Posts: 461
Threads: 3
Likes Received: 298 in 241 posts
Likes Given: 470
Joined: Oct 2022
Reputation:
9
கெடுவான் கேடு நினைப்பான் என்பது குமார் விஷயத்தில் நடந்து விட்டது.
நிவேதா அடுத்து என்ன செய்யப் போகிறாள் யார் மூலம் அவளுக்கு எய்ட்ஸ் வந்தது நண்பா
•
Posts: 280
Threads: 10
Likes Received: 1,114 in 198 posts
Likes Given: 2
Joined: Jul 2025
Reputation:
10
கவிதா : அடுத்த என்ன செய்யப் போறீங்க.. கொஞ்ச நாளைக்கு எதுவும் செய்ய வேண்டாமே.. உடம்பு பாத்துக்கோங்க
ஆனந்த் : நான் சொல்றதை மட்டும் நீங்க செய்யுங்கள் ப்ளீஸ்.. சொல்லிவிட்டு.. ஒரு சில விஷயங்கள் சொன்னான்..
கவிதா : இது சரி வருமா.. நம்ம செய்றது தப்பு தானே..
ஆனந்த் : ஒரு நல்லவங்களுக்கு செஞ்சா தப்பு இவளுக்கு செய்யறது தப்பு இல்ல.. ப்ளீஸ் எனக்காக இதை செய்யுங்க..
கவிதா: சரி சரி செய்றேன்.கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.... சொல்லிவிட்டு ஃபோன் எடுத்து ஒருத்தனுக்கு பேசினாள்.. சந்தேகமே வராத அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.... ஓகே நான் இப்ப பணத்தை அனுப்புறேன்.. பேசிவிட்டு போனை வைத்தாள்..
நிவேதா: : வீட்டில் சந்தோசமாக இருந்தால்.. ஆனந்த வீடு நமக்கு.. இப்ப குமாருடைய பெரிய பங்களா அதுவும் எனக்கு.. ஆனந்துக்கு இன்சூரன்ஸ் பணம் மூணு கோடி வருமே.. முக்கியமாக அவனை கொல்வதற்கு ஒரே காரணம் இன்சூரன்ஸ் பணம்தான்.. அதற்காகத்தான் அவன் கொல்லவே செஞ்சேன்.. குமாரக்காகத்தான் ஆனந்த கொன்னேன்னு அவன் நினைச்சுகிட்டு இருக்கான்.. குமாருக்கு தெரியாத ஒன்னு.. நான் சின்ன வயசுல பட்ட கஷ்டம்.. ஒவ்வொரு நாளும் பணத்துக்கு நான் பிச்சை எடுக்காத குறையா தான் இருந்தேன்.. அதான் பணத்துக்கு மேல ஒரு வெறி.. போதாதுக்கு ஆனந்த் வேற இன்சுரன்ஸ் பண்ணி இருக்கான்.. அந்தத் தகவல் லேட்டா தான் எனக்கு தெரிஞ்சது.. அதான் அவனையே போட்டு தள்ளிட்டேன்.. குமாருக்கு சொத்து இருக்கு ஆனா அவனுக்கு திறமை கிடையாது.. எனக்கு பணம் பணம் மட்டும் தான் எனக்கு வேணும்.. என்று அவன் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தால்.. அப்பவே காலிங் பெல் சத்தம் கேட்டது
கதவைத் திறந்து பார்த்தால் வெளியே ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் கூடவே ஒரு ஆபிசர் நின்று இருந்தார்கள்.. மேடம் உள்ள வரலாமா..
நீங்க யாரு
இன்சூரன்ஸ் இருந்து வந்திருக்கோம்.. உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் வந்து இருக்கு.. ஆனந்த் அவருக்கு உண்டான பணம்.. மூன்று கோடி உங்கள தான் நாமினியா போட்டு இருந்தாரு..
நிவேதா: உடனே அழுவது போல் நடித்தால்.. கடவுள் ஏன் தான் இப்படி செய்கிறாரோ.. கடவுள் இந்த மாதிரி நல்லவங்கள உடனே கூப்பிட்டுக்கிறார்.. அதுக்காக இந்த சின்ன வயசுல ஆனந்து சாகனுமா..
இன்சூரன்ஸ் ஆபீஸர் : விடுங்க அம்மா விடுங்க.. எனக்கு நேரம் ஆகுது பணம் வாங்கிட்டீங்களா நாங்க கிளம்புவோம்
நிவேதா: கண்ணீரைத் துடைத்து விட்டு வாங்க சார் உள்ள வந்து உட்காருங்க..
இன்சூரன்ஸ் ஆபீஸர் : இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க.. அவளும் கையெழுத்து போட்டால் மூன்று கோடி பணம் நிவேதா கையில் ஒப்படைக்கப்பட்டது..
நிவேதா: தேங்க்ஸ் நானும் என் குழந்தையும் தனியா இருந்தோம் எங்களுக்குன்னு யாருமே இல்ல.. கடவுள் தான் இந்த மாதிரி பணம் கொடுத்து உதவி இருக்கார்.. ஆனந்த் ஆனந்த் என்று மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்..
இன்சூரன்ஸ் ஆபீஸர் : கவலைப்படாதீங்க மேடம் இன்னொரு லைஃப் உங்களுக்கு வரும்.. அதுல நல்லபடியா வாழ்வீங்க சந்தோஷமா இருங்க.. சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்..
நிவேதா: கண்ணீரை சிரித்துக்கொண்டே துடைத்தான்.. ஆனந்த் நீ செத்து எனக்கு மூணு கோடி பணம் கொடுத்து இருக்க டா.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா உன்னைய என்னைக்கு நான் கொன்னு இருப்பேன்.. எப்பவும் ஒன்னு கெட்டுப் போகல எனக்கு தேவை பணம்.. அது கிடைச்சிடுச்சு.. என்று சந்தோசமாக இருந்தால்..
ஆனந்த்: கவிதா நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டீங்களா
கவிதா: செஞ்சிட்டேன் நீங்க சொன்ன மாதிரியே டூப்ளிகேட் இன்சூரன்ஸ் ஆபீஸர் மாதிரி ஆட்களை அனுப்பி பணம் கொடுத்துட்டேன்.. ஆமா எதுக்கு இப்படி செய்றீங்க
ஆனந்த்: எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.. அப்படியே நீங்க இன்னொரு முறை செய்யணும்..
கவிதா : முதல்ல எண்ணிய வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க.. கவிதா அண்ணன் பெயர் சொல்லியே கூப்பிடுங்க.. நான் உங்களை விட ரெண்டு வயசு மூணு வயசு சின்ன பொண்ணு தான்
ஆனந்த்: முதல்ல இப்படித்தான் வரும் போகப் போக பாத்துக்குறேன்.. சொல்லிவிட்டு ஒரு நம்பர் கொடுத்தான்.. இவங்களுக்கு போன் போட்டு.. நான் சொன்னது மாதிரி செய்ங்க..
கவிதா : அந்த நம்பர் வாங்கி.. ஆனந்த் சொன்ன அறிவுரைகளை அந்த நம்பருக்கு போன் போட்டு பேசினால்.. பேசிவிட்டு போனை வைத்தாள்.. சொல்லிட்டேன் ஆமா அது யாரு எதுக்காக அப்படி செய்ய சொன்னீங்க..
ஆனந்த்: இதுக்கும் காரணம் இருக்கு.. ஒரே வாரத்துல உங்களுக்கு புரியும்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு..
நிவேதா: அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் இருமல்.. உடம்பு வலி... இன்னும் ஒரு சில ஜாதிகள் சேர்ந்து இருந்தது.. வீட்டில் யாருமே இல்லை தனியாக இருந்தால்.. மயக்கம் அடைந்து இருந்தால்..
அருகில் குடியிருந்த சுசிலா எதர்ச்சியாக நீங்க தான் வீட்டிற்கு வரும்போது.. நிவேதா கட்டில் இருந்து கீழே கிடப்பதை பார்த்த.. அவள் உடனே ஹாஸ்பிடல் கூப்பிட்டு சென்றாள்.. அங்கு நிவேதாவுக்கு நிறைய பரிசோதனைகள் செய்த பிறகு..
டாக்டர்: ஆமா அவங்க உங்களுக்கு என்ன வேணும்
சுசீலா : ரொம்ப வருஷமா எங்க பக்கத்து வீட்டிலே இருக்கிறோம் ரெண்டு பேரும் நல்லா பழக்கம்.. ஏன் சார் என்ன ஆச்சு
டாக்டர்: அவர்களுக்கு எச் ஐ வி வைரஸ் இருக்கு.. அவர்களுக்கு எய்ட்ஸ் வந்திருக்கு
சுசீலா : என்ன சார் சொல்றீங்க எப்படி இதெல்லாம் நடந்திருக்கும்.. அந்தப் பொண்ணு
டாக்டர்: நான் உங்ககிட்ட சொல்லணும்.. அந்தப் பொண்ணு வீட்டுக்கு யார் எல்லாம் அடிக்கடி வருவார்.. ஹஸ்பண்ட் என்ன ஆனார்
சுசீலா : வெளியூர் போன இடத்துல.. கடத்தல் கும்பல் அவனை கடத்திட்டு போய் கொன்னுட்டாங்க அதான் கேள்விப்பட்டேன்.. அவன் நல்ல மனுஷன் எங்க போனான்னே தெரியல.. சில பேரு இறந்துட்டான் சொல்றாங்க சில பேரு உயிரோட இருக்குறாங்கன்னு சொல்றாங்க.. எதை நான் நம்பனும் என்றே தெரியவில்லை..
டாக்டர்: இவங்களுக்கு ராங் கனெக்சன் நிறைய இருந்திருக்கு.. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இந்தப் பொண்ணு உடலுறவு வச்சிருக்காங்க.. அதனால இவங்களுக்கு வந்து இருக்கு.. இனிமேல் இவங்க இங்கதான் இருக்க முடியும்..
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது போலீஸ் வந்தார்கள்..
போலீஸ்: சார் குட் மார்னிங் சார்.. நிவேதா எப்படி இருக்காங்க.. என்ன ஸ்டேட்டஸ்
டாக்டர்: எதுக்கு சார் என்ன பிரச்சனை நீங்க ஏன் கேக்குறீங்க
போலீஸ்: அந்தப் பொண்ணு அவங்களோட புருஷனை கொள்ள முயற்சி பண்ணி இருக்காங்க.. இந்த பொண்ணோட தங்கச்சி கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க.. இவர்களுக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் கிடைச்சிருக்கு.. அதான் அவங்கள அரெஸ்ட் பண்ண வந்தோம்..
டாக்டர்: தாராளமா அவன் கூட்டிட்டு போங்க பட்.. அவங்களுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கு.. அவங்க கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுக்கணும்.. நீதிபதிய இங்க கூட்டிட்டு வாங்க.. இங்க வச்சு அவங்களுக்கு உண்டான தண்டனையை நீங்க கொடுக்கலாம்.. ஆனால் இவர்களுக்கு டிரீட்மென்ட் தேவைப்படுது..
போலீஸ் : ஓகே சார் நீங்க சொன்ன மாதிரியே நான் எல்லாம் செஞ்சிட்டு வரோம்.. போலீஸ் கிளம்பி சென்றார்கள்..
இரண்டு மணி நேரம் கழித்து.
ஆனந்த் ஹாஸ்பிடல் வந்தான்..
நேராக நிவேதா இருக்கும் பெட் அருகில் உட்கார்ந்து கொண்டான்.. அருகில் கவிதா கழுத்தில் தாலியோடு இருந்தால்..
நிவேதா: இருவரையும் பார்த்து கண்கலங்கினால்.. அவளால் எதுவுமே பேச முடியவில்லை.. முகம் வாடி போய் இருந்தது..
ஆனந்த்: என்ன நிவேதா எப்படி இருக்க.. என்னடா செத்தவன் உயிரோட இருக்கிறானே அப்படி யோசிக்கிறியா.. நான் உயிரோட வாழணும்ங்கறது விதி.. அதுவும் இவங்கள மாதிரி ஒரு நல்லவங்க கூட வாழனும்ங்கறது விதி.. கடவுள் எங்களை சேர்த்து வைத்து விட்டார்.. ஆமா உனக்கு ஏன் இப்படி ஆயிருச்சு அது உனக்கு தெரியவில்லை அப்படித்தானே
நிவேதா: கணவனை பார்த்துக்கொண்டு இருந்தால்.. நீ என்ன சொல்ற எதுவுமே எனக்கு புரியல..
ஆனந்த்: புரியாத உனக்கு தான் எதுவுமே புரியாதே.. ஒருத்தங்க மேல உண்மையா அன்பு வைக்க தெரியாது.. துரோகம் பண்ண தெரியும்.. அவங்க கொல்வதற்கு எந்த எல்லைக்கும் போக தெரியும்.. பணம் பணத்துக்காக என்னையவே கொல்ல துணிஞ்சிட்ட இல்ல நீ... அதற்காக உன்னை நான் சும்மா விட மாட்டேன்.. அதுக்கு தாண்டி உனக்கு வெச்சேன் ஆப்பு.. இப்ப உனக்கு எய்ட்ஸ் வந்திருக்கு அதுக்கு காரணம் யார் தெரியுமா.. இட்ஸ் மீ.. நான் தான் நானே தான்..
நிவேதா: டேய் என்னடா சொல்ற.. இருமல் எருமைக் கொண்டு சொன்னான்..
ஆனந்த்: ரெண்டு வாரத்துக்கு முன்னாடி.. உன்கிட்ட மதி அப்படிங்கற ஒருத்தன் உனக்கு பழக்கம் ஆயிருப்பானே.. பெரிய கோடீஸ்வரனா இருப்பானே.. பணம் தான் முக்கியம்னு அவன் கூட நீ உன்னையே கொடுத்து இருப்பியே.. அவன் வேற யாரும் இல்ல.. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருத்தன்... நாங்க செய்றது சட்டத்துக்கு புறம்பான விஷயம் தான்.. ஆனா உனக்கு தண்டனை கொடுக்கணுமே.. அதுக்காக நான் எந்த எல்லைக்கும் துணிஞ்சிட்டேன்.. அதான் எய்ட்ஸ் நோயாளி ஒருத்தனுக்கு பணத்தை அள்ளி கொடுத்து.. ஹாஸ்பிடல்ல இருந்து வெளியே கடத்தினோம்.. அவன ஒரு பெரிய கோடீஸ்வரனா ஆக்குனோம்.. எல்லாமே இவங்களோட பணம் தான்.. என்று கவிதாவை காண்பித்தான்..
இவங்க யார் தெரியுமா.. என்னுடைய உண்மையான மனைவி... எப்பவுமே எனக்காகவே வாழக்கூடிய மனைவி.. இப்ப வரைக்கும் இவங்க நான் பெயர் சொல்லி கூப்பிடவே கிடையாது.. மரியாதை கொடுத்து தான் நான் பேசிட்டு இருக்கேன்.. உன்ன பாக்குறதுக்கு முன்னாடி இவங்க எனக்கு கிடைச்சிருந்தா.. கண்டிப்பா நான் நல்லா இருந்திருப்பேன்.. கடவுள் புண்ணியத்துல நாங்க சந்தோஷமா வாழ்ந்து இருப்போம்.. உன்ன மாதிரி ஒரு கேடுகெட்ட நாயே.. பார்க்கவே கூடாது.... இன்னைக்கு இல்ல என்னைக்குமே பார்க்க கூடாது.. இங்கேயே கிடந்து சாவடி.. வாங்க கவிதா போகலாம்..
. ஒரு வாரங்கள் கழித்து..
விக்ரம் ராதிகா திருமணம் நடந்தது..
கவிதா ஆனந்த ஏற்கனவே உள்ள ஒரு மகன் போதும் என்று கவிதா.. சொல்லிவிட்டாள்.. அதுவும் என் குழந்தை தாங்க.. இன்னொரு குழந்தை இப்ப வரைக்கும் வேண்டாம் என்று கவிதா உறுதியாக சொல்லிவிட்டதால்.. நிவேதாக்கு பிறந்த ஆண் குழந்தையை கவிதா தங்கம் போல பார்த்துக் கொண்டாள்..
நிவேதாவின் உடல்நிலை மோசமாகி விட்டது....
இந்த கதை கர்நாடகாவில் 2007 வருடத்தில் நடந்தது.. இப்போ
கதையில் மற்றும் நிஜ கதாபாத்திரங்கள்
ஆனந்த் - சுப்பிரமணியன்
குமார் - ஜேம்ஸ்
நிவேதா : விஜயலட்சுமி..
கவிதா - பாத்திமா சுப்பிரமணியன் உண்மையான உயிர் தோழி.. அவளையே திருமணம் செய்து கொண்டான்..
குமார் அம்மாவை ஆனந்த் தத்தெடுத்துக் கொண்டு.. அவர்கள் கூட இனிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறான்..
ராதிகா கதாபாத்திரம் கற்பனை..
சுபம்
.
.
Posts: 477
Threads: 0
Likes Received: 209 in 175 posts
Likes Given: 286
Joined: Aug 2019
Reputation:
2
Disai mariya paravai sethu pocheeeeeeeee
•
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,849 in 5,158 posts
Likes Given: 18,886
Joined: May 2019
Reputation:
34
அருமையான கதைக்கு நன்றி நண்பா
•