகிடுறேன் என்று அந்த இலையை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு சாந்தாவுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
[+] 3 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 2 Guest(s)