காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#18
இதற்க்கு மேலும் பொறுத்து கொள்ள முடியாமல், அவளுக்கென்று வாங்கிய பொருட்களுடன் ஒரு காதல் கடிதமும் எழுதி பரிசு போல் பேக் செய்து அவளது வீட்டிற்கு சென்றேன். முப்பது நிமிட பைக் பயணம். வழியெங்கும் தென்னைகள் வரிசையாய் நின்று என்னை வாழ்த்தியது போன்றதொரு போலி தோற்றம். வாழை இலைகள் காற்றில் ஆட, அவை எனக்கே கைஅசைத்து வழி அனுப்புகின்றனவோ என்பது போன்ற பிரம்மை. சிறு இடைவேளைக்கு பின் நான் அவளை காண போகின்றேன் என்ற சந்தோசத்தில் பைக் கூட இறக்கை கட்டி பறந்ததா அல்லது நான் அவ்வளவு வேகமாக வந்தேனா தெரியவில்லை.

இதோ கலாவின் வீட்டிற்கு வந்து விட்டேன். மிக பிரம்மாண்டமா வீடு, வாசலில் இரு வண்டிகள் உள்ளே அவளது அப்பா வெள்ளை வேஷ்டி சட்டையில் மிக கம்பீரமாக சேரில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் அவரது கம்பெனியில் வேலை செய்பவர்கள் நின்று கொண்டே, அவர் கேட்கும் கேள்விகளுக்கு தலையை மாடுகள் போல ஆட்டி ஆட்டி பதிலளித்து கொண்டிருந்தனர்.

என்னுடைய வண்டி சத்தம் கேட்டு அனைவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர். அவர் என்னை சிலமுறை கல்லூரியில் பார்த்திருந்ததால், அறிமுகம் தேவை இல்லாமலே அடையாளம் கண்டு கொண்டார்.

வாப்பா, எப்படி இருக்கிற என்று நல விசாரணையுடன் என்னை வரவேற்றார். என்னுடைய கைகளில் இருந்த பரிசை பார்த்துக்கொண்டே இருந்தவர். என்னப்பா நீ கல்யாணத்திற்கு வரலேயா??? என்று கேட்டார்.

அவர் என்ன கல்யாணம் யார் கல்யாணம் எதுவுமே சொல்லவில்லை சும்மா மொட்டகட்டையா கேட்டார். நானும் யார் கல்யாணம் என்று கேட்க வாய் திறந்தேன், அதற்குள் அவளது அம்மா என்னை பார்த்து விட்டார்கள். அவர்களுக்கு சும்மா சம்பரதாய வணக்கம் சொன்னேன். நான் அவளது கல்லூரி தோழன் என்பதனால் என்னை உள்ளே அழைத்து சென்றேன். செல்லும் போதே, என்ன ஆண்டி, கலா இல்லையா என கேட்டேன்.

நின்று என்னை திரும்பி பார்த்தவர், என்னை ஒருமுறை நன்கு உற்று பார்த்தார். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் எதுவும் புரியவில்லை. என்ன தம்பி வெளி ஊருக்கு எங்கேயும் போய் இருந்தீங்களா. என்று கேட்டார்.


அவரது கேள்வியில் உள் நோக்கம் தெரியாமலே, நான் ஆஸ்திரேலியா போய் இருந்ததை சொன்னேன். அதை கேட்டவர், சிரித்தவாறே கைகளை நீட்டி நான் கொண்டு வந்திருந்த பரிசை கேட்டார். அவர் எதற்கு இதை கேட்கிறார் என்று முழித்து கொண்டிருந்தேன். எனது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவராக, அவரே பதில் அளித்தார்கள்.

கலா கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்துல லண்டன் போய்டாப்பா. இது அவளுக்கு கொடுக்க வாங்கினது தானே, என்கிட்ட கொடுத்துடு நான் அவளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அவரின் பதிலை கேட்டு எனது உள்ளம் சுக்கு நூறாக சிதறியது, என்னால் நிற்க கூட முடியாவில்லை. கை காலால் ஒன்றை ஓன்று பின்னி என்னை நிலை தடுமாற செய்தது போன்ற உணர்வு. என்ன ஆன்டி, என்று மீண்டும் ஒரு முறை கேட்டேன்.

பின் நான் என்ன செய்தேன் என்று எனக்கு உணர்வே இல்லை. கைகளில் இருந்த பரிசு பொருள் கீழே விழ போனது. அதனை லாபகமாக பிடித்த கலாவின் அம்மா, என்னப்பா பார்த்து பிடிச்சுக்க கூடாது. சரி சரி நீ அங்கே உட்காரு நான் காபி கலந்து கொண்டு வாரேன் என்று கூறிவிட்டு அடுக்களை சென்றார்கள். நிலை தடுமாறி நின்ற நான் அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.

அங்குதான் நான் அதனை கண்டேன். எனக்கு நேர் எதிராக சுவரில் அறையபட்டிருந்த ஆணியில் அப்புகைப்படம் தொங்கியது. பார்த்தவுடன் நானே அதில் தொங்கியது போன்ற ஒரு வலியுடன் கூடிய உணர்வு. ஆம், அதில் புன்னகைத்த படி இருவர். ஓன்று கலா, அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக அவளைவிட அதிக சிரித்தமாதிரி ஒரு ஆண்மகன். அவளது கணவன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 01-02-2019, 11:05 AM



Users browsing this thread: