காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#43
நாங்கள் பயணித்த கொங்கன் வழி ரயில் அப்பொழுது சரியாக திருச்சூரில் வந்து நின்றது. அதுவரை என்ன பேசினோம் என்று தெரியவில்லை. விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகளால் மீண்டும் பிரியாவிடை எனக்களித்தாள் அவர்களை அழைத்து செல்ல அங்கே அவளது உறவினர்கள் காத்திருந்தனர். அனைவரிடமும் பேச சென்று விட்டாள். நானும் அவளுக்கு விடை அளித்து விட்டு ரயிலில் ஏறினேன். ரயில் மெதுவாக புறப்பட தயாராக இருந்தது.

அப்பொழுதான் வேகமாக எனக்கு பின்னால் ஒரு உருவம் உள்ளே ஏற முயன்றது. நானும் வழிவிடவே, வேகமாக ஏறி உள்சென்று திரும்பி பார்த்தேன். மீண்டும் கலா, என்னை நெருங்கி எனது கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு முத்தம் அளித்து, 'Still I love ஹரி, i am mad at you டா.. என்று வேகமா சொல்லி ரயிலை விட்டு இறங்கி சென்றாள்.

அவளது இந்த திடீர் தாக்குதலில் மிரண்டு போன நான், மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ரயில் அந்த இடத்தை கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. மீண்டும் வெளியே தலை நீட்டி அவளுக்கு மட்டும் கையசைத்து விடையளித்து வந்தேன்.

என்ன பொண்ணுங்க இவள், என்னை நேசிகிராளா அல்லது அவளது கணவனை நேசிகிராளா. நான் அவனை பற்றி கிண்டல் செய்தாள் விட்டு கொடுக்க மாட்டாள். ஆனால் என்னிடம் இன்னமும் காதலுடன் இருப்பதாக சொல்கிறாள். இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சுகவே முடியவில்லை.

இப்படி குழப்பத்திலேயே நான் எனது வீடிற்கு வந்தேன். அங்கே எனது அம்மாவை பார்த்த உடன் நான் துடித்து போய்விட்டேன். இத்தனை நாளும் நான் சுயமாகவே சிந்தித்து இருந்தேன் அங்கே ஒரு ஜீவன் எனக்காக இன்னமும் கவலையுடன் இருப்பதை மறந்தே விட்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 15-02-2019, 11:13 AM



Users browsing this thread: 1 Guest(s)