வீட்டுக்காரர்(completed)
#9
நவீன் வேலைக்கு சென்றதும் ரோஷன் நம்பர் என் மொபைலில் இருந்து போடாமல் அருகே இருந்த பொது தொலைபேசியில் இருந்து போட்டேன். அவன் எடுக்க சற்று நேரம் ஆனது, அவன் ஹலோ என்று சொன்னதும் நான் ரோஷன் அண்ணா நித்யா நவீன் மனைவி என்று சொன்னதும் அவன் சொல்லுங்க நித்யா நவீனுக்கு எதாவது ப்ரெசனையா நீங்க போன் செய்யறீங்க அதுவும் பொது தொலை பேசியில் இருந்து என்று கேட்க நான் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை நான் உனக் கிட்டே வீடு விஷயமா பேசணும் அதுக்கு தான் கால் செய்தேன் என்றேன்.

ரோஷன் நான் நினைத்தது போலவே நித்தியா இது போன்ல பேச விஷயம் இல்ல உங்களுக்கு சம்மதம்னா உங்க வீட்டுக்கு இப்போ வந்து பேசறேன் நாம பேசறது நவீனுக்கு தெரிய வேண்டாம்னா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்ன சொல்லறீங்க என்றான். நான் சரி இவ்வளவு வழிகளில் முயற்சித்து பார்த்தாச்சு இவன் கிட்டேயும் பேசி பார்க்கலாம்னு சரி வாங்க என்றேன். நான் பேசி சரியா அரை மணி நேரத்திற்குள் ரோஷன் என் வீட்டின் வெளியே வந்து நின்றான். அவனை உள்ளே அழைத்து உட்கார வைத்து அவன் எதிரே உட்கார்ந்தேன். நேராகவே பேச்சை ஆரம்பித்தேன். நாங்கள் பேசியது உரையாடலின் பதிப்பு.


நான்: ரோஷன் இந்த வீடு எத்தனை வருடம் லீஸ் போட்டு இருக்கு 


ரோஷன் : நித்தியா பணமே குடுக்காத போது அந்த அக்ரீமெண்ட் எந்த வல்யு கிடையாது அது வெறும் ஸ்டாம்ப் பேப்பர் அந்த பேப்பர் படி மூன்று ஆண்டு லீஸ் ஆறு லட்ச ரூபாய் விலை. நவீன் இந்த பணத்தை உங்க அப்பா கிட்டே வாங்கியது எனக்கு தெரியும் அதை என்ன செய்தான் என்றும் தெரியும் ஆனால் என்னுடைய நண்பன் புதுசா கல்யாணம் செய்து மனைவியை குடி வைக்க கூட்டி வரான் அப்போ போய் அவனிடம் கறாராக இருக்க முடியவில்லை. இன்னொன்று சொல்லலாமான்னு தெரியலை இருந்தாலும் நீங்களா கேட்டதாலே சொல்லறேன் அந்த ஆறு லட்சத்தில் பாதிக்கு மேலே அவனுடைய அலுவலகத்தில் இவனுக்கு மேல் அதிகாரியாக இருக்கிற ஒருவருக்கு குடுத்து இருக்கிறான். அதற்கு காரணம் அந்த அதிகாரி நவீன் அந்த அதிகாரியின் மனைவியோடு கள்ள தொடர்பு வச்சு இருப்பதை அவர் தடை செய்ய கூடாதுன்னு நானும் சொல்லி பார்த்தேன் கல்யாணம் ஆனா பிறகு எதற்கு இந்த தேவையற்ற பிரெச்சனை விட்டு விடு என்று ஆனால் இப்போ இவன் விட நினைத்தாலும் அந்த பெண் இவனை விடுவதாக இல்லை. இவன் ஒழுங்கா வேலை செய்யறானோ இல்லையோ தினமும் காலையில் வேலைக்கு போக வேண்டியது பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேரா அவங்க வீட்டுக்கு கிளம்பிவிடுவான். அந்த பெண் ஒரு செக்ஸ் வெறி பிடித்தவ அது மட்டும் இல்லாமல் இவனுக்கு குடிக்க கத்து குடுத்ததே அந்த பெண் தான்.




நான்: ரோஷன் இதெல்லாம் உண்மைன்னு நான் எப்படி நம்பறது அவர் என்னுடன் ரொம்ப பாசமாக தானே நடந்து கொள்கிறார் எனக்கு நீங்க சொல்லறதை நம்ப முடியவில்லை.


ரோஷன்: நித்தியா நீங்க என்னை நம்ப வேண்டாம் இப்போ அவன் அலுவலகத்தில் தானே இருக்கணும் பேசி பாருங்க அவன் இருக்கிறானா என்று அவனுடைய அதிகாரி தான் பேசுவார் அவரே நவீனை ஒரு மார்க்கெட்டிங் விஷயமா அனுப்பி இருப்பதாக சொல்லுவார்.\


நான்: அது தானே நவீன் வேலை இதுலே என்ன இருக்கு நீங்க தேவையில்லாமல் கதை கட்டி விடறீங்க 

ரோஷன்: கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு அவன் செய்யற வேலை மார்க்கெட்டிங் சரி என்னைக்காவது அவன் என்ன மார்கெட் பண்ணறான்னு கேட்டு இருக்கீங்களா 


நான் : கேட்க கூடிய சூழல் வரலை நான் அவரை நம்பறேன் அவர் ஒரு நாள் ஏதோ பார்ட்டிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது அதிகமா குடித்து இருந்தார் நான் கேட்டதும் உண்மையை சொல்லி வருத்தப்பாட்டார் 



ரோஷன்: நித்யா அவர் போன பார்ட்டி ரெண்டு பேர் மட்டுமே போன பார்ட்டி அவனும் அந்த பெண்ணும் அன்னைக்கு செலவுக்கு நான் தானே பணமே குடுத்து அனுப்பினேன். அவனுடைய போனில் அவன் கணக்கு எழுதி வைக்கும் பழக்கம் இருக்கு சந்தேகம் இருந்தால் அன்று நான் பணம் குடுத்தேனா இல்லையா அந்த பணத்தை எப்படி செலவு செய்தான் என்று குறித்து வைத்து இருப்பான் நீங்களே பார்க்கலாம்.



நான் : ரோஷன் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அதே சமயம் இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகலாம்னு முடிவு எடுத்தாச்சு அதில் ஒரு மாற்றமும் இல்லை. நான் உங்களிடம் பேச விரும்பியது உங்களுக்கு அவர் தர வேண்டிய பணம்னு நீங்க சொல்லற என்னால் வெரிபை செய்ய முடியாது அதனால் எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் குடுங்க நான் பணத்தை திருப்பி குடுத்து விடுகிறேன். அதே மாதிரி நீங்க சொல்லறது உண்மைனா அவர் இந்த வேலையை விட்டுட்டு வேறே வேலை சேரட்டும் அது வரை வீட்டிலியே இருக்கட்டும் 
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 13-02-2019, 05:36 PM



Users browsing this thread: 3 Guest(s)