மீறாதே மீரா
#21
எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு இது பஸ்ட் ஸ்டோரின்னு சொல்றீங்க ஆனா ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
"மீராவா அது?" என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்

வண்டி மறைந்து விட்டது. எதிர்ச்சாலை காலியாக இருந்தது.

பா…..ம்ப்..

பின்னாலிருந்த பேருந்தின் ஹாரன் அலறியது..

சிக்னல் மாறிவிட்டது போல..

வண்டி தன்னிச்சையாக மீராவின் அலுவலகம் நோக்கிச் சென்றது..
ஆனால் அதன் வேகம் வடிந்துவிட்டது..

அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் மீரா இல்லை..

வண்டியை ஓரங்கட்டி அங்கிருந்த ஆவின் டீக்கடை அருகில் நிறுத்தினான்..

ஸ்டிராங்கா ஒரு டீ..

சொல்லிவிட்டு கடையின் கூரைக்குள் ஒதுங்கினான்..

"அந்த பெண் மீராவா?"

"அவள் வேறு யாராவது இருக்கலாமே?"

"ஆனால் அதே சேலை..."

அதே ஒல்லியான உடல்வாகு..

கூந்தல் கூட ஒரு அரையடி நீளத்தில் தான் அலைபாய்ந்தது…

“சார் டீ”..

டம்ளரை எடுத்துக்கொண்டான்..

அவள் ஏன் வேறு ஒருவனுடன் செல்கிறாள்? எனக்கு தெரியாத நண்பரா?"

"அவள் சிரித்தாளா? இல்லையா?"

"அவள் சாய்ந்திருந்தாளா? இல்லையா?"

டீ  உள்ளே செல்லச்செல்ல சற்று நிதானமானான்.. அவன் மனம் அமைதியடையத் தொடங்கியது.

"நான் நல்லவனாக இருந்தால், இந்த உலகும் எனக்கு நல்லதே செய்யும்"

"மீரா என்னை நேசிக்கிறாள். அது எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் அவள் எனக்காக செய்த விஷயங்கள் பல. அன்பும் அக்கறையும் நிஜம்.. பொய்யா இருக்க முடியாது."

"ஒரு வேளை அந்த வண்டியில் இருந்த பெண் மீரா இல்லாமல் வேறு யாராவது இருக்கலாம். அதே சேலை, அதே போன்ற கூந்தல் உடைய வேறு ஒரு பெண் இந்த ஊரில் இருக்க மாட்டாளா?"

மீராவாக இருந்தால் தான் என்ன? யாரோ தெரிந்தவருடன் செல்கிறாள்..பேருந்தில் கசங்கி வருவதை விட, தெரிந்தவருடன் பைக்கில் சென்றால் நல்லதுதானே.. சந்தேகப்பட என்ன இருக்கிறது..

படிப்படியாக அவனுக்குள் ஒரு நம்பிக்கை வந்தது.

ஒரு அரை லிட்டர் பால், தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டு ஜி-பே செய்தான்.

மீராவின் நம்பரை அழைத்தான். அவள் மறு முனையில் பதில் சொன்னாள்.

"ஹலோ கிருஷ்?"

"மீரா, ஆபீஸ் முடிஞ்சுடுச்சா? நான் உன்னை பிக்கப் செய்ய வருகிறேன்" என்றான்.

"நான் சீக்கிரமாவே  கிளம்பிட்டேன்..  வீட்டிற்கு பக்கத்துல வந்துட்டேன்..இன்னும் ஒரு நிமிசம் தான் வீடு வந்துடும்.." என்றாள் அவள்.
வண்டிச்சத்தம்.. போக்குவரத்து ஒலி.. காற்றின் இரைச்சல்.. அவள் குரலுடன் கலந்து கேட்டது..

அவள் குரலில் எந்த பதட்டமும்  இல்லை. சாதாரணமாக, இயல்பாக பேசினாள். கிருஷ்னணின் இதயம் சற்று வேகமாக துடித்தது.

"நீங்க என்ன சீக்கிரமே கிளம்பிட்டிங்களா?"

"உன்னை பிக்கப் செய்யத்தான் கிளம்பினேன். நீ முன்னால் போய் கொண்டே இரு, நானும் வந்துடறேன்.." என்று சொல்லி போனை வைத்தான்.

அவன் முகத்தில் ஒரு புன்னகை. அவள் வீட்டிற்குத்தான் செல்கிறாள். சந்தேகம் வேண்டாம்.   காலையில் இருந்த கோபமும் குரலில் இல்லை..

நிம்மதியாக இருந்தது..நல்லதே நடக்கும் என நம்பினான்..

ஆனால் உலகம் என்றைக்கு நல்லவனுக்கு நல்லதே நொட்டியிருக்கிறது..
[+] 11 users Like imstpd's post
Like Reply
#23
(20-06-2026, 04:58 PM)krish196 Wrote: எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு இது பஸ்ட் ஸ்டோரின்னு சொல்றீங்க ஆனா ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

நன்றி.. 
வரவேற்பு நன்றாக இருக்கிறது..

கதை முடியும்போதும், உங்களிடம் இது போன்ற பாராட்டுகள் கிடைத்தால் மகிழ்ச்சி..
[+] 1 user Likes imstpd's post
Like Reply
#24
(20-06-2026, 05:06 PM)imstpd Wrote: நன்றி.. 
வரவேற்பு நன்றாக இருக்கிறது..

கதை முடியும்போதும், உங்களிடம் இது போன்ற பாராடுகள் கிடைத்தால் மகிழ்ச்சி..

 உங்க விருப்பம் போல எழுதுங்க. தொடர்ச்சியா டைப் பண்ணுங்க கதை நல்லா இருக்கு நல்லாவே எழுதுறீங்க சூப்பர் ப்ரோ
[+] 1 user Likes krish196's post
Like Reply
#25
Meeravukku kutra unarchi thuliyum illa innoruthan pullaikku ivana appan akkama vidamatta. Govalu.unmoda maanam kaathu la poga poguthu govalu. Ivanukku than seekiram pal utha pora
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
#26
Very good update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#27
Going interesting
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
#28
Definitely a different piece of attempt. Hope this doesn't turn into yet another cuckold tale.
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#29
Good start bro
[+] 1 user Likes Ratish20's post
Like Reply
#30
Wonderful way to start
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
#31
Will he ask her about bike. Will she tell the truth even if he ask. He seems to be fool of first order. Lovely.
[+] 1 user Likes Bigil's post
Like Reply
#32
ஒரு பெண் திருமணமாகி கொஞ்ச காலத்திலேயே தவறான உறவில் ஈடுபடுகிறாள் என்றால் தவறு அவளுடைய கணவன் மீது அள்ள அவள் மீதுதான் தவறு இருக்க வேண்டும்.


அவள் திருமணத்திற்கு முன்பாகவே கள்ள உறவில் இருந்திருக்க வேண்டும்.இப்போது மீண்டுமாக அதை தொடர்ந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய கணிப்பு.
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
#33
Good update bro
Keep it up
Continue your own way
Like Reply
#34
கதை எப்படிப்போகும் போகக்கூடாது என வாசகர்கள் எதிர்பார்ப்பதும் அதை கூறுவதும், வாசிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..

ஆனால் கதை அதன் போக்கில்தான் போகும்.. ஏற்கனவே ஒரு அவுட்லைன் வைத்திருக்கின்றேன்.. சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்..

முதலில் சுவராசியம் ஏற்படுத்துவது கொஞ்சம் எளிது என்றுதான் தோன்றுகிறது.. அதை தொய்யவிடாமல் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கலாம்..முயற்சி செய்கிறேன்.. போகப்போகத் தெரியும்..

நாயகன் யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது என தயங்கும் ஆள்..சந்தேகத்தை கேட்டு, ஒரு வேளை மனைவி மீது எந்தத்தவறும் இல்லை என்றால், அவள் உள்ளம் உடைந்துபோய்விடாதா?.. இன்றில்லாவிட்டால் நாளை தெரியத்தான் போகிறது.. கத்திரி முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்?
[+] 1 user Likes imstpd's post
Like Reply
#35
கம்பி வேலி போட்ட அந்த வீட்டின் கிரில்கேட் திறந்தே இருந்தது..

அவன் வருவது தெரிந்தால் கேட்டை மீரா திறந்தே வைப்பாள். சில சமயம், வேலை எதுவும் இல்லை என்றால், கேட் அருகே காத்து நிற்பாள்..

அவள் காதலை குறை சொல்ல முடியுமா?

வண்டியை உள்ளே செலுத்து நிறுத்தினான்..

வண்டியின் முன் பையில் இருந்த பொருட்களை அள்ளிக்கொண்டான்..

நுழைந்து கையிலிருந்த பொருட்களை டீபாயில் பரப்பினான்,.ஷூவைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தான்.. கீழேயே போட்டால் மீராவுக்கு பிடிக்காது..


“கிரிஷ், டீ போடவா.. “ படுக்கையறை உள்ளேயிருந்து மீராவின் குரல் கேட்டது..

எனக்கு வேண்டாம்.. குடிச்சுட்டேன்..

நீ குடிச்சிட்டியா…

பதில் வரவில்லை..

சோபாவில் சரிந்தான்..

ஒரு நிமிடத்தில் மீரா படுக்கையறையில் இருந்து நீலப்புடவையிலேயே வெளிவந்தாள்..

வந்தவுடன் பரபரவென சேலையை கழற்றி, நைட்டி போடுவதுதான் அவள் இயல்பு.. விடுமுறையில் அவன் கேட்டால் கூட அவ்வளவு சீக்கிரம் வீட்டில் சேலை அணிய மாட்டாள்..

இன்று சேலையிலேயே இருக்கிறாள்..சேலையின் மாராப்பு மேல்புறம் நன்றாக இறங்கியிருந்நது.. கீழ்புறம் கொஞ்சம் ஏறியிருந்தது.. வலது மார்பின் மேல் ஓரமும், இடது மார்பின் கீழ் ஓரமும் தன் வளைவுகளை காட்டிக் கவர்ந்தன.. இடையின் இடைவெளி, தளதளவென தனியே தெரிந்தது..அபாயகரமான விளிம்புகளின் ஓரங்களில், புடவை அதிசயமாக நழுவாமல் நின்றது.

காலையில் எல்லாப்பக்கமும் மறைத்து பின் குத்திச் சென்ற மீராவா இது..,

அவள் கண்களில் ஒரு ஆசை, அவள் உடலில் ஒரு தேடல், அவள் உதடுகளில் ஒரு தாகம்
"கோபால்" இனிமையாக அவனை அழைத்தாள்..

மிக மெதுவாக அவன் ரசிக்கட்டும் என இடையை அசைத்து நடந்து வந்தாள்..

“மீரா..”

அவன் நா உலர்ந்தது..ஆடையின்றி பலமுறை அவன் அள்ளிப்பருகிய உடல், இப்போதும் அதிசயமாய் அவனுக்கு தோன்றியது..

எழ முயன்றவனை தோளில் தொட்டு இருத்தி அவனருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..அவள் சேலை நன்கு சரிந்து இடை முழுதும் தடையின்றி தெரிந்தது.. சாய்ந்ததால் வந்த ஒரு மடிப்பு, அழகிய சிறிய தொப்புள், அதற்குக் கீழான பள்ளத்தாக்குக்குச் செல்லும் பூனை முடிகள் … எல்லாம் தெளிவாக தெரிந்தது..

அவன் கை அவளை வளைத்துப் பிடித்து இடையைப் பற்றிக்கொண்டது..

இருவருக்கும் எந்த அவசரமும் இல்லை..இவள் இந்த கோபாலகிருஷ்ணனின் மீரா..

இடையை கொஞ்சம் இறுக்கிக்கொண்டான்..

அவளின் மார்பகங்கள் அவனது விலாவில் மென்மையாக அழுந்தின.

அவன் தோளில் முகம் சாய்த்துக்கொண்டாள்..

“ஐ லவ் யூ கிருஷ்..”

"உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்"

என்று கிசுகிசுத்தாள். அவள் குரலில் ஒரு நடுக்கம்.

அடிக்கடி ஐ லவ் யூ சொல்வது அவர்களுக்குப் புதிதல்ல.. இந்த மிஸ் பண்ணினேன் அவனுக்கு இன்று புதிது..இருவரில் யாரேனும் ஊருக்குப் போய்வந்தால் மட்டுமே அப்படிச் சொல்வாள்..
[+] 5 users Like imstpd's post
Like Reply
#36
மீரா அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.. அவன் உடல் அவன் வசம் இல்லை.. அனிச்சையாக திரும்பி அவள் உதடுகளை உதடுகளால் தேடினான்..

முத்தம் மென்மையாக ஆரம்பித்தது..இருவரும் உதடுகளை ஒற்றி எடுத்தனர்..குறு முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.. பின் அவள் உதடுகள் அவனை கவ்விக்கொண்டன..

மெல்ல அவனது கீழ் உதட்டை கடித்தாள். பிறகு அவளது நாக்கு அவனது உதடுகளை பிரித்து உள்ளே நுழைந்தது. அவளது நாக்கு அவனது நாக்குடன் விளையாடியது. ஒரு கணம் அவன் உலகத்தையே மறந்தான். கவலை, சந்தேகங்கள் எல்லாம் அந்த முத்தத்தில் கரைந்தன..

அவள் கைகள் அவன் தோளிலிருந்து பின்னங்கழுத்திற்கு சென்று இறுக்கி இழுத்தது.

இன்னொரு கை, அவன் மார்பினை தொட்டுத்தடவியது..

அவள் விரல்கள் அவனது சட்டையின் உள்ளே ஊடுருவி, அவனது உடலை வருடின. அவளின் தொடுதல் அவன் உடல் முழுவதும் உற்சாகம் பாய்ச்சியது.

அவன் கை அவளது இடுப்பை அளந்தது.. அவன் உள்ளங்கையில் அவளது இடையின் குளிர்ச்சி ஜில்லென பரவியது..... கை மெல்ல மேலேறி முலையின் கீழ்பகுதியை ஆடை மேலாக வருடியது..

அவன் உதட்டை இறுக்கி சுவைத்துவிட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவனை செல்லமாக அவன் நெஞ்சில் அடித்தாள்..

மூடேத்தும்படி வந்து சூடேத்தியது அவள்.. ஆரம்பித்ததும் அவள்தான்.. ஆனால் உடல் சூடானதற்காக அவனை செல்லமாக கடிந்துகொள்ளத்தான்அவன் நெஞ்சில் அடித்தாள்...

"உங்கள் மீது காலையில் கோபப்பட்டுவிட்டேன்… சாரி.."

கன்னத்தில் இன்னொரு முத்தமிட்டாள்..

"நானும் கொஞ்சம் நிதானமா பேசியிருக்கலாம்.. சாரி மீரா.." இப்பொழுது முத்தமிடுவது அவன் முறை.. அவள் இன்னொரு கன்னத்தையும் காட்டி முத்தத்தை இரண்டாக பெற்றுக்கொண்டாள்..

இன்னும் மீராவின் இடையில் அவன் கைகள் உரிமையாக பற்றியிருந்தது...மனம் லேசாகியிருந்தது..

பக்கவாட்டில் சாய்ந்திருந்தது மீராவுக்கு வசதிக்குறைவாக இருந்திருக்கும் போல.. அவள் வசதியாக் சாய்ந்து கொள்ள கொஞ்சம் திரும்பி அவன் நெஞ்சில் முதுகைச் சாய்த்துக்கொண்டாள்..

அவன் முகத்தில் கூந்தல் அலைந்து ஓய்ந்தது.. மல்லிகையின் மணம் அவன் நாசியைத் துளைத்தது..

அவன் உடல் ஒரு நொடி இறுகியது. இடையில் இருந்த கை தளர்ந்தது..

அவள் கூந்தலில் மல்லிகைச் சரம்.. இரண்டுமுழ அளவிற்கு அவள் கூந்தலில் மூன்று வரிசைகளாய், மலர்ந்த மல்லிகை..

காலையில் அவள் தலையில் பூ இல்லை.. பைக்கில் பார்த்த பெண் மீராவா என தெரியவில்லை.. ஆனால் அந்தப் பெண்ணின் கூந்தலிலும் பூ இல்லை என்றே நினைவு..

சந்தேகம் நீர்க்குமிழியாய் நெஞ்சக்குளத்தில் வெடித்தது..

இவளே வாங்கினாளா? பைக்கில் வந்தவன் வாங்கிக்கொடுத்தானா?
வீட்டில் வந்து சூடினாளா? வழியில் சூடிக்கொண்டாளா? அவன் பூச்சூடிவிட்டானா?

இப்படி கவர்ச்சியாக உடையை தளர்த்திக்காட்டியது எனக்கு மட்டும் தானா?

நான் போன் செய்ததால் தான் அவன் சீக்கிரம் கிளம்பிவிட்டானா? நான் போன் செய்யாதிருந்தால்?

இதயம் அடித்துக்கொண்டது..

"ஏன் என்னிடம் சொல்லவில்லை? யார் அந்த ஆள்?
ஏன் மீரா அவனுடன் வந்தாள்? ஏன் பூக்களை வாங்கினாள்?

அவன் கை தளர்ந்த்தை உணர்ந்த மீரா, அதை மீண்டும் பற்றி தன் இடையில் இறுக்கி அவள் கரத்தில் கோர்த்துப் பிடித்துக்கொண்டாள்..

நான் அவளுக்காக வாங்கிய ஒருமுழம் மல்லிகை? டீபாயைப் பார்த்தான்.. பால், தயிர் பாக்கெட்கள், வண்டிச்சாவி, பர்ஸ், ஸ்வீட் பாக்ஸ் இவை தான் இருந்தன..

நான் வாங்கிய பூ இன்னும் வண்டியின் பவுச்சில் தான் இருக்கிறது.. என் மனதைப் போல அந்த மல்லிகையும் புழுங்கிக்கொண்டிருக்கிறது..

அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மழை பெய்யும் அறிகுறி தெரிந்தது. அவன் மனதில் ஏற்கனவே இடி இடித்துக்கொண்டுதான் இருந்தது.
[+] 8 users Like imstpd's post
Like Reply
#37
Super nanba
[+] 1 user Likes Ratish20's post
Like Reply
#38
Very interesting and fantastic update please continue thanks for your story
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#39
Good update bro
Keep rocking
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#40
கதை அருமையாக போகிறது உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.
மற்றவர்கள் பேச்சை கேட்க வேண்டாம்
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)