மீறாதே மீரா
#1
அலுவலக நேரம் முடிய இன்னும் நேரம் இருந்தது. கடிகாரத்தின் முள் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கோபாலகிருஷ்ணன் தனது மேஜையில் இருந்த கோப்புகளை சீக்கிரமாக ஒழுங்கு படுத்தினான். வழக்கமாக அவன் மணி ஆறு, ஆறரைக்குப் பிறகு தான் அலுவலகத்திலிருந்து கிளம்புவான். ஆனால் இன்று வேறு. இன்று அவன் மீராவை அலுவலகத்திலேயே பிக்கப் செய்ய முடிவு செய்திருந்தான். காலையில் நடந்த சிறு சண்டை இன்னும் மனதில் முள் போல் குத்திக் கொண்டிருந்தது. 

காலை வேளையில் கோபாலகிருஷ்ணன் எனும் கிருஷ் அன்று மிக முக்கியமான மீட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களுடனான பெரிய பிரசண்டேசன். அவனுக்கு நேரம் போதவில்லை. பிரசண்டேசனை கடைசியாக ஒரு முறை ஒட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆறிக்கொண்டிருந்த காபியைக் கூட கவனிக்கவில்லை..

அப்போது மீராவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது. 

"கிருஷ், இந்த வார இறுதியில் நம்ம ஊருக்கு போகனுமே? டிக்கெட் புக் பண்ணியாச்சா? அம்மா இப்ப போன் பண்னி கேட்டாங்க" என்றாள்.

"இப்ப சொல்லாதே மீரா. எனக்கு முக்கியமான மீட்டிங்க்கு ரெடியாகனும். நேரமில்லை" எரிச்சலுடன் சொன்னான்..

"ஒரு டிக்கெட் போடக்கூட நேரமில்லையா?”

“சமையல் வேலை இல்லாட்டி நான் ஏன் உங்ககிட்ட கெஞ்சப்போறேன்.. நானே போட்டுக்க மாட்டனா”..  குரலில் கடுப்பு தெரிந்தது.

“எங்க குடும்ப விஷயம்னா எப்படித்தான் திடீர் வேலை வந்துடுமோ” அடுப்படியில் பாத்திரங்களின் சத்தம் பலமாக கேட்டது..

பிரசண்டேசனை திருப்தியாக சரிபார்த்து முடித்து விட்டு ரயில்வே ரிசர்வேசன் வெப்சைட்டை திறந்தான்…மணி ஏழரையை நெருங்கிக்கொண்டிருந்தது..
பாஸ்வேர்டை டைப்படித்து லாகின் செய்தால் நெட் சுற்றிக்கொண்டே இருந்தது..

ரயில்வே இணையதளம் சரியான நேரம் பார்த்து பல்லிளித்துவிட்டது..

சரி குளித்துவிட்டு வந்து பார்ப்போம் என கிளம்பினான்.அடுத்தடுத்த வேலைகளில் அதை மறந்துவிட்டான்,..

அவனுக்கு காலை உணவு மேசையில் இருந்தது.. அவள் உணவை முடித்திருந்தாள்..

இருவருக்கும் லஞ்ச் எடுத்து பையில் வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்..

அவள் வெளிர்நீல நிற காட்டன்  புடவையில் வெளியே வந்தாள். சேலை முன் பின் விலகாமல் சேப்டி பின்களின் உபயத்தால் அம்சமாக உடலைத்தழுவியிருந்தது..பார்த்தவுடன் அழகான டீச்சர் என தோன்றும் அழகு.
கீழே புடவை மடிப்புகள் எக்குத்தப்பாக திரும்பி நின்றன..

“இரு சாப்பிட்டுட்டு வந்து ஃப்ளீட்ஸ் எடுத்துவிடறேன்..”

அவள் அவனை கண்டுகொள்ளவில்லை.. பிளீட்சை அரைகுறையாக நீவிவிட்டாள்.. போனை சார்ஜிலிருந்து எடுத்து ஹேண்ட்பேகில் போட்டாள். லஞ்ச் பேக் எடுத்துக்கொண்டு கோபமாக வெளியேறினாள்..

“இரு நான் டிராப் செய்யறேன்..”

அவன் வெளியே வந்தபோது மீரா சென்று சில நிமிடங்களாகியிருந்தது.. பேருந்து நிறுத்தத்திலும் அவள் இல்லை..
[+] 7 users Like imstpd's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
duplicate post deleted..

எனது முதல் முயற்சி தான்.. சில கதைகளின் தாக்கம் இருக்கலாம்..
நண்பர்கள் ஆதரவளிக்கவும்..
[+] 2 users Like imstpd's post
Like Reply
#3
Good start
Like Reply
#4
Good update bro
Keep it up
Continue your own way
Welcome to the new story
Like Reply
#5
Good story good start keep continue thanks for your story please continue
Like Reply
#6
Excellent start but posted twice??
Like Reply
#7
இப்போது அந்த நினைப்பு வந்த போது மனது சற்று வலித்தது. அவள் கேட்டது ஒரு சின்ன டிக்கெட் புக்கிங் தான். ஆனால், இப்போது அவள் "குடும்பத்தையே இவன் மதிக்கலை" என்கிற ரேஞ்சுக்கு கோபப்பட்டுப் போய் விட்டாள்.

நாம் என்னதான் எல்லா விஷயமும் பார்த்துப் பார்த்து செய்தாலும், செய்யாத ஒரு சின்ன விஷயம் தான் மனைவியின் கண்ணை உறுத்துகிறது… அதுவும் அவள் மீதான கவனத்தின் ஒரு வெளிப்பாடுதானே.

மூன்று மாத திருமணமான புது வாழ்க்கை. மூன்று மாதங்கள் தான் ஆனாலும், அது அவனுக்கு இன்னும் புத்தம் புதிதான புதுமைதான் மீரா... அவள் பெயரை நினைத்தாலே அவன் மனதில் ஒரு பரவசம்.

அவர்களின் திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்தது தான். ஆனால் முதல் பார்வையிலேயே அவன் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவள் முதல் நாள் அவன் முன் நின்ற போது, அவன் இதயம் நின்று போய் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. அவள் பேரழகு எனச் சொல்ல முடியாது... உயரமான, ஒல்லியான உடலமைப்பு. மாலை மஞ்சள் நிறம். அவளின் கரிய விழிகள், அவனைப் பார்த்தவுடன் ஒளிர்ந்தது போல தோன்றியது. அதிலேயே விழுந்து விட்டான் எனத் தான் சொல்ல வேண்டும். மனைவியான பின் இப்போது அந்த ஒளி சில சமயம் கனலாய் சுடுகிறது.

அவள் உதடுகளின் புன்னகை, அவன் உலகத்தையே இனிமையாக்கும். அவளின் உடல் வளைவுகள்... அவன் மார்பில் அவள் சாயும்போது, அவனது கைகள் இயற்கையாகவே அவளின் இடுப்பின் வளைவுகளைத் தேடும். அவளின் மெல்லிய சிறிய மார்பகங்கள், அவன் மார்பில் படும்போது ஒரு இனிய அழுத்தத்தை கொடுக்கும். அவளின் நீண்ட கழுத்து, அவனை இழுத்து மயக்கும்.

ஆனால் அவளின் உடல் அழகு மட்டுமல்ல, அவளின் உள்ளழகும் அலாதிதான். அவள் பேச்சு, சிரிப்பு, கவலை, அன்பு... எல்லாமே அவனை அவளிடம் இழுத்தது. அவள் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்படுவாள். ஒரு பூ வாடி போனாலும் அவள் கண்கள் கலங்கும். ஒரு சிறு உதவி செய்தாலும் அவள் முகத்தில் பிரகாசம் பொங்கும்.

படுக்கையில் அவர்களின் உறவு அதற்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு இன்னும் புதுமைதான்...

அவள் கை அவன் உடலை வருடுவது, அவள் செல்ல முனகல்கள், அவள் பெருமூச்சு... எல்லாமே அவனை பைத்தியமாக்கும். அவள் தன்னை முழுமையாக அவனுக்கு அர்ப்பணிப்பாள். அவளின் உடல் அவனுக்கு ஒத்துழைக்கும். அவளின் கண்கள் அவனை அழைக்கும். அவளின் உதடுகள் அவனுக்காக தவிக்கும். அவர்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு இரவும் அவனுக்கு கிடைத்த வரம் இது தான் என்று தோன்றும்.

ஒரு நல்ல ஜோடியாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவனுக்காக சமைக்கவோ, ஆடைகளை துவைக்கவோ அவள் அலுத்துக் கொண்டதே இல்லை. அவன் சோர்வாக அலுவலகத்திலிருந்து வரும்போது, அவள் முகத்தில் விரியும் புன்னகை அவனை தேற்றும். இருவரும் கிச்சனில் இணைந்து வேலை செய்யும்போது அவர்களின் காதல் ஆழமானது.. அவளது ஆடைகளை மடித்து வைக்கவோ, அவளின் அலுவலக கதைகளைக் கேட்கவோ அவன் தயங்கியது இல்லை..

அவர்கள் ஒன்றாக சிரிப்பார்கள். ஒன்றாக சண்டை போடுவார்கள். ஒன்றாக சமரசம் செய்வார்கள். பிறகு சரசம் செய்வார்கள். அவள் அவனது உலகம். அவன் அவளது உலகம். மூன்று மாதங்களில் அவர்கள் ஒன்றாக பல கனவுகளை கண்டிருக்கிறார்கள். அவளது காதல், காமம், பசி, ருசி... அனைத்தும் அவன்தான்.

இந்த சிறு சண்டை கூட பெரிதாக தெரிந்தது அவனுக்கு. ஏனென்றால், அவளுடன் வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு பொக்கிஷம். அவளுடைய ஒரு கோபமான பார்வை கூட அவனை வலிக்க வைக்கும். அவளுடைய ஒரு அலட்சியமான பதில் கூட அவனை நொறுக்கிவிடும்.

வேலை அவசரம் என்பதை அவளுக்கு மென்மையாக சொல்லியிருக்க வேண்டும். குளிக்கப்போகும் முன் "சாரி" என ஒரு வார்த்தை, ஒரு அணைப்பு, ஒரு முத்தம். அந்த காலையை இனிமையாக்கியிருக்கும். அவன் அலட்சியம் அவளை பாதித்து விட்டது. இப்போது அதை சரி செய்ய வேண்டும்.

இன்னும் அரை மணி நேரத்தில் மீராவின் அலுவலகம் முடிந்து விடும். போகும் வழியில் பூவும் இனிப்பும் வாங்கிக் கொள்ளலாம். அவளுடன் சேர்ந்து வீட்டிற்கு செல்லலாம். அப்போது காலையில் ஏற்பட்ட சிறு விரிசலை இந்த சிறிய செயல்களால் சரி செய்து விடலாம். இந்த யோசனை அவனுக்கு உற்சாகத்தை தந்தது.

அவள் முகத்தில் அந்த புன்னகை திரும்பி வரும் போது அவனுக்கு கிடைக்கும் சந்தோஷம் எதற்கும் ஈடு இல்லை. அவள் அவனை பார்த்து சிரிக்கும் போது, அவளின் கண்களில் தெரியும் ஒளி... அதற்காக அவன் எதையும் செய்ய தயார்.
[+] 7 users Like imstpd's post
Like Reply
#8
நெல்லை லாலா சுவீட்சில் மில்க் சுவீட் கால்கிலோ வாங்கிக்கொண்டான்.. வெளியிலேயே பூக்கார அக்கா இருந்தார்கள்.. ஒரு முழம் வாங்கிக்கொண்டான்..இன்னும் முழுதாக மலராத மொட்டுகள், நெருக்கமாக கட்டப்பட்டிருந்தது…

வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முனைகள் ஒரு வயதானவர் வந்து ஒரு விசிட்டிங் கார்டை காட்டி விசாரித்தார்.. கையில் கட்டைப்பை..

இந்த எலெக்டிரிகல் கடை, கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்க்கு பக்கத்துல இருக்குதுய்யா,  ஆப்போசிட்ல போய் பஸ், இல்லை ஷேர் ஆட்டோ புடிச்சு போங்க, ஒரு ஸ்டாப் தான்..

“நடந்து போனா பத்து நிமிசத்துல போயிடலாமா” அயர்ச்சியுடன் கேட்டார்..

சட்டென்று மனம் கணமாகிவிட்டது..  சரி ஒரு ஐந்துநிமிசம் போனா போகுது..

"உக்காருங்க அய்யா நான் கொண்டுபோய் விடறேன்"..

உங்களுக்கெதுக்கு தம்பி வீண் சிரமம்.. நான் போய்க்குவேன்…

"பரவால்லை, வாங்க, நான் அந்த வழில தான் போறேன்.. நான் கொண்டுபோய் விடறேன்".. பொய்மையும் வாய்மையிடத்தே.

அவரை ஏற்றிக்கொண்டு, யூடர்ன் அடித்தான்…

பேத்தியப் பார்க்கப் போறேன்ப்பா, அப்பா இல்லாத பொன்னு.. புருசனும் சரியில்லை.. நான் தான் அப்பப்ப போய் பார்த்து என்னால முடிஞ்சதை கொடுத்துட்டு வர்றேன்.. இப்ப வேலை பார்க்கற கடை மாறிட்டா, அதான் கண்டுபிடிக்க முடியலை…

அவர் புலம்பல்களைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை..சீக்கிரம் மீராவை சென்று பிக்கப் செய்ய வேண்டும்.. கடை வாசலில் அவரை இறக்கிவிட்டு, வண்டியை விரட்டினேன்…

பட்ட காலிலே படும் என்பதைப்போல சிக்னலில் மாட்டிக்கொண்டேன்.. வாகன நெரிசல் பெரிதாக இல்லை.. போக்குவரத்து காவலர் குடைக்கு கீழ் நின்று, போன் பேசிக்கொண்டிருந்தார்.. இல்லாவிட்டால் சிக்னலை கண்டுக்காம போயிடலாம் தான்..

அப்போதுதான், எதிர்த்திசையில் சென்ற பைக்கைப் பார்த்தான்..

வெளிர்நீல நிற புடவை படபடக்க, ஒரு பெண் அந்த பைக்கின் பில்லியனில் இருந்தாள்.. ஒடிசலான தேகம், வாகன ஓட்டியின் மீது ஓயிலாகச் சாய்ந்திருந்தது போலத்தான் தோன்றியது..

ஓரிரு வினாடிகளுக்குள் வண்டி விருட்டென கடந்துவிட்டது..

மீராவா அது?

முன்னால் இருக்கும் ஆணின் தோளில் சாய்ந்திருந்தாளா? அல்லது வேகத்தில் பேலன்ஸ் இழக்காமல் இருக்க அப்படி இருந்தாளா? அவள் சிரித்துக் கொண்டிருந்தாளா?
Like Reply
#9
Super start. Asai 60 nal Moham 30 naal. Aval vera oruthana thedi poyitta. Ivan seriya perform panni irukka mattan. Inimel pick up drop, fuck ellam vera oruthan oarthupan nee office la potti thatratha paru nu poyitta pola. Ha ha
[+] 1 user Likes Ahimsai Arasan's post
Like Reply
#10
Super sago. Nalla arambam. Meerathe na enna?
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
#11
Good update bro
Continue your own way
Good flow keep it up
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#12
Purusana mathikkama ponave kai vittu poitta nu indha potta payalukku Theriyala pola. 3 masathula sinayakama iruntha innoruthanukku kala virikka than seiva Thayavu senji ava moonjila ivan santhosatha parka cuckold kathai akidathinga. Cheating mathiri irutha kick ah irukkum. Attagasamana arambam.
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
#13
Awesome
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
#14
(20-06-2026, 09:09 AM)Arul Pragasam Wrote: Super sago. Nalla arambam. Meerathe na enna?

Dont go out of hand..
அத்து மீறாதே..
எல்லை தாண்டாதே..
Like Reply
#15
(20-06-2026, 09:39 AM)jiivajothii Wrote: Purusana mathikkama ponave kai vittu poitta nu indha potta payalukku Theriyala pola. 3 masathula sinayakama iruntha innoruthanukku kala virikka than seiva  Thayavu senji ava moonjila ivan santhosatha parka cuckold kathai akidathinga. Cheating mathiri irutha kick ah irukkum. Attagasamana arambam.

கதை எப்படி போகனும்னு ஒரு முடிவு செஞ்சிருக்கேன்..அதன்படி தான் கதை போகும்..

அது உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்..

பார்ப்போம்..
Like Reply
#16
(20-06-2026, 08:58 AM)Ahimsai Arasan Wrote: Super start. Asai 60 nal Moham 30 naal. Aval vera oruthana thedi poyitta. Ivan seriya perform panni irukka mattan. Inimel pick up drop, fuck ellam vera oruthan oarthupan nee office la potti thatratha paru nu poyitta pola. Ha ha

மீராவுடன் இருந்த அன்னியோன்யத்துக்கு அப்படி ஒன்னும் இதுவரை கிரிஷ்க்கு தோனலை..

ஆனா சந்தேகம் வந்துருச்சு.. பார்ப்போம்.. என்ன ஆகும்னு..
Like Reply
#17
(20-06-2026, 10:12 AM)imstpd Wrote: Dont go out of hand..
அத்து மீறாதே..
எல்லை தாண்டாதே..

She is already out of hand.? Kallakadhal seiravanga purusan solli keppadhilla purusana pottu thallaa than nenappanga. Let's see how it goes. All the best. Please don't stop the story in middle. Many author do that. Hope you complete it.
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
#18
excellent starting nanba real life la pakara mathiri Iruku plz continue
Like Reply
#19
(20-06-2026, 07:42 AM)imstpd Wrote: ... .... ...
... ... ...
அப்போதுதான், எதிர்த்திசையில் சென்ற பைக்கைப் பார்த்தான்..

வெளிர்நீல நிற புடவை படபடக்க, ஒரு பெண் அந்த பைக்கின் பில்லியனில் இருந்தாள்.. ஒடிசலான தேகம், வாகன ஓட்டியின் மீது ஓயிலாகச் சாய்ந்திருந்தது போலத்தான் தோன்றியது..

ஓரிரு வினாடிகளுக்குள் வண்டி விருட்டென கடந்துவிட்டது..

மீராவா அது?

முன்னால் இருக்கும் ஆணின் தோளில் சாய்ந்திருந்தாளா? அல்லது வேகத்தில் பேலன்ஸ் இழக்காமல் இருக்க அப்படி இருந்தாளா? அவள் சிரித்துக் கொண்டிருந்தாளா?

அந்த பெண் மீரா தான் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதற்குள் கணவனுக்கு ஏகப்பட கற்பனைகல் சந்தேகங்கள் ! இருக்க வேண்டிய சந்தேகம் தான். நல்ல சஸ்பென்ஸ் !

சரியான இடத்தில் தொடரும் என்று வந்திருக்கிறது
[+] 1 user Likes raasug's post
Like Reply
#20
Super bro very interesting story thanks for update please continue
[+] 1 user Likes Muralirk's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)