⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
Superbbb updatessss
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(13-10-2024, 09:04 PM)rkasso Wrote: மிக நல்ல பாகம்

நன்றி நண்பா

(14-10-2024, 01:32 AM)Rahul1984 Wrote: அருமை..

நன்றி நண்பா

(14-10-2024, 06:15 AM)omprakash_71 Wrote: சோழர்களின் வீரத்தையும் கட்டிட கலைகளையும் மிகவும் அழகாக எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா..
(14-10-2024, 06:48 AM)Karmayogee Wrote: Great going

Thank you bro

(14-10-2024, 04:58 PM)Priya99 Wrote: சோழர் கால கதையை படிக்க சுவாரசியமாக இருக்கு

மிக்க நன்றி

(14-10-2024, 10:07 PM)Johnnythedevil Wrote: Super update

நன்றி நண்பரே 
(16-10-2024, 05:00 AM)Vettaiyyan Wrote: You are super writer for sure.

You made my day bro

(16-10-2024, 07:09 AM)Mookuthee Wrote: Awesome

Thank you very much.

(16-10-2024, 12:26 PM)sexycharan Wrote: Superbbb updatessss

Thank you
Like Reply
(14-10-2024, 06:27 PM)rameshsurya84 Wrote: NANBA DONT THINK LIKE THAT PLEASE. VIEWS WILL COME DEFINIETLY. DONT STOP NANBA PLEASE.


முன்பு வந்த views இப்போ வருவது இல்லை நண்பா..கொஞ்ச கொஞ்சமா குறைந்து கொண்டே வருது
Like Reply
பாகம் - 140

மன்னர் காலம்

ராஜேந்திர சோழன் அரண்மனைக்குள் சிங்கள அரசன்,மற்றும் அவன் மனைவி இளவரசி ரோஹிணி அழைத்து வரப்பட்டனர்.

சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த ராஜேந்திர சோழன் சிங்கள மன்னனுக்கும்‌ உரிய சிம்மாசனம் கொடுத்து அமர செய்தான்.அவனை நோக்கி,"சிங்கள அரசே..உங்களுக்கும் எங்களுக்கும்  பழைய பகை விரோதம் இல்லை.ஒரு தமிழ் மன்னனின் மணிமுடி தங்களிடம் சிறைப்பட்டுள்ளதே..!அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.அதற்காக தான் நாங்கள் உங்களிடம் மூன்று தலைமுறையாக யுத்தம் செய்தோம்.எங்களுக்கு தேவையானது கிடைத்தாகி விட்டது.இப்பொழுது உங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஒப்படைக்க வேண்டிய தருணம் இது"என ராஜேந்திர சோழன் வாய்மொழி வார்த்தைகளை கேட்ட உடன் சிங்கள மன்னன் கண்கள் ஒளிர்ந்தது.

"ஆனால்..!"என ராஜேந்திர சோழன் சற்று இடைவெளி விட்டார்.

"உங்களிடம் யுத்தம் செய்ததின் விளைவு எங்களுக்கு பெருமளவு உயிர்சேதம்,மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது.அதை சீர்செய்ய வேண்டும் அல்லவா...அதனால் உங்கள் நிலப்பரப்பை சில காலம் எம் தளபதிகள் ஆண்டு மக்களிடம் வரி வசூலித்து வரட்டும்.நேரம் வந்த உடன் உங்கள் அரசை நான் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.அதுவரை தாங்கள் என் விருந்தினர் மாளிகையை அலங்கரியுங்கள்"என்று சோழன் சொல்ல சிங்கள மன்னன் முகம் வாடி போனது.

"ரோஹிணிக்கு இதை கேட்டு ஆச்சரியம்.வழக்கமாக எதிரி நாட்டு மன்னன் சிறைபட்டால் ஒன்று கொன்று விடுவார்கள்.இல்லையெனில் பாதாள சிறையில் தள்ளி விடுவார்கள்.இதென்ன ஆச்சரியம்..!விருந்தினர் போல உபசரிக்கிறார்களே..!என திடுக்கிட்டாள்..

ராஜேந்திர சோழன் தன் உதவியாளரை அழைத்து,"தாங்கள் சென்று அருள்மொழியை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அங்கிருந்து அவர் அகன்றார்.

சில நொடிகளிலேயே அருள்மொழி சபையில் பிரவேசிக்க,ராஜேந்திர சோழன் அவளிடம்,"மகளே,இவர்கள் நம் விருந்தினர்.இவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்,அது உன்னுடைய பொறுப்பு,விருந்தினர் மாளிகை அழைத்து செல்..என சொல்ல அருள்மொழி அவர்கள் முன்னே வந்தாள்..

ஒரே நேரத்தில் இரு பவுர்ணமி நிலவுகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன.அருள்மொழியின் தெய்வீக அழகை பார்த்து ரோஹிணி ஒரு கணம் மலைத்தாள்.ரோஹிணி மனதுக்குள்,நான் தான் உலகத்திலேயே மிகவும் அழகானவள் என்று இறுமாந்து இருந்தேன்..இவள் அழகில் என்னுடனே போட்டி போடும் அளவுக்கு அல்லவா இருக்கிறாள் என உள்ளுக்குள் பேசி கொண்டாள்.

அருள்மொழி அவளிடம்,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.வாருங்கள் மாளிகை நோக்கி செல்லலாம்.."என்று அழைத்து சென்றாள்.

விருந்தினர் மாளிகையில்,அருள்மொழி பணியாட்களிடம் சரியாக வேலை வாங்கிய விதம் அவளின் திறமை பளிச்சிட்டது..இதை எல்லாம் ரோஹிணி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள்.விருந்தினர் மாளிகை சுத்தம் செய்யப்பட்டு,வண்ணமயமான திரைச்சீலைகள் மாற்றப்பட்டு,நறுமண திரவியங்கள் தூவப்பட்டு,
சில மணித்துளிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ப மாளிகை தயார் ஆகி விட்டது..ஒரு மாபெரும் பேரரசின் இளவரசி என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் பணியாட்களிடம் சகஜமாக பழகி என்ன அழகாக அவர்களிடம் வேலை வாங்கி விட்டாள்..கொஞ்ச நேரத்தில் இந்த விருந்தினர் மாளிகையே இவள் சொர்க்கலோகம் போல் அல்லவா ஆக்கி விட்டாள் என்று ரோஹிணி வியந்தாள்.

ஒரு குறிப்பிட்ட பணியாளை ரோஹினியிடம் அருள்மொழி காட்டி," இவரிடம் உங்களுக்கு என்ன தேவையோ கூறுங்கள்.அவர் உடனே செய்து தருவார். நான் அவ்வப்போது இங்கே வந்து சரிபார்த்து கொள்கிறேன்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க,நீங்கள் காண பிரத்யேகமாக தங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என சொன்னாள்.

"ம்...சரி "என்று ரோஹிணி கூற அருள்மொழி விடைபெற்றாள்.

உடனே ரோஹிணி,"ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்றாள்.

அருள்மொழி திரும்பி,"ம்..சொல்லுங்க...!" என கேட்க,

ரோஹிணி அவளிடம்,"பட்டாபிஷேகம் முடிந்த உடன் உங்களுக்கும் வேங்கி நாட்டு இளவரசன் நரேந்திரனுக்கும் திருமணம் என்று பேசி கொள்கிறார்களே..!..?என கேட்டாள்..

இந்த கேள்வி கேட்டதும் அருள்மொழி முகம் மாறியதை ரோஹிணி கண்டுகொண்டாள்."மன்னிக்கவும்..இது என்னோட தனிப்பட்ட விசயம்..இதை தாங்கள் கேள்வியாக கேட்பது நன்றாக இருக்காது.."என நாசூக்காக பதில் அளித்து விட்டு அருள்மொழி சென்று விட ரோஹிணி தவித்தாள்..

"ஆகா..இவளை போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதால் தான் இலங்கையில் என்னை இளங்கோ ஏறேடுத்தும் பார்க்கவில்லையோ..!இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று புரியவில்லையே..இவளுக்கும்,நரேந்திரனுக்கும் மணம் முடிந்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விட்டது என நினைத்தேனே..!இளங்கோவை வழிக்கு கொண்டு வர தாமே தான் களத்தில் இறங்க வேண்டும்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் விசேஷம் என்று அருள்மொழி சொன்னாளே..ஒருவேளை அங்கு இளங்கோ வருவானா..கண்டிப்பா வரக்கூடும்..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது.."என மனதில் நினைத்து கொண்டாள்..

அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுக்க அமர்க்களப்பட்டது.அதுவும் பட்டாபிஷேகம் ஒரு நாளுக்கு முன்பாக வந்த நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் விமர்சியாக மக்கள் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.

தளிக்குலத்தார் ஆலயம் கோட்டையின் உள்ளே இருப்பதால்,(வேலூர் கோட்டையில் உள்ளே ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போல)அரசினர் குடும்பம் வந்து கும்பிட தனி வழி இருந்தது..மேலும் அரச குடும்பம் வந்து செல்லும் கோவில் என்பதால் அலங்காரங்கள், பூ மற்றும் ஒளி வேலைப்பாடுகள் மிக பிரமாதமாக இருந்தது.
மேலும் ஆடல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆடல் மண்டபமும் மிக பெரிதாக இருந்தது. ஒவ்வொரு ஊரில் உள்ள தலைமை கோவில்களில் மேடை போல் அமைத்து இருப்பார்கள்.அங்கு எப்பொழுதும் சொற்பொழிவு ,ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்கு தான் அதை அமைப்பது.அந்த மேடை முன்பு மக்கள் அமர விசாலமான இடம் இருக்கும்.அதில் மக்கள் அமர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.அந்த மேடையில் தான் நவராத்திரிக்கான கொலு அமைத்து இருந்தார்கள்.

இளங்கோவை காணும் ஆவலுடன் ரோஹிணி சென்றாள்.ஆனால் அங்கே இளங்கோ இன்னும் வரவில்லை.அரச குடும்பத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவளுக்கும் கிடைத்தது.சற்று நேரத்தில் ராஜேந்திர சோழன் தன் அரசி மற்றும் மகள் உட்பட அவர்களுக்கான பிரத்யேகமான வழியில் வந்து முதலில் இறைவனை வழிபட்டனர்.

ரோஹிணியை பார்த்த அருள்மொழி,"எங்கே உங்கள் பெற்றோர்கள் வரவில்லையா" என கேட்டாள்.

"இல்லை..
அவர்கள் வரவில்லை.நான் மட்டும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வந்தேன்.."

ராஜேந்திர சோழன் தன் மகளிடம்,அவளுக்கே உரிய நாட்டிய திறமையை அரங்கேற்ற சொன்னார்.

அங்கே நரேந்திரனும் வந்து இருந்ததால்,"இப்போ வேண்டாமே" என அவள் மறுதலிக்க,இளங்கோ ஆலயத்தின் உள்ளே நுழைந்தான்.மக்கள் அவனை வரவேற்கும் சத்தம் கேட்டது.

ரோஹிணி அதை கவனித்து,இளங்கோவை கவர மேடை ஏறி தன் நாட்டியத்தை ஆட தொடங்கினாள்.அவளுக்கு தெரிந்த அனைத்து கலைகளையும்  செய்து காட்டினாள்.மக்கள் அனைவரும் மெய்மறந்து அவள் நாட்டியத்திற்கு கை தட்டினர்.



[Image: images-3.jpg]

ஆட்டம் முடிந்த பிறகு ராஜேந்திர சோழனும் பாராட்ட,ரோஹிணி சற்று திமிருடன்,"நான் ஆடிய ஆட்டத்தை போல இதே மேடையில் ஆட இந்த சோழ நாட்டில் யாரும் இருக்கிறார்களா.."என கேட்டாள்.

ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்க ரோஹிணி சிரிப்புடன்,"ஆயகலைகள் அறுபத்து நான்கு,அதில் சிறந்த நாடு சோழ நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் என்னோட இந்த ஒரு கலைக்கே சோழ நாட்டினால் பதில் சொல்ல முடியவில்லையே.ஆடல் அரசன் ஈசனின் தலைமை தலம் சிதம்பரம் இருக்கும் சோழ நாட்டில் என் நாட்டியத்திற்கு பதில் சொல்லும் ஒருவர் கூட இல்லையா..கேவலம்..மிக கேவலம்"என்று இகழ்ந்து பேச,

ராஜேந்திர சோழன் உடனே"அவசரப்பட வேண்டாம் இளவரசி,உன் நாட்டியத்திற்கு என் மகள் அருள்மொழி மறுமொழி அளிப்பாள்"என்று அவர் சொன்ன உடன் அருள்மொழி,இளங்கோவை பார்க்க,அவன் பார்வையால் அனுமதி கொடுத்தான்.

அடுத்த நொடியே அருள்மொழி மேடை ஏறினாள்.திருவெம்பாவையை மனதில் நினைத்து கொண்டாள்.ஏனெனில் திருவெம்பாவை இறைவனை காதலனாகவும்,தன்னை காதலியாகவும் மாணிக்கவாசகர் நினைத்து கொண்டு பாடியது.அந்த வரிகள் மனதில் ஓட,தகுந்த தாளங்கள் வாசிக்க அதற்கேற்ப நளின அசைவுகளை அருள்மொழி ஆட ,மக்களுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.ரோஹிணியின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதில் தான் என்ற திமிர் வெளிப்பட்டது.ஆனால் அருள்மொழியின் ஆட்டத்தில் ஒரு நளினம் மற்றும் உயிர்த்தன்மை வெளிப்பட்டது..காரணம் அவள் நாயகனாக மனதில் இளங்கோவை  வைத்து கொண்டு ஆடியதால் அந்த காதலின் தன்மை நன்றாகவே தெரிந்தது.



[Image: Snapinsta-app-94703503-582949969004024-5...n-1080.jpg]

[Image: Snapinsta-app-94752546-700334637437652-4...n-1080.jpg]

எல்லோருக்கும் சந்தேகமே இன்றி அருள்மொழி ஆட்டம் தான் சிறந்தது என கூற தொடங்கினர்...அருள்மொழி கண்கள் அடிக்கடி இளங்கோ பக்கம் சென்றதை ரோகிணி கண்டு பிடித்து விட்டாள்."ஆகா..!எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறதே..!என அவள் மனம் சஞ்சலபட்டது.

ராஜேந்திர சோழன் தலைகுனிந்து அமர்ந்து இருந்த ரோகிணியை பார்த்து,"உனக்கு பதில்மொழி கிடைத்து இருக்கும் என நம்புகிறேன் இளவரசி..! சோழ நாட்டில் கலைகளுக்கு பஞ்சமில்லை.அதே சமயத்தில் நாங்கள் வேற்று நாட்டு கலைஞரையும் மதிக்க தவறுவது இல்லை.
உங்கள் நடன திறமையும் அபாரம்.ஈடு இணையில்லாதது.ஈசன் உங்களுக்கு அருமையான நாட்டிய கலையை அளித்து உள்ளான்."என்று ரோஹிணியையும் உயர்த்தி பேசினார்.

ஆட்டம் முடிந்த உடன்,இளங்கோ கோவிலின் பின்புறம் சென்றதை பார்த்த ரோஹிணி,உடனே அவனை தன் வசப்படுத்த வேண்டும் என  பின்தொடர்ந்து,"ம்ஹீம்...!என்று குரலை செருமி கொண்டு அழைக்க,இளங்கோ திரும்பினான்..

"என்ன தேவி..!இங்கே தனியா வந்து உள்ளீர்கள்..தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா..இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டுமா.."என கேட்டான்..

"நான் தங்களிடம் சற்று பேச வேண்டுமே..கொஞ்சம் தனிமையில்.."என்று அவள் கூற..,

"சரி வாருங்கள்.."பக்கத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே அழைத்து சென்றான்.

"இப்பொழுது சொல்லுங்கள்..!என்ன விசயம்..உங்கள் தம்பி எங்கள் படையினரிடம் இருந்து தப்பி ஒடி விட்டான்.அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,அதுதானே தாங்கள் கேட்க வந்தது.."என கேட்டான்.

ரோஹிணி உடனே "இல்லை..உங்கள் வீரதீர சாகசத்தை என் கோட்டையில் இருந்து பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் நான்.."என்று சொல்லி அவன் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று உற்று நோக்கினாள்.

இளங்கோ அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.

ரோஹிணி தன் பேச்சை தொடர்ந்தாள்."உண்மையில் உங்கள் ஒருவர் வீரத்தினால் தான் நாங்கள் வீழ்ந்தோம்.நீங்கள் மட்டும் எங்கள் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தான் வென்று இருப்போம்..என் அழகில் மயங்கி
என் காலடியில் பள்ளி கொள்ள உலகத்தில் உள்ள ராஜகுமாரர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அப்படியே நிஜத்தில் தாங்கள் உள்ளீர்கள்.இந்த தங்கப்பாவையின்‌ அங்கங்கள் யாவும் உங்களுக்கு சொந்தம்.அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னை மணம் முடித்து கொள்ள சம்மதம் என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும்.ஆறுதல் பரிசாக இலங்கை மணிமுடியும் தங்களுக்கு கிடைக்கும்."

"அப்போ உங்கள் தம்பி..!இளங்கோ கேட்க,

"அவன் என் பேச்சை தட்டாமல் கேட்கும் பொம்மை போன்றவன்.. இலங்கை அரசின் சக்கரவர்த்தியின் மணிமுடி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் பேரழகியே உங்களை நாடி வந்து உள்ளாள்.இதற்கு தேவை ஒரேயொரு வார்த்தை சம்மதம் தான்..."என ரோஹிணி கூற இளங்கோ கலகலவென சிரித்தான்..

"மன்னிக்கவும் தேவி..!நீங்கள் அழகில் சிறந்தவர் மறுப்பதற்கு இல்லை..ஆனால் உங்களை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.
நான் இங்கே கொடும்பாளூர் என்ற ஊரின் சிற்றரசன் அவ்வளவே..!"என்று இளங்கோ புறப்பட..

"நில்லுங்கள் இளவரசே..."என ரோஹிணி கத்த,அந்த குரல் அவ்வழியே சென்ற அருள்மொழியை இவர்களை நோக்கி வரவழைத்தது.

"என்னுடைய காலடியில் ஒரு இடம் கிடைக்குமா என ஏங்கும் பல நாட்டு ராஜ குமாரர்கள் உள்ளனர்.ஆனால் என்னை முதன்முதலில் நிராகரித்தது நீங்கள் தான் இளவரசே.இலங்கை மணிமுடியை விட்டு தள்ளுங்கள்.ஆனால் இந்த பொன்னிற மேனியின் விரலை மட்டுமாவது தொட முடியுமா என ஏங்கி தவிக்கும் பல ஆண் மகன்களை நான் கண்டுள்ளேன்..ஆனால் நீங்கள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு மிகுந்த கோபத்தை தூண்டுகிறது.நீங்கள் என்னை நிராகரிக்க வேறொரு காரணம் உள்ளது.அதை தாங்கள் இங்கே சொல்லியே ஆக வேண்டும்."

இளங்கோ திரும்பி அவளை பார்த்து,"தேவி,நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்..அவளை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது..போதுமா.."

"யார் அந்த அருள்மொழியா..!என ரோஹிணி கேட்க,

இளங்கோ அதிர்ச்சி அடைந்தாலும்,"ஆமாம்"என்றான்

இந்த வார்த்தைகளை கேட்ட அருள்மொழியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.கால்கள் தரையில் படவில்லை.

ரோஹிணி வெறுப்புடன்,"அவள் தான் வேங்கி நாட்டு இளவரசனுடன் மணம் புரிய போகிறாளே..",

"இங்கே பாருங்கள் தேவி,உங்களை ஏற்று கொள்ளாதற்கான காரணத்தை கேட்டீர்கள்..நான் சொல்லி விட்டேன்..இதற்கு மேல் இந்த விசயத்தை பேசுவது முறை ஆகாது.."என விறுவிறுவென திரும்பி நடக்க,

ரோஹிணி கத்தினாள்."என்னை உதாசீனம் செய்ததற்காக நீ மிகவும் வருத்தபடுவாய்"என அவள் கத்தினாள்.

எதிரில் அவன் தோழன் வீரமல்லன் வந்தான்..

"என்ன நண்பா..!என்ன விசயம் சிங்கள இளவரசியின் முகம் சிவந்து காணப்படுகிறது.."வீரமல்லன் கேட்க,

'ஒன்றும் இல்லை நண்பா..காதலை  அவள் சொன்னாள். நான் மறுதலித்தேன்.."

"அடப்பாவி..அவள் நடமாடும் பூலோக சொர்க்கமடா.. அவளையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாய்.. உலகத்திலேயே உன்னை போன்ற மூடன் யாரும் பார்க்க முடியாது."

"சரி அப்படியே இருக்கட்டும் போலாமா...."என்றான் இளங்கோ.

"நண்பா..நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே..அவளை ஏற்று கொள்வதில் உனக்கு என்ன தயக்கம்.இந்த வாய்ப்பு யாருக்குடா கிடைக்கும்.."

"இருக்கட்டும் வீரமல்லா..என் மனதில் வேறொரு நங்கை இருக்கிறார்."

"யாருடா..அந்த அதிர்ஷ்டசாலி..."வீரமல்லன் கேட்க

"அது தான் சொன்னேனே..!நங்கை என்று"

"அடேய் இளங்கோ..!பெண்கள் எல்லோரையுமே நங்கை என்று அழைப்பது தானே வழக்கம்..குறிப்பிட்டு எந்த பெண் என்று சொல்லடா என் உயிர் நண்பனே.."

"என் முட்டாள் நண்பனே..!அவள் பெயரே நங்கை தானடா..செவ்விதழ் தேன் மொழியாள்.செந்தாமரை, செந்தேன் மழை, சிற்றிடை உடையாள்.ரோஹிணி அழகில் கண்ணை கூசும் காட்டுத்தீ என்றால்,அவள் அழகில் அகல் விளக்கு போன்று கண்ணுக்கு இனிமையாக சுடர்விட்டு எரிபவள்.அவள் எனக்கு எட்டாக்கனி என்று தெரிந்தும் அவள் காண்பித்த ஒரு கடைக்கண் பார்வை போதும் என் ஜென்மம் முழுதும் வாழ "என்ற இளங்கோ சொன்னான்.

"நீ சொல்வது நம் அரசரின் புதல்வி அருள்மொழி நங்கையா.."என வீரமல்லன் கேட்டான்.

அப்பொழுது அருள்மொழியின்‌ தோழி ஓடிவந்து இளங்கோவிடம்,"தேவி உங்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்து வர சொன்னார்.உங்களுக்காக அவர் காத்து இருக்கிறார்."

வீரமல்லன் வாழ்த்துக்கள் சொல்ல,இளங்கோ மின்னல் போல அரண்மனை நந்தவனம் நோக்கி சென்றான்.


     தொடரும்...

[Image: IMG-hztdva.gif]
Like Reply
(16-10-2024, 05:03 PM)snegithan Wrote: பாகம் - 140

மன்னர் காலம்

ராஜேந்திர சோழன் அரண்மனைக்குள் சிங்கள அரசன்,மற்றும் அவன் மனைவி இளவரசி ரோஹிணி அழைத்து வரப்பட்டனர்.

சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த ராஜேந்திர சோழன் சிங்கள மன்னனுக்கும்‌ உரிய சிம்மாசனம் கொடுத்து அமர செய்தான்.அவனை நோக்கி,"சிங்கள அரசே..உங்களுக்கும் எங்களுக்கும்  பழைய பகை விரோதம் இல்லை.ஒரு தமிழ் மன்னனின் மணிமுடி தங்களிடம் சிறைப்பட்டுள்ளதே..!அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.அதற்காக தான் நாங்கள் உங்களிடம் மூன்று தலைமுறையாக யுத்தம் செய்தோம்.எங்களுக்கு தேவையானது கிடைத்தாகி விட்டது.இப்பொழுது உங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஒப்படைக்க வேண்டிய தருணம் இது"என ராஜேந்திர சோழன் வாய்மொழி வார்த்தைகளை கேட்ட உடன் சிங்கள மன்னன் கண்கள் ஒளிர்ந்தது.

"ஆனால்..!"என ராஜேந்திர சோழன் சற்று இடைவெளி விட்டார்.

"உங்களிடம் யுத்தம் செய்ததின் விளைவு எங்களுக்கு பெருமளவு உயிர்சேதம்,மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது.அதை சீர்செய்ய வேண்டும் அல்லவா...அதனால் உங்கள் நிலப்பரப்பை சில காலம் எம் தளபதிகள் ஆண்டு மக்களிடம் வரி வசூலித்து வரட்டும்.நேரம் வந்த உடன் உங்கள் அரசை நான் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.அதுவரை தாங்கள் என் விருந்தினர் மாளிகையை அலங்கரியுங்கள்"என்று சோழன் சொல்ல சிங்கள மன்னன் முகம் வாடி போனது.

"ரோஹிணிக்கு இதை கேட்டு ஆச்சரியம்.வழக்கமாக எதிரி நாட்டு மன்னன் சிறைபட்டால் ஒன்று கொன்று விடுவார்கள்.இல்லையெனில் பாதாள சிறையில் தள்ளி விடுவார்கள்.இதென்ன ஆச்சரியம்..!விருந்தினர் போல உபசரிக்கிறார்களே..!என திடுக்கிட்டாள்..

ராஜேந்திர சோழன் தன் உதவியாளரை அழைத்து,"தாங்கள் சென்று அருள்மொழியை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அங்கிருந்து அவர் அகன்றார்.

சில நொடிகளிலேயே அருள்மொழி சபையில் பிரவேசிக்க,ராஜேந்திர சோழன் அவளிடம்,"மகளே,இவர்கள் நம் விருந்தினர்.இவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்,அது உன்னுடைய பொறுப்பு,விருந்தினர் மாளிகை அழைத்து செல்..என சொல்ல அருள்மொழி அவர்கள் முன்னே வந்தாள்..

ஒரே நேரத்தில் இரு பவுர்ணமி நிலவுகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன.அருள்மொழியின் தெய்வீக அழகை பார்த்து ரோஹிணி ஒரு கணம் மலைத்தாள்.ரோஹிணி மனதுக்குள்,நான் தான் உலகத்திலேயே மிகவும் அழகானவள் என்று இறுமாந்து இருந்தேன்..இவள் அழகில் என்னுடனே போட்டி போடும் அளவுக்கு அல்லவா இருக்கிறாள் என உள்ளுக்குள் பேசி கொண்டாள்.

அருள்மொழி அவளிடம்,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.வாருங்கள் மாளிகை நோக்கி செல்லலாம்.."என்று அழைத்து சென்றாள்.

விருந்தினர் மாளிகையில்,அருள்மொழி பணியாட்களிடம் சரியாக வேலை வாங்கிய விதம் அவளின் திறமை பளிச்சிட்டது..இதை எல்லாம் ரோஹிணி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள்.விருந்தினர் மாளிகை சுத்தம் செய்யப்பட்டு,வண்ணமயமான திரைச்சீலைகள் மாற்றப்பட்டு,நறுமண திரவியங்கள் தூவப்பட்டு,
சில மணித்துளிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ப மாளிகை தயார் ஆகி விட்டது..ஒரு மாபெரும் பேரரசின் இளவரசி என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் பணியாட்களிடம் சகஜமாக பழகி என்ன அழகாக அவர்களிடம் வேலை வாங்கி விட்டாள்..கொஞ்ச நேரத்தில் இந்த விருந்தினர் மாளிகையே இவள் சொர்க்கலோகம் போல் அல்லவா ஆக்கி விட்டாள் என்று ரோஹிணி வியந்தாள்.

ஒரு குறிப்பிட்ட பணியாளை ரோஹினியிடம் அருள்மொழி காட்டி," இவரிடம் உங்களுக்கு என்ன தேவையோ கூறுங்கள்.அவர் உடனே செய்து தருவார். நான் அவ்வப்போது இங்கே வந்து சரிபார்த்து கொள்கிறேன்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க,நீங்கள் காண பிரத்யேகமாக தங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என சொன்னாள்.

"ம்...சரி "என்று ரோஹிணி கூற அருள்மொழி விடைபெற்றாள்.

உடனே ரோஹிணி,"ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்றாள்.

அருள்மொழி திரும்பி,"ம்..சொல்லுங்க...!" என கேட்க,

ரோஹிணி அவளிடம்,"பட்டாபிஷேகம் முடிந்த உடன் உங்களுக்கும் வேங்கி நாட்டு இளவரசன் நரேந்திரனுக்கும் திருமணம் என்று பேசி கொள்கிறார்களே..!..?என கேட்டாள்..

இந்த கேள்வி கேட்டதும் அருள்மொழி முகம் மாறியதை ரோஹிணி கண்டுகொண்டாள்."மன்னிக்கவும்..இது என்னோட தனிப்பட்ட விசயம்..இதை தாங்கள் கேள்வியாக கேட்பது நன்றாக இருக்காது.."என நாசூக்காக பதில் அளித்து விட்டு அருள்மொழி சென்று விட ரோஹிணி தவித்தாள்..

"ஆகா..இவளை போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதால் தான் இலங்கையில் என்னை இளங்கோ ஏறேடுத்தும் பார்க்கவில்லையோ..!இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று புரியவில்லையே..இவளுக்கும்,நரேந்திரனுக்கும் மணம் முடிந்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விட்டது என நினைத்தேனே..!இளங்கோவை வழிக்கு கொண்டு வர தாமே தான் களத்தில் இறங்க வேண்டும்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் விசேஷம் என்று அருள்மொழி சொன்னாளே..ஒருவேளை அங்கு இளங்கோ வருவானா..கண்டிப்பா வரக்கூடும்..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது.."என மனதில் நினைத்து கொண்டாள்..

அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுக்க அமர்க்களப்பட்டது.அதுவும் பட்டாபிஷேகம் ஒரு நாளுக்கு முன்பாக வந்த நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் விமர்சியாக மக்கள் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.

தளிக்குலத்தார் ஆலயம் கோட்டையின் உள்ளே இருப்பதால்,(வேலூர் கோட்டையில் உள்ளே ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போல)அரசினர் குடும்பம் வந்து கும்பிட தனி வழி இருந்தது..மேலும் அரச குடும்பம் வந்து செல்லும் கோவில் என்பதால் அலங்காரங்கள், பூ மற்றும் ஒளி வேலைப்பாடுகள் மிக பிரமாதமாக இருந்தது.
மேலும் ஆடல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆடல் மண்டபமும் மிக பெரிதாக இருந்தது. ஒவ்வொரு ஊரில் உள்ள தலைமை கோவில்களில் மேடை போல் அமைத்து இருப்பார்கள்.அங்கு எப்பொழுதும் சொற்பொழிவு ,ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்கு தான் அதை அமைப்பது.அந்த மேடை முன்பு மக்கள் அமர விசாலமான இடம் இருக்கும்.அதில் மக்கள் அமர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.அந்த மேடையில் தான் நவராத்திரிக்கான கொலு அமைத்து இருந்தார்கள்.

இளங்கோவை காணும் ஆவலுடன் ரோஹிணி சென்றாள்.ஆனால் அங்கே இளங்கோ இன்னும் வரவில்லை.அரச குடும்பத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவளுக்கும் கிடைத்தது.சற்று நேரத்தில் ராஜேந்திர சோழன் தன் அரசி மற்றும் மகள் உட்பட அவர்களுக்கான பிரத்யேகமான வழியில் வந்து முதலில் இறைவனை வழிபட்டனர்.

ரோஹிணியை பார்த்த அருள்மொழி,"எங்கே உங்கள் பெற்றோர்கள் வரவில்லையா" என கேட்டாள்.

"இல்லை..
அவர்கள் வரவில்லை.நான் மட்டும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வந்தேன்.."

ராஜேந்திர சோழன் தன் மகளிடம்,அவளுக்கே உரிய நாட்டிய திறமையை அரங்கேற்ற சொன்னார்.

அங்கே நரேந்திரனும் வந்து இருந்ததால்,"இப்போ வேண்டாமே" என அவள் மறுதலிக்க,இளங்கோ ஆலயத்தின் உள்ளே நுழைந்தான்.மக்கள் அவனை வரவேற்கும் சத்தம் கேட்டது.

ரோஹிணி அதை கவனித்து,இளங்கோவை கவர மேடை ஏறி தன் நாட்டியத்தை ஆட தொடங்கினாள்.அவளுக்கு தெரிந்த அனைத்து கலைகளையும்  செய்து காட்டினாள்.மக்கள் அனைவரும் மெய்மறந்து அவள் நாட்டியத்திற்கு கை தட்டினர்.



[Image: images-3.jpg]

ஆட்டம் முடிந்த பிறகு ராஜேந்திர சோழனும் பாராட்ட,ரோஹிணி சற்று திமிருடன்,"நான் ஆடிய ஆட்டத்தை போல இதே மேடையில் ஆட இந்த சோழ நாட்டில் யாரும் இருக்கிறார்களா.."என கேட்டாள்.

ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்க ரோஹிணி சிரிப்புடன்,"ஆயகலைகள் அறுபத்து நான்கு,அதில் சிறந்த நாடு சோழ நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் என்னோட இந்த ஒரு கலைக்கே சோழ நாட்டினால் பதில் சொல்ல முடியவில்லையே.ஆடல் அரசன் ஈசனின் தலைமை தலம் சிதம்பரம் இருக்கும் சோழ நாட்டில் என் நாட்டியத்திற்கு பதில் சொல்லும் ஒருவர் கூட இல்லையா..கேவலம்..மிக கேவலம்"என்று இகழ்ந்து பேச,

ராஜேந்திர சோழன் உடனே"அவசரப்பட வேண்டாம் இளவரசி,உன் நாட்டியத்திற்கு என் மகள் அருள்மொழி மறுமொழி அளிப்பாள்"என்று அவர் சொன்ன உடன் அருள்மொழி,இளங்கோவை பார்க்க,அவன் பார்வையால் அனுமதி கொடுத்தான்.

அடுத்த நொடியே அருள்மொழி மேடை ஏறினாள்.திருவெம்பாவையை மனதில் நினைத்து கொண்டாள்.ஏனெனில் திருவெம்பாவை இறைவனை காதலனாகவும்,தன்னை காதலியாகவும் மாணிக்கவாசகர் நினைத்து கொண்டு பாடியது.அந்த வரிகள் மனதில் ஓட,தகுந்த தாளங்கள் வாசிக்க அதற்கேற்ப நளின அசைவுகளை அருள்மொழி ஆட ,மக்களுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.ரோஹிணியின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதில் தான் என்ற திமிர் வெளிப்பட்டது.ஆனால் அருள்மொழியின் ஆட்டத்தில் ஒரு நளினம் மற்றும் உயிர்த்தன்மை வெளிப்பட்டது..காரணம் அவள் நாயகனாக மனதில் இளங்கோவை  வைத்து கொண்டு ஆடியதால் அந்த காதலின் தன்மை நன்றாகவே தெரிந்தது.



[Image: Snapinsta-app-94703503-582949969004024-5...n-1080.jpg]

[Image: Snapinsta-app-94752546-700334637437652-4...n-1080.jpg]

எல்லோருக்கும் சந்தேகமே இன்றி அருள்மொழி ஆட்டம் தான் சிறந்தது என கூற தொடங்கினர்...அருள்மொழி கண்கள் அடிக்கடி இளங்கோ பக்கம் சென்றதை ரோகிணி கண்டு பிடித்து விட்டாள்."ஆகா..!எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறதே..!என அவள் மனம் சஞ்சலபட்டது.

ராஜேந்திர சோழன் எழுந்து,"உனக்கு பதில்மொழி கிடைத்து இருக்கும் என நம்புகிறேன் இளவரசி..!ஆனால் உங்கள் நடன திறமையும் அபாரம்.ஈடு இணையில்லாதது."என்று அவளையும் உயர்த்தி பேசினார்.

ஆட்டம் முடிந்த உடன்,இளங்கோ கோவிலின் பின்புறம் சென்றதை பார்த்த ரோஹிணி,உடனே அவனை தன் வசப்படுத்த வேண்டும் என  பின்தொடர்ந்து,"ம்ஹீம்...!என்று குரலை செருமி கொண்டு அழைக்க,இளங்கோ திரும்பினான்..

"என்ன தேவி..!இங்கே தனியா வந்து உள்ளீர்கள்..தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா..இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டுமா.."என கேட்டான்..

"நான் தங்களிடம் சற்று பேச வேண்டுமே..கொஞ்சம் தனிமையில்.."என்று அவள் கூற..,

"சரி வாருங்கள்.."பக்கத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே அழைத்து சென்றான்.

"இப்பொழுது சொல்லுங்கள்..!என்ன விசயம்..உங்கள் தம்பி எங்கள் படையினரிடம் இருந்து தப்பி ஒடி விட்டான்.அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,அதுதானே தாங்கள் கேட்க வந்தது.."என கேட்டான்.

"இல்லை..உங்கள் வீரதீர சாகசத்தை என் கோட்டையில் இருந்து பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் நான்.."

இளங்கோ அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.

உண்மையில் உங்கள் ஒருவர் வீரத்தினால் தான் நாங்கள் வீழ்ந்தோம்.நீங்கள் மட்டும் எங்கள் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தான் வென்று இருப்போம்..என் அழகில் மயங்கி
என் காலடியில் பள்ளி கொள்ள உலகத்தில் உள்ள ராஜகுமாரர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அப்படியே நிஜத்தில் தாங்கள் உள்ளீர்கள்.இந்த தங்கப்பாவையின்‌ அங்கங்கள் யாவும் உங்களுக்கு சொந்தம்.அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னை மணம் முடித்து கொள்ள சம்மதம் என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும்.ஆறுதல் பரிசாக இலங்கை மணிமுடியும் தங்களுக்கு கிடைக்கும்."

"அப்போ உங்கள் தம்பி..!இளங்கோ கேட்க,

"அவன் என் பேச்சை தட்டாமல் கேட்கும் பொம்மை போன்றவன்.. இலங்கை அரசின் சக்கரவர்த்தியின் மணிமுடி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் பேரழகியே உங்களை நாடி வந்து உள்ளாள்.இதற்கு தேவை ஒரேயொரு வார்த்தை சம்மதம் தான்..."என ரோஹிணி கூற இளங்கோ கலகலவென சிரித்தான்..

"மன்னிக்கவும் தேவி..!நீங்கள் அழகில் சிறந்தவர் மறுப்பதற்கு இல்லை..ஆனால் உங்களை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.
நான் இங்கே கொடும்பாளூர் என்ற ஊரின் சிற்றரசன் அவ்வளவே..!"என்று இளங்கோ புறப்பட..

"நில்லுங்கள் இளவரசே..."என ரோஹிணி கத்த,அந்த குரல் அவ்வழியே சென்ற அருள்மொழியை இவர்களை நோக்கி வரவழைத்தது.

"என்னுடைய காலடியில் ஒரு இடம் கிடைக்குமா என ஏங்கும் பல நாட்டு ராஜ குமாரர்கள் உள்ளனர்.ஆனால் என்னை முதன்முதலில் நிராகரித்தது நீங்கள் தான் இளவரசே.இலங்கை மணிமுடியை விட்டு தள்ளுங்கள்.ஆனால் இந்த பொன்னிற மேனியின் விரலை மட்டுமாவது தொட முடியுமா என ஏங்கி தவிக்கும் பல ஆண் மகன்களை நான் கண்டுள்ளேன்..ஆனால் நீங்கள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு மிகுந்த கோபத்தை தூண்டுகிறது.நீங்கள் என்னை நிராகரிக்க வேறொரு காரணம் உள்ளது.அதை தாங்கள் இங்கே சொல்லியே ஆக வேண்டும்."

இளங்கோ திரும்பி அவளை பார்த்து,"தேவி,நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்..அவளை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது..போதுமா.."

"யார் அந்த அருள்மொழியா..!என ரோஹிணி கேட்க,

இளங்கோ அதிர்ச்சி அடைந்தாலும்,"ஆமாம்"என்றான்

இந்த வார்த்தைகளை கேட்ட அருள்மொழியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.கால்கள் தரையில் படவில்லை.

ரோஹிணி வெறுப்புடன்,"அவள் தான் வேங்கி நாட்டு இளவரசனுடன் மணம் புரிய போகிறாளே..",

"இங்கே பாருங்கள் தேவி,உங்களை ஏற்று கொள்ளாதற்கான காரணத்தை கேட்டீர்கள்..நான் சொல்லி விட்டேன்..இதற்கு மேல் இந்த விசயத்தை பேசுவது முறை ஆகாது.."என விறுவிறுவென திரும்பி நடக்க,

ரோஹிணி கத்தினாள்."என்னை உதாசீனம் செய்ததற்காக நீ மிகவும் வருத்தபடுவாய்"என அவள் கத்தினாள்.

எதிரில் அவன் தோழன் வீரமல்லன் வந்தான்..

"என்ன நண்பா..!என்ன விசயம் சிங்கள இளவரசியின் முகம் சிவந்து காணப்படுகிறது.."வீரமல்லன் கேட்க,

'ஒன்றும் இல்லை நண்பா..காதலை  அவள் சொன்னாள். நான் மறுதலித்தேன்.."

"அடப்பாவி..அவள் நடமாடும் பூலோக சொர்க்கமடா.. அவளையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாய்.. உலகத்திலேயே உன்னை போன்ற மூடன் யாரும் பார்க்க முடியாது."

"சரி அப்படியே இருக்கட்டும் போலாமா...."என்றான் இளங்கோ.

"நண்பா..நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே..அவளை ஏற்று கொள்வதில் உனக்கு என்ன தயக்கம்.இந்த வாய்ப்பு யாருக்குடா கிடைக்கும்.."

"இருக்கட்டும் வீரமல்லா..என் மனதில் வேறொரு நங்கை இருக்கிறார்."

"யாருடா..அந்த அதிர்ஷ்டசாலி..."வீரமல்லன் கேட்க

"அது தான் சொன்னேனே..!நங்கை என்று"

"அடேய் இளங்கோ..!பெண்கள் எல்லோரையுமே நங்கை என்று அழைப்பது தானே வழக்கம்..குறிப்பிட்டு எந்த பெண் என்று சொல்லடா என் உயிர் நண்பனே.."

"என் முட்டாள் நண்பனே..!அவள் பெயரே நங்கை தானடா..செவ்விதழ் தேன் மொழியாள்.செந்தாமரை, செந்தேன் மழை, சிற்றிடை உடையாள்.ரோஹிணி அழகில் கண்ணை கூசும் காட்டுத்தீ என்றால்,அவள் அழகில் அகல் விளக்கு போன்று கண்ணுக்கு இனிமையாக சுடர்விட்டு எரிபவள்.அவள் எனக்கு எட்டாக்கனி என்று தெரிந்தும் அவள் காண்பித்த ஒரு கடைக்கண் பார்வை போதும் என் ஜென்மம் முழுதும் வாழ "என்ற இளங்கோ சொன்னான்.

"நீ சொல்வது நம் அரசரின் புதல்வி அருள்மொழி நங்கையா.."என வீரமல்லன் கேட்டான்.

அப்பொழுது அருள்மொழியின்‌ தோழி ஓடிவந்து இளங்கோவிடம்,"தேவி உங்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்து வர சொன்னார்.உங்களுக்காக அவர் காத்து இருக்கிறார்."

வீரமல்லன் வாழ்த்துக்கள் சொல்ல,இளங்கோ மின்னல் போல அரண்மனை நந்தவனம் நோக்கி சென்றான்.


     தொடரும்...

[Image: IMG-hztdva.gif]

ஆஹா மிகவும் அருமையான பதிவு நண்பா. சோழர் காலம் பற்றிய உங்கள் உரைநடை மிகவும் அற்புதம் நண்பா. தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் அதுவும் ஆடல், பாடல் பற்றிய வரிகள் அருமை நண்பா. இந்த பதிவு சோழர் காலத்திற்கே எங்களை கொண்டு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலாக. நல்ல பதிவிற்கு நன்றி.
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
(16-10-2024, 06:33 PM)rameshsurya84 Wrote: ஆஹா மிகவும் அருமையான பதிவு நண்பா. சோழர் காலம் பற்றிய உங்கள் உரைநடை மிகவும் அற்புதம் நண்பா. தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் அதுவும் ஆடல், பாடல் பற்றிய வரிகள் அருமை நண்பா. இந்த பதிவு சோழர் காலத்திற்கே எங்களை கொண்டு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலாக. நல்ல பதிவிற்கு நன்றி.


நன்றி நண்பா..அடுத்த பதிவு சோழர் காலத்தின்‌ முக்கிய பதிவாக இருக்கும்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Excellent update.. சோழர் காலத்தில் அருள்மொழி மற்றும் ரோஹிணி கேரக்டர் உருவகம் அருமை.அதுவும் இருவர் அழகை ஒப்பிட்டு சொன்னவிதம் சூப்பர்.
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
கதை சோழர் காலத்தில் காமம் இன்றி காதலுடன் செல்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது
[+] 1 user Likes rkasso's post
Like Reply
ரோகிணியும் அருள்மொழியும் ஆடிய நடனம் வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் பாடல் பெற்ற உள்ளது நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(16-10-2024, 09:56 PM)rkasso Wrote: கதை சோழர் காலத்தில் காமம் இன்றி காதலுடன் செல்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது

சோழர் காலத்திலும் காமம் உண்டு நண்பரே..நாயகன்,நாயகி இடையே காதலும்,காமமும் சேர்ந்தாற் போல வரும்.
Like Reply
(16-10-2024, 09:16 PM)M.Raja Wrote: Excellent update.. சோழர் காலத்தில் அருள்மொழி மற்றும் ரோஹிணி கேரக்டர் உருவகம் அருமை.அதுவும் இருவர் அழகை ஒப்பிட்டு சொன்னவிதம் சூப்பர்.

நன்றி நண்பரே
Like Reply
(16-10-2024, 09:57 PM)omprakash_71 Wrote: ரோகிணியும் அருள்மொழியும் ஆடிய நடனம் வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் பாடல் பெற்ற உள்ளது நண்பா சூப்பர்

நன்றி நண்பா
Like Reply
Review for update 139

Thodarchi sirapana sethukal sariyana kadhai kalam mattrum adhanai nerulil pakum padi
Kondu ponaah vithaam tharamanah seigai
As usual story la travel agah vachitinga brother
Ilango character konjam strong writing sirapah iruku
Ilangai ilavarasan nari thanthiram sirapana nagarvugal
History la nadkuraa feel chinna chinna vishyam kuda sirapagah irunthathu

Yaru antha rohini waiting for her look
Heart அன்புடன் கிருஷ் KJ 





[+] 1 user Likes krishkj's post
Like Reply
Super duper update.kathaiyil kaamam illai endraalum nandraaga ullathu
[+] 1 user Likes Priya99's post
Like Reply
(17-10-2024, 09:51 PM)krishkj Wrote: Review for update 139

Thodarchi sirapana sethukal sariyana kadhai kalam mattrum adhanai nerulil pakum padi
Kondu ponaah vithaam tharamanah seigai
As usual story la travel agah vachitinga brother
Ilango character konjam strong writing sirapah iruku
Ilangai ilavarasan nari thanthiram sirapana nagarvugal
History la nadkuraa feel chinna chinna vishyam kuda sirapagah irunthathu

Yaru antha rohini waiting for her look

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நண்பா..!ரோஹிணி யார் என்பது 140 வது பாகத்தில் வெளியாகி விட்டது.
Like Reply
(18-10-2024, 06:46 AM)Priya99 Wrote: Super duper update.kathaiyil kaamam illai endraalum nandraaga ullathu

Thank you
Like Reply
பாகம் - 141

சோழர் காலம்

நந்தவனத்தின் மத்தியில் ஒரு தடாகம் இருந்தது.அதில் தாமரை பூக்கள் மலர்ந்து பூத்து குலுங்கி கொண்டு இருந்தன.அந்த தடாகத்தின் ஓரத்தில் அருள்மொழி அமர்ந்து அழகை ரசித்து கொண்டு இருக்க,அவள் கழுத்தில் மகிழம் பூ அணிந்து இருந்தாள்.அதன் வாசம் நாற்புறமும் பரவி வீசி கொண்டு இருந்தது.தடாகத்தில் கொக்குகள் ரெண்டு சேர்ந்து ஒய்யாரமாக நடந்து கொண்டு தன் அலகுகளால் செல்லமாக காதல் சண்டையிட்டு கொண்டு இருந்தது.அதை பார்த்த அருள்மொழியின் வேல்விழிகள் விரிந்தன.இதழில் அழகான குறும்நகை பிறந்தது.அவள் இதழ்கள் புன்னகைக்கும் பொழுது வேல் விழிகள் அதற்கேற்ப சேர்ந்து அதுவும் புன்னகை சிந்தியது.ஆனால் அது சற்று நேரம் தான்.உடனே அவள் விழிகள் பயத்தில் அதிர்ச்சி அடைந்தன.காரணம் சற்று தூரத்தில் அந்த இரண்டு கொக்குகளில் ஒன்றை வேட்டையாட ஒரு காட்டு பூனை பதுங்கி நேரம் பார்த்து பாய காத்து இருந்தது..ரெண்டு கொக்குகளும் மெய்மறந்து காதல் சண்டை போட்டு கொண்டு இருக்க,இது தான் தருணம் என காட்டு பூனை சீறி பாய்ந்தது.அருள்மொழி சற்றும்  தாமதிக்கவில்லை.பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து கொக்கை நோக்கி எறிந்தாள்.பயந்த கொக்குகள் உடனே பறக்க,பாய்ந்து வந்த காட்டு பூனைக்கு ஏமாற்றமாகி போனது.அதன் கோபம் அருள்மொழி பக்கம் திரும்பியது.
அருள்மொழியின் தளிர்மேனி அதன் கண்களில் பட்டது.அவளை வேட்டையாடும் அளவுக்கு அதன் உருவம் இல்லை.ஆனால் தன் உணவை தட்டிபறித்த அவள் மேனியில் காயத்தை உண்டு பண்ண முடியும் என அதற்கு புரிந்தது..

"மியாவ்" என உருமிகொண்டு தன் கோரை பற்களை  காட்டி கொண்டு வாலை கோபத்தில் பெரிதாக்கி கொண்டு ஒரு அடி எடுத்து முன்னே வைத்தது. தன் மேல் பாய போகிறது என அருள்மொழி உணர்ந்தாள்.மீண்டும் ஒரு குச்சியை எடுத்து அதன் மேல் எறிந்தாள்.ஆனால் அதற்கு பெரிதாக காயம் உண்டாகவில்லை.ஆனால் பூனையின் கோபம் இன்னும் அதிகமாகி அவளை நோக்கி சீறி பாய கால் நகங்கள் வெளிபட்டன.அவள் கண்களில் பூனையின் உருவம் பெரிதாகி வருவதன் மூலம் பூனை அவளை நெருங்கி வந்து விட்டதை உணர முடிந்தது.அவள் கன்னத்தில் நகங்களை ஓங்கி பதிக்கும் நொடியில் இளங்கோ அருள்மொழியை தன் பக்கம் இழுத்தான்..பூனையின் நகங்கள் அவன் கழுத்தில் பதிந்தது..பாய்ந்த வேகத்தில் அவன் மீது மோதி கீழே விழுந்த பூனை திடீரென முளைத்த புது உருவத்தை பார்த்து மிரண்டது.அவளிடம் காட்டிய வீரத்தை அவனிடம் காட்டினால் அடுத்த நொடி சிவலோக பதவி தான் என்று புரிந்து கொண்டது.உடனே பக்கத்தில் இருந்த புதருக்குள் ஒடி மறைந்து கொண்டது.

அருள்மொழி கண் விழித்து பார்க்க,தான் அழகான வாலிபனின் கைகளில் இருப்பதை உணர்ந்தாள்.அவன் விரல்கள் அவளின் பஞ்சு போன்ற இலவம்பஞ்சு இடுப்பில் வீணை வாசித்து கொண்டு இருக்க அவள் மேனி சிலிர்த்தது.
அவன் கைகள் அவள் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து அவளை கீழே விழாத வண்ணம் தாங்கி பிடித்து இருந்தது..அவள் முகம் கீழ் இருக்க,அவன் முகம் மேலே அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தது.அண்ணலும் நோக்கினான்,அவளும் நோக்கினாள்.இருவர் கண்கள் ஒன்றையொன்று சந்தித்தன..ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தனர்.இருவருக்கும் யுகம் யுகமாய் கடந்து போன உணர்வு.எவ்வளவு நேரம் பார்த்து கொண்டே இருந்தார்கள் தெரியவில்லை.பூனை கீறியதால் இளங்கோவின் கழுத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் அவள் மூக்கின் மீது விழ,அவள் உடனே அவள் பதறி "அச்சோ இரத்தம்"என நிமிர்ந்து எழுந்தாள்.உடனே தன் மேலாடையால் அவன் இரத்தத்தை துடைக்க,இளங்கோ சிரித்தான்..

"வாளும், ஈட்டியும் பாய்ந்து காயங்கள் உண்டான மேனியில் சிறு பூனையின் காயம் என்னை என்ன செய்து விட போகிறது."என அவன் கூறினாலும் அவள் கண்களில் நீர் துளிர்த்தது..

அவள் கண்ணீரை பார்த்ததும்,"தேவி,தாங்கள் ஷத்ரிய வம்சத்தினர்..உங்களுக்கே நன்றாக தெரியும்..வீரனுக்கு இதை விட பெரிய பெரிய காயங்கள்,ஏன் மரணம் கூட என்று அவன் சொல்ல,உடனே அருள்மொழி அவன் வாயை கைவைத்து  பொத்தினாள்.

"மரணம் கூட ஏற்படும் என நான் அறிவேன்..இளவரசே..!ஆனால் உங்கள் மேனியில் ஏற்படும் காயம் என் மனதில் ஏனோ மிகுந்த வலியை உண்டாக்குகிறது."என அவள் சொல்லும் பொழுதே அவள் கண்களில் இன்னும் நீர் கசிந்தது..

தேனினும் இனிய அவள் குரலின் ஓசையை கேட்ட இளங்கோ"அப்பாடா உங்கள் குரல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று..இன்று தான் உங்கள் குரலை கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.இதற்கு முன் வெறும் பார்வை...பார்வை மொழிகள் மட்டுமே.."என சிரித்தான்.

அருள்மொழியும் புன்முறுவலுடன்"என்ன செய்வது இளவரசே..!சிறு வயதில் என் அண்ணனிடம் சண்டை ஏற்படும் பொழுது எல்லாம்  என் மனம் கவர்ந்த சிறுவன் ஓடோடி வந்து என்னை காப்பாற்றுவான்.அவன் என்னை விட்டு ஒருநாளும் பிரிந்ததே கிடையாது..எங்கும் அவன் கை பிடித்தே நான் ஊர் சுற்றி இருக்கிறேன்.எந்த விளையாட்டு ஆனாலும் நான் அவனுடன் தான் விளையாடுவேன்.ஆனால்  எப்பொழுது நான் பெரிய மனுஷி ஆனேனோ, அன்றே அவன் என்னை விட்டு விலகி விட்டான்.என் அருகில் கூட வருவது கிடையாது.."என அருள்மொழி வருத்தமாக சொன்னாள்.

"உண்மை தான் தேவி.இந்த சமூகம் அவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.உடன் பிறந்த தங்கையே ஆனாலும் குறிப்பிட்ட வயது வரை தான் தொட்டு பேச முடியும்.பெண்கள் பூப்பெய்திய உடனே  நம் சமூகம் ஆணை விலக சொல்கிறது..என்ன செய்ய.."

அருள்மொழி அவனை சீண்டும் நோக்கத்துடன்"அப்படியா..!இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன் தாங்கள் என் மேனியில் எங்கு கை வைத்து இருந்தீர்கள் தெரியுமா.."என கேட்டாள்.

"அதுவந்து..தேவி..!"என இளங்கோ சற்று ராகம் இழுத்து,"ஆபத்தில் இருந்து உங்களை காப்பாற்றவே உங்கள் கைபிடித்து இழுக்க வேண்டியதாகி விட்டது.அப்பொழுது தாங்கள் இந்த நிலமகள் மீது விழ இருந்தீர்கள்.நிலமகள் மீது விழுந்து எங்கே இந்த நிலாமகளுக்கு காயம் உண்டாகுமோ..என்ற அச்சத்தில் தான் உங்கள் கொடி இடையை தாங்கி பிடித்தேன்.."என்று இளங்கோ கூற அருள்மொழி வெட்கத்தில் சிவந்தாள்.

"உண்மையை சொல்லட்டுமா..தேவி..!தாங்கள் என் கையில் இருக்கும் பொழுது கனமே தெரியவில்லை.ஏதோ ஒரு பூ என் கையில் இருப்பது போல தான் இருந்தது."என்று அவன் சொல்ல நாணத்தில் அருள்மொழி தலை குனிந்தாள்.

அவன் கைபிடித்து உள்ளங்கையை அருள்மொழி ஆராய்ந்தாள்.

'என்ன பார்க்கறீங்க தேவி..!"

"எனக்கு ஒரு ஐயம் இளவரசே..! வாள் பிடித்து போர்களத்தில் சமர் செய்த தங்கள் விரல்கள் பார்க்க மிகவும் உறுதியாக இருக்கின்றன.ஆனால் நீங்கள் என் இடுப்பில் கைவைத்த பொழுது எதிரியிடம் சமர் செய்த விரல்களா இவை என்ற எண்ணம் தோன்றியது..உங்கள் விரல்கள் என் மேனியை தீண்டிய பொழுது மயிலிறகு வருடுவது போல அன்பை மட்டுமே உணர்ந்தேன்..அதனால் தான் உங்கள் விரல்களின் வலிமையை பரிசோதிக்கிறேன்..இந்த விரல்களா எதிரிகளின் தலைகளை பந்தாடியது.. "என அருள்மொழி ஆச்சரியமாக கேட்டாள்..

"தேவி..என்ன தான் சிங்கம் ,மற்ற மிருகங்களை காட்டுத்தனமாக வேட்டை ஆடினாலும், தன் குட்டியை வாயில் கவ்வும் பொழுது அன்பு மட்டுமே வெளிப்படும்..அது போல தான் இது

இளங்கோ அவள் கண்களை பாத்து,"தேவி...! சிறுவயதில் உங்கள் விரல் பிடித்து காவிரி கரையில் நடந்த அந்த இனிமையான நாட்கள் போல,மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா..! என என் மனம் ஏங்குகிறது.."என இளங்கோ ஏக்கத்துடன் சொல்ல..

அருள்மொழி வெட்கத்துடன்,"ம்..அதை சொல்ல தான் நான் உங்களை அழைத்தேன் இளவரசே..!நீங்கள் என்னை மணம் புரிந்தால் மீண்டும் அந்த பழைய நினைவுகள் உயிர்பெறும்.."என அவள் சொல்ல,அந்த வார்த்தைகளில் இளங்கோ மெய்மறந்தான்.

"தேவி....."என்று அவன் அழைக்க,அருள்மொழி அழுத்தமாக தன் இளமையான மாங்கனிகள் நசுங்க அவனை கட்டிக்கொண்டாள்..

கொஞ்சம் நேரம் கூட கடக்கவில்லை.."அருள்மொழி..!என்று ஆக்ரோஷமான குரல் கேட்டு பிரிந்தார்கள்.அந்த குரல் யாருடையது என உணர்ந்து இருவருமே பிரிந்தார்கள்..

[Image: images-4.jpg]

அங்கே ரோஹிணியை அப்படியே தனியாக விட்டு வந்தோம் அல்லவா..!அங்கே கொஞ்சம் செல்லலாம்..

தன்னை ஒரு ஆண்மகன் நிராகரித்தான் என்பதை ரோஹிணியால் ஏற்று கொள்ளவே முடியவில்லை..தன்னை மீண்டும் அருள்மொழி மீண்டும் தோற்கடித்து விட்டாள் என்ற கோபம் வேறு அவளை மதியிழக்க செய்தது..அங்கே திருக்குளம் அவளின் கண்ணில் பட,அதில் குதித்து மாய்த்து கொள்ள எண்ணி விறுவிறுவென சென்றாள்.. குளத்தில் குதிக்க முற்பட்ட ஒரு நொடி அவள் கரங்களை இன்னொரு கரம் பற்றியது.ரெண்டுமே ஒரே நிறத்தில் இருந்தன..முகத்தை மறைத்து இருந்த திரையை அவன் விலக்க,மாறுவேடத்தில் இருந்தாலும் அவன் தன் தம்பி என்பதை ரோஹிணி உணர்ந்து கொண்டாள்.

அவன் முகத்தில் அதிர்ச்சியுடன்"ரோஹிணி..!என்ன காரியம் செய்ய துணிந்தாய்..நீயும்,நானும் ஒரே கருவறையில் இருவரும் இருந்து,எனக்கு முன் ஒரேயொரு வினாடி பிறந்து என் தமையவள் ஆனவள் அல்லவா நீ.ஏன் இந்த விபரீத முடிவு..!"என சிங்கள இளவரசன் கேட்டான்...

அவனை பார்த்த உடன் ரோஹிணிக்கு,அடக்கி வைத்து இருந்த அழுகை பீறிட்டது..

"என்ன ஆயிற்று..சொல்லு..ரோஹிணி.."என அவள் தம்பி அவளை தேற்றினான்.

"நான் தோற்று விட்டேன்..ஹர்ஷா...!தோற்று விட்டேன்..என் அழகை கொண்டு இந்த உலகத்தில் உள்ள யாரையும் வசப்படுத்த முடியும் என்று இறுமாந்து இருந்தேன்.ஆனால் என்னை ஒருவன் எச்சில் இலை போல தூக்கி எறிந்து சென்று விட்டான்.."என்று அவள் அழுதாள்.

"யார் அது சொல் ரோஹிணி..அவனை இப்பொழுதே இழுத்து வந்து உன் காலில் விழ செய்கிறேன்.."என்று அவன் கூற ரோஹிணி விரக்தியாக சிரித்தாள்..

"போடா...முட்டாள்..!நானே அவன் காலில் விழுந்து தான் உன் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்.."என அவள் சொல்ல,

"இளங்கோவா..!என ஹர்ஷா கேட்டான்..

"ஆமாம்..அவன் இந்த நாட்டின் இளவரசி அருள்மொழி உடன் காதல்வயப்பட்டு இருக்கிறான்.அதனால் தான் என்னை உதாசீனப்படுத்துகிறான்.இந்த அவமானத்தை பொறுத்து கொண்டு நான் உயிர்வாழ வேண்டுமா சொல் என் சகோதரனே..!"

"அதற்காக தாங்கள் உயிர் துறக்க வேண்டியது இல்லை இளவரசி..!தங்களை அவமானப்படுத்தியவர்கள் தான் உயிர் துறக்க வேண்டும்.."என்ற  குரல் கேட்டு தான் ரோஹிணி தன் தம்பி பக்கம் நிற்பவனை அப்போது தான் பார்த்தாள்.கருத்த மேனி,திடகாத்திரமான உடம்பு,முறுக்கேறிய கைகள் கொண்ட உருவத்தை பார்த்தாள்.சிங்கத்திடம் சண்டை இடும் பொழுது அவன் முகத்தில் சிங்கம் ஒரு அறை விட இடது பக்க முகத்தில் இருந்த பாதி சதை விழுந்து விட்டது.அதனால் அவன் முகம் காயம் ஆறிய பின்னரும் வலது பக்கம் சதை அதிகமாகவும்,இடது பக்கம் சதை குறைவாகவும் ஒழுங்கற்று முகம் அஷ்ட கோணலாய் இருந்தது.அவன் தான் இடும்பன்காரி..

ஹர்ஷா அவளிடம்"ரோஹிணி..இவர் பெயர் இடும்பன்காரி..பாண்டிய தேசத்தை சேர்ந்தவர்..சோழர்களின் எதிரி..நமக்கு நண்பன்..நமக்கு உதவவே இங்கு வந்து உள்ளார்.."

ரோஹிணி அவன் பார்வையை ஆராய்ந்தாள்.அவன் பார்வை அவள் மேனி முழுக்க மேய்வதை பார்த்த உடனே அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டாள்.

இடும்பன்காரி அவளிடம்"உங்களை போன்ற ஒரு பேரழகியை துறந்த அந்த இளங்கோ முற்றிலும் மதி இழந்தவன் தான் இளவரசி' என இடும்பன்காரி கூற,ரோஹிணி அவன் உடல் வலிமையை கண்களினால் ஆராய்ந்தாள்.

ரோஹினி ஹர்ஷாவை பார்த்து,"ஹர்ஷா..! நான் சாப்பிட ஏதாவது பழம் நீ கொண்டு வா. நான் இவரிடம் கொஞ்சம் பேச வேண்டும்"என சொல்ல ஹர்ஷா அவ்விடம் அகன்றான்.

"என்ன இது வேஷம்..!"ரோஹிணி கேட்க,

இடும்பன்காரி அவளிடம்,"இந்த ஊருக்குள் எல்லை வீரர்களை தாண்டி உள்ளே நுழைய ஒரு வேஷம் தேவைப்பட்டது தேவமங்கையே..!சரியாக அந்நேரம் ஒரு நாடக கோஷ்டி உள்ளே நுழைய, நான் கம்சன் வேடம் பூண்டு ஊருக்குள் நுழைந்தேன்.."என்று சொன்னான்.

"உங்களால் எனக்கு உதவ முடியுமா..!"என ரோஹிணி கேட்டாள்..

"கட்டளை இடுங்கள் இளவரசி..நீங்கள் காலால் இடும் வேலையை தலையில் வைத்து செய்ய நான் காத்து இருக்கிறேன்..நீங்களும்,உங்கள் தம்பியும் அச்சு எடுத்தது போல ஒரே மாதிரி உள்ளீர்கள்.."என அவன் சொன்னான்.

ரோஹிணி அதற்கு"ஆமாம்,நாங்கள் இருவரும் ரெட்டை பிறவிகள்..நான் நேராக விசயத்திற்கு வருகிறேன்.உன்னால் இளங்கோவை கொல்ல முடியுமா.."என கேட்டாள்.

"கண்டிப்பா முடியும் இளவரசி..இளங்கோவை எதிர்த்து தனியாகவே என்னால் வீழ்த்த முடியும்..என் கைப்பிடியில் அவன் தலை சிக்கி கொண்டால் போதும் நசுக்கியே அவன் தலையை சாறு பிழிந்து அவனுக்கு கோர மரணத்தை பரிசு அளிப்பேன்.."என தன் இரு கையை இருப்பக்கம் உயர்த்தி காட்டினான்.அவனது பிரமாண்ட உருவத்தை பார்ப்பதற்கு இராவணன் கையாலய மலையை தூக்குவது போல இருந்தது.

"சரி..உன்னை நான் நம்புகிறேன்..அவனை கொன்று விட்டு என்னிடம் வா.உனக்கு விலையுயர்ந்த வைர ஆபரணங்களை பரிசு அளிக்கிறேன்"என ரோஹிணி சொல்ல,

இடும்பன்காரி சற்று தயக்கத்துடன்,"ஆனால் தேவி எனக்கு எந்த வைர ஆபரணமும் வேண்டாம்..!அதற்கு பதில் உலகத்திலேயே அரிய,யாருக்கும் கிடைக்காத ஒன்று தங்களிடத்தில் உள்ளது.அது தான் வேண்டும்..."என கேட்டான்.

"என்ன வேண்டும் கேள்..தருகிறேன்.."ரோஹிணி சொல்ல,

அவன் தம்பி வருவதை பார்த்த இடும்பன்காரி,"இளங்கோவை தீர்த்து கட்டுவதற்கான திட்டத்தை வகுத்து கொண்டு நாளை உங்களை சந்திக்கிறேன் இளவரசி..அப்போ நான் விரும்பியதை கேட்கிறேன்.."என்று சொல்லி முடிக்கவும் சிங்கள இளவரசன் அருகில் வந்து விட இவர்கள் பேச்சு நின்றது..

யாரை கண்டு பயந்து அருள்மொழி மற்றும் இளங்கோ பிரிந்தார்கள்.

இடும்பங்காரி ரோஹிணியிடம் கேட்க போவது என்ன?

நிகழ் கால பிரியங்காவை விட்டு வந்து நீண்ட நாட்களாகிறது.


அடுத்தடுத்த பாகங்களில்.
தொடரும்...

இந்த கதை 150 பாகங்களில் முடித்து விடலாம் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் சோழர் கால கதை விரிவாக எழுதுவதால் 150 பாகங்கள் கடந்து செல்லும் என நினைக்கிறேன்.

[Image: images-2.jpg]
Like Reply
SUPER UPDATE. ARULMOZHI WITH ILANGO IS A MAGICAL ONE.
Like Reply
மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Rohini kadhal oru thalai anathu pola
Adhku ilangavo kolvathu pondraa ennam enanoo
Idumbam kedu ketta jenmam pola
Harsha veeram illatha jenmam
Kadhal katchikal arumai kattu punaai vaithu oru etharthamamah
Kadhai nagarvum sirapu...
Arulmozhi udan ilango pesiyey anaithum arputhamagah sethuki irukinga
Sentamizh varthaigal arumai.. Anu likitha idhula pakamalah irukanga
Enaku ennavo kadhai 175 update varum thonudhu
Heart அன்புடன் கிருஷ் KJ 





[+] 1 user Likes krishkj's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)