காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#7
நான் எனது வகுப்பறையில் ஒரு மூலையில் இருந்த இருக்கையில் கூனி குறுகி அமர்ந்திருந்தேன்.

அப்பொழுதுதான் அந்த பெண், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் படி கரகோசத்துடன் சத்தாமாக சொன்னாள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் எனலாம். நான் எனது தாழ்வு மனப்பான்மையை வென்ற நாள்.

அந்த பெண்ணின் பெயர் கீது மலையாளம் கலந்த தமிழில்,

கைஸ், இங்க கவனிங்க, இப்போதான் நுழைவு தெரிவில் தேசிய அளவில் முதல் பத்து இடத்திற்குள் வந்த ஹரி வந்திருக்கிறார். அவரை எல்லோரும் கைதட்டி வரவேற்கலாம் என்று கூறினாள்.

அதுவரை அவள் சொன்னதை கவனிக்காத நான் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட நானும் எழுந்து நின்றேன். அவள் நேரா வந்து எனது கைகுலுக்கி முன்னாள் வந்து ஏதாவது பேசுங்கள் என்றாள்.

இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத நான் எப்படி முன் சென்றேன் தெரியவில்லை. என்னை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி இருக்கையில் அமர்ந்தேன். பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் படுத்தி கொண்டனர். முதல் நாள் பாடங்கள் இல்லாமல் பலமுறை அறிமுகத்திலேயே சென்றது. உணவு இடை வேளையில் அனைவரும் ஒன்றாக சென்றானர்.

எல்லோரும் எந்த வித தயக்கம் இன்றி அனைவரின் உணவுகளை பகிர்ந்து கொண்டனர். நான் எனது முந்தைய கல்லூரியில், மாலை அல்லது காலை வகுப்பில் மட்டுமே இருந்தேன் அதனால் இந்த மாதிரியான அனுபவம் புதுசு.

இன்று எனது அம்மா, மதிய உணவிற்காக புளிக்கொளம்பு சாதமும், வத்தலும் வைத்திருந்தாள். அதன் வாசனை பிடித்துப்போன பலர் தேடி வந்து சாப்பிட்டனர். அன்றைய நாளில் மட்டும் அனைவருடன் பேசி விட்டேன் கலாவை தவிர... ஏனென்று தெரியவில்லை ஆனாலும் சந்தர்பமும் வர வில்லை.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 29-01-2019, 10:35 AM



Users browsing this thread: 1 Guest(s)