காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#36
நான் என்னோட அப்பா அம்மாவை எதிர்த்து வந்தா கண்டிப்பா உன்னோட அம்மா என்னை ஏற்றுக்க மாட்டாங்க அப்படி அவங்க சரின்னு சொன்னாலும் நீ கண்டிப்பா என்னை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்ட.

உன்னை பற்றி எனக்கு நல்ல தெரியும். நானும் வேற வழியே இல்லாம கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்.

கல்யாணம் முடிஞ்சா ஒருவாரதுலேயே நானும் லண்டன் போய்டேன். நான் அங்கே போனதுக்கு அப்புறமாதான் நீ என்னோட வீட்டுக்கு போயிருக்க. அவங்களுக்கு நீதான் என்னோட காதலன்னு தெரியாது. அதனாலதான் நீ குடுத்த கல்யாண பரிசை என்னோட அம்மா பிரிச்சுகூட பார்களை அப்படியே எனக்கு அனுப்பி வச்சுடாங்க.

பிரிச்சு பார்த்த உடனே நான் செத்து போய்ட்டேண்டா. எனக்கு நீ முதன்முதலா கொடுக்குற காதல் கடிதம் என்னோட கல்யாண பரிசா அமைஞ்ச கொடுமை சத்தியமா இந்த உலகுத்துல வேற யாருக்கும் வர கூடாதுடா. அதுக்கப்புறம் நான் நடை பிணமாதான் வாழ்ந்தேன்.

நான் அப்படி இருக்குறதை பார்க்க சகிகாமதான் ரிஜேஷ் என்னை இந்திய அனுப்பு வச்சான். அவனுக்கும் என்னோட காதல் கதை எல்லாம் தெரியாது. நான் வீட்டை பிரிஞ்சிதான் இப்படி கஷ்ட படுறேன் என்று நினைச்சு என்னோட அக்கா வீட்டுக்கு மும்பைக்கு அனுப்பி வச்சான். நான் இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நீ என்னை நினைச்சு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு நான் கேள்வி பட்டேன். உன்னை பற்றி நான் அப்போப்போ கீதுகிட்ட கேட்டுப்பேன். அவளும் சொல்லுவாள்.

என்ன காதலிச்ச பாவத்துக்கே நீ கஷ்ட படும் போது நான் மட்டும் எப்படி அங்கே சந்தோசமா இருக்க முடியும். அதனாலே நான் மீண்டும் லண்டன் போகலை தெரியும் என்று சொல்லி முடித்து எனது மார்பில் படுத்து அழுதாள்.
அவள் சொல்ல சொல்ல கேட்ட என்னால் முடிய வில்லை, அவளை வாரி எடுத்து அனைத்து கொண்டேன். எனக்கு சொல்ல வார்த்தைகள் வர வில்லை கண்ணீரே மிஞ்சி இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 09-02-2019, 10:50 AM



Users browsing this thread: 1 Guest(s)