காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#35
கலா: ஹரி நான் சொல்லவர்றத கொஞ்சம் அமைதியா கேளேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. நீ என்கிட்ட பேசாம இருந்தால் நான் சத்தியமா உயிரை விட்டுவேன்.

நான்: அப்புறேன் ஏண்டி என்னை விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுன.. இப்போ இங்கே வந்து நீலி கண்ணீர் வடிகுற..

கலா: ப்ளீஸ் என்னை கொஞ்சம் பேசவிடு அப்புறம் உனக்கு எல்லாமே புரியும் என்று கூறி என்னை அவளருகில் அமர செய்தால். பின்னர் அவளே எல்லாத்தையும் சொல்ல தொடங்கினாள்.

உண்மையிலேயே உன்னோட அம்மாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். நீ என்னோட நெருங்கி பழகிய நாள்ல ஒருநாள் கூட உன்னோட அம்மாவை பற்றி பேசாமா இருந்ததே கிடையாது. உன்னோட அம்மாவும் அப்படிதான். காலேஜ்சுக்கு அவங்க இரண்டு மூணு தடவைதான் வந்திருப்பாங்க.. ஆனால் உன்னை பற்றி பேசும்போது மட்டும் அப்படி ஒரு சந்தோசமான முகத்தை பார்க்கலாம். உங்க இரண்டு பேரை பார்த்துதான் நானும் என்னோட அப்பா அம்மாமேலே அளவுக்கு அதிகமா எப்படி அன்பா இருக்கணும்னு கத்துகிட்டேன்.

ஹரி நீ ஆஸ்திரேலியா போயிருந்த நேரம் என்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துசு. அவருக்கு ரொம்ப சீரியஸ் ஆய்டுச்சு. ஹாஸ்பிடல்-ல சேர்த்தோம். அது அவருக்கு இரண்டாவது அட்டக்காம் எனக்கு டாக்டர் சொன்னது அப்புறமாதான் தெரிந்தது. அதுக்கு அப்புறம் அவர் ரொம்ப பலகினமாகிட்டார். கிட்டதட்ட ஒருவாரம் ஹாஸ்பிடலேயே இருந்தோம். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டு வந்தது அப்புறமா அவருக்கு என்னோட கல்யாணத்தை ரொம்ப சீக்கிரமா பண்ணனும்னு ஆசை வந்திருச்சு. அதனால எல்லோரும் அவசர அவசரமா கல்யாண வேலையில இறங்கிடாங்க. மாப்புளை வேறு யாரும் அல்ல என்னோட அத்தை மகன் ரிஜேஷ் தான். ஆவணும் என்மேல் ஆசையாய் இருந்தானாம். நாங்க எப்போதுமே நல்ல ப்ரெண்ட்ஸா பழகுறதா பார்த்து வீட்டில் எல்லோரும் நாங்க சரியா ஜோடின்னு முடிவு பண்ணிடாங்க.

எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை நானும் யாராவது எனக்கு ஆதரவா இப்போ இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்துவாங்கலானு ஒவ்வொருத்தரையா உதவிக்கு கேட்டு பார்த்தேன் யாரும் வரவே இல்லை. வேற வழியே இல்லாமல் நானும் என்னோட அம்மாவையே உதவிக்கு கேட்டேன். நம்மளோட காதலையும் அவங்க கிட்ட சொல்லி அப்பாகிட்ட சொல்ல சொன்னேன்.

அங்கேதான் என்னோட துரதிஸ்டம் ஆரம்பிச்சிது . அம்மாவும் என்னோட
லவ்வை அப்பாகிட்ட சொன்னங்க. என்னோட அப்பா, அம்மா சொன்னதே கேட்டு அவர் அதிர்ச்சி ஆகி நெஞ்சில கை வச்சு படுத்தார். எனக்கும் அம்மாவுக்கும் என்ன பண்ணுரதுனே தெரியலை. திரும்பியும் நாங்க ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணினோம். டாக்டர் எங்ககிட்ட திரும்ப அவரோட மனசு கஷ்ட படுத்துற மாதிரியான விஷயம் எதையும் எப்போ சொல்லாதிங்க. அவரால இப்போதைக்கு எதையும் தாங்குற சக்தி இல்லைன்னு சொல்லிடு போய்டாரு. அதை கேட்டதும் நானும் என்னோட அம்மாவும் ஆடிபோயட்டோம்.

அதுக்கு அப்புறம் அம்மா வீட்டுக்கு வந்ததும் என்னோட கால்ல விழாத குறையா என்னிடம் நம்ம காதலை மறக்க சொன்னாங்க, அப்பா ஆசை படியே நான் ரிஜேஷை கல்யாணம் பண்ணும்னு கேட்டுகிடாங்க. என்னால சத்யமா உனக்கு துரோகம் பண்ண முடியலைடா நானும் உயிரை விட்டுரலாம்னு தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். என்னோட நடவடிக்கையை பார்த்த அக்கா நான் எதோ தப்பு பண்ண போறேன்னு என்னையே கவனிச்சுடு இருந்தாள்.

நான் அப்படி ஒரு காரியத்தை செய்ய போனத பார்த்து அவதான் என்னை தடுத்தாள். நான் செத்துட்டா மட்டும் என்னோட அப்பா அம்மா சந்தோசமா இருந்துடுவாங்களா, ஒன்னு நானே அவங்களுக்கு ஒரு முடியை கட்டனும் இல்லைனா என்னோட காதலுக்கு முடிவு கட்டனும் என்று அவள் எவ்வளோவோ எடுத்து சொன்னாள்
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 09-02-2019, 10:50 AM



Users browsing this thread: 2 Guest(s)