13-02-2019, 12:38 PM
இப்படித்தான் campusல் ஒருநண்பன், இவளுக்கு நெருக்கமான ஒரு நண்பியைக் காதலித்துக்கொண்டிருந்தான். பொதுவான நண்பிஎன்ற முறையில் தூதுபோக இவளைக் கேட்டிருந்தான். முதலில் கேட்டபோது தாம்தூம் எண்டு குதித்துவிட்டாள். ஆனால் அவன் உணர்வுகள் மேல் இவளுக்கு நம்பிக்கையிருந்தது. அதேபோல் சில மாதங்களிலேயே அவர்கள் சேர்ந்துவிட்டனர். அதற்கு ஒரே காரணம் அவன் தனது உணர்வுகள் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல, அவள் வேறுயாரையும் காதலிக்கவில்லை என்ற புரிதலும்தான் அவனைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்தது. அதுமட்டுமல்ல அவளுக்காய் எதைவேண்டுமானாலும் துறக்கத் தயாராய் இருந்தான். காலம் காலமாய், பரம்பரை பரம்பரையாய் கட்டிக்காத்துவந்த சடங்கு சம்பிரதாயத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் தவறாது சென்று தரிசிக்கும் அந்தக் கோவிலையும், அவனுக்கேயுரிய அடையாளமாய், நெற்றியில் போட்ட அழகுக் கோலமாயிருந்த அந்த விபூதியையும் தான்..
இவளுக்கு இழக்கவென்று சொன்னால் அப்படி பெரிதாய் எதுவுமில்லைத்தான் அவளது ஈகோவைத்தவிர. ஒருவேளை இவளும் கூட சுதாவுக்காகக் காலமெல்லாம் காத்திருந்திருப்பாள் அந்த நிகழ்வுமட்டும் நடக்காமலிருந்திருந்தால்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)