காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#46
பயணித்து கொண்டிருந்த நான் மீண்டும் கண் விழித்த பொழுது நாங்கள் நாகர்கோவிலை அடைத்திருந்தோம். நேரம் இப்போது சரியாக 12 நெருங்கி இருந்தது.

ஹரி நாம விட்டுக்கு போய்டு போகலாமா இல்லைனா நேர ஹாஸ்பிடளுக்கே விடவா என்று வேலா கேட்டான்.

அப்படி கேட்டவனை ஒரு முறை முறைத்தேன்
.
சரி சரி, இப்போ என்ன கேட்டுடேன் இப்படி முறைகுற, பாவும் பையன் டையர்ட இருப்பானேன்னு கேட்டும். சரி நான் ஹாஸ்பிடளுக்கே விடுறேன் என்று வண்டியை வேகமாக செலுத்தினான்.

நாங்கள் மருத்துவ மனையை சேர்ந்ததும் அங்கே என்னுடைய அம்மா மட்டும் கைகளை பிசைந்தவாறு நடந்து கொண்டிருந்தாள். என்னை பார்த்து வேகமாக ஓடிவந்தாள்.

என்னம்மா ஆச்சு, என்று நான் கேட்டேன்.

டேய், இப்போ பேச நேரம் இல்ல நேர போய் அவளை பாரு என்று என்னை விரட்டினாள்.

மறுத்து பேசாமல் நான் வேகமாகே ஓடி சென்றான். அவள் முதல் தளத்தில் உள்ள மகபேறு வளாகத்தில் இருந்தாள் அவளுக்கென்று தனியறை. வெளியே அவளது பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர்.

என்னை கண்டதும். கண்களில் பயத்துடன். நீங்களே அவகிட்ட என்னனு கேளுங்க மாப்புளை என்று மாமனார் என்னிடம் கேட்டு கொண்டார். அனைவரும் இப்படி கேட்க நான் பயத்துடனே அவளது அறையின் உள் சென்றேன்.

அங்கே ஒரு பெண் மருத்துவரும் இரு செவிலியரும் இருந்தனர். என்னை பார்த்ததும். நீங்கதானே இவங்களோட கணவன். சீக்கிரம் பேசி விட்டு வெளிய வாங்க என்று அதிகாரமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அங்கே பவானி கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கைகளை நீட்டி என்னை அழைத்த மாதிரி படுத்திருந்தாள். எழ முயன்றவளை, வேண்டாம் ஏற்று கூறி நானே அவளுக்கு அருகில் சென்று நின்றேன்.

பவானி: என்னங்க நீங்க எப்படி இருக்கீங்க, உங்களை பார்க்காம நான் ஆபரேஷன் தியேடர் போக மாட்டேன்னு இங்கேயே இருக்கேன் தெரியுமா என்று சிறு குழந்தைபோல் கேட்டாள்

நான்: ஏம்மா, என்ன ஆச்சு.

பவானி: நீங்கதானே காலையிலேயே வந்திருவேன்னு சொன்னீங்க. எனக்கு என்னமோ உங்களை பார்க்காம போக விருப்பமே இல்லை. அவள் பேசி கொண்டிருக்கும் போதே வலிகளை அடக்கிய கொண்டிருந்தாள் என்பதை தெளிவாக அவளது முகத்தில் தெரிந்தது.

நான்: ஏய், ஏன் இப்படி பேசுற, என்று கூறிக்கொண்டே அவளை வாரியெடுத்து அணைத்து கொண்டேன்.

அவளது நெற்றி கண்கள் கன்னங்கள் என்று முத்தமழை பொழிந்தேன். இந்த அன்பின் ஏக்கத்திற்கு நான் என்ன செய்வேன் இறைவா என என் மனம் வேண்ட தொடங்கியது.

நான் அவளுக்கு முத்தம் அளிக்கும் போதே அவள் கத்த தொடங்கினால் 'அம்மாமா....'

அதுவரை அங்கே வெளியே நின்ற டாக்டர் , செவிலியர் விரைந்து செயல் பட்டு அவளை தியேட்டர் அழைத்து சென்றனர். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அங்கே பின்னர் வந்து எனது தோல் தட்டி அம்மா என்னை அழைத்தாள்.

என்ன அழுத்தகாரிடா இவா, உள்ள இவ்வளவு வழியை வச்சுகிட்டு உன்னை பார்க்காம பிள்ளை பெற்றுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு இருந்திருக்காளே பாரேன். என்று ஆட்ச்சரியமாக கேட்டாள்.

அவள் வடித்த கண்ணீர் துளிகளை கைகளில் ஏந்தியவாறு அங்கேயே நடந்து கொண்டிருந்தேன். அதுவரை படங்களில் மட்டும் பார்த்து பழகிய பதற்றம் என்னை முழுவதுமாக தொற்றி கொண்டது...
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 20-02-2019, 11:46 AM



Users browsing this thread: 1 Guest(s)