15-02-2019, 11:24 AM
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 8
சத்யனுக்கு குழப்பமாக இருந்தது, மித்ராவின் உதவிக்கு ஓடும் மான்சியின் பின்னால் போவதா? அல்லது உள்ளே போய் மனுவுடன் படுத்துக்கொள்வதா? என்று குழம்பியபடி அங்கேயே நின்றான்,
அதேநேரம் உள்ளே மனுவின் சினுங்கள் குரல் கேட்க, சத்யன் வேகமாக வீட்டுக்குள் போனான், எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டிருந்த மனு “ அப்பா அம்மா எங்கப்பா?” என்று சினுங்கலுடன் கேட்க,
“ அம்மா இதோ வந்துவா,, நீ அழாதே” என்று கூறி மகனைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டி சமாதானம் செய்தவன்,, மனுவின் அழுகை அதிகமானதும் வீட்டைவிட்டு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு மகனுடன் மித்ராவின் வீட்டை நோக்கி போனான்
மாடியில் இருந்த மித்ராவின் அறைக்கதவுத் திறந்தே இருக்க, சத்யன் பெரும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான், மித்ரா தரையில் கிடக்க அவள் தலையை மான்சி தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு திலகா கொடுத்த சூடான பாலை புகட்டிக்கொண்டு இருந்தாள்
பால் ஒரு மிடறு உள்ளே போனால் இரண்டு மிடறு வெளியே வந்தது,
ஆனால் மான்சி விடவில்லை வற்புறுத்தி புகட்டினாள், மித்ராவுக்கு கொஞ்சமாக நினைவு திரும்பியிருக்க யார் மடியில் இருக்கிறோம் என்று புரிந்து சிறு வெறுப்புடன் அடிக்கடி கால்களை உதறி புரண்டு தரையில் விழ முயன்றாள், மான்சி திலகாவைப் பார்த்து ஜாடை செய்ய, திலகம் மித்ரா புரளாமல் முழங்காலை பிடித்துக்கொண்டாள்
மித்ரா முரண்டியதில் அவளின் நைட்டி மடிந்து முழங்கால் வரை ஏறியிருக்க, அவள் கால்களைப் பார்த்த மான்சிக்கு பயங்கர அதிர்ச்சி,, கால்கள் இரண்டும் துளிகூட ரத்தமில்லாத சாம்பல் நிறத்தில் இருந்தது, கால்களில் ஆங்காங்கே சிறுசிறு கொப்புளங்கள், சில கொப்புளங்கள் வெடித்து நீரும் சீலும் ரத்தமுமாக கசிந்தது, மான்சிக்கு ஏதோ தோன்ற நைட்டியின் ஜிப்பை இறக்கி விட்டு அதை விலக்கி அவளின் மார்புகளை பார்த்தாள், மித்ராவின் மார்புகளில் கிள்ளியெடுக்கக் கூட சதையில்லை, எலும்பெடுத்த மார்பிலும் சிறுசிறு கட்டிகள் கசிந்துகொண்டு இருந்தன, மான்சி அதிர்ச்சியுடன் திலகத்தை பார்க்க..
அவளும் பயங்கர அதிர்ச்சியில் அருவருப்பில் வாந்தி வராமல் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்தாள், அருவருப்பில் திலகம் மித்ராவை விட்டு விலகி அமர,
“ கொஞ்சம் காலை பிடிச்சு தூக்குங்க திலகம்மா, கட்டில்ல படுக்க வைக்கலாம், அப்புறம் சுடுதண்ணியும் மெல்லிசா ஒரு துணியும் எடுத்துட்டு வாங்க நல்லா தொடச்சுட்டு பவுடர் போட்டு விடலாம்” என்று கெஞ்சுதலாக மான்சி கூற
சட்டென்று விலகி அமர்ந்த திலகம் “ மன்னிச்சுடுங்கம்மா என்னால முடியாது வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்றாள்
மான்சி செய்வதறியாது திகைப்புடன் மித்ராவைப் பார்க்க, அவளின் மூடி விழியோரத்தில் இருந்து இரு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது, பலகீனமாய் கிடந்த மித்ராவின் கண்ணீரை பார்த்ததும் மான்சி நெஞ்சை அடைத்தது, தன் மடியில் இருந்த மித்ராவின் தலையை எடுத்து தரையில் வைத்துவிட்டு எழுந்த மான்சி மித்ராவின் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றி அவளைத் தூக்குவதற்காக குனிந்து மித்ராவின் அக்குளில் கைவிட்டு மூச்சை தம்பிடித்து தூக்கினாள்
அப்போது அவள் கைகளை விலக்கிவிட்டு மற்றொரு கை மித்ராவை தாங்கிப் பிடித்தது, மான்சி நிமிர்ந்து பார்த்தாள், சத்யன்தான் மான்சியை தாங்கிப்பிடித்து தூக்கிக்கொண்டு இருந்தான், அவன் கண்களும் கலங்கி இருந்தது, மித்ராவை தன் கைகளில் ஏந்தி எடுத்துச்சென்று கட்டிலில் கிடத்தி விட்டு தலையணையை சரி செய்தான்
அவனருகில் வந்த மான்சியிடம் திரும்பி “ நீ போய் வென்னீர் வச்சு எடுத்துட்டு வா, நான் அதுவரைக்கும் பாத்துக்குறேன்” என்றவன் திலகத்திடம் திரும்பி “ பாத்ரூம் போய் கையை நல்லா கழுவிட்டு மனுவை தூக்கிகிட்டு வெளியே போய் அவனை தூங்க வைங்க” என்றான்
திலகம் குற்றவுணர்ச்சியுடன் தலைகுனிந்து “ மன்னிச்சுடுங்கய்யா, எனக்கு அருவருப்பு தாங்காது, அதான் கூட சேர்ந்து தூக்கலை ” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போய் கையை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்து சோபாவில் படுத்துறங்கிய மனுவை தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே போனாள்
மான்சி வென்னீர் எடுத்துவர போய்விட, சத்யன் மித்ராவின் முகத்தையேப் பார்த்தான், தனது அழகை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் செலவழித்த மித்ரா, இன்று அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதை கண்டு அவன் வயிறு எரிந்தது, தனது கவர்ச்சியான மார்புகளின் மீது மித்ராவுக்கு அலாதியான கர்வம் உண்டு, இன்று அவைகள் உருக்குலைந்து இருக்குமிடம் தெரியாமல் போனது, தனது கால்கள் வழவழப்பாக இருக்கவேண்டும் என்று மணிக்கணக்கில் லோஷனின் ஊறவைத்து பராமரிப்பு செய்வாள், இன்று அவைகள் ஈர்க்குச்சியாக நீர்த்துப்போய் நடக்க முடியாமல் துவண்டுகிடந்தது, இத்தனை நாட்களாக அவள்மேல் இருந்த வெறுப்பு பரிதாபமாக மாற, சத்யன் மனம் வெதும்பி நின்றான்,,
சத்யனுக்கு குழப்பமாக இருந்தது, மித்ராவின் உதவிக்கு ஓடும் மான்சியின் பின்னால் போவதா? அல்லது உள்ளே போய் மனுவுடன் படுத்துக்கொள்வதா? என்று குழம்பியபடி அங்கேயே நின்றான்,
அதேநேரம் உள்ளே மனுவின் சினுங்கள் குரல் கேட்க, சத்யன் வேகமாக வீட்டுக்குள் போனான், எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டிருந்த மனு “ அப்பா அம்மா எங்கப்பா?” என்று சினுங்கலுடன் கேட்க,
“ அம்மா இதோ வந்துவா,, நீ அழாதே” என்று கூறி மகனைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டி சமாதானம் செய்தவன்,, மனுவின் அழுகை அதிகமானதும் வீட்டைவிட்டு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு மகனுடன் மித்ராவின் வீட்டை நோக்கி போனான்
மாடியில் இருந்த மித்ராவின் அறைக்கதவுத் திறந்தே இருக்க, சத்யன் பெரும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான், மித்ரா தரையில் கிடக்க அவள் தலையை மான்சி தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு திலகா கொடுத்த சூடான பாலை புகட்டிக்கொண்டு இருந்தாள்
பால் ஒரு மிடறு உள்ளே போனால் இரண்டு மிடறு வெளியே வந்தது,
ஆனால் மான்சி விடவில்லை வற்புறுத்தி புகட்டினாள், மித்ராவுக்கு கொஞ்சமாக நினைவு திரும்பியிருக்க யார் மடியில் இருக்கிறோம் என்று புரிந்து சிறு வெறுப்புடன் அடிக்கடி கால்களை உதறி புரண்டு தரையில் விழ முயன்றாள், மான்சி திலகாவைப் பார்த்து ஜாடை செய்ய, திலகம் மித்ரா புரளாமல் முழங்காலை பிடித்துக்கொண்டாள்
மித்ரா முரண்டியதில் அவளின் நைட்டி மடிந்து முழங்கால் வரை ஏறியிருக்க, அவள் கால்களைப் பார்த்த மான்சிக்கு பயங்கர அதிர்ச்சி,, கால்கள் இரண்டும் துளிகூட ரத்தமில்லாத சாம்பல் நிறத்தில் இருந்தது, கால்களில் ஆங்காங்கே சிறுசிறு கொப்புளங்கள், சில கொப்புளங்கள் வெடித்து நீரும் சீலும் ரத்தமுமாக கசிந்தது, மான்சிக்கு ஏதோ தோன்ற நைட்டியின் ஜிப்பை இறக்கி விட்டு அதை விலக்கி அவளின் மார்புகளை பார்த்தாள், மித்ராவின் மார்புகளில் கிள்ளியெடுக்கக் கூட சதையில்லை, எலும்பெடுத்த மார்பிலும் சிறுசிறு கட்டிகள் கசிந்துகொண்டு இருந்தன, மான்சி அதிர்ச்சியுடன் திலகத்தை பார்க்க..
அவளும் பயங்கர அதிர்ச்சியில் அருவருப்பில் வாந்தி வராமல் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்தாள், அருவருப்பில் திலகம் மித்ராவை விட்டு விலகி அமர,
“ கொஞ்சம் காலை பிடிச்சு தூக்குங்க திலகம்மா, கட்டில்ல படுக்க வைக்கலாம், அப்புறம் சுடுதண்ணியும் மெல்லிசா ஒரு துணியும் எடுத்துட்டு வாங்க நல்லா தொடச்சுட்டு பவுடர் போட்டு விடலாம்” என்று கெஞ்சுதலாக மான்சி கூற
சட்டென்று விலகி அமர்ந்த திலகம் “ மன்னிச்சுடுங்கம்மா என்னால முடியாது வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்றாள்
மான்சி செய்வதறியாது திகைப்புடன் மித்ராவைப் பார்க்க, அவளின் மூடி விழியோரத்தில் இருந்து இரு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது, பலகீனமாய் கிடந்த மித்ராவின் கண்ணீரை பார்த்ததும் மான்சி நெஞ்சை அடைத்தது, தன் மடியில் இருந்த மித்ராவின் தலையை எடுத்து தரையில் வைத்துவிட்டு எழுந்த மான்சி மித்ராவின் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றி அவளைத் தூக்குவதற்காக குனிந்து மித்ராவின் அக்குளில் கைவிட்டு மூச்சை தம்பிடித்து தூக்கினாள்
அப்போது அவள் கைகளை விலக்கிவிட்டு மற்றொரு கை மித்ராவை தாங்கிப் பிடித்தது, மான்சி நிமிர்ந்து பார்த்தாள், சத்யன்தான் மான்சியை தாங்கிப்பிடித்து தூக்கிக்கொண்டு இருந்தான், அவன் கண்களும் கலங்கி இருந்தது, மித்ராவை தன் கைகளில் ஏந்தி எடுத்துச்சென்று கட்டிலில் கிடத்தி விட்டு தலையணையை சரி செய்தான்
அவனருகில் வந்த மான்சியிடம் திரும்பி “ நீ போய் வென்னீர் வச்சு எடுத்துட்டு வா, நான் அதுவரைக்கும் பாத்துக்குறேன்” என்றவன் திலகத்திடம் திரும்பி “ பாத்ரூம் போய் கையை நல்லா கழுவிட்டு மனுவை தூக்கிகிட்டு வெளியே போய் அவனை தூங்க வைங்க” என்றான்
திலகம் குற்றவுணர்ச்சியுடன் தலைகுனிந்து “ மன்னிச்சுடுங்கய்யா, எனக்கு அருவருப்பு தாங்காது, அதான் கூட சேர்ந்து தூக்கலை ” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போய் கையை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்து சோபாவில் படுத்துறங்கிய மனுவை தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே போனாள்
மான்சி வென்னீர் எடுத்துவர போய்விட, சத்யன் மித்ராவின் முகத்தையேப் பார்த்தான், தனது அழகை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் செலவழித்த மித்ரா, இன்று அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதை கண்டு அவன் வயிறு எரிந்தது, தனது கவர்ச்சியான மார்புகளின் மீது மித்ராவுக்கு அலாதியான கர்வம் உண்டு, இன்று அவைகள் உருக்குலைந்து இருக்குமிடம் தெரியாமல் போனது, தனது கால்கள் வழவழப்பாக இருக்கவேண்டும் என்று மணிக்கணக்கில் லோஷனின் ஊறவைத்து பராமரிப்பு செய்வாள், இன்று அவைகள் ஈர்க்குச்சியாக நீர்த்துப்போய் நடக்க முடியாமல் துவண்டுகிடந்தது, இத்தனை நாட்களாக அவள்மேல் இருந்த வெறுப்பு பரிதாபமாக மாற, சத்யன் மனம் வெதும்பி நின்றான்,,