மான்சி கதைகள் by sathiyan
" என்ன சொல்றீங்க நீங்க ... இந்த பரபரப்பான சென்னை சிட்டியில் எதிர் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லைனு யாராவது லீவு போட்டு அவனே கதி கிடப்பாங்களா... இதுகூட உங்களுக்கு புரியலையா"....

" அன்னிக்கு எனக்கு அடிபட்டப்ப என்னை அணைச்சுகிட்டு கண்ணீர் விட்டீங்க பாருங்க அப்போதான் உங்களுக்கும் என்னை புடிக்கும் ..... என்மேல உங்களுக்கும் காதல் இருக்குன்னு புரிஞ்சுத"

" அன்னிக்கு நைட் என்னை சாப்பிட வச்சது.... நான் மிரண்டு கத்தினப்ப என்னை அணைச்சு நீங்க ஆறுதல் படுத்தினது... எல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப பலவீனமாக்கிருச்சு" ...

" அதனாலதான் நீங்க செஞ்ச எதையுமே நான் தடுக்கலை ... அதுக்காக நான் அசிங்கப்படவோ.... வேதனைப்படவோ இல்லை....உங்களுக்கு முழுசா என்னை கொடுத்த திருப்தி மட்டும்தான் இருந்துச்சுங்க" என்று மான்சி தன் காதலை சத்யனுக்கு உணர்த்த

சத்யனின் கண்கள் கலங்க அவளை தன் மார்போடு அணைத்து " எனக்கு இப்போ புரியுதுடி... எல்லாமே புரியது மான்சி" என்று சத்யன் குமுறினான்



தன்னை கட்டியணைத்தபடி குமுறிய சத்யனை மான்சி முதுகை வருடி ஆறுதல் படுத்த... அவள் ஆறுதலான வருடல் சத்யனின் அணைப்பை மேலும் இறுக்கியது

அவனின் முரட்டு அணைப்பில் லேசாக திணறிய மான்சி “ ச்சு என்ன இது... எனக்கு திணறுதுங்க விடுங்க ... இன்னும் நான் முழுசா சொல்ல வேண்டாமா” என்று கேட்க

சத்யன் அவளை விடுவித்து தன் மடியில் தலைவைத்து அவளை படுக்கவைத்து “ மான்சி சொல்லு மான்சி” என்று தனது கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல

மறுபடியும் லேசாக விரைக்க ஆரம்பித்த அவன் உறுப்பு மான்சியின் பின்கழுத்தில் அழுத்தியது.... மான்சி சங்கடமாக அவனை பார்த்து “ டிரஸ் போட்டுக்கலாமா... எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்று கூற

சத்யன் அவள் ஏன் அப்படி சொல்கிறாள் என்பது புரிய “ ஏன் மான்சி நான்தானே இருக்கேன் அப்புறமா என்ன கூச்சம் ” என்று கூறி தன் மடியில் படுத்திருந்த அவள் கழுத்தில் நேற்று இவன் கட்டிய தாலியை மார்புக்கு மத்தியில் எடுத்து போட்டு அதன் அழகை ரசித்தான்

மான்சி எதுவும் சொல்லாமல் அவனை சங்கடத்துடன் பார்க்க.... சத்யன் அவள் கண்களையே உற்று பார்த்து சிரித்துவிட்டு

“ சரி விடு மான்சி உனக்காக ஒன்னு செய்யலாம் இரு” என்றவன் அவள் தலையை தன் மடியிலிருந்து எடுத்து திருப்பி படுக்கையில் அவளை படுக்கவைத்து.. தானும் அவள் பக்கத்தில் படுத்து பெட்சீட்டால் இருவரையும் போர்த்திக்கொண்டு

“ ம் இப்போ ஓகேயா மான்சி ... ரெண்டுபேரும் மூடிக்கிட்டோம் மீதியை இப்ப சொல்லு ” என்று அவள் இடுப்பில் கைப்போட்டு வளைத்து தன்னுடன் சேர்த்து குறும்புத்தனமாய் சிரிக்க

“ ம் இன்னும் என்ன சொல்றது ... நான் உங்களை ரொம்ப நேசிக்க காரணமே என் அப்பாதான் தெரியுமா ” என்றவுடன்

“ என்ன சொல்ற மான்சி” என்று சத்யன் திகைப்புடன் கேட்க

“ ஆமாங்க எப்பவுமே உங்களை பத்தியே வீட்ல பேசுவாறு.... நீங்க சின்ன வயசுல பட்ட கஷ்டம் உங்கப்பாவோட நடத்தை... உங்கம்மாவோட இழப்பு... நீங்க கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது... எல்லாத்தையும் என் அம்மாகிட்ட சொல்வார்... அதையெல்லாம் நானும் கேட்பேன்... அப்பல்லாம் எனக்கு ஓடிவந்து உங்களை கட்டியணைச்சு ஆறுதல் சொல்லனும்னு ஒரு வேகம் வரும் பாருங்க... அடக்கிக்கிட்டு ரூம்ல போய் படுத்து கண்ணீர் விடுவேன் ” என்றவளை மறித்த சத்யன்

“ உங்கப்பா என்னைப்பத்தி வேறன்ன சொன்னாரு”... என்றவன் “ மான்சி தமிழ்ச்செல்வி மேல எனக்கு இருந்தது அந்த வயசுக்கே உறிய ஒரு இனக்கவர்ச்சி மான்சி... அது காதல் இல்லைன்னு எனக்கு எப்பவோ புரிஞ்சுபோச்சு மான்சி” என்று சத்யன் சங்கடமாக சொன்னான் …

அவனுக்கு இன்னொரு பயம் எங்கே பரணி தனது சனிக்கிழமை இரவு மேட்டரையும் சொல்லியிருப்பாரோ என்று...

மான்சி அவனுடைய சங்கடமான முகத்தை பார்த்து தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு “ ம்ம் எனக்கு புரியுதுங்க.... அப்பா எல்லாம்தான் என் அம்மாகிட்ட சொன்னார் ... நீங்களும் அவரும் சனிக்கிழமையான தண்ணியடிச்சுட்டு கதை பேசுறதை... அப்புறம் அப்பாவை சந்திக்கறதுக்கு முன்னாடி நைட்ல வெளியே தங்கறதை பத்தியும் சொன்னார்” ...

“ ஆனா அவர் அதை தப்பு வேனாம்ன்னு சொன்னதும்... அதுக்கு நீங்க அங்கிள் இனிமே இதுமாதிரி நடக்காதுன்னு சொன்னது... என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது... ஆனா எனக்குத்தான் அன்னிக்கு காரணமேயில்லாம எல்லார் மேலயும் பயங்கர கோபம் வந்தது... என்னோட கற்ப்பனையில் நீங்க வேறோரு பொண்ணுகூட இருக்கறதை நினைத்து பார்த்து பாத்ரூமுக்குள்ள போய் அழுதேன் ” ...

“ அப்பதான் நான் உங்களை எவ்வளவு விரும்பறேன்னு எனக்கு புரிஞ்சது ... அப்புறமா நல்லா யோசிச்சேன் தனிமையில் இவ்வளவு கஷ்டப்படும் நீங்க உடலின் தேவைக்காக போனது தப்பு இல்லைன்னு தோனுச்சு ... உங்க வீட்டில் ஒரு மனைவின்னு ஒருத்தி இருந்தா நீங்க ஏன் அங்கே போகப்போறீங்கன்னு... மத்தபடி நீங்க ரொம்ப நேர்மையானவர்னு.. உங்களுக்காக நானே என் மனசுல வக்காலத்துவாங்கினேன்”

“ விபத்து அன்னைக்கு உங்களுக்கு நான் என்னை கொடுத்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.... என்னை நம்புறீங்களா சத்யா” என்று மான்சி கேட்டதும்


சத்யன் அவளை இறுக்கி அணைத்து “ உன்னை நம்பாம இருக்க எந்த காரணமும் கிடையாது மான்சி ... உனக்கு என் மேல லவ் இருக்கான்னு தெரியனும்ன்னு தோனுச்சு... அது இப்போ கன்பார்ம் ஆயிருச்சு மான்சி... இனிமே எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றவன் அவளை புரட்டி மல்லாத்திவிட்டு அவள் மீது ஏறி கவிழந்தான்

மான்சி அவன் முதுகை தன் கைகளால் வளைத்து இறுக்கி “ இப்போ எனக்கும் ஆசையாத்தான் இருக்கு... ஆனா இந்தமாதிரி இருக்கும் போது அடிக்கடி பண்ணக்கூடாது.. ப்ளீஸ் இப்போ இதுவே போதும் அப்புறமா நைட்ல வச்சிக்கலாமே” என்று மான்சி கிசுகிசுப்பாக சத்யனின் காதில் சொல்ல

சட்டென அவளைவிட்டு சரிந்த சத்யன் “ ஸாரிம்மா கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... இதுக்கு ப்ளீஸ்ன்னு சொல்ற .. உன் வயித்துல இருக்கிற என் பிள்ளையை பாதுக்காக்க வேண்டியது எனக்கும் கடமை தானே மான்சி “ என்றவன் எழுந்து அமர்ந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கினான்

" சரி நீங்க ஏன் கொஞ்சநேரம் முன்னாடி சிரிச்சீங்க ... அப்புறமா சொல்றேன்னு சொன்னீங்களே" என்று மான்சி கொஞ்சலுடன் கேட்க

சத்யன் மறுபடியும் அன்று நடந்ததை நினைத்து சிரித்துவிட்டு " இல்ல மான்சி நான் உன்னை முதன்முதலாக பார்த்தப்ப .. என்னோட கண்ணியமான பார்வைதான் உனக்கு பிடிச்சதுன்னு சொன்னேல்ல... அதை நினைச்சுதான் சிரிச்சேன்" என்றவன் மறுபடியும் வாய்விட்டு சிரிக்க

" மொதல்ல என்ன காரணம்னு சொல்லிட்டு சிரிங்க" என்று மான்சி அவன் மார்பில் பொய் கோபத்துடன் குத்தினாள்

" அது வேறொன்னும் இல்ல மான்சி எனக்கு அம்மை போட்டு இருந்தப்போ நீ பணிவிடை செய்யவந்தேல்ல அப்ப நான் உன்னை எங்கெங்கோ பார்த்து ரசிச்சேன்... அது தெரியாம நீ என்னை கண்ணியவான் அப்படின்னு சொன்னதும் .. எனக்கு சிரிப்பு வந்துருச்சு மான்சி வேற ஒன்னுமில்ல" என்ற சத்யன் குலுங்கி சிரிக்க

" ச்சே சரியான பிராடு.." என மான்சி அவனை பார்த்து சிரித்தாள்

“ மான்சி நீ குளிச்சுட்டு போய் சைந்தவியை கூட்டிட்டு வா.. இனிமே இதுமாதிரி அவளை ரொம்ப நாரம் அங்க தனியா விட்டுட்டு நாம இங்கே இருக்கக்கூடாது... நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் மான்சி” என்று சத்யன் கூற

மான்சி முகத்தில் சந்தோஷச் சிரிப்புடன் “ சரிங்க... நான் என் ரூம்ல போய் குளிக்கிறேன் ” என்று மான்சி எழுந்திருக்க

“ அடிப்பாவி நாம புருஷன் பொண்டாட்டிங்கறத மறந்துட்டயா... என்ன இது உன் ரூம் என் ரூமுன்னு சொல்ற இனிமே இங்கதான் ரெண்டுபேரும் இருக்கனும்... மொதல்ல காலையில உன்னோட திங்ஸ்ஸெல்லாம் எடுத்துட்டு வந்து இங்கே வச்சுடு... இப்போ அதுக்கு அட்வான்ஸா என்னோட சேர்ந்து குளி ” என்று கூறிவிட்டு சத்யன் அவளை இழுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைய

மான்சி அவனை தடுக்க இயலாது தனது உடைகளை அள்ளி தன் உடலைச் சுற்றியவாறு அவனுடன் தடுமாறியபடி போனாள்

குளிக்க வைககிறேன் பேர்வழி என்று சத்யன் செய்த அட்டகாசங்களை மான்சியால் தாங்க முடியவில்லை... அவன் கைகளில் கொடியாய் துவண்டாள் ... அவன் அவளை தாங்கும் கிளையானான்

தாம்பத்யத்தின் பூரணத்துவம் அறிந்த இருவரின் முகத்தில் எல்லையில்லா பூரிப்பும் சந்தோஷமும் ஒரு மனிதனுக்கு திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாக இருந்தது

ஒருவழியாக அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்த மான்சி உடைகளை போட்டுக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சைந்தவியை அழைத்து வந்தாள்

மகள் அப்போதுதான் குளித்திருப்பதை பார்த்த காஞ்சனா முகத்தில் சந்தோஷத்துடன் “ இன்னிக்கு நைட் சவி இங்கேயே சாப்பிட்டு படுத்துக்கட்டும் மான்சி” என்று கூற

“ இல்லம்மா அவரு கூட்டிட்டு வரச்சொன்னார்” என்று தன் தாயின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு தரையை பார்த்துக்கொண்டே மான்சி சொல்ல
அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார் ... நீ போய் நான் இங்கயே சவியை நிறுத்திக்கிட்டேன் சொல்லு” என்றாள் மான்சியின் அம்மா

மான்சி தன் வீட்டுக்கு போகத் திரும்பியதும் மறுபடியும் மான்சி என்று அழைத்தாள் காஞ்சனா... மான்சி திரும்பி பார்க்க

“ ம் இப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் மான்சி ... ஆம்பளைக்கு ஒன்னும் தெரியாது நாம எடுத்து சொல்லனும்.... நாளைக்கு நீங்க ரெண்டுபேரும் கோவிலுக்கு போகனும் அதனால கொஞ்சம் சீக்கிரமா எழுந்து குளிச்சுட்டு கிளம்புங்க” என்றாள் காஞ்சனா

மானசி சரியென்பது போல் தலையசைத்து விட்டு தன் வீட்டுக்கு போனாள்


அன்று இரவு சத்யனும் மான்சி காமத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டனார்.... இரவு சாப்பாட்டை தன் கையிலெடுத்து சத்யனுக்கு ஊட்டிவிட்டாள் மான்சி... சத்யன் அவளை தன் மடியில் அமர்த்தி சாய்த்துக்கொண்டே டிவி பார்த்தான்...

அவளுக்கு இரவு உணவு ஒப்பாமல் வாந்தியெடுக்க அதை அருவருப்பில்லாமல் தன் கைகளில் ஏந்தி சிங்கில் கொட்டினான்... அவள் முகத்தை துடைத்து சோபாவில் படுக்கவைத்து விட்டு.. கீழே தரையில் சிந்தியிருக்கும் வாந்தியை கழுவி சத்தம் செய்தான்

அவளை அழைத்துச் சென்று படுக்கையில் படுத்தவன்... அவளை அணைத்துக்கொண்டு உறங்க... நடுஇரவில் விழித்து இருவரும் நிர்வாணத்தை உடையாக அணிந்தனர்... சத்யன் அவளை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டு.... அவளுக்கு புதிதாக ஒரு காமப்பாடத்தை நடத்தினான்...

அவளும் அதில் தேற்ச்சி பெற்ற மாணவியாக தன் வேலையை சிறப்பாக செய்து தன் சீரான இயக்கத்தால் அவனை உச்சத்துக்கு கொண்டு போனாள்... அவளின் சிறப்பான நேர்த்தியான இயக்கத்தை சத்யன் சொக்கிப்போய் கண்மூடி ரசித்தான் ...

அதன்பின் இருவரும் விடியவிடிய விழித்திருந்து தங்களின் நிர்வாண உடலை இறுக்கிக்கொண்டு ஆயிரம் கதைகள் பேசினர்... ஆனால் அந்த ஆயிரத்தில் ஒன்றுகூட உருப்படியான விஷயமில்லை... விடிந்ததும் இரவு பேசிய எதுவுமே இருவருக்கும் ஞாபகம் இல்லை

மான்சிக்க அன்று காலையில் கோயிலுக்கு போகவேண்டும் என்று தன் அம்மா சொன்னது ஞாபகம் வர அவனைவிட்டு விலகி எழுந்து குளித்துவிட்டு வந்து சத்யனை பார்த்தாள்

அவ்வளவு நேரம் விழித்திருந்தவன் அவள் குளித்துவிட்டு வருவதற்குள் தூங்கிவிட்டதை பார்த்ததும் மான்சிக்கு சிரிப்பு வந்தது

அவன் தலைமுடியை கலைத்து விட்டு அவனை உலுக்கி எழுப்பி பாத்ரூமுக்கு தள்ளிக்கொண்டு போனாள்

சத்யன் குளித்துவிட்டு வந்ததும் இருவரும் கோயிலுக்கு கிளம்பினர்... சத்யன் அவளுக்காக புதிதாக தான் வாங்கி வைத்திருந்த கொலுசைஅவளிடம் கொடுத்தான்

பிறகு அதை வாங்கி தானே அணிவித்து விடுவதாக கூறி அவள் காலருகே மண்டியிட்டு அமர்ந்து... அவள் பொற்பாதங்களை எடுத்து தன் முழங்கால் மீதுவைத்து அந்த கொலுசை அணிவித்துவிட்டு.... அவளின் இரண்டு தாமரையின் இதழ்கள் போன்ற மென்மையான பாதத்தில் குனிந்து முத்தமிட்டான்

இருவரும் கதவை பூட்டிகொண்டு வெளியே வர.. சத்யன் ஏதோ நினைவு வந்தவனாய்.. மான்சியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போய் அவளை புடவை அவிழ்த்துவிட்டு சுடிதாரில் கோயிலுக்கு வரச்சொல்லி பிடிவாதம் செய்ய ... மான்சியும் வேறு வழியில்லாமல் சுடிதாரை அணிந்து அவனுடன் கோயிலுக்கு புறப்பட்டாள்

வீட்டு சாவியை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சைந்தவியை தேட... அவள் பரணியுடன் வெளியே போயிருந்தாள் ... பிறகு இருவரும் லிப்டில் கீழ் தளம் வந்து சத்யன் தனது பைக்கை எடுத்து வர மான்சி அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொள்ள சத்யன் கிளம்பினான்


சிறிதுதூரம் போனதும் வண்டியை நிறுத்திய சத்யன் பின்னால் திரும்பி “ மான்சி” என்று கூப்பிட

“ ம் என்னங்க” என்று அவன் தோளில் தன் நாடியை வைத்துகொண்டு மான்சி கேட்க

“ நீ இறங்கி ரெண்டு பக்கமும் கால்போட்டு உட்காரு” என்றான் சத்யன்

“ ஏன் இப்போ உட்கார்திருக்கிறதே நல்லாத்தானே இருக்கு” என மான்சி கூற

“ ப்ளீஸ் நான் சொல்றதை கேளேன் மான்சி” என்று சத்யன் வற்புறுத்த
சரி என்ற மான்சி இறங்கி இரண்டு பக்கமும் கால்போட்டு உட்கார்ந்தாள்

“ அப்பிடியே என்மேல சாஞ்சு இடுப்பில் கைப்போட்டு பிடிச்சுக்க மான்சி” என்று சத்யன் சொல்ல

மான்சி மறுப்பேச்சின்றி தனது கைகளால் அவன் இடுப்பை சுற்றி வளைத்து அவன் முதுகில் தனது மார்புகளை அழுத்தி அணைத்தவாறு உட்கார

சத்யன் உற்ச்சாகமாக பைக்கை ஸ்டார்ட் செய்து போனான் ...

இது அவனுடைய பத்துவருட கனவு.... மற்றவர்களை போல் தானும் ஒருநாள் தமிழ்ச்செல்வியுடன் போகவேண்டும் என்ற அவனது ஆசை இன்று அவன் காதல் மனைவி மான்சியால் நிறைவேறியது





“ உழைக்கிறேன் உனக்காகவும்...

“ உன் உயிரில் வசிக்கும் ...

“ என் உயிர்க்காகவும்...

“ என் உயிர் துளியை...

“ நீ சுமக்கின்றாய்...

“ நானோ உயிரற்ற..

“ பொருட்களையெல்லாம்...

“ உனக்காக சுமக்கிறேன்...

“ காதலின் மகாபரிசு ....

“ கைக்குழந்தைதான் 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super bro
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 1
தாய் மடி தேடும் கன்றுகளின் குரல் கேட்டு பதில் குரல் கொடுக்கும் பசுக்களின் அழைப்பு..... குஞ்சுகளுக்கு இறைத் தேடிச்செல்லும் பறவைக் கூட்டம்.... முதிர்ந்த மரங்கள் பூக்களை உதிர்த்து விட்டு பிஞ்சுகளை உருவாக்கிக் கொண்டிருக்க... அதிகாலையில் பார்க்கும் அத்தனையிலும் தாய்மையின் சாயல்... தாய்மை தான் உலகின் ஆதாரம் எனக் கூறும் காலைப் பொழுது...

ஆனால் கீழ் வானம் மட்டும் சிவப்பா வெளுப்பா என்று புரியாத படி.... காதலனைத் தேர்ந்தெடுக்கத் தவிக்கும் கன்னிப் பெண்ணின் இதயத்தைப் போல் கலங்கித் தெரிய.... அந்த கலங்கித் தெரிந்த வானம் எதைச் சொல்ல வருகிறது என்று புரியாமல் சூரியன் ஒருபுறம் சோம்பலாக எழுந்து கொண்டிருந்தான்....

1988ம் வருடம் ஜூலை எட்டாம் தேதி காலை ஏழு மணி,, பெங்களூரில் இருந்து நாகர்கோயில் வரை செல்லும் தீவு எக்ஸ்பிரஸ் பாலக்காடு கடந்து சென்றுகொண்டிருந்தது... ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப மரங்களும் செடிகளும் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது....

ரயிலின் இரண்டாம் வகுப்புப் பயணிகள் பயணித்த அந்தப் பெட்டிகளில் படுத்திருந்தவர்கள் அனைவரும் விடிந்து விட்டதை உணர்ந்து எழுந்து படுத்திருந்த படுக்கையின் கொக்கிகளை கழட்டிவிட்டு கீழ் சீட்டில் அமர்ந்து கொண்டனர்....

அருணகிரி,, தனது நான்கு வயது மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாகத் தெரிந்த இயற்க்கைக் காட்சிகளை காட்டிக் கொண்டிருக்க... பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி சந்திரமதி தன் கணவரின் தோளில் சாய்ந்து மகன் பேசும் மழலையை ரசித்துக் கொண்டிருந்தாள்...

கடந்து செல்லும் புல் பூண்டை கூட விடாமல் விரல் காட்டி கேள்வி கேட்ட மகனுக்கு சளைக்காமல் பதில் கூறிக் கொண்டு வந்த இருவரையும் இவர்களைப் போலவே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோடி ரசித்துக் கொண்டிருந்தது...

பத்ரிநாத்,, தேவி,, இருவரும் தங்களின் செல்ல மகளை மடியில் வைத்துக்கொண்டு கேள்வியால் துளைக்கும் அந்தச் சுட்டிப் பையனைப் பார்த்து சிரித்து "நம்ம வாலுப் பொண்ணும் இன்னும் கொஞ்ச நாள் ஆனா இப்படித்தான் கேள்வி கேட்ப்பா.... இவங்களைப் பார்த்து நாம ட்ரைன் பண்ணிக்க வேண்டியது தான்" என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டு கூறினாள் தேவி....

தேவி,, தெய்வ சொரூபம் இப்படித்தான் இருக்குமென்று கூறுவது போன்றதொரு தோற்றம்.... அகன்று நீண்ட கண்களில் எப்போதும் அமைதி,, தடித்துக் குவிந்த இதழ்களில் என்றும் மாறாப் புன்னகை,, நீண்ட கருங்கூந்தலை எடுத்து முன்னால் விட்டிருக்க... அந்த கூந்தலில் இருக்கும் மல்லிகை நுகர்ந்தபடி மனைவியின் மீது சரிந்து அமர்ந்திருந்த பத்ரிநாத்....



மகள் கைத்தட்டிச்சிரிக்க.... எதைப் பார்த்துச் சிரிக்கிறாள் என்று இருவரும் நிமிர்ந்துப் பார்த்தனர்..... எதிர் சீட்டில் அமர்ந்திருந்த சுட்டிப் பையனைப் பார்த்து குழந்தை சிரிக்க... அவனும் குழிந்த கன்னங்களுடன் பொம்மை போல் தலையசைத்துச் சிரிக்கும் குழைந்தையைப் பார்த்து தன் தந்தையிடம் கைகாட்டி "தாதி பாப்பா,, குத்திப் பாப்பா தாதி... என்னப் பாத்து சிதிக்கிது தாதி" என்று மழழையில் கூறிவிட்டு தேவியின் மடியிலிருந்த குழந்தையை நோக்கி தனது விரல்களை நீட்டினான்....

எட்டி அவன் விரல்களைப் பற்றிக்கொண்டு அவனிடம் தாவிச் செல்ல முயன்ற குழந்தையை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக தேவி சமாளித்துப் பிடிக்க "இப்படிக் குடுங்க" என்று சந்திரமதி தனது கைகளை விரித்ததும் குழந்தை அவளிடம் தாவியது....

தேவி புன்னகை மாற முகத்துடன் குழந்தையைக் கொடுத்ததும்,, தன் அம்மாவிடம் வந்த உயிருள்ள பொம்மையை உரிமையோடு கொஞ்ச ஆரம்பித்தான் சுட்டிப் பையன்....

சற்று நேரத்திலேயே தன் மடியில் குழந்தையை உட்கார வைக்குமாறு அழ ஆரம்பித்தவனை சமாளிக்க வழியின்றி பெற்றவர்கள் நடுவே அவனை உட்கார வைத்து குழந்தையை அவன் மடியில் கிடத்தியதும் பாதுகாப்பாய் அணைத்துப் பிடித்துக் கொண்டான் சின்னவன்....

குழந்தையும் அழாமல் அவனுடன் விளையாட ஆரம்பிக்க.... இவர்களைப் பெற்ற இரு ஜோடிகளும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர்...

"நீங்க பாலக்காட்டில் தான் ஏறினீங்க போலருக்கு? ஆனா தமிழ் நல்லா பேசுறீங்களே?" என்று அருணகிரி பத்ரியைப் பார்த்துக் கேட்க....

"எங்க சொந்த ஊர் திருச்சிப் பக்கம் ஒரு கிராமம்ங்க... நான் இங்க பாலக்காடு ரயில்வேயில் கேட்கீப்பரா வேலை செய்றேன்....... நாகர்கோயில்ல இவளோட சித்திப் பொண்ணுக்கு கல்யாணம்... அதுக்காகப் போறோம்" என்றார் பத்ரி....

"ஓ... சரி சரி... நாங்க பெங்களூர்... சொந்தமா சின்னதா ஒரு ஸ்டீல் கம்பெணி வச்சிருக்கேன்... இப்போ கொஞ்சம் ஓய்வு கிடைச்சது... அதான் தென்மாவட்டங்களுக்கு ஒரு சுற்றுளா கிளம்பிட்டோம்..." என்ற அருணகிரி பக்கத்திலிருந்த மனைவியை காட்டி "இவ என் மனைவி சந்திரமதி" என்று அறிமுகம் செய்து வைத்தார்...

உடனே பத்ரி தன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தார்... 

இரு குடும்பமும் பரஸ்பரம் பேசிக்கொண்டே நெருக்கமாகினர்.... ஆண்கள் இருவரும் ஒரு இருக்கையிலும் பெண்கள் எதிர் இருக்கையிலும் மாற்றி அமர்ந்துகொண்டனர்

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க தேவி... அப்படியே அம்மன் சிலையாட்டம்......." பெண்ணாகயிருந்தும் இன்னொருப் பெண்ணின் அழகை மனம் திறந்து பாராட்டும் பக்குவம் சந்திராவிடம் இருந்தது....

தேவி பதில் சொல்லவில்லை... அழகாக வெட்கப்பட்டு "நீங்களும் அழகுதான்,, அண்ணா ரொம்ப லக்கி" என்றுவிட்டு சிரித்தாள்...

"நான் அழகுன்னு சொன்ன முதல் ஆள் நீதான் தேவி..." சட்டென்று நட்புடன் ஒருமைக்குத் தாவிய சந்திரா "ஆனா குட்டிப் பொண்ணு கூட உன்னை மாதிரி ரொம்ப அழகா வருவா... அப்படியே உன் ஜாடை தேவி" என்றாள்...

இதற்கும் வெட்கமாக ஒரு சிரிப்புதான் பதிலாக வந்தது தேவியிடம்... அருணகிரியிடம் பேசிக்கொண்டிருந்தாலும் தன் மனைவியின் வெட்கத்தை ரசிக்கத் தவறவில்லை பத்ரி...

அருணகிரி பரம்பரையாகவே சற்று வசதிப் படைத்தவராயினும் அந்த கர்வமில்லாமல் சகஜமாக பேசினார்.... சந்திரமதியும் கணவனைப் போலவே கர்வமின்றி தேவியிடம் பேசிக் கொண்டிருந்தாள்...

காலை உணவாக இரு குடும்பமும் எடுத்து வந்திருந்ததை பகிர்ந்து உண்டனர்.... சின்னவனும் குழந்தையும் அடித்த லூட்டியில் பெரியவர்கள் சிரித்து மகிழ்ந்தபடி வர நேரம் போனதே தெரியவில்லை...

சற்றுநேரத்தில் குழந்தை உறக்கத்திற்காக அழ ஆரம்பித்தாள்,, தேவி மெல்லியப் புடவையென்றை எடுத்து இரண்டு சீட்டுக்கும் நடுவே தூளிக்கட்டி அதில் மகளைக் கிடத்தி ஆட்டிவிட... அவளுடன் சின்னவனும் சேர்ந்து கொண்டான்... "ச்சூ பாப்பா,, அத கூதாது... உனக்கு சாக்கித் ததவா?" என்ற அவனது மழலையில் மயங்கிப் போன தேவி அவனையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு குழந்தையின் தூளியை ஆட்டி விட்டாள்....

பத்ரி,, கேரளாவில் தனக்கு தெரிந்த ஊர்கள் வரும் போதெல்லாம் அதன் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறியபடி வந்தார்... ரயில் கோட்டயம் தாண்டியதும் வேகமெடுத்தது... பகல் பத்து மணிக்கு காயங்குளம் ஏரியின் பாலத்தின் மீது பயணிக்கையில் இருபுறமும் தெரிந்த கேரளத்து இயற்கை அழகைக் காண கண்கள் கோடி வேண்டும் போல் இருந்தது...

ஓங்கி வளர்ந்த தென்னைகளும் பாக்கு மற்றும் பலா மரங்களுமாக கேரளத்து பூமி பச்சைப் பசேலென்று இருக்க..... இருவரும் மனைவிகளை அருகில் அமர்த்திக் கொண்டு ரசித்துக் கொண்டு வந்தனர்... தூரலா? சாரலா? என்று வகைப் படுத்த முடியாத மழைச் சரங்கள் பூமியை முத்தமிடத் தொடங்கின... தேவி குளிரில் கணவனுடன் ஒண்டிக் கொண்டாள்.... 

"அடுத்ததா அஷ்டமுடி ஏரி வரும்... ரொம்ப அழகான.. அதே சமயம் ஆழமான ஏரியும் கூட..... அந்த ஏரி மேல் செல்லும் பாலம் பெருமான் பாலம்னு சொல்வாங்க.... கொஞ்சம் பழமையான பாலமும் கூட...." என்று பத்ரி கூறும் போதே அஷ்டமுடி ஏரியின் சில்லிப்பு காற்றில் கலந்து வந்து உடலைத் தழுவி சிலிர்க்க வைத்தது...

சின்னவன் கைத்தட்டி ரசித்துக் கொண்டு வர "வாடா சின்னு" என்று தேவி தனது கைகளை நீட்டியதுமே அவளிடம் வந்து மடியில் ஏறி அமர்ந்து கொண்டான்....

பகல் சரியாக 12-50...... ரயில் தனது வேகத்தைக் குறைக்காமல் செல்ல.... "பாலம் ரொம்ப பழசு.. ஆனா ரயில் வேகம் குறையாம போகுதே?" என்று பத்ரி சந்தேகமாகக் கூறும் போதே பாலத்தின் கால்வாசியைக் கடந்த ரயில் தனது அதி வேகத்தால் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது...

இஞ்சினுக்கு அடுத்த பெட்டியிருந்து வரிசையாக ஒன்பது பெட்டிகள் பாலத்திலிருந்து நகர்ந்து ஏரிக்குள் விழ ஆரம்பித்தது.... ரயில் பெட்டிகளில் இருந்தவர்களின் கூக்குரல் எட்டுதிக்கும் ஒலிக்க... சுற்று வட்டார கிராம மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்....

முதலில் விழுந்த நான்கு பெட்டிகள் ஏரியின் அடியாளத்துக்குச் சென்றுவிட... அதனுள் இருந்தவர்களின் கூக்குரல் கேட்டுக்கொண்டே தண்ணீருக்குள் மறைந்தது... கதவைத் திறந்து தப்பிக்க முயன்றவர்களும் தண்ணீருக்குள் உதிர ஆரம்பித்தனர்...

அதன் மேல் விழுந்த பெட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்க... அந்தரத்திலும் சில பெட்டிகள் தொங்கிக் கொண்டிருந்தன..... தொங்கியப் பெட்டிகளில் பத்ரிநாத், அருணகிரி குடும்பங்கள் பயணம் செய்த பெட்டியும் ஒன்று....

தலைகீழாக தொங்கியப் பெட்டியிலிருந்து ஆளுக்கொருப் பக்கமாக சிதறிக் கிடக்க... ஆண்கள் இருவரும் தங்களின் மனைவி குழந்தைகளைத் தேடினர்.... மெல்ல முழ்க ஆரம்பித்த பெட்டியில் உருண்ட வேகத்தில் எங்கெங்கோ மோதிக்கொண்டதால் ரத்தக் காயமும் எழும்பு முறிவுகளும் பயணிகளை வலியால் கதற வைத்தது....

அதற்குள் ஓடி வந்திருந்த சில கிராம மக்கள் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்......



பத்ரிக்கு அதிக அடியில்லை... தன்னைச் சுற்றிலும் தேடினார்.... சற்றுத் தள்ளி சந்திரமதி நெற்றியில் வழிந்த ரத்தத்தோடு நடந்தது புரியாமல் அதிர்ச்சியுடன் விழித்துக் கொண்டிருக்க.... சட்டென்று கை நீட்டிய பத்ரி "என் கையைப் பிடிச்சுக்கிட்டு மேல் நோக்கி நகர்ந்து வாங்கம்மா" என்று தனது கையை நீட்டினார்...

சந்திரமதிக்கு நிலவரம் புரிந்தது... பத்ரியின் கையைப் பற்றிக் கொண்டு மெல்ல ஊர்ந்து வந்தவளை எமர்ஜென்ஸி வின்டோ வழியாக வெளியேற உதவினார் பத்ரி....

வெளியே வந்தவள் சரிந்து கிடந்த பெட்டியின் மேலேயே அமர்ந்து "அய்யோ,, என் புருஷனையும் மகனையும் யாராவது காப்பாத்துங்களேன்" என்று சத்தமாகக் கூக்குரலிட்டு அழுதாள்...

அடுத்ததாக பத்ரியின் பார்வையில் பட்டது அருணகிரி,, வலது கால் எதிலோ மோதியதால் மூட்டு எழும்பு முறிந்து விட வலியால் துடித்தபடி அப்படியே கிடந்தார்.... "அருண் சார்,, எப்படியாவது முயற்சி பண்ணி நகர்ந்து வாங்க" என்று பத்ரி கத்தியதும் அருணகிரி தனது காலை இழுத்துக் கொண்டு ஊர்ந்து மேலே வர.... அவரும் வெளியேற உதவியதும் சந்திரமதி தனது கணவனைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தாள்...

இரண்டு சீட்டுக்கிடையே கம்பியைப் பிடித்து தொங்கியபடி இருவரைக் காப்பாற்றிய பத்ரி தனது மனைவி மகளையும் தேட.... தேவி கடைசியாக உடைந்து தொங்கிய ஒரு சீட்டுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருந்தாள்.... அவளின் அழகு முகமெங்கும் ரத்தம்... தூளியில் கிடந்த குழந்தை ஒரு சீட்டில் கிடந்து அழுது கொண்டிருக்க... சந்திரமதியின் மகன் தேவியின் அணைப்பில் துளி கூட அடியில்லாமல் பாதுகாப்பாக இருந்தான்...

"மெல்ல மேல வா தேவி" கத்தினார் பத்ரி....

கால்கள் இரண்டும் சீட்டுகளுக்கிடையே சிக்கி தொடையில் ஏதோவெரு கம்பி குத்தி அதுவேறு ரத்தம் வழிந்து கொண்டிருக்க..... கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பியவளை பத்ரியின் குரல் மீட்டது...

"தேவி,, நம்ம குழந்தை தேவி..... சிமிம்மாவை மேல தூக்கிக் குடும்மா" பத்ரி கதறினார்....

ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரமதி " தேவி,, என் பிள்ளையை காப்பாத்து தேவி" என்று கை கூப்பியபடி கதறினாள்....

தேவிக்கு நினைவு தப்பினாலும்... குழந்தைகளையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற உந்துதலில் உயிரைப் பிடித்து வைத்தாள்.... 

பாதியாய் மூழ்கிய பெட்டிக்குள் நீர் சரசரவென ஏறியது.... பாதிப் பெட்டிவரை நீரில் மூழ்கியிருக்க.. நேரம் ரொம்பவே குறைவாக இருப்பதும் புரிந்தது....

"வந்துடு தேவி,, குழந்தைகளைத் தூக்கிக் கிட்டு மேல வந்துடு தேவி" அலறினார் பத்ரி....

"எப்படியாவது மேல வந்துடு தேவி" சந்திராவும் தன் பங்கிற்கு கத்தினாள்...

குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் தேவியை உயிர்க்க வைக்க... மிரண்டு போய் அழுத சின்னவனைப் பார்த்து "சின்னு,, ஆன்ட்டி முதுகுல படுத்து கழுத்தைக் கட்டிப் பிடிச்சுக்க தங்கம்" என்று தட்டுத் தடுமாறி சுவாசத்திற்குத் திணறியவளாகக் கூறினாள்

உடனே புரிந்து கொண்டு தேவியின் முதுகைக் கட்டிக் கொண்டான் சின்னு...... பெரும் முயற்சி செய்து கால்களை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் தேவி.... கைக்கெட்டும் தொலைவில் மகள்.... கீழே தண்ணீர்... கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தது...

"வந்துடு தேவி,, பெட்டி தண்ணிக்குள்ள முங்குது தேவி" பத்ரியும் சந்திரமதியும் மாற்றி மாற்றி அலறினார்கள்....

தேவியின் காதுகளில் அவர்களின் அலறல் விழுந்தது... அய்யோ குழந்தைகளை காப்பாத்திடனுமே,, மந்திரம் போல் முனுமுனுத்தபடி கை நீட்டி எட்டி மகளிருந்த சீட்டைப் பற்றிக் கொண்டாள்.... தாயைக் கண்டதும் அவளுக்கு சிரமமின்றி குழந்தை தன் தாயை நோக்கித் தாவிக் கொண்டு வந்தாள்...

மகளை வலது கையால் வாறியெடுத்துப் பக்கவாட்டில் அணைத்துக்கொண்டாள்.... முதுகில் சந்திரமதியின் மகன் சின்னுவை சுமந்தபடி வலது கையால் ஒரு ஒரு சீட்டின் அடியில் இருக்கும் இரும்பு கம்பிகளை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு மெல்ல முன்னேறினாள்... நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் தலையில் பலத்த காயம் என்று உறுதி படுத்த... செயலிழந்து போல் கிடந்த கால்களை இழுத்துக்கொண்டு இஞ்ச் இஞ்சாக மேலேறினாள்...

ரத்தம் சொட்ட மேலேறிய மனைவிக் கண்டு கதறியபடி பத்ரி கீழே இறங்க முயற்சிக்க.... யாரோ அவரின் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்தார்கள்.... அவர்களிடமிருந்து நழுவ முயன்றவரை கிராம மக்கள் பிடிவாதமாக இழுத்து வெளியே விட "அய்யோ என்னை விடுங்க,, என் மனைவியும் குழந்தையும் உள்ள மாட்டிக்கிட்டாங்க" என்று கதறியபடி ஜன்னல் வழியாக உள்ளேப் பார்த்தார்....

ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு மேலேறிய தேவியை விட தண்ணீர் அதி வேகமாக மேலேறி ரயில் பெட்டி முற்றிலும் முழுக ஆரம்பித்தது....

யாரோ சிலர் அருணகிரி, சந்திரா, பத்ரி, மூவரையும் இழுத்து படகில் ஏற்றவும் அந்தப் பெட்டி சிறுகச் சிறுக மூழ்கவும் சரியாக இருந்தது...

"அய்யோ,, மகனே" என்றபடி கதறியழுத மனைவிக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாது கால் எலும்பு முறிந்து போன கண்ணீருடன் கிடந்தார் அருணகிரி...

மனைவியையும் மகளையும் தன் கண்ணெதிரே நீருக்குள் மூழ்க விட்ட அதிர்சியில் இருந்து மீளாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படகில் சரிந்தார் பத்ரி...

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.... மூழ்கிய பெட்டியின் எமர்ஜென்ஸி வின்டோ வழியாக சின்னுவையும் தனது மகளையும் வெளியே தள்ளிக் கொண்டிருந்தாள் தேவி...

"ஏடோ கொச்சுன்னு நோக்கட்டோடா" என்று கத்திய மீட்புக் குழுவினரில் இருவர் தண்ணீருக்குள் பாய்ந்து நீந்திச் சென்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வேகமாக நகரவும் அந்தப் பெட்டி முற்றிலும் மூழ்கிப் போனது....

மகன் மீண்ட சந்தோஷத்தில் கதறியழுத சந்திரமதி அந்த பெட்டி மூழ்கிய இடத்தை நோக்கி கைகூப்பிக் கும்பிட்டு "என் குலதெய்வமே தேவி,, என் மகனை காப்பாத்திக் கொடுத்த தெய்வமே" என்று புலம்பி அழுதாள்...

பத்ரியிடம் மகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டாள்... மகளைக் கட்டிக்கொண்டு மனைவிக்காக கதறினார்....

சற்று நேரத்தில் மீட்புக் குழுவினரின் பெரிய படகு வந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு கரைக்கு வந்தது.... காயம் பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்....

மீட்புக் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி உயிருக்குப் போராடியவர்களையும் இறந்து போனவர்களின் உடல்களையும் மீட்டனர்... மீட்கப்பட்ட உடல்களில் தெய்வப் பெண்மணி தேவியின் உடலும் ஒன்று...






" நம் முதல் அறிமுகமே,

" நான் உனக்கு சேயாகவும்,

" நீ எனக்கு தாயாகவும் தானே?

" இவர் தான் அப்பா..

" இதுதான் உலகமென்று

" அத்தனையும் அறிமுகம் செய்து,

" உறவுகளையெல்லாம் உறைத்துக் காட்டி,

" ஒர் நொடியில் ஒளிபிழம்பாய் மாறி,

" உயிரோடு மறைந்ததேனோ? 
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 2
கொல்லம் மருத்துவமனை...... ரயில் விபத்தில் காயமுற்றவர்கள் கதறலோடு கோரமாக காட்சியளித்தது.... இறந்து போன உறவினர்களை எண்ணிக் கதறும் மக்கள் கூட்டம்.... தமிழ், கன்னடம், மலையாளம், என மூன்று மொழிகளில் புலம்பியழுதனர்...

அருணகிரி எலும்பு முறிவு பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிக்கயளிக்கக் கூட டாக்டர்கள் இன்றி பரிதாபமாக தரையில் கிடந்தார்.... மருத்துவமனை நிர்வாகத்தைக் குறை கூறி பிரயோசனம் இல்லை,, மொத்தமாக இவ்வளவு கூட்டம் வந்து குவிந்தால் அவர்களும் என்னதான் செய்வார்கள்? முதலில் உயிர் காயத்திற்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தனர்....

கணவர் தன் கண்முன் வலியால் துடிப்பதை காண சகிக்காமல் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுத சந்திரமதி இப்படியே அழுதுகொண்டிருந்தால் சரியாக வராது என்ற முடிவுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து எஸ் டி டி பூத் ஒன்றிலிருந்து தங்களது கம்பெனி மேனேஜருக்கு போன் செய்தாள்.......

ஏற்கனவே ரயில் விபத்தை டிவி செய்தியில் பார்த்து விட்டு என்ன செய்வது அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது? என்று பதட்டமாக இருந்த மேனேஜர் சந்திராவே போன் செய்ததும் "அம்மா,, என்னாச்சு? நீங்க சார் தம்பி எல்லாரும் நல்லாருக்கீங்களா?" என்று கேட்க...

சந்திரமதி கண்ணீருடன் நடந்தவற்றைக் கூறினாள்... இப்போது அருணகிரி இருக்கும் நிலைமையும் கூறி "பயங்கர வலியால துடிக்கிறார்... இங்கே இன்னும் எந்த டாக்டரும் காயம் என்னன்னு கூட பார்க்கலை... எனக்கு என்ன செய்றதுனு புரியலையே" என்று கதறியவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் எதிர் முனையில் தவித்த மேனேஜர் சட்டென்று ஒரு யோசனைத் தோன்ற......

"அம்மா,, நமக்கிட்ட மோட்டார் பார்ட்ஸ் வாங்குற ஒரு டீலர் கொல்லத்துல இருக்கார்.... அவருக்கு கால் பண்ணி பேசி அங்கே வரச்சொல்றேன்மா... ஏதாவது தனியார் ஆஸ்பிட்டல் போய் முதலுதவி மட்டும் பண்ணிக்கிட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமா சாரை பெங்களூர் கொண்டு வந்து இங்கே நமக்குத் தெரிஞ்ச ஆஸ்பிட்டல்ல சேர்த்து சரி பண்ணிடலாம்மா,, இந்த பூத்லயே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கம்மா... நான் அவர்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்" என்று விளக்கமாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்..

நின்றிருந்த நிமிடங்கள் இரும்புக் குண்டுகள் போன்ற கனத்தோடு கடந்து செல்ல.... சந்திரமதியை அதிக கண்ணீர் விட வைக்காமல் பூத் நம்பருக்கு அழைத்த மேனேஜர் "அம்மா நீங்க உடனே ஆஸ்பிட்டல் வாசல்ல போய் நில்லுங்க.... இன்னும் கொஞ்ச நேரத்துல பிரைவேட் ஆம்புலன்ஸோட ஒருத்தர் வருவார்... அவர் பெயர் ஜோன்ஸ்.... நீங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க மத்ததை அவர் பார்த்துப்பார்" என்றவர் வரும் நபரின் அடையாளத்தையும் சொல்லிவிட்டு போனை வைத்ததும் சந்திரமதி மருத்துவமனை வாயிலுக்கு மகனுடன் ஓடினாள்.....

அடுத்த ஒருமணி நேரத்தில் அருணகிரி தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்..... வந்திருந்த நபரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.... சந்திரமதியும் ஆம்புலன்ஸில் ஏறியமர்ந்தாள்.... திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு "ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க,, இதோ வந்திடுறேன்" என்றவள் மகனைத் தூக்கிக் கொண்டு இறங்கி மார்ச்சுவரி இருக்கும் பக்கமாக ஓடினாள்....



உறவினரின் உடலை வாங்குவதற்காக குவிந்திருந்த ஏராளமானோருக்குள் பத்ரியைத் தேடினாள்.... ஒரு மூலையில் மகளை மார்போடு அணைத்தபடி நெற்றியில் கட்டோடு சாய்ந்து கிடந்தவரைக் கண்டதும் "அண்ணா”,, என்ற அழைப்புடன் அவரருகே சென்றாள்....

சந்திராவைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வர "என் தேவி........" என்றவர் மேற்கொண்டு பேசமுடியாமல் மார்ச்சுவரியை கைநீட்டி விட்டு முகத்தை மூடிக்கொண்டு குமுறினார்....

அவரெதிரே மண்டியிட்டு அமர்ந்த சந்திரா அவரின் கைகளைப் பற்றி "எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை அண்ணா..... ரெண்டு குழந்தைங்க உயிரை காப்பாத்தின தேவி எனக்குத் தெய்வமாத்தான் தெரியுறா.... ஆனா அவளை இழந்த உங்களுக்கு தான் வலியும் வேதனையும் இருக்கும்.... குழந்தைக்காக மனசைத் தேத்திக்கங்க அண்ணா" என்றவள் தன் கணவரின் நிலையைச் சொல்லி பெங்களூர் செல்வதாக கூறிவிட்டு "உங்களுக் கூட இருக்க முடியாததுக்கு மன்னிச்சிடுங்க அண்ணா" என்றாள் கண்ணீருடன்....

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சின்னு சந்திராவின் பிடியிலிருந்து நழுவி இறங்கிச் சென்று பத்ரியின் மடியிலிருந்த சிமியைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு கையிலிருந்த பிஸ்கேட்டை எடுத்து குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.... பசியில் கிடந்து அழுதுகொண்டிருந்த சிமி சின்னவன் கொடுத்த பிஸ்கேட்டை ஆசையாக வாங்கிக் கொண்டு அவன் கழுத்தைக் கட்டியபடி சிரித்தாள்....

இருவரையும் பார்த்து கண்ணீர் வந்தது சந்திராவுக்கு.... சட்டென்று ஏதோத் தோன்ற மகனைப் பார்த்து "சின்னும்மா,, உன் கழுத்தில் இருக்குற செயினை எடுத்து பாப்பாக்கு குடுத்துடலாமா?" என்று கேட்ட மறு விநாடி சரியென்று பெரிதா தலையசைத்த சின்னு தன் கழுத்தில் கிடந்த லாக்கெட் வைத்தச் செயினை எடுத்து சிமியின் கழுத்தில் போட்டுவிட்டு "பாப்பாக்கு தா இது.... வச்சுக்க பாப்பா" என்று கூறி சிமியின் கன்னத்தில் முத்தமிட.... குழந்தையும் பதிலுக்கு முத்தமிட்டாள்....

"இதெல்லாம் வேணாம்மா... நீங்க சாரை கவனிங்க போங்க" என்றபடி மகளின் கழுத்தில் சின்னு அணிவித்த செயினை கழட்ட முயன்றார்....

அவர் கைகளைப் பற்றித் தடுத்த சந்திரா "இல்லன்னா,, இந்த செயின் என் மகன் உயிரை காப்பிதினதுக்காக நான் கொடுத்த அன்பளிப்பு இல்லை.... என்றாவது ஒருநாள் உங்களைப் பார்க்கும் போது தேவியோட மகளை எனக்கு காட்டும் அடையாளச் சின்னம்" என்றவள் மகனிடமிருந்து சிமியை வாங்கி கண்ணீருடன் முத்தமிட்டு "இந்த வயசில் தாயைப் பிரியனும்னு உனக்கு விதியா கண்மணி" என்றாள்....

குழந்தையை பத்ரியிடம் கொடுத்துவிட்டு மகனை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.... சிமியை விட்டு வரமாட்டேன் என்று அழ ஆரம்பித்தான் சின்னு.... அவனை சமாதானம் செய்து அணைத்துக் கொண்டு "நான் போறேண்ணா" என்று கண்ணீருடன் கூறிவிட்டு ஆம்புலன்ஸ் நோக்கி ஓடினாள்.....

ஏகப்பட்ட அழுகுரலுக்கு நடுவே ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாத அந்த குழந்தைகளின் அழு குரலும் தேய்ந்து மறைந்தது......

அருணகிரி சகல வசதியுடன் பெங்களூரின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்...... எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..... ரயில் விபத்து மனதை விட்டு அகலாமல் இருந்தாலும் தேவியின் தியாகமும் அவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றது.... அவர்களது வீட்டு பூஜையறையில் தேவி என்று எழுதப்பட்ட ஒரு படம் மாட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது....

ரயில் விபத்துக்குப் பிறகு சந்திரமதிக்கு வியிற்றில் ஏற்பட்ட சிறுவலி நாளுக்கு நாள் அதிகமாக... பரிசோதனை செய்துப் பார்க்கப்பட்டது... விபத்தின் போது எதிலோ பலமாக மோதியதில் கருப்பையில் அடிபட்டிருப்பதாகவும்.. உடனடியாக அகற்றவேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட... கருப்பை அகற்றப்பட்டு சின்னு ஒரே மகன் தான் என்றாகிப் போனது.... தங்களின் வாரிசைக் காப்பாற்றிய தேவியே அவர்களின் குலதெய்வம் ஆகிப் போனாள்...

தேவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பத்ரிநாத்திடம் ஒப்படைக்கப்பட்டு அரசு ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி மாவட்டம் நேசகுளம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சகல மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டாள்....

இறக்கும் தருவாயிலும் இரு குழந்தைகளை காப்பாற்றிய தேவியின் குணம் அறிந்து பத்ரியின் சொந்த கிராமமான நேசகுளம் பஞ்சாயத்து தேவியின் நினைவாக சிறு மணிமண்டபம் கட்டி ஊர் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தது.....

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த பத்ரிக்கு மகளே ஆறுதலானாள்.....

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு ரயில்வேயில் வேலை தருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது..... பத்ரி ஏற்கனவே ரயில்வே ஊழியராக இருந்ததால் அவருக்கு சரக்குப் பெட்டக அதிகாரியாக ப்ரமோஷன் கொடுத்து உத்திரப்பிரதேசம், ஆக்ராவுக்கு மாற்றல் செய்தது....

தேவியின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி,, தாய் மடிக்காக ஏங்கியழுத தனது ஒரு வயது மகளுடன் ஆக்ராவுக்கு கிளம்பினார் பத்ரிநாத்.....




" அறிவுக் கதைகள் ஆயிரம் கூறி..

" ஆத்திச் சூடி சொல்லி,

" ஆழம் விழுதில் ஊஞ்சல் கட்டி,

" உன் இடையில் எனைச் சுமந்து,

" நிலவைக் காட்டி சோறூட்டி....

" ஈடில்லா பாசம் காட்டிய.....!

" இணையில்லா உறவே......

" சொர்க்கத்தின் முகவரியாய் இன்றோ நீ...

" என் அம்மா!!

" இனி நீ இல்லாத நான்?

நடந்துவிட்ட விபத்துக்கான காரணம் பலரும் பலவிதமாக சொன்னார்கள்..... விபத்திற்கு காரணம் சூறாவளி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மைக் காரணம் அரசால் வெளியிடப்படவில்லை...!

விபத்தினை நேரில் பார்த்தவர்கள் மற்றும் கொல்லம் ஏரியா நியூஸ் ரிபோட்டர்.... ரயில் வழமையை விட அதி வேகத்தில் (90 kmph) சென்றதாகவும் ரயில் பாதையில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும்.. அறிவிப்புப் பலகையினை செலுத்துனர் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்..!

பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தோருக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகவே வரும் என்று அறிவிக்கப்பட்டதாகவும்... கிடைத்த தகவலை நம்பி கழற்றபப்ட்ட ரயில் தண்டவாளப் பாகங்களை மறுபடியும் இணைக்காது... வேலையை பாதியில் நிறுத்திவிட்டு இளைப்பாறிய நேரத்தில், ரயில் பாலத்தைக் கடந்ததாலேயே விபத்து நேரிட்டது என்றும் கூட சொல்லப்படுகிறது...

அன்று சூறாவளி அளவிற்கு பலமான மழையோ காற்றோ இருக்கவில்லை...! மழை மெதுவாகத் தான் தூறியது...! ஏரி நீர் மிகவும் ஆழமானது என்பதால் மழை நாட்களில் சற்று வேகமாகவே ஓடும்... விபத்து நடந்த அன்று ஏரி மிகவும் அமைதியாக இருந்தது..... என வன பாதுகாப்பில் இருந்து காப்பாற்றும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்...

விசாரணையின் பின்னர் இந்திய ரயில்வேஸ் ஓட்டுனரை பதவி நீக்கம் செய்த தகவலும் வெளியாகியது...

பெருமான் ரயில் சம்பவம் கேரளா இந்திய மாநில வரலாற்றிலேயே மிக பெரிய ரயில் சோகங்களும் ஒன்றாகும்....

சில வாரங்களிலேயே இந்திய ரயில்வேயால் ஏரி முழுவதும் புதிய பாலமொன்று கட்டப்பட்டது... பழைய பெருமான் பாலம் நடந்த சம்பவத்தின் நினைவாக அப்படியே உள்ளது...

யாரோ ஒருவர்,, அல்லது பலரின் கவனக்குறைவால் நேர்ந்துவிட்ட உயிரிழப்புத்தான் எத்தனை எத்தனை??? 




" செய்யும் தொழிலே தெய்வம் என்று "

" கும்பிடுவதை விட.....

" எத்தொழில் செய்யின்... அத்தொழில்...

" தங்களின் உயிரென நினைத்தால்...

" மற்ற உயிர்களின் உன்னதம் புரியும்!!
[color][font]
2008, ஜூலை 8ம் தேதி...... கேரள அரசாங்கமும் ரயில்வே நிர்வாகமும் சேர்ந்து விபத்து நடந்த பெருமான் பாலத்தில் ஒரு அஞ்சலி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.... விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள்... பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர்.....

பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க எல்லோரும் அஷ்டமுடி ஏரியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்... சிலர் ஏரியில் படகு மூலம் பயணம் செய்து நேரடியாக நீரில் மலர் தூவினர்......

அஞ்சலி செலுத்தியக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து செல்ல.... சந்திரா மட்டும் இன்னும் பாலத்தின் மீது நின்று கண்ணீருடன் ஏரியை நோக்கி கைகூப்பியபடி இருந்தாள்....

அருகில் நின்றிருந்த அருணகிரி மனைவியின் தோளில் கைவைத்து "வருத்தப்படாத சந்திரா,, நம்ம மகனை காப்பாத்திக் கொடுத்த தேவியே மறுபடியும் வந்து நம்ம வீட்டுல பிறக்கனும்னு வேண்டிக்கம்மா" என்றார் ஆதரவுடன்....

கலங்கிய கண்களுடன் அவரை நிமிர்ந்து நோக்கிய சந்திரா "அதைவிட வரம் வேற எதுவும் எனக்கு வேண்டாம்ங்க" என்றவள் சுற்றிலும் பார்வையை ஓட்டி "பத்ரி அண்ணா வந்திருப்பார்னு பார்த்தேன்.... ஆளையே காணோமேங்க?" என்று ஏமாற்றமாகக் கூறினாள்....

"ஒருவேளை படகுல கூட போய் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்... வா ஏரிகரையோரமா போய்ப் பார்க்கலாம்" என்றபடி மனைவியின் கையைப் பற்றி மெல்ல அழைத்துச் சென்றார்....

இந்த இருபது வருட சுழற்சி அருணகிரி தம்பதிகளுக்கு முதுமையை அதிகமாக தந்துவிடவில்லை.... விபத்தில் அடிபட்டதன் காரணமாக நடையில் சற்று வித்தியாசம்.... காதோரம் கத்தையாக நரைமுடிகள் அவ்வளவு தான் அருணகிரி.... சந்திராவிடம் சற்றே உப்பியிருந்த கன்னத்து சதைகளும்... பூசினார்ப் போன்ற உடல்வாகும் தான் மாற்றங்கள்.....

ஏரிக்கரையோரம் இருவரும் பார்த்தபடி நடந்து வர... அருணகிரியின் வார்த்தை பொய்யாகாமல் ஒரு படகிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார் பத்ரிநாத்...

அவரைக் கண்டுவிட்ட சந்தோஷத்தை விட அவரது தோற்றம் கொடுத்த அதிர்ச்சி தான் அதிகமாக இருந்தது... இந்த இருபது வருடம் அவருக்கு நாற்பது வருட மூப்பைக் கொடுத்திருந்தது.....

பஞ்சாக வெளுத்த தலைமுடியுடன் தட்டுத் தடுமாறி படகிலிருந்து இறங்கியவரை அருணகிரி சென்று கைக்கொடுத்து இறக்கி விட... இறங்கிய பின் நிமிர்ந்து பார்த்து அடையாளம் கண்டுகொண்ட பத்ரி "சார் நீங்களா?" என்றார் வியப்புடன்...

பத்ரியை விடமால் தோளோடு அணைத்துக் கூட்டி வர,, அவரது தோற்றம் கொடுத்த அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்த சந்திரா சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவர்களின் பின்னால் வந்தாள்....

ஒதுக்குப் புறமாய் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.... "என்ன பத்ரி இப்படியிருக்கீங்க?" என்று அருணகிரி கேட்க...[/font][/color]
Like Reply
சோகமாய் புன்னகைத்த பத்ரி.... "தேவி போனப்பிறகு விதி ரொம்பவே விளையாடிருச்சு சார்" என்றார்

ஆறுதலாக அவர் கையைப் பற்றிக் கொண்டு "என்னண்ணா ஆச்சு?" என்று அன்புடன் கேட்டாள் சந்திரா....

அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தவர் "தேவி இறந்த அடுத்த வருஷமே என் அப்பா அம்மா சொந்தக்காரங்க பெண்ணை எனக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்க அதனால திசைமாறிய என் வாழ்க்கையை இந்த நிமிஷம் வரை என்னால சரி பண்ணவே முடியலைம்மா" வருத்தமாகக் கூறியவர் எழுந்து கொண்டு "நைட் ட்ரைன்லயே கிளம்பனும்... சொந்த ஊர் போய்ட்டு அங்கிருந்து ஆக்ரா போகனும்" என்றவர் தனது பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார்...

தம்பதிகள் இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை... அருணகிரி ஆறுதலாக அவர் தோளில் தட்டி "எல்லாம் சரியாகும் பத்ரி... கவலைப்படாதீங்க" என்றார்...

"அண்ணா,, சிமி எப்படியிருக்கா?" என்று ஆர்வமாக சந்திரா கேட்க... ஒரு விரக்தி பெருமூச்சுடன் "ம் நல்லாருக்காம்மா" என்றார் பத்ரி....

சட்டென்று ஏதோ யோசனைத் தோன்ற "இத்தனை நாளாதான் நீங்க இருக்கிற இடம் தெரியலை... இப்போ தான் செல்போன் வசதியெல்லாம் இருக்கேண்ணா? உங்க வீட்டு நம்பர் குடுங்கண்ணா... சமயம் கிடைக்கும் கால் பண்றேன்" என்று சந்திரா கேட்டதும் "ஆமாம் பத்ரி... வீட்டு நம்பர் குடுங்க" அருணகிரியும் கேட்டார்....

"ம் இதோ தர்றேன்" என்றவர் பாக்கெட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்து அதில் தனது வீட்டு நம்பரை எழுதி அருணகிரியிடம் கொடுத்து விட்டு "நான் கிளம்புறேன் சார்" என்றுவிட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றார்....

பத்ரியின் பேச்சிலேயே அவர் மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்று அனைவருக்கும் தெரியும்,, வந்திருக்கும் மகராசி எப்படிப் பட்டவளோ தெரியவில்லையே?? தம்பதிகளின் நினைப்பு ஒரே மாதிரியாக இருந்தது....

மனிதனுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழ்வு என்னாகும் என்பதை எடுத்துக் கூறுவது போல் இருந்தது அவரின் சோகம் சுமந்த முகம்...

கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மனைவியை அணைத்தபடி அமைதியாக காருக்கு வந்தார் அருணகிரி....

வரும் வழியெங்கும் சந்திராவின் முகத்தில் சிந்தனையின் கோடுகள்.... எதையோ யோசித்தபடியே வந்த மனைவியை அருணகிரியும் தொந்தரவு செய்யவில்லை.....

இந்த இருபது வருடத்தில் அருணகிரியின் உழைப்பால் சொத்துக்கள் பலமடங்கு பெருகியிருந்தது.... கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஸ்டீல் தொழிர்சாலைக்கு உரிமையாளராகியிருந்தார்..... பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைதியான ஒரு இடத்தில் சொர்க்கபுரி போன்ற பங்களா ஒன்று.... சிட்டிக்குள் இன்னும் சில சொத்துக்கள்...

இவை அத்தனைக்கும் ஒரே வாரிசான அவர்களின் மகன் சின்னு,, பெங்களுரூவில் நான்கு வருட மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக சென்ற மாதம் தான் கலிபோர்னியா சென்றிருந்தான்....

வீடுக்கு வந்ததும் கூட மனைவியிடம் அதே அமைதி நீடிக்க "என்னம்மா ஒரே யோசனையா இருக்க" என்று அருணகிரி கேட்டதும்....

அவரை ஏறிட்ட சந்திரா "நான் எதைப் பத்தி யோசிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியலையாங்க?" என்று திருப்பிக் கேட்டாள்

மெல்லிய சிரிப்புடன் "எனக்கும் தெரியும் தான்... அதையே உன் வாயால சொல்லக் கேட்கனும்னு ஆசைதான் சந்திரா.... ம் சொல்லு உன் யோசனை என்னம்மா?" என்று அன்புடன் கேட்டார்....

அவரின் கைப்பற்றி பூஜையறைக்கு அழைத்துச் சென்ற சந்திரா அங்கே தேவி என்று எழுதப்பட்டிருந்த எழுத்தால் ஆன படத்தைக் காட்டி "தேவியோட மகள் சிமியை நம்ம சின்னுவுக்கு கேட்டு இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துடலாமாங்க?" ஆர்வமே உருவாகக் கேட்டாள்....

அருணகிரியின் முகமும் மலர்ந்தது "நீ சொல்லி நான் எதையாவது தட்டியிருக்கேனா சந்திரா? ஒரு நல்லநாள் பார்த்து நாமே பத்ரி வீட்டுக்கு போன் செய்து கேட்டுக்கிட்டு அப்புறம் முறைப்படி நேரா அவங்க வீட்டுக்கேப் போகலாம்" என்று கூறியதும் சந்திராவுக்கும் அதுவே சரியென்று பட்டது........

அந்த நல்லநாள் அடுத்த இரண்டாவது நாளே என்று காலண்டர் சொல்ல மிகுந்த எதிர்பார்ப்புடன் தொலைபேசியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பத்ரியின் வீட்டுக்கு கால் செய்தாள் சந்திரா....

நான்கு முறை மணியடித்தப் பிறகு எடுத்த ஒரு பெண்க் குரல் "யாருங்க?" என்று அதட்டலாக கேட்டது....



அது பத்ரியின் இரண்டாவது மனைவியாகக் கூட இருக்கலாம்.... ஆனால் அவள் எப்படிப்பட்டவள் என்ற ஆராய்ச்சியை விடுத்து எப்படியும் அவளுக்கும் தெரிந்து தானே ஆகவேண்டும் என்ற நோக்கில் தாங்கள் என்ன? என்ற விபரங்களை விளாவரியாகக் கூறினாள் சந்திரா....

கோடீஸ்வரன் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு என்றதும் எதிர்முணையில் அதட்டிய குரலில் சட்டென்று ஒரு குலைவு "நான் கலா,, பத்ரியோட மனைவி" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் "பெரியவங்க என்ன விஷயமா போன் பண்ணீங்கன்னு சொன்னா அவர் வந்ததும் சொல்வேன்" என்று குலைவு குறையாத குரலில் கேட்டாள்....

எல்லோரையும் போல சந்திராவும் கலாவின் குலைவில் மயங்கி "அது வேற ஒன்னுமில்லைங்க அண்ணி,, நம்ம தேவி தான் என் மகன் உயிரை காப்பாத்திக் கொடுத்தது... அதே தேவியோட மகளே அவனுக்கு மனைவியா எங்களுக்கு மருமகளா வரனும்னு ஆசைப்படுறோம்.... அதுக்காகத்தான் கால் பண்ணோம்... நீங்க சம்மதம் சொன்னா ஒரு நல்லநாள் பார்த்து நேரில் வருவோம்...." என்ற சந்திரா தனது மகன் இப்போது மேல்ப்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருப்பதையும் கூறினாள்....

எதிர் முனையில் பலத்த அமைதி....

"ஹலோ அண்ணி,, லைன்ல இருக்கீங்களா?" சந்திரா உரக்க கேட்க...

"ம்ம் இருக்கேன்" என்றவள் மீண்டும் குரலில் குலைவை கொண்டு வந்து "அய்யோ விதிப் பாருங்களேன்.... இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்றதுக்கு இந்த மான்சிக்கு கொடுத்து வைக்கலையே" என்று போலியான துயரத்துடன் அங்கலாய்த்தாள்....

"மான்சியா? யாரது?" என குழப்பமாக சந்திரா கேட்டதும்... "நீங்க சொன்னீங்களே சிமி,, அவ பேருதான் மான்சி... சிமி அவ அப்பா கூப்பிடுற செல்லப் பேருதான்...." என்று விளக்கம் கூறினாள்....

"சிமியோட நிஜப் பெயர் மான்சியாம்" என்று அருகில் இருந்த கணவருக்குச் சொன்னவள்... போனில் "அதுசரி,, ஏன் மான்சிக்கு ஏன் வாழ குடுத்துவைக்கலைனு சொன்னீங்க?" என்று அதே குழப்பத்தோடு சந்திரா கேட்க

"அது வந்துங்க" என்று நிமிடநேரம் தாமதித்து விட்டு "மான்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க.... ஆறு மாசம் ஆகுது.... அதான் அப்படிச் சொன்னேன்" என்று சந்திராவின் தலையில் இடியை இறக்கியதும்......

போனை நழுவவிட்டு விட்டு கணவரின் தோளில் சாய்ந்து "தேவியோட மகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சாங்க" என்றாள் கண்ணீருடன்......

அந்த பக்கம் "ஹலோ ஹலோ" என்று கலா கத்தியதும் ரிசீவரை எடுத்த அருணகிரி "சரிம்மா,, நாங்க பிறகு பேசுறோம்" என்றார்

"சரிங்க,, ஆனா உங்க நம்பர் குடுங்க" என்று கவனமாக கேட்டு நம்பரை வாங்கிக் கொண்டு தான் போனை வைத்தாள் கலா...

ஆக்ராவில் ரயில்வே காலனியில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து கிழிந்து போன சுடிதார் பேன்ட்டை தையல் வெளியேத் தெரியாதவாறு நேக்காகத் தைத்துக் கொண்டிருந்த மான்சியின் காதுகளிலும் கலாவின் வார்த்தைகள் விழுந்தது....

அதிரவில்லை அவள்,, அமைதியாகத் திரும்பி வீட்டுக்குள் பார்த்தாள்....

ரிசீவரை வைத்துவிட்டு திரும்பி மான்சியைப் பார்த்தவள் "இங்கென்னடி பார்க்குற? பிரண்ட்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு நாளைக்கு சாயங்காலம் போகனும்னு ரீத்து சொன்னா.... பார்ட்டிக்கு போடப் போற டிரஸை எடுத்து கட்டில்ல வச்சிருக்காலாம்... போய் அதையெல்லாம் அயர்ன் பண்ணி வை போ போ" என்று மிரட்டலா.. அதட்டலா என்று தெரியாத குரலில் கூறியதும்.... சரியென்று தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து ரீத்துவின் படுக்கையறைக்குச் சென்றாள் மான்சி....

நாளை மாலை நடக்கவிருக்கும் ஒற்றைப் பார்ட்டிக்கு பத்து விதமான உடைகளை எடுத்து கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்தது..... இதில் எந்த உடை அயர்ன் செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது... கேட்கவும் கூடாது...... அந்த நேரத்தில் எதுப் பிடிக்கிதோ அதைப் போட்டுக்கொண்டு போவாள்... மற்றவை உதறி எறியப்பட்டு மீண்டும் அயர்ன் செய்ய மான்சியிடமே வரும்....

அமைதியாக அயர்ன் செய்ய ஆரம்பித்தவளின் கழுத்தில் அன்று தேவியின் இறப்பை சாட்சியாக வைத்து சின்னு இவளுக்கு அணிவித்த டாலர் செயின் மட்டும் தான் இருந்தது.......




“ விதியை நொந்து!

“ விடை தேடியலையும்!

“ பெண்ணல்ல நான்!

“ என் தேடல் எதுவென்று புரியாமல்....

“ விண்ணெங்கும் உனைத் தேடி,

“ கலைந்து செல்லும் மேகத்தில் எல்லாம்..

“ உன் முகம் காண முயன்று!

“ எங்கு தேடியும் கிடைக்கவில்லை தான்!

“ ஆனாலும் மீண்டும், மீண்டும்..

“ உயிர்த்தெழுகிறேன், என்றாவது...

“ உனைக் கண்டுவிடுவேன் என்று!
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 3

அத்தனை உடைகளையும் அயர்ன் செய்து வைத்துவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை முந்தானையால் ஒற்றியபடி நிமிர்ந்த மான்சியை கலாவின் குரல் அழைத்தது.....

"இதோ வர்றேன் சித்தி" என்றவள் துணிகளை எடுத்து பீரோவில் அடுக்கி விட்டு ஹாலுக்கு வந்தாள்....

ஹாலில் அமர்ந்து டிவி சீரியலைப் பார்த்து கடுப்புடன் முனங்கிக் கொண்டிருந்தாள் கலா,, தொலைபேசியில் வந்த செய்தியை முடக்கிவிட்டாலும் மனது எண்ணையில் இட்ட அப்பமாக கொதித்துக் கொண்டிருந்தது.... இந்த சிறுக்கி மகளை அவ்ளோ பெரிய இடத்துல போய் வாழ விட்டுருவேனா? அப்புறம் எம் மகளோட வாழ்க்கை என்னாகிறது?

எதிரில் வந்து நின்றவளை ஏளனமாக ஏறிட்டவள் "என்னடி நான் போன்ல பேசினதையெல்லாம் கேட்டேல்ல? உன் அப்பன் வந்ததும் நான் பேசும் போது நீயும் வேணாம்னு சொல்லனும்... இல்லேன்னா நடக்கிறதே வேற ஆமா சொல்லிட்டேன்" என்று மிரட்டியவளைக் கண்டு பயப்படவில்லை தான்....

ஆனாலும் குடும்பத்தில் சண்டை சச்சரவு என்றால் தனது அப்பாவின் மனம் நிம்மதியின்றி தவிக்குமே என்ற ஒரே நோக்கில் "சரி சித்தி" என்று அமைதியாகக் கூறிவிட்டு இரவு உணவை தயாரிக்க கிச்சனுக்குள் சென்றாள்...

சரியாக ஏழு மணி..... இன்னும் ரீத்து வரவில்லை.... பத்ரி வந்துவிட்டார்.... வாசலில் செருப்பை விடும் சப்தம் கேட்கும் போதே இங்கே நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் கலா...

உள்ளே வந்தவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கைப்பையை வாங்கிய மகளை கண் நிறைய பார்த்துப் புன்னகைத்து விட்டு "சிமிம்மா,, நீ எத்தனை மணிக்கிடா வந்த?" என்று கேட்கவும்....

"இன்னைக்கி எங்க எம்டியோட வீட்டுல ஒரு பங்ஷன்ப்பா... அதனால மதியம் மூணு மணியோட ஆபிஸ் லீவு.... நாலு மணிக்கே வீட்டு வந்துட்டேன்" என்ற மான்சி அவரின் பையை எடுத்துச் சென்று அறையில் வைத்து விட்டு வந்தாள்.



பத்ரி முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வரும் வரை கலா இருந்த இடத்திலிருந்து அசையவில்லை.... ஹாலின் மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார்... மான்சி கொடுத்த காபியை வாங்கியவர் வாசலைப் பார்த்து விட்டு "இன்னும் ரீத்து வரலை போலருக்கு?" என்று கேட்க...

"ப்ரண்ட்ஸ் கூட எங்கயாவது வெளியப் போயிருப்பா... வந்துடுவாப்பா" என்று சமாளிப்பாக கூறினாள்....

"இப்படியே சமாளிச்சிடு.... ஆனா ரீத்து கெட்டது அவ அம்மாவால பாதின்னா உன்னால மீதி... நீ மட்டும் ஆரம்பத்துலருந்து உன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தா அவ இந்தளவுக்கு நடந்துக்க மாட்டா" பத்ரியின் குரலில் கோபம்.....

"அப்பா,, ப்ளீஸ்ப்பா.... சின்ன குழந்தைப்பா ரீத்து.... மூக்குக் கீழ இத்துணூன்டு மீசை வரைஞ்சா அப்புடியே நீங்களே தான்ப்பா.... எனக்கு தம்பியா பிறக்க வேண்டியவ... தங்கையா பிறந்திட்டா.... ஆனா வளர்ந்ததாவது தம்பியாவே வளரட்டுமே?" தங்கையைப் பற்றி நினைப்பில் முகம் கனிய தகப்பனிடம் பரிந்து பேசினாள்....

பத்ரி கலாவிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது.... கலாவின் கையால் தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டார்.... எதுவானாலும் மான்சி தான்.... அவளின் ஏழாவது வயதிலிருந்தே பத்ரி அவளுக்கு தகப்பன் என்பது மாறி... மான்சி தான் பத்ரிக்கு தாய் என்பது போல் ஆகிவிட்டது.... மகளுக்காகவே வாழும் பிறவி பத்ரி என்றால்.... குடும்பம் சிதறிவிடக் கூடாது.. தகப்பனின் கௌரவம் முக்கியம் என்று சகலத்தையும் ஒரு தூணாக இருந்து தாங்கும் மான்சி மகத்தான பிறவி தான்.....

'சிறு குழந்தையை பார்த்துக்க ஆள் வேணும்டா மகனே... அதுவும் பெண் குழந்தைக்குத் தாய் முக்கியமடா' என்று பத்ரியின் தாயார் வடித்தக் கண்ணீருக்கான விடை தான் இவருக்கும் கலாவுக்கும் நடந்த கல்யாணம்....

கலா என்னவோ வந்த புதிதில் மான்சியிடம் அன்போடு தான் இருந்தாள்..... பத்ரியும் கட்டியவளுக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்று கலந்தாடினார் தான்... ஆனால் அந்த கலப்பில் காதலை காட்டத்தான் அவரால் முடியவில்லை... வெறும் கடமை மட்டுமே இருக்க..... கவனிக்க ஆரம்பித்தாள் கலா.....

மனங்கள் ஒன்றாத சேர்க்கையில் இயற்கை மட்டும் தனது கடமையை சரியாகச் செய்தது... ரீத்து உருவானாள்.... மான்சியின் மூன்றாவது பிறந்தநாள் முடிந்த மூன்றாவது நாள் ரீத்து பிறந்தாள்.... அப்படியே பத்ரியின் மறு உருவாய்ப் பிறந்திருந்த தங்கையின் மீது மான்சி உயிரையே வைத்திருந்தாள்......

அதன்பின் ஒருநாள் வேண்டாவெறுப்பாய் விலகியவரை வேதனையோடு பார்த்தாள் கலா.... "என் காதல் உணர்வெல்லாம் எனது காதல் மனைவி தேவியோடு செத்துவிட்டது... அதை உயிர்பிக்க முடியவில்லை... என்னை மன்னிச்சிடு கலா" என்று பத்ரி உண்மையை ஒத்துக்கொண்ட அந்த தருணத்தில் தான் கலாவுக்குள் சாத்தான் வந்து புகுந்து கொண்டான்....

பத்ரியின் காதலுக்குறிய தேவியின் மீது அலாதி வெறுப்பு... அந்த உன்னதமான காதல் கொடுத்த உயிரான மான்சியின் மீது அதைவிட அதிகமான வெறுப்பு.... பள்ளிக்கூடம் விட்டு வந்து கால்களைக் கட்டிக்கொண்டு "அம்மா பசிக்கிது" என்ற சிமி என்ற சிறு பெண்ணை ரௌத்திரமாக விழித்துப் பார்த்தவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து "யாருடி உன் அம்மா? இனிமே சித்தினு கூப்பிடு சனியனே" இது தான் கலாவின் முதல் வசை மொழி... மான்சியின் ஜந்தாவது வயதில் தொடங்கியது இந்த போராட்டம்.....

அடிக்குப் பயந்து சித்தி என்று அழைத்தாள்.... முதலில் மிரண்டாலும் போகப் போக ஏச்சும் பேச்சும் அடியும் உதையும் பழகியது.... மனதுக்குள் "அம்மா காப்பாத்து அம்மா காப்பாத்து" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே எல்லாவற்றையும் மவுனமாக தாங்கினாள் மான்சி....

பத்ரி இல்லாத பகல் நேரத்தில் தான் இவையெல்லாம் அதிகமாக நடக்கும்.... ஆனாலும் அவருக்குத் தெரியாமல் போகாது.... தாயின் பேச்சைக் கேட்டு மறு திருமணம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விடுவார்....

கலாவின் அடுத்த அடி சற்று பலமாக வலித்தது.... பிஞ்சுக் குழந்தையின் தலையில் சுமத்தப்பட்ட வேலைகள்?.... தோட்டத்து குவிந்து கிடக்கும் பாத்திரங்களைக் காட்டி "இதையெல்லாம் தேய்ச்சுக் கழுவி வெயில்ல கவுத்து வச்சிட்டு வந்து சாப்பிடு" என்று கூறிவிட்டு சென்ற சித்தியை மிரட்சியுடன் பார்த்தாள் ஏழுவயது குழந்தை.....

எப்பவுமே சிறு குழந்தைகளுக்கு பெரியவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதென்றால் ரொம்பவும் இஷ்டம், நாம் விரட்டினாலும் விலகிப் போகாமல் பாத்திரம் கழுவுறேன் துணி அலசுறேன் என்று பிடிவாதமாக நம்மையேச் சுற்றுவார்கள்... மான்சிக்கும் அப்படியொரு வயசு தான்.... ஆனால் தனியா இவ்வளுவு பாத்திரங்களையும்???

முதலில் ஒன்றும் புரியாமல் அரையும் குறையுமாக செய்தவளை அடுப்பில் பழுக்க காய வைத்த கம்பியை காட்டி மிரட்டியதும் இனி தனது விதி இதுதான் என்று புரிந்து கொண்ட அந்த பிஞ்சு தனது மலர் கரங்கங்கள் தேய்ந்து போகுமளவுக்கு எல்லாவற்றையும் கவனமாக செய்தாள்.....

எல்லாவற்றிலும் அடக்கியாண்ட கலாவால் மான்சியின் படிப்பில் கைவைக்க முடியவில்லை..... மகளின் படிப்பை முடக்கினால் பத்ரியின் மாத வருமானம் முற்றிலும் முடக்கப்பட்டு விடும் என்ற பயம் கலாவை கட்டிப் போட்டது.....

ஒரு வேலைக்காரியாக வீட்டில் வேலைகளை செய்துவிட்டு தனது படிப்பிலும் முழு கவனத்தையும் செலுத்தினாள்.... BSc கம்பியூட்டர் சயின்ஸில் முதல் மாணவியாக தேறியவளுக்கு முதல் இன்டர்வியூவிலேயே உடனடியாக ஒரு நிறுவனத்தில் கம்பியூட்டர் ஆப்ரேட்டராக வேலை கிடைத்தது.... மான்சி வேலைக்குச் செல்ல கலா சம்மதித்ததே ரீத்துவுக்கான சேமிப்பில் இன்னும் சில ஆயிரங்கள் கூடுமே என்ற ஆசையில் தான்.... அதே போல் அவளின் சம்பளத்தில் போக்குவரத்து செலவுகளுக்கு கொடுத்தது போக மீதியை மகளுக்காக செலவளித்தாள் கலா...

எப்பவுமே அதிகநேரம் மவுனியாக இருக்கும் பத்ரி நிரந்தர மவுனியாகிப் போனார்.... மான்சியின் ஏழாவது வயதில் தனது படுக்கை ஹாலுக்கு மாற்றிக்கொண்டார்.... மான்சிக்கும் ரீத்துவுக்கும் தனியறை என்று இருந்தது போய் "அம்மா எனக்கு ப்ரைவேசி வேணும்.. தனியா ரூம் வேணும்" என்று ரீத்து கேட்டவுடன் மான்சியும் ஹாலுக்கு விரட்டியடிக்கப் பட்டாள்.....

அதன் பின் தினமும் தகப்பனுக்கு கால் பிடித்து உறங்க வைத்துவிட்டு தான் இவள் உறங்குவாள்.... தனக்கு தாயாக மாறிய மகளை எண்ணி பத்ரி கண்ணீர் விடாத நாளே கிடையாது...

கடந்து சென்ற வருடங்களில் ஒவ்வொரு முறையும் கலாவின் அராஜகத்திலிருந்து தப்பித்து தன் மூத்த மகளுடன் விலகிச் சென்றுவிட அவர் நினைக்கும் போதெல்லாம் "பாப்பா அப்பா? அவ என்னப்பா செஞ்சா? அவளுக்கு அப்பா இல்லாம பண்றது ரொம்ப பாவமாச்சே அப்பா? எனக்கு பழகிடுச்சுப்பா.... என் வீட்டு வேலையை நான் செய்றேன்..... இதுல வருத்தப்பட ஒன்னுமில்லை" என்று பலவாறு பேசி தகப்பனை சமாதானம் செய்துவிடுவாள் மான்சி.....

இதோ இன்னும் கொஞ்ச காலம் தான்..... மான்சிக்கு திருமணம் முடிந்துவிட்டால்.. இவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டதும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் பத்ரி... இதற்கு மான்சி ஒரு போதும் சம்மதிக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்... உறுதியை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தார்.....

டிவி பார்த்துக் கொண்டிருந்த கலா தொண்டையை செருமிக் கொண்டதும் ஏதோ பேசப் போகிறாள் என்று தகப்பனுக்கும் மகளுக்கும் புரிந்தது....

"உன் மொத சம்சாரம் செத்தப்ப ரயில்ல கூட வந்தாங்களாமே யாரோ பெங்களூர் காரங்க.... அவங்க இன்னைக்கி மதியம் போன் பண்ணி பேசினாங்க" என்று அலட்சியமாக கூறிவும்...

பத்ரி விதிர்ப்புடன் நிமிர்ந்து மகளைப் பார்த்து "அருணகிரி சாரா கால் பண்ணார்ம்மா?" என்று ஆர்வமாக கேட்க....

மவுனமாக ஆம்மென்று தலையசைத்தாள் மான்சி...

"என்ன சொன்னார்?" பொதுவாக கேட்டார்...

பெண்கள் இருவரிடமும் மௌனம்... கலா தான் மீண்டும் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தாள் "உன் மகளை பெண் கேட்டாங்க... அவங்க மகன் சின்னுவுக்கு" என்று அவள் கூறிய மறுவிநாடி பரபரப்புடன் எழுந்த பத்ரி "மான்சியவா கேட்டாங்க?..." என்றதும்...

தரையதிர எழுந்து நின்ற கலா "ஆமா ஆமா,, இந்த ரதி தேவியை தான்....." வெறுப்புடன் கூறியவள் "ஆனா நான் உசுரோட இருக்குற வரைக்கும் இதை நடக்க விடமாட்டேன்" என்று கொடூரமாய் முழங்கினாள்.....

அதிர்ந்து போனார் பத்ரி... கலாவின் முகம் பார்த்துப் பேசி காலங்கள் பல கடந்திருக்க இன்று ஆத்திரமாய் அவளெதிரே வந்து நின்றார் "ஏன்டி? ஏன் நடக்காது? என் மகள் வாழ்க்கையில நீ தலையிட நான் விடமாட்டேன்" என்று ஆத்திரமாய் பேசியவரை பார்வையாலேயே அலட்சியப்படுத்தியவள்...

"அவதான் உன் மக,, ரீத்துவை நான் என்ன வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கா பெத்தேன்?" படு கேவலமான வார்த்தையைக் கூறி தனது மானத்தையே ஏலம் போட்டாள் கலா....

மான்சி காதுகளைப் பொத்திக் கொண்டாள் "அய்யோ சித்தி,, அசிங்கமா பேசாதீங்களேன்.... எனக்கு கல்யாணமே வேணாம் சித்தி.... தயவுசெஞ்சு நீங்க இப்படிலாம் பேசாதீங்க" என்று அழுதவள் கூசிப் போய் நின்றிருந்த பத்ரியை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக வந்தாள்.....

தோட்டத்து வாசற்படியில் தொப்பென்று அமர்ந்த தகப்பனின் காலடியில் அமர்ந்து மடியில் தலைசாய்த்து விசும்பியபடி "ப்ளீஸ்ப்பா,, இனி இதைப் பத்தி பேசாதீங்க...... அவங்க பெண் கேட்டாலும் நான் எப்பவுமே கல்யாணம் செய்துக்கிற மாதிரி இல்லை.... கடைசி வரைக்கும் உங்க மகளாவே இருக்க ஆசைப்படுறேன்ப்பா....." என்றாள்...

"அதெப்படிம்மா முடியும்?..... நீயும் மத்த பெண்கள் மாதிரி வாழனும்மா" என்று கண்கலங்க கூறியவரின் கைகளைப் பற்றிக்கொண்டு "இல்லப்பா.... எனக்கு திருமண வாழ்க்கையில இஷ்டமும் இல்லை... நம்பிக்கையும் இல்லை.... நான் என் அப்பாவுக்கு மகளா... சமயத்துல தாயா தோழியா இருக்கவே விரும்புறேன்... தயவுசெஞ்சு புரிஞ்சுக்கங்கப்பா" என்று கண்ணீருடன் கூறிய மகளைக் கண்டு திகைப்புடன் அமர்ந்திருந்தார்....

தனது குடும்ப வாழ்க்கையின் பிரதிபளிப்பு மகளின் மனதை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்றுத் தெளிவாக புரிந்தது.... அன்று பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு யோசிக்காமல் செய்த திருமணம் தனது வாழ்க்கை மட்டுமல்ல தனது மகள் வாழ்க்கையையும் சேர்த்து கேள்விக்குறியாக்கிவிட்டதை உணர்ந்து வருந்தினார்....

'தேவி,, நீதான் உடனிருந்து நம் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரனும்' மனம் மனைவியிடம் கோரிக்கை வைக்க மடியில் இருந்த மகளின் கூந்தலை வருடினார்....

"அப்பா இன்னொரு விஷயமும் நடந்தது" என்று மான்சி மெல்லிய குரலில் சொல்லவும்.... "இன்னும் என்னம்மா நடந்திருக்கும்?" என்றார் சலிப்புடன்...

சற்றுநேர தயக்கத்திற்குப் பிறகு "அவங்ககிட்ட எனக்கு கல்யாணம் ஆகி ஆறுமாசமாச்சுன்னு சித்தி சொல்லிருக்காங்கப்பா" என்றாள்...

"அடிப்பாவி" என்று அதிர்ந்தவர் "இவ பெண் தானா?" என்றார் விரக்தியாக....

"சித்தி அப்படி சொன்னதால எனக்கு எந்த வருத்தமும் இல்லைப்பா.... அவங்களும் அப்படியே நினைச்சுக்கட்டும்... ஆனா எப்பவாவது அவங்களை நீங்க சந்திக்கும்படி நேர்ந்தால்...... எனக்கு திருமணம் ஆகலைன்ற விஷயம் அவங்களுக்குத் தெரியக்கூடாதுப்பா" என்று மகள் கூறியதும் கோபமாகப் பார்த்தவர் "நானும் உன் சித்தி மாதிரியே பொய் சொல்லனுமா? ஏன் சொல்லனும்? முடியவே முடியாதும்மா" என்றார்

"அய்யோ அப்பா உங்களைப் பொய் சொல்லச் சொல்லலை,, சித்தி சொன்ன பொய்யை காப்பாத்தச் சொல்றேன்.... அதாவது சித்தி இதுபோல சொன்னப் பிறகு நாம அதை மறுத்துச் சொன்னா நம்ம குடும்பத்தைப் பத்தி எவ்வளவு கேவலமா நினைப்பாங்கப்பா? வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வெளிவுலகைப் பொருத்தவரை பத்ரிநாத்தோட குடும்பம் மரியாதை மிக்கதாதான் இன்னமும் இருக்கு... ஒருத்தருக்கொருத்தர் மாத்திப் பேசி அந்த மரியாதையை காத்துல பறக்க விடவேண்டாம்ப்பா.... அதுமட்டுமில்ல பத்ரியின் வார்த்தைக்கு கட்டுபடமாட்டாள் அவர் மனைவினோ,, பொண்டாட்டியை அடக்கத் தெரியாதவர் பத்ரின்னோ யாராவது சொன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுப்பா... நல்லதோ கெட்டதோ சித்தி சொன்ன பொய்யே நிஜம்னு இருந்துட்டுப் போகட்டும்" என்று மான்சி தெளிவாகக் கூறவும்......

பத்ரி எதுவும் பேசாமல் விரக்தியாக சிரித்தார்....

மகள் அவரின் கையை எடுத்து தன் தலையின் மீது வைத்து "என்மேல சத்தியம் அப்பா,, எனக்கு கல்யாணம் ஆகலைனு நீங்க சொல்லவேக் கூடாது..." என்றாள்...



இப்பவும் பத்ரி பேசவில்லை... கண்ணீர் தான் வந்தது... தன் மகளுக்கு தானே சுமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது.... தன்னை இப்படியொரு சூழலில் விட்டுச்செல்ல மனமின்றி தான் மகள் திருமணத்தையே வெறுக்கிறாள் என்பது தெளிவாக அவருக்கு உயிரே சுமையானது....

இப்போதும் தேவியை மட்டும் நம்பியது அவர் மனது,, நல்வழி காட்டுவாள் என்று....

"உன் இஷ்டப்படியே நடக்கட்டும் சிமிம்மா" என்று கூறிவிட்டு எழுந்து குளியலறை நோக்கி நடந்தார்.....

நோய் தாக்கிய கோழியைப் போல கழுத்து சரிய உடல் துவள நடந்து சென்றவரை கண்ணீருடன் பார்த்து "எக்காரணம் கொண்டும் உங்களை விட்டுப் பிரியேன்ப்பா" என்று முனங்கலாய் கூறிவிட்டு வீட்டுக்குள் வந்தாள்....

"என்னடி,, உன் அப்பன்ட்ட பேசிட்டயா?... நான் சொன்னதை மறுத்துச் சொல்லிட்டு அவங்களை கூட்டி வந்து உன்னை கட்டி வைக்க நினைச்சா......" என்று ஆத்திரமாய் பேசி நிறுத்தியவள் "என் சாவுக்கு நீயும் உன் அப்பனும் தான் காரணம்னு எழுதி வச்சுட்டு கெரோசின் ஊத்திக்கிட்டு பத்த வச்சுக்குவேன்" இது உச்சக்கட்ட மிரட்டல்.... ஆனால் அப்பாவை பழிவாங்க செய்தாலும் செய்வாள் என்று மான்சிக்கும் தெரியும்....

"உங்க வார்த்தைக்கு மாற்று இல்லை சித்தி.... அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன்" என்று கூறிவிட்டு தகப்பனுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றாள்....

பத்ரி கைகால் கழுவிக்கொண்டு வந்து அமரும் போது ரீத்து வந்தாள்... தெருவில் பைக் சத்தம் கேட்டது... அவளின் பாய் பிரண்ட் யாரோ இறக்கிவிட்டுச் செல்கிறான் போல... ஹிந்தியில் பிரபலமான பாடலை முனுமுனுத்தபடி வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த தனது அம்மாவிடம் வந்து கட்டிக் கொண்டாள்....

மான்சி கூறியதில் தவறேயில்லை.... லேசாக மீசை வரைந்தால் பத்ரியின் இளமை உருவமாய் தெரிவாள் ரீத்து....

"மம்மி,, காலைல பார்த்ததுக்கு இப்போ ரொம்ப டல்லாயிட்டயேம்மா" என்று தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.... இப்படி வந்ததும் தாயை கொஞ்சினாள் என்றாள் நாளை பணம் கொஞ்சம் அதிகப்படியாகத் தேவையென்று தான் அர்த்தம்......

பீரோ சாவியை மகளின் கையில் தினித்து "இந்தா செல்லம்... எவ்வளவு காசு வேணுமோ எடுத்துக்கோ கண்ணு" என்றாள் கலா....

பத்ரி மவுனமாக மகள் கொடுத்த சப்பாத்திகளை மென்று விழுங்க... தாயை நைச்சியம் செய்து பணத்தை வாங்கும் தங்கையைப் பார்த்து ரசித்து மனதுக்குள் சிரித்தாள் மான்சி....

தாயின் செல்லத்தில் குளித்துவிட்டு தனது அறைக்குச் சென்ற ரீத்துவின் பின்னால் சென்ற மான்சி "கை கால் கழுவிட்டு சாப்பிட வா ரீத்தும்மா" என்று அழைக்க.... டீசர்ட்டை தலைவழியாக கழட்டி கட்டிலில் வீசிவிட்டு வெறும் ஷிம்மியுடன் மான்சியின் முன்னால் வந்து நின்றாள்....

"உன்னால மட்டும் எப்புடி ஃபேஸை ஒரே மாதிரி வச்சுக்கிட்டு இருக்க முடியுது? உனக்கு சிமின்னு பேர் வச்சதுக்கு பதிலா ஜிம்மினு வச்சிருக்கலாம் போலருக்கு... ஆட்றதுக்கு வால் மட்டும் தான் இல்ல... மத்தபடி நாய் மாதிரியே நன்றி காட்டுற சிமி" என்று கேலி பேசவும்...

இதுவும் பழகிப் போன ஒன்றாய்.... "நேரமாச்சுடா... வா சாப்பிட" என்றபடி அவள் கழட்டி எரிந்த டீசர்ட்டை எடுத்துச் சென்று பாத்ரூம் பக்கெட்டில் போட்டு விட்டு வந்தாள்

"உனக்கு கோவமே வராதா சிமி" என்றபடி அக்காவின் பின்னால் சென்று அணைத்துக் கொண்ட ரீத்து "நானும் உன்னைப் போல இருக்க ட்ரை பண்றேன்... ஆனா வரமாட்டிது சிமி...." என்று சலித்துக் கொண்டதும்... சிரித்துவிட்டாள் மான்சி....

திரும்பி நின்று ரீத்துவின் தாடையைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டு "நீ இப்படியே இரு ரீத்தும்மா,,, இதுதான் உனக்கு அழகு...." என்றாள்...

"ம்ம்" என்றவள் "சரி நீ போ.... நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்" என்றாள்...

மான்சி அமைதிப் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்...

இதுதான் ரீத்து.... பாதி கலா,, மீதி பத்ரி... என்று கலவையான ஒரு பிறவி.... கலாவைப் போல நாக்கை சாட்டையாகவும் பயன்படுத்துவாள்... பத்ரியைப் போல பாசம் காட்டவும் செய்வாள்... மொத்ததில் அப்பா அக்கா இருவரின் வருமானமும் இல்லாவிட்டால் நடுதெருதான் என்று கண்டுகொண்ட காரியவாதியும் கூடத்தான்....

குடும்பம் குலைந்துவிடக் கூடாது என்று எல்லாவற்றையும் அனுசரித்து தாங்கிக் கொள்ளும் மான்சியின் பொறுமை? இந்த காலத்துக்கு தேவையானதா என்றால்.... அதுவும் விடை தெரியா கேள்விதான் 

மறுநாள் காலை அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள் மான்சி.... அலுவலகம் தான் அவளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க கூடிய ஒரே இடம்....

உள்ளே நுழைந்ததுமே "நமஸ்தே ஜீ" என்று வணக்கம் கூறும் பியூனில் இருந்து.... அவளது இருக்கையை கடந்து செல்லும் போது "குட்மார்னிங் மான்சி" என்று கூறு புன்னகைக்கும் எம்டி வரை அனைவரும் அவளுக்கு உறவுகள் போல் தான் தோன்றுவார்கள்....

2008,, ஆன்லைன் உலகம் முழுமையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம்,, கம்பியூட்டரின் அத்தியாவசியம் புரிந்து அரசுத் துறை அத்தனையும் கணனி மயம் ஆக்கப்பட்டத் தருணம்... மான்சியின் கம்பியூட்டர் படிப்புக்கு நல்ல மரியாதை தான்....

எலக்ட்ரிக் ட்ரைனில் சென்று இறங்கி அலுவலகம் இருக்கும் சாலையில் ஓட்டமும் நடையுமாக சென்றவளை கண்டு ரசிக்காதவன் மூடனோ?

மலர் சூடா மலர்க் கூந்தல்.... நீண்ட பின்னல் இடையை கடந்து தொடையைத் தொட்டு முன்னும் பின்னும் ஊஞ்சல் ஆட.... வட்டமுகத்தில் ஒற்றைப் பொட்டு வைத்து..... ஓவியன் தீட்டிவிட்டு நின்று ரசிக்கக்கூடிய நீண்ட அகன்ற கருவிழிகளில் எவ்வித ஒப்பனையுமின்றி.... இமையா அல்லது குடையா என்பது போன்ற ரோஜா மலரிதழாய் இமைகள்.... குவிந்த கீழுதடு சற்றே தடித்து நீண்ட மேலுதடு... உதடுகளில் இருக்கும் கவர்ச்சியான மெல்லிய கோடுகள்... அவற்றை உற்றுப் பார்த்தவனுக்கு ஒரு மாதத்திற்கு உணவு தேவைப்படாது.... பட்டின் மென்மையை கடன் வாங்கிய கன்னங்கள்... இது கழுத்தா? அல்லது கவிதைகளின் தொகுப்பா? என சந்தேகம் கொள்ள வைக்கும் கழுத்துப் பகுதி..... அங்கே ஓடும் பச்சை நரம்பெல்லாம் ஓராயிரம் கவிதைகள் சொல்லத் தூண்டியது..... அடச்சே,, அழகை வர்ணிக்க ஆயிரம் வார்த்தைகள் கண்டுப்பிடித்தாலும்... இவள் அழகுக்கு அத்தனையும் பற்றாக்குறை தான் போலிருக்கே.....

தோளும் புஜமும் சேருமிடம் சரிவாக இல்லாமல் சமமாக இருந்தால் அந்த பெண் தன்னம்பிக்கை உள்ளவளாக இருப்பாள்... மான்சிக்கு புஜங்கள் சமமாக இருக்க.... தாமரைத் தண்டைப் போல் வெண்மையான கரங்கள் நீண்டு கிடந்தன.... திமிறும் திமிர் பிடித்த தனங்களை கண்டவர் கண் படாமல் அவள் அடக்கி பதுக்கி வைக்கும் அழகே கண்ணியமிக்கது.... இவள் சீலை திருத்தும் செயலுக்கும்... கூந்தல் ஒதுக்கும் லாவகத்துக்கும் ஈடு சொல்ல உலகில் வேறு அழகில்லை......

விளக்கொளியில் விழிகளைப் பார்த்தவன் கவிஞனாவான்.... உன்மத்தமான தருணத்தில் உதடுகளை நோக்கியவன் ஓவியனாவான்.... ஏகாந்த வேலையில் இடை வளைவைக் கண்டவன் சிற்பியாவான்.... இவை ஏதுமில்லா தருணத்தில் இவளின் சான்நீள கழுத்தையும் சாக்ஸபோன் கைகளையும்.. சதை திரட்சியான கால்களையும் கண்டவன்........ பித்தனாவான்... இவற்றை கல்வெட்டில் செதுக்கலாமா? அல்லது கவிதையாக்கி இவள் காலடியில் வைக்கலாமா? 

வெண்பாதம் வைத்து மென் நடையாக நுழைந்தவளை கண்ட கண்கள் எல்லாம் புத்துணர்வு பெற "குட்மார்னிங் மான்சி" என்றன ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குரல்கள்....

தனது அமைதிப் புன்னைகையால் அத்தைனையையும் அடித்து வீழ்த்திவிட்டு மெல்லிய தலையசைப்புடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள் மான்சி....

அதன்பின் அவள் தலை நிமிரவில்லை.... எதிரேயிருந்த கணணியை ஆன் செய்து கவனத்தை அதில் வைத்தாள்.... கம்பெனிக்கு வந்திருக்கும் மெயில்களை செக் செய்து அவற்றை யார் யார்க்கு அனுப்ப வேண்டுமோ அதன்படி அனுப்பி வைத்தாள்... இவளே பதில் செய்யக் கூடிய மெயில்களுக்கு பதில் எழுதி அனுப்பினாள்.... பதினோரு மணி சுமாருக்கு எம்டியிடமிருந்து வந்திருந்த சுற்றறிக்கையை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்தாள்.... இவைதான் அவளது அன்றாட அலுவல்கள்... சிலநாட்களில் அதிகமிருக்கும்... சிலநாட்கள் எதுவுமின்றி தனக்குப் பிடித்ததை செய்வாள்....

அவளுக்குப் பிடித்தது?? ம்ம் கவிதை எழுதுவது தான் அவளுக்குப் பிடித்தது.... அம்மா என்று ஒரு ப்ளாக் ஆரம்பித்து... அதில் சிமி என்ற பெயரில் தனது கவிதைகளை பதிவு செய்து வைப்பாள்... இவளது கவிகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு... அம்மாவை நேசிக்கும் அனைவருக்கும் மான்சியின் கவிதைகளைப் பிடிக்கும்... ஆம் அம்மாவுக்காக மட்டுமே அவள் கவிகள் அனைத்தும்...

மணி பணிரெண்டு... அலுவல்கள் சற்று ஓய்ந்தன.... தனது மெயில் திறந்தாள்.... கவிதையை ரசித்தவர்களின் பாராட்டு வாசங்கள் அடங்கிய மெயில்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக அனுப்பினாள்....

ஒரு ஜடியிலிருந்து நான்கைந்து மெயில்கள் வந்திருந்தன... கடந்த ஒரு மாதமாக பழக்கப்பட்ட ஐடி தான் இது....

இவள் கவிதைகளுக்கு ரசிகன் என்று சொல்வான்... அவனிடமிருந்து வந்த முதன் முதல் மெயிலை திறந்துப் படித்தாள்

ஹாய் சிமி...

நான் சத்யன்,, கலிபோர்னியாவில் மெக்கானிக்கல் மேற்படிப் படிக்கும் தமிழன்... எனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்க கவிதை வரிகள் தேடிய போது கூகிள் உங்களது ப்ளாக்கை காட்டியது.... அன்று நான் முதலில் படித்த கவிதை இதுதான்....




Quote:
Quote:" ஓர் அணுவாகப் பெற்று,

" சிறுக் கருவாகத் தரித்து....

" பெரும் உயிராக ஈன்ற...

" என் அம்மா!!


" என் உணர்வாக நீயும்....

" உன் உயிராக நானும்...

" வாழ்ந்த நாட்கள்???


" உன் முந்தானைச் சிறையே.....

" என் மூச்சு விடும் இடமாக...

" எனை மூடிவைத்த நாட்கள்???


" மீண்டும் உன் மடி தேடும் கன்றாய்....

" தாயாய் வந்து தலைகோதும்...

" ஒரு உறவுக்காக...

" என் இருதயப் பூ என்றும் ஏக்கத்தோடு!!
இதன் பின் அன்று முழுவதும் விடிய விடிய உங்களின் அத்தனை கவிதைகளையும் படித்து முடித்தேன்.... அத்தனையும் வலி வலி வலி.... இவ்வளவு வலிகளை சுமக்கும் உங்களுக்கு கவிதைகள் தான் நிவாரணி என்று புரிந்து கொள்ளமுடிகிறது.... ஆறுதல் என்ற பெயரில் உங்கள் வேதனையை தூண்டிவிட நான் தயாரில்லை தோழி.... உங்களின் எழுத்துக்களை ரசிக்கிறேன்... உங்களின் ரசிகனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.... ப்ளீஸ்.....

நன்றி....

Sathiyamurthi A
University of California (UC),
Oakland,
California.

இதுவரை எத்தனையோ முறை இந்த மெயிலை படித்துவிட்டாள்... மிகவும் நாகரீகமாக பாராட்டிய மெயில்.... அன்றும் அவனுக்கு பதிலாக வெறும் நன்றி என்று தான் அனுப்பினாள்....
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 4


அதன்பின் எத்தனையோ மெயில்கள் அவனிடமிருந்து வந்துவிட்டன... கவிதைகளைப் பாராட்டியும் அதன் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டும்... புரிந்தவற்றுக்கு கருத்துக் கூறியும் மெயில் செய்வான்... வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிவிட்டு தனது வாதத்தை முடித்துக் கொள்வாள்....

ஒரு மெயிலில் "நீங்கள் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... என்னை நண்பனாக நினைத்தால் யாரென்று சொல்லுங்கள் ப்ளீஸ்" என்று வந்த மெயிலுக்கு பதில் அனுப்பாமல் விட்டதற்கு மறுநாள் அதே வார்த்தைகளை சுமந்துகொண்டு பல மெயில்கள் வந்து குவிந்திருந்தன....

அவற்றுக்கும் பதில் அனுப்பவில்லை என்றதும்.... "உங்களின் மவுனமே நீங்கள் பெண்ணென்று சொல்லாமல் சொல்லிவிட்டது... நன்றி" என்று ஒரு மெயில் வந்தது...

தனது முட்டாள் தனத்தை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் தலையில் தட்டிக் கொண்டாள் மான்சி....

ஒருநாள் "எனக்கு அம்மா பிடிக்கும்.... அதனால் அம்மா கவிதை எழுதும் உங்களையும் பிடிக்கிறது" என்று அனுப்பியிருந்தான்

பிறகொரு நாளில் "எனக்காக இயற்க்கையை வர்ணித்து ஒரு கவிதை எழுதுங்களேன்" என்ற அவனது மெயிலுக்கு தெரியாது என்று முகத்திலடித்தாற் போல் பதில் அனுப்பினாள்....

மறுநாள் அவனிடமிருந்து எந்தவொரு மெயிலும் இல்லை.... ஆனால் அதற்கடுத்த நாளில் இருந்து தினமும் சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப ஆரம்பித்தான்... இவள் கேன்சல் செய்தாலும் தினமும் வந்துவிடும்.....

இதோ இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது... இப்போதும் அவன் ஐடியிலிருந்து சாட் ரிக்வெஸ்ட் வந்திருந்தது... கூடவே ஒரு மெயிலும்.... "சாட் செய்வதால் யாருடைய தரமும் தாழ்ந்து விடாது சிமி.. தயவுசெஞ்சு ஓகே செய்யுங்கள்" என்று அனுப்பியிருந்தான்....

மனதை குழப்ப மேகங்கள் சூழ கண்மூடி இருக்கையில் சாய்ந்தாள்.... உன்மீது உனக்கு நம்பிக்கை இருக்கும் போது சாட் செய்வதில் அப்படியென்ன கேடு வந்துவிடும்? கேள்வி கேட்ட மனதுக்கு பதில் சொல்லத்தான் தெரியவில்லை....



மெயிலுக்கும் சாட்டுக்கும் என்ன வித்தியாசம்? தகவல் சென்று வரும் சில நிமிடங்கள் தானே தவிர ஆபத்து எதுவுமில்லை என்று அறிவுக்குப் புரிய அவனது சாட் ரிக்வெஸ்ட்டை அக்சப்ட் செய்தாள்.... அடுத்த சில நொடிகளில் துள்ளி குதிக்கும் ஒரு ஸ்மைலியைப் போட்டுவிட்டு "நன்றி சிமி... ரொம்ப ரொம்ப நன்றி" என்றபடி அவனது சாட் பார்ம் வந்தது.....

"ம்ம்"

"வெறும் ம்ம் தானா? நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? தாங்க்ஸ் சிமி"

"நான் முதன்முதலா சாட் செய்றேன்... என்னால் அதிகநேரம் சாட்டில் வரவே இருக்கவோ முடியாது"

"பரவால்லை சிமி,, நீங்கள் வரும் வரை நான் காத்திருப்பேன்.... இப்போக் கூட இன்னைக்கு நீங்க கட்டாயம் என் ரிக்வெஸ்ட்டை ஏத்துக்குவீங்கன்னு தூங்காம வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... அதேபோல நடந்துடுச்சு.. ஐ ஆம் வெரி ஹேப்பி"

"ஓ.... இப்போ அங்கே நேரம்?"

"கரெக்ட்டா நடு இரவு ஒண்ணு பத்து.... இங்கே இருக்குற குளிருக்கு பேய்கள் கூட இந்த டைம்ல முழிச்சிருக்காது.... ஆனா நான் முழிச்சிருக்கேன் "

"ஓ..... அப்போ பேயை விட மோசமான மனுஷன் நீங்கன்னு சொல்றீங்களா?"

சற்றுநேரம் வரை சத்யனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.... காயப்படுத்திவிட்டோம் என்று புரிய "ஹலோ இருக்கீங்களா?" என்று மீண்டும் அனுப்பினாள்....

"ம்ம்....."

"நான் விளையாட்டாகத்தான் கேட்டேன்"

"பரவால்லைங்க... முகம் தெரியா இந்த ஆன்லைன் உலகத்துல என்னைப் பத்தி அதிகம் தெரிய வாய்ப்பில்லை தான்...."

"ம்ம்...."

"ஆனா நான் ரொம்ப மென்மையானவன்... ஜாலியான பேர்வழி"...

"ம்ம்"

"நான் சொல்றதை நம்புறீங்களா?"

"நம்பித்தானே ஆகனும்.. நீங்கதானே சொன்னீங்க.. முகம் தெரியா ஆன்லைன் உலகம் இதுன்னு..."

"கேலி பண்றீங்கன்னு புரியுது.... சரி ஓகே உங்களுக்கு நம்பிக்கை வர நான் என்ன செய்யனும்?"

"எதுவும் செய்ய வேண்டாம்... அது எனக்கு தேவையுமில்லை..."

"ம்ம்....."

"ஓகே எனக்கு லஞ்ச் டைம் ஆச்சு.... பை"

சிமி சிமி ஒரு நிமிஷம் ப்ளீஸ்"

"ம் சொல்லுங்க"

"ரொம்ப லேட் நைட் தூங்கிட்டு காலைல காலேஜ் போய் தூங்கி வழியறதா இருக்கு.... நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா?"

"ஸாரி,, முடியாது,, இது ஆபிஸ்..."

"ஓ நீங்க ஒர்க் பண்றீங்களா?"

"ஆமா,, நான் என் ஒர்க் முடிஞ்சி ஓய்வு நேரத்தில் தான் மெயில்கள் செக் பண்ணுவேன்...."

"உங்களுக்கு எப்ப ஓய்வு நேரம்?"

ஏனோ பட்டென்று கோபம் வந்தது மான்சிக்கு... "சிலநாட்களில் காலை ஒன்பது மணிக்கே... பல நாட்களில் மாலை வரை கூட ஓய்வு கிடைக்காது"

"ஓ அப்போ நான் எப்படி நீங்க ஆன்லைன் வந்ததை தெரிஞ்சுக்கிறது?... சப்போஸ் தூங்கிட்டேன்னா?"

"ஏன் தெரிஞ்சுக்கனும்? தூங்குங்க"

"அய்யோ இப்படிச் சொன்னா எப்படிங்க? உசுர குடுத்து ஓடுற பஸ்ல சீட் பிடிச்ச மாதிரி உங்க கூட சாட்ல இடம் பிடிச்சிருக்கேன்" கண்ணீர் விடும் ஸ்மைலி ஒன்று

"அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது"....

"இல்லைங்க ஒன்னு செய்யலாம்... நீங்க வந்ததும் ஒரு ஹாய் மட்டும் போடுங்க... நான் உடனே முழிச்சுப்பேன்"

"அதெப்படி முழிச்சுக்க முடியும்?"

"அது நான் லாப்டாப்ல ஹெட்போன் போட்டுகிட்டா நீங்க கூப்பிட்டதும் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்கும்"

"ம்ம்"

"ம்ம் சொல்லாதீங்க... ஹாய் போடுவீங்க தானே?" மீண்டும் அழும் பொம்மை...

அந்த பொம்மையைப் பார்த்தால் ஏனோ சிரிப்பு தான் வந்தது... "சரி போடுறேன்"

"வாவ்.... தாங்க்யூ ஸோமச்...."

"ஓகே பை"....

"ம் பை சிமி".....

சட்டென்று ஆப்லைன் போனாள்... ஒரு மாதிரி படபடப்பாக இருக்க வியர்த்துக் கொட்டியது.... இது சரியா? தவறா? புரியவில்லை தெரியவில்லை.... ஆனாலும் மனம் புத்துணர்வாக.... நீண்டநாள் நண்பனை நேரில் சந்தித்து அளவலாவிய சந்தோஷமும் நிம்மதியும்.... உணவு இருக்கும் பையை எடுத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள்....

வழக்கம் போல அப்பாவுக்கு செய்ததில் மிச்சமிருந்த சம்பா கோதுமையை உடைத்து அதில் செய்த உப்புமா தான்... ஆனால் இன்று திருப்தியாக உண்ண முடிந்தது.....





“ இன்று ஏனோ தென்றலின் தீண்டலில்..

“ தேகமெங்கும் பரவசம்...

“ நம் முதல் ஸ்பரிசம் கூட..

“ இப்படித்தான் இருந்திருக்குமோ?

“ சிலிர்த்துத்தான் போகிறேன் அம்மா!

மதியம் அலுவல்கள் நிறைய இருந்தன.... சாட் செய்த அவன் மறந்து போனான்.... மாலை ஐந்தரை மணி வாக்கில் மீண்டும் தனது பிளாக் சென்று பார்த்தாள்... புதிதாக SS என்ற ஐடியிலிருந்து இவளது கவிதைகள் அனைத்திற்கும் லைக் கொடுக்கப்பட்டு சில வரிகளில் கமெண்ட்ஸ்ம் சொல்லப்பட்டிருந்தது....

கமெண்ட்டின் ஸ்டைலே அவன்தான் தான் என்று சொல்லாமல் சொல்ல... அவன் தூங்கவே இல்லையா? என்று இவள் யோசிக்கும் போதே மெயில் வந்தது

"இன்றைய கவிதை எத்தனை மணிக்கு அப்டேட் செய்வீங்க?" என்று கேட்டு சத்யன் தான் மெயில் செய்திருந்தான்...

அவன் கூறியபடி அவனிருக்கும் நாட்டில் இப்போது அதிகாலை ஐந்து மணியாக இருக்கும்... இவன் சுத்தமா தூங்கவே இல்லையா?

அதையே மெயிலில் கேட்டாள் "தூங்கவே இல்லையா?"...

சில நிமிடங்களில் பதில் வந்தது "இல்லைங்க... உங்க கூட சாட் பண்ண சந்தோஷத்தில் தூக்கம் பறந்து போயிடுச்சு... உடனே ஐடி கிரியேட் பண்ணி உங்க பிளாக்ல போய் கவிதைகளுக்கு லைக் குடுத்து கமெண்ட் போட்டேன்... அப்புறம் நீங்க இந்த டைம்ல தானே புதுசா எழுதின கவிதைகளை அப்டேட் செய்வீங்க... அதுக்காக இப்போ வெயிட்டிங்"

படித்துவிட்டு எரிச்சலாக வந்தது... அப்புறம் காலேஜ் போய் எப்படி படிக்க முடியும்? "ஓகே,, ஆனா இவ்வளவு நேரம் முழிச்சிட்டு காலேஜ்க்கு எப்படி போவீங்க?" என்று மான்சி அனுப்பினாள்...

"ஹி ஹி ஹி ஹி இன்னைக்கு காலேஜ் மட்டம்ங்க.... கவிதாயினியுடன் கதைத்ததை கொண்டாடப் போகிறேன்... ரூம் கதவை மூடிக்கிட்டு இன்னைக்குப் பூராவும் தூங்கப் போறேன்... ஹா ஹா ஹா ஹா" சத்யனின் இந்த பதிலைப் பார்த்து மான்சியின் இதழ்களில் லேசான புன்னகையின் ரேகைகள்

"ம்ம்..." என்று மட்டும் பதில் செய்தாள்..

"ஏங்க ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்... உங்க பெயர் சிமினு இருக்கே... நான் அந்த பார்ம்ல பல பெயரை யோசிச்சிப் பார்த்தேன்.... எனக்குத் தெரிஞ்சு உங்க கவிதை வரிகளுக்குப் பொருத்தமா சிவாத்மிகா என்ற பெயர் உங்க சொந்த பெயரா இருக்கும்னு தோணுது.... அதை தானே சுருக்கி சிமின்னு வச்சுக்கிட்டு இருக்கீங்க?" 

மான்சிக்கு ஒரு மாதிரியாக இருந்தது... இரவெல்லாம் விழித்திருந்து இதைத்தான் யோசித்தானோ? ஆனாலும் அவன் நம்பிக்கையை உடைக்க மனமின்றி "ம் ம்" என்று பதில் அனுப்பினாள்...

"வாரே வாவ்,, எப்புடி? நாங்களும் அறிவாளி தான்னு நிரூபிச்சிட்டோம்ல..... எனக்கு இந்த சிமி என்ற பெயர் ரொம்ப பிடிக்கும்... அதுக்கு ஒரு கதையே இருக்கு.. பிறகொருநாள் நீங்க ப்ரீயா இருக்கும் போது அந்த கதையை சொல்றேன்.... இப்போ உங்க கவிதைக்காக வெயிட்டிங்" என்று பதில் அனுப்பியிருந்தான்

"இப்பதான் எழுதுறேன்... பத்து நிமிஷத்தில் பதிவு செய்கிறேன்... பை" என்று பதில் செய்து விட்டு மெயிலில் இருந்து வெளியேறினாள்...

மனதுக்குள் தனது தாயை நினைத்ததுமே கவிதை வரிகள் சரம் கோர்த்தன.... 




"உன் உயரம் நான் வளர்ந்து,

" உன் சேலையில் முதல் தாவணியுடுத்தி,

" உன் காதலை நீ கதையாக சொல்ல...

" என் முதல் தோழி நீயாக...

" என்றென்றும்,,

" இல்லாமல் போனாயே...

" அம்மா!!!!


******************* ******************* *******************


" இணையில்லா பாசம் வைத்து...

" இடையில் மறைந்த!

" என் அம்மா!

" எண்ணமெல்லாம் உனைச் சுற்ற,

" என்னக்கான உறவாய்,

" ஏதாவதொரு உருவில்.....

" என் உயிர் சேர...

" நீ வருவதெப்போது?


******************* ******************* *******************


" காற்றில் உன் சுவாசம்,

" கனவில் உன் பாசம்,

" எங்கோ என் பெயர்..

" கூப்பிடக் கேட்டேன்!

" அழைத்தது நீயா அம்மா?


******************* ******************* *******************


" மார்கழிக் குளிரில்....

" உடல் உதற உறக்கமின்றி நான்....

" திடீரென தேகம் எங்கும் கதகதப்பு!

" நீ வந்து அனைத்துக் கொண்டாயா அம்மா?

" கனவாயினும்,, நிஜம் போல் சுகம்!



******************* ******************* *******************

" அம்மா,,

" உன்னை யோசித்தாலும் சுவாசித்தாலும்...

" உயிர் தீண்டும் உச்ச படபடப்பு!!! 
[color][font]

மாலை நேரத்து மஞ்சள் வெயிலைக் கண்டால் மான்குட்டிகளுக்கு கொண்டாட்டமாம்...... மான்கள் விளையாட மஞ்சள் வெயில் பாதையமைக்கும் மாலைப் பொழுது....

தோட்டத்து புல்வெளியில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்தார் அருணகிரி..... எதிரேயிருந்த டீபாயில் அவரது லாப்டாப்.... தனது மெயில்களைப் பார்த்துவிட்டு பொழுது போகாமல் ஒரு தமிழ் படத்தை ஓடவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார்...

காபி ட்ரேயுடன் வந்து அவருக்கு பக்கத்து நாற்காலியில் அமர்ந்த சந்திரா "என் பீரோவில் புடவைலாம் கலைஞ்சு கிடக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கனு கேட்டதுக்கு ஏதோ முக்கியமான வேலையிருக்குனு சொல்லிட்டு... இங்க வந்து சினிமாவா பார்க்கிறீங்க?" கோபமாக கேட்டவளைக் கண்டு அசடு வழிந்தபடி காபி கப்பை எடுத்துக் கொண்டார்.....

"புள்ளைக்கு பொண்ணு கேட்டது இப்புடியாகிடுச்சேனு எனக்கு கவலையா இருக்கு.... நீங்க என்னடான்னா அதைப் பத்தின கவலையே இல்லாம ஜாலியா இருக்கீங்க" மீண்டும் சந்திரா தான் கடிந்து கொண்டாள்...

"அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா அதுக்கு நான் என்ன சந்திரா பண்ண முடியும்? நாம ஒன்னு நினைச்சா விதி வேற மாதிரி முடிவு பண்ணிருக்கு..... சரி அதை விடு நம்ம மகனுக்கு பத்ரியோட மகளை விட நல்லவளா நிச்சயம் கிடைப்பா" என்றவர் மனைவியின் காதருகே சரிந்து "யார் கண்டா,, அங்கருந்தே தொப்புள்ல தோடு போட்டவ... புருவத்துல புள்ளாக்குப் போட்டவ யாரையாவது கூட்டிட்டு வந்து மம்மி டாடி இவதான் உங்க மருமகள்னு சொன்னாலும் சொல்லுவான்... எதுக்கும் நாம தயாரா இருக்கிறது நல்லது" என்று கூறிவிட்டு சிரிக்கவும்...

கணவரை கோபமாக முறைத்த சந்திரா.... "என் புள்ள அதெல்லாம் செய்ய மாட்டான்... சும்மா இருக்குறவனை எதையாவது சொல்லி கிளப்பி விடாதீங்க...." என்று எரிச்சலாக கூறும்போதே அருணகிரியின் மொபைல் அழைத்தது....

எடுத்துப் பார்த்தவர் முகம் மலர "உன் மகன் தான்" என்று கூறிவிட்டு ஆன்செய்து "என்னடா மகனே? எப்படியிருக்க?" என்று உற்சாகமாய் கேட்க....

"நல்லாருக்கேன் டாடி,, நீயும் அம்மாவும் என்ன பண்றீங்க?" என்று மகன் கேட்டதும்.... "நான் லாப்ல ஒரு தமிழ் படம் பார்க்குறேன்..." என்றார்

"என்ன படம்ப்பா?" ஆர்வமாய் சத்யன் கேட்டதும் "படம் பேரு பொரி உருண்டை.." என்றவர் கொஞ்சம் கடுப்புடன் " என்ன படம்னு முழுசா பார்க்குறதுக்குள்ள உன் அம்மா முதல்ல வந்தா,, அடுத்து நீ வந்துட்ட" என்றார்...

"பார்த்தியா? பெத்த மகனை பார்க்காம அழுவீங்கன்னு பார்த்தா.... ஏன் வந்தேன்னு திட்டுறேல்ல... நீயெல்லாம் ஒரு அப்பாவா" எதிர் முணையில் செல்லமாய் அழுதான் சத்யன்....

"அய்யோ அழுவாதடா மகனே,, நீ இல்லாத குறையை தீர்க்கதான் இப்படி சினிமாவா பார்க்குறேன்" என்றவர் நானாவது பரவாயில்லை உன் அம்மா ஆறாவது கப் காபியை உள்ள ஊத்திக்கிட்டு இருக்கா" என்றார் அருணகிரி...

"ஆறாவது கப் காபியா? இதுதான் என் அம்மாவை நீ பார்த்துக்கிற லட்சணமா? உன்னை நம்பி விட்டு வந்தேன் பாரு? என்னைச் சொல்லனும்" கடுப்பாக பேசினான்...

"ஆமாடா,, அவளையும் உன் கூடவே கூட்டிட்டுப் போயிருக்கலாம்" என்று அப்பா சொன்னதும்

"என்னப்பா இன்னைக்கு உன் குரல்ல உற்சாகம் வழியுது,, படிக்கப் போடா மகனேன்னு என்னை பேக் பண்ணிட்டு நீயும் உன் பொண்டாட்டியும் செம ஜாலியா இருக்கீங்க போலருக்கே? உண்மை தான?" என்று சத்யன் கேலியாக கேட்டதும்... அருணகிரிக்கு சிரிப்பு தாங்கவில்லை...

ஆனாலும் குரலில் விரக்தியை வரவழைத்துக் கொண்டு "அட நீ வேற சும்மா இருடா,, எங்கருந்து கிழவி கூட போய் ஜாலியா இருக்குறது? அதுக்கெல்லாம் மச்சம் வேணும் போலருக்கு" என்றார்...

பக்கத்தில் இருந்த சந்திராவுக்கு இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரிய... பட்டென்று அருணகிரியின் முதுகில் ஒன்று வைத்து "அடச்சே அப்பாவும் மகனும் மாதிரியா பேசுறீங்க? வரவர ரொம்ப ஓவரா போச்சு" என்றவள் அப்போது தான் ஞாபகம் வந்தது போல்... "ஓய்,, யாரை கிழவின்னு சொன்னீங்க? நான் கிழவின்னா என்னை விட ஆறு வயசு பெரியவர் நீங்க மட்டும் குமரனா?" கொதிப்புடன் பேசிய மனைவியைக் கண்டு அருணகிரி சிரிக்க....

"என்ன டாடி அடி விழுந்ததா?" என்று கேட்டுவிட்டு சத்யன் அங்கே உருண்டு புரண்டு சிரிப்பது இங்கே கேட்டது....

கணவரிடமிருந்து போனை பிடுங்கிய சந்திரா "சின்னும்மா,, எப்படிடா இருக்க? உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் தங்கம்" என தாயாய் சங்கடமாக பேசினாள்...

"ம்ஹூம் நான் நல்லாவே இல்லைம்மா.... எப்புடி ட்ரைப் பண்ணாலும் ஒரு பிகர் கூட செட்டாகலைம்மா... மூணு மாசமா முயற்சி பண்ணியும் ஒருத்தி கூட ஹாய் சொல்லலைம்மா" என்று புலம்பியவன் குரலை தாழ்த்தி "இன்னும் கொஞ்சம் குங்குமப்பூ சாப்பிட்டு கொஞ்சம் வெள்ளையாவாவது பெத்திருக்கலாம்ல?" என்று கேட்க....

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "அடப்பாவி மகனே" என்றாள் சந்திரா...

"ம்ம்,, வாழ்க்கையே ரொம்ப போரடிக்கிதும்மா... எதுக்கும் நீ என் ஜாதகத்தை எடுத்துட்டுப் போய் ஜோசியர் கிட்ட காட்டும்மா... எதுவும் தோஷமிருக்கான்னு கேட்டு பரிகாரம் பண்ணும்மா,, அப்பவாச்சும் பிகர் செட்டாகுதா பார்க்கலாம்" என்று சத்யன் வருத்தமாகக் கூறவும்....

தாயும் மகனும் பேசுவதை ஒட்டு கேட்ட அருணகிரி "அப்படியே சிறப்பு யாகத்துக்கும் ஏற்பாடு செய்துடலாம் சத்யா" என்று கூறிவிட்டு சிரிக்க.... சந்திரா கடுப்புடன் மீண்டும் அவர் முதுகில் ஒன்று போட்டு "அவன்தான் அப்படின்னா,, நீங்க அவனுக்கு மேல இருக்கீங்க" என்றாள்....

"மம்மி,, நிஜமாவே தான் சொல்றேன்,, என் ஜாதகத்தைப் பாரும்மா" கெஞ்சுவது போல் பேசினான் சத்யன்...

"அடச்சே,, ஏன்டா ரெண்டு பேரும் என் உசுரை எடுக்குறீங்க? படிப்பு முடிச்சிட்டு சீக்கிரமா வா,, நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்... அதுவரைக்கும் அமைதியா இருக்கனும்.. கண்டதையும் யோசிச்சு கெட்டு குட்டிச்சுவரா போயிடாதா" என்று சந்திரா அறிவுரை கூறவும்...



"நீ போனை டாடிக்கிட்ட குடும்மா" என்றான் சத்யன்....

போன் அருணகிரியின் கைக்கு வந்ததும் "டாடி,, உன் பொண்டாட்டி சொன்னதை கேட்டியா? இதெல்லாம் ஓவரா தெரியலை? படிச்சிட்டு வந்ததும் கல்யாணமாம்,, அப்போ லவ் பண்ணனும்ற என்னோட லட்சியம் என்னாகுறது?... சொல்லி வை டாடி...." மகனின் போலியான மிரட்டலில் பயந்தவர் போல் "உத்தரவு இளவரசே" என்றார் அருணகிரி....

அதன்பின் சில பொது விசாரிப்புகளுடன் போன் வைக்கப்பட்டது.....

இவர்கள் இப்படித்தான்..... மகன் இவர்கள் இருவருக்கும் தோழன்... சத்யனுக்கும் அப்படித்தான்,, அவனது முதல் நண்பன் அருணகிரிதான்... அதேபோல் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே அவன் வாழ்வில் இல்லையெனலாம்... அழகான ஆங்கில லெக்சரரை சைட் அடித்ததை சொல்வதும் அம்மாவிடம் தான்... "நேத்து சரியா படிக்கலைம்மா,, இந்த எக்ஸாம்ல நிச்சயம் அரியர் வரும்மா" என்று சொல்வதும் அம்மாவிடம் தான்.... மூவருக்குள்ளும் ஒரு புரிதல்... இவர்களுக்கு மகனே வாழ்வென்றால்... அவனுக்கு இவர்கள் தான் உயிர் மூச்சு....


[/font][/color]
"அம்மா,,

“ அப்பாவை நீ அறிமுகம் செய்தாய்...

“ அப்பாவோ உலகை அறிமுகம் செய்தார்...

“ நீ சுமந்தது பத்து மாதம்.

“ அவர் சுமப்பதோ காலமெல்லாம்

“ அதுவும் உன்னோடு என்னையும் சேர்த்து!!
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 5

அம்மா அப்பாவுடன் உற்சாகமாக பேசிய சந்தோஷமான மனநிலை மாறாமலேயே தனது லாப் டாப்பை திறந்து மெயிலை ஓபன் செய்தான்...

சாட் லிஸ்டில் அவன் கண்கள் சிமியின் ஐடியைத்தான் முதலில் தேடியது... அது பச்சை வட்டத்தோடு ஆன்லைனில் இருக்கிறாள் என்று கூற... அவனது சந்தோஷம் இரட்டிப்பானது....

"ஹாய் சிமி,, என்று டைப் செய்து அனுப்பி வைத்தான்.....

சற்று நேரம் பதில் இல்லை... மூன்று நிமிடங்கள் வரை ஸ்கிரீனை வெறித்தவாறு சத்யனை நகம் கடிக்க வைத்துவிட்டு நான்காவது நிமிடம் வந்தாள்...

"யெஸ் சத்யன்"

"எப்படியிருக்கீங்க சிமி?"

மீண்டும் சில நிமிட நேர இடைவெளிக்குப் பிறகு "ம் நல்லாருக்கேன்.... நீங்க சீக்கிரமே எழுந்தாச்சுப் போலருக்கே?" என்று பதில் வந்தது…

"ஆமாங்க... இப்பல்லாம் கரெக்ட்டா நாலரை மணிக்கே மணிக்கெல்லாம் விழிப்பு வந்துடுது"

"ஏன் அப்படி?"

"என்னங்க தெரியாத மாதிரி கேட்குறீங்க? என் ஆஸ்தான கவிதாயிணி உங்க கூட பேசுறதுக்கு தான்"

".............. "

"என்னங்க எதுவுமே பேசலை? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா?"

"என்ன விஷயம்?"

"ம்ம்,, நான் உங்களைத் தொடர்பு கொண்டு இன்று நூறாவது நாள்" சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பொம்மைகள் ஐந்தாறு போட்டிருந்தான்

"ஓ........ "

"என்னங்க வெறும் ஓ மட்டும் தானா? வேற எதுவும் கிடையாதா?"

"வேறன்னா?"

"அதாங்க ஒரு கவிதை சொல்லி பாராட்டலாம்ல... எவ்வளவு கவனமா ஞாபகம் வச்சிருக்கேன்" என்பதோடு அசடு வழிய சிரிக்கும் பொம்மை

"ம்ம்........"

"ப்ளீஸ் ஒரு கவிதை சொல்லுங்கள் கவிக்குயிலே"

சிலநிமிடங்கள் பதிலே வரவில்லை...



"என்னங்க? எழுதுறீங்களா? ஓகே ஓகே வெயிட் பண்றேன்" ஹேப்பி என்று குதித்தாடும் ஸ்மைலி ஒன்றுடன்

சற்று நேரம் கழித்து "ஸாரி எதுவும் எழுத வரலை" என்று பதில் வந்தது...

லாப்டாப்பை வெறித்தபடி அமர்ந்திருந்தான் சத்யன்,, ஏமாற்றமாக இருந்தது.....

"ஸாரி" மீண்டும் சிமி

ஒரு நெடு மூச்சுடன் "ஓகே,, பரவால்லங்க..... ஆனா உங்களுக்கு ஏதாவதுப் பிரச்சனையா? ஒவ்வொரு முறையும் பதில் ரொம்பத் தாமதமா வருதே? அல்லது ரொம்ப பிஸியா?"

தாமதமான நிமிடங்கள் தயங்கியபடி செல்ல.....

"பிஸியில்லை சத்யன்,, சும்மா கையில் ஒரு வலி"

"கையில் வலியா? ஏன் என்னாச்சு?"

"அதான் சும்மான்னு சொன்னேன்ல"

"இல்லைங்க,, ப்ளீஸ் என்னாச்சுனு சொல்லுங்க.... வலின்னு நீங்க சொன்ன பிறகு என்னால அமைதியா இருக்க முடியலை" உண்மையாகவே சத்யனுக்கு பதட்டமாக இருந்தது...

இவனது பதட்டம் சிமிக்கு எப்படியிருந்ததோ? "ஹாஹாஹாஹா அமைதியா இருக்க முடியலைன்னா? என்ன பண்ண முடியும் உங்களால்?"

"எதுவும் செய்ய முடியாது தான், பரிதாபமோ ஆறுதலோ உங்களுக்குப் பிடிக்காது தான்,, ஆனா வலி எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சுகிட்டா என் மனமாவது அமைதி பெருமே... அதுக்காக தான் கேட்குறேன்"

அமைதியே உருவான மான்சிக்குள் திடீரென்று ஒரு வக்கிரம்... எதிராளியின் அன்பை அழ வைத்துப் பார்க்கும் சிறு வக்கிரம் புகுந்து கொள்ள.... "அப்படி என் வலியெல்லாம் தெரிஞ்சா உங்க மனது அமைதியாயிடுமா? ஹாஹாஹாஹா இது வித்தியாசமா இருக்கே? ஓகே சொல்றேன் கேட்டுக்கங்க.... காலையில என் சித்திக்கு சூடா காபி கொண்டு போய் கொடுத்தேன்..."

"உங்களுக்கு சித்தி இருக்காங்களா?"

"ம் என் அப்பாவின் இரண்டாவது மனைவி"

"ஓ..... நல்லவங்களா? கொடுமை படுத்துவாங்களா?”

"வாட்?? நான் சொல்றதை குறுக்கே பேசாம கேட்கவே முடியாதா?"

"ஸாரி,, ஸாரி,, சொல்லுங்க சிமி"

"சித்தி டிவி பார்த்துக்கிட்டே காபி கப்பை வாங்கினதில் தவறி அவங்க விரல்கள்ல காபி சிந்திடுச்சு..... அதுல கோபமான சித்தி என் கையைப் பிடிச்சு சூடான காபியை உள்ளங்கைல ஊத்திட்டாங்க,, அதுல கை வெந்து போச்சு... அதான் வேகமா டைப் செய்ய முடியலை" அவன் துடிக்க வேண்டும் என்று தான் எல்லாவற்றையும் கூறினாள்.... ஆனால் துடிப்பானே என்று இவள் உள்ளம் துடித்தது....

சற்றுநேரம் அவனிடமிருந்து பதிலே இல்லை.....

"என்னாச்சு? பயந்துட்டீங்களா?" என்று இவள் கிட்ட மறு நொடி...

"ஏன்ங்க? ஏன் பயப்படுனும்? சத்தியமா இதை என்னால ஏத்துக்க முடியலைங்க..... இன்னொரு காபியை எடுத்துட்டு வந்து சித்தியோட மூஞ்சியில் ஊத்திட்டேன்னு நீங்க சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்..... அதெல்லாம் ஒரு பொம்பளையா?" கொதிப்புடன் வந்து விழுந்தன அவனது வரிகள்..

"ம்ம்,, நான் அப்படி செய்ய மாட்டேன்.... எனக்கு என் குடும்பம் முக்கியம்"

"இல்ல,, நீங்க டைப் செய்ய வேண்டாம்.... அப்படியே இருங்க...... அய்யோ ரொம்ப வலிக்கிதாம்மா.... சத்தியமா என்னால முடியலை சிமி.... அழுகையா வருது..... உங்க கவிதைகளையும் வார்த்தைகளையும் வச்சு நீங்க எவ்வளவு மென்மையானவங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.... உங்களைப் போய் காயப்படுத்திப் பார்க்க நினைக்கும் அந்த மிருகம்? அம்மம்மா... பெண்கள்ல இப்படியும் இருக்காங்களா? சிமி... சிமி.. அழறீங்களா? வலிக்கிதா சிமி" அவன் பாட்டுக்கு நிறுத்தாமல் டைப் அடித்துக் கொண்டே போனான்....

முதன் முறையாக அவளுக்காக கலங்கும் ஒரு ஜீவன்,, அதுவரை வலியால் அழாத மான்சிக்கு இவன் ஆறுதல் கூறியதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.... பெண்ணாய் பிறந்ததிலிருந்து பட்ட துயரையெல்லாம் அவனிடம் சொல்லி ஆறுதல் தேடத் துடித்தது இதயம்.... அலுவலகம் காலியாக இருக்க கண்ணீரை கர்சீப்பில் ஒற்றியெடுத்தாள்....

"சிமி,, இது முதல் முறையா? அல்லது இது போல் நிறைய நடந்திருக்கா?" வெறும் எழுத்துக்கள் தான்... ஆனால் அதில் அவனது உக்கிரத்தைக் காணமுடிந்தது 

ம்ம்,, என்னோட ஏழாவது வயசிலிருந்தே அனுபவிக்கிறேன்.... பழகிப் போச்சு.... அவங்களுக்கு தகுந்த மாதிரி நடந்துப்பேன்.. அதனால் வலிகள் அதிகம் கிடையாது... ஆனா இந்த ரெண்டு மாசாமா சித்தி ரொம்ப கோபமா இருக்காங்க... அதான் இப்படி அடிக்கடி நடக்குது"

"ஏய்,, ஏய்.... லூசா நீ? இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா? அதுவும் இத்தனை வருஷமா கொடுமைகளை தாங்கிக்கிட்டு? சுத்தப் பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?" கோபத்தில் ஒருமையில் அழைத்ததை அவன் கவனிக்கவில்லை போலும்....

மான்சி கவனித்துவிட்டாள்... இரும்பாய் இறுகியிருந்த இதயத்தில் இளக்கத்தை ஏற்படுத்தியது.... "அது அப்படித்தான் சத்யன்,, மாத்த முடியாதது..... அந்தக் காலமோ இந்தக் காலமோ... பெண்கள் சொந்த வீட்டுலயே அகதிகள் தான்.... ஆணுக்கு பெண் சமம்னு போர்க் கொடி தூக்கினாலும் ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் பெண்ணுக்கு கிடைப்பதில்லை... அப்படி கிடைச்சாலும் அது நிலைப்பதில்லை.... எனக்கு என் அப்பாவும் அவரது குடும்ப கௌரவமும் ரொம்ப முக்கியம் சத்யன்... அதை உடைக்க மாட்டேன்.... ஆனால் இந்த வலிகள்?????????? இதை நான் தாங்குவதற்கும் ஒரு காரணம் இருக்கு...."

"வலிகளைத் தாங்க காரணமா? இதென்ன முட்டாள்த்தனமா இருக்கு?"

"ஆமா முட்டாள்த்தனம்தான்..... இந்த வலிகளை நான் தாங்காமல் எதிர்த்து நின்னா... எல்லாம் என் அப்பாவுக்கு திரும்பும்... வார்த்தையால் விழும் அடிகளை என் அப்பா தாங்க மாட்டார் சத்யன்... அப்பா செய்த ஒரு பாவத்துக்கு நான் தண்டனையை ஏத்துக்கிறதா கூட வச்சுக்கலாம்"

"சத்தியமா எனக்குப் புரியலை.... எனக்கு உன் குடும்பத்தைப் பத்தி தெரியனும்.... கொஞ்சம் சொல்லமுடியுமா?"

சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தாள்.... "அது எதுக்கு? சொல்லிக்கும் படி எதுவுமில்லை..... நீங்க காலேஜ் கிளம்புங்க நேரமாச்சு"



"உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லைனு நேரடியாவே சொல்லலாம்.... காலேஜ் போக இன்னும் ஒன் அவர் இருக்கு" கோபமாக இருக்கு பொம்மை ஒன்றும் கூடவே

"ம்ம்"

"சிமி,, நான் கேட்குறதுக்கு மறைக்காம பதில் சொல்வியா?"

"அது நீங்க கேட்கும் விஷயத்தைப் பொருத்திருக்கு"

சுவற்றில் முட்டிக்கொள்ளும் படத்துடன் "அம்மா தாயே,, உன் பேமிலி பத்தி இனி கேட்கலை... இது வேற"

"சரி கேளுங்க"

"ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ரெண்டு நாள் தொடர்ந்து சாட் வராம இருந்தியே.... அப்பவும் இதுபோல எதாவது நடந்ததா? நிஜத்தை சொல்லு சிமி"

அவனது அறிவுக் கூர்மையை எண்ணி வியப்பதா? அல்லது தன்னைப் பற்றியே யோசிப்பதை எண்ணி மகிழ்வதா? புரியவில்லை மான்சிக்கு "ம்ம்" என்று அனுப்பினாள்...

சிலநிமிட மவுனத்திற்கு பிறகு "என்னம்மா ஆச்சு.... என்ன பண்ணாங்க? இதுபோல வலியா? அல்லது இதைவிட அதிகமா? ரெண்டுநாளா தொடர்ந்து ஆபிஸ் வராம இருந்தியே சிமி?" அவனின் உள்ளக் கதறலே வார்த்தையாக வந்தது....

அன்று நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்..... ரீத்துவைத் தேடி வந்த ஒரு இளைஞனுக்கு பதில் சொல்வதற்காக வெளியே வந்தாள்.... அவனது சகோதிரியோ மான்சியின் கல்லூரித் தோழியாக இருந்த காரணத்தால் சற்று நேரம் நின்று பேசியபின் ரீத்து இல்லையென்ற தகவலைக் கூறி அனுப்ப வேண்டிய நிலைமை.... அவனை அனுப்பிவிட்டு உள்ள வந்தவளைக் கண்டு ஆத்திரமாக விழித்தாள் கலா.... அவள் கையில் மான்சி அயர்ன் செய்துகொண்டிருந்த கலாவின் காட்டன் புடவை பொசுங்கிய நிலையில்....

அய்யய்யோ சேலை பொசுங்கிவிட்டதா?...... இல்லையே? அயர்ன் பாக்ஸை எடுத்து தனியாகத் தானே வைத்துவிட்டு வந்தாள்... புடவை பொசுங்க வாய்ப்பே இல்லையே?

"ஏன்டி என் சேலையை பொசுக்கிட்ட எந்த மாப்ளை கூடடி கதை பேசிட்டு வர்ற?" இன்னும் எழுத்தில் வரிக்க முடியா வக்கிர வார்த்தைகள்.... திட்டி முடித்தவள் வீடு துடைக்கு மாப்பில் இருக்கும் ஸ்டிக்கை உருவி மான்சியை விலாசித் தள்ளிவிட்டாள்.... சரமாரியாக விழுந்த அடிகளில் சில முழங்கால் மூட்டில் விழ.... இரண்டு நாட்களுக்கு காலை நேராக வைத்து நடக்க முடியாத நிலைமை... அதனால் அலுவலகத்துக் கூட வரமுடியவில்லை..... புடவை மான்சியால் பொசுங்கவில்லை,, கலாவே அயர்ன் பாக்ஸை எடுத்து வைத்து பொசுக்கியிருக்க வேண்டும்.... அன்று மான்சியை வதைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது அவ்வளவுதான்.....

மான்சியும் அன்று காலையிலிருந்தே எதிர்பார்த்தது தான்.... வீட்டுக்கு வந்த நண்பரிடம் மான்சியை மட்டுமே அறிமுகம் செய்து வைத்த பத்ரியின் மீதான ஆத்திரம் இது... மான்சி இதை ஏற்கவில்லையென்றால்.... கலா தெருவுக்கு போயிருப்பாள்... ரகசியமாக நடக்கும் சில அந்தரங்ககள் அம்பலமேறியிருக்கும்......

"என்ன சிமி பதிலே வரலை?" மீண்டும் ஞாபகப்படுத்தினான் சத்யன்...

"ம்ம்,, சித்தியோட புடவையில் அயர்ன் பாக்ஸ் பட்டு பொசுங்கிடுச்சு... அதனால அடிச்சிட்டாங்க"

"அடியா? எதால் அடிச்சாங்க?"

"வீடு தொடைக்கும் ஸ்டிக் இருக்குல்ல அதால தான்"

சத்யனிடம் இருந்து பதில் இல்லை.....

“அது ஸ்டீல் ஸ்டிக்... கால் முட்டில அடி பட்டதும் பயங்கர வலி... நடக்கமுடியலை.... அதான் ரெண்டுநாள் ஆபிஸ் லீவு"

சத்யனின் உணர்வுகளை வரையறுக்க முடியாது... நெஞ்சம் கொதித்தது.... அந்த நெருப்புக்கிடையே சிமியின் மீது இரக்கமெனும் ஈரமும் கசிந்தது..... அவள் கவிதைகளில் இருக்கும் வலியும் துயரும் இப்போது இரட்டிப்பாகத் தெரிந்தது....... தாயைத் தேடியலையும் சிறு சிறுமியொருத்தியா சிமி அவன் கண்களுக்குத் தெரிந்தாள்..... கண்களில் தேங்கிய நீரை சுண்டியெறிந்தான்....

எதுவுமே பேசத் தோன்றாமல் "சரி நீ கிளம்பு சிமி..... நாளைக்கு பேசுவோம்" என்று அனுப்பினான்...

"ம் ம் சரி,, ஆனா நீங்க இன்னைக்கு கவிதையே கேட்கலையே?"

நிஜமாகவே கண்ணீர் வந்தது சத்யனுக்கு "ம்ம் மறந்துட்டேன்ம்மா,, நீ கவிதைகளை பதிவு செய்... நான் குளிச்சிட்டு வந்து படிக்கிறேன்" என்று பதில் செய்து விட்டு "பை சிமி" என்ற வார்த்தையுடன் ஆப்லைன் போய்விட்டான்......

சற்றுநேரம் வரை ஸ்கிரீனையே பார்த்திருந்தாள்... ரொம்பவே வலிக்கும்படி செய்துட்டமோ..... ஆனாலும் அவனிடம் சொல்ல மட்டுமே உரிமையிருப்பது போல் உள்ளுக்குள் தவிப்பாக இருக்கிறதே......

அம்மா,, இந்த ஆறுதலேனும் என் வாழ்வில் நிலைக்குமா??



" உன்னை உறவாகத் தேடும்

" எனது ஒவ்வொரு விடியலும்!

" தீண்டாமை சுவருக்கு அப்பால் நிற்கும் ....

" தாழ்த்தப்பட்ட சிறுமியாய்...

" விடியலைத் தேடி....

" கண்ணீருடன் காத்திருக்கிறது....

" என் இதயம்!!

*** *** *** *** *** *** *** *** *** ***

" கேட்காமல் கடவுள் கொடுத்த

" வரமும் நீதான்,

" நான் தேடாமல் கிடைத்த

" தேவதையும் நீ தான்!

" உன்னை நிஜத்தில் தொலைத்து..

" கனவில் தேடும் சாபம் மட்டும் எனக்கு!

*** *** *** *** *** *** *** *** *** ***

" அம்மா!

" அன்பு காட்ட ஆளில்லை...

" ஆனாலும் அழவில்லை!

" ஆசைப்படாத பொருளில்லை...

" ஆனாலும் கேட்கவில்லை!

" எனதுத் தேவையெல்லாம்...

" உனது பாசமெனும் கவசம் கொண்டு..

" எனை நேசத்துடன் காப்பாய் என்றே!!

கவிதைகளைப் பதிவு செய்துவிட்டு கடையை மூடாமல் காத்திருந்தாள்... அவனிடமிருந்து லைக் வருகிறதா என்று தான்....

சில நிமிடங்களில் லைக் கொடுத்து " நல்லாருக்கு சிமி " என்ற கமெண்ட்டும் வந்திருந்தது.... எப்போதும் ஏதாவது ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்பான்... கேள்விகள் இல்லாமல் அவனது கமெண்ட்ஸ் இருக்காது... இன்று ஒரே வார்த்தையில் முடித்திருந்தான்....




ரொம்பவும் குழம்பித் தவிக்கிறான் என்று அவள் நினைக்கும் போதே அவனிடமிருந்து ஒரு மெயில்......

அன்பு சிமி,,

நான் சொல்ல வந்ததை சொல்ல மெயில் தான் சரியானது....
சிமி,, உனது துயர் கேட்டு என் இதயம் கண்ணீர் வடிப்பது நிஜம்... நான் வாழும் வாழ்வில் இப்படியெல்லாம் அறிந்ததும் இல்லை தெரிந்ததும் இல்லை.... உனக்கு ஆறுதல் கூற வார்த்தையும் இல்லை....

ஆனால் துயரத்தைக் குறைக்க வழி சொல்ல முடியும்.... ஆம் சிமி,, நீ இப்படியே மனதுக்குள் புதைத்து வைத்தால் விரைவில் மன அழுத்தம் ஏற்பட்டு டிப்ரஷன் வர வாய்ப்புள்ளது.... அப்படி வராமல் தடுக்க ஒரே வழி.. உனக்கு நடந்தவைகள்... நடப்பவைகள் எல்லாவற்றையும்... என்னிடம் பகிர்ந்து கொள்.... என்னடா இப்படி கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.... அருகில் இருக்கும் உனது நண்பன் எனது தோளில் சாய்ந்து கொண்டு உனது வலிகளை சொல்வது போல் எண்ணிக்கொள்.... உனது குடும்ப விபரங்கள் எனக்குத் தேவையில்லை.... சம்பவங்களை மட்டும் சொல்லி உனது மன அழுத்தம் குறைய வழி செய்கிறேன்.... நண்பனாய் நினைத்தால் சொல்லியழு சிமி... கண்ணீருடன் உன் கதையை என்னிடம் சொல்லியழு.... இரும்பாக கனக்கும் இதயம்... துரும்பாக மிதக்கும்..... சாட்டில் சொல்ல முடியாது என்றால் மெயிலில் சொல்லு சிமி....

உனது வலிகளை சுமக்க காத்திருக்கும் நண்பன் சத்யன்,,

நான்கைந்து முறை வாசித்துப் பார்த்தாள்.... வார்த்தைகள் மனப்பாடமானது..... எனது வலிக்களை கேட்கவும் தாங்கவும் ஒரு இதயம்...... நான் தேடிய தாய்மையின் மறு உருவம் இது தானா? இவன் தானா அந்த விடியல்? இல்லை பரிதாபத்தால் வந்த பரிவா? அழவேண்டும் போல் இருந்தது..... அடக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்......
காலேஜூக்கு சென்று அமர்ந்த சத்யனுக்கும் எதிலுமே கவனம் செல்லவில்லை..... சூடான காபி கையில் ஊற்றப்பட்டு துடிக்கும் முகம் தெரியாத ஒரு இளம்பெண்..... ஸ்டீல் ஸ்டிக்கினால் அடி வாங்கி நடக்கமுடியாமல் கால்களை இழுத்துச் செல்லும் ஒரு இளம் பெண்... சித்திரவதையாக இருந்தது... முஷ்டியை மடக்கி டேபிளில் குத்தியவனை சக மாணவர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.....

தாயில்லாப் பெண்,, தாயை நினைத்து ஏங்கி கவிதையில் கொட்டுகிறாள் என்று எண்ணினால்.... அவளுக்கு இப்படியொரு துயர் துணை நிற்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.... கவனம் சிதற... எப்போது இரவு வரும் என்று காத்திருந்தான்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கலக்கல் கதை தோழா
horseride sagotharan happy
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 6

இரவு வந்ததும் சாட்டை ஓபன் செய்து சிமிக்கு ஒரு ஹாய் போட்டுவிட்டு மெயிலை திறந்தான்..... அவன் அனுப்பிய மெயிலுக்கு பதில் வந்திருந்தது "நீங்கள் கேட்டதை செய்வதற்கு முயற்சி செய்கிறேன்" என்று தான்.....

முகம் லேசாக மலர சாட்டில் அவள் வருவதற்காக காத்திருந்தான்.... சரியாக அவளுக்கு பதினோரு மணியெனும் போது "ஹாய் சத்யன்" என்று பதில் வந்தது....

"ம்ம் சாப்ட்டியா சிமி?" இத்தனை நாள் நட்பில் இன்றுதான் அவள் வயிற்றைப் பற்றி கேட்கிறான்....

மான்சிக்கோ திகைப்புதான் "ம்ம்" என்றாள்..

"என்ன டிபன்?"

"காலைல எப்பவுமே எனக்கும் அப்பாவுக்கும் கோதுமை உப்புமா தான்.... இன்னைக்கும் அதுதான் "இப்போதெல்லாம் அவன் ஒரு வார்த்தை கேட்டாலும் இவள் விரிவாகத்தான் பதில் சொல்கிறாள்..

"ம்ம்,, மதியம் சாப்பாடு?"

"அப்பா கேன்டீன்ல சாப்பிட்டுப்பாங்க,, எனக்கு அதே உப்புமா தான் கப்ல போட்டு எடுத்துட்டு வந்துடுவேன்" புன்னகை செய்யும் பொம்மை ஒன்று....

"ஷிட்,, சீக்கிரமே ருசியறியும் செல்கள் செத்துடும்" சுவற்றில் முட்டிக் கொள்ளும் பொம்மை ஒன்று....

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது,, பத்து வருஷதுக்கு மேலயும் அதான் சாப்பிடுறேன்"

"நான் அனுப்பிய மெயில் படிச்சியா?"

"ம்ம்,, படிச்சேன்"

"அதைப் பத்தி ஏதாவது யோசிச்சியா?".

"ம்ம்,, நடந்து முடிஞ்சதைப் பத்தி இனி பேசி பிரயோஜனம் இல்லை.... இனி நடப்பவை மட்டும் உங்கக்கிட்ட பகிர்ந்துக்குறேன்"

"சொல்றதோட நிறுத்தாம செய்யனும்" அவனின் வார்த்தைகளில் உரிமையான அதட்டல் ஒழிந்து கிடந்தது....

"ம்ம்".....



"சம்பாதிக்கிறயே,, நல்லதா வாங்கி சாப்பிடலாம்ல?"

"ஏன்,, இப்ப சாப்பிடுறது நல்லா தானே இருக்கு?."

"உன்னைத் திருத்தவே முடியாது,, எப்படியாவது போய்த் தொலைனு விடவும் முடியலை"

"வேண்டாம் சத்யன்,, யாரும் எனக்காக பரிதாபப்படவோ,, வருத்தப்படுவோ வேண்டாம்"

"அம்மா தாயே,, தெரியாம பேசிட்டேன்,, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடப் போகுது"

இதைப் படித்ததும் மான்சிக்கு சிரிப்பு தான் வந்தது

சற்றுநேரம் கவிதைகளைப் பற்றிப் பேசிவிட்டு சத்யன் உறங்கப் போய்விட... மான்சியும் தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தாள்...

அடுத்த சில நாட்களும் இதே முறையில் சென்றது... காலையும் மாலையும் வந்தான் நலம் விசாரித்தான்,, கவிதைகளைப் பற்றி கருத்துகள் கூறினான்... தனது கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களைப் பகிர்ந்துகொள்வான்..... சாப்பிட்டாளா என்பதில் அதிக அக்கரை காட்டினான்....... சாட்டில் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் தனது உரிமையை நிலை நாட்டினான்.... அந்த உரிமை நட்பால் வந்தது தான் என்று இருவரும் நம்பினார்கள்....

மான்சிக்குள் நிறைய மாற்றங்கள்.... சத்யனை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்... அவன் வரும் வேளையில் அவள் முகம் தாமரையாக மலர்வதை தடுக்க முடியவில்லை.... அன்பாக அவன் கேட்கும் "சாப்ட்டயா சிமி?" என்ற வார்த்தைக்காகவே உயிரை வைத்துக் கொண்டு இருப்பது போல் தோன்றும்.... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களின் நட்பு(?) வளர்ந்தது

மனம் இலகுவாக இருக்க வீட்டுப் பிரச்சனைகளையும் மான்சியால் எளிதாக சமாளிக்க முடிந்தது.... ஆனால் கலாவிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனிதத்தன்மையும் தொலைந்து போக எப்பவுமே இறுகிப் போன முகத்தோடு அமர்ந்திருந்தாள்....

மான்சியால் கலாவை எளிதாக புரிந்துகொள்ள முடியும்... தகப்பனிடம் போய் அவரது தாம்பத்தியத்தைப் பற்றி பேசவும் முடியாது.... சித்தியிடம் சென்று தகப்பனை மன்னிக்கவும் சொல்ல முடியாது.... ரீத்து எதையுமே கண்டுகொள்ளாமல் அவளது கல்லூரி படிப்பும் அங்கே புதிதாய் கிடைத்த காதலனுமாக நிம்மதியாக இருக்க... மான்சி தான் இதில் மாட்டிக் கொண்டு அவதியுறுபவள்.... அதிலும் இப்போதெல்லாம் கலா பார்வையாலேயே பொசுக்க ஆரம்பித்து விட்டாள்.... முடிவேயில்லாத ஒன்றைத் தேடிச் செல்வதாகத் தோன்றியது....

அன்று கூட அப்படித்தான் காலை எழும்போதே பெரும் போராட்டமாக இருந்தது.... பத்ரியை ஜாடையாக ஏதோ திட்டிக் கொண்டிருக்க... தோட்டத்து வாசலில் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பத்ரி.....

மான்சிக்கு சில சமயம் அப்பாவின் கையாலாகத் தனத்தை நினைத்து கோபமாகக் கூட வரும்.... 'கலாவின் வாழ்வை பற்றி நிமிட நேரம் யோசித்திருந்தால் கூட தான் பலிகடா ஆகிருக்க மாட்டோமே' என்று நிறைய முறை நினைத்ததுண்டு.... ஆனால் அவர் தனது அம்மா தேவியின் மீது வைத்திருக்கும் காதல் எல்லாவற்றையும் அடிப்போட்டு விடும்..... எதுவந்தாலும் அசையாத அந்த நேசம் நிஜமானதல்லவா? அந்த நேசத்திற்காக தான் அடிபடுவதில் தவறேதும் இல்லை என்றே எண்ணினாள்

அப்பாவை ஆறுதல் படுத்திவிட்டு அத்தனை வேலையையும் முடித்து அலுவலகம் கிளம்பினாள்..... ரயிலில் ஏறியதும் சத்யனைப் பற்றிய ஞாபகங்கள்.... இப்போது தான் இரவு சாப்பிட்டுக் கொண்டிருப்பானோ? அல்லது சாப்பிட்டு முடித்து எனக்காக காத்திருப்பானா? இன்று ஏனோ மனம் அதிகமாக அவனைத் தேடியது.....

அவசரமாக அலுவலகம் நோக்கி ஓடினாள்,, தனது இருக்கையில் அமர்ந்து அலுவல்களை பார்த்தாள்... சரியாக பதினோரு மணிக்கு அலுவலக வேலைகள் சற்று குறைந்தது.. தனது மெயிலை ஓபன் செய்தாள்...

"ஹாய் சிமி" என்ற வாசகத்தோடு காத்திருந்தான்

"ம்ம்,, வந்துட்டேன்"....

"நேத்தைவிட முபிபது நிமிஷம் லேட்,, ஆபிஸ்ல ஒர்க் அதிகமா? நானும் வந்து தொல்லை குடுக்கிறேனா?"

மான்சி சற்றுநேரம் பதிலே அனுப்பவில்லை என்றதும்...

"சிமி என்னாச்சு?"

"இல்லை உங்களை என்னைக்காவது தொந்தரவுனு நான் சொல்லிருக்கேனா?"

"ஓ.......... ஹாஹாஹா அதான் கோபமா?.... நீ தொந்தரவுன்னு சொன்னாலும் கூட நான் வந்துக்கிட்டே தான் இருப்பேன்... துப்புனாலும் உடனே தொடைச்சிட்டு சிரிக்கும் வெள்ளை மனம் படைத்தவன் நான்"

மான்சி சட்டென்று சிரித்துவிட்டாள் "அதுக்குப் பேர் வெள்ளை மனம் படைத்தவன் இல்லை.... எங்க ஊர் பக்கம் மானங்கெட்டவன்னு சொல்வோம்...."

"எவன் சொல்லாம கொல்லாம இப்படில்லாம் மாத்தினது?"

"உங்களை மாதிரி நல்லவங்க நாலு பேருதான்....."

"ஹாஹாஹாஹா,, சிமி,, நீ இப்படிலாம் பேசறதை கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா,?"


"ம்ம்,, எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு"

"சரி சிமி,, உன்னை பத்தி பேசுவோமா? "

சட்டென்று பேச்சு திசை மாற "என்னைப் த்தியா? என்ன பேசனும்?"

"இல்ல,, இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இருப்பதை விட,, உன்னை விரும்பும் ஒரு நல்லவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாமே சிமி"

"ம்ம்,, வாழலாம் தான்,, ஆனா எனக்கு மேரேஜ்ல ஆர்வமில்லை... விருப்பமும் இல்லை"

"ஏய்,, இதென்ன முட்டாள் தனமான பேச்சு... பெண் திருமண பந்தத்தில் இணைவது தான் அவ லைப்க்கு முழுமை"

"ம்ம் புரியுது சத்யன்.... ஆனா நான் போய்ட்டா என் அப்பா?.... அதைவிட என் சித்தி நான் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டாங்க"

"வாட்? உன் சித்தி ஏன் சம்மதிக்க மாட்டாங்க?"

"அது வந்து அப்படித்தான்..... அவங்க அனுபவிக்காத தாம்பத்தியம் நான் அனுபவிக்க விடமாட்டாங்க"

"புரியலை சிமி"

"புரிய வேண்டாம் சத்யன்,, புரியனும்னு பல கதைகளை சொல்லனும்,, இப்போதைக்கு என் லைப்ல கல்யாணமே இல்லை"....

"இல்ல சிமி,, நீ பேசுறது ரொம்ப தவறு..... கல்யாணம் மட்டுமே உன் பிரச்சனைக்கு தீர்வுனு நான் நினைக்கிறேன்.... உன் சித்திக்கு தாம்பத்தியம் சரியில்லைன்னா அது உன் அப்பாவும் சித்தியும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை... நீ ஏன் வாலின்டியரா அதுல கமிட் ஆகிக்கிற? நீ உன் லைப்பை மட்டும் யோசி சிமி"

மான்சிக்கு முனுக்கென்று கோபம் வந்தது... இவன் அதிகமாக தனது வாழ்வில் மூக்கை நுழைக்கிறானோ என்று தோன்ற "இதெல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமில்லை சத்யன்,, உங்களுக்கு ரொம்ப இடம் குடுத்துட்டேன் போலருக்கு" என்று பதில் அனுப்ப....

"ஆமா இடம் குடுத்து உன் மடில போட்டு கொஞ்சிக்கிட்டு இருக்க பாரு? சும்மா கடுப்பேத்தாத சிமி.... நான் சொன்னதை நிமிஷ நேரமாவது யோசிச்சுப் பாரு.. அதுல இருக்குற நியாயம் புரியும்" 



எது நியாயம்? அப்பாவை நிராதறவா விட்டுட்டு புருஷன்ற ஒருத்தன் பின்னாடி போறது தான் நியாயமா?"

"இதிலென்ன தப்பிருக்கு? காலம் காலமா நம்ம கலாச்சாரமே அது தானே?"

"கலாச்சாரமா? அதை நான் மாத்தியமைப்பேன்"

"மண்ணாங்கட்டி,, தூங்குறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்பவே முடியாது.... நீயா திருந்தினா தான் உண்டு போலருக்கு"

"ஹலோ நீங்க ரொம்ப அதிகமா பேசுறீங்க"

"அதிகமாவா?.... இதுவே அதிகம்னா இனிமே நான் பேசுறதுக்கு என்ன சொல்லுவ?"

"ம் ஒன்னும் சொல்ல மாட்டேன்... சாட்டை குளோஸ் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பேன்...”

"எல்லாம் நேரம்டா சத்யா,, உன் நேரம் சரியில்லை.... சரி சரி நோ டென்ஷன்... இனிமே இது போல பேசுறதை தவிர்க்கப் பார்க்கிறேன்..."

"ம்ம்"

"கொஞ்சம் சிரிச்சாப்ல மூஞ்சிய வச்சுக்கிட்டு நாலு வார்த்தை நல்லதா சொன்னா நானும் நிம்மதியா போய் தூங்குவேன்ல"

புன்னகையில் பூத்தது மான்சியின் மலர் முகம் "என்ன பேசுறதாம்?"

"எதையாவது பேசு கண்ணே.... நமக்குள் இருப்பதைப் பற்றி நாலு வார்த்தைப் பேசு,, நமக்குள் இல்லாதததைப் பற்றி.... எதுவுமே பேசாத"

"நமக்குள்ள என்ன இருக்கு பேச?"

"ஸ்ஸ்ஸ் யப்பா முடியலை சாமி.... கண்ணை கட்டுதே...... இப்போ நான் ஏதாவது சொன்னா... ஹலோ நீங்க ஓவரா பேசுறீங்கன்னு சொல்லுவ... அதைவிட நைட் போடப் போற கவிதை இருந்தா நாலுவரி இப்பவே சொல்லு கேட்டுட்டு போய் தூங்குறேன்"

"ம்ம்,, வரவர நீங்க பேசுறதே புரியலை"

"எனக்கே புரியலை,, அப்புறம் எங்கருந்து உனக்குப் புரியும்.. சரி கவிதை சொல்லும்மா,, தூக்கம் கண்ணைக் கட்டுது"




" என்னை சூழ் கொண்டு..

" மகரந்தம் காத்த மலரே,

" இன்று நான் மலர்ந்ததைக் காண,

" நீ என் அருகில் இல்லையே!

"வெரி நைஸ்,, அப்போ நீ இன்றுதான் மலர்ந்திருக்கேன்னு உன் அம்மாவுக்கு சொல்ற? சரிதானே?"

ஏதோ சூட்சுமம் நிறைந்த வார்த்தைகள்... "ஹலோ இது கவிதை" என்றாள்....

"நான் மட்டும் காக்கா வடை தூக்கின கதைன்னா சொன்னேன்... கவிதை தான்... கவிதையே தான்... ஆனா முதல் முறையா உன் மலர்வை சொன்ன கவிதை"

"வேணாம் சத்யன் ப்ளீஸ்"

"ம்ம்,, உன்னை நீ உணர ஆரம்பிச்சுட்ட சிமி,, ஓகே நான் தூங்கப் போறேன்.... குட்நைட் சிமி"

"ம் குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் சத்யன்"

"நான் ஒரு கவிதை சொல்லவா சிமி?"

ஆர்வமானாள் மான்சி "ம் சொல்லுங்க சொல்லுங்க"


" வயதென்னவோ உன் னை மங்கை என்கிறது!

" நீயோ தாய் மடி தேடும் மழழையாகவே...

" என் கண்களுக்குத் தோன்றுகிறாய்!
[color][font]

"ம் ரொம்ப நல்லாருக்கு சத்யன்"

"ம் தாங்க்ஸ் சிமி" என்றவன் ஆப்லைன் போய்விட... மான்சி மறுபடியும் மறுபடியும் அவனுடைய கவிதை வரிகளையே திரும்பத் திரும்ப வாசித்தாள்....

அன்று மாலை அவளது மெயிலைக் கூட ஓபன் செய்ய முடியாதளவுக்கு ஆபிஸ் வேலை அதிகமாக இருந்தது.... ஆறு மணிக்கு சத்யன் காத்திருப்பானே என்று தோன்றினாலும் வாங்கும் சம்பளத்திற்கு நாணயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலுவலைக் கவனித்தாள்...

ஆறேமுக்காலுக்கு வேலை முடியவும் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட மெயிலை ஓபன் செய்ய நேரமின்றி வீட்டுக்கு கிளம்பினாள்...

அவள் வரமுடியாத அந்த நிமிடம் தான் சத்யனின் வாழ்வில் சிமி எங்கே என்று அவனுக்கே உணர்த்திய நிமிடங்கள்.... அவளுக்காக அவன் தவித்த தவிப்பும் துடிப்பும் அவன் மனதுக்குள் காதல் வந்திருப்பதை உரக்கச் சொல்ல அவளைக் காணாமல் கண்ணீரால் கலைந்த ஓவியம் போலானான்...
[/font][/color]
வீட்டுக்கு வந்த மான்சிக்கோ பெரும் அதிர்ச்சியொன்று கை விரித்துக் காத்திருந்தது...... முகம் கழுவி விட்டு தனக்கான காபியைத் தயாரித்தவளிடம் வந்து நின்றாள் கலா.

"மான்சி,, உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்...." என்றவளை ஆச்சர்யமாக பார்த்து "என்கிட்ட பேச அனுமதி கேட்கனுமா சித்தி,, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க கேட்க காத்திருக்கேன்" என்றாள் மான்சி....

"ம்ம்,, கொஞ்ச நாள் முன்னாடி உன்னை பெண் கேட்டாங்களே அந்த பெங்களூர் காரங்க... அவங்களோட மகனுக்கு நம்ம ரீத்துவை குடுக்கலாம்னு முடிவு பண்ணி நானே அவங்களுக்குப் போன் பண்ணி கேட்டேன்.... அவங்களுக்கு இந்த வீட்டுலருந்து ஒரு பெண் மருமகளா வரனுமாம்,, அது அக்காவா இருந்தா என்ன தங்கையா இருந்தா என்ன, எங்களுக்கு சம்மதம்னு சொல்லிட்டாங்க... பையன் வெளிநாட்டுல படிக்கிறானாம்... இந்த வருஷம் படிப்பு முடிச்சிட்டு வந்ததும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னாங்க.... இது விஷயமா உன் அப்பாகிட்ட பேசனும்னு சொன்னாங்க... அவருபாட்டுக்கு ஏடா கூடமா ஏதாவது பேசிட்டா எல்லாம் கெட்டுடும்... அதனால உன் அப்பாவை சமாதானம் பண்ணி அவங்ககிட்ட பேச வைக்க வேண்டியது உன் பொருப்பு" கலா மூச்சு வாங்க நீளமாக சொல்லி முடித்தாள்....

மான்சிக்கு நிஜத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது... சட்டென்று சித்தியின் கையைப் பற்றி "நானாச்சு சித்தி... அப்பாவை பேச வச்சு கல்யாணத்தை நல்லபடியா முடிக்கலாம்,, நீங்க எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இருங்க" என்றாள்...

மான்சியை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்த கலா "இந்த கல்யாணம் நடக்கலைன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது மான்சி,, இது சத்தியம்" என்றாள்...

"அய்யோ சித்தி அப்படில்லாம் பேசாதீங்க... எல்லாம் நல்லபடியா முடியும்" என்று சித்தியை சமாதானம் செய்தாள்...

அன்று இரவு வழக்கம் போல தாமதமாக வந்த மகளை தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினாள் கலா....

அதன் பிறகு தனது அறைக்கு வந்த ரீத்து மான்சியிடம் வந்து "உன்னை கேட்ட மாப்பிள்ளைக்கு என்னை தரப் போறாளாம் அம்மா,, உனக்கு அதிலே வருத்தமில்லையே?" என்று கேட்க...

புன்னகையுடன் தங்கையின் தலை கோதிய மான்சி "எனக்கு ஏன்ம்மா வருத்தம்... நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்,, அது போதும் எனக்கு" என்றாள்...

"ம்ம் நீ திருந்தவே மாட்ட மான்சி,, மாப்ளை கலிபோர்ணியாவில் படிச்சுக்கிட்டு இருக்கானாம்... நல்ல பிக் ஷாட் தான் போலருக்கு,, ஓகே சொல்லிட்டேன்" என்றாள் ரீத்து...

"கலிபோர்ணியா என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே மான்சியின் காதில் விழவில்லை... "மாப்பிள்ளையோட பெயர் என்னவாம் ரீத்து?" என்று அவசரமாக கேட்க...

"ம் சத்யமூர்த்தியாம்... கலிபோர்ணியா யுணிவர்ஸிட்டியில் மேற் படிப்புப் படிக்கிறானாம்" தகவல் சொன்னபடி குளியலறைக்குள் புகுந்தாள் தங்கை...

மான்சியின் தலையில் மெல்ல வந்து விழுந்தது இடி.... 'அய்யோ இந்த சின்ன சந்தோஷம் கூட என் வாழ்க்கையில் நிலைக்காதா அம்மா' என்று உள்ளம் உருகியவளுக்கு இரண்டு விஷயம் ஞாபக அடுக்கில்... அப்போ சின்னு தான் சத்யனா? குழந்தையாக இருக்கும் போதே என் கண்ணீர் துடைத்து கழுத்தில் தனது அடையாளத்தை அணிவித்தவனா யாரென்றே தெரியாமல் என்னுடன் சாட்டில் பேசிய சத்யன்?



அம்மா சோதிக்க ஓர் அளவில்லையா? நண்பன் தான் என்றாலும் அந்த நட்பு கூட எனக்கு நிலைபெறாதா? காலமெல்லாம் உன் கவிதைகள் மட்டுமே எனக்குத் துணையா? இருக்கட்டும்... இந்த இன்பம் மட்டும் போதும் எனக்கு...



“ உன் வயிற்றில் நான் ...

“ ஒரு கொடியில் உணவாம் ...

“ இரு விழியில் உறக்கமாம்....

“ என் துடிப்பை நீ அறிவாயாம் ....

“ உன் தவிப்பை நான் உணர்ந்தேனாம்....

“ பூமியில் நான் பிறந்தவுடன்

“ தாயும், சேயும் வேறு வேறாக...

“ உன் உயிரையே என்னுடன் பங்கிட்டு,

“ ஒருயிராய் இருந்து..

“ ஈருயிராய் ஈன்ற பின்னும்...

“ கடமை தீர்ந்தென்று கை விரிக்காமல்..

“ உதிரத்தை உருக்கி உயிர்ப்பால் கொடுத்து...

“ அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா....

“ உனக்கு ஈடு ஈரேழு உலகிலும் இல்லையம்மா!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 7

“ அம்மா!

“ நாம் பிரிந்த நாள் முதல்

“ என்னை காணும் எல்லாவற்றிலும்

“ உன்னையே தேடுகிறேன்....

“ நீ காணும் அனைத்திலும்...

“ நான் தெரிகின்றேனா அம்மா?

காலை நேரத்து கானாங்குருவிகள் காதுகளுக்குள் நுழைந்து இசைப்பது போல் உச்சபட்ச கூவலில் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் மான்சி..... கடிகாரத்துக் குருவிகள் தலையை நீட்டி நேரமாகிவிட்டதை உணர்த்திவிட்டு தலையை இழுத்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டன....

முதல்நாள் இரவு சித்தியும் ரீத்துவும் கொடுத்த அதிர்ச்சியில் இரவெல்லாம் உறங்காமல் கிடந்தவளை உறக்கம் வந்து எப்போது தனது உலகுக்கு அழைத்துச் சென்றது என்று தெரியாமலேயே உறங்கிப் போனாள்..... இப்போது குயில்கள் கூவி எழுப்பினாலும் இரவின் தாக்கம் அப்படியேதான் இருந்தது....

அவசரமாய் வேலைகளைத் தொடங்கினாள்.... ரீத்துவுக்குப் பிடித்த சன்னா மசாலாவும் பூரியும் செய்து வைத்துவிட்டு அப்பாவுக்கும் இவளுக்கும் உப்புமாவை தயார் செய்யும் போது பின்னால் கலா வந்து நின்றாள்...

"நைட் சொன்னேன்ல,, அது விஷயமா உன் அப்பாகிட்ட எப்ப பேசப் போற?" என்று கேட்க...

துப்பட்டாவால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு "ரெண்டு நாள் கழிச்சுப் பேசுறேன் சித்தி,, நீங்க அவங்களுக்கு சம்மதம் சொல்லிடுங்க" என மான்சி புன்னகையுடன் சொல்லவும்...

அவளை அலட்சியமாகப் பார்த்து சிரித்த கலா "அவங்களுக்கு சம்மதம் சொல்லி ரொம்ப நேரமாச்சு... உனக்கும் உன் அப்பாவுக்கும் தகவல் மட்டும் தான் சொல்றேன்... எதையாவது மாத்திப் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த நினைச்சீங்க....... அப்புறம் நடக்கிறதே வேற" முகம் இறுக எச்சரித்தாள்...

"இல்ல சித்தி,, நான் முடிவு பண்ணிட்டேன்..... ரீத்துவுக்கு அந்த மாப்பிள்ளைக் கூடதான் கல்யாணம்... அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியது என் பொறுப்பு....." என்ற மான்சி "ஆபிஸ்க்கு நேரமாச்சு சித்தி.... முடிஞ்சா நாளைக்கே அப்பாக்கிட்ட பேசிடுறேன்" என்று கூறிவிட்டு குளிப்பதற்காக உடைகளை எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக சென்றாள்....



வழக்கமான ரயில் பயணம் பெரும் சுமையாக இருந்தது...... எங்கே இறங்க வேண்டும் என்பதைக்கூட மறந்து நின்றிருந்தவளை தினமும் உடன் வரும் சக பயணியொருத்தி தோளில் தட்டி "என்னாச்சு மான்சி? ஸ்டேஷன் வந்தாச்சி" என்று இந்தியில் சொல்லவும்.. சட்டென்று நிகழ் காலத்துக்கு வந்து அவசரமாக இறங்கினாள்

தளர் நடையாக அலுவலகம் நோக்கி நடந்தாள்.... மனமோ இரை தின்ற பசுவாக நடந்தவற்றை மீண்டும் மீண்டும் அசைபோட்டது...

ரீத்துவுக்கும் சத்யனுக்கும் கல்யாணம் நடந்தால் தான் என்ன? அவன் உனக்கு வெறும் நண்பன் தானே? தங்கையின் கணவனுடன் நட்பு கொள்ளக் கூடாதா? தேவையில்லாமல் இவ்வளவு வருந்தக் காரணம் என்ன? அவன் வெறும் நண்பன் மட்டும் தானே? நண்பனுக்கு திருமணம் ஆகக்கூடாது என்று நினைக்கும் தோழியா நீ? அடுக்கடுக்காய் அர்த்தம் பொதிந்த கேள்விகள் ஆயிரமாயிரம் உலா வந்தன....

ஆண்டவனின் விளையாட்டை எண்ணி வியக்காமலும் இருக்கமுடியவில்லை...

ஏதோவொரு ரயில் பயணத்தில் போடப்பட்ட முடிச்சு... இன்னும் அவிழ்க்கப்படாமல்..... அதுவும் அன்று என் அம்மாவின் ஆத்மாவை சாட்சியாக வைத்து அவன் போட்டச் செயின்..... அவனே என் தங்கைக்கு மாப்பிள்ளையாக... அவனே எனக்கு ரசிகனாக... என்னிடம் உரிமையுடன் பேசும் அவன் இனி?.... ஒன்றுமே புரியவில்லை மான்சிக்கு... விழிகளில் துளிர்த்த நீரை கைக்குட்டையால் ஒற்றியபடி அலுவலகத்துக்குள் நுழைந்தாள்....

நேற்று மாலை அவனிடம் பேசாமலே போனதற்காக காத்திருந்தானா? அல்லது கல்லூரிக்குப் போயிருப்பானா? எதுவாயிருந்தாலும் இன்று மெயிலை ஓபன் செய்வதில்லை என்ற முடிவுடன் தனது வேலைகளில் மூழ்கினாள்.....

அதற்கேற்றார்ப் போல் அன்று அதிகமாகத்தான் வேலையிருந்தது... புதிதாக சில டாக்யூமென்ட்களை டைப் செய்ய வேண்டியிருந்தது... டைப் செய்ததை எம்டியின் பார்வைக்கு அனுப்பிவிட்டு அவர் ஓகே சொன்னதும் மற்ற ஊழியர்களுக்கு அவற்றை பார்வேர்ட் செய்தாள்... மதிய உணவு வேலை வரையிலும் வேறு எதையும் சிந்திக்க முடியாதளவுக்கு பணிகள் இருந்தன...

மதியம் ஒன்று பத்துக்கு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு டைனிங் ஹால் சென்று சாப்பிட அமர்ந்தாள்... உணவு ஒரு வாய் கூட இறங்கவில்லை.... பக்கத்தில் இருந்த க்ளார்க் "சாப்பாடு பிடிக்கலைன்னா எடுத்து வச்சிடு மான்சி,, நான் கொண்டு வந்ததை ஷேர் பண்ணிக்கலாம்" என்று கரிசனத்துடன் இந்தியில் கூற....

"வேணாம் அண்ணா.... சாப்பிடப் பிடிக்கலை" என்று புன்னைகையுடன் மறுத்துவிட்டு எடுத்து வந்திருந்த உணவை சுத்தம் செய்யும் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள்... நேரம் இரண்டாகியிருந்தது...

எதிரேயிருந்த மானிட்டர் அவளை ஆவலுடன் நோக்குவது போல் இருந்தது..... ஆன் செய்யலாமா? விரல்கள் நடுங்க கீ போர்டில் என்டர் கொடுத்து மௌசில் கை வைத்தாள்..... விரல்கள் தானாக யாகூ மெயிலை ஓபன் செய்தது... ஓபன் ஆக எடுத்துக் கொண்ட இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகம் போல கடந்து சென்றது....

ஓபன் ஆனதுமே மெயில்களை செக் செய்தாள்... சத்யனிடமிருந்து மட்டுமே முப்பதிற்கும் மேற்பட்ட மெயில் வந்து குவிந்திருந்தன... அதுவும் சற்றுமுன் கூட ஒரு மெயில் வந்திருக்க... "அய்யோ இன்னுமா தூங்கலை?" என்று வாய்விட்டே கூறினாள்.....

ஒரு ஒரு மெயிலாக ஓபன் செய்தாள்..... ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தாள்

"சிமி,, ஏன் இன்னும் கவிதை வரலை? என்னாச்சு?"

"ஆபிஸ்ல நிறைய வேலையா சிமி?"....

"என்னாச்சும்மா? எனக்கு பயங்கர டென்ஷன் ஆகுதே சிமி?"

"சிமி ப்ளீஸ் இப்படி அமைதியா இருக்காத... ஒரு மாதிரி வலிக்கிது சிமி"

"நீ ஆன்லைன்ல தான் இருக்கேன்னு தோணுது... இருந்துகிட்டே வரமாட்டேன்றியா சிமி?"

"நான் ஏதாவது தவறா பேசிட்டேனா? அப்படியிருந்தா மன்னிச்சிடு சிமி"

"சிமி ப்ளீஸ் இப்படி சித்திரவதை பண்ணாத... வந்து ஒரு வார்த்தை பேசிட்டாவது போய்டு சிமி"

"நான் பைத்தியக்காரனாடி? இந்த மவுனம் ரொம்ப கொடூரமா இருக்கு சிமி"

"நான் என்ன செய்யனும்? எதுவுமே புரியலையே சிமி"

"ஏன்டி என்னை இப்படிக் கொல்ற? நான் என்ன தவறு பண்ணிருந்தாலும் ஒரு நிமிஷம் வந்து அதை சொல்லிட்டாவது போயேன் சிமி?"

"சிமிம்மா,, வலிக்கிதே சிமி.... ப்ளீஸ்டி"

"நான் உனக்கு பிடிக்காததை செய்துட்டேனா?"

"இனி நான் எப்படி பேசனும்னு நீயே சொல்லு சிமி... அது போலவே நடந்துக்கிறேன் சிமி..... இப்போ மன்னிச்சு வந்துடும்மா" 

"என்னைப் பார்த்தா பாவமா இல்லையாடி? அப்படியென்னடி உனக்கு வைராக்கியம்?"

"சிமி.... சிமி.... ப்ளீஸ்டி... வந்துடேன் ப்ளீஸ்"

"நான் உன் ரசிகன் இல்லையா சிமி?... ஒரு நிமிஷம் வந்து பேசிட்டுப் போயிடேன்...."

"பயமாருக்கு சிமி,, உனக்கு ஏதாவது ஆகிடுச்சோன்னு ரொம்ப பயமாருக்கு சிமி"

"உடம்பு ஏதும் சரியில்லையாம்மா? மதியத்தோட லீவு போட்டுட்டுப் போய்ட்டயா?"

"அய்யோ எப்படி யோசிச்சாலும் நான் எதுவும் வரம்பு மீறி பேசினதா தெரியலையே? எப்பவும் போலத்தானே பேசினேன் சிமி?"

"இப்பவும் வரலையா? சிமி உனக்கு என்ன தான் ஆச்சு?"

"சிமி நான் இன்னைக்கு முழுக்க சாப்பிடலை... காலேஜ் கூட போகலை... லாப்டாப்பை வச்சுக்கிட்டு அப்படியே படுத்திருக்கேன்.... உனக்காக... நீ வருவேன்னு காத்திருக்கேன் சிமி... நீ வந்து பேசினா தான் சாப்பிடுவேன் சிமி"

அத்தனை மெயிலிலும் அவனது தவிப்பும் துடிப்பும்..... கடைசியாக இந்த மெயிலைப் படித்ததும் மான்சியால் தாங்க முடியவில்லை... யாரும் கவனிக்காதவாறு உதட்டைக்கடித்து அழுகையை அடக்கியபடி டாய்லெட்க்கு ஓடினாள்.....

உள்ளே சென்று கதவை மூடியதும் அழுகை வெடித்துக் கொண்டு வெளி வந்தது.... சத்தம் வெளியே கேட்காதவாறு தண்ணீர் குழாயைத் திறந்து விட்டாள்.... எனக்காக சாப்பிடலையா சத்யா? ஏன்டா ஏன்? நான் யார்னு தெரியுமா உனக்கு? நான் இப்ப என்ன செய்றதுன்னே புரியலையே சத்யா? வாய்விட்டுப் புலம்பியழுதாள்...

சித்திக்குக் கொடுத்த வாக்கு.. சத்யனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த தங்கையின் சந்தோஷம்.... குடும்ப சண்டைகள் தீர்ந்து நிம்மதி வர சத்யன் ரீத்துவின் திருமணம் கட்டாயம் நடந்தாக வேண்டும்... அப்படின்னா இதோ மெயிலில் புலம்பியிருக்கும் சத்யனை எப்படி தவிர்ப்பது? ஏதாவது செய்து சத்யனை ஒதுக்கினாலன்றி வேறு வழியில்லை என்று தெளிவாகப் புரிந்தது...

முடிவெடுத்தாலும் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.... தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்தாலும் கண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து நிற்காமல் வழிந்தது...

மான்சியின் கைகள் அவளையுமறியாமல் தனது கழுத்தை வருடியது... சத்யன் அணிவித்தச் செயின்... சுடிதாருக்குள் கிடந்ததை வெளியே இழுத்தாள்.... லாக்கெட்டை பிரித்துப் பார்த்தாள்... அருணகிரியும் சந்திராவும் நான்கு வயது சத்யனை அணைத்தபடி.. மூவரின் முகம் மட்டும் நெருக்கமாக.... கண்ணீர் அருவியாக... கரைபுரண்டோடும் ஆறாக வழிந்தது..... "சத்யா...." என்று உதடுகள் ஆழமாக உச்சரிக்க.... அந்தப் படத்தை எடுத்து தனது உதடுகளில் வைத்து அழுத்திக் கொண்டாள்..... 

இத்தனை நாட்களாக தனது தாயின் இறப்பின் அடையாளமாகத்தான் இந்த செயினை அணிந்திருந்தாள்... இன்று ஏனோ அதன் அர்த்தமே வேறாகத் தோன்றியது... அணிவித்த சத்யன் மட்டுமே தெரிந்தான்.... கண்ணீர் மறைத்த கண்களுக்குள் நிழலாய் ஒரு கம்பீர உருவம் தோன்றி அந்த செயினை புதிதாக அவள் கழுத்தில் போடுவது போல் ஒரு காட்சி.... உயிர் வரை சிலிர்த்து அடங்கியது... புதிதாக தாக்கிய உணர்வுகளின் தாக்கத்தை மான்சியால் தாங்க முடியாமல் டாய்லெட்டை மூடி அதன் மீது அமர்ந்து முகத்தை பொத்திக் கொண்டாள்....

"இந்த செயின்? இது? இது? நீ எனக்குப் போட்ட இந்த செயின் தான் எனக்கும் உனக்குமான உறவுக்கான பாலமா சத்யா? அப்படின்னா இது நீ எனக்குப் போட்ட தாலியா? என்னால முடியலையே? இதன் அர்த்தம் இன்னைக்கு தானே புரியுது சத்யா? அம்மா,, அம்மா,, இனி நான் என்ன செய்யட்டும் அம்மா? ஏதாவது வழிகாட்டேன்ம்மா".... முகத்தை மூடிக்கொண்டு புலம்பியவளின் புலம்பலைக் கேட்க வேண்டிய இருவருமே அவளருகே இல்லை... ஆனாலும் அவர்களுக்கு கேட்கும் தானே?

யாரோ வெளியேயிருந்து கதவைத் தட்டினர்... துப்பட்டாவால் சட்டென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் "ஸாரி,, ஒரு நிமிஷம் ப்ளீஸ்" என்று கதவருகே நின்று கூறிவிட்டு அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்து தனது உடைகளை சரிசெய்து கொண்டு வெளியே வந்தாள்

மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தாள்..... தனது கைப்பையிலிருந்த அம்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள்... அழகான புன்னகையுடன் சிரிக்கும் அமைதியான முகம் "யார் என்ன முடிவெடுத்தாலும் நான் என் முடிவில் இருந்து மாறமாட்டேன்ம்மா..... சத்யன் ரீத்துவுக்கு தான்... எந்த சந்தோஷமும் இல்லாம ஜடமாக வாழும் சித்திக்கு என்னால குடுக்க முடிஞ்ச சிறிய சந்தோஷம் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறது தான்.... சித்தி சொன்னது போல நான் திருமணம் ஆனவளாகவே இருந்துட்டுப் போறேன்... நிஜமும் அது தானேம்மா? எனக்குதான் ஒரு வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சே..... நான் சத்யன் மனைவி தான்... அந்த உண்மை எனக்குள்ளேயே புதைஞ்சி போகட்டும்... நான் வாழ்வேன் சத்யனை மனதில் சுமந்து என் தகப்பனுக்காக வாழ்வேன்... சத்யனுக்கு ரீத்து தான் நிஜமான மனைவியாக இருக்கட்டும்... என் முடிவில் மாற்றம் வராதும்மா" கண்ணீர் கலந்து வந்த குரலானாலும் அதிலிருந்த உறுதி மான்சி தனது நாடகத்தைத் தொடங்கிவிட்டாள் என்று கூறியது.....






" எனக்கு உருக் கொடுத்த...

“ உயிர் பூவே!

“ எனக்காக,

“ மீண்டும் ஓர் உருவம் பெற்று...

“ வந்து விட்டாயோ?

“ ஆனாலும் இப்போது நீ வேண்டுமே...

“ அம்மா,,

“ ஒரு முறையாவது..

“ உன் இடைக் கட்டி...

“ மடி சாய்ந்து....

“ நான் பட்ட துன்பமெல்லாம் கூறியழ...

“ மகளே,, வேண்டாமடி கண்ணே...

“ என கூறிவிடவாவது வந்து போய் விடேன்!!!

நெஞ்சின் கொதிப்பு அடங்கி மனதை நிலைப்படுத்தினாள்... கண்மூடி நிதானித்தாள்... உணர்வுகள் அத்தனையும் ஓர் முனைக்கு வந்தது.... இதுதான் மான்சி.... தாயின்றி அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆண்டவன் கொடுத்த அற்புதப் பரிசு நிதானம்... எத்துனை துன்பம் வந்தாலும் தன்னையிழக்காத நிதானம்.... இவளை உயிர்ப்பதும் இந்த நிதானம் தான்....

மீண்டும் மெயிலை ஓபன் செய்தாள்.... சாட்டை ஆன் செய்தாள்... அடுத்த நிமிடம் "சிமிம்மா?" என்று வந்தான் சத்யன்...

சிமிம்மா? சில்லென்று இதயத்தைத் தாக்கியது.. நிதானத்தைத் தக்கவைத்துக் கொண்டு "ஹாய் சத்யன் ஹவ் ஆர் யூ?"

அவனிடம் நிமிட நேர மவுனம்...

"இருக்கீங்களா?"

"ம்ம்,, இருக்கேன்... அதென்ன புதுசா ஹவ் ஆர் யூ? என் மெயில்லாம் பார்த்தியா? படிச்சியா? அப்புறம் எப்படி நான் நல்லாருக்கேனா என்று கேட்க முடிஞ்சுது?"

"ம் படிச்சேன்,, ஸாரி நேத்து ஒர்க் அதிகம்... ஒர்க் முடிஞ்சு வீட்டுக்குப் போக டைம் ஆகிடுச்சு அதான் கிளம்பிட்டேன்"

"எப்படி சிமி? எப்படி இவ்வளவு சாதரணமா பேச முடியுது? ஒருத்தன் காத்திருப்பான்னு கூடவா உனக்குத் தெரியாது?"

"நீ பேசறது தான் டூ மச்சா இருக்கு சத்யன்... இது ஆன்லைன்... இங்க போய் காத்திருந்தேன்னு சொல்றது ரொம்ப அபத்தம்.... எதிர் பக்கம் இருக்குறவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.... அதையெல்லாம் விட்டுட்டு உங்கக்கூட சாட் பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா?" சத்யனுக்குப் புரிய வைக்கும் நோக்கில் மிக நீளமாக மெசேஜ் அடித்து அனுப்பினாள்....

சற்றுநேரம் பொருத்து "ஓ...... அப்படியா?" என்று அவனிடமிருந்து பதில் வர... அதில் அவனது வலி புரிந்தது...

"ம் அப்படித்தான்.... தயவுசெஞ்சு இனிமேல் இப்படி சாப்பிடாமல் மெயிலை ஓபன் பண்ணி வச்சுக்கிட்டு பிடிவாதமா உட்கார்ந்திருக்காதீங்க.... எனக்கும் நிறைய வேலைகள் இருக்கும்"

மீண்டும் சில நிமிட தாமதம்..... பிறகு "சிமி,, வீட்டுல ஏதாவது பிரச்சனையாடா? மறுபடியும் வலிக்கும் படி ஏதாவது நடந்துடுச்சா? நீ இப்படிலாம் பேசுறவ கிடையாதேடா? என்னம்மா ஆச்சு? என்கிட்ட சொல்லக் கூடாதா?" 

அவனது இந்த வரிகளில் உருகிப் போனாள் மான்சி.... "அம்மா" என்று வலியுடன் உதடுகள் உச்சரிக்க "நான் ஓகே சத்யன்.... நீங்கதான் புரிஞ்சுக்காம பேசுறீங்க"

"புரிஞ்சுக்கனுமா? நீ என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு சிமி.... நேத்தெல்லாம் நான் துடிச்சத் துடிப்பு உனக்குப் புரியலையா சிமி? நான்.............."

"ஏன் புரியனும் சத்யா? நான் கவிதை எழுதுறேன்.... நீங்க அதை ரசிக்கிறீங்க... அவ்வளவு தானே நமக்குள்ள இருக்கும் ரிலேஷன்ஷிப்? இப்படி தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவது இதுபோன்ற ஆன்லைன் நட்புக்கு உதவாது சத்யன்.... ஐடியை குளோஸ் செய்தால் நாளை முதல் நீங்க யாரோ நான் யாரோ.... அப்புறம் ஏன் இந்த துடிப்பும் தவிப்பும்?... தேவையற்றது" தீர்கமான வார்த்தைகளை சுமந்து வந்த வரிகள்....

சத்யனிடமிருந்து பதிலேயில்லை.... "ஓகே சத்யன்,, நான் ஆபிஸ் ஒர்க் பார்க்கனும்... கிளம்புறேன்"

"கிளம்பு சிமி,, அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் சிமி"

"ம்ம் சொல்லுங்க"

"நீ என் உணர்வுகளை கொச்சைப்படுத்தி என்னைக் காயப்படுத்திட்ட சிமி... கிட்டத்தட்ட இருபத்துநாலு மணிநேரமா நான் தவிச்சதை வெறும் அபத்தம்னு சொல்லி என்னை காயப்படுத்திட்ட... ஐ ஹேட் யூ சிமி" என்று பதில் அனுப்பியவன் அடுத்த நிமிடம் ஆப்லைன் போய்விட்டான்....

ஐ ஹேட் யூ சிமி,, இந்த வார்த்தையை விட்டு மான்சியின் பார்வை நகரவில்லை.... வெறுத்துட்டானா? முடியுமா அவனால்? நார்மலா இரு என்று சொன்னது தவறா?

துளிர்த்த நீரை துடைத்துவிட்டு "கோபத்தை உணவில் காட்ட வேண்டாம்.. தயவுசெய்து சாப்பிடவும்... இதுவும் கடந்து போகும் சத்யன்..... உங்கள் தோழி சிமி" என்று டைப் செய்து அவனுக்கு மெயில் செய்துவிட்டு தனது வேலைகளில் மூழ்கினாள்....

நிமிர விடவில்லை அலுவல்கள்.... ஆறை கடந்து ஐந்து நிமிடமானது.... மான்சியின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.... நேற்று போல் சாப்பிடாமல் அமர்ந்திருப்பானோ? இல்லை கோபமாக என்னை உதறிவிட்டு தனது வேலைகளைப் பார்த்திருப்பானா? 

சரி கவிதைகள் பதிவு செய்யும் சாக்கில் அவன் லைக் கொடுக்க வந்தால்? அவசரமாக கவிதைகளை வடித்துப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்....


“ உலகின் சூத்திரதாரி வேண்டுமானால்..

“ ஆண்டவனாக இருக்கலாம்...

“ அவனால் உயிரை எடுக்க முடியும்..

“ ஓர் உயிரை சுமக்க முடியுமா?

“ சுமப்பாள் அம்மா...

“ கருவறையிலிருந்து கல்லரை வரை..

“ எனைச் சுமப்பாள் என் அம்மா!!


*** *** *** *** *** *** *** ***


“ அம்மா என்றால் அன்பு...

“ அம்மா என்றால் அற்புதம்..

“ அம்மா என்றால் அத்தனையும்...

“ ஆம் நான் காணும் அத்தனையிலும்..

“ என் அம்மா மட்டுமே இருப்பாள்!!


*** *** *** *** *** *** *** ***


“ என் அம்மா போல் ஒர் உறவில்லை..

“ இன்னொரு அம்மாவைத் தவிர!

“ விரல் அசைவில் எனை உயிர்க்கும்...

“ வித்தைத் தெரிந்தவள் என் அம்மா!
[color][font]




பதிவிட்ட சில விநாடிகளில் வந்தான் சத்யன் லைக் கொடுத்துவிட்டு "மனதை வருடும் அம்மா கவிதைகள்... தாயை பிரிந்திருக்கும் எனக்கு வலிக்க பிரிவின் தாக்கத்தை உணர்த்தும் கவிதைகள்... நன்றி சிமி" என்று கமெண்ட் செய்திருந்தான்....

உடனே சாட்டை ஓபன் செய்து "சத்யன்,, ஆர் யூ தேர்?" என்று அழைத்தாள் மான்சி...

"இருக்கேன்,, சொல்லு சிமி"

"நீங்க தூங்கவேயில்லை போலருக்கே சத்யன்? ப்ளீஸ் கொஞ்ச நேரமாவது தூங்களாமே?"

"ம் தூங்கனும் சிமி,, நானும் ட்ரைப் பண்றேன் தூக்கம் வரலை"

"என்ன சத்யன் இது?.... எல்லாத்தையும் சாதரணமா எடுத்துக்க முயற்சிப் பண்ணுங்க"
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 8

"ஹாஹாஹாஹா... சிமி என்னைப் போல ஜாலியானவன் யாருமில்லைனு கூட சொல்லலாம்.... ஆனா நீ வராத அந்த நிமிஷத்துலருந்து நான்?"

"ப்ளீஸ் சத்யன்... ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மீ,, இதுபோன்ற நிலை நல்ல நட்புக்கு நல்லதில்லை சத்யன்"

"ம் நட்பு? நட்பாவே இருந்திருக்கலாமேனு தான் எனக்கும் தோணுது,, ஆனால்........?."

மான்சியின் முதுகுத்தண்டு சில்லிடும் உணர்வு.... இப்போது நட்பாக இல்லையென்றால் வேறு? அதை அவனிடம் கேட்கும் துணிவு அவளுக்கில்லை.... அவனாக கூறும் நாளன்று? "நான் கிளம்பனும் சத்யன்......"

"ம் கிளம்பு சிமி.... ஜாக்கிரதையா போ சிமி"

"ம் பை சத்யன்"

"சிமி,, வீட்டுல முடிஞ்ச வரை பணிஞ்சு போய்டு.... அவங்க காயப்படுத்தும் முன் நீ கவனமா இருந்துடு.... உடலை வருத்திகாதம்மா"

நெஞ்சுக்குள்ளிருந்து ஏதோவென்று எழும்பி வந்து தொண்டையை அடைக்க விழிகளில் நீர் தழும்பியது... சில நாட்களுக்கு முன்பு அவ்வளவு வீரமாக பேசியவன்.... இன்று ஏன் இப்படியொரு அமைதி.... என் பாதுகாப்பை யோசிக்கிறானா?

"கிளம்பிட்டயா சிமி?"

"இல்ல இருக்கேன்"

"இன்னைக்கு நடந்த சாட்டை ப்ரீ டைம்ல யோசிச்சுப் பாரு சிமி,, அதன்பின் உனக்கு என்னப் புரியுதுன்னு சொல்லுவியா?"

தனியாக வேற யோசிக்கனுமா? கைப் புண்ணைப் பார்க்க எதற்கு கண்ணாடி? அதான் கண்ணெதிரே தன் காதலை கடைவிரித்து விட்டானே...

"ம்ம் பார்க்கிறேன்... பை சத்யன்.. தூங்க ட்ரை பண்ணுங்க"

"ம் பை சிமி"

அடிப்படும் போதெல்லாம் வராத கண்ணீர்... இப்போது அடிக்கடி வருகிறதே? உணர்வுகளை கட்டுக்குள் வைக்கும் எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்தும் வித்தை தெரியாமல் போனதே?




“ அன்பு அம்மா,,

“ உன்னைப் போலவே ஓர் உறவு கேட்டேன்...

“ உன்னையேக் கொண்டு ஒருவனை

“ உறவாக கொடுத்து விட்டாயே!!

“ ஏற்றுக்கொள்ள முடியா என்னவனை..

“ என் மன்னவனாக நியமித்தது நீயா அம்மா?

கவிதையை எழுதி தனது பிளாக்கில் பதிவு செய்ய நினைத்தவள்... பட்டென்று அழித்தாள்... சத்யன் இதைப் படித்தால் அப்புறம்? தனது புத்தி மழுங்கிப் போனதை எண்ணி நொந்தபடி எழுந்து வீட்டுக்குக் கிளம்பினாள்....

வீட்டுக்குள் நுழைந்தவளை கலாவின் இறுகிய முகம் தான் வரவேற்றது..... தோட்டத்துக்குப் போய் முகம் கழுவிவிட்டு வந்தவள் சித்தியின் காலருகே மண்டியிட்டாள் "நான் நீங்க வளர்த்த பொண்ணு சித்தி.... ஒரு நாளும் உங்களையும் என் தங்கையையும் வஞ்சிக்க மாட்டேன்... நம்புங்க" என்றாள் அமைதியான குரலில்...

கலா எதுவுமே பேசவில்லை.... அமைதியாக அமர்ந்திருந்தாள்.... மான்சிக்கு ஏனோ அவளைக் கண்டு பரிதாபமாக இருந்தது....

ஒன்றுமறியா உறவு தான் சத்யனுடன்... அதற்குள் எவ்வளவு கண்ணீர் எத்தனை துன்பம்? ஆனால் சித்திக்கும் அப்பாவுக்குமான உறவு? கலாவின் துயரம் இமயமாய் உயர்ந்து தெரிந்தது....

"நைட் டின்னர்க்கு என்ன செய்ய சித்தி?"

"எதையாவது செய் போ" கையை உதறிக்கொண்டு எழுந்து வெளியேப் போனாள் கலா

அமைதியாக எழுந்து சென்று இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்...... வழக்கம் போல தாமதமாக வந்த ரீத்து இன்று ஏனோ மான்சியைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்...

தங்கையின் முத்தத்தை வாங்கிக் கொண்டு தலை சாய்த்து சிரித்த மான்சி "என்னடா இது அதிசயமா இருக்கு? ஒன்னாம் தேதிக்கு இன்னும் பத்து நாள் இருக்கே? அதுக்குள்ள முத்தம்லாம் கிடைக்குதே" என்று கூறவும்...

"ஓய்,, ஏதோ அக்கா மேல அன்புல முத்தம் குடுத்தா.... நீ ஒண்ணாம் தேதினு சொல்றயா? ஓகே ஓகே இனி ஒண்ணாம் தேதி மட்டும் முத்தம் தர்றேன்" என்று கோபமாய் சிலிப்பிய தங்கையை அணைத்துக் கொண்டு "சும்மா சொன்னேன் ரீத்தும்மா,, நீ எப்ப வேணாலும் உம்மா குடுக்கலாம்...." என்றாள் மான்சி....

கையோடு தங்கையை அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து விட்டு வந்து அவளது படுக்கை விரிப்பை சரிசெய்தாள்....

அறைக்குள் நுழைந்த ரீத்துவைப் பார்த்து "கண்ணம்மா,, எனக்காக ஒரு விஷயம் மட்டும் நீ செய்தா போதும்டா" என்று கெஞ்சுதலாக ஆரம்பித்தாள் மான்சி...

புருவங்களை உயர்த்தி "என்ன செய்யனும் சொல்லு" என்றாள் தங்கை...

தங்கையின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து அவளருகே அமர்ந்த மான்சி "ரீத்தும்மா,, அம்மா சம்மந்தம் பேசியிருக்கும் இடம் ரொம்ப நல்லவங்க பெரிய இடமும் கூட.... அது உனக்கே தெரியும்"

"ஆமா,, அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கு ஒன்னுமில்லைம்மா.... அவங்க குடும்ப கௌரவத்துக்கு ஏத்த மாதிரி நீயும் இருக்கனும்டா.... ஈவினிங் டைம்ல இது போல லேட்டா வர்றது... பாய் பிரண்ட்ஸ் கூட வெளியிடங்கள்ல சுத்துறது... இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கடாம்மா... அப்பதான் நாளைக்கி உன்னைப் பத்தி அவங்க ஒரு வார்த்தை கூட பேசமுடியாது...." மான்சி ஒரு தாயாக மாறி தங்கைக்குப் புத்தி சொன்னாலும் தன்னுடைய சத்யனின் குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது....

மான்சியை கூர்ந்து பார்த்த ரீத்து "நீ சொல்றது புரியுது சிமி... ஆனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சி வரப்போறவனுக்காக நான் இப்பருந்தே விரதம் இருக்கனுமா? அது என்னால முடியாது சிமி..... அவன் வர்ற வரைக்கும் லைப்பை என்ஜாய் பண்ண விடு சிமி..." தீர்மானமாக சொல்லிவிட்டு கட்டிலில் கால் நீட்டி படுத்துவிட்டாள்.....

மான்சிக்குப் புரிந்தது.... ஆனால் அது அந்த குடும்பத்துக்குப் போகவேண்டிய பெண்ணுக்கு அழகா,, அதுவும் சத்யனுக்கு மனைவியாக வேண்டியவளின் உன்னதம்? பெருமூச்சை அடக்கிவிட்டபடி எழுந்து வெளியே வந்தாள்.....

சித்தி எப்போதும் போல் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட.. தகப்பனும் மகளும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.... பிறகு தோட்டத்தில் சற்றுநேரம் உலாவினார்கள்.... கூடத்தில் தகப்பனுக்குப் படுக்கை விரித்தவள் அவரின் கால்களைப் பிடித்து விட்டபடி "அப்பா நாளை மதியம் நான் லீவு போட்டிருக்கேன்.... உங்க ஆபிஸ்க்கு வருவேன்... கொஞ்சம் பேசனும் அப்பா" என்ற மகளை உற்று நோக்கியவர்.... "என்னடாம்மா?" என்று கேட்க..

"நாளை சொல்றேன்ப்பா... இப்ப தூங்குங்க" என்று அவரின் பாதங்களை அழுத்திவிட்டு உறங்க வைத்தாள்....

கூடத்திலிருந்த தாயின் படத்தை நோக்கி கைகூப்பி விட்டு தனது படுக்கயில் படுத்தவளை தூக்கம் துறத்தி விளையாடியது....

எப்போதும் போல் காலை அலுவலகம் சென்றாள்... அத்தனை வேலைகளையும் கவனித்தாள்... மதியம் விடுமுறை என்பதால் கவணிக்க வேண்டிய அலுவல்கள் ஏராளமாக இருந்தன.....

சத்யன் காத்திருப்பானே என்ற எண்ணம் மனசை செல்பிடத்த மரப்பலகையாய் அரிக்க ஆரம்பித்தது... நேரம் ஆக ஆக செய்யும் வேலைகளில் தவறுகள் வந்தன.... அவனுடன் ஒரு வார்த்தையாவது பேசினால் தான் மனம் அமைதியடையும் என்ற நிலையில்... மதியம் ஒரு மணியளவில் மெயிலை ஓபன் செய்தாள்...

சத்யனிடமிருந்து ஒரே ஒரு மெயில் மட்டும்... திறந்து வாசித்தாள்....

"தூங்கமாட்டேன்... நீ வரும் வரை விழித்தேயிருப்பேன்.. வந்ததும் கூப்பிடு வருவேன்"

இந்த இரண்டு வரிகளில் தான் எத்தனை காதல்? இளகிய நெஞ்சத்தை இரும்பாக்கிக் கொண்டு சாட்டை ஓபன் செய்து "ஹாய் சத்யன்" என்று அனுப்பினாள்...

அடுத்த நொடியே வந்தான் "வந்துட்டயா சிமி?"

"ம்ம்,, ஸாரி ஆபிஸ்ல ஒர்க் அதிகம்... அதான் லேட்"

"பரவால்ல சிமி,, ஞாபகம் வந்து கூப்பிட்டதுக்கு தாங்க்ஸ்"

"இன்னும் கொஞ்ச நாள் இப்படித்தான் போகும் போலருக்கு சத்யன்... சொல்ல வேண்டியதை மெயிலா அனுப்பிட்டு எனக்காக காத்திருக்காம நீங்க தூங்குங்க..."

"உன்கூட பேசாமல் தூக்கம் வராதே? அதான இப்போ பெரிய பிரச்சனையே?" அசட்டுத்தனமாய் சிரிக்கும் பொம்மையொன்று கூடவே....

"நீங்க மாறனும் சத்யன்,, நடப்பை புரிஞ்சுக்கனும்"

"ம்ம், அது பார்க்கலாம்... நான் இப்போ ஒண்ணு கேட்டா மறுக்காம தரனும்..."

என்ன கேட்கப் போகிறான்? உதறலோடு "என்னன்னு சொல்லுங்க மறுபதும் மறுக்காததும் பிறகு தான்"

"ம்,, எனக்கு உன்னை கான்டாக்ட் செய்ய ஏதாவது ஒரு நம்பர் வேணும் சிமி.... நீ வராத நாட்களில் முள்மேல அமர்ந்தது போல தவிக்கிறதை விட.... ஒரு போன்கால் மூலமா என்னாச்சுனு தெரிஞ்சுகிட்டு நிம்மதியா இருக்கலாமே சிமி? அதுக்கு தான் கேட்டேன்"

அவனது மெசேஜை படித்தவள் அதிர்ந்து போனாள்... நமக்குள் எதுவுமே இருக்கக் கூடாது என்று எண்ணும் போது கான்டாக்ட் நம்பரா?.

"ப்ளீஸ் சிமி,, நான் தவறா பயன்படுத்த மாட்டேன்.... நீ வராத நாட்களில் ஒரு தகவலுக்காக மட்டும் தான் சிமி" சோகமான ஸ்மைலி ஒன்று கூடவே வந்தது.

"இல்ல சத்யன்... இப்படி நம்பர் கொடுப்பது எனக்க சரியாக வராது... மன்னிச்சிடுங்க... என்னைப் பற்றிய எந்த தகவலும் உங்களுக்கு தர இயலாது"

"ப்ளீஸ் சிமி"

"சத்தியமா முடியாது... என் குடும்ப நிலவரத்துக்கு இதுபோல் சாட் செய்வதே பெரும் குற்றமாகப் போய்விடும் இதுல கான்டாக்ட் நம்பரா? ம்ஹூம் நிச்சயம் முடியாது"

"என்னை நம்பலையா சிமி?"

"இதுல நம்பிக்கைக்கு இடமேயில்லை சத்யன்... நான் ஒரு பெண்... எனது வாழ்க்கை நிலைமை அப்படி... நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்"

சத்யனிடத்திலிருந்து பதில் இல்லை....

"ஓகே சத்யன் நான் வெளியே கிளம்பனும் மதியம் லீவு... இதோடு நாளை காலை தான்... ஈவினிங் தேடாதீங்க வரமாட்டேன்"

"ஓ...... மதியம் லீவா? ஏதாவது விசேஷமா சிமி?"

"ம் விசேஷம் தான்... ஆனால் யாரிடமும் பகிர முடியாத விசேஷம்..."

"யாரிடமுமா... அல்லது என்கிட்ட மட்டுமா? ஹாஹாஹாஹா எனக்கும் புரிஞ்சுக்க கூடிய அறிவு இருக்கு சிமி.... ஓகே அப்போ ஈவினிங் கவிதை கிடையாதா? அப்படின்னா இப்பவே ஒரு கவிதை சொல்லிட்டுப் போயிடு" சல்யூட் வைக்கும் பொம்மையோடு பணிவாகக் கேட்டான்...

"ம்ம் ப்ளீஸ் வெயிட்"

"காத்திருக்கிறேன் கவிக்குயிலே" சிரிக்கும் பொம்மையொன்று கூடவே...
சில நிமிட அமைதிக்குப் பின்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply
“ காலன் கொண்டு சென்ற நீ

“ மீண்டும் கருவாகி உருவானால்...

“ என்னுள் தான் அந்த உற்சவமும்....

“ உனது ஆனந்த ஊர்வலமும்...

“ நடைபெற வேண்டும்

“ உனக்கு நான் உயிர் தரவும்,

“ எனக்கு நீ உறவாகவும்!

“ இந்த வரம் மட்டும் போதும் தாயே!

“ வாழ்ந்து விடுவேன் உலகில்!!!


எழுதிய கவிதையை சாட்டில் போட்டாள்.....

"அருமை சிமி,, ரொம்ப ரொம்ப அருமை..... ஆனால் இதன் அர்த்தம்? உன் தாயை நீ வயிற்றில் சுமக்கனும் என்பது தானே... உனக்குள் உன் அம்மா கருவாகி உருவாவது உற்சவம் தான்..."

உடனே அர்த்தம் கண்டு கொண்டானே? "ம்ம்"

"வெகு விரைவில் அந்த ஆனந்த உற்சவம் நடைபெற வாழ்த்துகிறேன் சிமி" நிறைய சிரிக்கும் பொம்மைகள்....

மான்சியால் பதில் சொல்ல முடியவில்லை... அவள் நிர்ணயித்திருக்கும் கன்னி வாழ்வில் அம்மா வந்து கருவாவது எப்படி? இன்று ஏன் இப்படியொரு கவிதை வந்ததென்றே அவளுக்குப் புரியவில்லை... அதுவும் சத்யன் கேட்டதும் எழுதியது இதயத்தை இம்சித்தது...

"நான் கிளம்பறேன் சத்யன்"

"ம் கிளம்பு சிமி.... உன் கவிதை கொடுத்த தாக்கத்தில் கனவுகளோடு தூங்கப் போகிறேன்" துள்ளி குதிக்கும் பொம்மை ஒன்று...

"ம் பை" என்பதோடு ஆப்லைன் வந்தாள்.... நெஞ்சில் இருப்பதுதான் நினைப்பில் வந்ததோ? நினைப்பில் தங்கியது தான் கவிதையாக விழுந்ததோ?

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பேருந்தில் ஏறி அப்பாவைக் கான பயனமானாள் மான்சி.....

ரயில்வே ஸ்டேஷன் சென்று பத்ரியின் அலுவலகம் சென்றபோது மகளுக்காக காத்திருந்தார் பத்ரி... மகளைக் கண்டதும் முகம் மலர வந்து கையைப் பற்றிக் கொண்டு "நீ வருவேன்னு இன்னும் சாப்பிடலைடா.... வா கேன்டீன் போய் சாப்பிடலாம்" என்று மகளுடன் நடந்தார்...

"நானும் உங்க கூட சாப்பிடனும்னு கொண்டு வந்த சாப்பாடை ஆயாக்கிட்ட குடுத்துட்டேன்பா..." புன்னகைப் பூவாய் பேசிய மகளை எண்ணி பூரித்தவாறு கேன்டீனுக்குள் நுழைந்தார்...

உணவு ஆர்டர் செய்து ஏதேதோ கதைகள் பேசியபடி இருவரும் சாப்பிட்டனர்.... வெளியே வந்தவரை கைப்பிடித்து ஒகுக்குப் புறமாக கிடந்த பெஞ்சுக்கு அழைத்துச் சென்றாள் மகள்.....

அமர்ந்ததுமே "என்னம்மா பேசனும்?" என்று பத்ரி ஆரம்பிக்க..... "ம் ம் பேசனும்ப்பா... முக்கியமான விஷயம் பேசனும்... அதுக்கு முன்னாடி உங்க மகளை நீங்க நம்புறீங்க தானே?" என்று மான்சி கேட்கவும்..

சட்டென்று பதறியவராக "என்னம்மா இப்படி சொல்ற? உன்னை நம்பாம இந்த உலகத்துல வேற யாரை நம்புவேண்டா கண்ணா?" உணர்வசப்பட்டு பேசியவரின் கண்ணீர் சிதறியது...

"அப்படின்னா நான் எடுக்கும் முடிவுகளுக்கும் நடக்கப் போகும் சம்பவத்துக்கும் நீங்க சம்மதிக்கனும்"

"நீ என்ன விஷயம்னு சொல்லும்மா" அவசரப்படுத்தினார் பத்ரி...

"அப்பா,, ரயில் விபத்தில் நாம சந்திச்ச அருணகிரி பேமிலிக்கு சித்தி கால் பண்ணி பேசியிருக்காங்க.... அவங்களோட மகன் சத்யன்ற சின்னுவுக்கு நம் ரீத்துவை கல்யாணம் செய்து தர்றதா சொல்லிருக்காங்க... அவங்களும் எங்களுக்குத் தேவை பத்ரி குடும்பத்து சம்மந்தம் தான்னு சொல்லி சத்யன் ரீத்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லியாச்சு... மாப்பிள்ளை கலிபோர்ணியாவில் படிச்சிக்கிட்டு இருக்காராம்.. படிப்பு முடிஞ்சி அடுத்த வருஷம் வந்ததும் மேரேஜ் வைக்கனும்னு பேசிருக்காங்கப்பா" என்று மான்சி சொல்லவும்....

"ஓ......... இப்ப நான் என்ன செய்யனும்" என்று விரக்தியாகக் கேட்டார் பத்ரி.....

"அப்பா,, ப்ளீஸ்ப்பா மூணாவது மனுஷன் மாதிரி பேசாதீங்க... ரீத்து உங்க மகள்,, உங்க ரத்தம்ப்பா.... அவளோட எதிர்காலத்தில் உங்களுக்கும் முழு அக்கறை இருக்கனும்... இந்த கல்யாணம் சம்மந்தமா நீங்க தான் எல்லாம் பேசனும்" சற்று கோபமாகவே பேசினாள் மான்சி..

"நீ சொல்றது சரிதான்,, ரீத்து என் மகள் தான்.... அவளோட எதிர்காலத்தில் எனக்கும் அக்கறையிருக்கனும் தான்.... ஆனா அவளுக்கு மூத்தவள் நீ இருக்கியேம்மா? உன்மேல அக்கறைப் பட யாருமில்லையே?" பத்ரியின் கண்ணீர் வார்த்தைகள் மான்சியை கலங்க வைத்தது...

ஏன் இல்லை? எனக்காக அழ... என் சந்தோஷமே தனது வாழ்க்கைனு நினைக்க ஒருத்தன் இருக்கானே..... சத்யன்... ஒரு வயசுலயே எனக்கு புருஷனா என் அம்மாவால் பதிவு செய்யப்பட்ட என் சத்யன் எனக்காக அழுவானே......

எண்ணங்கள் கொடுத்த இறுக்கத்தில் கண்கள் குளமாக "என்னை விடுங்கப்பா... இப்போ ரீத்துவோட லைப் தான் முக்கியம்.... சித்திக்கு இந்த சம்மந்தத்தை முடிச்சே ஆகனும்னு இருக்காங்க.... அவங்களுக்காக நாம நிறைய கடன் பட்டிருக்கோம்ப்பா" என்ற மான்சி பார்வையை வேறு புறம் திருப்பி சன்னமான குரலில் "புருஷனோட அன்பில்லாம ஒரு பெண் வாழ்றது எவ்வளவு கொடுமை தெரியுமாப்பா? அந்த கொடுமையை இருபது வருஷமா அனுபவிக்கிறாங்க சித்தி.... அவங்களுக்கு சந்தோஷம் ரீத்துவோட கல்யாண வாழ்க்கை தான்... நாம அதையாவது சரியா பண்ணலாமே அப்பா?" மான்சியின் வார்த்தைகள்ல் வழக்கம் போல அமைதி தான்.... ஆனால் அந்த வார்த்தைகளின் வீரியம் பத்ரியை குமுற வைத்தது....
சற்றுநேரம் அங்கே வார்த்தையாடல்கள் இல்லை.... அமைதியின் ஆதிக்கம் அதிகமாக... அதை கிழித்து "புரியுது சிமிம்மா.... நான் செய்றேன்ம்மா... நீ சொல்ற எதையுமே நான் செய்றேன்ம்மா.... அதுக்கு முன்னாடி நீ எனக்கொரு வாக்கு குடுக்கனும்" என்று தனது கையை நீட்டினார்...

திகைப்பில் விழிகள் விரிய "என்ன வாக்குப்பா?" என்று கேட்டாள் மகள்...

"ரீத்துவுக்கு இதே இடத்தில் கல்யாணம் செய்துடலாம்.... அதுக்குப் பிறகு நீயும் ஒரு நல்லவனைப் பார்த்துக் கல்யாணம் செய்துக்கனும் சிமிம்மா.... எனக்காக தனிச்சு வாழ்றேன்னு சொல்லக்கூடாதும்மா" என்று கேட்டதும்...

மான்சிக்கு அதிர்ச்சி தான்... அந்த அதிர்ச்சியையும் மீறி ஒரு ஆறுதல்,, ரீத்துவின் திருமணத்திற்குப் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்னது ஆறுதல்.... அதைப் பிறகு சமாளிக்கலாம் முதலில் ரீத்து கல்யாணம் என்ற யோசனையுடன் "சரிப்பா நிச்சயம் நீங்க சொல்ற மாதிரி செய்றேன்" என்றாள்...

பத்ரியின் முகத்தில் சந்தோஷம் முகாமிட மகளின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்....

தகப்பனின் சந்தோஷம் கண்ணீரைக் கொடுக்க... அதை சிரமப்பட்டு மறைத்தபடி "எல்லாம் சரிப்பா.... ஆனா சித்தி சொன்னப் பொய் கடைசி வரை மெயிண்டெய்ன் ஆகனும்... இல்லேன்னா மொத்த குடும்பத்துக்கும் அவமானம் தான்" என்று மான்சி கூற....

"சரிம்மா,, ரீத்துவோட கல்யாணம் முடிஞ்சப் பிறகு அவங்களுக்கு உண்மை தெரிஞ்சிட்டா மட்டும் அவமானம் வராதா?" கூர்மையாக கேட்டார் பத்ரி...

"அதை பிறகு பார்க்கலாம்ப்பா... அப்போ சமாளிக்கிறதுக்கு ஒரு வழி தோணாம போய்டாது.... இப்போ எனக்குத் தேலை சித்தியோட நிம்மதி,, அதுக்கு ரீத்துவோட கல்யாணம்... அவ்வளவுதான்" என்று எழுந்து கொண்டவள் "மறந்தும் நான் கன்னிப்பெண்னு அவங்களுக்குத் தெரியக் கூடாதுப்பா" என்று எச்சரிக்கை செய்தாள்....

செயலற்ற சம்மதத்தோடு தலையசைத்தபடி பத்ரியும் எழுந்து கொண்டார்.... இருவரும் அமைதியாக நடந்து வந்து அவரவர் பாதைகளில் பிரிந்தனர்

"வீட்டுக்காம்மா போற" என்று மகளை கேட்டார் பத்ரி "ஆமாப்பா" என்று கூறிவிட்டு கிளம்பினாள்....

வீட்டுக்குச் சென்றவளை கேள்வியாக நோக்கினாள் கலா..... சிரிப்பும் சந்தோஷமுமாக சித்தியை நெருங்கியவள் "அப்பாக்கிட்ட பேசியாச்சு சித்தி... அவருக்கு முழு சம்மதம்... நீங்க அவங்க கூட பேசி ஒரு நல்லநாள் பாருங்க.. அப்பாவை வச்சு எல்லாத்தையும் பேசிடலாம்" என்று கூறியவளை சிறு புன்னகையுடன் பார்த்தாள் கலா...

"மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்கார்ல... அதனால நிதானமாவே பேசலாம்னு சொல்லிருக்காங்க" என்று கலா சொல்லவும் "அதுவும் சரி தான் சித்தி... நிச்சயம் செய்து ரொம்ப நாள் காத்திருக்கக் கூடாதில்லையா?... கல்யாணத்துக்கு மூணு மாசம் இருக்கும் போது நிச்சயம் செய்தா ஓகே தான்" என்றாள் மான்சி

பேச்சற்ற தலையசைப்புடன் தனது அறைக்குள் போய்விட்டாள் கலா....

சித்தியின் முகத்தில் சிரிப்பைக் காண தன் வாழ்க்கையையே பணயம் வைத்திருப்பது புரிந்தாலும் சித்தி சிரிக்க வேண்டுமே?






“ அப்பாவுக்கு மனைவியென..

“ வந்தவள் தான் உன் தாய் என்று,

“ ஊர் சொல்ல கேட்டேன்!

“ உரிமையோடு உன்னை அழைத்த

“ அந்த நாட்கள் மட்டுமே.........

“ இன்றும் பசுமையாய் இருக்கிறது!

“ மீண்டும் உன்னை அம்மாவென்று..

“அழைக்கும் நாள் வருமா?
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 9

மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு இணையத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.....

வழக்கம் போல அலுவல்கள் முடித்து பணிரெண்டு மணி வாக்கில் தனது மெயிலைத் திறந்தாள்... சத்யனிடமிருந்து ஏராளமான மெயில்கள் வந்திருந்தன... ஒவ்வொன்றாக திறந்தாள்.....

எல்லாம் புகைப்படங்கள்... சத்யன் மட்டும் தனியாக சில படங்கள்..... அம்மா அப்பாவுடன் சில படங்கள்..... எண்ணற்றப் படங்களில் அவளின் எண்ணத்தின் நாயகன்.... வித விதமான போஸ்களில் அழகனாக ஆணழகனாக சத்யன்.... பிரமிப்பு நீங்காது பார்த்துக் கொண்டேயிருந்தாள்

கடைசியாக ஒரு மெயிலில் அவனது பெங்களூர் வீட்டு முகவரி தொலைபேசி எண்... பின்னர் அவன் கலிபோர்னியாவில் தங்கியிருக்கும் வீட்டின் முகவரி அவனது கைப்பேசி நம்பர் படிப்பு மற்றும் அவர்களது குடும்ப தொழில் விபரம் என எல்லாவற்றையும் விளக்கமாக எழுதிவிட்டு கடைசியா "என்னை இப்போதாவது நம்ப முடிகிறதா சிமி?" என்று கேட்டிருந்தான்...

மான்சியின் இதயம் நிமிடத்தில் குலுங்கிப் போனது.... உன்னை நம்பாமல் இந்த உலகத்தில் வேறு யாரை நம்புவேன் சத்யா?.... என்று இதயம் ஓசையின் கதற... மானிட்டரில் தெரிந்த தனது காதலனின்... கணவனாக வரித்துக் கொண்டவனின் படத்தையே உற்றுப் பார்த்தாள்...

எத்தனை அழகு என்னவன்? அடர்ந்த கிராப்பை கலைத்துவிட்டிருக்கும் ஸ்டைல்..... ஆங்கிலேயனைப் போல் அகன்ற நெற்றி.... அதில் குத்தீட்டியாய் கூர்ந்து நோக்கும் கண்கள்.... அரேபியனைப் போன்ற கத்தியாய் நேர் நாசி.... தாடையில் ட்ரிம் செய்யப்பட்ட இருநாள் ரோமம் அவனுக்கு அழகாய்...... தடித்த உதடுகளில் நிக்கோடினின் தடங்கள்.... அகன்ற மார்பும் விரிந்த தோள்களும் அவனது உடற்பயிற்சியைக் கூற... ஆண்களுக்கே அவன் உயரமென்பதை அத்தனைப் புகைப்படமும் சொன்னது.... எத்தனையோ விதமான உடைகளில் அவனது உருவம்....

அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார்ப்போல் பட்டுவேட்டி சட்டையில் ஏதோவொரு கோவிலில் பெற்றோருடன் இருந்த படம் அவளது இதயத்தைக் கொள்ளைகொண்டது....

இவனுடன் வாழும் பாக்கியம் தனக்கில்லை என்ற வெறுமை நெஞ்சை அடைக்க கண்ணீர் துளி தன்னைக் காட்டிக் கொடுக்காதவாறு அடக்கிக் கொண்டு கொள்ளையடித்தவனை இதயக்கூட்டுக்குள் வைத்து அடைத்து விட்டு சாட்டை ஆன் செய்தாள்....



அவளுக்காகவே காத்திருந்தவன் போல் உடனே வந்தான் "என்ன மேடம்,, நான் தேறுவேனா?"

"எதுக்கு தேறணும்? இங்கே என் இன்ட்டர்வியூவா நடக்குது?"

"ம்ம்,, சொன்னாலும் சொல்லாடியும் கூட இது இன்ட்டர்வியூ தான்.... வாழ்க்கைக்காக நடக்கும் இன்ட்டர்வியூ"

"உளறாதீங்க சத்யன்"

"உளறல் இல்லை சிமி இது உண்மை... என் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் தேர்வு இது.... சொல்லு சிமி நான் எப்படியிருக்கேன்?"

அவன் கேள்வியின் அர்த்தம் உள்ளுக்குள் சென்று உரசிப் பார்த்தது "ம்ம் நல்லா தான் இருக்கீங்க சத்யன்... நல்ல பேமிலியும் கூட... உங்களை மேரேஜ் செய்துக்கப் போகும் பெண் கொடுத்து வைத்தவள்"

"ம்ம் தாங்க்ஸ் சிமி... அவதான் யார்னு தெரிஞ்சி போச்சே.... அதனால இந்த வாழ்த்தை நீ நேரடியாகவே சொல்லலாம்"

மான்சியின் அடிவயிறு தடதடக்க ஆரம்பித்தது.... கடவுளே இவனை அடக்க வழியில்லையா? இவள் கடவுளுக்கு கோரிக்கை வைக்கும் போதே அவனிடமிருந்து மெசேஜ் "சிமி நான் ஒண்ணு சொல்லனும்"

"ம்ம் சொல்லுங்க" விரல்கள் நடுங்க டைப் செய்தாள்....

"நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் சிமி... இத்தனை நாளா நெஞ்சுக்குள்ள வச்சுக்கிட்டு தவிச்சத்துக்கு இன்னைக்கு தான் முடிவு வந்திருக்கு" ஹாப்பி பொம்மையுடன் அவனது சந்தோஷ வரிகள்

"ம்ம்"

"என்னடா? நான் என்ன சொல்லப் போறேன்னு உன்னால யூகிக்க முடியுதா?"

"இல்ல... தெரியலை"

"நீ நடிக்கிறடி கள்ளி... உனக்குத் தெரியும் என் மனசு... ஆனாலும் என் வாயால அதை சொல்லனும்னு ஆசைப்படுற தானே?" லவ் ஸ்மைலி ஒன்று

"இல்ல சத்யன் எனக்கு நிஜமாவே புரியலை... தெரியலை"..... எவ்வளவு பெரிய பொய்

"ஓகே நீ நடிக்கிறேன்னு உனக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்.... இப்ப நானே சொல்லிடுறேன்"

"ம் சரி"

"சிமி.... நான் உன்னை விரும்புறேன் சிமி.... உயிருக்குயிறா நேசிக்கிறேன்.... ஐ லவ் யூ சிமி"

சொல்லியே விட்டான்... அவளின் சத்யன் தன் காதலை சொல்லியே விட்டான்.... இதயம் வெடித்து கதற வேண்டும் போல் இருந்தது தலையில் அடித்துக்கொண்டு தனது துயர் தீர ஓலமிட வேண்டும் போல் இருந்தது.... எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத நிகிழக்கூடாத கொடுமையிது... உயிர் காதலை அவளே மறுக்க வேண்டிய கொடுமை....

அலுவலகத்தில் அத்தனை பேரும் மதிய உணவிற்காக சென்றுவிட உண்மையாகவே கண்ணீர் விட்டு கதறியழுதாள்...

‘அம்மா என்ன வாழ்க்கையம்மா இது? நான் கேட்டேனா இப்படியொரு சம்பவப் பிணைப்பை... ஏனம்மா இத்தனை முடிச்சுகள் என் வாழ்வில் மட்டும்.... நீ நிறைந்த நீரோடு என்னையும் அழுத்தியிருக்கலாமே அம்மா,, காப்பாற்றிவிட்டு கடும் துன்பத்தைக் கொடுத்துவிட்டாயே? உன் பிஞ்சு மகள் இத்தனை சுமையை சுமப்பேனா என்று நீ யோசிக்க மறந்ததேனம்மா??’
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அழுதவளை அழைத்தான் அவள் காதலன் "என்னடா ஷாக் ஆகிட்டயா?.. ஆனால் நிஜம் தானே சிமி?"

பதில் செய்யவில்லை மான்சி

"சிமி,, ஏதாவது பேசு சிமி.... ஒரு மாதிரியா இருக்கு சிமி... ஒரு வார்த்தை சொல்லேன்"

பேச வேண்டும்... பேசித்தான் ஆகவேண்டும்... இதை வளரவிட்டால் எத்தனை ஆபத்து? விரல்கள் டைப் செய்தன.... அன்று இவன் பெற்றோருக்கு இவள் சித்தி கூறியதையே இன்று இவனுக்கு கூற விளைந்தாள்

"முட்டாள்தனமான கூற்று சத்யன்... நான் திருமணமானவள்..... எனக்கு கணவர் இருக்கிறார்..... நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பழகியது எனது தவறுதான்... இனி வேண்டாம்.... பை சத்யன்" என்று அனுப்பிவிட்டு அவனது பதில் வரும் முன் ஆப்லைன் போனாள்......

விதி என்பது கடவுளின் கையிலிருக்கும் விளையாட்டு பொம்மை போலிருக்கு... அவர் இஷ்டத்துக்கு விதியை அசைக்க... அந்த விதி மனிதனை அசைத்துப் பார்க்கிறது...

மான்சியின் பதிலைப் படித்த அடுத்த நிமிடம் "இல்லை... இல்லை சிமி சொல்றது பொய்.. பொய்... பொய்" என்ற பெரும் அலறலோடு தனது லாப்டாப்பின் மீது சாய்தான் சத்யன்...



" கண்களில் நிறையாமல்....

" கருத்தினில் பதிந்தவளே,,

" அன்று,, உன் தாய்கான வரிகளில்...

" நான் என்னை இழந்தேன்...

" இன்று என் காதலுக்கான வரியில்..

" நான் நிதானம் இழந்தேன்...

" இனி என் உயிரை இழப்பது..

" உனது வரிகளில் இல்லை..

" வாழ்க்கையில் மட்டுமே!
அசையும் அத்தனையும் அசையாமல் நின்றுவிட்ட அதிசயம் நிகழ்ந்தது சத்யனின் உலகில்.... அத்தனையும் அப்படியே நின்றுவிட அவனது இதயம் மட்டும் அதி வேகமாக துடிக்கக் கண்டான்.....

அவசரமாய் நெஞ்சில் கைவைத்து அழுத்திப் பிடித்துத் துடிப்பை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்... அந்த முயற்சியில் கண்ணீர் மட்டுமே பெருகியது... அழுகிறோம் என்று உணர்வு சொல்ல இன்னும் அழு என்று மனம் சொல்லக் கேட்டான்....

காதலில் உதாசீனம் இத்தனை உயிர் வலியா?

மீண்டும் அவன் சிமி அடித்து அனுப்பிய அந்த உயிரெழுத்துக்களை வாசித்தான்... எழுத்துக்கு ஓர் உயிரைக் கொல்லும் சக்தியுண்டா? இதோ கொல்கிறதே உயிர் மெய் எழுத்துக்கள் சேர்ந்து அவன் உலகை இருட்டடித்து விட்டதே...

"நான் திருமணம் ஆனவள் சத்யன்" மறுபடியும் பல முறை வாசித்தான்... அவள் பொய்யுரைப்பதாகவே மனதுக்குத் தோன்றியது...

விரல்களின் நடுக்கத்தை நிதானத்துக்கு கொண்டு வந்து கீபோர்டில் வைத்தான் "நீ....... நீ பொய் சொல்ற சிமி"

சற்றுப் பொருத்து சிமியின் பதில் டிஜிட்டல் எழுத்துக்களில் வந்தன "பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன சத்யன்?..... உங்களிடம் ஆறுதல் தேடியது காயம் பட்ட என் மனம் தான் சத்யன்... என் உடல் அல்ல... ஆன்லைன் என்பது ஊமைகள் நடத்தும் நாடகம் போன்றது... வெறும் எழுத்துக்களை வைத்து எதிரில் இருப்பவரை நிர்ணயம் செய்யமுடியாது..... எதை வைத்து என் மீது காதல் வந்தது என்று கூறுகிறீர்கள்?" 

மிக நேர்த்தியான பதில்..... வாசித்த சத்யனின் உதட்டில் விரக்திச் சிரிப்பு "எதை வைத்து நேசம் வரும் சிமி? என் மனம் சொன்னது... நீ தான் எனக்கேற்றவள்னு... உன் ஏக்கத்தை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்னு என் மனம் சொன்னது சிமி"

"முட்டாள் மனம்,, நான் யார்? என் பெயர் நிஜமா? அழகா? அசிங்கமா? என் வாழ்க்கை முறையென்ன? அதில் யார் யார் இருக்கிறார்கள் இப்படி எதுவுமே தெரியாமல் காதலிக்கிறேன் என்று உங்களுக்குச் சொன்ன உங்கள் மனம் ஒரு முட்டாள் சத்யன்"

"ம் ம் முட்டாள் தான் சிமி,, நான் முட்டாள்... என் மனமும் முட்டாள்.... ஆனால் அதிலிருக்கும் நேசம் நிஜமடி பெண்ணே.... என் உயிர் நேசம் நிஜமடி பெண்ணே.... நீ அசிங்கமாகவே இருந்துவிட்டுப் போ... யாருக்கு வேண்டும் உன் அழகு? உன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. எனக்கு சிமி என்ற பெயர் போதும்.... உன் வாழ்வு எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... அந்த வாழ்வை உயிர்க்க என்னால் மட்டும் தான் முடியும் சிமி.... என் காதலை உன் இதயத்தில் வைக்காவிட்டால் பரவால்லை... காலடியில்... உன் காலடியில் வைத்துக்கொள்... ஒரு நாயைப் போல நன்றியுடன் உன்னைச் சுற்றிவரட்டும்" உள்ளத்துக் குமுறல்களையெல்லாம் வார்த்தைகளாக வடித்து விரிகளாக மாற்றி அவளுக்கு அனுப்பினான்....

நெடுநேரம் கழித்து அவளிடமிருந்து பதில் வந்தது "ப்ளீஸ் சத்யன் நிதர்சனத்தைப் புரிஞ்சுக்கங்க"

"எது நிதர்சனம் சிமி? என் மெசேஜ் பார்த்துட்டு இப்போ நீ அழுதியே அதுதான் நிதர்சனம்"

"அய்யோ நான் அழலை... நான் ஏன் அழனும் சத்யன்... அழவில்லை"

"நீ ஏன் அழனும்? அதை உன் மனதிடம் கேள் சொல்லும்... அல்லது அதற்குள் இருக்கும் என்னிடம் கேள்... நீ அழுத காரணத்தைச் சொல்லும்"

"என்ன சத்யன் இவ்வளவு பிடிவாதம்?"

"இதுக்குப் பெயர் பிடிவாதமில்லை சிமி..... என் வாழ்க்கை..... இப்போ தொலைச்சிட்டா பிறகு அது கிடைக்கும் போது நானிருக்க மாட்டேனே?"

"சத்யன் மறுபடியும் சொல்றேன்..... இதுபோல் ஆன்லைன் காதல் அத்தனையும் ஒருவித மாயை... இனக்கவர்ச்சி...... எதிர்பக்கம் இருப்பது வேறு பாலினம் என்பதால் ஏற்படும் ஒருவித கவர்ச்சி தான் இது.... தொடர்ந்து சில நாட்கள் பார்க்காமல் இருந்தால் மாறிவிடும் இந்த மாயை.....



"ஹாஹாஹாஹா கவிதாயிணி ஆச்சே.... உனக்கு பேசவா தெரியாது? ஆனா சிமி நீ சொல்ற இதெல்லாம் நிஜமா நேசிக்கிறவனுக்குப் பொருந்தாது..... கற்சிலையாக இருந்த கண்ணனை காதலித்த மீராவுக்கு எந்த ஆன்லைனும் உதவி செய்யலை.... அதுபோல் தான் என் காதலும் இந்த ஆன்லைன் இல்லாவிட்டாலும் நான் உன்னை நேசிப்பேன்...."

"அது உங்களோட தலைவலி,, எனக்குத் தேவையற்றது.... நான் திருமணம் ஆனவள் என்பது மட்டும் நிஜம்.... அதை மனதில் வைத்து பேசுங்கள்"

"எனக்கு சில சந்தேகங்கள் சிமி,,

"என்ன சந்தேகம் கேளுங்க,, தெரிஞ்சதை சொல்றேன்"

"எனக்கு சந்தேகமே நீ சொல்வதில் தான் சிமி,, நீ திருமணம் ஆனவள்னு சொல்ற ஓகே,, ஆனா உனது கவிதைகள் அத்தனையும் அம்மா இருந்தாங்க... அம்மாவைப் போல ஒரு உறவைத் தேடும் தேடல் இருந்தது... ஒரு கவிதையில் கூட உன் கணவனோ(?) அவன் மீதான காதலோ இல்லையே? இதிலே தெரியுதே நீ சொல்வது எத்தனைப் பொய்னு" நாக்கைத் துருத்தி ஏளன் செய்யும் பொம்மையின் படத்துடன் மெசேஜை அனுப்பினான்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உடனடி பதில் இல்லை...

"என்ன சிமி? எதை சொல்லி சமாளிப்பதுன்னு யோசிக்கிறயா?"

"நான் ஏன் சமாளிக்கனும்? ஆபிஸ்ல சின்ன ஒர்க் வந்துடுச்சு"

"ஓ.......... சரி சரி..... என் கேள்விக்கென்ன பதில்?"

"பதில்? ம்ம் சொல்றேன்..... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் கேட்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க சத்யன்"

"என்ன விஷயம் கேளு?"

"புருஷன் அப்படின்னு வர்ற அத்தனை பேரும் எத்தனைப் பெண்களுக்குத் தாயாக இருக்கிறாங்க? காதலைக் காட்டும் சிலருக்குத் தாய்மையைக் காட்ட முடியாமல் போகலாம் இல்லையா? அப்படியொருத் தேடல் தான் எனது கவிதைகள்... கவிதைகளில் வரும் என் தாயைப் போலன்னு வர்ற தேடலுக்காக நான் கல்யாணம் ஆகாதவள்னு சொல்றது அபத்தமா தோணலையா சத்யன்?" 

"ஹாஹாஹாஹா சூப்பரா பேசுற சிமி,, ஆனா உன் கவிதைகளில் காதலின் தேடலையும் பார்த்திருக்கேனே சிமி?"

"சத்யன் அது என் பர்ஸ்னல்.... அதைப் பற்றி பேசும் உரிமையை நான் யாருக்கும் தரலை....."

"சரி ஓகே சிமி,, உன் பர்ஸ்னல் தான்... ஒத்துக்கிறேன்.... ஆனால் தாய்மையின் ஏக்கத்தையும் தீர்க்காமல்... காதலையும் கொடுக்காமல் இருக்கும் அந்த புருஷன்(?) உனக்குத் தேவையா? அதாவது நீ சொல்ற மாதிரி புருஷன்னு ஒருத்தன் இருந்தால்............"

"சத்யன்?????" இந்த ஒற்றை வார்த்தையில் அவளின் அதிர்வுகள் தெரிய......

"ஆமா சிமி,, அப்படியொரு புருஷன் இருந்தால்.... அவன் உனக்கு வேண்டாம்..... விவாகரத்து செய்துடு... செய்துட்டு என்கிட்ட வந்துடு சிமி.... என் கண்ணுக்குள்ள.... இல்ல இல்ல என் உயிருக்குள்ள வச்சு உன்னை காப்பேன் சிமி.... நீ ஏங்கும் அத்தனையும் கொடுப்பேன் சிமி"

"ச்சீ,, என்ன வார்த்தை பேசுறீங்க சத்யன்? பெண்மையின் புனிதம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வாழும் நாட்டில் வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம்.... நான் தமிழச்சி.... மரணத்திலும் மாங்கல்த்திற்கு தான் முதலிடம் கொடுப்பேன்"

"ஹாஹாஹாஹாஹா இல்லாத புருஷனுக்கு எவ்வளவு டயலாக் பேசுறடி?"

"இதற்கு மேல் நான் பேசத் தயாராக இல்லை"

"சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போ சிமி"

"?????"

"புருஷன்னு ஒருத்தன் இருந்தால்..... அவன் ஏன் உன் சித்திக்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தலை? அதுவும் உடல் வதைபடும் அளவுக்கு விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கும் புருஷன்?" 

"அது, அவர் வெளிநாட்டில் இருக்கார்..... திருமணம் ஆனதும் போய்விட்டார்... அதனால் நான் என் தாய்வீட்டிலேயே இருக்கேன்"

"பார்டா,, ம்ம்..... அவன் கலிபோர்னியாவில் தானே இருக்கான்? பொண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு வெளிநாட்டுல இருக்குற அவனை ஓட விட்டு உதைக்கனும்" சிரிக்கும் பொம்மைகள் கூடவே.....

"முடியலை சத்யன்.... தயவுசெஞ்சு ஆளை விடுங்க"

"ஏய்,, இல்லாத புருஷனுக்காக இவ்வளவு பொய் சொல்றயேடி... உயிரோட இருக்குற என்னையும் என் காதலையும் பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரேன்டி"

"நான் எதையும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை சத்யன்.... எனக்கு திருமணம் ஆனது நிஜம்... என் கணவனின் அடையாளத்தை நான் கழுத்தில் சுமப்பதும் நிஜம், சத்தியமும் கூட... இதற்குமேல் இதைப்பற்றி விளக்கம் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை சத்யன்...."

"சத்தியம்? ஓ...... என் காதலை நிராகரிக்க சத்தியம் செய்யவும் துணிஞ்சிட்டயா? சரிடி நான் காத்திருக்கேன்... நீயாக வரும் வரை நான் காத்திருக்கேன்"

"வரமாட்டேன்.... தோழியாகக் கூட இனி வரமாட்டேன்.... குட்பை சத்யன்"

அதிர்ந்து போனான்.... "குட்பையா? அய்யோ சிமி ப்ளீஸ் அவசரப்படாதே சிமி.... " அவன் சொல்லும் போதே அவள் ஆப்லைன் போய்விட உறைந்துபோய் அப்படியே அமர்ந்திருந்தான் சத்யன்....







" நினைவெல்லாம் நீயாயிருக்க.....

" நிமிடம் கூட நித்திரை இல்லையடி பெண்ணே!

" என் நெஞ்சம் சுமக்கும் நீ சுமையாக இல்லை...

" என் நினைவுகள் சுமக்கும் உன் வார்த்தைகள் தான்...

" உயிரைக் கொல்லும் பெரும் சுமையடி கண்ணே!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 10

அச்சம் தவிர்,, இது காதலுக்குப் பொருந்துமா? அதுவும் மறுக்கப்பட்ட காதலுக்கு? ஒவ்வொரு நிமிடமும் நினைவுகளின் சுழற்சியில் உயிர் போய் விடுமோ என்று தவிக்கும் போது அச்சம் தவிர்க்க முடியுமா?

அப்படித்தான் இருந்தாள் சிமி என்ற மான்சி.... சத்யனின் வரிகள் வார்த்தைகளாக மாறி செவிப்பறையில் மோதி கிழிந்து நெஞ்சுக்குள் குடியேறியது....

யாரை நேசிக்கிறோமோ அவனுடைய நேசத்தை மறுக்கும் நிலை? இது, இப்படி யாருக்காவது நிகழுமா? நிஜக் காதலில் பொய்யுரைக்கலாம்... காதலே பொய்யென்று உரைக்கும் சூழல் யாருக்காவது நேருமா? எனக்கு மட்டும் ஏன்? நான் செய்த வினையா? பாவமா?...

கண்ணீர் உப்பு கன்னத்தில் படிய டாய்லெட்க்கு சென்று முகம் கழுவினாள்.... கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு அவன் தான் தெரிந்தான் "பொய், பொய் சொல்றடி நீ" என்றான்...

சுடிதாருக்குள் கிடந்த சங்கிலியை வெளியே எடுத்து கண்ணாடியின் முன் நீட்டிக் காட்டி "நான் சொன்னது பொய்யில்லையே? இதோ என்னவனின் அடையாளம் என் கழுத்தில்" சன்னமான குரலில் பேசினாள்

"ம்ம் உன் புருஷன் கலிபோர்னியாவில் தானே இருக்கான்?" கண்ணாடியில் கேலியாக சிரித்தான் சத்யன்..... அவன் நிழலாக நின்று பேச இவள் நிஜத்தில் சிலிர்த்துப் போனாள்...

உண்மை தெரியாமலேயே உரிமையுடன் பேசுகிறவன்..... உண்மை தெரிந்து விட்டால்? நடுக்கம் ஓடியது நரம்புகளில்.... அப்புறம் சித்தி? ரீத்து? அப்பா? அதன்பின் சிதறிப்போகும் குடும்பம்? கையில் பிடித்திருந்த செயினை அவசரமாய் சுடிதாருக்குள் திணித்துக் கொண்டாள்....

இனி தினமும் போராட்டமாகத் தான் பொழுது விடியும் என்பது புலனானது... நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு நிமிர முயன்றாள்.... நிமிர்ந்தால் நிலை தடுமாற வைத்தது சத்யனின் காதல் வார்த்தைகள்....

ஒன்று விடாமல் உள்ளுக்குள் சேகரித்து வைத்தாள்.... அதிலும் அவனின் புகைப்படத்தைப் பார்த்ததும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனே நேரில் நின்று பேசுவது போல்தான் எண்ண முடிந்தது...

எதையெதையோ எண்ணமிட்டவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை..... ரீத்துவை சத்யனுக்கு பேசியிருப்பதாக சித்தி சொன்னாள்... ஆனால் சத்யனின் வார்த்தைகளில் தனக்குத் திருமணம் என்பதன் சாயலே தெரியவில்லையே? அவனது திருமண பேச்சு வார்த்தை இன்னும் அவனுக்குத் தெரியப்படுத்தப்படவில்லையோ? அதைச் சொல்லிவிட்டாலாவது கொஞ்சம் வேகம் குறையுமோ? ம்ஹூம் வேகம் குறைந்து விலகுபவன் போல் தெரியவில்லையே? ஆனாலும் திருமண செய்தி சொல்லப்பட்டால் தீவிரம் குறைய வாய்ப்புண்டு.... காத்திருப்போம்.. காலம் பதில் சொல்லும் வரை.... 



கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்... அலுவலக வேலைகளில் தனது அலைப்புறுதலை மறைக்க முயன்றாள்.... மூடி வைக்க இது ஒன்றும் ஊசி முனை அல்லவே? காற்று,, பெரும் காட்டையே காட்டுத்தீயாக மாற்றக் கூடிய காதல்க் காற்று.... மூடி வைத்தாலும் மூச்சு முட்டி குமுறிக் குமுறி வெளியே வந்தது.....

அவனது நேசத்தின் அளவு புரிந்ததும் நெஞ்சத்தில் காதல் பூக்கள் ஏராளமாகப் பூத்து நிமிடத்துக்கு நிமிடம் நெரிசல் அதிகமானது...... நெரிசலில் சிக்கி காதல் பூக்கள் நசுங்கி விடாமல் காப்பாற்றவும் வழியின்றி கண்ணீருடன் பார்த்திருந்தாள்.

அடம் பிடிக்கும் அறிவுக்கு ஆயிரம் சமாதானம் சொல்லலாம்.... அழும் ஆழ் மனதுக்கு அந்த ஆண்டவனால் கூட சமாதானம் கூற முடியாது.... அமைதியற்ற மனதை அழவிட்டு விட்டு அமைதியாக கண்மூடி அமர்ந்தாள்.

நேரங்கள் நீர் துளியென மறைய வீட்டுக்குக் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது.... தனது பொருட்களை சேகரித்தவளை கம்பியூட்டரின் வெற்றுத் திரையில் தெரிந்த அவளின் காதலன் அழைத்தான்...

திகைத்தவள் திரையில் தெரிந்தது நிஜமில்லை அவனின் நினைவு தான் என்று புரிய "சித்ரவதையா இருக்கே அம்மா" என்றபடி சோர்ந்து அமர்ந்தாள்....

திரை திறந்து அவளது பிளாக் சென்றாள்.... கவிதை ஏதாவது போடலாம் என்று கீபோர்டில் தட்டினாள்.... வழக்கமாக வரும் அம்மா கவிதைகள் வரவில்லை....


" மறப்பதற்கு மனமிருந்தால்...

" மார்க்கம் உண்டு!

" மயக்கம் கொண்டு நீயிருந்தால்...

" மறந்து செல்லவேண்டியது நான் தான்!


இது தேவையா? என்று அவள் சிந்திக்கும் முன் கவிதை பதிவாகியிருந்தது.... அய்யோ இது அம்மாவைப் பற்றியது இல்லையே... படித்துவிடுவானோ என்று எண்ணும் போது அவனது பதில் அங்கே பதிவாகியிருந்தது.....


" மயக்கமா????

" உன் மனதைக் கேளடி...

" தயக்கமின்றி அது கூறும்..

" இது மயக்கமல்ல...

" என் மனதின் ஏக்கமென்று!

அவனது பதில் கண்டு துடித்து நிமிர்ந்தாள்.... ஏக்கம் தான்.... ஆனால் உனது ஏக்கம் தீர்க்கும் பாக்கியம் எனக்கில்லையே அன்பே.......

துளிர்த்து விழுந்த நீரை துப்பட்டாவில் துடைத்துவிட்டு தனது மெயிலைத் திறந்தாள்....

சத்யனிடமிருந்து ஏராளமான மெயில்கள்.... அத்தனையிலும் ஒரே மாதிரியான வார்த்தைகள் "குட்பை சொல்லாத சிமி,, ரொம்ப வலிக்கிதுடி.... இனி முடிஞ்சவரைக்கும் உன்னை கஷ்ட்டப்படுத்தாமல் பேச முயற்சிக்கிறேன்... ஆனா இந்த குட்பை மட்டும் வேணாம் சிமி... நீ சொல்லிட்டுப் போன அந்த நிமிஷத்தில் இருந்து அழுவுறேன்டி... தாங்கமுடியலை சிமி.... குட்பை வாபஸ் வாங்கிடு சிமிம்மா... ப்ளீஸ் கண்ணம்மா"

அப்பப்பா எப்படிப்பட்ட வரிகள்? முதன்முறையாக மான்சிக்கு மரண பயத்தை ஏற்படுத்திய வரிகள்... செத்துவிடலாமா என்று யோசிக்க வைத்த வரிகள்.... 'உன்னை விட்டு என்னால் மட்டும் விலகியிருக்க முடியுமாடா கண்ணா?.....’ இதயம் பேசியது..... அழவேண்டும் துணையேதுமின்றி தனியாக அமர்ந்து அழவேண்டும்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஹாய் சத்யன்,,

இனி நீங்கள் புரிந்து நடந்து கொண்டால் நான் ஏன் குட்பை சொல்லப் போகிறேன்?

புரிந்து கொள்ளுங்கள்,, இது அத்தனையும் நீர்மேலிட்ட கோலமென்று புரிந்து கொள்ளுங்கள்...

காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் விடலாம்... கடல்நீரில் விடமுடியாது சத்யன்... ஒரே அலையில் உருத்தெரியாமல் போய்விடும்..

இனி என் பர்ஸ்னல் பற்றி பேசாத நல்ல ரசிகனாக ஒரு தோழனாக நீங்கள் உடன் வருவதாக உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே நமது நட்பு நீடிக்கும்... இல்லையென்றால் எனது குட்பை நிரந்தரமாக்கப்படும் சத்யன்...

நான் சொந்த வேலையாக சில நாட்கள் வெளியூர் செல்லவிருப்பதால் அலுவலகத்திற்கு வரமாட்டேன்... அதனால் ஆன்லைனிலும் வரமாட்டேன்... இந்த இடைவெளி உங்களின் மனமாற்றத்திற்கு உதவுமென்று நினைக்கிறேன்...

மீண்டும் உங்களை ஒருத் தோழனாக சந்திக்க ஆசைப்படும் தோழி....... சிமி!!!”

மடலை தன் காதலனுக்கு அனுப்பிவிட்டு மூன்றுநாள் விடுமுறை கேட்டு எம்டிக்கு ஒரு மெயில் எழுதி அனுப்பிவிட்டு வீடு நோக்கிக் கிளம்பினாள்...

துயர் வந்து தோளில் சுமையாக தூக்கம் தொலைக்கப் போகும் இரவுகளுக்காக ஏக்கம் சுமந்த விழிகளுடன் ரயிலில் பயணமானாள்...

" உள்ளும் புறமும்...

" நீயிருந்து விளையாட...

" என் உணர்வுகள் விழித்ததால்.....

" உயிர் கூட வியர்த்து...

" விழி நீராய் வழிந்து போகிறதே...

" அன்பனே!!!
வீட்டுக்கு வந்தாள்.. அவளுக்கான பணிகள் காத்திருந்தன... அத்தனையும் முடித்துவிட்டு கூடத்துக்கு வந்தாள்... கலா ஏதோவொரு புத்தகத்தில் மூழ்கியிருக்க அருகே சென்று தரையில் அமர்ந்தாள்....

"அவங்கக்கிட்ட இருந்து ஏதாவது பதில் வந்ததா சித்தி?" என்று கேட்டாள்..

குழப்பமாக நிமிர்ந்த கலா "என்ன பதில் வரனும்? அவங்க மகன் வரவும் தான் மத்ததை பேசனும்னு சொல்லிருக்காங்க" என்று கலா கூறவும்...

"அது சரி சித்தி,, ஆனா அவர் வர ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்களே.... அதுவரைக்கும் ஏதாவது உறுதி செய்துக்கலாமே சித்தி" மான்சி குடும்பப் பொருப்பு மிக்கவளாக தன் காதலனுக்கே கல்யாணம் பேச முயன்றாள்...

புருவம் சுழித்து யோசித்த கலா "நீ சொல்றதும் சரிதான் மான்சி,, ஆனா அவங்க அப்படி சொன்னப் பிறகு நாம மறுபடியும் பேச முடியுமா?"

"பேசினா என்ன சித்தி? நீங்க அவங்க நம்பர் குடுங்க நான் பேசுறேன்" என்று மான்சி கூறியதும் திகைத்த கலா "நீ பேசப் போறியா?" என்று கேட்க....

"ஆமா சித்தி.... நீங்க பேசுறதை விட தேவியோட மகளா நான் பேசினால் சரியாயிருக்கும்னு எனக்குத் தோனுது" என்று தீர்மானமாக கூறினாள்...

சற்றுநேரம் யோசித்த கலா "ம் ம் நீ சொல்றதும் சரி தான்" என்றுவிட்டு அருணகிரியின் நம்பரைச் சொன்னாள்....

நம்பரை மனதுக்குள் குறித்துக்கொண்டு தொலைப்பேசியில் அழுத்திவிட்டு அவர்கள் எடுக்கக் காத்திருந்தாள்....

எதிர்பக்கம் எடுக்கப்பட்டு "சொல்லும்மா" என்று ஒரு ஆணின் கம்பீரக் குரல் கேட்க...

"அருணகிரி அங்கிள் தானே பேசுறது?" என்று உறுதி செய்துகொண்டாள்...

"ஆமாம்... நீங்க யாரு?"

வெகுவாக கஷ்ட்டப்பட்டு குரலை நிதானமாக்கி "அங்கிள் நான் தேவியோட மகள் சிமி என்ற மான்சி பேசுறேன்... நீங்களும் ஆன்ட்டியும் நல்லாருக்கீங்களா?" 



தேவியைத் தெரியாதா? அவர்களின் உயிர் அடையாளமாயிற்றே? "அடடே மான்சியா பேசுறது? சொல்லும்மா... என்ன விஷயம்?" என்று உற்சாகமான குரலில் அருணகிரி பேசும் போதே "யாரு மான்சியா பேசுறா?" என்று ஆர்வமான பெண் குரல் ஒன்று அவரிடமிருந்து தொலைப்பேசியைப் பறித்து "சிமி, நான் சந்திரா ஆன்ட்டிம்மா,, நீ எப்படிடா இருக்க?" என்று தழுதழுத்தக் குரலில் கேட்டாள்...

பக்கத்தில் கலா இருக்கிறாள் என்பது ஞாபகம் வர... உருண்டு விழ முயன்ற கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு குரலில் சந்தோஷத்துடன் "ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி.... உங்களைப் பத்தி அப்பா நிறைய சொல்லிருக்காங்க.... இப்போ மறுபடியும் நம்ம ரெண்டு பேமலியும் சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி" என்றாள்....

"ம் எனக்கும் சந்தோஷம் தான்மா.... ஆனா நான் நினைச்சது நடக்கலையே?" வருத்தமான குரலில் சந்திரா பேச...

"புரியுது ஆன்ட்டி,, ஆனா ஆண்டவன் கணக்கு வேறயா இருக்கே? எனக்கு திருமணம் ஆனா என்ன ஆன்ட்டி? என் தங்கை ரீத்து தான் உங்க பையனுக்கும் உங்க குடும்பத்துக்கும் பொருத்தமா இருப்பா.... அழகு அறிவு படிப்பு என எல்லாத்திலயும் ரீத்து என்னை விட ரொம்பவே பெஸ்ட்... அவ உங்க வீட்டு மருமகளா வர்றதில் எனக்கு சந்தோஷம் தான் ஆன்ட்டி" என மான்சி சரளமாக பேசிக்கொண்டே போனாள்...

"சரிம்மா,, நீ சொன்னா சரிதான்... உன் சித்தி மறுபடியும் போன் பண்ணி அவங்க மகளைத் தர்றதா சொல்ற வரைக்கும் எங்களுக்கு அப்படியொரு யோசனையே வரலை.... அப்புறம் தான் பத்ரி அண்ணாவோட எந்த மகளா இருந்தாலும் நம்ம வீட்டு மருமகள் ஆக்கிக்கனும்னு தோணுச்சு... அதன்பிறகு தான் சம்மதம் சொன்னோம்...." சந்திரா பத்ரியின் மீது வைத்திருக்கும் மரியாதை அவள் வார்த்தைகளில் மிளிர்ந்தது...

"ம் நீங்க அப்படி நினைச்சதுக்கு தாங்க்ஸ் ஆன்ட்டி... ஆனா உங்க மகன் வர ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்க... அதுக்குள்ள நாம ஏதாவது தட்டு மாத்தி உறுதி செய்துக்கிட்டா நல்லதுன்னு தோணுது ஆன்ட்டி.... பேசி முடிச்சிட்டு ரொம்ப நாள் தள்ளிப் போறதை விட நிச்சயதார்த்தம் செய்துகிட்டு தள்ளிப் போனா பரவாயில்லை.. நமக்கும் ஒரு உறுதி கிடைக்குமே" தெளிவாக மான்சி கூறவும்....

"நீ சொல்றதும் புரியுதும்மா... ஆனா நாங்க இன்னும் இது விஷயமா எங்க பையன் சத்யன் கிட்ட பேசலை... அவன் படிப்பு பாதிக்கக் கூடாதுன்னு நினைச்சோம்... இப்ப நீ சொல்றது பார்த்தா ஒரு உறுதி செய்துக்கிறது நல்லதுன்னு தான் தோணுது... ஒரு நல்ல நாள் பார்த்து சத்யன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றோம் மான்சி... பிறகு சம்பிரதாயத்துக்குப் பெண் பார்த்துட்டு உடனே நிச்சயத் தாம்பூழம் மாத்திடலாம்" சந்திராவின் ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது....

நெஞ்சு நீராவிக்குள் இருப்பது போல் வெந்து தணிய... "ம் சரி அப்படியே செய்ங்க ஆன்ட்டி" என்றாள் மான்சி...

"சரிம்மா,, உன் வீட்டுக்காரர் என்ன வேலை செய்றார்? குழந்தைங்க இருக்கா?" என சந்திரா கேட்க...

புயல் தாக்கிப் பொட்டலான பூமி போல் இதயம் வரண்டு போக மீண்டும் கண்ணீரை கடைவிழிகுக்குள்ளேயே தேக்கினாள் "அவர் எங்க மேரேஜ் முடிஞ்சதுமே வேலை விஷயமா வெளிநாடு போய்ட்டார் ஆன்ட்டி... நான் அப்பா வீட்டுலயே தான் இருக்கேன்... குழந்தைகள் எதுவும் இல்லை" இதைச் சொல்வதற்குள் உள்ளங்கைகள் கூட வியர்த்துப் போனது....

பிறகு சம்பிரதாயமான சில விசாரிப்புகளுக்குப் பிறகு தொலைப்பேசியை கலாவிடம் கொடுத்துவிட்டு தோட்டத்துக்குப் போனாள் மான்சி...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கலங்கரை விளக்கமாக கண்கள் இருந்தும் இதயப் படகு இலக்குத் தெரியாமல் போய்க்கொண்டிருந்தது.... நீரடித்து கண்ணீரை கழுவினாள்...

பெற்றோர் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்ததும் என்னை மறந்துவிடுவானா சத்யன்? மறந்தால் நல்லதுதான்... நினைக்கும் போதே நெஞ்சு வரை கசந்தது... சத்யனின் காதல் வார்த்தைகள் மறக்க மாட்டான் என்றது....

மறந்தாலும் துன்பம் நினைந்தாலும் துன்பம்... என் நிலை யாருக்குமே வரக்கூடாது முருகா....

“ குழந்தையாய் உனைக் கண்டு...

“ குமரியாய் நான் நின்று..

“ நீதான் என் வாழ்வென நானுணர....

“ கண்ணா,,

“ நீரிலும் நீயே!

“ நெருப்பிலும் நீயே!

“ மண்ணிலும் நீயே!

“ விண்ணிலும் நீயே!

“ நான் காணும்,

“ எல்லாம் நீ!

“ எதிலும் நீ!

“ துணையாக மட்டும் வராது....

“ இதுதான் என் விதியா?
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அருணகிரி தன் மனைவியுடன் சத்யன் ரீத்து திருமணம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டார்....

"அந்தப் பொண்ணு மான்சி சொல்றதும் சரிதான் சந்திரா... ரொம்ப நாள் கழிச்சு திருமணம் செய்ய முடிவு பண்ணினால் ஒரு ஒப்பந்தம் மாதிரி நிச்சயதார்த்தம் நடத்தி விடுவது நல்லது... இரு வீட்டாருக்கும் ஒரு உறுதி மொழி மாதிரி அது..." என்று அருணகிரி கூறவும்...

"ஆமாங்க... பெரியவங்க நமக்கெல்லாம் தோணாத விஷயம் அந்த பொண்ணுக்குத் தோணிருக்கு.... ரொம்ப அறிவான பெண்ணா இருக்கா.... ம்ஹம் நமக்குதான் கொடுத்து வைக்காம போயிட்டது...." வருத்தமாக கூறிய மனைவியின் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து

"அது ஆண்டவன் எழுதியது சந்திரா... மாத்த முடியாது... நம்ம சின்னுவுக்கு ரீத்து தான்னு முடிவாகியிருக்கு.. அதை மாத்த முடியுமா? அதுமட்டுமில்லை இன்னொருத்தன் மனைவியானப் பிறகு இனிமேல் மான்சியைப் பத்தி நாம பேசுறது தவறு..... இதுவும் நல்லதுக்கேன்னு விட்டுட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்" என்றார்...

"ம்ம்,, சரி சத்யனுக்கு இந்த கல்யாண விஷயமா விபரம் சொல்லனும்... அவன் ஓகே சொன்னதும் நாம ஒரு நல்ல நாளில் பத்ரி அண்ணா வீட்டுக்கு போய் முறையா பேசி முடிவு பண்ணிட்டு குறிப்பிட்ட சில சொந்தக்காரங்களை வச்சு நிச்சயதார்த்தம் நடத்திடலாம்... அப்புறம் சின்னு வந்ததுமே கல்யாணத்தை முடிச்சிடலாம்" என்று சரியாகத்தான் எல்லாவற்றையும் யோசித்து கூறினாள் சந்திரா...

"நாளைக்கு நல்லநாள் காலைல பதினோரு மணிக்குள்ள பையனுக்கு விஷயத்தைச் சொல்லலாம்னு ஜோசியர் சொல்லிருக்கார் சந்திரா... நாளைக்கு காலைல பூஜை முடிச்சிட்டு சின்னுவுக்கு போன் பண்ணிலாம்" என்று சந்தோஷமாக கூறவும் சந்திராவும் அந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டாள்.....

அன்று இரவு உணவு முடிந்து இருவரும் தோட்டத்தில் சற்றுநேரம் நடந்து விட்டு படுப்பதற்காக தங்களது படுக்கையறைக்குச் சென்றனர்... மகனின் திருமண பேச்சு அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தது.....

இருவரும் மகனைப் பற்றியும் அவனது எதிர்காலத்தைப் பற்றியும் பேசிவிட்டு உறங்கும் போது இரவு பதினோரு மணியாகியிருக்க... சரியாக பணிரெண்டு இருபதுக்கு அருணகிரியின் மொபைல் அலறி அவர்களின் உறக்கத்தை கலைத்தது...

இந்த நேரத்தில் யார் என்ற குழப்பத்தோடு தனது மொபைலை எடுத்து நம்பரை பார்த்தார்... கலிபோர்னியாவில் இருந்து அழைத்திருந்தார்கள்... ஆனால் சத்யனின் நம்பரில்லை என்றதும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள மொபைலை ஆன்செய்து யார்? என்று ஆங்கிலத்தில் கேட்டார்...

எதிர்முணையிலிருந்து அவருக்கான பதிலும் ஆங்கிலத்திலேயே சொல்லப்பட்டது.... பேசியது சத்யன் படிக்கும் கல்லூரி நிர்வாகம்.... சொல்லப்பட்ட தகவல் அவர் உயிரை துடிக்கச் செய்யும் தகவலாக இருந்தது....

அதாவது அன்று காலை கல்லூரிக்கு வந்த சத்யன் வந்த ஒரு மணிநேரத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும்.... அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டது....

"சத்யா....." என்று அலறியபடி நெஞ்சில் கைவைத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தவரை எதிர்முணையில் இருந்த நபர் உயிருக்கு ஆபத்தில்லை... நீங்கள் வந்தால் நல்லது" என்று கூறிவிட்டு லைனை கட் செய்தார்....

இவரின் அதிர்ச்சி கண்டு திகைத்த சந்திரா அவரை உலுக்கி "என்னாச்சுங்க? சத்யான்னு சொன்னீங்களே? சின்னுவுக்கு என்னாச்சுங்க?" என்று சத்தமாக கேட்க...

நிதானத்துக்கு வந்த அருணகிரி மனைவியைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார்.... மகனைப் பற்றிய தகவல் கொடுத்த அதிர்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை.... அடுத்ததைப் பற்றி யோசிக்க முடியாமல் அதிர்ச்சியுடன் அழுதவரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் சந்திராவும் அழுதாள்....

அழுகையினூடே மனைவிக்கு விஷயத்தைச் செல்லிவிட்டு ஹாலுக்கு அழைத்து வந்தார்.... அடுத்த அரை மணிநேரத்தில் அந்த பங்களாவில் இருக்கும் அத்தனை ஜீவன்களும் விழித்துக் கொண்டு சத்யனுக்காக கண்ணீரில் கரைந்தனர்....

வீட்டுக் காரியத்தரசி கம்பெணி மேனேஜருக்கும் அருணகிரியின் உதவியாளருக்கும் போன் மூலமாக தகவல் சொல்ல அவர்களும் உடனடியாக வந்து சேர்ந்தனர்.....

மீண்டும் கலிபோர்னியா கல்லூரிக்கு கால் செய்து விசாரித்தார் மேனேஜர்... சத்யன் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும்... ஆனால் மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உடனடியாக அவனது நெருங்கிய உறவினர் யாராவது வரவேண்டும் என்றனர்....



என்ன செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது... அருணகிரிக்கு அமேரிக்காவுக்கு மல்டிபில் என்ட்ரி விசா இருப்பதால் உடனடியாக கலிபோர்னியா செல்ல அனுமதி கிடைக்கும் என்றார் உதவியாளர்.....

அது சம்மந்தமான அதிகாரிகளைப் பிடித்து காரியத்தை சாதித்தனர் மேனேஜரும் உதவியாளரும்...

கம்பெணி விஷயமாகவும் சத்யனின் படிப்பு சம்மந்தமாகவும் அருணகிரி இதற்கு முன்பு கலிபோர்னியா சென்றிருப்பதால் மறுநாளே அவருக்கு அனுமதி கிடைத்தது... சிங்கப்பூர் சென்று அங்கிருந்து லண்டன் சென்று அங்கிருந்து கலிபோர்னியா செல்ல ஏற்பாடானது...

அழுதது அழுதபடி கிடந்த மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு மொத்த பொறுப்புகளையும் மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மகனைக் காண புறபிபட்டார் அருணகிரி....

ஐந்தாம் நாள் காலை பதினோரு மணிக்கு சத்யன் படிக்கும் கல்லூரிக்கு சென்றடைந்தவரை அங்கிருந்தவர்களில் இருவர் சத்யன் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

வெள்ளை உடுப்பில் விரக்தியாக கிடந்தவனைக் கண்டதும் கண்ணீர் ஆறாகப் பெருக.... "சின்னு.... என்னடா இப்படிப் பண்ணிட்ட?" என்று அழுதபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டார் அருணகிரி...

அப்பா வருகிறார் என்று அவனுக்கு தகவல் சொல்லியிருந்தபடியால் அதிர்ச்சியின்றி அப்பாவின் தோளில் சாய்ந்தான்.....

"என்ன சின்னு இது? நீ எதுக்கும் அஞ்சாதவனாச்சேடா?" இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார் அருணகிரி...

சுற்றிலும் இருந்த மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் சத்யனின் ஆரோக்கியம் இன்னும் முழுதாக மீண்டு விடவில்லை என்று கூற... அவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்தார் அருணகிரி....

"பச்,, பயப்படாதீங்க டாடி.... கொஞ்ச நாளா சரியாத் தூங்கலை... சரி மாத்திரை போட்டுக்கிட்டாவது நல்லா தூங்கலாம்னு நினைச்சி நான் குடியிருக்கும் வீட்டு ஓனர் தாத்தா கிட்ட ஒரு ஸ்லீப்பிங் டேப்லட் வாங்கிப் போட்டேன்... அப்பவும் தூக்கம் வரலை... சரி தாத்தா மாத்திரை வைக்கும் இடத்தைத் தெரிஞ்சு எடுத்துட்டு வந்து ஒரு அஞ்சாறு மாத்திரையை மொத்தமா போட்டேன்... சூசைட் பண்ணிக்கனும்னு எல்லாம் நினைச்சு போடலை டாடி.... நல்லா விடாம ஒரு வாரமாவது தூங்கனும்னு நினைச்சிப் போட்டேன்... அது பார்த்தா இப்படியாகிடுச்சு... காலேஜ் நிர்வாகமும் கலவரம் பண்ணிடுச்சு" என்று மெல்லிய குரலில் நிதானமாக கூறினான் சத்யன்....

மகன் ஒன்றுமில்லை என்று கூறினாலும் அவனது வார்த்தைகளில் இருந்த வலியை அருணகிரியால் உணர முடிந்தது... "சரிப்பா நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்" என்று மகனின் தலைமுடியை கோதிவிட்டார்...


சிறு குழந்தையாக அப்பாவின் கையை எடுத்து தனது கன்னத்துக்கடியில் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்ட மகனைப் பார்த்து இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது...
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சந்திராவுக்கு கால் செய்து மகனைப் பார்த்துவிட்டதாக கூறினார்... சந்திரா மகனிடம் பேச வேண்டும் என்று கூற "சின்னு அம்மாகிட்ட ரெண்டு வார்த்தை பேசுப்பா... அஞ்சு நாளா அழுதுகிட்டே இருக்கா" என்ற அருணகிரியின் கண்களும் கூட கலங்கிப் போனது...

மொபைலை வாங்கி அம்மாவிடம் பேசினான் சத்யன் " மம்மி,, நான் நல்லாருக்கேன்... நீ கவலைப்படாத மம்மி" என்று கூறும் போதே சத்யனின் குரலிலும் கண்ணீரால் தடுமாற்றம்.... "நான் உங்களை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரமா போக மாட்டேன்ம்மா.... தூங்கனுமேன்னு ரெண்டு டேப்லட் அதிகமா போட்டேன்... அது இப்படியாகிடுச்சு" என்று கண்ணீர் மறைத்து சிரிப்புடன் சமாதானம் செய்தனுக்கு பதிலாக தாயின் அழுகுரலே கேட்டது...

"டாடி,, ரொம்ப அழுவுறாங்க... நீங்களே பேசுங்க" என்று அப்பாவிடம் மொபைலைக் கொடுத்துவிட்டான்....

அருணகிரி மனைவிக்கு ஆறுதலும் தேறுதலும் கூறிவிட்டு போனை வைத்தார்.....

மறுநாள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசிய போது, சத்யன் விளையாட்டாக செய்தாலும் அவனுக்குள் ஏதோ இருக்கு... தகுந்த முறையில் மெடிக்கல் கவுன்சிலிங் செய்து கொஞ்ச நாட்களுக்கு பெற்றவர்களுடன் வைத்திருந்து பிறகு மீண்டும் வந்து படிப்பினைத் தொடர சொன்னார்கள்....

சத்யனிடம் கேட்டபோது "ஆமாம் டாடி... எனக்கும் உங்க ரெண்டு பேர் கூடவும் கொஞ்ச நாளைக்கு இருக்கனும் போல இருக்கு.... கொஞ்சநாள் கழிச்சு வந்து என்னோட ஸ்டடியை கன்டினியூ பண்ணிக்கிறேன்" என்றான்....

படிப்பே போனாலும் கூட மகனை தன்னுடனேயே அழைத்துச் செல்லும் முடிவில் தான் அருணகிரியும் இருந்தார்...

மருத்துவமனையிலிருந்து டிச்சார்ஜ் ஆகி சத்யன் இருக்கும் வீட்டுக்கு வந்த போது அந்த முதியவர்கள் சத்யனின் நடத்தையாலும் போலீஸ் விசாரணையாலும் ரொம்பவே பயந்து போயிருந்தார்கள்... உடனே வீட்டைக் காலி செய்யச் சொன்னவர்களிடம் மூன்று நாட்களில் இந்தியா செல்லவிருப்பதாகக் கூறி அனுமதி வாங்கி மகனுடன் தங்கினார் அருணகிரி....

ஒரு மஞ்சள் மாலையில் புல்வெளியில் நடந்தபடி "என்ன பிரச்சனைன்னு டாடிக்கிட்ட சொல்றதானால் சொல் சத்யா,, என்னால எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்" என்று மெதுவாக ஆரம்பித்தார் அருணகிரி...

மவுனமாக நடந்தவன் ஓரிடத்தில் அமர்ந்து தைலை கவிழ்ந்திருக்க.. மகனின் அருகில் அமர்ந்து தோளை அணைத்து "இங்க வந்து யாரையாவது லவ் பண்ணியா சத்யா" என்று அன்பாக கேட்டார்...

சற்றுநேரம் வரை மவுனமாக இருந்தவனின் தலை தானாக அசைந்து ஆமாம் என்று கூற...

"யார் சத்யா? இந்த நாட்டுப் பெண்ணா? கூட படிக்கிறவளா?" என்று கேட்டதும் மீண்டும் மவுனம்....

பிறகு "இல்லப்பா தமிழ் பொண்ணு... தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்...." என்றவன் சிமி என்ற பெயரை தவிர்த்து அவள் கவிதை எழுவாள் என்பதையும் சொல்லாமல் தவிர்த்து "ஆன்லைன் மூலமா மீட் பண்ணேன் டாடி... ரொம்ப நல்லவ... முதல்ல ப்ரெண்டாத்தான் பழகினேன்... ஆனா போகப் போக எனக்கு லவ் ஆகிடுச்சு" என்று மெல்லிய குரலில் தலை நிமிராமல் கூறினான்...

"தமிழ்நாட்டுப் பெண்ணா? ம் சரி... நீ அந்த பொண்ணுக்கிட்ட லவ்வை சொன்னியா? அல்லது அவளும் உன்னை லவ் பண்ணாளா?" கவனமாக கேட்டார் அருணகிரி

இம்முறை சத்யனிடம் மிக நீண்ட மவுனம் பிறகு நிமிர்ந்து நீலவானைப் பார்த்து "சொன்னேன்ப்பா.... மொத்தமா ஒருநாள் சொன்னேன்... ஆனா அவ" என்று நிறுத்தினான்



"ஆனா அவ?.... என்ன சொன்னா சத்யா?" மகனை ஊக்கினார்....

"அவளுக்கு,, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றாப்பா...." என்று சத்யன் கண்களிலும் கண்ணீர் குரலிலும் கண்ணீர்....

அதிர்ந்து போனார் அருணகிரி "என்னடா சொல்ற? கல்யாணம் ஆன பொண்ணையா நீ காதலிச்ச?" என்று கேட்டவரின் குரலிலோ ஒரு மாதிரியான அருவருப்பு

கண்ணீருடன் நிமிர்ந்து தகப்பனின் முகம் பார்த்தவன் "ஆமாம்ப்பா... அப்படித்தான் அவ சொன்னா" என்று கூறிவிட்டு முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு "அதான்ப்பா என்னால தாங்க முடியலை... செத்துடனும் போல இருந்தது டாடி.... நான் அவளை ரொம்ப விரும்பினேன் டாடி" என்று குமுறலாய் கூறிய மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அருணகிரி..
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)