காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#40
கலா அவளது கல்யாண கதையை சொல்லி முடித்தவுடன் எனது மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

கலா: 'I am very sorry ' ஹரி, என்னாலதானே நீயும் இப்போ கஷ்ட படுற.. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால யாருமே சந்தோசமாவே இல்லை. என்னை காதலிச்ச நீ இங்க கஷ்டபடுற, எனக்கு தாலிகட்டுன அவரும் அங்கே கஷ்டபடுறார் . நான் ஒரு பாவி!!! ஹரி, என்னை நீ மன்னிப்பாயாடா. நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு சத்யமா மன்னிப்பே கிடையாது. என்று கூறி எனது மார்பில் அழுது கொண்டிருந்தாள்.


'ச என்ன மடையன்டா நான்'.. ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் நொந்து போன ஒருத்தியை மேலும் ரணமாக்கிடேனே என்னை நானே நொந்து கொண்டேன்.

நான் அவளை சமாதனம் படுத்த முயன்றேன். ஆனால் நானும் கண்ணீரில் மூழ்கி போயிருந்தேன்.


நான்: ஏய் கலா, நீதாண்டா என்னை மன்னிக்கணும். முழுசா விஷயம் என்னனு தெரியாம நான்தான் அவசபட்டு வார்த்தை விட்டுவிட்டேன். நீ எந்த தப்பும் செய்யலடா, நானா இருந்தாலும் அப்படிதான் செய்திருப்பேன். இப்போ எதுவும் குறைஞ்சு போகலை நீ முதல்ல கண்ணீரை துடைச்சுக்கோ என்று கூறி அவளது முகத்தை நிமிர்த்து பார்த்தேன். வழிந்தோடிய கண்ணீரை நான் துடைதெடுத்தேன். ஆறுதலாக அவளது நெற்றியில் முத்தம் குடுக்க சென்றேன்.

அப்பொழுதான் அதனை கவனித்தேன், அதுவரை அவள் என்னவள் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அவளது நெற்றியில் அதனை பார்த்த உடன் அவளை விட்டு இரண்டடி நகர்ந்து பின்னோக்கி வந்தேன்.


நான் அவளை விட்டு விலகி வந்ததும் எதோ நிகழ்ந்த மாதிரி, என்ன ஹரி, என்ன ஆச்சு, நான் நீ தொடக்கூடாத பாவியாகிடேனா என்று கேள்விகளால் எனது நெஞ்சை மேலும் துளைத்தாள்.


அவள் கேட்டதோ நான் அவளை ஏன் விலகினேன் என்று. ஆனால் உண்மையில் நான்தான் அவளை தொடமுடியாத பாவியாகி போனேன்.

பின்னர் அவளிடமே நான் கூறினேன்: அப்படி இல்லைடா, நான் உன்னை தொடக்கூட முடியாத பாவியாகிடேன், நீ இப்போ என்னோட காதலி இல்லைடா, அடுத்தவன் மனைவி. உன்னை நான் 'டா' போட்டு பேசா கூட எனக்கு உரிமை கிடையாது. தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோ என்றேன்.


நான் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் மறு பேச்சு ஏதும் இன்றி அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள். நானும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டேன். பின்னர் இருவருக்கும் இடையில் மௌனமே நிலவியது.

எங்களை சுற்றிலும் ரயிலின் சத்தம், Ac ஓட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. ரயிலின் கதவுகள் அடைக்க பட்டிருந்ததால் வெளியே நிலவிய இருள் எண்ணைகளை அண்டவில்லை ஆனாலும் அங்கே இருந்த வாஷ் பசனின் மேல் ஒளிர்ந்த விளக்கின் வெளிச்சம் மட்டுமே அங்கே இருந்தது.

எங்களை சுற்றி வேறு எவரும் இல்லை. அது என்னமோ நாங்கள் மட்டும் தனி உலகில் இருப்பது போன்றதொரு எண்ணம் என்னை சூழ்ந்து கொண்டது. மௌனத்தை கலைக்கும் விதமாக நானே முதலில் ஆரம்பித்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 15-02-2019, 11:11 AM



Users browsing this thread: 2 Guest(s)