காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#17
ஆறு மாதங்கள் நான் எப்படித்தான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன்னு எனக்கே ஆட்ச்சரியமாக இருக்கிறது. அம்மாவுடன் இரண்டோ அல்லது மூன்று முறையோ தொலை பேசியில் பேசி இருந்தேன். நண்பர்களுடன் அதிகம் அரட்டை அடிக்ககூட முடியவில்லை. இவை அனைத்திற்கும் மேல் என்னால் ஒருமுறைகூட கலாவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளுக்கு பல மெயில்கள் அனுப்பியும், மொபைலுக்கு பலமுறை தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்தேன் ஆனால் எதுவும் பலனளிக்க வில்லை.

அவளை பார்க்கவோ, பேசவோ முடியாத ஏக்கம் என்னை மிகவும் பாதித்தது. அங்கு நான் பார்த்த ஒவ்வொரு அழகான பெண்ணும், அழகான ஒவ்வொரு பொருளும் அவளையே நினைவூட்டினாள். அந்த குளிரும், இதமான தட்பவெட்பமும் எனக்கு அவளை உடனே காணவேண்டும் என்கிற ஏக்கத்தை கூட்டியது. பத்து முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ப்ரொஜெக்டை வெறும் ஆறு மாதங்களுக்குள் முடித்து கொடுத்தேன். எல்லாம் அவளும், அவளின் நினைவலைகள் செய்த மாயம். ஆனால் பாரட்டுகள் நான் பெற்றேன். பெரிய அளவில் ஊக்கதொகைகள் அளித்து நாடு திரும்ப அனுமதி அளித்தனர்.

ஊருக்கு திரும்புகிறோம் என்கிற ஆசையில், அம்மாவுக்கும் நண்பர்களுக்கும் பரிசு பொருட்களை வாங்கினேன். அவளுக்கு பிடிக்கும் என்கிற ஆசையில் ஒரு தங்க ஆபரணமும், சில சிகை அலங்கார பொருட்களும் வாங்கினேன். இந்த பொருட்களை கொடுத்தால் அவளின் பதில் எப்படி இருக்கும், இதற்காக அவளுடன் என்னென்ன கேட்கலாம் என்று மனதில் பல முறை ஒத்திகை வேறு பார்த்து கொண்டிருந்தேன்.

எனது கம்பெனியில் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டு நேரடியாக நான் நாகர்கோயில் சென்றேன்.


அதுவரை கலாவின் நினைவில் இருந்த நான். கொண்டு வந்த பொருட்களை அம்மாவிடம் கொடுத்தேன், அவள் ஆனந்த கண்ணீருடன் வாங்கி உச்சி முகர்ந்து நெற்றியில் ஒரு முத்தம் அளித்தால், இந்த அன்புக்காக நான் எதையும் செய்வதற்கு தயார் என்கிற ஓர் உன்னத உணர்வு என்னுள் எழுந்தது. ஆறு மாதங்கள், கண்ட கண்ட சுவை அற்ற உணவுகளை சாப்பிட்ட நான், முதன் முறையாக அம்மா ஊட்டிய அந்த சோதி சாப்பாடு என்னை கிறங்கடித்தது. அம்மாவின் கைமனத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனது தாயின் கரங்களால் அமுதம் உண்ட மாதிரி ஒரு சந்தோசம்.. அப்படியே கொஞ்சம் நேரம் என்னோட அம்மாவின் மடியில் படுத்திருந்தேன்.. அவள் அன்பாய் எனது தலையை கொதி விட்டவாறு எனது பிரயாண கதைகளை கேட்டாள்.
உணவை உண்டதால் வந்த அரைமயக்கத்தில் உறங்கி போனேன். சிறிது நேரம் கழித்து என்னை தலையணையில் படுக்க செய்தாள்.

பின்னர் மாலை எனது நண்பர்கள் வந்துதான் என்னை எழுப்பினர். நாங்கள் ஒரு ஏழு பேர் இருப்போம். யார் எங்கே போனாலும் சரி, ஊர் திரும்பிய உடன் அன்று மாலையே ஒரு மீட்டிங் போட்டு இரவுவரை ஒரே அரட்டை ஆர்ப்பாட்டம்தான். இன்றும் அது போல்தான் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னென்னே வாங்கி வந்திருக்கிறேன் என்று எனது பேக்கை துளைத்து எடுத்தனர். அதுவரை சந்தோசமாக ஒவ்வொன்றையும் எடுத்தவர்கள் நான் கலாவிற்க்காக வாங்கி வந்த பொருட்களை கண்ட உடன் அதிர்சியாயினர். முதலில் வேலாதான் என்னுடன் பேசினான்.

வேலா: ஏலே மக்கா, உனக்கு விசயமே தெரியாதா !!!

அவனது கேள்விக்கு அர்த்தம் புரியாமலையே புருவங்களை உயர்த்தி 'என்ன மக்க ஆச்சு, என் திடீர்னு என்னை கேட்குற' அப்பாவியாய் கேட்டேன்.

வேலா: சரி சரி நான் உனக்கு அப்புறம் சொல்லுறேன் முதல்ல நாம நம்ம கிரௌண்டுக்கு போவோம் அங்க வச்சு விவரமா சொல்லுறேன் என்றான்.

நான் அதுவரை பொறுத்து கொள்ள முடியாமல் என்ன விஷயமுன்னு இப்போவே சொல்லு மக்கா, இல்லைனா என்னோட தலையே வெடிச்சுரும் பார்த்துக்கோ என்றேன்.

வேலா: நான் அங்க வச்சு விவரமா சொல்லுறேன், நீ விரசலா புறப்புட்டு வா என்றான்.

நான்: வர கொஞ்சம் லேட்டாவும் மக்கா, நீ முன்னே போங்க நான் பின்னாடியே வரேன். உன்னோட பைக் வச்சுட்டு போ என்றேன்.

அவர்கள் எனக்கென்று ஒரு பைக் வைத்து விட்டு சென்றனர். நான் முகம் கைகால் கழுவு விட்டு சுட சுட அம்மா தந்த டீ குடித்து விட்டு மீண்டும் கலாவிருக்கு கால் செய்து பார்த்தேன் எந்த வித பதிலும் இல்லை.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 01-02-2019, 11:04 AM



Users browsing this thread: 1 Guest(s)