23-01-2019, 09:16 AM
![[Image: saroja_uruvaakkiya_nanthavanak_kaadu_2_11024.jpg]](https://image.vikatan.com/news/2019/01/22/images/saroja_uruvaakkiya_nanthavanak_kaadu_2_11024.jpg)
இயற்கையான காடு போல் இந்த ஓர் ஏக்கர் நிலமும் மாறியதால், இங்கே பல்வேறு சிறுசிறு உயிர்களும் வாழ ஆரம்பித்திருக்கின்றன. கரூர் மாவட்டத்திலேயே அரிதாகிப்போன வகைவகையான பட்டாம்பூச்சிகளும் இந்தக் காட்டைச் சுற்ற ஆரம்பித்திருக்கின்றன. இங்கே நான் வளர்த்திருக்கிற மரங்களில் பழங்களைப் பறிப்பதில்லை. அதனால், நிறைய பறவைகளும் இங்கே தங்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக வந்தால், நிஜமாக எனக்குக் காட்டுக்குள் போய்ட்டு வந்த உணர்வு ஏற்படுது. மனசு சரியில்லன்னா, இந்தக் காட்டுக்குள் காலாற நடந்து வந்தா, உடனே மனசு லேசாயிடும்