காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#28
என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிய வேலா,
மக்கா எழுந்திரில நடு நிசி ஆயிடுச்சு, இதுமேல போன சாப்பாடு எதுவும் கிடைக்காது. இப்போவேற மணி 10 தாண்டிருச்சு, நம்ம பாய் கடையிலேயே சாப்பிட்டு போடலாம் என்றான்.


ஆம், உண்மையில் அங்கிருந்து நாகர்கோயில் செல்ல எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். எனக்கோ என்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் போல் இருந்தது. எனது உள் உணர்வோ விரைந்து செல் என்று தூண்டியது. என்னால் அதுக்குமேல் பொறுக்க முடியவில்லை. மனதில் எதோ குடைய


நான்: ஏலேய் மக்கா, அங்கே என் பொஞ்சாதி தனியா இருப்பால, நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன்.
வேலா: எய்யா, பொண்டாடி மேல பாசத்த பாருடா, மூணு மாசமா இல்லாத பாசம் இப்போ பொங்கி வருதோ.
நான்: டேய், நான் அவகிட்ட போன்-ல கூட பேசலடா, எனக்கும் வேற பசியே இல்லை, என்று நானும் முடிந்த வரை சீக்கிரமாக செல்லலாம் என்று சொல்லி பார்த்தேன். ஆனால்,


வேலா: பொறு மக்கா, நாம எல்லோரும் ஒண்ணா போகலாம். என்ன நீ போன உடனவே பொண்டாடியை தலைக்கு மேல தூக்க போறியா, அங்கே நாலு மாமியார், ஏழு நாத்தனார் (அவர்களின் அம்மாவையும் மனைவியையும் குறிப்பிட்டான்) ஹோஷ்பிடல்-லையே இருக்காங்க.. நீ போய் எதையும் வெட்டி முறிக்க போறதுல்ல. அங்கே எத்தனை மணிக்கு கிளம்பினியோ மதியம் கூடா சாப்பிட்டு இருக்க மாட்டா வந்து ஒரு வாய் சாப்பிட்டு போகலாம் என்றான்.


இவன்கிட்ட பேசி நம்மலால ஜெயிக்க முடியாது, வழியே இல்லாமல் நானும் அவர்களும் போய் சாப்பிட தொடங்கினேன். அது அவர்கள் அடிக்கடி வந்து உண்ணும் கடை போல, அவர்களை பார்த்ததும் அனைவரும் எங்களை நன்றாக கவனிக்க தொடங்கினர். ஏதேதோ ஆர்டர் செய்தனர். கேரளா பரோட்டா சற்று பெரியதாகவே இருந்தது. சுடசுட கோழி வருவலும், அதன் லெக் பீஸ்-ஸும் நல்ல காரசாரமா இருந்தது. நான் சாப்பிடுவதை பார்த்தவர்கள்.
வேலா: பார்த்தியா மக்கா, கோழி காலை பார்த்த உடன், பொண்டாடியை மறந்துட்டான். நாம்ம பாய் கடை கோழின்னா சும்மாவா என்று ஏகபோகமாக என்னை கிண்டல் செய்தனர்.


நான்: டேய், சும்மா இருந்தவனை சாப்பிட கூப்பிட்டுடு நக்கல் வேற பண்ணுறியளோ, வச்சிருகேண்டி. நான் வாங்கிவந்த புல் நானே தனியா அடிச்சுறேன். உனக்கு ஒன்னும் கிடையாது போடா..


மற்ற நண்பர்கள் : ஏலேய் வேலா, நமக்காக என்னனமோ வாங்கிட்டு வந்திருக்குற பையனை இப்படி தப்புத்தப்பா பேசாதலே. நீ சாப்பிடு மக்கா, அவன்கிடக்கா கூறுகெட்ட பையன் என்று எனக்கு வகாலத்து வாங்கினர்.


ஆனால் என்னையே திரும்ப கவிழ்த்தனர் என்பது வேறு கதை.


வெங்கடேஷ்: ஏலேய், தப்புத்தப்பா பேசாதின்களே, அவன் ஒன்னும் பொண்டாடியை பார்க்க ஆசைபடலை. அந்த நர்ஸ் ஸ்டெல்லாவை பார்க்கணும்னு ஆசைடா. என்கிட்ட போன்-ல பேசும்போது கூட பொண்டாடியை பற்றி கேட்கவே இல்லை, நர்ஸ் நல்ல பார்த்து பாங்கலாதான் கேட்டான். அதுக்கு இப்படி ஒரு உள் குத்து இருக்குனு நான் நினைக்கவே இல்லை என்றான்.


அதற்கு ஆரவாரமாக அனைவரும் சிரித்தனர். என்ன செய்ய நானும் சிரித்து வைத்தேன். இல்லை என்றால், கோழிக்கு பதிலாக என்னை வைத்து இரவு உணவை கடத்தி விடுவர். கேலியும் கிண்டலுடன் உணவை சாப்பிட்ட பின்னர் அனைவரும் புறப்பட்டோம். இம்முறையும் நான் அம்பாசிடரில் வேலாவுடன் வந்தேன். சில நிமிடங்கள் பேசி வந்தோம், பின்னர் நான் மீண்டும் எனது நினைவலைகளை புரட்ட ஆரம்பித்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 05-02-2019, 06:36 PM



Users browsing this thread: 1 Guest(s)