19-10-2024, 08:42 AM
Excelent update
|
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
|
19-10-2024, 08:42 AM
Excelent update
19-10-2024, 01:15 PM
Awesome bro
19-10-2024, 05:41 PM
Super Update NANBA
19-10-2024, 07:40 PM
செம சூப்பர் கதை ரொம்ப நல்லா இருக்கு
19-10-2024, 11:09 PM
Comment போட்ட அனைவருக்கும் நன்றி.நாளை அடுத்த பதிவு வரும்..
20-10-2024, 03:02 PM
(18-10-2024, 10:17 PM)rameshsurya84 Wrote: SUPER UPDATE. ARULMOZHI WITH ILANGO IS A MAGICAL ONE. Thank you bro (19-10-2024, 02:45 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி நன்றி நண்பா (19-10-2024, 08:42 AM)Gajakidost Wrote: Excelent update Thank you bro (19-10-2024, 01:15 PM)Sarran Raj Wrote: Awesome bro Thank you bro (19-10-2024, 05:41 PM)rameshsurya84 Wrote: Super Update NANBA நன்றி நண்பா (19-10-2024, 07:40 PM)rkasso Wrote: செம சூப்பர் கதை ரொம்ப நல்லா இருக்கு Thank you very much bro,தொடர்ந்து ஆதரவு கொடுங்க
20-10-2024, 03:03 PM
(This post was last modified: 20-10-2024, 03:04 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-10-2024, 07:50 AM)krishkj Wrote: Rohini kadhal oru thalai anathu pola Thanks for your comment bro..இளங்கோவை ரோஹிணி எதற்காக கொல்ல சொல்கிறாள் அடுத்தடுத்த பாகங்களில் வெளிவரும் ப்ரோ.
20-10-2024, 03:12 PM
பாகம் - 142
மன்னர் காலம் "அருள்மொழி" என்று கத்திய திசையை நோக்கி பார்க்க அங்கே ராஜேந்திர சோழன் நின்று கொண்டு இருந்தார். "தந்தையே..!"என்று அருள்மொழி சட்டென்று இளங்கோவிடம் இருந்து விலகினாள். "ரெண்டு பேரும் உடனே என் பின்னே வாருங்கள்.."என ராஜேந்திர சோழன் உத்தரவிட,அவர்கள் இருவரும் அவர் பின்னாடி சென்றனர்.ஆனால் போகும் பொழுது அருள்மொழி, என்ன நடந்தாலும் சரி இனி ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என,இளங்கோவின் கரம் பிடித்து கைகோர்த்து நடந்தாள். என்றாவது ஒருநாள் தன் காதலை தந்தைக்கு தெரியப்படுத்த தானே வேண்டும்.அது இன்று தானாகவே தெரிந்து விட்டது. .இதற்கு மேல் என்ன பேச வேண்டும் என போகும் வழியில் மனதில் ஒத்திகை பார்த்து கொண்டாள். மந்திராலோசனை நடைபெறும் இடத்திற்கு வந்த ராஜேந்திர சோழன் அங்கிருக்கும் அனைவரையும் வெளியேற சொன்னார்.அருள்மொழியை பார்க்க அவள் உறுதியாக இளங்கோவின் கரத்தை பிடித்து இருப்பதை பார்த்தார்.அது நீங்கள் என்ன சொன்னாலும் நான் இளங்கோவை தான் மணம் முடிப்பேன் என்று அவருக்கு உணர்த்தியது. ராஜேந்திர சோழன் அமர்ந்து,அவர்களையும் உட்கார சொன்னார். அருள்மொழியை பார்த்து,"மகளே..!உன்னை நரேந்திரனுக்கு மணம் முடிக்க வாக்கு தந்து உள்ளதை நீ அறிவாய் அல்லவா..!"என கேட்டார். அருள்மொழி கம்பீரமாக சற்றும் தளராமல்"ம்..அறிவேன் தந்தையே..!ஆனால் அது என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் தாங்களே எடுத்த முடிவு..இதில் எனக்கு சற்றும் விருப்பம் இல்லை.நான் இளங்கோவை தான் விரும்புகிறேன்.அவரை தான் மணம் முடிப்பேன்.."என்று உறுதியாக சொன்னாள். ராஜேந்திர சோழன் எத்தனை ராஜ தந்திரங்களை கையாண்டு கங்கை வரை சென்று வெற்றி கொண்டவர் ஆயிறவராயிற்றே..!அவ்வளவு எளிதில் தன் முயற்சியை கைவிட்டு விடுவாரா..!மேலும் தன் செல்ல மகள் அருள்மொழியிடம் அதட்டி தன் காரியத்தை சாதிக்க முடியாது என அவருக்கு தெரியும்.அதனால் அவர் குரலை உயர்த்தாமல் மென்மையாகவே "அருள்மொழி..!நீ ஷத்ரிய வம்சத்தை சேர்ந்தவள்..நம் நாட்டுக்கு எது நலனோ அதை செய்ய கடமைப்பட்டவள்.தெற்கே நமக்கு எதிரி பாண்டியர்கள் எந்நேரமும் நம்மீது தாக்குதல் நடத்த காத்து இருக்கின்றனர்.மேற்கே சேர நாடும் நம்மிடம் நட்பு பாராட்டவில்லை.வடக்கே நம்மிடம் நட்பாக இருப்பது வேங்கி நாடு மட்டும் தான். முப்புறமும் நாம் எதிரிகளை சம்பாதிப்பது நம் நாட்டுக்கு அழிவை தான் தரும்.மேலும் வடக்கில் கன்னட தேசத்தில் இருந்து படை எடுத்து வரும் ஹொய்சாளர்கள் மற்றும் ராஜகூட அரசிடம் நம் நாட்டை பாதுகாக்க ஒரு அரண் தேவை.அது தான் வேங்கி நாடு.மாமன்னன் என் தந்தை ராஜ ராஜ சோழனே,வேங்கி நாடு நட்பு வேண்டும் என்று தான் தன் இரண்டாம் மனைவியாக அந்த நாட்டு இளவரசி வீரமா தேவியை திருமணம் செய்து கொண்டார்.இது போன்ற திருமணங்கள் அரசியல் வாழ்வில் இன்றியமையாதது..உன் மூலம் வேங்கி நாட்டுடன் இன்னும் நட்பை பலமாக்கி கொள்ள நான் விரும்புகிறேன். நம் நாட்டின் நலனை காக்க ஒரு சில தியாகங்களை அரச குடும்பத்தினர் செய்து தான் ஆக வேண்டும்.நீ உன் காதலை மறப்பது இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய தியாகம்..இது உன் கடமையும் கூட "என்று ராஜேந்திர சோழன் சொல்ல, அருள்மொழி உடனே,"தந்தையே..!எனக்கும் இந்த நாடு மீதும்,இந்த நாட்டு மக்களின் மீதும் அக்கறை உள்ளது.ராஜாங்க ரீதியாக நம் படையின் பலத்தையும் நான் அறிவேன்.நீங்கள் நினைப்பது போல பாண்டிய நாடு இப்போ இல்லை.அது நம் அரசோடு இணைக்கப்பட்டு விட்டது.சேரநாடு நம் மீது போர் தொடுக்கும் அளவுக்கு பலமில்லை.வடக்கே இருந்து ஆபத்து வந்தால் அதை தவிடு பொடியாக்கும் அளவுக்கு நம் படை வலுவாக உள்ளது.எனக்கு நரேந்திரன் உடன் திருமணம் நடந்தால் சோழ நாட்டுக்கு எந்த நன்மையும் விளைய போவது இல்லை.மாறாக என் வாழ்வில் துன்பம் தான் வந்து சேரும்.." "நான் சொல்வதை நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை அருள்மொழி,உன்னை விட நான் அனுபவம் வாய்ந்தவன்.வேங்கி நாடும், ஹொய்சாளர்கள், ராஜகூட மன்னர்கள் சேர்ந்து கூட்டணி போட்டு வந்தால் நமக்கு பெரிய இழப்பு ஏற்படும் புரிந்து கொள்.." "நான் இந்த திருமணத்திற்கு மறுத்தால் நம் நட்பு நாடான வேங்கி நாடு நமக்கு எதிரியாகி விடுமா..என்ன..!இது அவர்கள் இளவரசி வீரமாதேவி மகாராணியாக வாழ்ந்த தேசம்.நீங்கள் பேசுவது மிக வேடிக்கையாக இருக்கிறது தந்தையே..மேலும் ஹொய்சாளர்கள் மற்றும் ராஜகூட மன்னர்களிடத்தில் இருந்து வேங்கி நாட்டுக்கு தான் ஆபத்து அதிகம்.ஏனெனில் அவர்களுக்கு அருகிலேயே தான் எதிரிகள் இருக்கிறார்கள்.நம் நட்பை வேங்கி நாடு முறித்து கொண்டால் முதலில் ஆபத்துக்கு உள்ளாக போவது என்னவோ வேங்கி நாடு தான்.." ராஜேந்திர சோழன் தன் மகளிடம் பேச முடியாமல் திணறினார்.அருள்மொழி தன் காதலுக்காக தன் தந்தையிடம் வாதாடி கொண்டு இருந்தாள்.இளங்கோ எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். கடைசியில் "இங்கே பார் அருள்மொழி,எனக்கு உன் மேல் பாசம் அதிகம்.அதனால் தான் என் அப்பாவின் பெயரான அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழன்)பெயரை அருள்மொழி என உனக்கு வைத்தேன்.உன் நலன் மற்றும் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.தயவு கூர்ந்து என் பேச்சை கேள்."என கெஞ்சினார். அருள்மொழி எதற்கும் மசியவில்லை.தன் காதலில் உறுதியாக இருந்தாள். "உலகமே வியக்கும் தஞ்சையில் ஈசனுக்கு பெரிய கோவில் எடுத்த என் பாட்டன் அருள்மொழி பெயரை தாங்கிய என்ற உரிமையில் நானும் சொல்கிறேன் தந்தையே..!என்னால் இளங்கோவை தவிர வேறு யாரையும் மனதில் வரிக்க இயலாது.."என உறுதியாகக் கூறினாள். இவளிடம் இதற்கு மேல் பேசி ஒன்றும் ஆக போவது இல்லை என ராஜேந்திர சோழன் உணர்ந்து கொண்டு இளங்கோவை பார்த்து,"ஈழத்து போரில் உன் வீரதீர சாகசத்தை நேரில் பார்த்து மெய் சிலிர்த்து போனேன் இளங்கோ..நிச்சயமாக உன் வீரத்திற்கு இந்த சோழ நாட்டையே கொடுத்தால் கூட தகும்.நீயும் சரி,உன் முன்னோர்களும் சரி இந்த சோழ நாட்டிற்காக ஏகப்பட்ட தியாகங்களை செய்து இருக்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் என் அன்னை வானதி கூட கொடும்பாளூர் இளவரசி என்று உனக்கு தெரியும் தானே.."என கேட்டார். "ஆமாம்" என்று இளங்கோ தலை அசைத்தான். "என் வம்சாவளியிலேயே என் மகளுக்கு நல்ல வரன் இருக்கும் பொழுது நான் ஏன் இன்னொரு நாட்டில் வரனை தேட வேண்டும் சொல் இளங்கோ..!காரணம் என் மகளை போல இந்த நாட்டு மக்களையும் நேசிக்கிறேன்.வேங்கி நாட்டுக்கு என் மகளை தாரை வார்த்து கொடுப்பதன் மூலம் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.என்னை போல சோழ நாட்டை நேசிக்கும் நீ என் கருத்தை புரிந்து கொள்வாய் என நம்புகிறேன்.."என ராஜேந்திர சோழன் சொன்னார். ராஜேந்திர சோழன் சொற்கள் அருள்மொழியிடம் எடுபடவில்லை.ஆனால் இளங்கோவிடம் எடுபட்டது. உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தான்."மன்னிக்கவும் மன்னவா..!நான் இந்த சோழ நாட்டுக்கு பெரிய தவறை இழைத்து பெரும் பழிசொல்லுக்கு ஆளாகி இருப்பேன்..என் முன்னோர்கள் இந்த சோழ நாட்டுக்காக செய்த தியாகங்கள் எல்லாம் என் சுயநலத்திற்காக வீணாய் போய் இருக்கும்.தாங்கள் சரியான சமயத்தில் என் தவறை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.எங்கள் குலத்திற்கு தன் நலனை விட இந்த நாட்டின் நலனே பெரிது.அதுவும் மன்னரின் கட்டளையை எங்கள் கொடும்பாளூர் வம்சம் மீறியதே கிடையாது.என்னை மன்னித்து விடு அருள்மொழி..!"என பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு செல்ல,"இளங்கோ நில்லு..."என அருள்மொழி கத்தினாள். ஆனால் இளங்கோ நிற்காமல் சென்று விட,அவளது கோபம் தன் தந்தையின் மீது திரும்பியது.."நீங்கள் சாமர்த்தியசாலி தான் தந்தையே..!உங்கள் ராஜதந்திரத்தை என்னிடமே காட்டி விட்டீர்கள் அல்லவா..!என்ன நடந்தாலும் இளங்கோ என்னை மறுத்தாலும் சரி,இளங்கோவை தவிர வேறு யாரையும் நான் மணம் முடிக்க விட்டேன்.."என அவள் அழுது கொண்டே தன் அறையை நோக்கி ஓடி சென்றாள்.. அழுது அழுது அவள் கன்னங்கள் வீங்கி இருக்க அவள் அறையில்,"அழாதீர்கள் தேவி...உங்களுக்கு உதவவே நாங்கள் வந்து உள்ளோம்" என்ற குரல் கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என அருள்மொழி சுற்றும் முற்றும் பார்க்க யாரும் கண்ணுக்கு தெரியவில்லை.. "நாங்கள் உங்கள் கண்களுக்கு புலப்பட மாட்டோம் தேவி.உண்மையாக காதலிப்போரை சேர்த்து வைக்க இறைவனால் படைக்கப்பட்ட தேவதைகள் நாங்கள்..."என இப்போ இன்னொரு குரல் கேட்டது.. பேசியது அனு மற்றும் லிகிதா தான்.. அருள்மொழி உள்ளூர மகிழ்ந்து,"தாங்கள் யார்..!எனக்கு நீங்கள் உதவி செய்ய வந்த காரணம் என்ன..!"என கேட்டாள்.. "அது தான் சொன்னோமே தேவி..உங்களை இளங்கோவிடம் சேர்த்து வைக்க நாங்கள் வந்து உள்ளோம்..நாங்கள் காதல் தேவதைகள்.."என்று அவர்கள் கூறினாலும் அருள்மொழி முகம் இன்னமும் சோகத்தில் தான் இருந்தது.. "நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்தது எனக்கு மகிழ்ச்சி தான்..ஆனால் இளங்கோ என் தந்தை பேச்சை மீறி நடப்பது இல்லை.அதனால் எங்கள் காதல் கைகூடுவது அசாத்தியமே..!"என வருத்தமாக அருள்மொழி சொல்ல, "தங்களுடன் இளங்கோவை மணம் முடிக்க உங்கள் தந்தையே ஒப்புக்கொண்டால்...!"என அனு பொடி வைத்து பேசினாள்.. "அது எப்படி சாத்தியம்..?என விழிகளை துடைத்து கொண்டு அருள்மொழி கேட்டாள்.. "உங்கள் தந்தை ஒருவர் பேச்சை மட்டும் தட்டவே மாட்டார்.அது யார் என்று கூறுங்கள்..!என லிகிதா கேட்டாள். "எனக்கு நினைவு தெரிந்து என் தந்தை ஒருவர் பேச்சை மட்டும் மீறவே மாட்டார்.அவர் தான் என் பாட்டி வீரமா தேவி..என் தந்தையை வளர்த்த அன்னை.பெற்ற அன்னை வானதியை விட,வளர்த்த அன்னை வீரமா தேவியிடம் தான் என் தந்தைக்கு பாசம் அதிகம்.அவர் மட்டும் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.."என அருள்மொழி முகம் சோகமானது.. "சரியாக சொன்னீங்க தேவி அருள்மொழி..!உங்கள் பாட்டியார் வார்த்தைக்கு தான் தங்கள் தந்தை கட்டுபடுவார்.உலகிலேயே தன்னை வளர்த்த அன்னைக்கு கோவில் எழுப்பிய ஒரே மன்னர் தங்கள் தந்தை தான்.அந்த கோவிலுக்கு வந்து தங்கள் திருமணம் பற்றி மலர் உத்தரவு கேட்க சொல்லுங்கள்.மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.."என அனு சொல்ல அருள்மொழி முகம் பிரகாசம் அடைந்தது.. "இந்த திட்டம் கண்டிப்பா பலன் அளிக்கும்.நான் உடனே என் தந்தையை அங்கே கூட்டி வருகிறேன்.."என்று அருள்மொழி துள்ளி ஓடினாள். அனு லிகிதாவிடம்,"லிகிதா..!எனக்கு ஒரு சந்தேகம்..நம்மால் கோவிலுக்குள் நுழைய முடியாதே..!என்ன செய்வது?"என கேட்டாள். அதற்கு லிகிதா.."ராஜேந்திர சோழன் தன் அன்னைக்கு சமாதி இருந்த இடத்தில் தான் கோவிலை எழுப்பி உள்ளார்.அது மற்ற கோவில்கள் போல அல்ல.அங்கு எந்திர தகடுகள் ஏதும் இல்லை.சமாதி மேல் லிங்கம் மட்டுமே உள்ளது.அதனால் நம்மால் எளிதாக உள்ளே நுழைந்து அருள்மொழி,இளங்கோவை சேர்த்து வைக்க உதவ முடியும்" என்று லிகிதா கூறினாள்.. என்ன தான் மன்னரின் சொல்லை ஏற்று இளங்கோ வந்து விட்டாலும் அருள்மொழியை நினைத்து மிக வருத்தமுடன் நந்தவனத்தில் அமர்ந்து இருந்தான்.அவனை நோக்கி வீரர்கள் ஓடோடி வந்தனர். உங்களை பேரரசர் உடனே அவர் அன்னையின் கோவிலுக்கு அழைத்து வர சொன்னார்கள்..என சொல்ல,இளங்கோ தன் குதிரையில் தாவி அமர்ந்தான்.குதிரை வாயு வேகத்தில் பறந்தது..அங்கு போய் சேருவதற்குள் அங்கே ராஜேந்திர சோழன், தன் மனைவி,மகள் அருள்மொழி உடன் இருந்தார்.போதாகுறைக்கு அங்கே நரேந்திரனும் இருந்தான். "வா இளங்கோ..உனக்காக தான் காத்து இருக்கிறோம்..அருள்மொழி உனக்காக வாதாடி என்னை இங்கே வரவழைத்து உள்ளாள்.இங்கே என் அன்னையிடம் வாக்கு உத்தரவு கேட்க உள்ளோம்.அதில் என்ன மலர் உத்தரவு வருகிறதோ அம்முடிவுக்கு அருள்மொழி கட்டுப்படுவதாக உறுதி அளித்து உள்ளாள்.எனக்கும் என் அன்னையின் வாக்கே பிரதானம்.மேலும் என் வளர்ப்பு அன்னை வேங்கி நாட்டை சேர்ந்தவர் தான்.அதனால் இம்முடிவை ஏற்று கொள்வதில் நரேந்திரனுக்கும் எந்த தடையும் இல்லை என கூறி விட்டான்.இப்பொழுது உத்தரவு கேட்க போகிறாம்.வேங்கி நாட்டில் விளையும் செங்காந்தள் மலர் வந்தால் அருள்மொழி நரேந்திரனுக்கு..கொடும்பாளூரில் அதிகமாக விளையும் கடம்ப மலர் வந்தால் அருள்மொழி உனக்கு சம்மதமா.."என கேட்டார். "மன்னர் எந்த முடிவு எடுத்தாலும் சரி" என்று இளங்கோ கூற,இரு மலர்களும் ஒரே மாதிரியான பட்டு துணியில் வைத்து பட்டுநூல் கொண்டு சுற்றப்பட்டது.ஒரு வெள்ளி குடத்தில் அந்த பட்டுத்துணிகள் போடப்பட்டு வீரமா தேவியின் சமாதி முன் வைக்கப்பட்டது.. அருள்மொழி கண்ணை மூடி வேண்டி கொண்டு இருக்க,அனுவும்,லிகிதாவும் ஆவி ரூபத்தில் தங்கள் காரியத்தை நிறைவேற்ற அங்கே தயாராக இருந்தனர்.ஒரு குழந்தை வரவழைக்கப்பட்டு அதில் ஏதாவது ஒரு பட்டுத்துணி சுருளை எடுக்க சொல்ல,அந்த குழந்தை ஓடிவந்து ஒரு சுருளை எடுத்து கொடுத்து விட்டு தன் அம்மாவிடம் ஓடிவிட்டது. பூசாரி எடுத்து பிரித்து பார்க்க,வந்தது கடம்ப மலர் தான்.அருள்மொழிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.உடனே ஓடிவந்து தன் தந்தையின் காலில் விழுந்தாள்.இளங்கோவும் வந்து மன்னரின் காலில் விழ,அவர்கள் இருவரையும் மன்னர் எழுப்பினார். அப்பொழுது அங்கே எல்லோர் முன்பும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.சமாதி மேலே இருந்த லிங்கத்திற்கு ரெண்டு மலர்மாலைகள் சார்த்தபட்டு இருந்தது.அந்த மலர்மாலைகள் தானாக அந்தரத்தில் எழும்பியது.அந்த மாலைகள் தானாக பறந்து வந்து அருள்மொழி மற்றும் இளங்கோ கழுத்தில் விழுந்து விட்டது.அதை எடுத்து வந்து போட்டது அனு மற்றும் லிகிதா தான்.அவர்கள் உருவம் யாருக்கும் தெரியவில்லை.அதனால் அது அந்தரத்தில் பறந்து வந்தது போல மற்றவர் கண்களுக்கு தெரிந்தது. தன் கழுத்தில் விழுந்த மாலையை அருள்மொழி மற்றும் இளங்கோ அனிச்சையாக மாற்றி கொண்டனர். நடந்த அதிசயத்தை பார்த்து ராஜேந்திர சோழன் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்று விட்டார். அவர் இருவரிடமும்,"நான் மலர் உத்தரவு மட்டும் வந்தால் போதும் என நினைத்தேன்.ஆனால் மலர் மாலையை கொடுத்து உங்களுக்கு திருமணமும் என் அன்னை செய்து விட்டார்.இதற்கு மேல் உங்கள் இருவருக்கு செய்யப்படும் விவாகம் ஊரார் காண்பதற்காக மட்டுமே..என் அன்னைக்கு நீங்கள் இருவர் வாழ்க்கையில் இணைவது தான் முழு விருப்பம் போல..எனக்கும் இதில் முழு சம்மதம்.வாருங்கள் அரண்மனைக்கு செல்வோம்"என்று அழைத்து சென்றார். அருள்மொழி மனதுக்குள்,தேவதைகளான அனு மற்றும் லிகிதாவிற்கு நன்றி சொன்னாள். "அப்பாடா ரொம்ப சந்தோசம்..நாம் வந்த வேலை முடிந்தது,நாம் நம் காலத்திற்கு திரும்பி செல்லலாமா.."அனு கேட்டாள். "பாதி வேலை தான் முடிந்து உள்ளது அனு..!இவர்கள் இருவரும் உடலால் இணைந்தால் மட்டுமே நாம் வந்த வேலை முடியும்.." "அது தான் திருமணம் முடிந்து விட்டதே..லிக்கி..!இன்று எப்படியும் முதல்இரவு நடந்துவிடும்.பிறகு தான் நமக்கு பிரச்சினை இல்லையே..!" "அனு,இப்போ நடந்தது திருமணம் என்றாலும்,முறையான திருமணம் பட்டாபிஷேகம் முடிந்த பின் நடைபெறும்.அதற்கு பிறகு தான் முதல் ராத்திரி வைப்பார்கள்.ஆனால் அதற்குள் காத்தவராயன் வந்து இளங்கோவை கொன்று விடுவான்.அப்படி நடந்தால் நாம் இங்கே வந்தது வேஸ்ட் ஆகி விடும்.அதனால் அதற்குள் நாம் அருள்மொழி மற்றும் இளங்கோவை உடலாலும் இணைத்து வைத்த பிறகே நம் வேலை முடிவுறும்.."என லிகிதா சொன்னாள். "அப்போ இவர்களை இணைப்பது எப்படி லிக்கி.."அனு கேட்க, "நாளை இரவுக்குள் ஏதாவது வழி கிடைக்கும் அனு..!என நம்புகிறேன்..நாளை மறுநாள் காத்தவராயன் வந்து விடுவான்,அதற்குள் நம் காரியத்தை செவ்வனே முடித்து விட்டு நம் காலத்திற்கு செல்ல வேண்டும்.." "எனக்கு இளங்கோ இறப்பதில் சற்றும் உடன்பாடு இல்லை லிக்கி..பாவம் அருள்மொழி எவ்வளவு துயரப்படுவாள்.."அனு வருத்தப்பட.. "இளங்கோ இறந்து விட்டான் என்ற மதமதப்பில் காத்தவராயன் இருந்தால் மட்டுமே அவனை அழிக்க நிகழ்காலத்தில் நாம் சில காரியங்களை சாதிக்க முடியும் அனு.இல்லாவிட்டால் அவன் வந்து எல்லா காரியத்தையும் கெடுத்து விடுவான்.அதற்காக தான் நாம் இளங்கோவின் இறப்பை தடுக்க போவது இல்லை.காத்தவராயன் செய்யும் பாவங்களுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும்,முதலுமாக ஒருநாள் நாம் திருப்பி கொடுக்க தான் போகிறோம் கவலைப்படாதே..!என லிகிதா ஆறுதல் சொன்னாள். லிகிதா மனதுக்குள்,"மாறன் செய்த செயல் சரி தான்.ஒருவேளை ஆராதனா இங்கு வந்து இருந்தால் என் பேச்சை கேட்டு இருக்கவே மாட்டாள்.அனுவை என்னுடன் அனுப்பிய முடிவு சரி தான்.மாறாக ஆராதனா காத்தவராயனுடன் சண்டையிட்டு இளங்கோவை காப்பாற்றவே செயல்பட்டு இருப்பாள்.அது எல்லா காரியத்தையும் கெடுத்து இருக்கும்..மாறா நீ எடுத்த முடிவு சரி தான்"என நினைத்து கொண்டாள்.. ![]() நிகழ் காலம் ஆனால் நிகழ்காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை லிகிதா மற்றும் அனுவின் உடலில் மூலிகையை உள்ளங்காலில் தேய்க்க வேண்டும்.ஆனால் மூலிகையை தேய்க்க வேண்டிய மாறன் அங்கே இல்லை.அவன் இரவு உணவு சம்பாதித்து கொண்டு திரும்பி வரும் பொழுது ஒரு குழியில் விழுந்து இருந்தான்.கூடவே காமினியும்..அவர்கள் இருவரும் குழியில் இருந்து வெளியே வர,உதவிக்கு கூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள். "அய்யோ இந்நேரம் லிகிதா மற்றும் அனு உள்ளங்காலில் மூலிகையை தேய்க்க வேண்டுமே..!இப்போ என்ன செய்வது"என புலம்பி கொண்டு இருந்தான். "அப்படி தேய்க்கவில்லை என்றால் என்ன நடக்கும் சாமி"என காமினி கேட்டாள். "அவர்கள் இருவர் உடம்பு உஷ்ணம் குறைந்து சில்லிட்டு விட்டால் மீண்டும் அவர்கள் மேனி அவர்களுக்கு கிடைக்காது காமினி.. என் குருநாதர் எப்பவும் எனக்கு ஏதாவது ஒரு வழியில் வந்து என்னிடம் தொடர்பு கொள்வார்.அதாவது கனவில் அல்லது ஏதாவது ஒரு ஊடகம் வழியாக.அப்படி நானும் என் குருநாதரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.ஆனால் எனக்கு பயிற்சி பத்தவில்லை.அதனால் என்னால் அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..இப்போ என்ன செய்வேன்.."என்று புலம்பினான். லிகிதா மற்றும் அனு உடம்பு சில்லிட ஆரம்பித்தது.அதே நேரம் பிரியங்காவை இன்னொரு பரிணாமம் மூலம் அடைய காத்தவராயன் அடுத்த திட்டத்தை வகுத்து கொண்டு அவளை நோக்கி சென்றான்.
20-10-2024, 03:49 PM
மிகவும் அற்புதமான நீண்ட பதிவுக்கு நன்றி நண்பா. அருள்மொழி மற்றும் இளங்கோ காதலை சேர்த்து வைத்த காம தேவதை அனு மற்றும் ஆராதானாவின் செயல் அற்பதம். இரு காதலர்களும் சேர்ந்தது பற்றி படிக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சின்ன சந்தேகம் நண்பா. ஒருவேளை அனு தன் உடலை இழக்கும் நிலை ஏற்பட்டால் காத்தவராயன், அறிவு மற்றும் குண்டலகேசி மூவரும் எப்படி அனுவை அவள் சொந்த உடலோடு ஆசை தீர தங்களின் காம பசியை தீர்த்து கொள்வார்கள்? ஒரு வேளை அனு ஆன்மா வேறு உடலோடு இணைந்து மூவருடன் அது நடந்தால் அது நன்றாக இருக்காதே. தயவு செய்து இந்த யோசனை தங்களுக்கு இருந்தால் அதை விடுக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா. நன்றி.
20-10-2024, 03:59 PM
(20-10-2024, 03:49 PM)rameshsurya84 Wrote: மிகவும் அற்புதமான நீண்ட பதிவுக்கு நன்றி நண்பா. அருள்மொழி மற்றும் இளங்கோ காதலை சேர்த்து வைத்த காம தேவதை அனு மற்றும் ஆராதானாவின் செயல் அற்பதம். இரு காதலர்களும் சேர்ந்தது பற்றி படிக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சின்ன சந்தேகம் நண்பா. ஒருவேளை அனு தன் உடலை இழக்கும் நிலை ஏற்பட்டால் காத்தவராயன், அறிவு மற்றும் குண்டலகேசி மூவரும் எப்படி அனுவை அவள் சொந்த உடலோடு ஆசை தீர தங்களின் காம பசியை தீர்த்து கொள்வார்கள்? ஒரு வேளை அனு ஆன்மா வேறு உடலோடு இணைந்து மூவருடன் அது நடந்தால் அது நன்றாக இருக்காதே. தயவு செய்து இந்த யோசனை தங்களுக்கு இருந்தால் அதை விடுக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா. நன்றி. அனு மற்றும் லிகிதா சொந்த உடலை இழந்தால் அடுத்து கதையே இல்லையே நண்பா..பிறகு அவர்கள் எப்படி காத்தவராயனை பழிவாங்க முடியும்?காத்தவராயன் காலம் time trvael செய்யும் பொழுது நால்வரும் தங்கள் உடலோடு தான் time travel செய்ய வேண்டும்
20-10-2024, 10:00 PM
Ilango character kolla poringla nalla poetu irunthchu ipdi oru move
Feel negativity avanku ilango vera orthan nenachee konnutu potumaey Rajendran chola varalaruh kalandha kadhai kalam vera level Anu and likitha ku sudu eraah enna panna poringa terilae Nice twist and turns move அன்புடன் கிருஷ் KJ
20-10-2024, 10:22 PM
மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
21-10-2024, 03:56 AM
21-10-2024, 11:44 AM
(This post was last modified: 21-10-2024, 11:55 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த கதை ஒரு கற்பனை கதை.மன்னர் காலத்தையும்,நாம் வாழும் நிகழ் காலத்தையும் இணைத்து புனையப்பட்ட கதை. :shy: இதுவரை 142 பாகங்கள் வெளிவந்து உள்ளது.நடந்த வரை இந்த கதை சுருக்கமாக பார்ப்போம்.
காத்தவராயன் மாயமலையின் அரசன்.அரக்கர் வம்சாவளியில் இந்திரஜித் மரபணு கொண்டவன்.அதனால் அவனை அழிப்பது எளிது அல்ல.அது மட்டுமல்லாமல் அவன் காளி தேவியை உபாசித்து பல வரங்களை பெற்றவன் அவன். மகேந்திரபுரி நாட்டின் இளவரசி மதிவதனி.வில் வித்தையில் சிறந்தவள்.பல அஸ்திர சஸ்திரங்களை கற்று தேர்ந்தவள் அவள். அவளை வில் வித்தையில் வீழ்த்த தரணியில் யாரும் கிடையாது.ஒரு சமயம் காத்தவராயன் மகன் மகேந்திரபுரி மீது படையெடுத்து வர,அவன் மதிவதனியால் கொடூரமாக கொல்லப்படுகிறான்.மகனின் இறப்புக்கு பழிவாங்க மாறுவேடத்தில் மகேந்திரபுரிக்குள் நுழையும் காத்தவராயன் மதிவதனியின் அழகில் மயங்கி அவளை அடைய துடிக்கிறான்.அதற்காக அவளை மாயமலை நோக்கி படையெடுத்து வர செய்து வில் வித்தையில் அவளை வெல்ல முடியாது என தெரிந்து கொண்டு தந்திரமாக அவளை சிறை பிடித்து செல்கிறான்.அதே தந்திரத்தை கடைபிடித்து அவளை பஞ்சணையிலும் வீழ்த்தி அவளுடன் பலமுறை உறவு கொள்ள அவள்,அவன் கருவை சுமக்க நேரிடுகிறது.ஆனால் சாகாவரம் கிடைக்க தன் குழந்தையையே அவன் பலி கொடுக்க எத்தனிக்க,அதை மதிவதனி யுத்தம் செய்து தடுக்கிறாள்.நடந்த யுத்தத்தில் மதிவதனி,காத்தவராயனை கொன்றாலும் அவன் பெற்ற வரங்களால் அவனோட ஆவி முழுமையாக அவன் உடலை நீங்கவில்லை. மீண்டும் தன் உடலை பெற சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவன் ஆவி காத்து இருக்கிறது.இதை அறிந்த மதிவதனி அவனை முழுமையாக அழிக்க தவம் செய்ய காட்டுக்கு செல்கிறாள்.மேலும் காத்தவராயன்,மற்றும் மதிவதனிக்கு பிறந்த வாரிசின் காதலி விலாசினியையும் காத்தவராயன் ஆவி அவன் மகன் உடலிலேயே புகுந்து அனுபவித்து விடுகிறது.இதனால் விலாசினி சகோச்சி எனும் யட்சியாக உருவெடுக்கிறாள். மரமாக மாறி தவம் செய்த மதிவதனி,ஒரே சமயத்தில் நிகழ் காலத்தில் ஆராதனா,அனு, லிகிதா,பிரியங்கா என நான்கு பேராக மறுபிறப்பு எடுக்கிறாள்.இதில் ஆராதனாவே மாயமலைக்கு சென்று கட்டுக்குள் இருந்த காத்தவராயன் விடுபட காரணமாகி விடுகிறாள்.இதனால் காத்தவராயன் ஆவி ராமகோபாலன் உடலில் புகுந்து ஆராதனாவை ஆசைதீர அனுபவிக்கிறது.பிறகு மதிவதனியின் இன்னொரு பிறப்பான அனுவையும் அறிவு என்பவன் உடலில் புகுந்து அனுபவிக்கிறது.மூன்றாவதாக லிகிதாவையும் கஜா என்பவன் உடம்பில் புகுந்து அனுபவிக்கிறது.மேலும் யார் உடம்பில் புகுந்து காத்தவராயன் அனுபவிக்கிறானோ,அவர்களையும் அவன் சிறைப்பிடிக்கிறான்.காரணம் அவர்களை கொன்று யாகம் வளர்த்து தன் உடலை பெற முயற்சி செய்யும் எண்ணத்தினால் அவன் சிறைப்பிடிக்கிறான்.இன்னும் அவன் பிரியங்காவை தொட வேண்டும்.ஆனால் அவளை தொட யட்சியான சகோச்சி தடையாக இருக்கிறாள்..பிரியங்காவை தொடுவதற்காக உடலையும் காத்தவராயன் தேர்ந்தெடுத்து விட்டான்.அவன் தான் காளிங்கன் என்ற பிரகாஷ்.. காளிங்கனும் ஒரு பெண் பித்தன் தான்.அதனால் அபர்ணாவை அவன் அனுபவிக்க கேட்க,காத்தவராயனும் அதற்கு வழிவகை செய்ய,அபர்ணா காளிங்கனிடம் சிக்கி கற்பை பறி கொடுத்து விட்டாள்.இப்பொழுது பிரியங்காவை அனுபவிக்க காத்தவராயன் முயற்சி செய்யும் அதே நேரத்தில் லிகிதா மற்றும் அனு, அழிந்த காத்தவராயன் வம்சத்தை உயிர்ப்பிக்க சோழர் காலத்திற்கு பயணம் செய்கிறார்கள்.ஏனெனில் காத்தவராயன் வம்சத்தின் உதவி நிகழ்காலத்தில் அவர்களுக்கு தேவைப்படுகிறது. காத்தவராயன் மூவரையும் அனுபவித்து,அனுபவித்த உடலுக்கு சொந்தக்காரர்களையும் சிறைப்பிடித்து வைத்து உள்ளான்.இன்னும் ஒருவர் மட்டுமே பாக்கி.அவரையும் தேர்ந்தெடுத்து விட்டு பிரியங்காவை அனுபவிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.பிரியங்காவை மட்டும் அனுபவித்து விட்டால் நாலாவதாக காளிங்கனையும் சிறை பிடித்து அமாவாசை அன்று பலி கொடுத்து விட்டு அவனோட வைரம் பாய்ந்த மேனி அவனுக்கு கிடைத்து விடும்.அதற்கு பிறகு அவனை அழிக்கவே இயலாது.காத்தவராயனை முற்றிலும் அழிக்க தான் மதிவதனியும் நால்வராக பிறப்பு எடுத்து உள்ளாள்.அவனுடன் உடல் உறவு கொண்டு அவனிடம் இருந்தே சக்தியை கைப்பற்றி அவனை முற்றிலும் அழிக்க அவளுக்கு இயற்கை வழி செய்து கொண்டு இருக்கிறது..இறுதியில் வெல்ல போவது யார்?மதிவதனியா?அல்லது காத்தவராயனா..? மதிவதனி மற்றும் பிரியங்காவாக, ![]() ஆராதனாவாக ![]() அனுவாக ![]() லிகிதாவாக ![]() அபர்ணாவாக ![]() விலாசினியாக
21-10-2024, 12:04 PM
21-10-2024, 12:20 PM
(21-10-2024, 11:44 AM)snegithan Wrote: இந்த கதை ஒரு கற்பனை கதை.மன்னர் காலத்தையும்,நாம் வாழும் நிகழ் காலத்தையும் இணைத்து புனையப்பட்ட கதை. :shy: இதுவரை 142 பாகங்கள் வெளிவந்து உள்ளது.நடந்த வரை இந்த கதை சுருக்கமாக பார்ப்போம். YOUR SHORT STORY AWSOME NANBA. EASILY UNDERSTAND FOR NEW VIEWERS
21-10-2024, 08:44 PM
முழு கதையை ஒரு சிறிய பாகமாக அளித்ததாற்கு நன்றி நண்பா நன்றி
21-10-2024, 10:01 PM
மிகவும் நன்றி.
23-10-2024, 10:28 AM
NANBA NEXT UPDATE WAITING
|
|
« Next Oldest | Next Newest »
|