Posts: 225
Threads: 3
Likes Received: 153 in 121 posts
Likes Given: 61
Joined: Feb 2020
Reputation:
0
(10-10-2024, 08:59 PM)snegithan Wrote: பாகம் - 138
மன்னர் காலம்
பொங்கி பெருகி ஒடும் காவிரி கரையில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா பறந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின..ஆனால் அதன் இயற்கை அழகை ரசிக்க முடிந்ததே தவிர,அதன் குளிர்ச்சியை உணரமுடியவில்லை..அதை உணர பஞ்சபூத கலவையான உடல் தேவை என்று அவர்களுக்கு தெரிந்தது.வயல் வெளிகளில் ஓரம் அங்கங்கே நெல் குவியல்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தன..யானைகளை கட்டி நெல்லை போர் அடித்து கொண்டு இருந்தார்கள்.. சோழ நாடு சோறு உடைத்து என்ற கூற்று முழுக்க முழுக்க உண்மை என்று அவர்களுக்கு புரிந்தது.ஆனால் அப்படி இருந்த சோழ நாடு இப்போ இருக்கும் நிலைமையை ஒப்பிட்டு பார்த்து உள்ளுக்குள்ளே அவர்களுக்குள் ஏக்கமும் எட்டி பார்த்தது..
அப்போ நம் முன்னோர்கள் சொன்னது எல்லாம் நிஜம் தான் என்று உணர்ந்தார்கள்.ஊருக்கு நான்கைந்து மைதானங்கள் கட்டி வைக்கப்பட்டு அதில் பல வாலிப இளைஞர்கள் வேல் எறிதல், வாள் பயிற்சி,மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
வயதில் சின்ன பெண்கள் தெருக்களில் ஒருபக்கம் பல்லாங்குழி ஆடி கொண்டும்,நொண்டி ஆடுதல்,இன்னும் பல கேளிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்..வயதுக்கு வந்த பெண்கள் தங்களுக்கு உரிய கட்டிளங்காளைகளை தேர்வு செய்து பார்வையால் வசியம் செய்து கொண்டு இருந்தனர்.
எல்லா ஆண்மகன்களுமே பார்ப்பதற்கு நன்கு திடகாத்திரமாக இருந்தனர்..இப்போ இருப்பது போல வயிற்றில் தொந்தி,உடல் பருமன்,தலை வழுக்கை இது போன்று எதுவுமே காணப்படவில்லை..
அறுபது வயது கிழவன் கூட மிக திடகாத்திரமாக சர்வ சாதாரணமாக மிக எடையுள்ள பொருட்களை தூக்கி சென்று கொண்டு இருந்தான்..
"இதில் எங்கேடி இளங்கோவை கண்டுபிடிப்பது" என அனு புலம்பினாள்..
"ஏதோ கொடும்பாளூர் இளவரசன் என்று சொன்னாங்க அனு,இளவரசனை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தால் இங்கே அனைவரும் ராஜ குமாரர்கள் போல தெரியுதே..நாம் வந்த காரியம் எளிதான காரியம் என்று நினைத்தேன்,ஆனா மிகவும் கஷ்டமான காரியம் போல இருக்கு.."என லிகிதாவும் புலம்பினாள்..
"லிக்கி..!ஊரு முழுக்க குதுகாலமா இருக்கு..ஏதோ விசேஷமாக இருக்கு என நினைக்கிறேன்.."அனு சொல்ல,
"ஆமா"என்று லிகிதாவும் ஆமோதித்தாள்.
இருவரும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்,மக்கள் பேசுவதையும் உற்று கேட்க,அங்கு கூடிய விரைவில் இலங்கையில் இருந்து கொண்டு வந்த பாண்டியனின் மணிமுடி மூலம் ராஜேந்திர சோழன் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய போவதை அறிந்தனர்.
"ஏண்டி லிக்கி,இவ்வளவு தானிய வளம் இருந்தும் பிற்காலத்தில் நம் தமிழ்நாட்டில் மட்டும் தாது பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பசி,பட்டினியால் வாடி எப்படி இறந்தனர்..?"என அனு சரியாக கேட்டாள்.
"தாது பஞ்சம் ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அனு..!ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் இறந்த பொழுது கூட அப்பொழுது நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஒருத்தனும் இங்கே பசியால் இறக்கவில்லை..இத்தனைக்கும் அன்று அவன் உலகம் முழுக்க ஆண்டு கொண்டு இருந்தான்.அவன் நினைச்சு இருந்தா இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தோ,இல்ல வேறு நாடுகளில் இருந்தோ எளிதாக பசி,பஞ்சத்தை போக்கி இருக்க முடியும்.ஆனா அவன் அப்படி பண்ணல.நம் முன்னோர்களை எல்லாம் செத்து தொலையட்டும் என்று தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
இப்போ இருக்கிற சோமாலியா ஒரு காலத்தில் வளம் மிக்க நாடாக இருந்தது.ஆனா இந்த மேற்குலக நாடுகள் கிட்ட சிக்கி கொண்டு அந்நாட்டு மக்கள் இப்போ பசி, பட்டினியால் வாடுறாங்க.அதுக்காக ஆங்கிலேயர்கள் நமக்கு நல்லதே செய்யலயா என்று கேட்டால், செயிஞ்சு இருக்காங்க என்று சொல்வேன்..ஆனா அவங்க செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்..அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தரும் நன்மைகளை மட்டுமே செய்வார்கள்.."என்று லிகிதா சொல்ல அனுவுக்கு நன்றாக புரிந்தது.
"யப்பா..உனக்கு நிறைய விசயம் தெரியுது லிக்கி"என அனு வியந்தாள்.
'ம்...எனக்கு வரலாறை தேடி படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் அனு.."என லிகிதா சொன்னாள்.
சோழ நாட்டில் பல்வேறு சிற்றரசர்கள் இருந்தனர்.. பழுவேட்டையரர்,கொடும்பாளூர், வாணர் குலம்,மலையமான்,சம்புவரையர் இப்படி பல சிற்றரசர்கள் இருந்தனர்.அதில் சுந்தர சோழன் காலர் காலத்தில் மிக செல்வாக்கு மற்றும் முக்கிய பதவிகளை பெற்று இருந்த பழுவேட்டரையர் குலம் கொஞ்ச கொஞ்சமாக செல்வாக்கு இழந்து கொடும்பாளூர் குலத்தின் கையில் அதிகாரம் போய் சேர்ந்தது.. ராஜராஜ சோழன் திருமணம் செய்தது கொடும்பாளூர் இளவரசியான வானதியை தான்.சொல்லவே தேவை இல்லை இப்போ அரசனாக வீற்று இருக்கும் ராஜேந்திர சோழனின் அன்னை வானதி தான்.ராஜேந்திர சோழனுக்கு இரு புதல்விகள்.ஒருவர் அருள்மொழி நங்கை,இன்னொருவர் அம்மங்கா தேவி..
அக்காலத்தில் மன்னர்கள் எப்பொழுதும் ஒன்று போரிட்டு இன்னொரு நாட்டை வெற்றி கொள்வர்.அல்லது பொண்ணு கொடுத்து அல்லது பொண்ணு எடுத்து நாட்டை நட்பாக்கி கொண்டு எல்லைகளை விரிவுபடுத்தி கொள்வர்.அப்படி தான் ராஜ ராஜ சோழனும் தனக்கு பிறந்த மகளை வேங்கி நாட்டுக்கு கொடுத்து நட்பாக்கி கொண்டார்.இப்போ ராஜேந்திர சோழனும் அவ்வழியே வேங்கி நாட்டின் இளவரசான நரேந்திரனுக்கு தம் மகளை கல்யாணம் செய்து கொடுத்து நட்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என விரும்பி இருந்தான்.ஆனால் அவள் மகளான அருள்மொழி நங்கை அதற்கு மாறான எதிர்மறை விருப்பம் கொண்டு இருந்தாள்.அவளுக்கு தம் பாட்டியின் குலத்தில் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பம்.
கங்கை வரை சென்று போரிட்டு வென்று அங்கிருந்து பெரிய பெரிய பானைகளில் கங்கை நீரை யானைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.இந்த நீரை கொண்டு தான் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய போவதாக மக்கள் பேசி கொண்டு இருந்தனர்.
காசி வரை சென்று வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையே ராஜேந்திர சோழன் உருவாக்கி இருந்தான்.அந்த நகருக்காக காவிரி நீரை திருப்பி ஒரு பெரிய ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கி இருக்க,அந்த ஆற்றின் ஓரத்தில் அழகான பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்..அவர்கள் மேனியின் வனப்பை பார்த்தாலே அரண்மனை பெண்கள் என்று எளிதாக அடையாளம் தெரிந்தது.எல்லோரும் ஒருவரையொருவர் நீரை அள்ளி தெளித்து விளையாடி கொண்டு இருந்தனர்.
ஊர் முழுக்க சுற்றி விட்டு சோர்ந்து போய்,ஆற்றோரம் இருந்த ஆலமரத்தில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வந்து சேர்ந்தது..ஆற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
அதில் இருந்த ஒரு பெண், தன் எஜமானியை பார்த்து,"தேவி, தாங்கள் மணம் முடித்து வேங்கி நாட்டுக்கு சென்று விட்டால் இந்த ஏழை பெண்களை எல்லாம் ஞாபகம் வைத்து இருப்பீர்களா.."என கேட்டாள்..
![[Image: IMG-eaa7jk.gif]](https://i.ibb.co/1GyWB63/IMG-eaa7jk.gif)
word font copy and paste
அந்த முக லட்சணம் பொருந்திய எஜமானி தன் தோழியை பார்த்து,"ம்,கேளடி என் வாய் துடுக்கு சங்கா..நான் திருமணம் செய்து கொண்டு வெளியே போக போவது இல்லை.எனக்கு பிடித்த இந்த சோழ நாட்டில் தான் தங்க போகிறேன்.."என கூறினாள்.
பதிலுக்கு அவள் பணிப்பெண்ணோ,"அது எப்படி சரியாகும் தேவி...திருமணமானால் பெண்கள், தன் கணவர் வீட்டுக்கு அல்லவா செல்வது தானே மரபு.
தாங்கள் மணம் முடித்தால் வேங்கி நாட்டுக்கு அல்லவா செல்ல நேரிடும்..வேங்கி நாட்டு இளவரசன் இங்கு தங்க சம்மதிக்க மாட்டாரே.."என வினவினாள்..
அதை கேட்டு அவள் எஜமானி சிரித்தாள்.."நான் வேங்கி நாட்டு இளவரசனை திருமணம் செய்தால் தானே இங்கு இருந்து செல்ல நேரிடும்.ஆனால் நான் தான் நரேந்திரனை திருமணம் செய்ய போவது இல்லையே.."
அந்த பணிப்பெண்ணும் விடாமல்,"தேவி..!இன்னும் ரெண்டு நாளில் தங்கள் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்ய போகிறார்கள்..பட்டாபிஷேகம் முடிந்த உடனே அடுத்து உங்கள் திருமணம் என்று தான் அரண்மனையில் பேச்சு..மாமன்னர் ராஜேந்திர சோழன் பேச்சுக்கு யாராவது ஒருவர் எதிர் பேச்சு இவ்வையகத்தில் பேச முடியுமா..?அவர் எடுக்கும் முடிவை தான் யாராவது தடுக்க முடியுமா..!அதுவும் உங்கள் திருமணம் ராஜாங்க ரீதியானது.போயும் போயும் பெண்ணான உங்களால் இதை தடுக்க முடியுமா"என பரிகாசம் செய்தாள்..
"சிரிப்பை நிறுத்துடி,என் சில்வண்டு..எங்கள் வம்சத்தில் செம்பியன்மாதேவி முதல் என் பாட்டியார் குந்தவை பிராட்டி வரை எப்பவுமே ராஜாங்க ரீதியில் முடிவு எடுத்து உள்ளார்கள்..பெண்கள் பேச்சுக்கு எப்பவுமே சோழர் வம்சத்தில் மரியாதை அளிப்பர்.அந்த வம்சத்தில் வந்த அருள்மொழி நங்கை நான்..என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே உள்ளது."
![[Image: IMG-pk38nf.gif]](https://i.ibb.co/Qb3Czsc/IMG-pk38nf.gif)
இவர்கள் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருக்கும் பொழுது ஒரு முதலை இவர்களை நெருங்கி விட்டு இருந்தது.சற்று தாமதமாக தான் கூட்டத்தில் இருந்த பெண் கவனித்து"முதலை..முதலை என்று கூவி கொண்டு ஓட்டமும் நடையுமாக கரையை நோக்கி பாய்ந்தாள்.மற்றவர்களும் கரையை நோக்கி ஓட,அருள்மொழியின் கால்கள் கல் இடுக்கில் சிக்கி கொண்டது..என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தள்ளாட,முதலை தன் அகல வாயை திறந்து கொண்டு விழுங்க வந்தது.அவ்வளவு தான் கைலாச பதவி தான்"ஈசனே என்னை காப்பாற்று" என்று அவள் கத்திய வேளையில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு ஈட்டி சரியாக முதலையின் வாய்க்குள் பாய்ந்தது..அடுத்த நொடி மின்னல் போல் ஆற்றுக்குள் பாய்ந்த அவன் அருள்மொழியை மீட்டு கரையில் கொண்டு சேர்க்கவும்,அங்கு கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ வாழ்க..என்ற கோஷம் எழுந்தது..
"ஈட்டியை குறிபார்த்து எய்தி,ஒரே நொடியில் எதிரியின் கணக்கை முடிப்பதில் வல்லவரான இளங்கோவின் ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வையகத்தில் உண்டோ.."என கரகோஷம் எழுந்தது.
இந்த கோஷத்தை கேட்ட உடனே,அனு மற்றும் லிகிதா துள்ளி எழுந்து பார்த்தனர்..ஆலமரத்தின் கிளைகளுக்கு நடுவே பார்க்க நடுநாயகமாய் அவனின் உருவம் தெரிந்தது.
ஆறடி குறையாமல் உயரம்,திடகாத்திரமான தோள்கள்,வலிமைமிக்க கரங்கள்,கட்டுடல் மேனி,லட்சணமான முகம் அதை பார்த்து ஆவியான அனுவின் ஆன்மாவுக்கே அவன் மேல் ஆசை வந்தது..
VERY GOOD UPDATE. EVERY WORD & LINES IS SUPER.
Posts: 359
Threads: 0
Likes Received: 166 in 144 posts
Likes Given: 230
Joined: Dec 2019
Reputation:
0
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Interestimg narration each lines makes travel in the story with our history
Sirapana kaatchi amaipum brother
Anu and likitha convo vachi oru valarauh padam kateenathku nandri
Likitha doctor thanah partha history la kuda terium pola
Heroine introduction maari semma thought
Ilangovan introduction also oru historical move
Mass anaah entry for him
அன்புடன் கிருஷ் KJ
Posts: 14,447
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,112
Joined: May 2019
Reputation:
34
சோழர் காலத்தில் நம் தமிழ்நாடு எவ்வளவு அழகாக இருந்ததை மிகவும் அருமையாக எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 653
Threads: 0
Likes Received: 238 in 203 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 465
Threads: 0
Likes Received: 188 in 156 posts
Likes Given: 248
Joined: Aug 2019
Reputation:
2
Historic stories are always gives a different reading experience. Hats off to you.
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(10-10-2024, 09:15 PM)Nam:);Santhosh Stanley Wrote: Lovely update
(10-10-2024, 10:23 PM)rkasso Wrote: Sema super update
(11-10-2024, 07:25 AM)Gitaranjan Wrote: Very nice
(12-10-2024, 04:11 AM)omprakash_71 Wrote: சோழர் காலத்தில் நம் தமிழ்நாடு எவ்வளவு அழகாக இருந்ததை மிகவும் அருமையாக எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
(13-10-2024, 08:02 AM)adangamaru Wrote: Semma thala
(13-10-2024, 08:22 AM)jiivajothii Wrote: Historic stories are always gives a different reading experience. Hats off to you.
Thanks நண்பர்களே..
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(11-10-2024, 08:24 PM)krishkj Wrote: Interestimg narration each lines makes travel in the story with our history
Sirapana kaatchi amaipum brother
Anu and likitha convo vachi oru valarauh padam kateenathku nandri
Likitha doctor thanah partha history la kuda terium pola
Heroine introduction maari semma thought
Ilangovan introduction also oru historical move
Mass anaah entry for him
மிக்க நன்றி நண்பா
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(11-10-2024, 09:34 AM)rameshsurya84 Wrote: VERY GOOD UPDATE. EVERY WORD & LINES IS SUPER.
Thank you bro
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
13-10-2024, 07:36 PM
(This post was last modified: 14-10-2024, 12:49 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
பாகம் - 139
மன்னர் காலம்
படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு இளங்கோவை தூக்கி தோளில் வைத்து கொண்டாட,அருள்மொழியால் இளங்கோவை நெருங்க முடியவில்லை..வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அவள் நாணத்தால் எப்படியும் அவனிடம் சென்று பேசி இருக்க போவது இல்லை. கண்களால் பேச போவதற்கு எத்தனை பேர் நடுவில் இருந்தால் என்ன..?இருவரும் மௌனமாக காதல் பாஷை பேசி கொண்டு இருக்க,தேவி என்று அழைக்கும் குரல் சங்காவிடம் இருந்து வந்தது..
"தேவி,நமக்கான வாகனம் வந்து விட்டது.வாருங்கள் அரண்மனை திரும்பலாம்" என்று சங்கா அழைக்க,அருள்மொழி அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஏக்கத்துடன் சென்றாள்.
அவள் ஏக்கத்தை இளங்கோவும் புரிந்து கொண்டான்.இதுவரை இளங்கோ ஒருமுறை கூட அருள்மொழியிடம் பேசியதே இல்லை.அவள் மேல் அவனுக்கும் காதல் தான்.செப்பு சிலை போல் இருக்கும் அவளை பார்த்து யாருக்கு தான் காதல் வராது.ஆனால் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவளை தவிர்த்து சென்று விடுவான்.காரணம் அவள் எட்டா உயரத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தது.அருள்மொழியை வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கு திருமணம் செய்ய தான் ராஜேந்திர சோழனுக்கு விருப்பம் என்பது ஊரறிந்த விசயம்..அது இளங்கோவிற்கு மட்டும் தெரியாமல் இருக்காதா..!மேலும் இளங்கோ சிற்றரசரின் மகன்.ஆனால் நரேந்திரனோ வேங்கி நாடு என்னும் பேரரசின் இளவரசன்.அதை நினைத்து தன் நிலையை எண்ணி அவன் ஒதுங்கியே நின்றான்.இருவருக்கும் உள்ள காதலை அனு,மற்றும் லிகிதா கவனித்து விட்டனர்.தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொண்டனர்.
அன்னப்பறவை வடிவில் இருந்த பிரமாண்டமான படகு நீரில் மிதந்து வர,அதில் அரண்மனை பெண்டிர்கள் ஏறினர். கொஞ்சம் கொஞ்சமாக இளங்கோ பார்வையில் இருந்து படகு மறைந்து போனது.
அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பள்ளிப்படை என்ற சுடுகாட்டில் மூன்று பேர் சந்தித்து உரையாடி கொண்டு இருந்தனர்..
"வா இடும்பன்காரி கொண்டு வந்த நற்செய்தி என்ன..?சாம்பவன் என்பவன் கேட்டான்..
இடும்பன்காரி சற்று தடிமனாக இருந்தான். "கோபத்தில் என் கண்கள் சிவக்கிறது சாம்பவா..இந்திரன் நம் வம்சத்திற்கு அளித்த மணிமுடியை எடுத்து அந்த ராஜேந்திர சோழன் அவன் மகனுக்கு முடிசூட்ட போகிறனாம்.."
சாம்பவன் அதிர்ந்து,"என்ன..! சோழர்களிடம் அந்த மணிமுடி கிடைக்கக்கூடாது என்பதற்காக தானே நாம் அதை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தோம்..அதையும் மீறி எப்படி அவர்களிடம் மணிமுடி கிடைத்தது.."
இடும்பன்காரி கோபம் குறையாமல் "எப்படியோ இலங்கையில் இருந்து போராடி கொண்டு வந்து விட்டார்கள் நம் எதிரிகள்..போதாக்குறைக்கு இலங்கையை வென்று சிங்கள மன்னன் மகிந்தனையும்,அவர் குடும்பத்தாரையும் கைது செய்து அழைத்து வந்து உள்ளார்கள்.அப்படி அழைத்து வரும் பொழுது மகிந்தனின் மகன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டான். சடாசரன் எங்கே..?இன்னும் வரவில்லையா..!என இடும்பன்காரி கேட்க,
"வரும்நேரம் தான் சாம்பவா..!ஆமாம் சிங்கள இளவரசன் தப்பித்து விட்டான் என்று சொன்னாயே..அவன் இப்போது எங்கே இருக்கிறான்.."என சாம்பவன் இடும்பன்காரியிடம் கேட்டான்.
"என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவன் இந்நேரம் நம் சடாசரனை சந்தித்து இருக்க வேண்டும்..இளவரசனை அழைத்து கொண்டு எந்நேரமும் சடாசரன் இங்கே பிரவேசிக்க கூடும்.நாம் அவனை அதற்காக தானே அனுப்பினோம்.."என இடும்பன் காரி கூறினான்..
இடும்பன்காரி கருந்திருமனை பார்த்து,"நீ சொல் கருந்திருமா..!நீ கொண்டு வந்த சேதி என்ன?
"இடும்பா,நீ சொன்னது போல அரண்மனையை நோட்டம் விட்டேன்.அதில் எனக்கு முக்கிய ரகசிய செய்தி கிடைத்தது.சோழர்கள் நாராயணபுரி ஏரியை பாசனத்திற்காக ஒன்றும் கட்டவில்லை."
"பின் எதற்காக கட்டி உள்ளார்கள்..கருந்திருமா.."
"சாம்பவா..!திடீரென ஒருநாள் சோழ வீரர்கள் என்னிடம் வந்து உனக்கு படகு ஒட்ட தெரியுமா?என்று கேட்டார்கள்..நானும் தெரியும் என்று சொன்னேன்.அவர்கள் என்னை ஏரியின் நடுவில் உள்ள நிலா மண்டபம் அழைத்து செல்ல சொன்னார்கள்..நானும் படகில் அமர்ந்து காத்திருக்க, சோழ நாட்டு இளவரசி தன் பரிவாரங்களுடன் வந்து ஏறினாள். நான் அவர்களை நிலா மண்டபம் அழைத்து சென்று விட்ட பிறகு என்னை அங்கிருந்த வேறு படகில் இருந்து கரை திரும்ப சொன்னார்கள்..எனக்கு ஒரு சந்தேகம்..நிலா மண்டபத்தில் இருந்து திரும்ப கரைக்கு அழைத்து செல்ல வேண்டாமா..?என்று கேட்டேன்.ஆனால் அவர்கள் வேண்டாம் என மறுதலித்து விட்டார்கள்..இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என படகை வேகமாக கரையை நோக்கி செலுத்தி விட்டு,மீண்டும் நிலா மண்டபத்தை நோக்கி உயிரை பணயம் வைத்து நீந்தியே வந்தேன்..அப்போ தான் எனக்கு அந்த ரகசியம் தெரிந்தது.."
"என்ன ரகசியம்..!"என இருவரும் ஆவலுடன் கேட்டனர்.
கருந்திருமன் அவர்களிடம்,"சாம்பவா..அந்த நிலா மண்டபத்தில் பரமசிவன்,பிரம்மனின் ஒரு தலையை கொய்வது போல சிலையை வடித்து உள்ளனர்.அந்த பரமசிவன் சூலாயுதத்தை ஒரு வீரன் பிரம்மனின் தலையை நோக்கி குத்த கீழே ஒரு ரகசிய வழி உண்டாகியது.அதில் உள்ளே இறங்கி நடந்து சோழ நாட்டு இளவரசி அரண்மனை சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.."
"என்னது ஏரிக்குள் ரகசிய வழியா..!இது எப்படி சாத்தியம்..!"இடும்பன்காரி கேட்க,
"நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்..இடும்பா.. நான் சொல்வது முற்றிலும் உண்மை.."என கருந்திருமன் கூறினான்.
சாம்பவன் அவனிடம்,"அவன் சொல்வது உண்மையாக தான் இருக்கும் இடும்பா,ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் கல்லணை கட்டியவர்கள் சோழர்கள்.இதோ இப்போ கூட நம்மை பிரமிக்க வைக்கும் நிழலே தரையில் படாமல் பெரிய கோவிலை தஞ்சையில் கச்சிதமாக கட்டி உள்ளார்கள்..அவர்களிடம் சிறந்த கட்டிட கலை அறிவு உள்ளது..நாம் அரண்மனைக்குள் சென்று அவர்களை கொல்ல சிறந்த வழி ஒன்றை கண்டுபிடித்து கொண்டு வந்து உள்ளாய் கருந்திருமா..உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நாம் பட்டாபிஷேகம் செய்யும் முன்னிரவு அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்க வேண்டும்.."
"ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு சாம்பவா..அந்த ஏரியில் நாம் நீந்தி செல்ல முடியாது..நானே மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பி வந்து உள்ளேன்.."
"நீ என்ன சொல்கிறாய் கருந்திருமா..சொல்வதை புரியும்படி சொல்."
"ஆம்..இடும்பா..!ஏரியில் முதலைகள் உள்ளன..!என் நீச்சலின் வேகம் உனக்கே தெரியும்.அவ்வளவு வேகத்தில் சென்றே ஒரு முதலை என்னை துரத்த ஆரம்பித்து விட்டது..அதன் வாயில் சிக்கும் நேரம் அங்கே இருந்த பாறையில் தாவி அமர்ந்து இரவு முழுக்க அங்கேயே கழித்தேன்.விடிந்த பிறகு மிகவும் கவனமாக நீந்தி வந்து கரை சேர்ந்தேன்.
"அப்போ அங்கே எப்படி போவது..!என்று இடும்பன் கேட்க,.
"இரவில் தான் அங்கு போக முடியும்.அதுவும் படகின் வழியே தான் அங்கே செல்ல முடியும்.."
அப்பொழுது காலடி சத்தம் கேட்க,உடனே மூன்று பேரும் தனித்தனியாக பிரிந்து சடசடவென அருகில் இருந்த மரங்களில் ஏறி,இலைகளுக்கு நடுவே தங்களை மறைத்து கொண்டனர்.
வந்திருந்த இருவரில் தங்களுக்கே உரிய சங்கேத மொழியில் கோட்டான் கூவுவது போல கூவிய உடன் மறைந்து இருந்த மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு கீழே குதித்தனர்.
"வா சடாசரா..!உன் வரவை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தோம்.ஏன் இந்த தாமதம்"என்று கேட்ட இடும்பன்காரி பக்கத்தில் ராஜ உடையுடன் மிடுக்கொடு இருந்தவனை பார்த்த உடன் இலங்கை இளவரசன் என்று புரிந்து கொண்டான்..
சடாசரன் அவர்களிடம்,"எங்கு நோக்கிலும் நம் பகைவர்கள் நிறைந்து உள்ளனர் இடும்பா..அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சிங்கள இளவரசனை இங்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.."
இலங்கை இளவரசன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க,அதை பார்த்த இடும்பன்"என்ன இளவரசே..!சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.."என்று கேட்டான்.
"இது என்ன இடம்"இலங்கை இளவரசன் கேட்க..
"இது நம் பகைவனின் பள்ளிப்படை வீடு.அதாவது சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் போர் புரிந்த இடம்..இங்கு தான் நம் பகைவனின் படைவீரர்கள் புதைக்கப்பட்டு உள்ளனர்."
"இங்கே மனிதர்கள் யாரும் இல்லையா"இலங்கை இளவரசன் கேட்க
"இங்கு ஆந்தைகளும்,நரிகளையும் ,நம்மை தவிர வேறு யாரும் இங்கு வருவது இல்லை."
"ஓ பகைவனின் படைவீட்டில் இருந்தே பகைவனை அழிக்கும் திட்டமா.."என்று இலங்கை இளவரசன் சிரித்தான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் முகம் வாடி போனது..
"ஏன் இளவரசே தங்கள் முகம் வாடி விட்டது.."
"எனக்கு இங்கே ஒரு எதிரி இருக்கிறான்.அவனை நான் அழிக்க வேண்டும்.."என அவன் கூறும் பொழுதே அவன் கண்கள் சிவந்தது.
"யார் அது இளவரசே..?"கருந்திருமன் கேட்டான்.
"கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான்."என சொல்லி கொண்டு இலங்கை இளவரசன் பற்களை நறநறவென கடித்தான்."ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட எங்களை சோழர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.எங்கள் கோட்டையை கைபற்றி விடுவார்கள்.ஆனால் இலங்கையில் உள்ள எங்களுக்கு மட்டுமே பரிச்சயமான அடர்த்தியான காடுகளில் நாங்கள் மறைந்து இருந்து சரியான சமயம் பார்த்து மீண்டும் எங்கள் கோட்டையை கைப்பற்றுவது தான் வழக்கமா இருந்தது.ஆனால் இந்த இளங்கோ நாங்கள் காட்டில் மறைந்து இருந்த இடத்தையும் கண்டு பிடித்து வெறும் சில வீரர்களை மட்டுமே வைத்து எங்கள் பெரும்படையை அங்கே நிர்மூலமாக்கி விட்டான்.நாங்கள் காட்டில் மறைத்து வைத்து இருந்த உங்கள் மணிமுடியையும் கைப்பற்றி விட்டான்.அவனோடு நேருக்கு நேர் சண்டையிட்ட நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.என்னை அவன் கொல்ல முயன்ற பொழுது என் தமக்கை ரோகிணி அவன் காலில் விழுந்து காப்பாற்றியது எனக்கு பெருத்த அவமானமாகி போய் விட்டது.அவனை நான் கொல்ல வேண்டும்.ஆனால் நேருக்கு நேர் அவனை போரிட்டு வெல்லும் சக்தி என்னிடம் கிடையாது.அவனை ஏதாவது குறுக்கு வழியில் தான் வெல்ல வேண்டும்."
"அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது இளவரசே..!பட்டாபிஷேகம் அன்று உள்ளிருந்தும் நாம் நம் வேட்டையை தொடுக்கும் அதே நேரம்,வெளியில் இருந்து ராஜேந்திர சோழனிடம் தோற்ற கங்க நாட்டு அரசனும்,ராஜகூட அரசர்களும் சேர்ந்து வெளியில் இருந்து போர் தொடுக்க போகிறார்கள்..இம்முறை நம் பகைவர்களை வேரோடு அழிக்க போகிறோம்.."என இடும்பன்காரி கடகடவென சிரித்தான்.அவன் போட்ட சத்தத்தை கேட்டு அமைதியாக இருந்த அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தது.நரிகள் சிதறி ஓடின.பறவைகள் பயந்து பறக்கும் சத்தம் கேட்டது.
"இளவரசே..!நீங்கள் தப்பி வரும் பொழுது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்து இருக்கலாமே.."
"இல்லை,அவர்கள் சோழ நாட்டு அரண்மனையில் இருப்பது தான் உச்சிதம்..எதிரிகளின் பலவீனங்களை அறிந்து கொள்ள அவர்கள் அருகில் இருப்பது தான் சரியானது..
மேலும் என் தமக்கை ரோஹிணி அங்கே இளவரசன் இளங்கோவை காதல் வலையில் வீழ்த்த காத்து இருக்கிறாள்.
இடும்பன்காரி நகைத்தான்."ஒரு இளவரசனை மயக்கும் அளவிற்கு உங்கள் தமக்கை அவ்வளவு பெரிய அழகியோ...!என இடும்பன் கேட்க,
"ஆமாம்"என சிங்கள இளவரசனான ரோஹன் வாளின் உறையில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஓவியத்தை எடுத்தான்.அதை பார்த்த இடும்பன் கண்கள் அகல விரிந்தன..
"ஆகா..!என்ன ஒரு பேரழகி...இவளை அணு அணுவாக ரசித்து ருசிக்க வேண்டுமே..என இடும்பன்காரியின் கருத்த தோள்கள் துடித்தது.
Views இப்போ bad என்ற நிலையில் Worst என்ற நிலைக்கு சென்று கொண்டு இருக்கு.என்ன காரணம் என்று புரியல.இன்னும் கொஞ்சம் views குறைந்தால் அடுத்து zero தான்.பிறகு எழுதுவதன் அர்த்தமே இல்ல.
தொடரும்
Posts: 478
Threads: 0
Likes Received: 295 in 252 posts
Likes Given: 178
Joined: Jan 2019
Reputation:
1
•
Posts: 25
Threads: 0
Likes Received: 13 in 10 posts
Likes Given: 74
Joined: Jun 2024
Reputation:
0
Posts: 14,447
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,112
Joined: May 2019
Reputation:
34
சோழர்களின் வீரத்தையும் கட்டிட கலைகளையும் மிகவும் அழகாக எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 475
Threads: 0
Likes Received: 198 in 170 posts
Likes Given: 313
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 43
Threads: 2
Likes Received: 42 in 27 posts
Likes Given: 198
Joined: Feb 2024
Reputation:
0
சோழர் கால கதையை படிக்க சுவாரசியமாக இருக்கு
•
Posts: 225
Threads: 3
Likes Received: 153 in 121 posts
Likes Given: 61
Joined: Feb 2020
Reputation:
0
(13-10-2024, 07:36 PM)snegithan Wrote: பாகம் - 139
மன்னர் காலம்
படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு இளங்கோவை தூக்கி தோளில் வைத்து கொண்டாட,அருள்மொழியால் இளங்கோவை நெருங்க முடியவில்லை..வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அவள் நாணத்தால் எப்படியும் அவனிடம் சென்று பேசி இருக்க போவது இல்லை. கண்களால் பேச போவதற்கு எத்தனை பேர் நடுவில் இருந்தால் என்ன..?இருவரும் மௌனமாக காதல் பாஷை பேசி கொண்டு இருக்க,தேவி என்று அழைக்கும் குரல் சங்காவிடம் இருந்து வந்தது..
"தேவி,நமக்கான வாகனம் வந்து விட்டது.வாருங்கள் அரண்மனை திரும்பலாம்" என்று சங்கா அழைக்க,அருள்மொழி அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஏக்கத்துடன் சென்றாள்.
![[Image: Snapinsta-app-441027205-979883563075374-...n-1080.jpg]](https://i.ibb.co/vzs1w1R/Snapinsta-app-441027205-979883563075374-4893412211512898088-n-1080.jpg)
அவள் ஏக்கத்தை இளங்கோவும் புரிந்து கொண்டான்.இதுவரை இளங்கோ ஒருமுறை கூட அருள்மொழியிடம் பேசியதே இல்லை.அவள் மேல் அவனுக்கும் காதல் தான்.செப்பு சிலை போல் இருக்கும் அவளை பார்த்து யாருக்கு தான் காதல் வராது.ஆனால் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவளை தவிர்த்து சென்று விடுவான்.காரணம் அவள் எட்டா உயரத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தது.அருள்மொழியை வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கு திருமணம் செய்ய தான் ராஜேந்திர சோழனுக்கு விருப்பம் என்பது ஊரறிந்த விசயம்..அது இளங்கோவிற்கு மட்டும் தெரியாமல் இருக்காதா..!மேலும் இளங்கோ சிற்றரசரின் மகன்.ஆனால் நரேந்திரனோ வேங்கி நாடு என்னும் பேரரசின் இளவரசன்.அதை நினைத்து தன் நிலையை எண்ணி அவன் ஒதுங்கியே நின்றான்.இருவருக்கும் உள்ள காதலை அனு,மற்றும் லிகிதா கவனித்து விட்டனர்.தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொண்டனர்.
அன்னப்பறவை வடிவில் இருந்த பிரமாண்டமான படகு நீரில் மிதந்து வர,அதில் அரண்மனை பெண்டிர்கள் ஏறினர். கொஞ்சம் கொஞ்சமாக இளங்கோ பார்வையில் இருந்து படகு மறைந்து போனது.
அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பள்ளிப்படை என்ற சுடுகாட்டில் மூன்று பேர் சந்தித்து உரையாடி கொண்டு இருந்தனர்..
"வா இடும்பன்காரி கொண்டு வந்த நற்செய்தி என்ன..?சாம்பவன் என்பவன் கேட்டான்..
இடும்பன்காரி சற்று தடிமனாக இருந்தான். "கோபத்தில் என் கண்கள் சிவக்கிறது சாம்பவா..இந்திரன் நம் வம்சத்திற்கு அளித்த மணிமுடியை எடுத்து அந்த ராஜேந்திர சோழன் அவன் மகனுக்கு முடிசூட்ட போகிறனாம்.."
சாம்பவன் அதிர்ந்து,"என்ன..! சோழர்களிடம் அந்த மணிமுடி கிடைக்கக்கூடாது என்பதற்காக தானே நாம் அதை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தோம்..அதையும் மீறி எப்படி அவர்களிடம் மணிமுடி கிடைத்தது.."
இடும்பன்காரி கோபம் குறையாமல் "எப்படியோ இலங்கையில் இருந்து போராடி கொண்டு வந்து விட்டார்கள் நம் எதிரிகள்..போதாக்குறைக்கு இலங்கையை வென்று சிங்கள மன்னன் மகிந்தனையும்,அவர் குடும்பத்தாரையும் கைது செய்து அழைத்து வந்து உள்ளார்கள்.அப்படி அழைத்து வரும் பொழுது மகிந்தனின் மகன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டான். சடாசரன் எங்கே..?இன்னும் வரவில்லையா..!என இடும்பன்காரி கேட்க,
"வரும்நேரம் தான் சாம்பவா..!ஆமாம் சிங்கள இளவரசன் தப்பித்து விட்டான் என்று சொன்னாயே..அவன் இப்போது எங்கே இருக்கிறான்.."என சாம்பவன் இடும்பன்காரியிடம் கேட்டான்.
"என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவன் இந்நேரம் நம் சடாசரனை சந்தித்து இருக்க வேண்டும்..இளவரசனை அழைத்து கொண்டு எந்நேரமும் சடாசரன் இங்கே பிரவேசிக்க கூடும்.நாம் அவனை அதற்காக தானே அனுப்பினோம்.."என இடும்பன் காரி கூறினான்..
இடும்பன்காரி கருந்திருமனை பார்த்து,"நீ சொல் கருந்திருமா..!நீ கொண்டு வந்த சேதி என்ன?
"இடும்பா,நீ சொன்னது போல அரண்மனையை நோட்டம் விட்டேன்.அதில் எனக்கு முக்கிய ரகசிய செய்தி கிடைத்தது.சோழர்கள் நாராயணபுரி ஏரியை பாசனத்திற்காக ஒன்றும் கட்டவில்லை."
"பின் எதற்காக கட்டி உள்ளார்கள்..கருந்திருமா.."
"சாம்பவா..!திடீரென ஒருநாள் சோழ வீரர்கள் என்னிடம் வந்து உனக்கு படகு ஒட்ட தெரியுமா?என்று கேட்டார்கள்..நானும் தெரியும் என்று சொன்னேன்.அவர்கள் என்னை ஏரியின் நடுவில் உள்ள நிலா மண்டபம் அழைத்து செல்ல சொன்னார்கள்..நானும் படகில் அமர்ந்து காத்திருக்க, சோழ நாட்டு இளவரசி தன் பரிவாரங்களுடன் வந்து ஏறினாள். நான் அவர்களை நிலா மண்டபம் அழைத்து சென்று விட்ட பிறகு என்னை அங்கிருந்த வேறு படகில் இருந்து கரை திரும்ப சொன்னார்கள்..எனக்கு ஒரு சந்தேகம்..நிலா மண்டபத்தில் இருந்து திரும்ப கரைக்கு அழைத்து செல்ல வேண்டாமா..?என்று கேட்டேன்.ஆனால் அவர்கள் வேண்டாம் என மறுதலித்து விட்டார்கள்..இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என படகை வேகமாக கரையை நோக்கி செலுத்தி விட்டு,மீண்டும் நிலா மண்டபத்தை நோக்கி உயிரை பணயம் வைத்து நீந்தியே வந்தேன்..அப்போ தான் எனக்கு அந்த ரகசியம் தெரிந்தது.."
"என்ன ரகசியம்..!"என இருவரும் ஆவலுடன் கேட்டனர்.
கருந்திருமன் அவர்களிடம்,"சாம்பவா..அந்த நிலா மண்டபத்தில் பரமசிவன்,பிரம்மனின் ஒரு தலையை கொய்வது போல சிலையை வடித்து உள்ளனர்.அந்த பரமசிவன் சூலாயுதத்தை ஒரு வீரன் பிரம்மனின் தலையை நோக்கி குத்த கீழே ஒரு ரகசிய வழி உண்டாகியது.அதில் உள்ளே இறங்கி நடந்து சோழ நாட்டு இளவரசி அரண்மனை சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.."
"என்னது ஏரிக்குள் ரகசிய வழியா..!இது எப்படி சாத்தியம்..!"இடும்பன்காரி கேட்க,
"நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்..இடும்பா.. நான் சொல்வது முற்றிலும் உண்மை.."என கருந்திருமன் கூறினான்.
சாம்பவன் அவனிடம்,"அவன் சொல்வது உண்மையாக தான் இருக்கும் இடும்பா,ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் கல்லணை கட்டியவர்கள் சோழர்கள்.இதோ இப்போ கூட நம்மை பிரமிக்க வைக்கும் நிழலே தரையில் படாமல் பெரிய கோவிலை தஞ்சையில் கச்சிதமாக கட்டி உள்ளார்கள்..அவர்களிடம் சிறந்த கட்டிட கலை அறிவு உள்ளது..நாம் அரண்மனைக்குள் சென்று அவர்களை கொல்ல சிறந்த வழி ஒன்றை கண்டுபிடித்து கொண்டு வந்து உள்ளாய் கருந்திருமா..உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நாம் பட்டாபிஷேகம் செய்யும் முன்னிரவு அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்க வேண்டும்.."
"ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு சாம்பவா..அந்த ஏரியில் நாம் நீந்தி செல்ல முடியாது..நானே மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பி வந்து உள்ளேன்.."
"நீ என்ன சொல்கிறாய் கருந்திருமா..சொல்வதை புரியும்படி சொல்."
"ஆம்..இடும்பா..!ஏரியில் முதலைகள் உள்ளன..!என் நீச்சலின் வேகம் உனக்கே தெரியும்.அவ்வளவு வேகத்தில் சென்றே ஒரு முதலை என்னை துரத்த ஆரம்பித்து விட்டது..அதன் வாயில் சிக்கும் நேரம் அங்கே இருந்த பாறையில் தாவி அமர்ந்து இரவு முழுக்க அங்கேயே கழித்தேன்.விடிந்த பிறகு மிகவும் கவனமாக நீந்தி வந்து கரை சேர்ந்தேன்.
"அப்போ அங்கே எப்படி போவது..!என்று இடும்பன் கேட்க,.
"இரவில் தான் அங்கு போக முடியும்.அதுவும் படகின் வழியே தான் அங்கே செல்ல முடியும்.."
அப்பொழுது காலடி சத்தம் கேட்க,உடனே மூன்று பேரும் தனித்தனியாக பிரிந்து சடசடவென அருகில் இருந்த மரங்களில் ஏறி,இலைகளுக்கு நடுவே தங்களை மறைத்து கொண்டனர்.
வந்திருந்த இருவரில் தங்களுக்கே உரிய சங்கேத மொழியில் கோட்டான் கூவுவது போல கூவிய உடன் மறைந்து இருந்த மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு கீழே குதித்தனர்.
"வா சடாசரா..!உன் வரவை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தோம்.ஏன் இந்த தாமதம்"என்று கேட்ட இடும்பன்காரி பக்கத்தில் ராஜ உடையுடன் மிடுக்கொடு இருந்தவனை பார்த்த உடன் இலங்கை இளவரசன் என்று புரிந்து கொண்டான்..
சடாசரன் அவர்களிடம்,"எங்கு நோக்கிலும் நம் பகைவர்கள் நிறைந்து உள்ளனர் இடும்பா..அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சிங்கள இளவரசனை இங்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.."
இலங்கை இளவரசன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க,அதை பார்த்த இடும்பன்"என்ன இளவரசே..!சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.."என்று கேட்டான்.
"இது என்ன இடம்"இலங்கை இளவரசன் கேட்க..
"இது நம் பகைவனின் பள்ளிப்படை வீடு.அதாவது சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் போர் புரிந்த இடம்..இங்கு தான் நம் பகைவனின் படைவீரர்கள் புதைக்கப்பட்டு உள்ளனர்."
"இங்கே மனிதர்கள் யாரும் இல்லையா"இலங்கை இளவரசன் கேட்க
"இங்கு ஆந்தைகளும்,நரிகளையும் ,நம்மை தவிர வேறு யாரும் இங்கு வருவது இல்லை."
"ஓ பகைவனின் படைவீட்டில் இருந்தே பகைவனை அழிக்கும் திட்டமா.."என்று இலங்கை இளவரசன் சிரித்தான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் முகம் வாடி போனது..
"ஏன் இளவரசே தங்கள் முகம் வாடி விட்டது.."
"எனக்கு இங்கே ஒரு எதிரி இருக்கிறான்.அவனை நான் அழிக்க வேண்டும்.."என அவன் கூறும் பொழுதே அவன் கண்கள் சிவந்தது.
"யார் அது இளவரசே..?"கருந்திருமன் கேட்டான்.
"கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான்."என சொல்லி கொண்டு இலங்கை இளவரசன் பற்களை நறநறவென கடித்தான்."ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட எங்களை சோழர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.எங்கள் கோட்டையை கைபற்றி விடுவார்கள்.ஆனால் இலங்கையில் உள்ள எங்களுக்கு மட்டுமே பரிச்சயமான அடர்த்தியான காடுகளில் நாங்கள் மறைந்து இருந்து சரியான சமயம் பார்த்து மீண்டும் எங்கள் கோட்டையை கைப்பற்றுவது தான் வழக்கமா இருந்தது.ஆனால் இந்த இளங்கோ நாங்கள் காட்டில் மறைந்து இருந்த இடத்தையும் கண்டு பிடித்து வெறும் சில வீரர்களை மட்டுமே வைத்து எங்கள் பெரும்படையை அங்கே நிர்மூலமாக்கி விட்டான்.நாங்கள் காட்டில் மறைத்து வைத்து இருந்த உங்கள் மணிமுடியையும் கைப்பற்றி விட்டான்.அவனோடு நேருக்கு நேர் சண்டையிட்ட நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.என்னை அவன் கொல்ல முயன்ற பொழுது என் தமக்கை ரோகிணி அவன் காலில் விழுந்து காப்பாற்றியது எனக்கு பெருத்த அவமானமாகி போய் விட்டது.அவனை நான் கொல்ல வேண்டும்.ஆனால் நேருக்கு நேர் அவனை போரிட்டு வெல்லும் சக்தி என்னிடம் கிடையாது.அவனை ஏதாவது குறுக்கு வழியில் தான் வெல்ல வேண்டும்."
"அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது இளவரசே..!பட்டாபிஷேகம் அன்று உள்ளிருந்தும் நாம் நம் வேட்டையை தொடுக்கும் அதே நேரம்,வெளியில் இருந்து ராஜேந்திர சோழனிடம் தோற்ற கங்க நாட்டு அரசனும்,ராஜகூட அரசர்களும் சேர்ந்து வெளியில் இருந்து போர் தொடுக்க போகிறார்கள்..இம்முறை நம் பகைவர்களை வேரோடு அழிக்க போகிறோம்.."என இடும்பன்காரி கடகடவென சிரித்தான்.அவன் போட்ட சத்தத்தை கேட்டு அமைதியாக இருந்த அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தது.நரிகள் சிதறி ஓடின.பறவைகள் பயந்து பறக்கும் சத்தம் கேட்டது.
"இளவரசே..!நீங்கள் தப்பி வரும் பொழுது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்து இருக்கலாமே.."
"இல்லை,அவர்கள் சோழ நாட்டு அரண்மனையில் இருப்பது தான் உச்சிதம்..எதிரிகளின் பலவீனங்களை அறிந்து கொள்ள அவர்கள் அருகில் இருப்பது தான் சரியானது..
மேலும் என் தமக்கை ரோஹிணி அங்கே இளவரசன் இளங்கோவை காதல் வலையில் வீழ்த்த காத்து இருக்கிறாள்.
இடும்பன்காரி நகைத்தான்."ஒரு இளவரசனை மயக்கும் அளவிற்கு உங்கள் தமக்கை அவ்வளவு பெரிய அழகியோ...!என இடும்பன் கேட்க,
"ஆமாம்"என சிங்கள இளவரசனான ரோஹன் வாளின் உறையில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஓவியத்தை எடுத்தான்.அதை பார்த்த இடும்பன் கண்கள் அகல விரிந்தன..
"ஆகா..!என்ன ஒரு பேரழகி...இவளை அணு அணுவாக ரசித்து ருசிக்க வேண்டுமே..என இடும்பன்காரியின் கருத்த தோள்கள் துடித்தது.
Views இப்போ bad என்ற நிலையில் Worst என்ற நிலைக்கு சென்று கொண்டு இருக்கு.என்ன காரணம் என்று புரியல.இன்னும் கொஞ்சம் views குறைந்தால் அடுத்து zero தான்.பிறகு எழுதுவதன் அர்த்தமே இல்ல.
தொடரும்
![[Image: images-1.jpg]](https://i.ibb.co/K5j7cCt/images-1.jpg)
NANBA DONT THINK LIKE THAT PLEASE. VIEWS WILL COME DEFINIETLY. DONT STOP NANBA PLEASE.
Posts: 225
Threads: 3
Likes Received: 153 in 121 posts
Likes Given: 61
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 517
Threads: 0
Likes Received: 255 in 218 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
•
Posts: 140
Threads: 0
Likes Received: 35 in 31 posts
Likes Given: 55
Joined: Oct 2019
Reputation:
0
You are super writer for sure.
•
Posts: 181
Threads: 0
Likes Received: 68 in 62 posts
Likes Given: 82
Joined: Sep 2019
Reputation:
0
•
|