♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
ஒரு முக்கியமான வேலை இரு‌ப்பதா‌ல், Sunday update ஒருநாள் முன்னாடியே Saturday update ஆக வெளிவந்து விட்டது..இ‌ன்று‌ மதியம் வரை ஒரு function..அது முடிந்த பிறகு நேரம் கிடைத்தால் அடுத்த update தருகிறேன் நண்பர்களே
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ஹாய் friends, இன்று function முடிந்து வரவே 3 மணி ஆகி விட்டது. இருந்தும் அடுத்த ருக்மணி part பாதி எழுதி முடித்து விட்டேன்..நாளை வேலை முடிந்து வந்த பிறகு இரவு எழுதி நாளை இரவு update கொடுக்கிறேன் .
Like Reply
நல்வரவு...
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
ஹாய் நண்பர்களே!இப்போது எழுதி கொண்டு இருக்கும் பாகத்தில் உங்களுக்கு பிரியங்கா பாகம் பிடித்து இருக்கா அல்லது சிற்பிகா பாகம் பிடித்து இருக்கா?
Comment இல் சொல்லுங்க.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(18-05-2026, 12:59 AM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே!இப்போது எழுதி கொண்டு இருக்கும் பாகத்தில் உங்களுக்கு பிரியங்கா பாகம் பிடித்து இருக்கா அல்லது சிற்பிகா பாகம் பிடித்து இருக்கா?
Comment இல் சொல்லுங்க.

rendumaey vera maari rasika kudiya kadhai pakuthi bro...so edhu best nu la solla thonala rendumaey best tha  happy
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
early update panni irukinga expect panen but site vanthu pakla...innaiku tha padichen...migavum arumai...
priyanka oda thavipu, kamam oru pakam, aval arivu kuda poru oru pakkam, kathuvarayan oru kama yuththam senjutu irukaan kalingan odambula
idhula enna our doubt na kalingan ramgopal and so so guys maari priyanka enjoy panna mudiumaa kathuvarayan illama illa enna panna poringa paka waiting
kavithai varigal semma feel, but sila pure tamil varigal konjam padikum pothu meaning kadinamah tha iruku bro..pathu seinga
pictures na ketta maari vaikla adha oru kurai..seiuren sollitu...orey picture tha use panni irukinga...edho oru ai pic nadvula vachu advum watermark oda paka set akala..
waterdrops katuren...sothaploh doubt...adha ai pictures la kettlae vantu irukum..
anyway for rukmini update
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(18-05-2026, 05:15 AM)Raju@Vijay Wrote: early update panni irukinga expect panen but site vanthu pakla...innaiku tha padichen...migavum arumai...
priyanka oda thavipu, kamam oru pakam, aval arivu kuda poru oru pakkam, kathuvarayan oru kama yuththam senjutu irukaan kalingan odambula
idhula enna our doubt na kalingan ramgopal and so so guys maari priyanka enjoy panna mudiumaa kathuvarayan illama illa enna panna poringa paka waiting
kavithai varigal semma feel, but sila pure tamil varigal konjam padikum pothu meaning kadinamah tha iruku bro..pathu seinga
pictures na ketta maari vaikla adha oru kurai..seiuren sollitu...orey picture tha use panni irukinga...edho oru ai pic nadvula vachu advum watermark oda paka set akala..
waterdrops katuren...sothaploh doubt...adha ai pictures la kettlae vantu irukum..
anyway for rukmini update

Sorry Nanba, நீங்க சொன்ன மாதிரி நான் 4 photos upload பண்ண முயற்சி பண்ணேன். Error வந்து விட்டது. Photos அதிகமாக upload செய்ய முடியாது என்று எனக்கு வருகிறது.அதே போல என்னோட signature column என்னோட பதிவில் வருவது இல்லை.ஆனால் இன்னொரு id இல் signature column வருகிறது. என்ன காரணம் என்று புரியல. Ai இல் நீங்க சொன்ன மாதிரி images கேட்டு பார்த்தேன். Restricted content,இது public photos பண்ண முடியாது என்று வந்தது. பிரியங்கா photos மழையில் நனைவது போல கேட்டேன். அதுவும் முடியாது என்று சொல்லி விட்டது. அப்புறம் chatgpt மூலமாக தான் உருவாக்கினேன்..அப்புறம் மற்றவர்கள் போல காளிங்கன் ப்ரியங்காவை அனுபவிக்க முடியாதே..காத்தவராயன் ஆவி அதற்கு பதில் அவனுக்கு அனன்யாவை ஏற்பாடு பண்ணி கொடுத்து விட்டது. பிரியங்கா எனக்கு மட்டும் தான் என காத்தவராயன் ஆவி சொல்லி விட்டது
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(18-05-2026, 12:59 AM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே!இப்போது எழுதி கொண்டு இருக்கும் பாகத்தில் உங்களுக்கு பிரியங்கா பாகம் பிடித்து இருக்கா அல்லது சிற்பிகா பாகம் பிடித்து இருக்கா?
Comment இல் சொல்லுங்க.

இப்போதைக்கு இரண்டும் வேறு வேறு பகுதியாக உள்ளது நண்பா பிரியங்கா காம பகுதியாக இருக்கிறது ஆனால் சிற்பிகா suspense பகுதியாக இருக்கிறது அதனால் இரண்டையும் என்னால் ஒப்பிட முடியவில்லை
Like Reply
Priyanka is best. Rukmani is super.
Like Reply
(18-05-2026, 05:10 AM)Raju@Vijay Wrote: rendumaey vera maari rasika kudiya kadhai pakuthi bro...so edhu best nu la solla thonala rendumaey best tha  happy

(18-05-2026, 06:55 AM)Arun_zuneh Wrote: இப்போதைக்கு இரண்டும் வேறு வேறு பகுதியாக உள்ளது நண்பா பிரியங்கா காம பகுதியாக இருக்கிறது ஆனால் சிற்பிகா suspense பகுதியாக இருக்கிறது அதனால் இரண்டையும் என்னால் ஒப்பிட முடியவில்லை

(18-05-2026, 08:10 AM)rameshsurya84 Wrote: Priyanka is best. Rukmani is super.

Thanks for your comments nanbargale
Like Reply
Episode- 166

[Image: images.jpg]


டீக்கடைக்காரர்: "என்ன தம்பி... அப்படியே ஆச்சரியமா நின்னுட்டீங்க?

ரியான் தன் தொண்டையை நனைத்துக்கொண்டு, வார்த்தைகளைத் திக்கித் திணறி வெளிப்படுத்தினான். அவனது உள்ளுக்குள் இருந்த அதிர்ச்சி அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ரியான்: "அது... அது வந்து... அண்ணே... அந்தப் பையன்... அவன் பாக்குறதுக்கு அப்படியே அந்த 'சென்டினல் பழங்குடி' (Sentinelese) பையன் மாதிரி அல்லவா இருக்கான்? அவன் எப்படி இங்கே...?"
டீக்கடைக்காரரின் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை அரும்பியது.

டீக்கடைக்காரர்: "தம்பி..இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? அந்தச் சென்டினல் தீவுப் பையனைப் பத்தின விபரமா... இல்ல, அந்தப் பையன் 'சிற்பிகா'ன்னு கூப்பிட்டுட்டுப் போனாளே, அந்தச் சிற்பிகாவைப் பத்தின விபரமா?"

ரியானுக்குச் சென்டினல் தீவின் மர்மத்தை விட, தன் மனதைக் கொள்ளையடித்த, அந்த நீண்ட நளினமான கழுத்தைக் கொண்ட சிற்பிகாவின் ரகசியத்தை அறியவே மனம் துடித்தது. அவளது அந்தத் தகிக்கும் பேரழகும், சவாலான பேச்சும் அவனை இன்னும் அவளிடம் வசியப்படுத்தியிருந்தது.

ரியான்: (சற்றும் யோசிக்காமல்) "எனக்குச் சிற்பிகா பற்றிய விபரம்தான் முதல்ல தெரியணும் அண்ணே! அவ யாரு? அவளுக்கும் அந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம்?"

டீக்கடைக்காரர்: "அப்படியே ஆகட்டும் தம்பி... ஆனா இந்த விபரத்தை இங்க வச்சுப் பேச முடியாது.என் கூட வாங்க..
டீக்கடைக்காரர் தன் கடையின் ஒரு பகுதியைத் தற்காலிகமாக மூடிவிட்டு, ரியானை நோக்கிச் சைகை காட்டினார். ரியான் தன் காரை அங்கேயே நிறுத்திவிட்டு, அவரோடு நடக்கத் தொடங்கினான்.

ஹேடோ கடற்கரையின் குறுகலான பாதைகளைக் கடந்து, டீக்கடைக்காரர் ரியானை அழைத்து வந்து நிறுத்திய இடம் அவனுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. அது நவீன அந்தமானின் எந்தவொரு பகுதியையும் போல இல்லை; மாறாக, காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுப் பெட்டகத்தைப் போலக் காட்சி அளித்தது.

அங்கே கம்பீரமாக நின்றிருந்தது ராஜேந்திர சோழனின் நினைவாக எழுப்பப்பட்ட ஒரு பழங்கால மண்டபம்.

பாசி படிந்த கருங்கற்கள், சோழர் காலத்துக்கே உரிய நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகள், அந்த விடியற்காலை ஒளியில் ஒரு மர்மமான அமைதியோடு காட்சியளித்தன. ரியானுக்குத் தலை சுற்றியது. சிற்பிகாவை பற்றித் தெரிந்து கொள்ள வந்தால், இவர் ஏன் தன்னை ஆயிரம் வருடப் பழமையான ஒரு சோழர் கால மண்டபத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை.


மண்டபத்தின் மையப்பகுதிக்கு வந்ததும் ரியான் மேற்கொண்டு பொறுக்க முடியாமல் டீக்கடைக்காரரின் கையைப் பற்றி நிறுத்தினான். அவனது இதயம் வேகமாகத் துடித்தது.

ரியான்: "அண்ணே... எனக்கு ஒன்றும் புரியவில்லை! இந்த நடுக்காட்டுல இருக்குற சோழர் காலத்து மண்டபத்துக்கு என்னை ஏன் கூட்டி வந்தீங்க? நான் கேட்டது சிற்பிகாவை பத்தி... அவளுக்கும் இந்த இடத்துக்கும் என்ன சம்பந்தம் ?

டீக்கடைக்காரர் மெதுவாக ரியானின் கையைத் தன் தோளிலிருந்து விலக்கினார். அவரது முகம் எப்போதும் இல்லாத அளவுக்குத் தீர்க்கமாகவும், மர்மமாகவும் மாறியிருந்தது. அவர் அங்கிருந்த ஒரு பெரிய வட்ட வடிவக் கல்வெட்டின் முன்னே சென்று நின்றார்.

டீக்கடைக்காரர் அந்த மண்டபத்தின் மையப்பகுதியில் இருந்த ஒரு சோழர் காலத்து கல்வெட்டைத் தன் கையால் மெல்லத் துடைத்தார். பிறகு ரியானைத் திரும்பிப் பார்த்தார்.

டீக்கடைக்காரர்: "சம்பந்தம் இருக்கு தம்பி... நீ சாதாரணமா நினைக்குற அந்தச் சிற்பிகாவோட ரத்தத்துல ஆயிரம் வருஷத்து ரகசியம் ஓடிக்கிட்டு இருக்கு!"

ரியான்: "என்ன சொல்றீங்க அண்ணே?"

டீக்கடைக்காரர்: "தம்பி, நீ சிற்பிகா பற்றி மட்டும்தான் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டே... அதனால்தான் உன்னை இங்கே கூட்டி வந்தேன்."

டீக்கடைக்காரர்: "சரித்திரத்தை நல்லா உத்துப் பாரு தம்பி. மாமன்னன் ராஜேந்திர சோழன் உலகத்தையே வெல்லத் தன் கடற்படையோடு கிளம்புனப்போ, இந்த அந்தமான் தீவுகளைத்தான் தன் முதன்மைத் தளமாப் பயன்படுத்தினார்.

ரியான்: (புரியாமல், குழப்பத்துடன்) "சிற்பிகாவுக்கும்... இந்த ராஜேந்திர சோழன் மண்டபத்திற்கும் என்ன சம்பந்தம் அண்ணே? அவ இந்த காலத்து பொண்ணு!"

டீக்கடைக்காரர் ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டுச் சொல்லத் தொடங்கினார்.

டீக்கடைக்காரர்: "சம்பந்தம் இருக்கு தம்பி... பெரிய சம்பந்தமே இருக்கு! சரித்திரப் பக்கங்களை திருப்பிப் பார்த்தா, மாமன்னன் ராஜேந்திர சோழன் தான் முதன்முதலில் தன் கடற்படையோடு இந்த அந்தமான் தீவுகளுக்கு வந்தது. அவர் இந்தத் தீவுகளுக்கு 'மாநக்கவாரம்' (நக்கவாரம்) என்று பெயரிட்டு, தன் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தினார்."

ரியான் ஆச்சரியத்துடன் கேட்க, டீக்கடைக்காரர் அடுத்த விபரீத உண்மையை உடைத்தார்.

டீக்கடைக்காரர்: "இன்னைக்கு உலகமே நெருங்க பயப்படுற, அம்பு விட்டு விரட்டுற அந்த 'சென்டினல்' (Sentinel) தீவுவாசிகள் இருக்காங்களே... அவங்க இந்த வெளியுலகத்துல அனுமதி தந்த ஒரே ஒரு ஆட்கள் ராஜேந்திர சோழனும் அவரோட ஆட்களும் மட்டும்தான்! சோழர்கள் கிட்ட மட்டும் அவங்க ரொம்ப நல்ல உறவு கொண்டு இருந்தாங்க. சோழர்களின் கடற்படைக்கு அவங்க பல வழிகள்ல உதவியும் செஞ்சாங்க."

ரியானின் கண்கள் விரிந்தன. சற்று முன்பு கடற்கரையில் அந்தச் சென்டினல் பழங்குடி இளைஞன் சிற்பிகாவை 'சிற்பிகா!' என்று அழைத்ததும், அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் தெரிந்த கம்பீரமும், அவளது அசைவுகளும் இப்போது அவனுக்கு வேறு ஒரு அர்த்தத்தைத் தந்தன.

டீக்கடைக்காரர்: "இப்போ புரியுதா தம்பி? அந்தச் சென்டினல் பையன் ஏன் சிற்பிகாவைத் தேடி வந்தான்னு? சிற்பிகா வெறும் ஐடி அனலிஸ்ட் இல்லை... அவளோட வம்சாவளி, அவளோட ரத்தம் இந்தச் சோழர் காலத்து ரகசியங்களோடு பிணைக்கப்பட்டது. அந்தத் தீவுவாசிகள் இன்னைக்கும் மதிக்கிற ஏதோ ஒரு ரகசியம் சிற்பிகாவிடம் இருக்கு. அதனால்தான் அவங்க அவளுக்குக் கட்டுப்படுறாங்க!"

ரியான் : அண்ணே,அப்போ சிற்பிகா சோழர் வம்சாவளியா?

[Image: South-Indian-Bride.jpg]

டீக்கடைக்காரர் ரியானை அந்தப் பாசி படிந்த கருங்கல் தூண்களுக்கு இடையே இன்னும் ஆழமாக அழைத்துச் சென்றார். மண்டபத்தின் மையப்பகுதியில், இருள் சூழ்ந்த ஒரு சுவருக்குப் பின்னால், பழங்காலக் கண்ணாடிப் பேழை ஒன்றுக்குள் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான ஓவியத்தின் முன்பு அவனது கையைப் பிடித்து நிறுத்தினார்.
அந்த விடியற்காலையின் மெல்லிய பொன்னிறக் கதிர் நேராக அந்த ஓவியத்தின் மீது விழுந்தபோது, அங்கிருந்த தூசிகளுக்கிடையிலும் அந்தப் பெண்ணின் பேரழகு பிரகாசித்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் ரியானின் கண்கள் ஒளிரத் தொடங்கின. அவனது இதயம் ஒரு விநாடி துடிக்க மறந்தது.

அந்த ஓவியத்தில் இருந்தவள் வெறும் பெண்ணல்ல; பேரழகின் இலக்கணம். அவளது கூந்தல் மேகக் கூட்டத்தைப் போலச் சுருண்டு தோள்களில் விழுந்திருக்க, அவளது கண்கள் ஏதோ ஒரு தீர்க்கமான ரகசியத்தை உரைப்பது போல ரியானை ஊடுருவின. மிக முக்கியமாக, அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தின் அமைப்பும், அந்த முகத்தின் கம்பீரமும் ரியானுக்கு மிகவும் பழகிய ஒன்றாகத் தோன்றியது.

ரியான் அந்த ஓவியத்திலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல், தழுதழுத்த குரலில் கேட்டான்.
ரியான்: "யார்... யார் இந்த எழில் கொஞ்சும் அழகுப் பெண்? இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது எனக்குள் ஏதோ ஒரு விசித்திரமான நடுக்கம் ஏற்படுகிறதே அண்ணே..."

டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தை நோக்கித் தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். அவரது குரலில் இப்போது ஒரு குலத்துக்கே உரிய பெருமையும், எல்லையற்ற விசுவாசமும் கலந்திருந்தது.

டீக்கடைக்காரர்: "தம்பி... இவர் சாதாரணப் பெண் இல்லை. இவர் தான் எழில் கொஞ்சும் சோழ நாட்டு இளவரசி! மாமன்னன் ராஜேந்திர சோழனின் தவப்புதல்வி... என்றும் இளையவள், இனியவள், கலையவள்... மாவீரன் இளங்கோவின் கருத்தைக் கவர்ந்தவள்... எங்கள் குல விளக்கு அருள்மொழி நாச்சியார்!"



[Image: images-2.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
Episode -166 தொடர்ச்சி

ரியான்: (திகைப்புடன்) "அருள்மொழி நாச்சியாரா? சோழ நாட்டு இளவரசியா? அண்ணே... இவளுடைய முகம்... இவளுடைய அந்த நீண்ட கழுத்து... இதெல்லாம் அப்படியே..."

டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி! நீ நினைக்கிறது நிஜம் தான். நீ கடற்கரையில் பார்த்த அந்தச் சிற்பிகா... இந்த அருள்மொழி நாச்சியாரின் நேரடி வம்சாவளி! ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி சோழப் பேரரசு இந்த அந்தமான் கடலில் மறைத்து வைத்த ரகசியப் பொக்கிஷத்தின் நேரடி வாரிசு அவள்தான். அந்தச் சென்டினல் தீவுவாசிகள் காத்து நிற்குறது இந்த அருள்மொழி நாச்சியாரின் ரத்தத்துக்காக மட்டும்தான்!"


டீக்கடைக்காரர்: "சரித்திரம் எப்போதுமே வீரத்தைப் பற்றி மட்டும்தான் தம்பி பேசும், ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்குற கண்ணீரையும் காதலையும் பேச மறந்துடும். மாவீரன் இளங்கோவின் கருத்தைக் கவர்ந்தவள் இந்த அருள்மொழி நாச்சியார்னு சொன்னேனே... அந்த இளங்கோ, சோழ தேசத்துக்காக ஒரு பெரும் போரில் வீர மரணமடைஞ்சான்... இல்லை, சதிகாரர்களால் கொல்லப்பட்டான்!"

ரியான் அதிர்ச்சியோடு கேட்க, டீக்கடைக்காரர் தொடர்ந்தார்.

டீக்கடைக்காரர்: "தன் காதலன் இளங்கோ கொல்லப்பட்ட பிறகு, சோழ தேசத்தின் அரண்மனைச் சுகபோகங்களும், அதிகாரப் போட்டிகளும் அருள்மொழிக்கு ஒரு நரகமாகத் தெரிந்தது. அவளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆள் அரவமற்ற, தன் காதலனின் நினைவுகளோடு மட்டுமே வாழக்கூடிய ஒரு தனிமையான இடம். அதற்காகத்தான் தன் தந்தையின் கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏறி, இந்த எல்லையற்ற கடல் கடந்து, யாருமே இல்லாத இந்த அந்தமான் தீவுகளுக்கு அவள் வந்தாள்..."

டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் கீழ் பகுதிக்குத் தன் கைகளைக் கொண்டு சென்றார். அங்கே அருள்மொழி நாச்சியார் தன் ஒரு கையைத் தன் வயிற்றின் மீது வைத்திருப்பது போல அந்த ஓவியம் நுணுக்கமாக வரையப்பட்டிருந்தது.

டீக்கடைக்காரர்: "அவள் வெறும் கண்ணீரை மட்டும் சுமந்துகொண்டு இந்தத் தீவுக்கு வரவில்லை தம்பி... அவள் சோழ தேசத்தை விட்டுப் புறப்பட்ட பொழுது, அவளது காதலன் இளங்கோவின் உன்னதமான காதல் நினைவு... அவளது வயிற்றில் ஒரு கருவாக வளர்ந்து கொண்டிருந்தது! சோழ வம்சத்தின், மாவீரன் இளங்கோவின் அந்த நேரடி வாரிசைத் தன் வயிற்றில் சுமந்துதான் அவள் இந்த மண்ணில் கால் வைத்தாள்."

ரியானின் கண்கள் பனித்தன. ஒரு இளவரசி, தன் காதலனை இழந்து, வயிற்றில் ஒரு குழந்தையோடு, இந்த அறியப்படாத தீவுக்குள் அடைக்கலம் புகுந்த அந்தத் துயரத்தை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

டீக்கடைக்காரர்: "ஆள் அரவமற்ற இந்தத் தீவுகளில், அவளுக்கு ஆதரவாக நின்றது அந்தச் சென்டினல் தீவுவாசிகள் மட்டும்தான். அருள்மொழி நாச்சியாரின் அந்தத் துயரத்தையும், அவளது கர்பத்தையும் பார்த்த அந்த ஆதிவாசிகள், அவளைத் தங்கள் குலத் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அவளையும், அவளது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் தங்களின் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பதாகச் சூளுரைத்தார்கள். அன்று முதல் இன்று வரை, அந்தச் சென்டினல் பழங்குடியினர் சோழர்களின் இந்த ரத்த வாரிசை மட்டுமே தங்களின் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்!"

சிற்பிகாவின் பின்னணியில் இருக்கும் அந்த ஆயிரம் ஆண்டுகாலச் சோழப் பேரரசின் ரத்த ரகசியத்தைக் கேட்ட மாத்திரத்தில், ரியானின் அகந்தையும் தலைக்கனமும் சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஒரு சாதாரண ஐடி அனலிஸ்ட் என்று தான் நினைத்த பெண், ஒரு கடற்படைப் பேரரசின் வாழும் பொக்கிஷம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலம் தன்னுள் இருந்த 'நான்' என்ற மேட்டிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து, அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் ஒரு சாதாரண மனிதனாக அவன் நின்றிருந்தான்.
இருந்தாலும், ஒரு துப்பறியும் ஆவலாக அவனது மூளையின் ஒரு மூலையில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மிச்சமிருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் டீக்கடைக்காரரை நோக்கினான்.

ரியான்: (குரலில் இருந்த மிடுக்கு முற்றிலும் குறைந்து, பணிவோடு) "அண்ணே... சிற்பிகாவோட உண்மையைச் சொன்னீங்க, என் தலைக்கனம் எல்லாம் அடங்கிடுச்சு. ஆனா, எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை அண்ணே... இந்த உலகமே அறிஞ்ச வரைக்கும், 'சென்டினல்' தீவுவாசிகள் வெளியுலகத் தொடர்பு இல்லாம, யாராவது உள்ள வந்தா அம்பு விட்டு விரட்டுறவங்க. அப்படிப்பட்டவங்க எப்படித் தங்களோட தீவை விட்டு வெளிய வருவாங்க? அதிலும் இந்த ஒரு தீவுவாசி மட்டும் எப்படி எந்த ஒரு பயமும் இல்லாம, நவீன ஸ்ரீவிஜயபுரத்தின் (Srivijayapuram) ஹேடோ கடற்கரை வரைக்கும் வந்தான்? இதோட ரகசியம் என்ன அண்ணே?"
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் மீதிருந்த சென்டினல் அம்பை மெதுவாகத் தொட்டார். அவரது முகத்தில் ஒரு விசித்திரமான தீர்க்கம் தெரிந்தது.

டீக்கடைக்காரர்: "தம்பி, வெளியுலக மனிதர்களுக்குத்தான் சென்டினல் தீவு ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. ஆனா, அந்தத் தீவுவாசிகளுக்கு இந்த அந்தமான் கடலும், இதன் அலைகளும் அவங்க கைரேகை மாதிரி அத்தபடி. அவங்க நினைச்சா எந்தக் கடலையும் கடப்பாங்க.
ஆனால் அவங்க வம்சத்துல இதுவரைக்கும் யாருமே, எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களோட தீவின் எல்லையைத் தாண்டி வெளியுலக மனிதர்கள் வாழும் இந்தத் தரை மண்ணில் கால் வச்சதே கிடையாது. ஆனா... இந்த ஒரு சென்டினல் பையன் மட்டும் விதிவிலக்கா மாறிட்டான். அவனுக்கு இந்த நவீன உலகியல் வாழ்வின் மீது ஒரு விசித்திரமான வசியம் உண்டாகிடுச்சு. குறிப்பா... வானத்துல சத்தத்தோட பறக்குற அந்த விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், தானும் அந்தப் பறவைக்குள்ள உட்கார்ந்து மேகங்களுக்கு நடுவே பறக்கணும்னு ஆசைப்பட்டுட்டான்!"

ரியான் ஆச்சரியத்துடன், "ஒரு பழங்குடிப் பையனுக்கு விமானத்தில் பறக்க ஆசையா?" என்றான்.

டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி. ஆனா, அந்தச் சென்டினல் தீவின் மூத்த தலைவருக்கு இது துளியும் பிடிக்கல. 'வெளியுலகம் ஒரு நரகம், அங்கே போனா நம்ம இனம் அழிஞ்சுடும்'னு அவர் அவனைத் தீவை விட்டே துரத்தப் பார்த்தார். அந்த நேரத்துலதான் சிற்பிகா நடுவுல புகுந்தா. அவ அந்தத் தீவுத் தலைவர்கிட்ட ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கா..."

ரியான்: "என்ன உறுதி அண்ணே?"

டீக்கடைக்காரர்: "இந்த நவீன உலகத்துல எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்காங்க, எத்தனை கெட்டவர்கள் இருக்காங்க, இதையெல்லாம் விட அவங்க வாழும் அந்தத் தனிமைத் தீவே எவ்வளவோ மேலானதுங்கிற கசப்பான உண்மையை அந்தப் பையனுக்கு நானே புரிய வைக்கிறேன். இந்த உலகத்தோட சுயரூபத்தை அவன் கண்ணு முன்னாடி காட்டி, அவனோட ஆசையைத் தீர்த்து, மறுபடியும் அவனை நம்ம தீவுக்கே பத்திரமா கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன்னு சிற்பிகா சபதம் செஞ்சுதான் அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கா!"

டீக்கடைக்காரர் பேச்சை நிறுத்திவிட்டு, ரியானின் முகத்தை மிக உற்றுப் பார்த்தார். சுற்றியிருந்த காற்றில் ஒரு மர்மமான நிசப்தம் நிலவியது.

டீக்கடைக்காரர்: "ஆனா தம்பி... எனக்கு என்னவோ தோணுது. அந்தப் பையனுக்கு இந்த உலக வாழ்வியல் மீது இருக்கிற ஆசை மட்டும் காரணமில்லை. அவன் ஸ்ரீ விஜயபுரம் வந்ததற்கு இது மட்டும் ஒரு காரணமாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை .


ரியான்: (இதயம் படபடக்க, குரலில் லேசான நடுக்கத்துடன்) "அப்படி இன்னொரு ரகசியம் என்னவாக இருக்கும் அண்ணே? அவனுக்குள் மறைஞ்சிருக்குன்னு சொல்ற அந்தப் புதிரான உண்மை என்ன?"

டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் அருகே இருந்த தூணில் சாய்ந்து கொண்டு, தன் தாடியை மெல்ல வருடினார். அவரது கண்கள் ஏதோ ஒரு கசப்பான உண்மையை யோசிப்பது போல சுருங்கின.

டீக்கடைக்காரர்: "தம்பி... என்னால் இதை ஒரு ஊகமாகத்தான் சொல்ல முடியும். ஆனா, மனிதனோட அடிமனசு இருக்குதே... அது உலகத்துல இருக்குற எல்லா ரகசியங்களை விடவும் ரொம்ப ஆபத்தானது. அவனுக்கு இந்த நவீன உலகத்தின் மீதும், அந்த விமானத்தின் மீதும் மட்டும் ஆசை இல்லை தம்பி... அவனோட ஆசைக்கு பின்னாடி ஒரு ஆதி மிருகம் ஒளிஞ்சிருக்கு!"

ரியான் புரியாமல் பார்க்க, டீக்கடைக்காரர் மேலும் விவரித்தார்.

டீக்கடைக்காரர்: "நான் இந்தக் கடற்கரையில எத்தனையோ மனுஷங்களை பார்த்தவன். அந்தச் சென்டினல் பையன் இங்க இருக்குற பெண்களைப் பார்க்கும் போதெல்லாம்... அவனோட பார்வையே மிகக் காமப் பார்வையா இருக்கு! அவனோட தீவுக் கூட்டத்துல, தலைமுறை தலைமுறையா கறுத்த பெண்களை மட்டுமே பார்த்து, அவங்களுக்குள்ளேயே வாழ்ந்து வளர்ந்தவன் அவன்.அப்படிப்பட்டவனுக்கு, இந்த நவீன உலகத்துல இருக்குற பெண்களோட நிறத்தையும், அவங்களோட உடலமைப்பையும் பார்த்தவுடனே ஒருவித மயக்கம் வந்திருக்கலாம் தம்பி!"

டீக்கடைக்காரரின் வார்த்தைகள் ரியானுக்குள் ஒரு பெரும் தீயை மூட்டியது. கடற்கரையில் சிற்பிகாவுக்கு மிக அருகில் அவன் நின்றிருந்த தோரணையும், அவளது கையைப் பற்றிக் கூட்டிச் சென்ற விதமும் இப்போது ரியானின் நினைவுக்கு வந்து அவனைக் குடைந்தது.

டீக்கடைக்காரர்: "நிறங்களின் வசியம் ஒரு ஆதிமனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். சிற்பிகா அவனுக்குப் புரிய வைக்கணும்னு நினைக்குறா... ஆனா, அவனோட அடிமனசுல இருக்குற அந்தக் காம வெறி, சிற்பிகாவோட அந்தப் பேரழகையும், அவளோட தந்த நிற மேனியையும் பார்த்து வசியப்பட்டிருந்தா... அது சிற்பிகாவுக்கே ஆபத்தா முடியலாம். அவளைக் காப்பாற்றப் போறேன்னு சொல்ற அந்தப் பையனே, அவளுக்கு ஒரு ஆபத்தா மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

டீக்கடைக்காரரின் அந்த வார்த்தைகள் ரியானின் புத்தியை முற்றிலுமாக உலுக்கியிருந்த வேளையில், அவனுக்குள் அடுத்த பிரம்மாண்டமான கேள்வி எழுந்தது. இந்தத் தீவில் ஒரு சாதாரண டீக்கடை நடத்தும் மனிதருக்கு, ஆயிரம் வருடச் சோழர் வரலாறும், அந்தச் சென்டினல் பையனின் அடிமனத்துக் காமப் புதிரும் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது?
அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.


அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.

ரியான்: "அண்ணே... உங்களுக்கு எப்படி இவ்வளவு ரகசியங்கள் தெரியும்? இதை ஏன் இவ்வளவு விபரமா என்கிட்ட சொல்றீங்க? நீங்க உண்மையிலேயே யாரு அண்ணே?"

டீக்கடைக்காரர் அதற்குப் பதில் சொல்லாமல் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் விவரிக்க முடியாத ஒரு பழமையும் பேரமைதியும் இருந்தது. அவர் அந்த அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தின் கீழ் இருந்த ஒரு ரகசியக் கருங்கல் பெட்டியை நோக்கி நகர்ந்தார். அதன் மூடியைத் திறந்து, அதற்குள் பட்டுத் துணியால் சுற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு பழங்காலத்து ஓலைச்சுவடியை வெளியில் எடுத்தார்.

அதை ரியானின் கைகளில் கொடுத்தார். ரியான் அதை வாங்கிப் பார்த்தான். அதில் செதுக்கப்பட்டிருந்த அந்த ஆதி தமிழ் எழுத்துக்களும், வட்டெழுத்துக்களும் நவீன காலத்து ஐடி உலகத்தில் வாழும் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அது ஏதோ ஒரு ரகசியக் குறியீடு போல அவனுக்குத் தோன்றியது.

அது நவீனக் காகிதங்களைப் போன்றது அல்ல. பனை ஓலைகளை முறைப்படி அவித்து, பதப்படுத்திச் செய்யப்பட்ட அந்தச் சுவடி, பத்து நூற்றாண்டுகளின் பழமையைத் தன் மேல் சுமந்து கொண்டு, ஒருவித முதிர்ந்த பொன்னிறமும் பழுப்பு நிறமும் கலந்த மாநிறத்தில் காட்சியளித்தது.

ரியான் அதை நெருங்கும்போது, அதன் ஓலைகளில் இருந்து ஒரு விசித்திரமான வாசனை வீசியது. பல நூற்றாண்டுகளாக அதைச் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காகப் பூசப்பட்டிருந்த மூலிகைத் தைலங்கள், வசம்பு மற்றும் காய்ந்த பனை ஓலையின் கசப்பு கலந்த ஒரு பழங்காலத்து மர்ம வாசனை அந்த மண்டபத்தின் காற்றில் பரவியது

அந்த ஓலைகளின் இருபுறமும் கூர்மையான எழுத்தாணியால் செதுக்கப்பட்டிருந்த ஆதி தமிழின் வட்டெழுத்துக்கள், வெறும் எழுத்துக்களாகத் தெரியவில்லை. அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு ரகசியக் குறியீட்டைப் போல வளைந்து நெளிந்து, காலத்தின் சுவடுகளாக ஆழப் பதிந்திருந்தன. எழுத்தாணி பாய்ந்த அந்த வரிகளில், காலத்தின் சாட்சியாகக் கறுத்த மை நிரப்பப்பட்டிருந்தது.

அந்த நீண்ட ஓலைகளின் இடது மற்றும் வலது ஓரங்களில், நூலைக்கோர்ப்பதற்காகச் துல்லியமாக இடப்பட்ட இரு துளைகள் இருந்தன. அந்தத் துளைகளின் வழியே ஒரு கறுத்த, பழமையான பட்டு நூல் கோர்க்கப்பட்டு, சுவடி கலைந்துவிடாமல் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அந்த நூலின் முனையில் சோழப் பேரரசின் முத்திரையான 'புலிச் சின்னம்' பொறிக்கப்பட்ட ஒரு சிறிய சுடுமண் வில்லை (Terracotta Seal) தொங்கிக் கொண்டிருந்தது.

[Image: 1779076652158.png]
அவன் தன் கைகளில் இருந்த அந்தப் பழங்கால ஓலைச்சுவடியையே வெறித்துப் பார்த்தான். ஜாவா (Java), பைத்தான் (Python) என உலகமே வியக்கும் நவீன கணினி மொழிகளின் 'கோடிங்' (Coding) ரகசியங்களை நொடியில் உடைக்கும் அவனது புத்தி, தன் தாய்மொழியின் ஆதி வடிவத்திற்கு முன்னால் முற்றிலும் செயலிழந்து நின்றது. அந்தச் சுருள்களில் செதுக்கப்பட்டிருந்த வட்டெழுத்துக்கள் அவனுக்கு ஏதோ ஒரு புரியாத ரகசியக் குறியீடு (Cipher Text) போலக் காட்சியளித்தன.

அவனது நெற்றிப்பொட்டில் வியர்வை அரும்பியது. காதுகளில் ரத்தம் சுடேறிப் பாய்வது போன்ற ஒரு விசித்திரமான சூட்டை உணர்ந்தான். "என்ன மொழி இது? தமிழ் என்றுதான் சொல்கிறார், ஆனால் ஒரு வார்த்தை கூட என் புத்திக்கு எட்டவில்லையே!" என்ற ஏமாற்றமும், அதன் பின்னால் இருந்த மர்மமும் அவனைப் பயமுறுத்தியது.

டீக்கடைக்காரர்: "உனக்கு இது புரியாது தம்பி... இது வெறும் எழுத்துக்கள் இல்லை, காலத்தோட கட்டளை!" என்று கூறி, அந்த ஓலைச்சுவடியை வாங்கி, அதில் அருள்மொழி நாச்சியாரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டிருந்த வரிகளை அவனுக்கு படிக்கத் தொடங்கினார்.

"ஈரைந்தினோடு ஐந்தாம் முறைவந்திடு மென்குலத் தோகைமேல்
பேரன்பு கொண்டுயிர்த் தாய்நிலத் தேயிருந்து மன்மதன் வந்திடுவான்!
காரிரும் பௌவக் கடல் கடந்துவந்த என் காரிகை யவளோடு
சேரரங்கத் தாய்நாடு மீள்வதே காலத்தின் கட்டாய மாமன்றோ!
தேடிவரு மவ்வீரன் கண்ணெதிரே தோன்றிடு வோய்நீயிவ் வோலைதந்து
வாடிநின்ற வெங்குல விளக்கின் மாமர்மச் சுவடிதனை உரைப்பாயே!"

ரியான் அவர் படித்த கவிதை அர்த்தம் புரியாமல், அந்த ஓலைச்சுவடியையும் அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தையும் மாறி மாறிப் பார்த்துத் திகைத்து நின்ற அந்த நொடியில், அவனது தோளில் டீக்கடைக்காரரின் கரடுமுரடான கை அழுத்தமாகப் பதிந்தது.
அவனது தவிப்பைக் கண்டு டீக்கடைக்காரரின் உதடுகளில் ஒரு மெல்லிய, ஆழமான புன்னகை அரும்பியது.

டீக்கடைக்காரர்: "பதறாதே தம்பி... கம்ப்யூட்டர்ல இருக்குற ஆயிரம் கோட்டிங்குகளை (Coding) உன் மூளை நொடியில படிச்சிடும், ஆனா உன் சொந்த மண்ணோட ஆதி ரத்தக் குறிப்பை உன்னால படிக்க முடியல, இல்லையா? உனக்கு இது புரியாது தம்பி. ஆனா, இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் எழுதி வச்சிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் உன்னைப்பத்தித்தான் பேசுது!"

ரியான் தன் வறண்ட தொண்டையை நனைத்துக்கொண்டு, "என்னைப்பத்தியா? அந்த ஆயிரம் வருஷத்துத் தமிழ்ல என் பேரை எழுதியிருக்கா அண்ணே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

டீக்கடைக்காரர்: "உன் பேரை எழுதல தம்பி, உன்னோட விதியை எழுதியிருக்கா! இதோ, இந்த முதல் வரியைக் கவனி..." என்று அந்தச் சுவடியின் முதல் வரியைத் தன் விரலால் தொட்டுக் காட்டினார்.

டீக்கடைக்காரர்: "இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் என்ன சொல்லியிருக்காங்கன்னா...நான் இந்த அந்தமான் கடலைக் கடந்து வந்து, இந்தத் தீவுகள்ல அடைக்கலமாகி வாழ்றேன். எனக்கு அப்புறம், என் வம்சாவளியில வரப்போற இருபத்தைந்தாவது தலைமுறைப் பெண் (அதாவது சிற்பிகா) இந்த மண்ணுல வாழும்போது... அவமேல தீவிரமான மோகமும் காதலும் கொண்டு, என்னோட சொந்தத் தாய் தேசத்துல (தமிழகத்துல) இருந்து ஒரு வீரன் அவளைத் தேடி வருவான்!னு எழுதியிருக்காங்க தம்பி."

ரியானின் இதயம் ஒரு கணம் நின்று நிதானித்தது. அவன் டீக்கடைக்காரரையே வெறித்துப் பார்த்தான்.

டீக்கடைக்காரர்: "அடுத்த வரியைக் கேள்... அப்படி அவளைத் தேடி வர்ற அந்த மனிதன் முன்னாடி, இந்த ஓலைச்சுவடியைக் காட்டி, எங்கள் குலத்தோட அத்தனை மர்மங்களையும் அவன்கிட்ட நீங்க ஒப்படைக்கணும். அதுமட்டுமில்ல... அன்று நான் என் தாய்நாட்டை விட்டு இந்தக் கடல் கடந்து வந்தேன். ஆனா, என் வம்சத்து இருபத்தைந்தாவது மகளான அவளோ, தன்னைத் தேடி வரும் அந்த வீரனோட கைகளைப் பிடிச்சு, மீண்டும் என் சொந்தச் சோழ தேசத்துக்கே திரும்பிப் போகணும். இது காலத்தோட கட்டாயம்!'னு எழுதி வச்சிருக்காங்க."

மாமன்னன் ராஜேந்திர சோழனின் காலம் என்றால், அது பதிினொன்றாம் நூற்றாண்டு. அதாவது, சரியாக பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்) அருள்மொழி நாச்சியார் தன் சொந்தக் கரங்களால் செதுக்கி வைத்த அந்த ஓலைச்சுவடி, இன்று இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன மனிதனான ரியானின் கர்வத்தை மொத்தமாகச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கியிருந்தது!

கணினியின் விசைப்பலகையில் (Keyboard) உலகத்தையே ஆட்டிப்படைக்கும் குறியீடுகளை (Coding) உருவாக்கும் அறிவு தனக்கு இருக்கிறது என்ற அகந்தை, வங்கிக் கணக்கில் வந்து குவியும் ஆடம்பர வசதிகள் எனத் தன்னுள் இருந்த அத்தனை மேட்டிமைத்தனமும் அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் மண்டியிட்டு நின்றன. எவ்வளவு வசதி இருந்தும், என்னதான் உலகமகா அறிவு இருந்தும், காலமும் விதியும் நடத்தும் ஒரு பிரம்மாண்ட நாடகத்தில் நாம் அனைவரும் வெறும் அசைக்கப்படும் பகடைக்காய்கள், வெறும் கருவிகள் மட்டுமே என்பதை ரியான் தன் அடிமனதிலிருந்து உணர்ந்து கொண்டான்.

ஆனால், இந்த வரலாற்றுப் பேழையின் ரகசியங்கள் அவிழ்ந்து கொண்டிருந்த அந்த அமானுஷ்ய நள்ளிரவில், விதியின் நாடகம் அவர்கள் இருவரைத் தாண்டி வேறு ஒரு திசையிலும் தன் வலையைப் பின்னியிருந்தது!

அவர்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த அந்தச் சோழர் மண்டபத்திலிருந்து கொஞ்ச தூரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியின் இருளுக்குள் மறைந்திருந்த இன்னொரு ஜீவன் அவர்கள் பேசுவதை ஒவ்வொன்றாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் குளிர்காற்றிலும், அந்த ஜீவனின் சிவந்த உதடுகளில் ஒரு வஞ்சகமான புன்னகை அரும்பியது.

டீக்கடைக்காரர் உடைத்த ஒவ்வொரு ரகசியமும், அருள்மொழி நாச்சியாரின் கவிதை வரிகளும், சிற்பிகாவின் இருபத்தைந்தாவது வம்சாவளி உண்மையும் அந்த ஜீவனுக்கு உடனுக்குடன் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் ரியான் அல்ல; அவனது சட்டைப் பையில் இருந்த ஒரு சாதாரணப் பேனா!

ஆம்... ரியானின் சட்டைப் பைக்குள் சொருகப்பட்டிருந்த அந்த நவீனப் பேனாவிற்குள் ஒரு நுணுக்கமான, அதிநவீன டிரான்ஸ்மிட்டர் (Transmitter) ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.

ரியானுக்கே தெரியாமல் யாரோ அவனது பையில் திணித்த அந்தப் பேனா, அந்த மண்டபத்தில் ஒலித்த ஒவ்வொரு குரலையும், காற்றின் அசைவையும் சிக்னல்களாக (Signals) மாற்றி, காற்றில் மிதக்கவிட்டு அந்த மூன்றாவது ஜீவனுக்குச் சேர்த்துக் கொண்டே இருந்தது.

காட்டுக்குள் நின்றிருந்த அந்த ஜீவன், தன் காதில் இருந்த மைக்ரோ-இயர்போனை (Micro-earphone) மெல்லத் தொட்டுச் சரிசெய்துகொண்டது.
டிரான்ஸ்மிட்டரில் இருந்து வந்த டீக்கடைக்காரரின் கடைசி வார்த்தைகளைக் கேட்டு முடித்ததும், அந்த ஜீவன் உள்ளுக்குள் இதை விட மகிழ்ச்சியான சேதி வேற எதுவும் இல்ல என சொல்லி கொண்டது.


[Image: Kantara-s-most-interesting-surprise-rukm...th-her.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
சிற்பிகா வெறும் பெண்ணல்ல,
சோழப் பேரரசின் மறக்கப்பட்ட மூச்சு.
அவளது நீண்ட கழுத்தில் அழகு மட்டும் இல்லை,
ஆயிரம் ஆண்டுகள் தாங்கிய அரச கம்பீரம் உறங்குகிறது.

ரியான் முதலில் பார்த்தது ஒரு பெண்ணின் பேரழகை;
ஆனால் கதையின் ஒவ்வொரு படியிலும்
அவன் பார்த்தது—
தன் அகந்தையின் சிதைவைக்.

ஒரு டீக்கடைக்காரரின் வாயிலிருந்து
சரித்திரம் இவ்வளவு உயிரோடு பேசும் போது,
அது வெறும் விளக்கம் இல்லை;
காலம் தானே எழுந்து வந்து
தன் ரகசியத்தை ஒப்புக்கொள்வது போல இருந்தது.

சென்டினல் தீவுவாசிகளை
உலகம் “காட்டுமிராண்டிகள்” என்று பார்த்த நேரத்தில்,
இந்தக் கதை அவர்களை
விசுவாசத்தின் கடைசி காவலர்களாக மாற்றுகிறது.
அவர்கள் காத்தது ஒரு பொக்கிஷத்தை அல்ல—
ஒரு காதலின் கருவை.

அருள்மொழி நாச்சியார்…
அந்தப் பெயரிலேயே ஒரு இசை இருக்கிறது.
அவள் ஓடிவந்த இளவரசி அல்ல;
காதலைத் தோளில் சுமந்து
கடலைக் கடந்த துயரத்தின் தேவதை.

“வயிற்றில் குழந்தையோடு வந்தாள்” என்ற வரியில்
கதை திடீரென வரலாற்றிலிருந்து
இதயத்துக்குள் நுழைகிறது.
அங்கே வாசகர்
வீரத்தை மறந்து
ஒரு பெண்ணின் தனிமையை உணரத் தொடங்குகிறான்.

“Coding தெரிந்தவன்
தன் தாய்மொழியின் ஆதி வடிவத்தைப் படிக்க முடியவில்லை”
என்ற முரண்பாடு
இந்தக் கதையின் மிகப் பெரிய கவிதை.
நவீனத்தின் உச்சியில் நின்ற மனிதன் கூட
தன் வேர்களின் முன்
ஒரு குழந்தையாகிப் போகிறான்.

கதையின் இன்னொரு பலம்—
காமம், காதல், அதிகாரம், மரபு
எல்லாமே ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது.
சென்டினல் இளைஞனின் உள்ளே இருக்கும்
அந்த “ஆதி மிருகம்”
மனிதனின் ஆதிகால இருளை நினைவூட்டுகிறது.

இந்தக் கதை வெறும் புனைகதை அல்ல;
இது வரலாறும், காதலும், மர்மமும்
கடல் உப்பில் நனைந்து எழுதிய
ஒரு தமிழ்க் காவியம்.

சில கதைகள் படிக்கப்படுவதில்லை—
அவை மெதுவாக நம் ரத்தத்துக்குள் கரைகின்றன.
இந்தக் கதை அப்படிப்பட்டது.
[+] 2 users Like Priya99's post
Like Reply
கதையை அருமையாக சொல்லி ஆவலை கூட்டிக்கொண்டே செல்கிறீர்கள். சோழ இளவரசி அருள்மொழி யின் வாரிசு சிற்பிகா என்ற இந்த கதையின் வரலாறும், சோழர்கள் காலத்தில் சென்டிரல் நாட்டு பழங்குடிகளும் அரசர்களை ஏற்று கொண்டு உள்ளனர் என்ற நிஜ வரலாறும் தெரிந்தும் இது இரண்டையும் பொருத்தி பார்க்காமல் சிற்பிகா எப்படி இந்த சென்டினல் தீவிற்கு செல்கிறாள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரியானிற்கு டிஸ்னி இளவரசி கதைகளில் வரும் இளவரசன் போல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அழகாக இருக்கிறது
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply
Super rocking update
[+] 1 user Likes King Kesavan's post
Like Reply
[Image: file-00000000ba88720bbf7f293b3964bc63.png]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
கதையின் ஒவ்வொரு பதிவுகளும் ஆச்சர்யத்தையும் ஆவலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா!!. சிற்பிகாவின் கடைக்கண் பார்வை எப்பொழுது ரியானின் மீது விழுமோ?
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
Super bro cholar kalathuku pona pola irukku
[+] 1 user Likes kingdick's post
Like Reply
Extraordinary update
[+] 1 user Likes Pannikutty Ramasamy's post
Like Reply
sirapana twist revealing update koduthathku migavum nandri nanba...

kadhai padika padika romba interesting agavum anga anga history touches...

arulmozhi entry unexpected but nice linked with the story flow....

arulmozhi ku anu, sreeleela edhum unmai sollitangalo...

adhaium adutha update la varum nenaikren...

nice depth of narration bro... sriapana novel ezuthee engalai entertain panrathu miga periya nandri

intha updates pictures right placements ah iruku bro thanks...

siripika antha kattu paiya kitta mateekuvala illa riyaan kapathuvaanah illa..

kathu oda vaarisu maran oda cousin nice
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)