சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#21
சங்கீதா மேடம் - இடை அழகி - பகுதி 6

அதிகாலை 5:30 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சங்கீதா, ரஞ்சித் தன் ஒரு விரலால் அவன் வாயினில் சப்பிக்கொண்டு தூங்குவதை பார்த்து லேசாக சிரித்து "என் செல்ல naughty கண்ணா.." என்று சொல்லிவிட்டு, பக்கத்தினில் இருக்கும் ரப்பர் nipple எடுத்து ஜொள்ளு விழும் அந்த பிஞ்சு உதடுகளின் நடுவில் திணித்துவிட்டு hall ல் வந்து அமர்ந்தாள்.. இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்த hall ல் வந்து அமர்ந்தாள்..,

மேஜையின் மீது இருந்த IOFI prospectus அவள் கண்ணில் பட சில நிமிஷங்கள் Raghav ன் பேச்சும், அவனது முகமும் அவள் மனதில் சில நொடிகள் ஓடின, prospectus பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ரேடியோவை on செய்தாள்.. tune செய்கையில் ஏதோ ஒரு அலைவரிசையில், "சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது.." என்கிற இளையராஜாவின் கவிதை நயமான காதல் மெலடி அவள் காதில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டிருந்தது .. அவளுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.. கண் மூடி அந்த இசையில் அவள் மூழ்கினாள்.. அப்போது அவள் மனது சற்று 20 வருடங்களை கடந்து பின் நோக்கி ஓடியது.. கோயம்பத்தூரில் கல்லூரியில் படிக்கையில், அங்கே சங்கீதாவுக்கும் ரமேஷ் என்கிற அவளுடைய சக வயதை சேர்ந்த மற்றொரு இலைஞனுக்கும் அழகிய காதல் பூத்தது.. அவளுடைய படிப்புக்கு அவன் உதவுவதும், அவனுடைய மதிய உணவுக்கு இவள் இவளுடைய உணவை பகிர்ந்து உதவுவதும், பலவகையான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்வதும், மாலை நேரங்களில் வீட்டிற்கு செல்லுகையில் இவர்கள் இருவரும் குறைந்தது ஒரு மணி நேரம் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மணம் விட்டு தங்களது வீட்டில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசி மனதுக்கு ஆறுதல் கூருவதும், தங்களுக்கு பிடித்த பாடல்களை பற்றி பேசுவதும், சமீபமாக திரைக்கு வந்த ரஜினி, கமல், படங்களை பற்றி பேசுவதும், அவள் ரஜினியை பற்றி அதிகம் கூறுவதும், அதற்க்கு பதிலாக அவன் கமலை பற்றி இன்னும் அதிகம் கூறுவதும், ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், அன்றைய தினத்தில் அவர்களுடைய நண்பர்கள் உடன் ஏற்பட்ட சம்பவங்கள், என அவர்கள் சிலாகித்து கொண்டிருக்கையில் அந்த ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் போல ஓடிவிடும்..இப்படியே சில மாதங்கள் ஓடியது.. ஒரு நாள் கலூரிக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு இருந்தது.. உண்மையில் இவர்கள் இருவருக்கும் தினமும் அந்த மாலை நேரம் எப்போது வரும் என்று ஏங்கி தவிக்க செய்தார்கள். நான்காவது நாள் ரமேஷ் அவளிடம் பேசுகையில் முகத்தில் ஒரு விதமான இறுக்கத்தில் பேசினான்..என்ன என்று அவள் கேட்க சிறிதும் தயங்காமல் அவளிடம் தனது காதலை கண்ணியமாக ஒரு கடிதத்தில் எழுதி அதை படிக்குமாறு அவளிடம் நீட்டினான்.. அதில் அவன் சங்கீதா இல்லாமல் வாழ முடியாது என்றும், அவன் வாழ்கையில் அந்த ஒரு மாலை நேரம் கிடைக்கும் சந்தோஷம் வாழ்க்கை முழுவதும் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றும் எழுதி இருந்தான்.. இதை படித்த உடனே சங்கீதாவின் மனதில் அப்படி ஒரு பூரிப்பு, அவளுடைய வாழ்வினில் முதல் காதல்.. அதிலும் அவள் மனமும் விரும்புக்கூடிய ஆண் குடுக்கையில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள் சங்கீதா.. கல்லூரி முடித்த கையோடு ரமேஷ் தனது வீட்டில் தன் தந்தை விருப்பத்தை நிறைவேற்ற அயல் நாட்டுக்கு மேற்படிப்பு படிக்க சென்றான்.. அப்போது கடைசியாக விடை பெரும் முன் ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து இருக்கையில் சங்கீதாவின் தலையில் அவனே மல்லிகை பூ வைத்து, இன்னும் 2 ஆண்டுகளில் வந்து விடுவேன் என்றும், வந்த உடனே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கூறி பிரியாவிடை பெற்றான் ரமேஷ்.. பதிலுக்கு அவள் ஒரு watch ஐ பரிசாக குடுத்து watch box மீது "sara" என்று எழுதி இருந்தாள் , sara வா என்ன அது? என்று ரமேஷ் கேட்க, "sangeetha+Ramesh என்பதை சுருக்கி sara னு எழுதி இருக்கேன் மண்டு" என்று லேசாக அன்புடன் அவன் தலையில் குட்டி சொன்னாள்.. அன்றிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அவளது வாழ்கையில் அவள் மணம் முழுதும் ரமேஷை ஏங்கி தவித்தது..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:26 AM



Users browsing this thread: 2 Guest(s)