Posts: 418
Threads: 0
Likes Received: 172 in 145 posts
Likes Given: 70
Joined: Oct 2022
Reputation:
1
its nice to see 2 authors complementing each others..
Msiva & Mandothari
Posts: 280
Threads: 10
Likes Received: 1,100 in 198 posts
Likes Given: 2
Joined: Jul 2025
Reputation:
10
இரண்டு நாட்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.. இப்போ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கிறார்.. விரைவில் டிஸ்சார்ஜ்.. இந்த தளத்தில் கமெண்ட் செய்து வரும் நண்பர்கள் omprakash மற்றும் arun zuneth இருவரும் நிதி உதவி செய்து இருந்தார்கள்.. அவர்களுக்கு மிக்க நன்றி.. இனி அப்டேட் வரும்.. ஆனால் சில வாரம் ஆகலாம்
Posts: 1,070
Threads: 0
Likes Received: 429 in 381 posts
Likes Given: 2,010
Joined: Mar 2024
Reputation:
2
Appa va pathukonga nanba . Story ah appuram eluthalam . Appa mukkiyam nanba .
•
Posts: 280
Threads: 10
Likes Received: 1,100 in 198 posts
Likes Given: 2
Joined: Jul 2025
Reputation:
10
எல்லோருக்கும் வணக்கம். அப்பா நலமுடன் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னாடியே அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூப்பிட்டு வந்து விட்டோம்.. மாத்திரைகள் ஒழுங்காக சாப்பிடுவதால். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.. அடுத்த வாரம் முதல் என்னுடைய கதைகளுக்கு வரிசையாக அப்டேட் வரும்... அப்பா குணமடைய வேண்டிய நண்பர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்
Posts: 72
Threads: 0
Likes Received: 51 in 38 posts
Likes Given: 1,524
Joined: Jul 2024
Reputation:
0
firstly see your family firstly and if no tension from family only anybody can do anything freely without any tension and father important in everyone's life so see completely after come for story. In this site only looking for update and how is going story and why going this type only that type of comments come and really some person you mention will great to help in timely was really good and thanks to share your difficult time.
Posts: 280
Threads: 10
Likes Received: 1,100 in 198 posts
Likes Given: 2
Joined: Jul 2025
Reputation:
10
12-01-2026, 01:09 PM
(This post was last modified: 12-01-2026, 05:29 PM by Msiva03021985. Edited 1 time in total. Edited 1 time in total.)
வீட்ல வந்து புனிதா டைரி தேடுகிறாள்
டாக்டர் போன் போட்டு ஹாஸ்பிடல் வர சொல்கிறார்
கிளம்பி ஹாஸ்பிடல் செல்கிறாள். கையில் டைரி வைத்து கொண்டு
அங்க மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது
என்ன இவ்ளோ கூட்டம் என்று யோசிச்சு கொண்டு செல்கிறாள்
அங்க ஊர் தலைவர் புனிதாவை பார்த்து அம்மா என்று கும்பிடுகிறார்
இவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியல திரும்பி மக்களை பார்க்கிறாள்
அவர்களும் இவளை கும்பிடுகிறார்கள்
இவளுக்கு உடம்பு புல்லரித்து போனது. யாரு இவுங்க என்ன ஏன் கும்பிடனும் என்று யோசிச்சு கொண்டு இருக்கும் போது
ஊர் தலைவர் : அம்மா நீங்க இத்தனை வருஷம் எங்க மா இருந்திங்க?
புனிதா : நீங்க எல்லாம் யாரு.. எனக்கு ஏதும் புரியல.. என்னை ஏன் கும்பிடுறீங்க? நான் சின்ன பொண்ணு
ஊர் தலைவர் : நீங்க தான் எங்களுக்கு பார்வதி அம்மன். அட்மிட் ஆகி டிரீட்மென்ட் எடுக்கிறாரே. அவர் எங்க சிவன் மா என்று கடவுள் மாதிரி சொன்னார் என்ன மா ஆச்சு உங்களுக்கு? அந்த அரக்கன் ரஞ்சித் இருக்கானா. இல்ல செத்துட்டானா?
புனிதா : எந்த ரஞ்சித்? யாரு அவன். அவன் தான் இவரை இப்படி பண்ணிட்டானா.?
ஊர் தலைவர் : யாரு ரஞ்சித் வந்து சாமியை என்ன செய்ய முடியும்.. உங்க புருஷன் யாரு தெரியுமா? 50 யானை வந்தாலும் எதிர்த்து நிக்குற சிங்கம் மா. அவரை என்ன செய்ய முடியும்.. அவருக்கு இப்படி ஆகி இருக்குன்னா. கண்டிப்பா இவர் சுயநினைவுல இருக்கம் போது நடந்து இருக்காது.. அவரை பத்தி எங்கள விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்..
புனிதா : ஐயா வணக்கம்.. எனக்கு என்ன நடந்தது சொல்றிங்களா? இவரை எப்படி நான் கல்யாணம் செஞ்சேன் எல்லாம் சொல்றிங்களா.. எனக்கு எதுவும் நியாபகம் இல்லயே
ஊர் தலைவர் : என்ன மா இப்படி சொல்றிங்க.? உங்க அப்பா அம்மா வுக்கு எல்லாம் தெரியுமே.. அவுங்களும் உங்க கூட தான் இருந்தாங்க..
புனிதா : கோவத்தின் உச்சிக்கு சென்றாள்.. அப்படினா எல்லாம் என் அப்பா அம்மக்கு தெரிஞ்சி இருக்கு.. என்று யோசிச்சு விட்டு ஒரு நிமிஷம் ஐயா என்று போன் எடுத்து அவ அப்பா க்கு போன் போட்டாள்.. எடுத்த உடனே கோவம் பட்டு எல்லாம் கேட்டாள்
புனிதா அப்பா : இது எல்லாம் இப்போ கேக்காத மா.. இதுக்கு அப்பறம் அங்க இருக்க வேண்டாம்.. கிளம்பி வந்துரு.. இல்லனா உன் உசுருக்கே ஆபத்து இருக்கு மா
புனிதா,: ஹாஸ்பிடல் சாக கிடக்கிறது என் புருஷன்.. அவரை இப்படியே விட்டுட்டு என்னால வர முடியாது.. நீங்களும் சரி அம்மாவும் சரி என்கிட்ட நிறைய விஷயம் மறைச்சு இருக்கீங்க.. அவருக்கு என்ன நடந்தது எனக்கு என்ன நடந்தது.. இப்போ இங்க இருக்கிற ஊர் மக்கள் எல்லாமே யாரு.. அவருக்கு யாரு தீங்கு விளைவிச்சு இருக்கா.. அதுக்கு எல்லாம் நான் பதிலடி கொடுக்க வேண்டாம்.. என்ன செய்வீங்களோ ஏழு செய்வீர்களோ எனக்கு தெரியாது நீங்களும் அம்மாவும் கிளம்பி இங்க வர்றீங்க.. அவ்வளவுதான் சொல்லிவிட்டு போனை துண்டித்தான். ஊர் பெரியவரிடம் சென்று.. ஐயா உங்ககிட்ட நிறைய பேசணும்.. நான் யாரு அவரு யாரு எங்க ரெண்டு பேருக்கும் எப்படி கல்யாணம் நடந்தது.. அவர் ஏன் இப்படி இருக்காரு.. எல்லா விவரமும் எனக்கு தெரியணும்.. ஒன்னு விடாம எல்லாமே சொல்லுங்கையா
ஊர் தலைவர் : உங்க புருஷன் இங்க இருக்கும்போது.. யாரும் எதுவும் செய்யல.. அதுக்கு அப்புறம் தான் இவர் எங்கேயோ கிளம்பி போனாரு.. போனதுக்கு அப்புறம் தான் எல்லாமே நடந்திருக்கு..
புனிதா : ஒருவேளை இவரோட அம்மாவா இருப்பாளோ.. இல்லன்னா இவரோட வருங்கால பொண்டாட்டியா இருப்பாளோ. இல்லன்னா இவரோட மாமியார.. இவரோட கொழுந்தியா.. யாரால இவருக்கு ஆபத்து வந்து இருக்கும்.. ஊர் தலைவர் சொல்றத வச்சு பார்த்தா கண்டிப்பா இவர் சுய நினைவில் இருக்கும் போது இவருக்கு எந்த ஆபத்து வந்து இருக்காது.. ஏதோ மருந்து கொடுத்து இருக்கணும் இல்ல மாத்திரை கொடுத்து இருக்கணும்.. எல்லாத்தையும் கண்டுபிடிப்போம்.. என்று மனதில் நினைத்துக் கொண்டு.. ஐயா இவரோட பர்சனல் டைரி என்கிட்ட இருக்கு.. எல்லாத்தையும் நான் அதுல படிச்சு தெரிஞ்சுக்கிறேன்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில எப்படி பிரிவு வந்துச்சு.. நீங்க எங்கள சாமியா நினைக்கிற அளவுக்கு நாங்க என்ன செஞ்சோம்.. எல்லாமே எனக்கு சொல்லுங்க ஐயா
ஊர் தலைவர் : சொல்றேம்மா எல்லாமே சொல்றேன்.. என்று நடந்த உண்மை சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார்..
நீண்ட நாட்கள் கழித்து இந்த கதைக்கு ஒரு சின்ன அப்டேட் போட்டு இருக்கிறேன்.. இனி புவனா கதையும் இந்தக் கதையும் வாரத்திற்கு ஒரு அப்டேட் பெரிய அப்டேட் ஆக வரும்
Posts: 892
Threads: 8
Likes Received: 2,946 in 594 posts
Likes Given: 2,121
Joined: Jun 2025
Reputation:
26
டைரி தேடும் புனிதா
டாக்டர் போன்
ஊர் தலைவர்
பார்வதி அம்மா
அரக்கன் ரஞ்சித்
50 யானை எதிர்த்த சிங்கிள் சிங்கம்
நியாபகம் இல்லை
புனிதாவின் கோபம்
உசுருக்கு ஆபத்து
நான் யார் ? அவர் யார் ?
அம்மா - வருங்கால பொண்டாட்டி - மாமியார் - கொழுந்தியா
யாரால் ஆபத்து ?
மருந்து
தலைவர் சொன்ன பிளாஸ் பேக்
ப்ரோ கதை பட்டைய கிளப்புது ப்ரோ
செம சஸ்பென்ஸ்
தலைவர் சொல்ல போகும் கதையில் தான் இந்த கதையின் மெயின் பாயிண்ட்டே இருக்க போகிறது என்று நினைக்கிறேன்
நன்றி ப்ரோ
•