காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#13
பயிற்சி முடிந்து, கல்லூரியில் இரண்டாம் ஆண்டும் நன்றாக சென்றது. ஆனால் வழக்கத்தை விட கலா என்னுடன் அதிக நெருக்கமாக பழகினால். ஒருநாள் நண்பர்கள் சிலர் என்னுடன் படத்திற்கு செல்லலாம் என்று கேட்டுகொண்டிருன்தனர். அதை எங்கிருந்தோ கேட்டவள், என்னை பிடித்துகொண்டு, நானும் படத்திற்கு வரேன் என்று கூறி பிடிவாதமாக இருந்தாள். நான் போகவேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்தேன். இவள் இப்படி கேட்ட பின்பு, பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதன் பின் என்மேல் கோபமாக இருந்த கலா, என்னுடன் ஒருநாள் பேசாமல் இருந்தாள். அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை பேசினாலும் இருக்க முடியவில்லை இரு தலை கொல்லி எறும்பு போல் நான் தவித்தேன். அவளோ அடுத்த நாளே என்னுடன் சரளமாக பேச தொடங்கினாள். காதல் என்கிற வார்த்தை சொல்லாமலே காதலர்களாக சுற்றி திரிய ஆரம்பித்தோம். கல்லூரியின் இரண்டாம் ஆண்டும் முடியும் தருவாய். ஒவ்வொருவரும் பல இண்டேர்விவ் அட்டென்ட் பண்ணி பணியில் சேர முயற்சித்து கொண்டிருந்தனர். அந்த இறுதி நாளும் வந்தது, நான் காதலை சொல்வேன் என்று எதிர் பார்த்து காத்திருந்தவள் அவளே சொன்னாள்.


எது வேண்டாம் என்று என்னை நானே கட்டுபாடுக்குள் வைத்திருந்தேனோ, அது நடந்தது. அவள் கைகளில் காதல் வாசகம் எழுதி இருந்த க்ரீடிங்க்ஸ் உடன் வந்திருந்தாள். அதனை என்னிடம் தந்துவிட்டு தந்து விட்டு மூன்று வார்த்தை மந்திர சொல்லை தனது செவ்விதழ்களால் சொன்னாள். நாங்கள் இருந்தது நூலகத்தில் அங்கு யாரும் வரவில்லை.

சொல்லிவிட்டு வார்த்தை முடியும் முன்னமே என்னை அனைத்து கொண்டாள். மனதில் ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்த மாதிரி, உலகத்தில் எங்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை என்கிற பிரம்மை. அந்த நிமிடம் எதை கேட்டிருந்தாலும், மறு பேச்சின்றி கொடுத்திருப்பேன் அப்படி ஒரு சந்தோசம்.

என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்ந்த நாள் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையாவது இலட்சியமாவது. இவள் தான் இனி எனது உலகம் என்று கூட நினைக்க தொடக்கினேன். நாங்கள் இருவரும் சுய நினைவுக்கு வர சில நிமிடங்கள் ஆனது


பின்னர் நிதானத்துக்கு வந்த இருவரும் ஏதேதோ பேசினோம், எதிர்காலம் பற்றி, ஏன் நான் எனது காதலை மறைக்க முயன்றேன் அடுத்து என்னப்பண்ணலாம் என்று பேசி முடிவு எடுத்தோம். எனது அம்மாவிற்கு கண்டிப்பாக உன்னை ரொம்ப பிடிக்கும், அதுபோல் உன்னது வீட்டிலும் என்னை பிடிக்கணும். மேலும் உங்க வீட்டில் நான் வந்து பெண் கேட்பதற்கு முன் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தை அடையணும். கண்டிப்பாக எனக்காக குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டு என்று கேட்டேன். நான் முடிக்கும் முன்பே, நீ மட்டும் இல்லை நானும் எங்க வீட்டின் சமதத்துடன் தான் நம்ம திருமணம் நடக்கணும். நாமே இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து சீக்கிரம் எல்லாம் முடிக்கலாம் என்று ஆதரவாக சொன்னாள். நேரம் போவது கூட தெரியாமல் இருவரும் மணிக்கணக்காக பேசினோம்.

பின்னர் திட்டமிட்ட படியே நான் அடுத்த சில தினங்களில் சென்னையில் ஒரு பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எனது முதல் சம்பாத்தியத்தில் நான் வாங்கியது எனது அம்மாவுக்கு ஒரு புடவையுயம், காதலியுடன் பேச ஒரு மொபைல் போனும் வாங்கினேன் அதுவரை ஒரு ரூபாய் காயின் பூத்தில் பேசி வந்த நாங்கள் பிறகு சுதந்திரமாக பேசிவந்தோம், பகல், இரவு என பாராமல் பேசினோம். நான் சென்னையிலும். அவள் நாகர் கோவிலிலும் இருந்தாலும் தினம் இரவில் காற்றில் மின்னொலியில் தூதுவிட்டு பேசிவந்தோம். அப்பொழுதுதான் சில நாட்கள் நான் பணியின் நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருந்தது. அவளுடன் அதிகம் பேசமுடியாமல் போனது.

ஆறுமாத இடைவேளைக்கு பின் சென்னை திரும்பிய உடன் நான் நாககோயில் சென்றேன் ஆனால் அங்குதான் நான் எதிர் பார்க்காத அந்த அதிர்ச்சி காத்திருந்தது.....
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 30-01-2019, 01:21 PM



Users browsing this thread: 3 Guest(s)