Romance மை விழி திறந்த கண்ணம்மா
#1
ஒரு வாழ்வியல் கதை.
0.01% கூட காமம் இருக்காது.


அழகுப் பெண்ணின் கார் குழல் போல அந்த இரவு கருமையாக இருந்தது. ஊரில் இருக்கும் கோட்டான்கள் கூட உறங்கியிருக்க தொலைவில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து ஒரு மெல்லிய விசும்பல் சத்தம் மட்டும் காற்றில் அலையாக மிதந்து வந்து கொண்டிருந்தது.


அதே ஊரில் இன்னுமொரு வீட்டில், " ஏங்க அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு கூட இன்னும் முடியலங்க. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. பாவங்க அந்த பொண்ணு. பேசாம நம்ம போலீஸுக்கு சொல்லிடலாமா?" என்று அந்த வீட்டின் பெண்மனி தன் கணவனிடம் கேட்டாள். அந்த சிறுமியின் மீது இருந்த பாசத்தில்தான் தன் மனைவி இப்படி பேசுகின்றாள் என்பது அந்த கணவனுக்கும் தெரியும். இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை.

" முட்டாள்தனமா பேசாத. அவங்க பொண்ணுக்கு அவங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. உனக்கு என்ன வந்திச்சி. இப்போ நம்ம பேசினத யாரும் கேட்டிருந்தா நம்ம உசிரு நம்மகிட்ட இருக்காது. அந்த பொண்ணோட தம்பி காரன் இருக்கான்ல. அவனுக்கு இப்போ வெறும் பன்னிரெண்டு வயசுதான். ஆனா இப்பவே பெரிய ரவுடி மாதிரி ஏதேதோலாம் பண்றான். நம்ம வேலைய பார்த்துக்கிட்டு சும்மா இருக்குறதுதான் நமக்கு சரி" என்று தன் கணவன் கூற அவரை கண்கள் கலங்க அந்த பெண்மனி நோக்கினாள்.

" பாவங்க அந்த மிருகத்துக்கு அவளவிட 15 வயசு ஜாஸ்த்தி. இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயருல அந்த கேடுகெட்டவன் என்னென்ன எல்லாம் பண்ண போறானோ தெரியல. இவன் ஏடாகூடமா ஏதும் பண்ணான்னா அவ செத்துப்போயிடுவா. அதான் ரொம்பவும் பயமா இருக்கு" என்ற தன் மனைவியின் கலக்கத்தை புரிந்து கொண்டான் அந்த கணவன். " நம்ம கையில எதுவுமே இல்லம்மா. ஏதும் பண்றதுன்னா கூட கொஞ்சம் நாள் ஆகும். அதுவரைக்கும் அந்த பொண்ணு உசிரோட இருந்திச்சின்னா ஏதாச்சும் பண்ணுவோம். இப்போ போய் தூங்கு" என்றான்.

பதினைந்து வருடங்களின் பின் அதாவது 2021 இல்..

ரோட்டோர கேயேந்தி பவனில் இசைஞானியின் ' மெளனமான நேரம், இள மனதில் என்ன பாரம்' பாடல் இசைத்துக்கொண்டிருந்தது. கண்களில் எரிச்சலுடனும் மனதில் நாள்பட்ட வலியுடனும் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் வீட்டின் காலிங்க் பெல்லை அடித்தான். மூன்று முறை அடித்தும் யாரும் கதவை திறக்கவில்லை. நான்காவது முறை பெல்லை அழுத்த அவனுக்கு தைரியமும் இல்லை. தனது போனை எடுத்து பார்க்க அது சார்ஜ் இல்லாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அவனுக்கு அந்த ரனமான நேரத்திலும் சிரிப்புத்தான் வந்தது. ' தன்னை விட மற்ற எலோரும் அமைதியாக தூங்குகிறார்கள்' என்ற எண்ணம் அவனை ஒரு பக்கம் வாட்டினாலும் மறுபக்கம் சிரிப்பை வரவழைத்தது. இதற்கு மேலும் இங்கு நிற்பதில் பயனில்லை என நினைத்தவன் அடுத்து என்ன செய்வது என யோசித்த வண்ணம் வீட்டின் வாசல் படியில் இருந்து இறங்கிய அதே சமயம் கதவு திறக்கப்பட்டது.

" ஏண்ணா இப்படி லேட்டா வர. உனக்குத்தான் நம்ம வீட்டு நிலமை தெரியும்ல. தெரிஞ்சிருந்தும் ஏன் இப்படி பண்ற. சரி சரி சத்தம் போடாம உள்ள வா" என்று தன் மீது உள்ள அக்கறையை அவனின் தங்கை ஆனந்தி வெளிக்காட்டிய விதத்திலேயே அவனுக்கு தெரியும் அவன் மீது அவளுக்கு எவ்வளவு அக்கறை என்று.

" சாப்பிட்டியான்னா" என்று ஆனந்தி கேட்டதற்கு ஜீவா அமைதியாக இருப்பதை கண்டவள் அவன் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்பது புரிந்தது. தன் அறைக்குள் அவனை அழைத்து சென்றவள் டேபிளின் அருகில் ஒரு கதிரைய போட்டு அவள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தோசை மற்றும் சட்னி இருந்த பிளேட்டை அவனிடம் கொடுத்தவள் " நீ சாப்பிட்டுகிட்டு இரு, நான் கிட்சன் போய் தண்ணீ எடுத்து வரேன்" என்றாள்.

சத்தமில்லாமல் கிட்சன் சென்ற ஆனந்தி தண்ணீர் எடுத்துகொண்டு தனது அறைக்கு செல்ல முற்பட அங்கு அவளின் சித்தி நின்றுகொண்டிருந்தார். " என்ன உங்க நொண்ணன் வந்துட்டாரா. எந்த ஆபீசுக்கு போய் வேலை முடிச்சிட்டு இப்படி லேட்டா வர்றாரு. வீட்டுல இரண்டு பொண்ணுங்க இருக்காங்க என்ற எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்கா. இன்னைக்கு எவ வீட்டுக்கு போய் கூத்தடிச்சிட்டு வந்திருக்காராம்" என்று கடுகடுத்தாள். அந்த இடத்தில் அவர்களின் சித்தியை ஆனந்தி எதிர்பார்க்கவில்லை. இன்றும் தன் அண்ணனை வார்த்தைகளால் குத்திக்கிழிக்காமல் விடமாட்டார் என்பது அவளுக்கு புரிந்தது.

" இல்ல சித்தி, அண்ணன் ஏதோ ஜாப் விசயமா போயிட்டு வர கொஞ்சம் தாமதமாகிடிச்சாம். வேற ஏதுமில்ல" என்று தட்டுத்தடுமாறி கூற அவளின் சித்தி கோபமாக முறைத்தால். " உங்கண்ணனுக்கு வக்காளத்து வாங்குறத கொஞ்சம் நிறுத்துறியா. அவன் ஒரு ஆளுன்னு. ராத்திரியில அவன் ரூமுக்கு தனியா போகாத. அப்புறமா அவன் தங்கச்சின்னும் பார்க்காம உன்ன ஏதும் பண்ணிடுவான்" என்று கூற ஆனந்திக்கு கண்கள் கண்ணீர் முட்டியது. தனது அறைக்குள் நுழைய அங்கு ஜீவா இல்லாததை கண்ட ஆனந்திக்கு அழுகை வந்தது. கிட்சனில் சித்தி பேசியது கண்டிப்பாக தன் அண்ணனுக்கு கேட்டிருக்கும். எந்த அண்ணனால்தான் தன் தங்கையுடன் இணைத்து பேசுவதை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியும்.

ஜீவா வேலை தேடிக்கொண்டிருக்கும் இருபத்தியேழு வயது இளைஞன். ஆனந்தி இப்போதுதான் காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கின்றாள். இவர்களின் தாய் ஆனந்தி பிறந்ததும் இறக்க தந்தை முருகன் தூரத்து சொந்தத்தில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் இருந்த பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வள்ளி மாற்றான் தாய் பிள்ளைகள் என்று ஜீவா, மற்றும் ஆனந்தி மீது வெறுப்பு எதுவும் காட்டவில்லை. ஆனால் மூன்று வருடங்களின் பின் அவளுக்கு சங்கவி பிறக்க எல்லாமே தலை கீழானது. அப்போதும் கூட வள்ளி இவர்களை கொடுமை எதுவும் படுத்துவதில்லை. ஆனால் ஏனோ தெரியவில்லிஅ ஜீவாவை மட்டும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. 

ஜீவாவுக்கு படிப்பில் பெரிய நாட்டம் எதுவுமில்லை. ஆனால் விளையாட்டு மற்றும் இசையில் ஆர்வம் அதிகம். காலேஜ் முதல் வருடம் ஒரு போட்டிக்காக வெளியூர் சென்ற வேலை தனது சீனியர் மாணவர்களின் வற்புறுத்தலின் பெயரில் காசுக்கு உடலை விற்கும் பெண்ணின் இடத்துக்கு இவர்கள் எல்லோரும் செல்ல, இவர்களின் துரதிஷ்டம் போலீசில் மாட்டிக்கொண்டனர். இதை கேள்விபட்டதும் வள்ளிக்கு சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆனது. அன்றிலிருந்து அவர் ஜீவாவை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். அவன் ஆனந்தி மற்றும் சங்கவியிடம் அன்பாக பேசினால் கூட அவன் மனதை காயப்படுத்தி விடுவார். வார்த்தைகளில் விஷம் வைத்து பேச அவர் என்றுமே தயங்கியதில்லை.

இவை எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் முருகனிடம் இந்த விடயங்கள் எதையும் வள்ளியோ அல்லது ஜீவாவோ கொண்டு சென்றதில்லை. வள்ளிக்கு ஜீவாவின் விடயத்தை முருகனிடம் கொண்டு சென்றால் அது கடைசியில் அவருக்கும் ஜீவாவுக்கும் இடையில் நின்று விடும். அதன் பின் வள்ளியால் ஜீவா விடயத்தில் தலை இட முடியாமல் போகும் என்பதாலேயே தன் கணவனிடம் எதுவும் கூறுவதில்லை. முருகன் மிகவும் கோபக்காரர். ஜீவாவுக்கு தன் தந்தை மீது சிறு வயதில் இருந்தே பயம் அதிகம். அதனாலேயே அவன் அவரிடம் எதுவுமே தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை. தன் சக மாணவர்கள் எல்லாம் அவர்களின் குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக இருப்பதை பார்க்கும் போது அவனுக்கு மனதில் ஒரு ரணம் தோன்றும். இதனாலேயே அவன் கூட படித்த யாருடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதில்லை. 

தன் அறைக்கு வந்த ஜீவா அங்கிருந்த பெட்டி ஒன்றில் வைக்கப்படிருந்த கோப்பைகள்,  பதக்கங்கள் என்பவற்றை தன் கைகளில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். தான் படிக்கும் காலங்களில் விளையாட்டு மற்றும் இசையில் காட்டிய ஆர்வத்தை படிப்பில் காட்டியிருந்தால் இந்நேரத்துக்கு நல்ல ஒரு வேலை கிடைத்து இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு இருக்க முடியும் என்று தோன்றியது. கடவுளின் கணக்குதான் நம் யாருக்கும் தெரியாதே. அந்த கணக்கு தெரிந்தால்தான் நாம் கடவுளுக்கு நிகராக நம்மை நினைத்துவிடுவோம். அன்றைய இரவும் தூங்கா இரவாக மாறிப்போனது ஜீவாவுக்கு.
[+] 1 user Likes me.you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
My dear writer

Under age is not allowed

Pls edit it
 horseride  Cheeta    
Like Reply
#3
' ஹாலி ஏஞ்சல்ஸ்' பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது' என்ற வரவேற்பு பலகையுடன் அந்த பாடசாலை தனது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுடன் பிரம்மாண்டமாக நின்றது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, இதுவரையில் எந்த சேதமோ அல்லது பாரிய பராமரிப்பு செலவுகள் எதுவுமே ஏற்படவில்லை. ஆனால் சுதந்திரத்தின் பின் கட்டப்பட்ட எல்லா கட்டிடங்களுமே பாதி இடிந்தும் அல்லது பாரிய பராமரிப்பு வேலைகளுக்கும் உட்பட்டது என்பது நம் தலைவர்கள் நம் சமூகத்துக்கு ஆற்றிய பங்கை பறைசாற்றியது.


பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித பாட வகுப்பு முடித்து மிகவும் கலைப்புடன் காணப்பட்டனர். பாடசாலை முடிய இன்னும் இரண்டு பாடங்களே இருந்தன. ஆனாலும் அந்த வகுப்பில் ஒரு புத்துனர்ச்சி ஆரம்பமாக தொடங்கியது. காரணம் அடுத்த பாடம் தமிழ் இலக்கியம். பெரும்பான்மையான மாணவர்களுக்கு வேப்பங்காய் போல இருக்கும் தமிழ் இலக்கியம் இந்த பாடசாலையில் மாத்திரம் வேதம் படிப்பது போலாகும். அதற்கு முக்கிய காரணம் சாரதா.

" ஹேய் சைலண்ட் சைலண்ட். சாரதா மிஸ் வர்றாங்க. எல்லோரும் அமைதியா இருங்க" என்று வகுப்பின் மாணவத் தலைவி எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்தாள். அவள் கூறியதும்தான் தாமதம் வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து தங்கள் கைகளில் தமிழ் இலக்கிய புத்தகத்தை **, பகவத் கீதை, பைபிள் போல பய பக்தியுடன் வைத்திருந்தனர்.

யார் இந்த சாரதா? ஐம்பது வயதை அடைந்த தலைமை ஆசிரியரா? இல்லை எல்லா மாணவர்களையும் கண்டிப்புடன் நடத்தும் ஆசிரியையா?

அடர் சிவப்பு நிற ஜாக்கடுக்கு, பச்சை நிற புடவையில் மெரூன் நிறத்தில் பூ வேலைப்பாடு செய்த சேலை அணிந்து, இடை வரை இருக்கும் கூந்தலை அப்படியே கொண்டை இட்டு, கண்களுக்கு லேசான காஜல் பூசி, உதட்டுக்கு உதட்டுச்சாயம் பூசியுள்ளாரா இல்லையா என்று விவாதம் நடத்தும் அளவுக்கு உதட்டு சாயமும் இட்டு பத்தாவது வகுப்பு வந்தார் அந்த சாரதா டீச்சர்.

வகுப்புக்குள் வந்ததுமே எல்லோரும் " காலை வணக்கம் மிஸ்" என்று கூற எல்லோரின் வரவேற்புக்கும் புன்னகையுடன் சேர்த்த ஒரு வணக்கத்தை வைத்தால் அழகு பதுமை சாரதா. அழகுப்பதுமையா? ஆம் அழகுப்பதுமைதான். அவள் அழகு என்பது ஆரவாரம் இல்லாத அமைதியான ஒரு தெளிந்த நீரோடை. அந்த நீரோடையின் அமைதியில் ஒரு தடவை லயித்தவர்கள் அங்கிருந்த நகர விரும்பமாட்டார்கள்.

தமிழ் இலக்கிய ஆசிரியையான அவளை வைத்து அழகுக்கே இலக்கனம் எழுதலாம்.

பத்தாவது படிக்கும் மாணவர்கள் வெறுக்கும் பாடங்களில் ஒன்று தமிழ் இலக்கியம். அதையே இந்த மாணவர்கள் இவ்வளவு பயபக்தியுடன் படிக்க காரணம், சாரதா பழகிய சில நொடிகளிலேயே பல வருட பிணைப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவள். ஆண் மாணவர்கள் மட்டுமன்றி பெண் மாணவிகளும் அவரின் நெருக்கத்துக்குரிய மாணவர்களாகிட வேண்டும் என்று தவம் இருக்கின்றனர்.

கண்களை உருட்டி அவள் பேசும் அழகுக்கு, இவள் இலக்கியம் படிப்பிக்கின்றாலா அல்லது கண்களால் இசை கச்சேரி நடத்துகின்றாலா என்ற சந்தேகம் மனதில் எழாமல் விட்டால்தான் அதிசயம். சிரிக்காமலேயே அவள் கன்னத்தில் குழி விழும். அந்த குழி படுகுழி அல்ல.

எல்லா மலரினிலும் ஒரு வாசம் இருக்கும். ஆனால் மகரந்தம் தாங்கும் மலரில் தனி ஒரு வாசம். எல்லா ஆசிரியருக்கும் ஒரு தாயின் குனம் இருக்கும். சாராதாவின் குனமும் மகரந்த மலரின் வாசம் போல தனியாக தெரியும். அதை உணர்ந்தவர் அதில் இருந்து வெளிவர விரும்பமாட்டார்கள்.

அந்த பாடசாலைக்கே செண்டர் ஆப் அட்றாக்சன் சாரதாதான். அவளின் உடைகளில் அவள் காட்டும் நளினமும், அவள் பேச்சில் இருக்கும் தெளிந்த நேர்மையும் ஆசிரியர்கள் மத்தியில் அவளுக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனாலாயே அந்த பாடசாலையின் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சாரதாவின் அங்கம் அதில் கண்டிப்பாக இருக்கும். ஏதும் போட்டிக்கு அவர்கள் பாடசாலை சென்றால் கூட அதற்கு பொறுப்பாக அவளே செல்வாள். ஒரு சிலர் அறிவை காட்டி தங்களின் இடத்தை உறுதி செய்து கொள்வார்கள். அறிவுடன் சேர்த்து அழகும் இருக்கும் சாரதா சென்றால் அந்த போட்டி நிகழ்வுக்கு வந்த எல்லோருமே சாராதாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

தனது வென்சிற்பி பற்கலை காட்டி புன்னகைத்தவள் " என்ன எல்லோரும் ரொம்ப டயர்டா இருக்கீங்க போல இருக்கு. வேணும்னா இன்னைக்கு கிளாஸ் எடுக்காம விடட்டுமா?" என்று கேட்க வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் ஒருமித்த குரலில்  " இல்லை மிஸ், இன்னைக்கு படிக்கலாம்" என்று கூறினர். வகுப்பில் இருந்த ஒரு மாணவன் மட்டும் " மிஸ், இன்னைக்கு சினிமா பாட்டு பத்தி படிக்கலாமா?" என்று கேட்க அவளது முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது.

அதென்ன்ன இலக்கிய வகுப்பில் சினிமா பாடல் என்று குழப்பமாக உள்ளதா. நறுமுகையே, கண்ணா மூச்சி ஏனடா, மலர்களை கேட்டேன் வனமே தந்தனை, நல்லை அல்லை போன்ற பாடல்கள் எல்லாம் தமிழ் இலக்கியத்துக்குள் வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. சாரதா எப்போதுமே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுபவர். மதியத்துக்கு மேல் இருக்கும் வகுப்பு என்றால் இப்படியான சுவாரசியம் மிக்க வகையில் வகுப்பை எடுத்து மாணவர்களின் கவனம் பாடத்தில் இருந்து திசை திரும்பாமல் பார்த்துக்கொள்வார். இன்று கடைசிக்கு முதல் நேர பாடம் என்பதால் அவளுக்கு இந்த பாடல் வகுப்புத்தான் சரியாக பொருந்தும் என்று தோன்றியது.

இன்றைய பாடமாக ' கண்ணாமூச்சி ஏனடா' பாடலையும் அந்த பாடலுக்கான பொருளும், பாரதியை பற்றியும், பாரதி கண்ணம்மா என் காதலியை எப்படி எழுதினார் என்பது பற்றி பல சுவாரசியமான தகவல்களை சாரதா தனக்கே உரிய அழகிய பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார். பாடம் மிகவும் கலகலப்பாக போய்கொண்டிருந்தது. 

" மிஸ் உங்கள பிரின்ஸ்பால் மீட்டிங்க் ரூமுக்கு வர சொன்னாரு" என்று ப்யூன் கூற சாரதாவும் வகுப்பை பத்து நிமிடங்கள் முன்னராகவே முடித்துக்கொண்டாள். பொதுவாக ஆசிரியர்கள் தங்களது பாடத்துக்கு வராமல் போனாலோ அல்லது வழமையான நேரதை விட முன்னதாக முடித்துக்கொண்டாலோ மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால் சாரதாவின் வகுப்பில் அது எதிர்மாற்றமாக இருக்கும். சாரதாவின் பாடசாலைக்கு வரவில்லை என்றாலோ அல்லது ஏதாவது காரணத்துக்காக அவரின் பாட நேரத்தின் அளவு குறைந்தாலோ மாணவர்களுக்கு மிகவும் கவலையாகி போகும். மற்ற ஆசிரியர்கள் எப்போதும் இவளை கேலி செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக வித்யா. " என்ன சாரதா, உன் கிளாஸ்னு சொன்னா மட்டும் பசங்க மட்டுமில்லாம பொண்ணுங்க கூட ரொம்ப எக்சைட் ஆகிடுறாங்க. டீச்சர் கொஞ்சம் அழகா இருந்தா ஆம்பள பசங்க சந்தோசப்படுறது நியாயம். அதுக்காக பொம்பள பிள்ளைங்களும் ஆர்வமா இருக்குறதுலாம் ரொம்ப ஓவர்பா" என்று அடிக்கடி கலாய்ப்பாள். இப்படியான கேலிகளை நேரடியாக தொடுப்பவள் வித்யா ஒருத்திதான்.

ஆறு வருடங்களின் முன் சாரதாவும் வித்யாவும் ஒரே நேரத்திலேயே இந்த பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தனர். பழகிய கொஞ்ச நாட்களிலேயே சாரதாவும் வித்யாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். சாரதா தமிழ் இலக்கியம் என்றால் வித்யா கணிதம். வித்யா மிகவும் கெட்டிக்காரிதான். ஆனால் கோபம் அதிகம் வரும். கோபம் அதிகம் உள்ள ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்கனிதானே.  

" சார் நீங்க கூப்பிட்டிங்கன்னு ப்யூன் சொன்னாங்க. என்ன விசயம் சார்" என்று கேட்க பிரின்ஸிபல் அவளை கதிரையில் அமருமாறு சைகை செய்தார். " சாரதா, நம்ம ஸ்கூலுக்கு PT பாடத்துக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம். ஒரு வேலைக்கு நூத்தி நாப்பது விண்ணப்பங்கள் வந்திருக்கு. இதுல இருந்து ஐந்து பேர மட்டும் கடைசி இண்டர்வியூவுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன். அதனால பைனல் காண்டிடேட்ஸ முடிவு பண்ற வேலைய உங்ககிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன். வேணும்னா நீங்க வித்யாவோட ஹெல்ப்பையும் எடுத்துக்கோங்க. ஆனா எனக்கு பைனல் லிஸ்ட் அடுத்த வாரமே வேணும்" என்று கூற அவளும் காண்டிடேட்ஸின் ரெஸ்யூமி அடங்கிய fபைலை வாங்க்கிக்கொண்டு நடக்க ஒரு ரெஸ்யூமி மட்டும் கீழே விழுந்தது. அதை கையில் எடுத்து பார்க்க " ஜீவானந்தம்" என்றிருந்தது.
[+] 2 users Like me.you's post
Like Reply
#4
Very good
Like Reply




Users browsing this thread: