மான்சி கதைகள் by sathiyan
#19
குனிந்து வரப்பில் அமர்ந்திருந்தவளை பார்த்தான், தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், சத்யனுக்கு கோபம் குமுறிக்கொண்டு வர “ ஏய் ஏன் இப்ப எளவு வீட்டுல இருக்குற மாதிரி தலையில கைவைச்சுக் கிட்டு உட்கார்ந்திருக்க, அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே அப்புறம் என்ன மறுபடியும் முரண்டு பண்ற, ஆனா நீ என்ன செஞ்சாலும் என்ன சொன்னாலும் நான் என் முடிவுல இருந்து பின்வாங்க போறதில்லை, நீ இல்லாம இந்த இடத்தைவிட்டு போகப்போறதும் இல்லை, இத்தனை நாளா அமைதியான சத்யனை தான பார்த்திருக்க, என்னை கோபக்காரனா மாத்தாதே எழுந்து வா மான்சி” என்று ஆத்திரமாய் கத்தினான் சத்யன், 

அசையாமல் வீம்பாக அமர்ந்திருந்த மான்சி “ என்ன நடந்துச்சுன்னு நா சொன்ன பொறவு ஒம்ம வீட்டுக்கு வாறன், மொதல்ல நா சொல்றதை கேளு” என்று மான்சி அழுத்தமாக கூற..

“ அதான் எனக்கு தேவையில்லேன்னு சொல்றேன்ல அப்புறமென்ன மான்சி,, வா வீட்டுக்கு போகலாம் ” என்று சத்யன் எரிச்சலாக சொன்னான்,, அவனுக்கு பாட்டியிடம் அவளை அழைத்துப்போய் அவள் வாயால் சம்மதத்தை சொல்லவைக்க வேண்டும் என்ற அவசரம்

“ ம்ஹூம் ஒன்கிட்ட சொல்லலைனா என் தலை வெடிச்சுடும் சத்தி, கொஞ்சம் கேளேன்” என்ற மான்சி அவனைப்பார்த்து கையேந்தி கேட்டாள்

சத்யனுக்கு மனதை பிசைவது போல் இருந்தது,, எவ்வளவு வீரமானவள் இவள்,, இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்ட கையேந்தறாளே, என்ற ஆதங்கத்தில் சட்டென்று அவள் பக்கத்தில் அமர்ந்து “ சரி சொல்லு மான்சி என்ன நடந்தது,, ஏன் உன் அண்ணனைக் கொலைப் பண்ண” என்றான் ஆறுதலான குரலில்


மான்சி சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை சூளையின் நெருப்பையே பார்த்தாள், பிறகு சத்யனைப் பார்க்காமல் இயந்திரம் போல வாயசைத்தாள்,, “ பத்து வருஷத்துக்கு முன்னாடி நாங்க குடும்பத்தோட புதுக்கோட்டையில ஒரு குவாரில கருங்கல் ஜல்லி உடைக்க காண்ட்ராக்ட்டர்கிட்ட கூலிக்கு வேலை செய்தோம், அங்கயே எங்களுக்கு ஒரு வீடு குடுத்திருந்தாங்க, பொட்டச்சிங்க நாங்க நாலு பேரும் கஷ்ட்டப்பட்டு அவனை படிக்க வச்சோம்,

" அப்போ எனக்கு பதினேழு வயசு, அடுத்தவளுக்கு பதினைஞ்சு, சின்னவளுக்கு பதிமூனு வயசு, எங்கப்பன் குடிகாரன் எங்கயாவது குடிச்சிட்டு கெடப்பான், நாங்க வாங்குற கூலியில, ஒராள் கூலி எங்கப்பனுக்கு, ஒராள் கூலி சோத்துக்கு, மீதி ரெண்டாள் கூலி அவன் படிப்புக்குன்னு ஒதுக்கி வச்சு செலவு பண்ணுவேன் சத்தி, அவனுக்கு படிப்பு முடிஞ்சுதுன்னு சொல்லி எங்களைத்தேடி குவாரிக்கு வந்தான், தொரை வூட்டு பைய மாதிரி டிப்டாப்பா வந்தான்,

" நாங்க எங்களோட கஷ்டமெல்லாம் தீந்து போச்சு இனி அவன் வேலைக்குப் போய் நம்மல காப்பாத்துவான்னு நெனைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம் சத்தி, ஆனா அவன் நாங்க மிச்சம் பண்ணி வச்சுருந்த காசை எடுத்துக்கிட்டு ஊரை சுத்திகிட்டு இருந்தான், பட்டணம் இவனை கெடுத்துச்சா, இல்ல பட்டணத்தப் பாத்து இவன் கெட்டானான்னு தெரியல, குடிப்பழக்கம் இருந்துச்சு, சரி அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கானேன்னுநாங்க கேட்டதுக்கு, இவ்வளவு நாளா ஆஸ்ட்டலயே கெடந்தேன் இன்னும் கொஞ்சநாள் ஜாலியா சுத்திட்டு அப்பறமா வேலைக்கு போறேன்னு சொன்னான்,

" நாங்களும் சரின்னு விட்டுபோட்டோம், ஒருநாளு சாயங்காலம் வேலை முடிஞ்சு எங்களுக்கு குடுத்திருந்த வீட்டுக்கு போனோம், சின்னவ புவனா குளிக்கனும்னு தட்டிக்குள்ள போனா, அவ துணியெல்லாம் அவுத்துட்டு குளிக்க ஒக்காந்துருக்கா, அப்ப தட்டி எடவெளியில் யாரோ பாக்குறமாதிரி இருக்குன்னு உத்துப் பாத்துருக்கா, இவன்தான் தட்டிய ஒதுக்கிட்டு புவனா குளிக்கிறத பாத்திருக்கான், உடனே அவ துணியைக் கட்டிக்கிட்டு வெளிய ஓடியாந்து என்கிட்ட சொல்லி அழுதா,

"எனக்கு என்ன சொல்றதுன்னு புரியாம அவள சமாதானம் பண்ணிட்டு அவனை கூப்பிட்டு கண்டிச்சேன், அதுக்கு அவன் ‘ஒன்னுமில்ல சும்மாதான் பாத்தேன் அதைப்போய் புவனா தப்பா நெனைச்சிருச்சு,, அப்படின்னு சொன்னான், நானும் அதை பெரிசுப்படுத்தாம விட்டுட்டேன், ஆனா அவனை கவனிக்க ஆரம்பிச்சேன், அவன் பார்வையே சரியில்லை,

" எங்கம்மாவோட மேலாக்கு விலகி இருந்தாக்கூட வெறிச்சுப் பாத்தான், என் ரெண்டு தங்கச்சிகளையும் என்னையும் தொட்டுத்தொட்டு பேசுனான், கூடப்பிறந்தவனாச்சே என்னப் பண்றதுன்னு புரியாம நாங்க மூனுபேரும் தவிச்சோம், ஒருநாள் எங்கம்மாவுக்கு அவன் நடத்தை தெரிஞ்சுபோச்சு,

"அவனை வெளக்குமாத்தால அடிச்சு எனக்கு பொறந்த ஆம்பளப் புள்ள சொத்துப்போச்சுன்னு நெனைச்சுக்குவேன், இனிமே இந்தபக்கம் எட்டி பாக்காதேலே, ன்னு அவனை அடிச்சு தொரத்திட்டாக, அப்பறம் ஒரு நாலுநாள் கழிச்சு முத்துமாரிக்கு கல்லு ஒடைக்கறப்ப பிசிறு கண்ல பட்டுருச்சு உடனே தருமாஸ்பத்ரிக்கு கூட்டிப்போய் வைத்தியம் பண்ணி, கண்ணுல மருந்து ஊத்தி வீட்டுல படுக்க வச்சுட்டு நான் கல்லு ஒடைக்க வந்துட்டேன், கொஞ்சநேரம் கழிச்சு அடுத்த சொட்டு மருந்து விட வீட்டுக்குப் போனேன்,

"வாசக்கிட்ட போறப்பவே முத்துமாரி மொனங்குற சத்தம் கேட்டுச்சு, எனக்கு நெஞ்சு பதக்குன்னுச்சு, கதவ தொறந்து பாத்தேன், தொறக்க முடியல உள்ள தாப்பா போட்டுருந்துச்சு, அப்பறம் கதவை எட்டி ரெண்டு ஒதை வுட்டேன், கதவு தொறந்துகிச்சு, உள்ளாறப் போயிப் போத்தா, என் கூடப்பொறந்த பாவி, முத்துமாரி வாயில துணியை வச்சு அடச்சுப்புட்டு அவமேல படுத்துருந்தான், நா போன வேகத்துல அவன் இடுப்புல ஒரு ஒதை விட்டேன் பக்கத்துல போய் விழுந்தான்,

" என்னைய பாத்ததும் முத்துமாரி அழுதுச்சு, ஆனா எதுவும் நடக்கலை, பாவி அவ தாவணிய உருவிட்டு, சட்டைய கிழிச்சுருந்தான், நான் வேகமா அவள தாவணியால மூடி வெளிய கூட்டியார திரும்புனேன், அதுக்குள்ள அவன் எந்துருச்சு எங்க ரெண்டுபோரு தலமுடியையும் பிடிச்சுக்கிட்டு அசிங்கமா பேசுனான், நா காறித்துப்பி அவன் கன்னத்துல அறைஞ்சேன், அவன் ரொம்ப குடிச்சிருந்தான் எங்க ரெண்டுபேரையும் சேத்து இழுத்து வீட்டுக்குள்ள தள்ளுனான்,


" எனக்கு ஆத்திரம் தாங்கமுடியல, நான் விழுந்த எடத்துல அருவாமனை இருந்துச்சு, நா அதை கையில எடுத்துக்கிட்டு திரும்பறதுக்குள்ள அவன் கிழ கெடந்த முத்துமாரி மேல படுத்துட்டான், எனக்கு பயங்கர ஆவேசமா வந்துச்சு அவன் கிட்டப்போய் தலைமுடிய புடிச்சு தூக்கி அருவாமனையால ஒரே வெட்டா கழுத்துல வெட்டிட்டேன், கழுத்து பாதி அறுந்து போய் தொங்குச்சு, கீழ கெடந்த முத்துமாரி பயங்கரமா கத்துனதும் தான் எனக்கு நெனைப்பு வந்துச்சு, ஒடனே அவன் உடம்ப கீழத் தள்ளிட்டு முத்துமாரியை தூக்கி அணைச்சுக்கிட்டு வெளிய ஓடியாந்து விழுந்தேன், அப்பறம் குவாரி மொதலாளி வந்து போலீஸ்க்கு போன் பண்ணாரு,

"ஆனா எங்கத்தா மகன் போனதுக்காக ஒரு சொட்டுக்கூட அழுவலை சத்தி எனக்காகத்தான் அழுதுச்சு, எல்லாருக்கும் நா ஏன் அண்ணனையே கொன்னேன் தெரிஞ்சு போச்சு, அதனால எனக்கு ஆறுவருஷம் தண்டனை குடுத்தாங்க, அதுல ஒருவருஷம் சின்னப்புள்ளைக ஜெயில்ல இருந்தேன் அப்புறம் பொம்பளைங்க ஜெயிலுக்கு மாத்திட்டாக, நான் வெளிய வந்து ஆறு மாசத்துல எங்கப்பன்னும் செத்துட்டான், அப்பறம் நாங்க நாலுபேரும் சம்பாரிச்சு முத்துமாரிய கட்டிக்குடுத்தோம், அதுலருந்து எனக்கு ஆம்பளைகளே புடிக்காது சத்தி ” என்று மான்சி சொல்லி முடித்துவிட்டு ஆயாசமாக ஒரு பெருமூச்சுடன் சத்யனை திரும்பிப் பார்த்தாள்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 2 Guest(s)