Posts: 256
Threads: 21
Likes Received: 368 in 152 posts
Likes Given: 324
Joined: Mar 2021
Reputation:
8
23-08-2022, 07:59 PM
(This post was last modified: 23-08-2022, 08:06 PM by Ishitha. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருப்பு தினம் !
வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து வேகம் குறைந்து ஓரமாக நிற்க, விவரம் புரியாமல் நான் நிர்மலாவை பார்க்க , நிர்மலா விளக்கினாள்.
பஸ்ல இருக்குறவங்க டீ காபி குடிக்க இப்படி ஹோட்டல் முன் 10 நிமிடங்கள் நிருத்துவாங்க என்று கூற..
ஓஹோ.. என அவளை பார்த்தேன்.
நிர்மலா : முதல் முறை பஸ்ல வரீங்க.. ப்ளைட்ல பறக்குற உங்களை மாதிரி கோடிஸ்வரிகளுக்கு இதெல்லாம் புதுசாத்தான் தெரியும்!
நிர்மலா சொன்னவுடன் மொத்த பேருந்தும் என்னை பார்க்க நிர்மலா தொடர்ந்தாள்.
நிர்மலா : என்ன அப்படி எல்லாரும் பார்க்குறீங்க?
பேருந்து கூட்டத்தில் ஒருத்தி : ஏன் , இன்னைக்கும் அந்த கோடிஸ்வரி ப்ளைட்ல பறக்க வேண்டியதுதானே? எதுக்கு பஸ்ல வந்தாங்க??
நிர்மலா : ப்ளைட்ல பறக்கத்தான் ஏர்போர்ட் போறோம். எங்க மேடம்தான் பஸ்ல போக ஆசைப்பட்டு ஏசி கார்லேந்து இறங்கி இந்த பஸ்ல புழுதி காத்துல வறாங்க..
நிர்மலா சொன்னவுடன் பேருந்தில் அமைதி நிலவியது.
அணைவரும் இறங்கி காபி டீ குடிக்க செல்ல. நான் ஜன்னலை பார்த்தபடி இருந்தேன்.
அப்போது கூட்டமா சில ஆண்கள் போராடுவோம் போராடுவோம் என கத்தி கொண்டே செல்ல..
முன்னால் நீண்ட துணியை பிடித்து கொண்டு சிலர் செல்ல அதில் கருப்பு நாள் / கருப்பு தினம் என எழுதியிருந்ததை பார்த்து நிர்மலாவிடம் கேள்வி எழுப்பினேன்.
நிர்மலா : என்னம்மா .. நீங்க இப்படி கேட்கலாமா?
வடக்கே கும்பலா சேர்ந்து ஒரு கூட்டம் உங்க மசூதியை இடிச்சாங்களே. அந்த நாளைத்தான் கருப்பு தினம்னு சொல்றாங்க.
முஸ்லிம் உங்களுக்கு தெரியாததா?
நிர்மலா சொன்னவுடன் என் நினைவு வேறு சிந்தனைக்கு போனது.
எப்படி ஒரு கூட்டம் மசூதியை தகர்க்கப்பட்டு கருப்பு தினம் ஆக்கியதோ...
அதே போல் ஒரு கூட்டத்தால் வாழ்கையே தகர்க்கப்பட்டு வாழ்க்கையில் ஒரு கருப்பு தினம் நடந்ததை நினைத்து மனம் படப்படத்தது!
அன்று என்ன நடந்தது?
அந்த கருப்பு நாள் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி சொல்கிறேன்.
என் பெயர் நசீரா!
இல்லை என் பெயர் திலகா!!
இல்லை என் பெயர் நசீரா!!
குழப்பம்!!
எங்கிருந்து கதையை துவங்க?
நசீராவாக கதையை துவங்குகிறேன்.
இல்லை இல்லை திலகாவாக என் கதையை துவங்குகிறேன். அதுதான் சரியாக இருக்கும்.
என் பெயர் திலகவதி.
திலகா என தெரிந்தவர்கள் அழைப்பார்கள்.
முன்பு நிர்மலா பேருந்தில் சொன்னது போல ஃப்ளைட்டில் பறக்கும் அளவு கோடிஸ்வரியாக என் வாழ்க்கை துவங்கவில்லை.
அவள் குறிப்பிட்ட புழுதி காற்றும் எனக்கு புதிதல்ல!
என் வாழ்க்கையின் துவக்கம் வறுமை!
வறுமை , வறுமை ! எங்கும் வறுமை எதிலும் வறுமை.
சிறுவயதில் ஒரு வாய் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இந்த திலகா வெறும் வயிற்றில் ஈரத்துணி கட்டி தூங்கிய நாட்கள் பல!
அவ்வளவு வறுமை!
அவ்வளவு வறுமைன்னா?
எவ்வளவு வறுமை தெரியுமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உண்டு.
நான் பிறந்ததிலிருந்து கோவிலை பார்த்தது இல்லை. ஏன் என்றால் என் ஊரில் கோவிலே இல்லை!
ஏன் இல்லை?
கோவிலை கட்ட கூட பணம் இல்லை!
அவ்வளவு வறுமை!
யாருக்கு வருமை?
எனக்கா?
இல்லை. இல்லவே இல்லை!
என் கிராமத்திற்க்கே வறுமை.
சுதந்திர நாட்டில் எங்கள் கிராமம் வறுமைக்கு அடிமை பட்டு கிடந்தது.
அப்படி வறுமையில் பிறந்தவளுக்கு காதல்!
ஒரு ஏழை பெண்ணிற்க்கு காதல் வரலாமா?
அதுவும் ரொம்ப சிறு வயதிலேயே?!?
வந்துடுச்சே.. காதல் வந்துடுச்சே!!
யார் மீது காதல்?
எது மீது காதல்??
எதன் மீது காதல்???
என் காதல் எல்லாம் பள்ளி மீதும் கல்வி மீதும்தான்.
கோவில் இல்லாத ஊரில் பள்ளி கூடம் மட்டும் ஏது?
பக்கத்து டவுனில் படிக்கும் சில மாணவிகளை கண்டு படிப்பின் மீது காதல்.
யூனிபார்ம் போடனும்
பேக் நோட் புக்ஸ் தூக்கி கிட்டு பள்ளி கூடம் போகனும்.
இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிந்தால்??
8 ஷூக்கு பாலிஷ் போட்டால்தான் எனக்கு 1 பன்னு கிடைக்கும்னு ஒரு படத்தில் நாயகன் வசனம் பேசுவாரே...
அது போல..
8 மணி நேரம் செங்கல் சூலையில் வேளை பார்த்தால்தான் எனக்கு ஒரு வேலை வயிறு நிறையும்.
இதில் எங்கிருந்து படிப்பை நினைக்க?!
நாட்கள் ஓடியது...
செங்கல் சூலையில் வேலை செய்யும் போது கனகாவின் அம்மா வந்தாள்.
திலகாவின் அம்மா : என்ன கனகா அம்மா?
கனகாவை காணும்? பொண்ணு சமஞ்சிட்டாளா?? சிரித்தாள்.
கனகா அம்மா : இல்லை திலகா அம்மா.. கனகா பள்ளி கூடம் போயிருக்கா!
திலகா அம்மா : என்ன சொல்றீங்க? கனகா வேலை செய்யாம பள்ளி கூடம் போனா அவள் வயித்து பசிக்கு?
கனகா அம்மா : அதெல்லாம் சுடு சோறு சாப்பிடுவா
திலகா அம்மா : என்ன சொல்றீங்க ? சுடு சோறா?
கனகா அம்மா : உங்களுக்கு விஷயம் தெரியாதா?
பள்ளி கூட்டத்துல தினமும் மதிய சாப்பாடு சுடு சோறு போடுறாங்கலாம் அதான் கனகாவை அணப்பி வச்சேன். நீங்க திலகாவையும் அணப்புங்க .
வேலை செய்யாமலே சுடு சோறு கிடைக்கும்.
இதுக்கு மேல என்ன வேண்டும்?
எனக்கு அன்று முதல் சுடு சோறு கிடைத்தது. அதோடு நான் காதலித்த கவ்வியும் கிடைத்தது.
ஆமாம்!
மழைக்கு கூட பள்ளி கூடம் ஒதுங்காத எங்கள் பரம்பரையில் , ஒருவேளை சோற்றுக்காக பள்ளி கூடத்தில் சேர்க்கப்பட்டேன்!
காதல் நிறைவேறிய மகிழ்ச்சி.
பள்ளி படிப்பை படிக்க படிக்க அறிவு விசாலமானது.
எனக்கு கீழ் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். ஏழை மாணவர்கள் என்பதால் இலவசம் தான்.
ஆனால் நல்ல விதமாக டியூஷன் எடுப்பதால் மாணவர்களின் ரிசல்ட் நன்றாக வர. அதை கேள்வி பட்ட பணக்கார மக்கு பசங்க என்னிடம் டியூஷன் சேர..
அதன் மூலம் வருமானம் வந்தது.
பெற்றோர்கள் செங்கல் சூலையில் வேலை செய்து சம்பாதிப்பதை விட நான் அதிகமாக சம்பாதித்தேன்.
பாதியை பெற்றோர்களுக்கு கொடுத்து , மீதியை பள்ளி செல்லும் வழியில் வங்கியில் சேமித்தேன்.
பள்ளி படிப்பு முடிய என் கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். கூடவே டியூஷனையும் விடவில்லை. சுத்துபட்டில்
5 முதல் 12 வரை படிக்கும் எல்லா பணக்கார மக்கு பசங்களுக்கும் நான்தான் டியூஷன் டீச்சர்.
கல்லூரி படிப்பு, டியூஷன் பீஸ் எல்லாம் என் அலங்காரத்தையும் அடையாளத்தையும் மாற்றி அழகாக்கியது.
கிழவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜொல்லு விடும் அளவு அழகில் செழித்து, கொழுத்து, பழுத்து, பூத்து இருந்தேன்.
பகலில் கல்லூரி மாணவி,
இரவில் டியூஷன் டீச்சர்.
பணம் வருவதால் வீட்டில் இரண்டிற்க்கும் தடை இல்லை!
கல்லூரி படிப்பு முடிய மீண்டும் காதல் வந்தது!
யார் மீது காதல்? இரண்டாவதாக காதல்??
படிப்பின் மீது உள்ள காதல் இப்போது வேலை மீது காதலாக தாவியது!
அதும் மாநகரங்களில் வேலை செய்ய காதல் வந்தது.
அந்த காதலை வீட்டில் சொல்லும் போது பிரச்சினை வந்தது.
நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
கடுமையாக திட்டி/கொட்டி தீர்த்தார் அப்பா!
- தொடரும்.
•
Posts: 10,665
Threads: 1
Likes Received: 3,257 in 3,062 posts
Likes Given: 9,853
Joined: May 2019
Reputation:
22
Posts: 1,027
Threads: 1
Likes Received: 352 in 275 posts
Likes Given: 32
Joined: Feb 2019
Reputation:
6
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பித்திருக்கிறது ! சீக்கிரமே தொடரட்டும் அடுத்த பகுதிகள் !
Posts: 278
Threads: 0
Likes Received: 69 in 57 posts
Likes Given: 111
Joined: May 2022
Reputation:
1
24-08-2022, 07:46 PM
(This post was last modified: 24-08-2022, 07:47 PM by nallapaiyan. Edited 1 time in total. Edited 1 time in total.)
kadhai title paarthu shock-aagiten
Posts: 10,702
Threads: 86
Likes Received: 4,447 in 2,810 posts
Likes Given: 4,017
Joined: Apr 2019
Reputation:
27
(23-08-2022, 07:59 PM)Ishitha Wrote: கருப்பு தினம் !
வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து வேகம் குறைந்து ஓரமாக நிற்க, விவரம் புரியாமல் நான் நிர்மலாவை பார்க்க , நிர்மலா விளக்கினாள்.
பஸ்ல இருக்குறவங்க டீ காபி குடிக்க இப்படி ஹோட்டல் முன் 10 நிமிடங்கள் நிருத்துவாங்க என்று கூற..
ஓஹோ.. என அவளை பார்த்தேன்.
நிர்மலா : முதல் முறை பஸ்ல வரீங்க.. ப்ளைட்ல பறக்குற உங்களை மாதிரி கோடிஸ்வரிகளுக்கு இதெல்லாம் புதுசாத்தான் தெரியும்!
நிர்மலா சொன்னவுடன் மொத்த பேருந்தும் என்னை பார்க்க நிர்மலா தொடர்ந்தாள்.
நிர்மலா : என்ன அப்படி எல்லாரும் பார்க்குறீங்க?
பேருந்து கூட்டத்தில் ஒருத்தி : ஏன் , இன்னைக்கும் அந்த கோடிஸ்வரி ப்ளைட்ல பறக்க வேண்டியதுதானே? எதுக்கு பஸ்ல வந்தாங்க??
நிர்மலா : ப்ளைட்ல பறக்கத்தான் ஏர்போர்ட் போறோம். எங்க மேடம்தான் பஸ்ல போக ஆசைப்பட்டு ஏசி கார்லேந்து இறங்கி இந்த பஸ்ல புழுதி காத்துல வறாங்க..
நிர்மலா சொன்னவுடன் பேருந்தில் அமைதி நிலவியது.
அணைவரும் இறங்கி காபி டீ குடிக்க செல்ல. நான் ஜன்னலை பார்த்தபடி இருந்தேன்.
அப்போது கூட்டமா சில ஆண்கள் போராடுவோம் போராடுவோம் என கத்தி கொண்டே செல்ல..
முன்னால் நீண்ட துணியை பிடித்து கொண்டு சிலர் செல்ல அதில் கருப்பு நாள் / கருப்பு தினம் என எழுதியிருந்ததை பார்த்து நிர்மலாவிடம் கேள்வி எழுப்பினேன்.
நிர்மலா : என்னம்மா .. நீங்க இப்படி கேட்கலாமா?
வடக்கே கும்பலா சேர்ந்து ஒரு கூட்டம் உங்க மசூதியை இடிச்சாங்களே. அந்த நாளைத்தான் கருப்பு தினம்னு சொல்றாங்க.
முஸ்லிம் உங்களுக்கு தெரியாததா?
நிர்மலா சொன்னவுடன் என் நினைவு வேறு சிந்தனைக்கு போனது.
எப்படி ஒரு கூட்டம் மசூதியை தகர்க்கப்பட்டு கருப்பு தினம் ஆக்கியதோ...
அதே போல் ஒரு கூட்டத்தால் வாழ்கையே தகர்க்கப்பட்டு வாழ்க்கையில் ஒரு கருப்பு தினம் நடந்ததை நினைத்து மனம் படப்படத்தது!
அன்று என்ன நடந்தது?
அந்த கருப்பு நாள் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி சொல்கிறேன்.
என் பெயர் நசீரா!
இல்லை என் பெயர் திலகா!!
இல்லை என் பெயர் நசீரா!!
குழப்பம்!!
எங்கிருந்து கதையை துவங்க?
நசீராவாக கதையை துவங்குகிறேன்.
இல்லை இல்லை திலகாவாக என் கதையை துவங்குகிறேன். அதுதான் சரியாக இருக்கும்.
என் பெயர் திலகவதி.
திலகா என தெரிந்தவர்கள் அழைப்பார்கள்.
முன்பு நிர்மலா பேருந்தில் சொன்னது போல ஃப்ளைட்டில் பறக்கும் அளவு கோடிஸ்வரியாக என் வாழ்க்கை துவங்கவில்லை.
அவள் குறிப்பிட்ட புழுதி காற்றும் எனக்கு புதிதல்ல!
என் வாழ்க்கையின் துவக்கம் வறுமை!
வறுமை , வறுமை ! எங்கும் வறுமை எதிலும் வறுமை.
சிறுவயதில் ஒரு வாய் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இந்த திலகா வெறும் வயிற்றில் ஈரத்துணி கட்டி தூங்கிய நாட்கள் பல!
அவ்வளவு வறுமை!
அவ்வளவு வறுமைன்னா?
எவ்வளவு வறுமை தெரியுமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உண்டு.
நான் பிறந்ததிலிருந்து கோவிலை பார்த்தது இல்லை. ஏன் என்றால் என் ஊரில் கோவிலே இல்லை!
ஏன் இல்லை?
கோவிலை கட்ட கூட பணம் இல்லை!
அவ்வளவு வறுமை!
யாருக்கு வருமை?
எனக்கா?
இல்லை. இல்லவே இல்லை!
என் கிராமத்திற்க்கே வறுமை.
சுதந்திர நாட்டில் எங்கள் கிராமம் வறுமைக்கு அடிமை பட்டு கிடந்தது.
அப்படி வறுமையில் பிறந்தவளுக்கு காதல்!
ஒரு ஏழை பெண்ணிற்க்கு காதல் வரலாமா?
அதுவும் ரொம்ப சிறு வயதிலேயே?!?
வந்துடுச்சே.. காதல் வந்துடுச்சே!!
யார் மீது காதல்?
எது மீது காதல்??
எதன் மீது காதல்???
என் காதல் எல்லாம் பள்ளி மீதும் கல்வி மீதும்தான்.
கோவில் இல்லாத ஊரில் பள்ளி கூடம் மட்டும் ஏது?
பக்கத்து டவுனில் படிக்கும் சில மாணவிகளை கண்டு படிப்பின் மீது காதல்.
யூனிபார்ம் போடனும்
பேக் நோட் புக்ஸ் தூக்கி கிட்டு பள்ளி கூடம் போகனும்.
இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிந்தால்??
8 ஷூக்கு பாலிஷ் போட்டால்தான் எனக்கு 1 பன்னு கிடைக்கும்னு ஒரு படத்தில் நாயகன் வசனம் பேசுவாரே...
அது போல..
8 மணி நேரம் செங்கல் சூலையில் வேளை பார்த்தால்தான் எனக்கு ஒரு வேலை வயிறு நிறையும்.
இதில் எங்கிருந்து படிப்பை நினைக்க?!
நாட்கள் ஓடியது...
செங்கல் சூலையில் வேலை செய்யும் போது கனகாவின் அம்மா வந்தாள்.
திலகாவின் அம்மா : என்ன கனகா அம்மா?
கனகாவை காணும்? பொண்ணு சமஞ்சிட்டாளா?? சிரித்தாள்.
கனகா அம்மா : இல்லை திலகா அம்மா.. கனகா பள்ளி கூடம் போயிருக்கா!
திலகா அம்மா : என்ன சொல்றீங்க? கனகா வேலை செய்யாம பள்ளி கூடம் போனா அவள் வயித்து பசிக்கு?
கனகா அம்மா : அதெல்லாம் சுடு சோறு சாப்பிடுவா
திலகா அம்மா : என்ன சொல்றீங்க ? சுடு சோறா?
கனகா அம்மா : உங்களுக்கு விஷயம் தெரியாதா?
பள்ளி கூட்டத்துல தினமும் மதிய சாப்பாடு சுடு சோறு போடுறாங்கலாம் அதான் கனகாவை அணப்பி வச்சேன். நீங்க திலகாவையும் அணப்புங்க .
வேலை செய்யாமலே சுடு சோறு கிடைக்கும்.
இதுக்கு மேல என்ன வேண்டும்?
எனக்கு அன்று முதல் சுடு சோறு கிடைத்தது. அதோடு நான் காதலித்த கவ்வியும் கிடைத்தது.
ஆமாம்!
மழைக்கு கூட பள்ளி கூடம் ஒதுங்காத எங்கள் பரம்பரையில் , ஒருவேளை சோற்றுக்காக பள்ளி கூடத்தில் சேர்க்கப்பட்டேன்!
காதல் நிறைவேறிய மகிழ்ச்சி.
பள்ளி படிப்பை படிக்க படிக்க அறிவு விசாலமானது.
எனக்கு கீழ் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். ஏழை மாணவர்கள் என்பதால் இலவசம் தான்.
ஆனால் நல்ல விதமாக டியூஷன் எடுப்பதால் மாணவர்களின் ரிசல்ட் நன்றாக வர. அதை கேள்வி பட்ட பணக்கார மக்கு பசங்க என்னிடம் டியூஷன் சேர..
அதன் மூலம் வருமானம் வந்தது.
பெற்றோர்கள் செங்கல் சூலையில் வேலை செய்து சம்பாதிப்பதை விட நான் அதிகமாக சம்பாதித்தேன்.
பாதியை பெற்றோர்களுக்கு கொடுத்து , மீதியை பள்ளி செல்லும் வழியில் வங்கியில் சேமித்தேன்.
பள்ளி படிப்பு முடிய என் கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். கூடவே டியூஷனையும் விடவில்லை. சுத்துபட்டில்
5 முதல் 12 வரை படிக்கும் எல்லா பணக்கார மக்கு பசங்களுக்கும் நான்தான் டியூஷன் டீச்சர்.
கல்லூரி படிப்பு, டியூஷன் பீஸ் எல்லாம் என் அலங்காரத்தையும் அடையாளத்தையும் மாற்றி அழகாக்கியது.
கிழவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜொல்லு விடும் அளவு அழகில் செழித்து, கொழுத்து, பழுத்து, பூத்து இருந்தேன்.
பகலில் கல்லூரி மாணவி,
இரவில் டியூஷன் டீச்சர்.
பணம் வருவதால் வீட்டில் இரண்டிற்க்கும் தடை இல்லை!
கல்லூரி படிப்பு முடிய மீண்டும் காதல் வந்தது!
யார் மீது காதல்? இரண்டாவதாக காதல்??
படிப்பின் மீது உள்ள காதல் இப்போது வேலை மீது காதலாக தாவியது!
அதும் மாநகரங்களில் வேலை செய்ய காதல் வந்தது.
அந்த காதலை வீட்டில் சொல்லும் போது பிரச்சினை வந்தது.
நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
கடுமையாக திட்டி/கொட்டி தீர்த்தார் அப்பா!
- தொடரும்.
Ishitha நண்பா வணக்கம்
இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
பஸ் ஏன் 10 நிமிடம் நிற்கும் என்று நிர்மலா விளக்குவது சூப்பர் நண்பா
மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தின போராட்டத்தை பற்றி நிர்மலா குறிப்பிடுவது பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வந்து விட்டது நண்பா
அரவிந்தசாமி மனிஷா கொய்ராலா நடித்த பாம்பே திரைப்படம் நினைவுக்கு வந்துவிட்டது நண்பா
நஸீரா திலகா பெயர்க்குழப்பம் சற்று சித்திக்க வைக்கிறது வைக்கிறது
திலகாவின் அறிமுகம் மிக மிக அருமை நண்பா
வாழ்த்துக்கள்
•
Posts: 256
Threads: 21
Likes Received: 368 in 152 posts
Likes Given: 324
Joined: Mar 2021
Reputation:
8
21-09-2022, 02:25 PM
(This post was last modified: 21-10-2022, 03:14 PM by Ishitha. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
கடுமையாக திட்டி/கொட்டி தீர்த்தார் அப்பா!
கோவம் வந்தது...
என்னால் அந்த பக்கிரி சாமியை கட்டிக்க முடியாது.
நான் சென்னை போறேன்.
அப்பா : போடி போ... நீ படிக்க போறேன்னு சொன்னப்பவே உன் காலை ஒடச்சிருக்கனும்.
உன் கூடத்தானே படிச்சா கனகா. அவள் என்ன வெளியூர் வேலைக்கா போனா?
அவள் மாமா சாமிக்கண்ணை கல்யாணம் பன்னி 2 பெத்து போட்டு கைல ஒன்னு இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னுண்னு இருக்கா..
நீ.. படிப்பு வேலைன்னு சுத்துற..
உன் வயசு பொண்ணுங்க எல்லாம் மஞ்சள் தேச்சி குளிக்கும் போது நீ செங்கல் கட்டி தேச்சி குளிக்கிற..
நான் : அது செங்கல் கட்டி இல்லை .. அது சோப்..
அப்பா : என்ன கருமமோ.. அதை போட்டு நீ குளிச்சிட்டு வந்தா அப்படி ஒரு நாத்தம்.
நான் : அது நாத்தம் இல்லை வாசம். முன்ன பின்ன சோப்பு போட்டு குளிச்சிருந்தா தெரியும்.
அப்பா : என்னடி ? படிச்ச திமிரா? அப்பனையே எதிர்த்து பேசுற?
கண்டதை சாப்பிடுற... சந்தனம் தேய்க்கிற முகத்துல ஏதோ பசையை தேய்க்கிற...
நான் : அது பசை இல்லை Fair & Lovely Cream
அப்பா : என்ன தஸ்ஸு புஸ்ஸூன்னு அப்பனை திட்டுற?
நான் : அய்யோ.. அப்பா நான் உன்னை திட்டலை. அந்த க்ரீம் பெயர் சொன்னேன்...
அப்பா : குறுக்க பேசாத... நீ கண்ட கண்ட மாவு எடுத்து மூஞ்சில அப்பிக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?
நான் : அப்பா அது மாவு இல்லை ... பான்ஸ் பவுடர்..
அப்பா : உன் வயசு பொண்ணுங்க எல்லாம் எண்ணெய் வடிய கருத்து போய் ஒல்லியா எவ்ளோ அழகா இருக்காளுங்க.
நீ கண்டதை தேச்சிக்கிட்டு , கண்டதை தின்னுக்கிட்டு, கண்டதை பூசிக்கிட்டு..
உடம்பு பெருத்து கெடக்கு. டியூஷன் வரவன் உன்னை கண்ட எடத்துல பாத்து ரசிக்கிறதெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்.ஒழுங்கா கல்யாணம் பண்ணி குட்டியை போடுற வேலையை பாரு...
நான் : இனி இவர்களிடம் பேசி பயன் இல்லை (மனதுக்குள்)
அப்பா : நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார் ... அப்பா!
தீரா காதல் கொண்ட பெண் ஒருத்திக்கு, வீட்டில் அவள் காதலுக்கு அனுமதி தரவில்லை என்றால், தான் கொண்ட காதலுக்காக வீட்டை விட்டு ஓடுவதுதானே முறை?!
நான் வேலை மீது கொண்ட தீரா காதல் வெற்றி அடைய வீட்டை விட்டு ஓடினேன்.
டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை எடுத்து கொண்டு சென்னை பஸ் ஏறி.. நள்ளிரவு சென்னை வந்தடைந்தேன்.
வந்ததோடு சரி.
எங்கு செல்வது?
எங்கு தங்குவது?
யாரை பார்ப்பது?
எதுவும் தெரியவில்லை, புரியவும் இல்லை.
அவசரப்பட்டு எதுவும் யோசிக்காமல் ஒரு வேகத்தில் வந்துவிட்டோமோ? என என் தவறை உணர்ந்தேன்.
படிச்ச முட்டாள் ஆகிவிட்டோமோ?
சென்னை எனும் பெரிய மாநகரத்தில் நள்ளிரவில் தனியாக.. தன்னந்தனியாக.. ஒரு வயசு பெண் திக்கற்று நின்றாள்.. பார்ப்பவர்கள் எண்ணம் எப்படி இருக்கும்? எப்படி யோசிக்கும்?
நள்ளிரவு... பனி விழும் இரவு ...
குளிரில் உடல் உதறியது.
என்னை நோக்கி முக்காடு போட்ட ஒரு பெண் வந்தார். அத்தகைய முக்காடு உடை இன்றுதான் பரிட்சயம்.
அந்த பெண் பார்க்க சாந்தமாக .. ஒரு பெண் சாமியார் போல இருந்தாள்.
வந்தவள்.. யாருமா நீ?
இந்த நேரத்தில் ஏன் தனியாக நிற்க்கிறாய்?
திலகா : அந்த பெண்ணை நம்பி உண்மையை சொல்லலாமா? சொன்னால் உதவுவாளா? அல்லது ஊருக்கு புதுசு. தனியா வந்துருக்கா என ஏமாற்றி விடுவாளா? ஏகப்பட்ட யோசனை.
ஆனாலும் யாரையாவது நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு.
இங்கு இருப்பவர்களில் என்னை கவனித்து இந்த கேள்வியை கேட்டது இந்த பெண்தான். அதனால் கொஞ்சம் பயமும் கூட..
பரவாயில்லை ... உண்மையை சொல்லுவோம். கொஞ்சம் கவனமாகவும் இருக்கனும்.
நான் சென்னை வந்த கதையையும் ... இங்கு வந்து வாழ வழி தேடும் கதையையும் சொன்னேன்.
அந்த முக்காடு போட்ட பெண் யோசித்தாள். சரி என்னுடன் வா... ஆட்டோவை அழைத்தாள். ஆட்டோ வந்தது. ஏறினோம். அவள் வழி சொல்ல ஆட்டோ சென்றது.
ஆட்டோவில் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
நான் மதர் மெர்சி.
கருனை இல்லம்னு ஒரு அநாதை இல்லம் நடத்துறேன்.ஆதரவில்லாத குழந்தைகள் இருக்கும் இடமது...
சொல்லி கொண்டு இருக்கும் போதே இறங்க வேண்டிய இடம் வந்தது.
இறங்கினோம். பெரிய பில்டிங். உள்ளே சென்றோம்.
கருப்பாக குண்டாக ஒரு பெண் வந்தாள்.
வாங்க மதர் .. இந்த நேரத்துல...
மதர் : இந்த பாரு வேலம்மா .இந்த பொண்ணு பேரு திலகா. இங்க தங்க ஒரு ரூம் வேண்டும்.
வேலம்மா : மதர் .. ஹாஸ்டல் ஃபுள். தனி ரூம் இல்லை. ஏற்கனவே தங்கி இருக்கும் பெண்களோடு சேர்ந்து தங்கினால்தான் உண்டு.
ஆனால் யாரும் சேர்ந்து தங்க முன் வரமாட்டார்கள்.
மதர் : ப்ளீஸ் வேலம்மா.. ஒரு வாரம் போதும். அதுக்குள்ள வேற இடம் இவளுக்கு நான் ரெடி பன்னிடுறேன்.
வேலம்மாள்: ஐயோ மதர். இங்க யாரும் கூட சேத்துக்க மாட்டாங்க....(சொல்லி கொண்டு இருக்கும் போதே...)
என் ரூம்ல தங்கிக்கட்டும்.(ஒரு பெண்ணின் குரல்!)
திரும்பி பார்த்தால் அந்த இரவு நேரத்திலும் பிரகாசமாய் ஜொலிக்கும் அழகு தேவதை.
பெண்களே ஆசைப்பட கூடிய அளவு பேரழகி.
இப்படி ஒரு கலரில் இப்படி ஒரு வனப்பில் , தங்கத்தால் செதுக்கப்பட்ட சிலை போல வளைவு நெளிவுகளுடன் வெள்ளை சுடிதாரில் தலையில் கருப்பு துண்டு அணிந்து கொண்டு எங்களை நெருங்கினாள் அந்த தேவதை!
தேவதை : வேலம்மாள்... இந்த ராத்திரியில் இந்த பெண் எங்கு போவா? என் கூடவே தங்கிக்கட்டும்.
வேலம்மாள் : அது இல்லை நசீரா கண்ணு... நீங்க VIP ரூம்க்கு பணம் கட்டிருக்கீங்க. அதுல கெஸ்ட் தங்க வைக்கலாமா?
(வேலம்மாள் நசீரா என்று அழைத்ததில் அந்த தேவதை பெயர் நசீரா என புரிந்து கொண்டேன்.)
நசீரா : அதெல்லாம் நான் பாத்துக்குறேன் வேலம்மாள். மதர் நீங்கள் கவலைப்படாமல் போங்க. இந்த பொண்ணு எத்தனை நாள் விரும்புதோ அத்தனை நாளும் என் கூடவே இருக்கட்டும். நீ வாம்மா...
சொன்ன நசீரா என்னை அவள் அறைக்கு அழைத்து செல்ல... மதருக்கு நன்றி சொல்லி நசீராவுடன் அவள் அறைக்கு சென்றேன்.
"திக்கற்று நின்ற இந்து பெண் என்னை அக்கறையுடன் லேடிஸ் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்று, எனக்காக ரூம் கேட்டு கெஞ்சிய மெர்சி ஒரு கிருஸ்த்தவ மதர்!
ரூம் இல்லை என வேலம்மாள் சொல்லியதும், தனது VIP அறையில் என்னை தங்க வைக்க உதவிய நசீமா ஒரு முஸ்லிம் தேவதை!!
ச்சே... என்ன ஒரு நாடு இது... மதம் கடந்து மனிதம் காப்பது நம் இந்திய நாட்டில் மட்டும் தான் சாத்தியமோ? என மெய் சிலிர்த்தவாரே நசீராவின் VIP அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றேன்.
-தொடரும்.
•
Posts: 10,665
Threads: 1
Likes Received: 3,257 in 3,062 posts
Likes Given: 9,853
Joined: May 2019
Reputation:
22
மிக சுவாரஸ்யமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 224
Threads: 0
Likes Received: 79 in 65 posts
Likes Given: 112
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 2,622
Threads: 0
Likes Received: 783 in 737 posts
Likes Given: 283
Joined: Mar 2019
Reputation:
3
Posts: 10,702
Threads: 86
Likes Received: 4,447 in 2,810 posts
Likes Given: 4,017
Joined: Apr 2019
Reputation:
27
Nazimaavin vip room kkul aduththu enna nadanthathu endru therinthu kolla miga aavalaai kaaththu kondu irukkiren nanba
Pls continue nanba
•
Posts: 256
Threads: 21
Likes Received: 368 in 152 posts
Likes Given: 324
Joined: Mar 2021
Reputation:
8
21-10-2022, 03:18 PM
(This post was last modified: 21-10-2022, 03:20 PM by Ishitha. Edited 2 times in total. Edited 2 times in total.)
ச்சே... என்ன ஒரு நாடு இது... மதம் கடந்து மனிதம் காப்பது நம் இந்திய நாட்டில் மட்டும் தான் சாத்தியமோ? என மெய் சிலிர்த்தவாரே நசீராவின் VIP அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றேன்.
அங்கே அப்படி ஒரு அறையை பார்த்தது இல்லை. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு சுத்தம். நசீராவை போலவே அவள் தங்கி இருக்கும் அறையும் பலபலத்தது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவிகள் தங்கி இருக்கும் அறைகளுக்கு சென்றுள்ளேன். அவை சுத்தமில்லாமல் ஒழுங்கு இல்லாமல் இருக்கும்.
ஆனால் இங்கு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது. அறை உள்ளே நுழைந்ததும் ஒரு வித அமைதி. அறையில் மட்டும் அல்ல. என் மனதிலும் தான்.
கோவிலுக்கு சென்றால் மன அழுத்தம் நீங்கி ஒரு அமைதி கிடைக்கும் என்று படித்துள்ளேன். அதை இந்த அறையில் அனுபவிக்கிறேன்.
அப்போது இந்த அறைதான் கோவிலா? நசீராதான் தெய்வமா? மனதில் கேள்விகளோடு அவளை பார்த்தேன். இந்த நடுராத்திரியில் ஏதோ புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருக்கிறாள். அவள் அழகிலும் வசீகரத்திலும் அவளின் அமைதியிலும் ஒரு தெய்வீக கலை தெரியத்தான் செய்தது.
நான் நசீராவை பார்ப்பதை கவனித்த நசீரா என்னை படுத்து உறங்க சொன்னாள்.
கட்டில் பெருசுதான். மிக மிருதுவான மெத்தை. கொசு கடியில்
மண் தரையில் உறங்கி பழகிய ஏழை பெண்ணாகிய நான் இன்று முதன் முதலில் சொகுசு மெத்தையில் ஃபேன் காற்றில் படுக்கிறேன்.
பயண களைப்பும், சொகுசு மெத்தையும் என் கண்களுக்கு விரைவாக உறக்கத்தை கொடுக்க அசதியில் என் நிலை மறந்து தூங்கினேன்.
திடீரென்று
என்னை சுற்றி யாரென்றே தெரியாத பல வினோத ஆண்கள் மேலாடை இன்றி சூழ்ந்திருக்க ... என்னை மோக பார்வையோடு நெருங்க...
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்லும் படி செய்கிறேன்.அவர்கள் ஆசைக்கு இணங்குகிறேன்.
என் ஆடைகளை கழற்றுகிறார்கள்... நான் தடுக்கிறேன்... உடலில் பலம் இல்லை.. தள்ளாடி தடுமாறி கீழே விழுந்தேன். விழுந்த அதிர்வில்
நான் திக் என்று எழுகிறேன்.
எழுந்து பார்த்தால் எல்லாம் கனவு.
சென்னை வந்த முதல் நாளே இப்படி ஒரு கனவா? இது நல்ல சகுனம் தானா? இல்லை எதுவோ என்னை எச்சரிக்கிறதா?
குழம்பியப்படி திரும்பி பார்த்தேன்.
அங்கு நசீரா குணிந்து நிமிர்ந்து எதோ செய்ய அது புதிதாக இருந்தது. மணி அதிகாலை 5:30.
யார் இந்த நசீரா? நள்ளிரவு படிக்கிறாள். அதிகாலையில் ஏதோ செய்கிறாள். ஒன்றும் புரியவில்லையே...
யோசனை செய்தபடி பாத்ரூமிற்கு நுழைந்தேன்.
பாத்ரூம் என்றால் நாற்றம் என்று பழகிய எனக்கு பாத்ரூம் முழுக்க வாசம்.
அது சோப் வாசமா? இல்லை சென்ட் வாசமா? புரியவில்லை. நான் சென்று பல் தேய்த்து குளித்து முடித்து வேறு ஆடை அணிந்து வெளியே வர நசீரா என்னை பார்த்து புன்னகைத்தாள்.
நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.
நான் : என்னங்க நீங்க.. நடு சாமத்துல ஏதோ படிக்கிறீங்க? அதிகாலையில் ஏதோ குனிஞ்சு நிமிர்ந்து எக்ஸர்சைஸ் பன்றீங்க. தூங்கவே மாட்டீங்களா?
நசீரா சிரித்தாள்!
அந்த அமைதியான அறையில் நசீராவின் அழகிய சிரிப்பொலி எதிரொலித்தது.
நான் : நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க..
நசீரா மீண்டும் சிரித்தாள்... இப்போது பேரழகு! தேவதைகள் சிரிப்பு இப்படித்தான் இருக்குமோ? வியந்தேன்.
நசீரா: நான் ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட். ஃபைனல் இயர்.
அம்மாவோட பூர்வீகம் கேரளா
அப்பாவோட பூர்வீகம் தமிழ்நாடு.
நான் பிறந்தது வளர்ந்தது சவுதி அரேபியாவில்.
இந்தியால இருக்க என் தாத்தா பாட்டியை பார்க்க வந்தேன். அவங்க ஆசைக்காக இங்க தங்கி மெடிக்கல் படிக்கிறேன்.
காலேஜில் இருந்து வீடு தூரம்.அதனால இங்க ரூம் எடுத்து தங்கியிருக்கேன்.
எனக்கு இப்போ படிப்பு முக்கியம் காரணம் இதான் கடைசி வருஷம். இத்தனை நாள் படிச்சதெல்லாம் இந்த ஒரு வாரத்துலதான் இறுதி கட்டத்துக்கு வருது. இந்த ஒருவாரம் கடைசி செமஸ்டர்.
மத்தவங்களோட சேர்ந்து தங்கினால் கவனம் சிதறும் படிப்பில் கோட்டை விட நேரிடும்.
அதான் VIP ரூம் போட்டு தங்கி இருக்கேன்.
அதும் இல்லாமல் எனக்கு தனியாக இருக்கத்தான் பிடிக்கும்.
நீ கவலைப்படாதே. உனக்கு விருப்பம் இருக்கும் வரை இங்க தங்கிக்கலாம்.
எனக்கு ஃபைனல் எக்ஸாம் நடக்கிறது. அதனால்தான் ராத்திரி பகல்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்.
அப்பறம் காலையில் நீ பார்த்தது எக்ஸர்சைஸ் இல்லை. தொழுகை. நாங்க அதிகாலை தொழுகை செய்வோம்.
நான் : அது என்ற நாங்க? நாங்க ன்னா?
நசீரா : நாங்க என்றால் முஸ்லிம். முஸ்லிம் தொழுகை பன்னுவாங்க....
சரி உன் கதையை நான் குளிச்சிட்டு வந்து கேட்டுக்கிறேன்.
சொன்னவள் சிரித்த படி எழுந்து தன் டவளை எடுத்து கொண்டு குளியலறை சென்றாள்.
குளியலறை சென்ற நசீரா மீண்டும் திரும்பி வந்தாள்...
ச்சீ... என்ன கன்றாவி இது?
முகம் சுழித்தவாரே வெளியே வர... வந்தவள் கையில் நான் குளிக்கும் முன் கழற்றி போட்ட எனது பாடி & ஜட்டி....
-தொடரும்.
•
Posts: 10,665
Threads: 1
Likes Received: 3,257 in 3,062 posts
Likes Given: 9,853
Joined: May 2019
Reputation:
22
|