Yesterday, 07:30 AM
Great writing bro. Krish deserve this for treating his wife like a prostitute
|
மீறாதே மீரா
|
|
Yesterday, 07:30 AM
Great writing bro. Krish deserve this for treating his wife like a prostitute
Yesterday, 07:53 AM
Wow.. for the first time Meera has told about Nandha. So far she told her colleague dropped her. Write from meera point of view to know what she is upto.
Yesterday, 09:12 AM
Super sago
Yesterday, 09:25 AM
Excellent going. Nice idea to take names from one of the most famous series in this site. Delighted with the quick updates.
Keep rocking.
Bineesh!
Yesterday, 09:26 AM
Ava
Train poidu eruka nu solrinka Appuram Co worker kuda dinner pora nu solrinka ....
Yesterday, 09:32 AM
I have a doubt. Why the scenes get cut in between. will you connect it later.
Yesterday, 10:21 AM
Fantasy gone wrong pathetically. Will she stop with one or mate with his office colleagues and humiliate him more.
Yesterday, 12:53 PM
Interesting conversation
11 hours ago
(This post was last modified: 11 hours ago by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
(Yesterday, 09:26 AM)Devika.k Wrote: Ava (Yesterday, 09:32 AM)Arul Pragasam Wrote: I have a doubt. Why the scenes get cut in between. will you connect it later. They cam back from the vacation.. Lets say nothing of significance happened there.. I should have mentioned.. Sorry,.
11 hours ago
(This post was last modified: 11 hours ago by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
I am very glad that many people discuss about the story.. I may not be able to reply or respond to all..
But thankful for the discussion.. அனைவரது கருத்துகளையும் மதிக்கிறேன்,, பார்த்தவுடன் மகிழ்வாக இருக்கிறது.. மிக்க நன்றி.. இந்த முறை அப்டேட், திங்கள் மதியத்திற்குப் பிறகே வரும்..கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.. நன்றிகள் பல.
11 hours ago
நண்பா வெறித்தனமா இருக்கு,, ஆனால் கொஞ்சம் பெரிய update தாருங்கள்
11 hours ago
After 3 months of marriage, she has told the husband that from young age she has sexual urge. Did she had any love in college or any physical with seniors, she did not disclose like how krish is hiding things. Krish thought being a man he can do anything, but this trailer is gonna cut him into pieces. She will make him lick, drink and clean the well fucked pussy of hers by her lover.
11 hours ago
While leaving he says love you, she does not reciprocate. It shows she has decided to move on saying bye krish. Interesting twist.
3 hours ago
அத்தியாயம் 18
கிருஷ்ணன் சோபாவில் சரிந்தான். மனதுக்குள் குழப்பம், கோபம், ஆதங்கம், பயம் உணர்ச்சிகள் கலந்துகட்டி அடித்துக் கொண்டிருந்தன. மணிமேகலை மீது கொண்டிருந்த கொஞ்ச நேர தடுமாற்றமும், மீரா இன்னொருவனுடன் டின்னருக்கு போவதும் சரிக்கு சரியா? இது உண்மையிலேயே வெறும் பழிக்குப்பழியா? அல்லது நீண்ட நாட்களாகவே, இதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறதா? அவனுக்குள் கேள்விகள் கிளர்ந்தன. பல மனைவிகள் தங்கள் கணவருக்கு படுக்கையில் ஒத்துழைப்பதில்லை என புலம்புவதுதான் இங்கு இயல்பு.. ஆனால் மீரா என்றுமே படுக்கையில் அலுத்துக்கொண்டதே இல்லையே.. அது நமக்குக் கிடைத்த வரம் என்று நினைத்தோமே.. அது வரமா, சாபமா? மீராவுக்கு சும்மாவே படுக்கையில் ஆர்வம் அதிகம் தான்.. இதில் ஆண்கள்னாலே பிடிக்கும்னு நம்மகிட்டயே சொன்னாளே எண்ணங்கள் அலைபாய்ந்தது.. அவள் சிரிப்பு, அவள் பேச்சு, அவள் உடல் மொழி... இந்த மூன்று மாதங்களில் அவள் காட்டிய எல்லா வித்தைகளும் இப்போது அவனுக்கு வேறு கோணத்தில் தெரிந்தன. வெறும் படுக்கையறை விளையாட்டுகளா? அல்லது அவளுக்குள் ஒளிந்திருந்த ஏதோவொரு ஆசையின் அடையாளங்களா? ஒரு டின்னருக்குத்தானே போகிறாள் என்றாள். ஆனால் டின்னருக்கு மட்டும்தான் போகிறாளா? அல்லது இந்த நந்தகோபால்.. அந்த பெயரை நினைத்தாலே எரிச்சல் வந்தது.. லாவண்யா கோபால்ல்..பற்களைக் கடித்துக்கொண்டான். அவன் மீது அப்படி என்ன ஈர்ப்பு.. பழிக்குப் பழியாக போகவேண்டும் என்றாலும் வேறு ஆட்கள் கிடைக்கவில்லையா? இவன் தான் ராத்திரி மெசேஜ் அனுப்பி, புருசன் கூட நல்லா இருந்துச்சான்னு கேட்ட கேடுகெட்ட கோப்ப்பால்..அவன் யார்? எப்படிப்பட்டவன்? அவளை ஈர்க்கக்கூடியவனா? என்னை விட அதிகமாக அவள் மனதைக் கவர்ந்தவனா? என்னிடம் இல்லாத எதை வைத்திருக்கிறான்? அழகா? பணமா? பேச்சுத்திறமையா? அல்லது வேறு ஏதோ... என்னால் கொடுக்க முடியாத ஒரு பரவசத்தை இவனால் கொடுக்க முடியுமா? அவன் கண்கள் மூடின. மீரா அவனைப் பார்த்து சிரிக்கும் காட்சி... அவள் உதடுகளில் விரியும் அந்த அழகிய புன்னகை...அவளது குறுகிய இடை, அதன் நடுவில் அழகிய குட்டித் தொப்புள், அவன் பார்த்து ரசிக்கத்தான் இன்று கவர்ச்சியாக சேலை உடுத்தினாளா? அவன் தொட்டுப்பார்த்திருப்பானா? இவள் மீது கொண்ட காதலால், திருமணத்தின் புனிதத்தால் தானே மேகலையை ஒதுக்கினோம்.. மேகலையின் மார்புத்திரட்சிகள் மனதில் வந்து போனது..மேகலை கொடுத்த முத்தம்..கண் இமைகளுக்குள் அவள் நாக்கு...குரங்கு மனம் கோபத்திலும் காமம் தேடியது.. புதரிலிருப்பதைத் தேடி ஓடி கையிலிருப்பதையும் தொலைத்த முட்டாளா நான்? கையிலிருப்பது பறக்கத் துடித்துக் கொண்டுதான் இருந்ததா? அடுத்த நிமிடம் மனம் கழிவிரக்கம் தேடியது.. உடலும் மனதும் சோர்வுற்றது.. உடல் சோர்வு அவனை வென்றது. கண்கள் மூடிக்கொண்டன. அரைகுறையாக, சோபாவிலேயே தூங்கிப் போனான். கையிலிருந்த போன் நழுவி தரையில் விழுந்தது. உறக்கம் தழுவியது. --0--0--0--0--0--0--0--0--0 கதவு திறக்கும் ஓசை போல் கேட்டது.. மல்லிகை மணம்.. லேசான கொலுசுச்சத்தம்..போன் சார்ஜரில் போடப்பட்ட சத்தம்..கண்களை அரைகுறையாகத் திறந்து பார்த்தான்..மீராவின் புடவை சற்று கலைந்திருந்தது போல தோன்றியது. கூந்தலில் இருந்த பூக்கள் லேசாக வாடி, சில பூக்கள் உதிர்ந்து இடைவெளி சரம் ஆங்காங்கே நூலாய் மட்டும் தெரிந்தது..உடலில் களைப்பு தெரிந்தது.. கண்களை மூடிக்கொண்டான். கொலுசுச்சத்தம் படுக்கையறைக்குள் சென்றது போல இருந்தது. கிருஷ்ணனுக்கு எழுந்திருக்கத் தோன்றவில்லை. அவன் மனதில் இன்னும் அந்தக் கேள்விகள், சந்தேகங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. மீண்டும் கண்கள் மூடிக்கொண்டான்.
3 hours ago
கிருஷ்ணன் அலறிக்கொண்டு விழித்தான். உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. இதயம் படபடத்தது. மூச்சு வாங்கியது.
அப்போதுதான் அவன் கவனித்தான். மீரா அவன் அருகில், அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். கண்களில் நீர். கைகள் அவனை இறுக்கிப் பிடித்திருந்தன. அவள் அழுதுகொண்டிருந்தாள். குரல் கம்மி, உடல் நடுங்கியது. "கிருஷ்... கிருஷ்..." அவன் சுதாரித்து எழுந்தான். முகத்தைத் துடைத்துக் கொண்டான். மீராவின் கன்னத்தை வருடினான். நீர் நனைந்திருந்தது. "மீரா... ஏன் அழுகிறாய்?" அவன் குரலில் கடுமை, எரிச்சல், கோபம் எல்லாம் கலந்திருந்தது. "நீ தானே இதை விரும்பி செய்தாய். உன்னுடைய பழிவாங்கல். உன் திருப்திக்காக நந்தகோபாலுடன் டின்னருக்குப் போனாய். பிறகு ஏன் இப்படி அழுகிறாய்?" அவள் தலையை அசைத்தாள். கண்ணீர் இன்னும் வழிந்துகொண்டிருந்தது. "உன்னை கோபப்படுத்தத்தான் நந்தகோபாலோட டின்னருக்குப் போனேன்.....டின்னர் முடிஞ்சு நாங்க பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எதிர்ப்புறத்திலிருந்து ஒரு வண்டி, திடீரென்று ரொம்ப வெளிச்சத்தோட மோதற மாதிரி சாலையில் எதிர்புறம் ஏறி வந்தது.. அந்த அதீத வெளிச்சத்துல எதையும் பார்க்க முடியவில்லை. பைக், ரோட்டை விட்டு விலகி, ஏதோ குழியில ஏறி இறங்கி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக வேகம் அதிகமில்லை. அவனுக்கு கொஞ்சம் அடி... நான் உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். டாக்டர் பார்த்து சிகிச்சை கொடுத்தார். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப்போய் விட்டுட்டு வர்றேன்.." உனக்கு எதுவும் அடிகிடி படலையே.. இல்லை எனக்கு எதுவும் அடி இல்லை..செருப்பு மட்டும் பிஞ்சுடுச்சு.. கிருஷ்சுக்கு லேசான நிம்மதி.. மீராவின் கற்பு இன்னும் போகவில்லை என்றா? மீராவிற்கு அடிபடவில்லை என்றா? "இப்ப எதுக்கு அழறே? எதுவும் நடக்கலைன்னா? செருப்பு பிஞ்சுடுச்சுன்னா" அவன் குரலில் குத்தல் தெரிந்தது. மீரா அழுதாள்.. பதில் சொல்லவில்லை.. அவன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். மனதுக்குள் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. மீரா என்னை நம்பாமல், வேறொரு ஆணுடன் பழிவாங்கும் எண்ணத்தில் சென்றாள். இப்போது அழுகிறாள். நான்தான் ஏமாற்றப்பட்டவன். அழ வேண்டியவன் நான். ஆனால் இவளது கண்ணீரைப் பார்க்கும்போது... இவளது நடுக்கத்தை உணரும்போது... என் உள்ளம் பொறுக்கவில்லை. அவன் ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்தான். தன் கோபத்தையும், சந்தேகத்தையும், கேள்விகளையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்தான். இப்போது அவள் மீண்டு வந்திருக்கிறாள்.. சின்ன வெற்றி... மீராவின் தலையை தடவிக்கொடுத்தான்.. அவள் உடல் இன்னும் லேசாக நடுங்கியது. "பரவாயில்லை மீரா... நடந்தது நடந்துடுச்சு. நீ இப்போ பத்திரமா இருக்கியே, அது போதும். பயந்துடாத... நான் இருக்கேன்." அவள் இன்னும் அழுதுகொண்டிருந்தாள். அவனது சட்டை ஈரமானது. "கிருஷ்... நான் பெரிய தப்பு செய்துட்டேன்.." மீரா, உன் மேல் சந்தேகம் இருந்தபோது, என் மனதில் பெரும் குழப்பம்.. பாரம்.. அதை மேகலை கிட்ட பகிர்ந்துகொண்டேன்..அப்போது ஆறுதலாக இருந்தவள் மேகலை.. அவள் உடல் மேல் லேசான ஈர்ப்பு இருந்தது உண்மைதான்.. அது சாதாரணமாக எந்தப் பெண் உடலைப் பார்த்ததும் தோன்றும் ஈர்ப்பே. காதல் இல்லை. உனக்காக ஒருநாள் ரோஜா வாங்கினேன். தவறுதலாக அதை அவளுக்கு என நினைத்து என் மேசையிலிருந்து எடுத்துக்கொண்டாள். நான் எதிர்பாராத நேரம் அவள் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டாள். நான் அவளிடம் விளக்கம் தந்துவிட்டேன். அத்தோடு அது முடிந்தது. அவளிடம் அலுவல் ரீதியாக மட்டுமே பேசுகிறேன். இடையில் கண் இமையில் விழுந்த தூசு.. அதை மீரா எடுத்தாள்.. முருகேசன் தவறாக உன்னிடம் வத்தி வைத்துவிட்டான் என நினைக்கிறேன்.. உனக்கு கணவன் சொல்லும் விளக்கத்தை விட அவன் சொல்வதுதான் பெரிதா மீரா.." "தப்பு செய்தது யாருன்னு இப்போது பேச வேண்டாம் மீரா. நீ விபத்திலிருந்து தப்பித்தது எனக்கு மகிழ்ச்சியே.. நாம் சேர்ந்து வாழ்ந்தால், கோபப்படுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும் மீரா..இப்போது வேண்டாம்.. நீ அமைதியாக இரு." அவள் தலையை இன்னும் லேசாக தடவிக்கொடுத்தான் கிருஷ்.. " கிருஷ்... உன் அருகில் இப்படி இருந்தாலே போதும்." அவள் கண்களில் மீண்டும் நீர் முட்டியது. அழுகைச் சத்தம் அடங்கிவிட்டது. அவன் தோளை, கரங்களை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். "என்னை மன்னிக்க முடியுமா கிருஷ்.." "உன்னோடு சந்தோசமா வாழ முடியும்னு இன்னும் நம்பறேன் மீரா..." "தேங்க் யூ கிருஷ்.. ஐ லவ் யூ கிருஷ்.." இப்போது கிருஷ்ணனுக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.. இன்னும் நான் சொல்ல வேண்டியது கொஞ்சம் மிச்சம் இருக்கு கிருஷ்.." --0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0 |
|
« Next Oldest | Next Newest »
|