காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#24
நான்: நீ கேட்டது எல்லாம் நியாயம்தான் எனது புத்திக்கு எட்டியது ஆனால் இந்த பாலாய் போன மனதிற்கு ஒன்றும் புரிய மாட்டேங்குதே மக்கா..தயவு செய்ஞ்சு என்கிட்ட யாரையும் பேச சொல்லாதே. நானே கொஞ்ச நேரத்துல்ல வந்து பேசுறேன்டா என்று கூறி அவனை என்னை தனியாக விடுமாறு கேட்டு எனது அறையை விட்டு வெளியே அனுப்பினேன்.

தனியாக அறையில் இருந்த நான் எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேன் என்று தெரியாது. மனதில் பல எண்ணங்கள் என்னை கலா கண்டிப்பாக ஏமாற்றி இருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினேன். கொஞ்சம் நேரம் கழித்து எனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன் அங்கே என்னுடைய அம்மா கவலையுடன் சுவற்றில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். எனது நண்பர்கள் அனைவரும் தத்தம் வீட்டுக்கு சென்றிருந்தனர். நான் மெதுவாக அவளின் அருகே சென்று மடியில் தலை வைத்து படுக்க முயர்ச்சித்தேன் ஆனால் முடியவில்லை தலையில் அடி பட்ட இடத்தில் தையல் போட்டிருந்ததால் என்னால் முடியவில்லை. அம்மா பசிக்குதுமா. ஏதாவது சாப்பிட தாம்மா என்று கேட்டேன்.

அம்மா: இருடா கண்ணா, இப்போ எடுத்து வரேன் என்று கூறி உள்ள சென்றவள் சில நிமிடங்களிலேயே தட்டில் கொஞ்சம் சோறும் பருப்பும் போட்டு கொண்டு வந்தாள். எனக்கு கொஞ்சம் ஊட்டியவளை, நீயும் சாப்பிடுமா என்று கூறி அவளையும் கொஞ்சம் சாப்பிட செய்தேன்.

என்னால் முழுவதும் கலாவை மறக்க முடியாவிட்டாலும், அம்மாவுக்காக கொஞ்சம் நார்மலாக இருப்பதுபோல் நடிக்க தொடங்கினேன். அந்த வார இறுதியில் எனது தலையில் இருந்த தையலை பிரித்தனர். வீட்டில் உணவை உண்பதும், நண்பர்களுடன் எங்கேயாவது செல்வதுமாக நாட்களை கழித்தேன். எனக்காக லீவ் எடுத்தவர்கள் வேலைக்கு சென்ற பின்னர், நான் மட்டும் தனியாக வெளியே செல்ல தொடங்கினேன். நான் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது கலாவின் நினைப்பை மறந்திருந்தாலும் தன்னந்தனியாக இருக்கும் பொழுது அவளின் நினைவுகள் முழுவதுமாக வாட்டியது. இதற்கு இடையில் நான் எனக்களித்த விடுமுறையை தாண்டியும் விடுப்பில் இருந்ததால் நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து என்னை மொபைலில் அழைத்தனர். நான் வேலைக்கு வர கொஞ்சம் நாள் ஆகும் என்று கூறி அழைப்பை துண்டித்தேன். அதன் பிறகு என்னை அவர்கள் பலமுறை அழைத்தும் நான் பதில் அளிக்கவே இல்லை.

வீட்டில் மட்டும் அம்மாவுக்காக நான் நார்மலாக இருப்பதுபோல் நடித்தாலும், வெளியே நானும் அவளும் சென்று வந்த இடங்களை தேடி சுற்றி வந்தேன். ஒருநாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தை சுற்றுவேன், மறுநாள் நாங்கள் இருவரும் ஒரு கப் ஐஸ் க்ரீமை மாற்றி மாற்றி சுவைத்த கடையில் நாங்கள் வழக்கமாக அமர்ந்திருக்கும் மேசையில் அமர்ந்திருப்பேன். இப்படி ஒவ்வொரு இடத்திற்கா சென்றன். அப்படி ஒரு நாள் நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வேலா என்னை கவனித்து விட்டான். என்னை சத்தம் போட்டு வீடு போகுமாறு கூறினான். நான் மறுக்கவே, என்னை வேறு வழியின்றி அங்கே அருகில் இருந்த மது கடைக்கு அழைத்து சென்றான்.


மது கடையின் உள்ளே,

வேலா: ஏலே மக்கா ஹரி, ஏம்டா, இப்படி தெரு தெருவா சுத்திட்டு இருக்க..

நான்: முடியல மக்கா, வீட்ல என்னால ரொம்ப நேரம் நடிக்க முடியலைடா.

வேலா: ஏலேய் அந்த பொட்ட சிருகியே உன்னை தூக்கி வீசிக்கு போய்ட்டா, நீ ஏம்ல இப்படி சுத்துற... அவனவன் நாலஞ்சு பொண்ணுங்களை ஓட்டிடு போற நீ என்னடானா தொலைஞ்சி போன ஒருத்தியவே நினைச்சுட்டு இருக்க..நீ இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி இருகிறத பார்க்க சகிக்காம தான் நாங்க எல்லாரும் வேலைக்கே போறோம். நீ என்னடானா இப்படி தெரு தெருவா திரியிற..

நான்: மக்கா, என்னை நீ கூட முழுசா புரிஞ்சிகளைடா.. அவ என்கிட்ட எப்படி எல்லாம் பேசினா தெரியுமாடா.. என்னால இப்போகூட அவ அப்படி செய்தான்னு நம்பவே முடியலைடா. .

வேலா: உன்னை இப்படியே விட்டா அவமேல பைத்தியமாவே ஆய்டுவ... நீ என்னமோ வீட்டுல நடிச்சி அம்மாவை ஏமாத்துறதா நினைச்சுட்டு இருக்க.. உன்னோட அம்மாவோ தினசும் என்னோட அம்மாகிட்ட சொல்லி சொல்லி அழுறதா பார்க்க முடியலைடா.. உன்னை நீ மாத்திக்கோ இல்லைனா நீ அவங்களை கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுத்துருவடா சொல்லு புட்டேன்..

அதற்குள் அங்கே வந்த செர்வரிடம் வேண்டிய பானங்களை ஆர்டர் கொடுத்து விட்டு மேலும் என்னிடம் என்னென்னமோ பேசினான்..
சிறுது நேரத்தில் பானமும் வந்தது.

வேலா: இந்த இப்போதைக்கு இதுதான் மருந்து.. ஆனால் இதையே பழக்கமா வச்சுக்காதே..என்று கூறி ஒரு கோப்பை பானத்தை என்னிடம் நீட்டினான்.

நான் அதை வாங்கி பானத்தை பார்க்கும் பொழுது எனது கண்ட கால நினைவுகள் மீண்டும் இம்சித்தது..

கல்லூரி நாட்களில் ஒருமுறை என்னுடைய நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள் அன்றிரவு பலர் அவனுடைய வீட்டில் இருந்தோம். அங்கே வீட்டில் யாரும் இல்லை. ஆகையால் ஒரே ஆட்டம் பாட்டம். விடிய விடிய மது, மாமிசம் மற்றும் புரிந்தும் புரியாத பாடல்களை இசைக்க செய்து ஆட்டம். நான் சற்று அதிகமாகவே மது அருந்தியதால் வாந்தி எடுத்து. காலை கல்லூரி சொல்ல முடியாமல் விடுப்பு எடுத்தேன்... என்ன நடந்ததுன்னு தெரியவில்லை.. மணி பதினொன்று இருக்கும் கலா மட்டும் அந்த நண்பனின் வீட்டிற்கு வந்தாள். நான் அதீக போதை தெளிந்து அப்பொழுதான் எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வந்தேன். வீட்டின் வாசலில் கலா பார்க்க காளி போல் விகாரமா கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் உள்ளே வேகமாக வந்தவள். முடிந்த மட்டும் பலமாக என்னை அடித்தாள், அப்புறம் என்னை கட்டி பிடித்து அழுதே விட்டாள். பின்னர் காதல் வார்த்தைகள் பேசி என்னிடம் இனி குடிக்க கூடாதுன்னு சத்யம் வாங்கி கொண்டாள். அதன் பின்னர் நான் மதுவை தொடவே இல்லை...

நான் மதுவை கைகளில் வைத்து கனவு கண்டதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேலா..என்னலேய் அப்படி வெறிச்சு பார்த்துடு இருக்க..என்றான்
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 03-02-2019, 11:13 AM



Users browsing this thread: 1 Guest(s)