Romance ஓகே கண்மணி
#57
நெருப்பை உமிழ்ந்தவன் போல் பேசிவிட்டு மாடிக்கு சென்று தனது ட்ரெஸ்,திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பக்கத்து ரூமிற்கு சென்றான்.சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளிறினான்.
சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளியேறிய கார்த்திக் ஆபீஸ் சாவியை மகேஷிடம் வாங்கி கொண்டு ஆஃபீசிற்கு பின் பக்கம் இருக்கும் கோடௌன்க்கு சென்றான்.

கதவை லாக் செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்தான்.மனம் இரும்புக்கலனை போல் கொதித்து கொண்டிருந்தது.

என்ன வார்த்தை சொல்லிட்டா.உடம்பு சுகத்துக்கு அளிர்வான
அலையிறவனா நான்.ச்ச.நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்கு.இந்த ஒரு மாசத்துல என்ன பத்தி கொஞ்சம் கூடவா புரிஞ்சிக்கல.

நேரம் ஆக ஆக அவனுக்கு கோவம் அதிகமாக ஏறியது.ஆனால் அவன் மனம் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லியது.அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கோவத்தில் சொல்லியது என்றும் மனதில் இருந்து வந்தது அல்ல என்று.

அதே போல அவன் காதல் செத்துப்போச்சு என்று சொன்னதும் கோவத்தில்தான் ஒழிய மனதில் ராஜியின் மீதான காதல் ஒருபோதும் அழியாது.

இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.மீண்டும் எழுந்து பார்க்கையில் மணி ஏழாகியிருந்தது.இப்போது அவனது கோவம் தணிந்திருந்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

இனிமேல் முடியாது சரக்குதான் இதுக்கு ஒரே வழி என்று முடிவு செய்து போனை எடுத்து மஹேஷிற்கு கால் செய்து ஆஃபீஸ் குடவ்னிற்கு வர சொன்னான்.

10 நிமிடத்தில் அவன் வந்துவிட அவனை உட்கார சொன்னான்.

உட்கார்ந்த மகேஷ் அண்ணா எதாவது பிரச்சனையா.வீட்ல கண்ணாடி உடைஞ்சிருக்கு,உன் கையில வேற காயமா இருக்கு,அண்ணி வேற ட்ரெஸ்க்கூட மாத்தாம டைனிங் டேபிள்ள உக்கார்ந்துருக்காங்க.என்ன ஆச்சு.

டேய் ஒரு மண்ணும் ஆகலை.ஒரு சின்ன சண்டை அவ்ளோதான்.பெரிய இவரு மாதிரி கேள்வி கேக்காம மட்டமான சரக்கா ஒரு புல் வாங்கிட்டுவா.

அண்ணா.நீதான் விட்டுட்டியே.இப்ப போய்.

டேய் மூடிட்டு போய் வாங்கிட்டு வா.தேவை இல்லாம எனக்கு அட்வைஸ் பண்ணாத.போ.

சரிண்ணே என்று மகேஷ் சென்றுவிட்டான்.மஹேஷிற்கு தெரியும் கார்த்திக்கை பற்றி.அவன் சில நேரங்களில் டென்ஷனாக இருக்கும் நேரங்களில் பயங்கர கோவமாக பேசுவான் ஆனால் அந்த கோவம் மறைந்த அடுத்த சில இவனா அப்படி கோவப்பட்டான் என்று யோசிக்கும் அளவுக்கு ஜாலியாக மாறிவிடுவான்.

அவனை பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு புரியாத புதிர்.அவன் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மகேஷ் நம்புவான்.அதனாலயே கார்த்திக் மேல் பாசம் உண்டு.

வீட்டில் ராஜி கார்த்திக் சென்ற உடன் டைனிங் டேபிளில் இருந்து அழ ஆரம்பித்தாள்.அவன் கொடுத்த முத்தம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது என்று அவளுக்கு தோன்றியது.எனக்கே அதை தாங்க முடியலையே அவணுக்கு எப்படி இருந்திருக்கும்.

முதன் முதலாக கார்த்திக் மேல் அவளுக்கு பரிவு வந்தது.நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏதோ கோவத்தில் சொன்னது கார்த்திக்.என்ன மன்னிச்சுடு என்று அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.மனசு இலகுவாகும் வரை அழுதாள்.

இரண்டு கட்டிங் உள்ளே சென்றவுடன் போதை அப்போது ஏற தொடங்க அடுத்த கட்டிங்கை எடுத்து குடித்தான்.

எதிரே இருந்த மஹேஷிற்கு கார்த்திக்கை எப்படி வீட்டிற்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற கவலையாக இருந்தது. இப்போது கார்த்திக் பேச தொடங்கினான்.சாரிடா மகேஷ்.ஏதோ கோவம்.அதான் உன்னை அப்படி திட்டிட்டேன்.நீ எதுவும் மனசுல வச்சிக்காதடா தம்பி.

இல்லனா அப்படிலா ஒன்னும் இல்லனா.வீட்டுக்கு போகலாம்ன்னு.டைம் ஆகிடுச்சு.மைனி வேற தனியா இருக்கும்.

டேய் இருடா.அவள்ளா அழகா இருபபாடா.அப்ப எனக்கு கம்பெனி கொடுக்க மாட்டியா.என்று போதையில் குளறலாக கூறினான்.

ம்ம்ம்ம் இருக்கேன்.இருக்கேண்ணே.

ம்ம்ம்ம்.அப்ப ஊத்து.

அண்ணா போதும்ன்னா.

டேய் நீதானா எனக்கு கம்பெனி கொடுக்குறேன்னு சொன்ன.இப்ப மாத்தி பேசுறியா.குடிச்சிருக்கியா குடிச்சிருக்கியாடா.

இல்லனா.இல்லனா.இந்தா ஊத்துறேன்.ஊத்துறேன்.

ம்ம்ம் அது.இன்னொரு க்ளாஸ்ல ஊத்து.

ஐயோ வேண்டாம்ன்னு எனக்கு பழக்கம் இல்லை.வேணாம்.

டாய் என்ன அண்ணன் முன்னாடியே குடிக்க ஆசைப்படுறியா.பிச்சிபுடுவேன் ராஸ்கல்.இது எனக்கு நீ கம்பெனி கொடுக்கிறியா.கம்பெனி கொடுக்குறதுன்னா நீயும் அடிக்கணும்.ஆனால் நீதான் குடிக்கமாட்டியே.அதனால உன் க்ளாஸ்ல இருக்குறதும் எனக்குத்தான்.ஊத்து.

போதும்ன்னா.வான்னா.போகலாம்.பயமா இருக்குன்னா.

டேய் அண்ணன் இருக்கேன்டாஇருக்கேண்டய.பயப்படாத.இதோ லாஸ்ட் ரவுண்டு.முடிஞ்சுது என்று கடைசி கிளாசை வாயில் கவுத்திவிட்டு போலாமா என்று குளறலாக சொல்லிவிட்டு எழுந்த கார்த்திக்குக்கு முற்றிலும் சுய நினைவு இல்லை.கால்கள் இரண்டும் தடுமாற எழுந்தவனை மகேஷ் தோளில் கைபோட்டு சாய்த்துக்கொண்டு கதவை லாக் செய்து கொண்டான்.

ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வீட்டு காலிங் பெல்லை அடிக்க போக டேய் அதெல்லாம் வேணாம்.ஐ ம் ஸ்டேடி.நான் போய்க்கிடுறேன்.நீ போ
இல்லன்னா வீட்டுல மைனி கிட்ட சொல்லிட்டு போய்டுறேன்னா.

ப்ச்.அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன்.நீ போய் சாப்பிட்டு தூங்குதூங்குற.போ.

இப்போதைக்கு வீட்ல விட்டாச்சு.வீட்டுக்கு போய் மைனிக்கு போன் போட்டு சொல்லிக்கலாம் என்ற முடிவுடன் சாரின்னா.நா போறேன்.பாத்து போன்னே.சொல்லிவிட்டு கிளம்பினான் மகேஷ்.

வீட்டிற்குள் சென்ற கார்த்திக் தள்ளாடியபடி சென்று டைனிங் டேபிளை அடைந்தான்.

அங்கு கைகளை மடக்கிவைத்து அதன் மேல் முகத்தை வைத்து தலை கவிழ்ந்திருந்தாள் ராஜி.

இவன் தள்ளிடியபடி டேபிளில் இடித்துக்கொண்டதில் எழுந்த ராஜிக்கு அவன் குடித்திருக்கிறான் என்று அவன் முகமும்,சரக்கு வாடையும் சொன்னது.

அவன் குடித்ததற்கான காரணம் அவளுக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் பேசாமல் சாப்பாடை எடுத்து வைத்தாள்.

அப்போது கார்த்திக் கை கழுவ பேசின் அருகே செல்ல அப்போது கார்த்திக்கின் போன் ஒலித்தது.

போதையில் இருந்த கார்த்திக் பேசினில் இருந்த சோப்பை எடுத்து காதில் வைத்து கொண்டு ஹலோ நீங்கள் பேச நினைக்கும் சப்ஸ்கிறைபர் கை கழுவிக்கொண்டிருக்கிறார்.சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்னு சொல்லிட்டு சோப்பில் டச் செய்து பேசினில் வைத்துவிட்டான்.

இதை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.எருமை சோப்புக்கும்,போனுக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு வந்துருக்கு பாரு என்று டேபிளில் இருந்த போனை எடுத்தாள்.

மகேஷ் கால் செய்திருக்க அட்டென்ட் செய்து சொல்லு மகேஷ் என்றாள்.

அண்ணி உங்க நம்பர் என்ன ஆச்சு.கால் பண்ணேன்.ரீச் ஆகவே இல்ல.

ஒன்னும் இல்லை.ஊருக்கு போயிருக்கும்போது கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு.

அதான் அண்ணன் நம்பருக்கு கால் பண்ணேன்.அண்ணி அண்ணன் ரொம்ப குடிச்சிட்டான்.என்ன பிரச்சனைன்னு தெரியல ரொம்ப கோவமா இருந்தான்.இப்போ குடிச்சிட்டு ரொம்ப போதைஎ ஆகிட்டான்.என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு குடிச்சிருக்கான்.கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணி.வச்சிடுறேன்.

ம்ம்ம் சரிடா.நான் பாத்துக்கிடுறேன்.என்று சொல்லிவிட்டு போனை டிவி அருகில் வைத்துவிட்டு கிட்சேன் சென்றால் ராஜி.

அங்கு கார்த்திக் தண்ணீரை குடித்து கொண்டிருந்தான்.

வா சாப்பிடலாம்.என்றாள் ராஜி.

ம்ம்ஹூம்.எனக்கு வேண்டாம்.நீ போட்டு சாப்பிட்டுக்கோ.

அப்படியா சரி எனக்கும் வேண்டாம்.போலாம்.

ம்ம்ம்ஸ் சரி.

இதை ராஜி எதிர் பார்க்கவில்லை தான்.அவளும் இன்னும் சாப்பிடவில்லை.காலையில் அம்மா வீட்டில் சாப்பிட்டது.இப்போது வரை துளி தண்ணீர் நாக்கில் படவில்லை.இப்போது கார்த்திக்கை பார்த்த பின்பு தான் அவளுக்கு பசியின் ஞாபகம் வந்தது.

பிரியாணி,சிக்கன் என அவன் மதியம் டேபிளில் வைக்கும்போது இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டணும்னு முடிவுசெய்திருந்தாள்.ஆனால் வீம்பாக பேசி வடை போச்செ கதையில் இருந்தாள்.

இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்திருக்க ஒவ்வொரு நிமிடமும் மௌனமாக சென்றது.

ஆனால் ராஜியோ மனதுக்குள் கார்த்திக்கை வசை பாடிக்கொண்டிருந்தால்.சீக்கிரமா சொல்லுடா.எனக்காக யாரும் பட்டினியா இருக்க வேண்டாம்.நான் சாப்பிடுறேன்னு சொல்லுனு மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தால்.

10 நிமிடத்திற்கு பிறகுர்
ராஜி இனியும்ல் லேட் பண்ணின உசுருக்கு உத்திரவாதம்இ இல்லை.நல்லா யோசி.சோரா,சொரணையா.கடைசியில் மைன்ட்வாய்ஸ் சொன்னது.சோறுதான் முக்கியம்.சனியன் எப்படியும் போகுது நீ சாப்பிட போ என்று அவள் எழும்ப அதே நேரம்


கார்த்திக் எதுவும் பேசவில்லை.திடீரென்று எனக்கு பசிக்குது நான் சாப்பிடப்போறேன் என்றான்.

அப்பாடா இப்பவாவது இதுக்கு பசிச்சுதே.சரி என்று பிளேட்டை வைத்து சாப்பாடு வைத்தாள்.

கார்த்திக்கு சாப்பாடு வைத்துவிட்டு தனக்கும் போட்டுகொண்டு இரண்டு லெக் பீஸ்களை ஆளுக்கு ஒன்றாக சாப்பிட தொடங்கினர்.

கார்த்திக்கும் இருந்த போதையில் வேகமாக சாப்பிட,ஏதோ யோசனை வந்தவனாக எதிரே பார்க்க அங்கு ராஜி வேகவேகமாக சாப்பாடை முழுங்கிக்கொண்டிருந்தால்.கார்த்திக் சாப்பிடாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்க ராஜிக்கு விக்கல் வந்தது.

உடனே தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வேகமாக வாங்கி மடக்மடக்கென குடித்தாள்.அப்போதும் அவளுக்கு தொடர்ந்து விக்கல் நிற்காமல் இருக்க உடனே கார்த்திக் தள்ளாடியபடி எழுந்து அவள் தலையில் தட்ட போக ராஜி அவனை பார்த்து சற்று விலகினால்.

உடனே மறுபடியும் அமர்ந்த கார்த்திக் ஓஓஓஓஓ.ஸ்ஸ்ஸ்ஸ்.தொட கூடாது.தொடகூடாது.தொடக்கூடாதுல.சாரி.சாப்பிடு.நீ சாப்பிடு.

மறுபடியும் வேகவேகமாக அள்ளி சாப்பிடகே தொடங்கினாள்.சாப்பாடும் ருசியாக இருக்க காலையில் கார்த்திக் தன்னைத்தானே மெச்சிக்கொள்ள சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது.

அவளையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வர சாப்பாடை முழுங்கி கொண்டே கண்ணீரை துடைத்தாள்.

எதேச்சையாக திரும்பியவள் எதிரே கார்த்திக் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
ப்ச்ப்ச் ஒன்னும் இல்ல எனக்கும் சாப்பாடும் வேணாம்னு வீம்பா சொல்லிட்டு இப்ப ரெண்டாவதுபி பிளேட் பிரியாணியை வச்சு வெளுத்துகட்டுறியே அதான் பார்த்தான்.

ஹலோ நான் சாப்பிடுறத பார்த்து யாரும் கண்ணு வைக்க வேண்டாம்.உனக்கு பசிக்கல.சாப்பிட வேண்டியது தான.

இல்ல எனக்கு போதை ஓவெரா ஆகிடுச்சா.பசி இல்ல நீ சாப்பிடு.

பின் இருவரும் கைகழுவி கொண்டு டேபிளில் இருந்தனர்.அப்போது கார்த்திக் ஆரம்பித்தான்.

நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுற.

இல்ல சம்பந்தம் இருக்கு.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா

பிறந்த உடனே அழுத்திருப்ப.

ஐயோ.செம ஜோக்.பட் சிரிப்புதான் தான் வரல.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

டேய் லூசு நீ முதல் முதல்ல எப்ப அழுதன்னு எனக்கு எப்படி தெரியும்.

இல்ல.அட்லீஸ்ட் எப்ப அழுதன்னு ஆச்சும் கேக்கலாம்ல.

கேக்கலைன்னா சொல்லாம விடப்போறியா.சொல்லி தொலை

நான் முதல் முதல்ல எப்ப என்று ஹ பிட்சில் கார்த்திக் கேக்கும் முன் கடுப்பான ராஜி டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து ஏ எருமை,சனியன்,மெண்டல்,லூசு.மாடு இனிமேல் இந்த டைலாக்க சொன்ன மவனே கழுத்தை அறுத்து கண்ணு ரெண்டையும் தோண்டி எடுத்துடுவேன்.இவரு பெரிய ராஜா ராணி சந்தானம்.குடிச்சிட்டு வந்து பிளாஷ்பாக் சொல்லறாரு.மூடிட்டு போய் தூங்கு.

உஸுஷுஷ்.ஓகே ஓகே.டோன்ட் டச்.தொட கூடாது.தொட கூடாது.நான் முதல் முதல்ல...

ஒய்.

ஓஹ் சாரி.என்று வாயை பொத்திவிட்டு முதல் முதல்ல நீ ரமேஷ லவ் பன்றேன்னு சொன்னப்ப டெய்லி நைட் தூக்கம் இல்லாம எவ்ளோ நாள் அழுத்திருக்கேன் தெரியுமா.அதுவும் இல்லாம நாம மெஸேஜ் பண்ணிக்கும் போதெல்லாம் நீ கேவலமா இதோ இப்ப வச்சிருக்கியே இதே மாதிரிதான் வச்சிட்டு என் லவர் மெசேஜ் பன்றான்.நா அப்புறமா பேசுறேன்னு சொல்லுவ பாத்தியா அப்ப அழுதேன்.ம்ம்ம் என்று நெற்றியில் தன் புருவத்தில் கார்த்திக் கை வைத்து காட்ட

என்ன என்பதுபோல தன் நெற்றியை தடவ அங்கு அவள் வைத்திருந்த நெற்றி பொட்டு விலகி இருந்தது.அதை எடுத்து கரெக்டாக வைத்தாள் ராஜி.

ம்ம்ம் சரியா இருக்கா என்பதுபோல தலை ஆட்ட சூப்பர் என்பது போல கைகாட்டி அசைத்தான்.

இப்போது தான் கார்த்திக் மனசை திறந்து பேசுறான்.போதை தெளிஞ்சா கண்டிப்பா நாளைக்கு பேசமாட்டான்.அதனால அவன் என்ன பேசினாலும்,என்ன செஞ்சாலும் ஒன்னும் சொல்ல கூடாது.அவனோடு தானும் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நம்ம ஆச்சினா எனக்கு உசுரு.அவ்ளோ பிடிக்கும்.நான் என்ன செஞ்சாலும் என்ன விட்டுகொடுக்க மாட்டாங்க.என்மேல அவ்ளோ பாசம்.நான் அவங்களுக்கு பேரன் கிடையாது.மகன் மாதிரி.அவுங்க செத்தப்ப கூட நான் அழவில்லை.கல்லு மாதிரி இருந்தேன்.

ஓஹோ பார்ட்டிக்கு ஆச்சி மேல அவ்ளோ பாசமா.ம்ம்ம் சரி அப்புறம்.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

தெரியாது சொல்லு.

அதெப்படி உனக்கு தெரியும்.ஏன்னா அது எனக்கு மட்டும் தான தெரியும்.உங்கிட்ட கேட்டா உனக்கு எப்படி தெரியும்.

டேய் லூசு.சத்தியமா என்னால முடியலடா.கொள்ளாத.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

டாய்.நீ இன்னைக்கு செத்தடா.என்று அவன்கிட்ட ராஜி நெருங்க

ஓஓஓஓ.சொல்ல கூடாதுல்ல.உஷ் உஷ் உஷ்.என்று வாயை பொத்திக்கொண்டு டோன்ட் டச்.டோன்ட் டச்.உட்காரு உட்காரு.

நான் ரெண்டாவது தடவ அழுதது இன்னைக்குத்தான்.நீ சொன்ன வார்த்தை.அது எந்த போதையிலும் மறக்க மாட்டேங்குதே.

ராஜிக்கு திடுக்கிறது.தான் சொன்ன அந்த ஒருவார்த்தை அவனை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஐயோ சாரி கார்த்திக்.நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ப்ளீஸ் கார்த்திக் என்னை மன்னிச்சுடு கார்த்திக்.என்று அவன் கைகளை பிடித்துக்கொள்ள.

ஹேய் ஹேய் தொடக்கூடாது.தொட கூடாது.டோஒஒஒஒஒஒஒண்ட் டச்.எனக்கு தெரியும் ராஜி.நீ கோவத்துல தான் சொல்லிருப்பன்னு.ஆனா அதை நினைச்சாலேலேலேலேலே ன்னு சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் சாய்ந்தான்.

அவன் சுயநினைவு இல்லாத நேரத்திலும் தான் கூறிய வார்த்தை அவனுக்கு நினைவிருப்பதை எண்ணி அதன் கொடூரம் புரிந்தது.

சில நிமிடம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ராஜி கார்த்திக்கின் முகத்தில் சில மாற்றங்களை கவனித்தாள்.

எப்போதும் அழகாக ட்ரிம் செய்து காணப்படும் முகம் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்டது.கண்களுக்கு கீழே தூங்காமல் கருவளையம் தெரிந்தது.

தம்பி நம்மள காணாம ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கான்.தாடியும் இவனுக்கு க்யூட்டா தான் இருக்கு.இவனை எப்படி பெட்ல கொண்டு போய் படுக்க வைக்க.ம்ம்ம்ம் ஆபத்துக்கு பாவம் இல்லை.தோள்ல கைத்தாங்களா கூட்டிட்டு போய் சோபாவில் படுக்க வைக்கலாம் என்று தோன்றிய உடன் அதையே செயல் படுத்தினாள்.

அவனை சோபாவில் படுக்க வைத்துவிட்டு பெட்ஷீட்டை எடுத்து போர்த்திவிட்டு அவனுடைய போனை எடுத்து அவனுக்கு பக்கத்தில் எடுத்து வைத்துவிட்டு படுக்க சென்றாள்.
மறுநாள் காலை எழுந்தபோது வழக்கம் போல் ராஜி குளித்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் பத்தி கொளுத்தி சாமிகும்பிட்டாள்.

பின் கார்த்திக்கிற்கு காலை உணவும்,மதியத்திற்கான சாப்பாடை கிச்சனில் தயார் செய்து கொண்டிருந்தாள்.

தூக்கம் கலைந்து எழுந்த கார்த்திக் கண்களை கசக்கி கொண்டு முழித்து பார்த்தான்.

அவனுக்கு நேத்து நைட் நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.எப்படி ஹால்ல சோபாவில் வந்து படுத்தோம்னு யோசித்து பார்த்தும் சுத்தமாக நினைவிற்கு வரவில்லை.
[+] 4 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 1 Guest(s)