காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#34
ன்னிடம் அடி வாங்கியவள், வீங்கிய கன்னத்துடன் என்னைத்தேடி வெளியே வந்தாள். அவளை மீண்டும் பார்த்த உடன் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினேன்.

நான்: ஏன்டி, என்னை பாடைல ஏத்தி அனுப்புற .....

நான் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே, ஓடிவந்து எனது வாயில் வலது கையால் முடி, என்னை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நான் அனுபவிச்ச உண்மைங்க.. பெண்கள் சிரித்தால் மட்டும் அல்ல அழுதாலும் போச்சு...ஆமாங்க அவ்வளவு நேரம் அவள் மேல் கோபத்தில் இருந்த நான், அவள் கண்களில் கண்ணீரை கண்ட உடன் துடித்து போய்விட்டேன். எனது மனமும் குழப்பத்தில்தான் இருந்தது. என்னடா இவா, என் மனசை ரணமாக்கிவிட்டு போய்ட்டா இப்போவந்து அழுது கண்ணீரால் மருந்து போட வந்திருகிராளா. எனது குழப்பத்திற்கு அவளே விடை தந்தாள்.

ஹரி, ப்ளீஸ் இது மேல ஒருவார்த்தையும் பேசிடாதே. ஏற்கனவே நான் பாதி உயிரை விட்டுடேன். இன்னுமும் நான் உயிரோட இருகிறதே உன்னை எப்படி பார்பேன்கிற நம்பிக்கையில்தான். ப்ளீஸ் நான் சொல்லவர்றத கொஞ்சம் கேளு. எனக்காக ப்ளீஸ் என்று கெஞ்சி மன்றாடினாள்.

சரி இப்போ என்ன கதை சொல்லி என்னை ஏமாற்ற போற என்று ஏகத்தாளமாக கேட்டேன்.

நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ. எனக்கு தாலி மட்டும்தான் அவன் கட்டினான். ஆனால் நான் மனதளவில் இப்போவும் உன்கூடதான் வாழுறேன்.

நான் நக்கலாக கேட்டேன் 'ஏன்டி, காதலிச்ச பாவத்துக்கு என்னைத்தான் ஏமாற்றின, இப்போ தாலி கட்டுனவனையும் ஏமாற்றுரியா???' ரொம்ப நல்ல பொண்ட்டாடிடி நீ..

நான் சொன்னதை கேட்டு சிறிது கோப பட்டவள் என்னை விட்டு விலகி, சீ நீ ரொம்ப தப்ப பேசாதடா. தயவு செய்து நான் சொல்லவர்றத கொஞ்சம் கேட்டு அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் என்றாள்.

அவளது கோபத்தை பார்த்தவுடன், எனக்குள்ளேயே 'ச நான் ரொம்ப தப்ப பேசிடோமோ என்று தோன்றியது'. மனதிற்குள் இப்படி தோன்ற ஆனால் வெளியே நான் 'சரி அப்படி என்னத்தான் சொல்ல போற' என்று எரிச்சலில் கேட்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 09-02-2019, 10:50 AM



Users browsing this thread: 1 Guest(s)