காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#29
ரயிலில் எனக்கெதிரே கலா அமர்ந்திருந்தாள். அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளது பார்வையில் எந்த வித குற்ற உணர்ச்சியும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கோ அவளை இப்படி ஒரு இடத்தில் பார்ப்பேன் என்று சிறிதும் கூட நினைத்து பார்க்க வில்லை. அவளை பார்த்த உடன் கட்டுக்கடங்கா கோபம், முடிந்த மட்டும் வராத உறக்கத்தை வரவழைத்து கொண்டு கண்களை இருக்க மூடினேன், ஆனால் அங்கும் அவளே, அவள் என்னிடம் பேசிய பழைய நினைவுகள் ...

ஒரு முறை நாங்கள் இருவரும் கன்னியாகுமரி சென்றிருந்த பொழுது அவள் சொல்லிய வார்த்தைகள். அங்கே பல குழந்தைகள் சுற்றுலா வந்திருந்தனர். அவருக்கும் ஆறு வரை இருக்கும் சினந்சிறு குழந்தைகள். அவர்களை பார்த்த உடன்


கலா என்னிடம், ஹரி அவங்களை பார்த்தியா. எனக்கும் ஆசையா இருக்குடா எப்போ நமக்கு அதே மாதிரி குழந்தை வரும்னு. என்றாள்.

அதற்கு நான், நீ சரினா, நாம இப்போவே அதுக்கு முயற்சி செய்யலாம் என்ன சொல்லுற.. என்றேன்

கலா: சீ போடா, அசிங்கசிங்கமா பேசாத. நான் எப்போ கல்யாணம் பண்ணலான்னு கேட்டேன்..அதுக்குள்ள சாருக்கு வேற ஆசை வந்திடுச்சு.

நான்: எனக்கும் ஆசைதான் ஆனால். நான் அந்த பாக்டோரியைமட்டும் வாங்கிடேனா அடுத்த நாளே நம்ம கல்யாணம். என்ன சரியா என்றேன்.

எனது பதிலில் வெட்க பட்டவளாக எனது கரங்களை இருக்கு பிடித்த படி கடல் அலைகளை வெறித்து பார்த்தாள். பின்னர் இருவரும் ஒருவரயொருவர் அனைத்த படியே கடைவீதியில் உலா வந்தோம்.


அந்த பழைய நினைவுகளை நினைக்கையிலேயே எனக்கு கண்ணீர் தாரைதாரையாக வந்தது. மேலும் பொறுக்க முடியாமல் நான் எழுந்து ரயில் பெட்டியின் வாசலை நோக்கி சென்றேன்.

அங்கே நின்று கண்ணீருடன் வழியெங்கும் தெரிந்த மரந்செடிகளை பார்த்துக்கொண்டே வந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு உருவம் உள்ளே இருந்து வெளியே வந்தது. அது கலாதான். அதற்கு மேல் நகர முடியாமல் இருந்த நான் நகர்ந்தால் வெளியே குதிக்க வேண்டியதுதான். வழியில்லாமல் அங்கேயே நின்றேன். அவளோ அழுத்தம் திருத்தமாக அங்கே AC அட்டெண்டர் அமர இருந்த இருக்கையில் இருந்து என்னிடம் பேச தொடங்கினாள்


கலா: என்ன ஹரி, என்னை பார்த்து பார்க்காத மாதிரி இருக்க. நீ எப்படி இருக்க, அம்மா எப்படி இருக்காங்க.. என்று வரிசையாக கேட்டாள்


நான்: வெளியே வெறித்து பார்த்து கொண்டே, எல்லோரும் உண்ணும் உயிரோடதான் இருக்கோம் என்றேன்.

என்னை மேலும் சீண்டி பார்க்க, வேண்டும் என்றே அடுத்த கேள்வியை கேட்டாள்

கலா: ஓ அப்படியா!!! எனக்கு தெரியாம போச்சே. கீது கூட சொல்லவே இலையே என்றாள்.


நான்: ஏன்? தெரிஞ்சிருந்தா இருக்குற கொஞ்ச நஞ்ச உசுரையும் எடுத்துடு போயிருப்பியா...


கலா: ஏய், என்ன பேசுற நான் சும்மா கிண்டலுக்கு பேசினேன். நீ ரொம்ப சீரியஸ்-ஸா பேசுற..

நான்: உனக்கு எல்லாமே கிண்டலா போச்சுளா. நான் எல்லோருக்கும் சீண்டி பார்குற விளையாட்டு பொம்மை ஆயிடேம்லா...

கலா: என்ன ஹரி என்மேல் கோபமா இருக்கியா??

அதுவரை நான் அடக்கி வைத்த கோபத்தை அடக்க முடியாமல். வார்த்தைகளை அக்கினியாய் வீசினேன்.


நான்: ஏய், எழுந்திரிச்சி உள்ள போடி, பண்ணுறதெல்லாம் பண்ணிடு இப்போ பத்தினி வேஷம் போடுறியா.. என்கிட்ட இன்னொரு வார்த்தை பேசின உன்னை இல்லை நானே வெளியே குதிச்சுடுவேன்.. பேசாம போய்டு என்றேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 05-02-2019, 06:37 PM



Users browsing this thread: 3 Guest(s)