22-01-2019, 11:51 AM
![[Image: ec1_03220.jpg]](https://image.vikatan.com/news/2019/01/22/images/ec1_03220.jpg)
பி.ஜே.பி தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “வாக்குப்பதிவு இயந்திரங்களை எவராலும் ஹேக் செய்ய முடியாது. தேர்தலில் தோற்றுப்போனால் என்ன காரணம் சொல்வது என்ற பயம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். அந்தக் கட்சியில், தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். “லண்டனில் நடந்த கூட்டத்துக்கு கபில் சிபல் சென்றது எதேச்சையானது தானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “ரஃபேல் போல இதுவும் பொய்யான குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம்குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “ஜனநாயகத்தைக் காக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இந்த விவகாரத்தை, அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கொண்டுசெல்வோம்” என்று அறிவித்திருக்கிறார்.