Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
[quote pid='5681642' dateline='1722621704']
பாகம் - 105
மன்னர் காலம்
இராவணன் காலத்தில் அரக்கர் வம்சம்,நாக வம்சத்தை வென்று இருந்தது.அதனால் எப்பொழுதும் அரக்கர்கள் இடும் கட்டளைகளை நாக லோகத்தில் இருக்கும் நாகங்கள் அடிபணிந்து ஏற்று கொள்ளும்..நாக லோகத்தில் முக்கியமான நாகங்கள்,ஆதிசேஷன்,வாசுகி, கார்க்கோடகன்,தக்ஷகன் ஆகியவை.அதில் கார்கோடன் பாம்பிற்கு தான் காத்தவராயன் கட்டளையிட்டான்.
மகேந்திரவர்மன் மற்றும் அவனது படைகள் மாயமலையை நெருங்கின.செடி கொடிகளை போல் மரங்களை பிடுங்கி எறிந்து கொண்டு குன்று ஒன்று இடம் பெயர்ந்து வருவது போன்ற உருவத்தை வீரர்கள் பார்த்தனர்.அவர்கள் முன்னே படம் எடுத்து வந்து நின்ற அதன் உருவத்தை பார்த்ததுமே சில வீரர்கள் மயங்கி விழுந்தனர்.சாதாரண பாம்பை கண்டாலே படையும் நடுங்கும்.இந்த மலை போன்ற பாம்பை கண்டால் எந்த படைவீரர்கள் தான் முன்னே நின்று போரிட முடியும்.ஒருவேளை இந்த கார்கோடகனை பார்த்து தான் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி எழுதி வைத்தார்களோ என்னவோ..!
"வீரர்களே..!ஏன் பயந்து நடுங்கிறீங்க..உங்கள் ஆயுதங்களை எடுத்து அதன் மேல் வீசுங்கள்" என மகேந்திரவர்மன் கட்டளையிட்டான்..வீரர்கள் வீசிய அம்புகளும்,வேல்களும்,கார்கோடகனுக்கு ஏதோ குண்டூசி குத்தியது போல் இருந்தது.ஆனால் இந்த செய்கையில் கோபம் அடைந்த கார்கோடகன் உடனே தன் உஷ்ண பெருமூச்சை வெளியிட முன்னே இருந்த வீரர்கள் மயங்கி விழுந்தனர்.பல வீரர்களை வாலால் சுழற்றி வீசியது.
தன் வீரர்கள் தன் கண்முன்னே மயங்கி விழுவதை கண்ட மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.இந்த நேரத்தில் மதிவதனி என்ன செய்வாள் என்று ஒரு கணம் யோசித்து பார்த்தார்.எதிரி எப்பேர்பட்டவனாயினும் துணிந்து போரிடும் அவளின் தீரத்தை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தார்.ஒருமுறை அல்ல மும்முறை காத்தவராயனை அவள் வீழ்த்தியதை அவர் மனதில் நினைத்து பார்க்க கிழவரான அவர் உடம்பில் புது இரத்தம் பாய்ந்தது.யானையின் மீது அமர்ந்து இருந்த மகேந்திரவர்மன்,யானையே விழுங்கக்கூடிய அளவில் இருந்த கார்கோடன் மீது தாவி பாய்ந்தார்..நேராக அதன் தலையில் மீது விழுந்த மகேந்திரவர்மன்,தன் கையில் இருந்த ஈட்டியால் கார்கோடனின் கண்ணை சரியாக குத்தினார்..ஒரு கண் பழுதான நிலையில் கார்கோடன் துள்ளி வாலால் மகேந்திரவர்மனை அடிக்க,அந்த தாக்குதலில் இருந்து குதித்து மன்னர் லாவகமாக தப்பினார்..குதித்த வேகத்தில் அதன் மண்டையில் நச்சென்று ஈட்டியை குத்த கார்கோடனால் வலியை சமாளிக்க முடியவில்லை.மகேந்திரவர்மனின் வீரத்தை பார்த்து உற்சாகம் அடைந்த மகேந்திரபுரி வீரர்கள் கார்கோடனின் உடலெங்கும் சரமாரியாக தாக்கினார்கள்.கார்கோடன் வலி தாங்காமல் தன் தலையை உலுக்க மகேந்திரவர்மன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.ஒரு கண்ணை இழந்த கார்கோடன் ஊர்ந்து கொண்டே மகேந்திரவர்மனை விழுங்க வந்த பொழுது வீரர்கள் தடுக்க வந்தனர்.அவர்களை தூக்கி வீசி கொண்டே கார்கோடன் முன்னேறி வர,"நில் கார்கோடா.."என்று சத்தம் கேட்ட திசையை கார்கோடன் நோக்கினான்..
பல்லக்கில் இருந்து வெளியே வந்து சியாமந்தக ரத்தின மணியை அணிந்து நின்று இருந்த அக்ரூரரை கண்டதும் கார்கோடன் பின்வாங்கினான்..
"ஆகா...இது கிருஷ்ண பகவான் அணிந்திருந்த மாலை அல்லவா..இவரை எதிர்த்து நான் எப்படி போரிட முடியும்.."என நினைத்த கார்கோடன் வாலை சுருட்டி கொண்டு அமைதியானது..
"மன்னிக்கவும் அக்ரூரரே..!பிருந்தாவனத்தில் என் கர்வத்தை அடக்கிய கிருஷ்ணரின் மாலை தங்களிடம் இருப்பதை பார்த்தும் நான் போரிட்டால் அதுவே என் அழிவுக்கு வழி வகுத்து விடும்.அதனால் இக்கணமே நான் இங்கு இருந்து செல்கிறேன்.."என்று ஒடி ஒளிந்தது.
தடை காணாமல் போக மாயமலை உள்ளே அனைவரும் பிரவேசித்தனர்.
மாயமலையின் பிரமாண்ட பள்ளத்தாக்குகளையும்,அடர்த்தியான மரங்களையும் மகேந்திரவர்மன் பார்த்து கொண்டே வந்தார்.மாயமலை பற்றி கேள்விப்பட்டதை விட இன்னும் பயங்கரமாக உள்ளதே..!என மனசுக்குள் வியந்து கொண்டே வந்தார்.அக்ரூரர் சொன்ன வழிப்படி வந்ததால் மதிமயக்கும் வனம் வழியே அவர்கள் வரவில்லை.அதன் வழியே வந்து மதிவதனி காத்தவராயனிடம் சிக்கி கொண்டேன் என்று அவளும் கூறி இருந்தது அவருக்கு ஞாபகம் இருந்தது.
மாயமலை கோட்டை நெருங்கிய உடன் இருட்டு கவிழ ஆரம்பித்துவிட்டது..கோட்டையை சுற்றி இருந்த காத்தவராயன் தளபதி ஆவிகளின் அமானுஷ்யங்கள் ஆரம்பித்து விட்டன.இதை பார்த்து வீரர்கள் பயப்பட அக்ரூரர் முன்னே வந்தார்.
"மன்னா இதற்கு மேல் நான் முன்னே செல்கிறேன்..நான் சியாமந்தக ரத்தின மணியை அணிந்து இருப்பதால் கெட்ட சக்திகள் இதை பார்த்து ஓடிவிடும்.ஆனால் காத்தவராயன் ஆவி மட்டும் மானிட உடலில் இருப்பதால் அது மட்டும் முன்னின்று தாக்குதலை நடத்தும்.. விராடன் உடலில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரித்து விட்டால் பிறகு கவலை இல்லை.அவனை நான் கட்டுபடுத்தி சிறைப்பிடித்து விடுவேன்..ஆனால் விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரிப்பது தான் மிக சிரமம்.."
மன்னர் ஆச்சரியப்பட்டு"சக்தி வாய்ந்த உங்களால் கூட முடியாதா..!"என கேட்டார்.
"ஆமாம் மன்னா..! விராடன் உடம்பில் இருந்து விலாசினி உடன் காத்தவராயன் உடலுறவு கொள்ளாது இருந்தால் என்னால் விராடன் உடம்பில் இருந்து அவனை பிரித்து இருக்க முடியும்.ஆனால் உடலுறுவு கொண்ட பிறகு விராடன் தன் சொந்த மகன் உடல் என்பதால் விராடன் உடலில் உள்ள அணுக்களோடு காத்தவராயன் ஒன்றி விட்டான்.காத்தவராயன் நினைத்தால் மட்டுமே விராடன் உடம்பில் இருந்து வெளிவர முடியும். அதுவும் விராடன் உடம்பை அழித்த பிறகு தான் அவனும் வெளிவர முடியும்.தன்னுடல் கிடைக்கும் வரை விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் வெளியே வர மாட்டான்.இதனால் தான் முதலில் வர தயங்கினேன்.."
"அப்போ விராடன் உடலில் இருந்து காத்தவராயனை பிரிக்க முடியாதா..!"மன்னர் சஞ்சலத்துடன் கேட்டார்.
"முடியும்..அதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது.அதாவது விராடன் உடலில் உள்ள காத்தவராயன் ஆவியை மீறி விராடன் ஆத்மா மேலேறி வர வேண்டும்..அப்படி வர வேண்டுமெனில் விராடனை பாதிக்கும் சம்பவம் ஏதாவது ஒன்று அங்கு நிகழ வேண்டும்.அப்படி நிகழ்ந்தால் மட்டுமே என்னால் காத்தவராயன் ஆவியை கட்டுப்படுத்தி அதற்கு சாபம் இட முடியும்.. விராடன் உடம்பில் காத்தவராயன் இருக்கும் பொழுது நான் சாபம் இட்டால் அது விராடனை சேர்த்து பாதிக்கும்.அக்காரியத்தை மட்டும் நான் செய்ய மாட்டேன்.."
அக்ரூரர் பேச்சை கேட்டு மன்னர் சற்று தளர்ச்சி அடைந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என மன்னர் பத்து வீரர்களோடு மட்டும் அக்ரூரர் உடன் வர கோட்டைக்குள் நுழைந்தார்.
வெளவால்களின் சத்தமும்,கோட்டான்களின் கும்மாளமும் மாயமலை கோட்டையை மிக பயங்கரமாக காட்டின. விலாசினி உள்ளே நுழைந்த பொழுது விளக்குகளின் அலங்காரத்தில் மின்னி கொண்டு இருந்த மாயமலை கோட்டை இப்போ அதற்கு நேர் எதிராக இருட்டாக இருந்தது.
சியாமந்தக மணி அக்ரூரர் அணிந்து இருந்ததால் அவரை எந்த தீய சக்தியும் நெருங்கவில்லை.மேலும் இருட்டாக இருந்த மாயமலை கோட்டையை அது வெளிச்சம் ஆக்கியது.மகேந்திரவர்மனின் படை வீரர்களை ஆவிகள் ஆக்கிரமித்து ஒருவரையொருவர் தங்களுக்கு உள்ளேயே சண்டை போடுமாறு செய்தன..அக்ரூரர் தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு ஆவியாய் அடக்கி கொண்டு வந்தாலும் சில உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. எங்கு தேடினும் விலாசினியையோ,விராடனையோ காண முடியவில்லை.
எல்லா ஆவிகளை அடக்கிய பிறகு காத்தவராயன் குரல் கேட்டது."வா அக்ரூரரா..! மந்திரகட்டை உருவாக்கி என்னை உன் நாட்டுக்குள் நுழைய விடாமல் செய்தாய்.இப்போ உன் பெண்ணை என் மந்திர கட்டுக்குள் வைத்து உள்ளேன்.முடிந்தால் காப்பாற்றி கொள்.."என சிரித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தாலும் காத்தவராயன் உருவம் கண்ணுக்கு தென்படவில்லை.கோட்டை முழுக்க தேடியும் விலாசினியும் கிடைக்கவில்லை.எல்லோரும் தேடி தேடி களைத்து ஓய்ந்தனர்.
"அக்ரூரரே ...இப்படி தேடினால் உங்கள் மகள் கிடைக்க மாட்டாள்..எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.எல்லோரும் உங்கள் அருகில் இருப்பதால் காத்தவராயன் நம் முன்னே தோன்றாமல் இருக்கிறான்.நாங்கள் பிரிந்து தனியாக தேடி செல்கிறோம்,கண்டிப்பாக எங்களை அழிக்க காத்தவராயன் என் முன்னே வருவான்.பிறகு நீங்கள் வாருங்கள்.."
"மன்னா இது மிகவும் ஆபத்து.."என அக்ரூரர் எடுத்துரைத்தார்.
"ஆனால் வேறு வழியில்லை முனிவரே..இன்று இரவு காத்தவராயனை அடக்கியே ஆக வேண்டும்"
மன்னர் ஒருபுறமும்,அக்ரூரர் ஒருபுறமும் பிரிந்தனர்.
வேலை முடிந்து வந்து இன்று ஒலிம்பிக் badminton போட்டி பார்த்து கொண்டு இருந்தேன் நண்பர்களே..அதனால் பதிவின் நீளம் குறைந்து விட்டது.மன்னிக்கவும்.ஆனா சரியான மேட்ச்.இந்தியாவிற்கு இம்முறை ஆண்கள் பேட்மின்டன் போட்டியில் பதக்கம் கண்டிப்பா கிடைக்கும்
Intha episode paka edho preclimax portion polavae iruku bro
Olympic games nalah delay soltinga it's ok
WIaiting for more rocking episodes in future
[/quote]
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 08:27 AM)krishkj Wrote: [quote pid='5681642' dateline='1722621704']
பாகம் - 105
மன்னர் காலம்
இராவணன் காலத்தில் அரக்கர் வம்சம்,நாக வம்சத்தை வென்று இருந்தது.அதனால் எப்பொழுதும் அரக்கர்கள் இடும் கட்டளைகளை நாக லோகத்தில் இருக்கும் நாகங்கள் அடிபணிந்து ஏற்று கொள்ளும்..நாக லோகத்தில் முக்கியமான நாகங்கள்,ஆதிசேஷன்,வாசுகி, கார்க்கோடகன்,தக்ஷகன் ஆகியவை.அதில் கார்கோடன் பாம்பிற்கு தான் காத்தவராயன் கட்டளையிட்டான்.
மகேந்திரவர்மன் மற்றும் அவனது படைகள் மாயமலையை நெருங்கின.செடி கொடிகளை போல் மரங்களை பிடுங்கி எறிந்து கொண்டு குன்று ஒன்று இடம் பெயர்ந்து வருவது போன்ற உருவத்தை வீரர்கள் பார்த்தனர்.அவர்கள் முன்னே படம் எடுத்து வந்து நின்ற அதன் உருவத்தை பார்த்ததுமே சில வீரர்கள் மயங்கி விழுந்தனர்.சாதாரண பாம்பை கண்டாலே படையும் நடுங்கும்.இந்த மலை போன்ற பாம்பை கண்டால் எந்த படைவீரர்கள் தான் முன்னே நின்று போரிட முடியும்.ஒருவேளை இந்த கார்கோடகனை பார்த்து தான் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி எழுதி வைத்தார்களோ என்னவோ..!
"வீரர்களே..!ஏன் பயந்து நடுங்கிறீங்க..உங்கள் ஆயுதங்களை எடுத்து அதன் மேல் வீசுங்கள்" என மகேந்திரவர்மன் கட்டளையிட்டான்..வீரர்கள் வீசிய அம்புகளும்,வேல்களும்,கார்கோடகனுக்கு ஏதோ குண்டூசி குத்தியது போல் இருந்தது.ஆனால் இந்த செய்கையில் கோபம் அடைந்த கார்கோடகன் உடனே தன் உஷ்ண பெருமூச்சை வெளியிட முன்னே இருந்த வீரர்கள் மயங்கி விழுந்தனர்.பல வீரர்களை வாலால் சுழற்றி வீசியது.
தன் வீரர்கள் தன் கண்முன்னே மயங்கி விழுவதை கண்ட மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.இந்த நேரத்தில் மதிவதனி என்ன செய்வாள் என்று ஒரு கணம் யோசித்து பார்த்தார்.எதிரி எப்பேர்பட்டவனாயினும் துணிந்து போரிடும் அவளின் தீரத்தை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தார்.ஒருமுறை அல்ல மும்முறை காத்தவராயனை அவள் வீழ்த்தியதை அவர் மனதில் நினைத்து பார்க்க கிழவரான அவர் உடம்பில் புது இரத்தம் பாய்ந்தது.யானையின் மீது அமர்ந்து இருந்த மகேந்திரவர்மன்,யானையே விழுங்கக்கூடிய அளவில் இருந்த கார்கோடன் மீது தாவி பாய்ந்தார்..நேராக அதன் தலையில் மீது விழுந்த மகேந்திரவர்மன்,தன் கையில் இருந்த ஈட்டியால் கார்கோடனின் கண்ணை சரியாக குத்தினார்..ஒரு கண் பழுதான நிலையில் கார்கோடன் துள்ளி வாலால் மகேந்திரவர்மனை அடிக்க,அந்த தாக்குதலில் இருந்து குதித்து மன்னர் லாவகமாக தப்பினார்..குதித்த வேகத்தில் அதன் மண்டையில் நச்சென்று ஈட்டியை குத்த கார்கோடனால் வலியை சமாளிக்க முடியவில்லை.மகேந்திரவர்மனின் வீரத்தை பார்த்து உற்சாகம் அடைந்த மகேந்திரபுரி வீரர்கள் கார்கோடனின் உடலெங்கும் சரமாரியாக தாக்கினார்கள்.கார்கோடன் வலி தாங்காமல் தன் தலையை உலுக்க மகேந்திரவர்மன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.ஒரு கண்ணை இழந்த கார்கோடன் ஊர்ந்து கொண்டே மகேந்திரவர்மனை விழுங்க வந்த பொழுது வீரர்கள் தடுக்க வந்தனர்.அவர்களை தூக்கி வீசி கொண்டே கார்கோடன் முன்னேறி வர,"நில் கார்கோடா.."என்று சத்தம் கேட்ட திசையை கார்கோடன் நோக்கினான்..
பல்லக்கில் இருந்து வெளியே வந்து சியாமந்தக ரத்தின மணியை அணிந்து நின்று இருந்த அக்ரூரரை கண்டதும் கார்கோடன் பின்வாங்கினான்..
"ஆகா...இது கிருஷ்ண பகவான் அணிந்திருந்த மாலை அல்லவா..இவரை எதிர்த்து நான் எப்படி போரிட முடியும்.."என நினைத்த கார்கோடன் வாலை சுருட்டி கொண்டு அமைதியானது..
"மன்னிக்கவும் அக்ரூரரே..!பிருந்தாவனத்தில் என் கர்வத்தை அடக்கிய கிருஷ்ணரின் மாலை தங்களிடம் இருப்பதை பார்த்தும் நான் போரிட்டால் அதுவே என் அழிவுக்கு வழி வகுத்து விடும்.அதனால் இக்கணமே நான் இங்கு இருந்து செல்கிறேன்.."என்று ஒடி ஒளிந்தது.
தடை காணாமல் போக மாயமலை உள்ளே அனைவரும் பிரவேசித்தனர்.
மாயமலையின் பிரமாண்ட பள்ளத்தாக்குகளையும்,அடர்த்தியான மரங்களையும் மகேந்திரவர்மன் பார்த்து கொண்டே வந்தார்.மாயமலை பற்றி கேள்விப்பட்டதை விட இன்னும் பயங்கரமாக உள்ளதே..!என மனசுக்குள் வியந்து கொண்டே வந்தார்.அக்ரூரர் சொன்ன வழிப்படி வந்ததால் மதிமயக்கும் வனம் வழியே அவர்கள் வரவில்லை.அதன் வழியே வந்து மதிவதனி காத்தவராயனிடம் சிக்கி கொண்டேன் என்று அவளும் கூறி இருந்தது அவருக்கு ஞாபகம் இருந்தது.
மாயமலை கோட்டை நெருங்கிய உடன் இருட்டு கவிழ ஆரம்பித்துவிட்டது..கோட்டையை சுற்றி இருந்த காத்தவராயன் தளபதி ஆவிகளின் அமானுஷ்யங்கள் ஆரம்பித்து விட்டன.இதை பார்த்து வீரர்கள் பயப்பட அக்ரூரர் முன்னே வந்தார்.
"மன்னா இதற்கு மேல் நான் முன்னே செல்கிறேன்..நான் சியாமந்தக ரத்தின மணியை அணிந்து இருப்பதால் கெட்ட சக்திகள் இதை பார்த்து ஓடிவிடும்.ஆனால் காத்தவராயன் ஆவி மட்டும் மானிட உடலில் இருப்பதால் அது மட்டும் முன்னின்று தாக்குதலை நடத்தும்.. விராடன் உடலில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரித்து விட்டால் பிறகு கவலை இல்லை.அவனை நான் கட்டுபடுத்தி சிறைப்பிடித்து விடுவேன்..ஆனால் விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரிப்பது தான் மிக சிரமம்.."
மன்னர் ஆச்சரியப்பட்டு"சக்தி வாய்ந்த உங்களால் கூட முடியாதா..!"என கேட்டார்.
"ஆமாம் மன்னா..! விராடன் உடம்பில் இருந்து விலாசினி உடன் காத்தவராயன் உடலுறவு கொள்ளாது இருந்தால் என்னால் விராடன் உடம்பில் இருந்து அவனை பிரித்து இருக்க முடியும்.ஆனால் உடலுறுவு கொண்ட பிறகு விராடன் தன் சொந்த மகன் உடல் என்பதால் விராடன் உடலில் உள்ள அணுக்களோடு காத்தவராயன் ஒன்றி விட்டான்.காத்தவராயன் நினைத்தால் மட்டுமே விராடன் உடம்பில் இருந்து வெளிவர முடியும். அதுவும் விராடன் உடம்பை அழித்த பிறகு தான் அவனும் வெளிவர முடியும்.தன்னுடல் கிடைக்கும் வரை விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் வெளியே வர மாட்டான்.இதனால் தான் முதலில் வர தயங்கினேன்.."
"அப்போ விராடன் உடலில் இருந்து காத்தவராயனை பிரிக்க முடியாதா..!"மன்னர் சஞ்சலத்துடன் கேட்டார்.
"முடியும்..அதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது.அதாவது விராடன் உடலில் உள்ள காத்தவராயன் ஆவியை மீறி விராடன் ஆத்மா மேலேறி வர வேண்டும்..அப்படி வர வேண்டுமெனில் விராடனை பாதிக்கும் சம்பவம் ஏதாவது ஒன்று அங்கு நிகழ வேண்டும்.அப்படி நிகழ்ந்தால் மட்டுமே என்னால் காத்தவராயன் ஆவியை கட்டுப்படுத்தி அதற்கு சாபம் இட முடியும்.. விராடன் உடம்பில் காத்தவராயன் இருக்கும் பொழுது நான் சாபம் இட்டால் அது விராடனை சேர்த்து பாதிக்கும்.அக்காரியத்தை மட்டும் நான் செய்ய மாட்டேன்.."
அக்ரூரர் பேச்சை கேட்டு மன்னர் சற்று தளர்ச்சி அடைந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என மன்னர் பத்து வீரர்களோடு மட்டும் அக்ரூரர் உடன் வர கோட்டைக்குள் நுழைந்தார்.
வெளவால்களின் சத்தமும்,கோட்டான்களின் கும்மாளமும் மாயமலை கோட்டையை மிக பயங்கரமாக காட்டின. விலாசினி உள்ளே நுழைந்த பொழுது விளக்குகளின் அலங்காரத்தில் மின்னி கொண்டு இருந்த மாயமலை கோட்டை இப்போ அதற்கு நேர் எதிராக இருட்டாக இருந்தது.
சியாமந்தக மணி அக்ரூரர் அணிந்து இருந்ததால் அவரை எந்த தீய சக்தியும் நெருங்கவில்லை.மேலும் இருட்டாக இருந்த மாயமலை கோட்டையை அது வெளிச்சம் ஆக்கியது.மகேந்திரவர்மனின் படை வீரர்களை ஆவிகள் ஆக்கிரமித்து ஒருவரையொருவர் தங்களுக்கு உள்ளேயே சண்டை போடுமாறு செய்தன..அக்ரூரர் தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு ஆவியாய் அடக்கி கொண்டு வந்தாலும் சில உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. எங்கு தேடினும் விலாசினியையோ,விராடனையோ காண முடியவில்லை.
எல்லா ஆவிகளை அடக்கிய பிறகு காத்தவராயன் குரல் கேட்டது."வா அக்ரூரரா..! மந்திரகட்டை உருவாக்கி என்னை உன் நாட்டுக்குள் நுழைய விடாமல் செய்தாய்.இப்போ உன் பெண்ணை என் மந்திர கட்டுக்குள் வைத்து உள்ளேன்.முடிந்தால் காப்பாற்றி கொள்.."என சிரித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தாலும் காத்தவராயன் உருவம் கண்ணுக்கு தென்படவில்லை.கோட்டை முழுக்க தேடியும் விலாசினியும் கிடைக்கவில்லை.எல்லோரும் தேடி தேடி களைத்து ஓய்ந்தனர்.
"அக்ரூரரே ...இப்படி தேடினால் உங்கள் மகள் கிடைக்க மாட்டாள்..எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.எல்லோரும் உங்கள் அருகில் இருப்பதால் காத்தவராயன் நம் முன்னே தோன்றாமல் இருக்கிறான்.நாங்கள் பிரிந்து தனியாக தேடி செல்கிறோம்,கண்டிப்பாக எங்களை அழிக்க காத்தவராயன் என் முன்னே வருவான்.பிறகு நீங்கள் வாருங்கள்.."
"மன்னா இது மிகவும் ஆபத்து.."என அக்ரூரர் எடுத்துரைத்தார்.
"ஆனால் வேறு வழியில்லை முனிவரே..இன்று இரவு காத்தவராயனை அடக்கியே ஆக வேண்டும்"
மன்னர் ஒருபுறமும்,அக்ரூரர் ஒருபுறமும் பிரிந்தனர்.
வேலை முடிந்து வந்து இன்று ஒலிம்பிக் badminton போட்டி பார்த்து கொண்டு இருந்தேன் நண்பர்களே..அதனால் பதிவின் நீளம் குறைந்து விட்டது.மன்னிக்கவும்.ஆனா சரியான மேட்ச்.இந்தியாவிற்கு இம்முறை ஆண்கள் பேட்மின்டன் போட்டியில் பதக்கம் கண்டிப்பா கிடைக்கும்
Intha episode paka edho preclimax portion polavae iruku bro
Olympic games nalah delay soltinga it's ok
WIaiting for more rocking episodes in future
[/quote]
ஒலிம்பிக் போட்டியால் delay இல்ல ப்ரோ,நீளம்(length)குறைந்து விட்டது என்று சொன்னேன்.காத்தவராயனை தோற்கடிப்பது வரை எழுத நினைத்தேன்.ஆனால் நேரம் கிடைக்கல..சரி எழுதிய வரை மட்டும் போஸ்ட் செய்தேன்
Posts: 169
Threads: 0
Likes Received: 102 in 77 posts
Likes Given: 77
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 11,677
Threads: 1
Likes Received: 4,262 in 3,858 posts
Likes Given: 11,577
Joined: May 2019
Reputation:
23
காத்தவராயன் அழிவிற்காக காத்திருக்கிறேன் நண்பா
Posts: 142
Threads: 3
Likes Received: 102 in 81 posts
Likes Given: 6
Joined: Feb 2020
Reputation:
0
நண்பா மிக சிறந்த பதிவு. புயல் வேகத்தில் போகிறீர்கள். அனன்யா பதிவு எப்போது வரும். மற்றும் காம தேவதை அனுவின் தரிசனம் எப்போது கிடைக்கும். அனுவின் பதிவை நன்றாக நேரம் எடுத்து பதிவிடுங்கள். அவசரம் வேண்டாம். காத்திருக்கிறேன்.
Posts: 551
Threads: 0
Likes Received: 204 in 167 posts
Likes Given: 349
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 11:12 PM)Dinesh Raveendran Wrote: Marvelous man
நன்றி நண்பா
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 08:33 PM)rameshsurya84 Wrote: நண்பா மிக சிறந்த பதிவு. புயல் வேகத்தில் போகிறீர்கள். அனன்யா பதிவு எப்போது வரும். மற்றும் காம தேவதை அனுவின் தரிசனம் எப்போது கிடைக்கும். அனுவின் பதிவை நன்றாக நேரம் எடுத்து பதிவிடுங்கள். அவசரம் வேண்டாம். காத்திருக்கிறேன்.
அடுத்த பாகம் மன்னர் கால பதிவு முடிந்து விடும் நண்பா,பிறகு அனன்யா பாகம் தான்
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 03:51 PM)omprakash_71 Wrote: காத்தவராயன் அழிவிற்காக காத்திருக்கிறேன் நண்பா
அடுத்த பாகத்தில் நண்பா
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 09:19 AM)Gajakidost Wrote: excellent bro
நன்றி நண்பா
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(02-08-2024, 11:53 PM)Samsd Wrote: Extraordinary bro
Kathavarayan curseku romba wait pannuren.
Kandippa Next partla adha mudichiruvinganu namburen
சரியாக சொன்னீங்க..
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(03-08-2024, 12:16 AM)krishkj Wrote: Karkondaan paambu idhu engayo adi vangee irukae nenachen
Semma reference ipo tha recent ah ravanan and Avan son indrajith
Suntv new ramayanam la naga logam pathee oru katchi irunthchu
So unga story la adhu varavum pakka match and vibe
Apidyey kadhai kulla oru character ah travel panna arambichuten
Madhi dad ku oru Veera sagasam vachutu akurarukum oru nalla entry and rathinam pakka connect ageeduchu bro super
Aavingql attakasam super use...
Arundathi effect jollikum kottai later irandu ah kottai
Well written and visualise it superbly
Viradan panayam vachi tha Avan aavi adakanumoh ennavo already soninga
Ipo adha perfect balance ah move panni kalakuringa
Keep rocking bro
Thanks dude for your excellent comment
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
இந்த கதைக்கான அடுத்த பாகம் நாளை வரும்..இன்னும் கொஞ்சம் தான் எழுத வேண்டி உள்ளது.
Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
Posts: 1,049
Threads: 0
Likes Received: 359 in 323 posts
Likes Given: 508
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(04-08-2024, 04:18 PM)zulfique Wrote: Good one
நன்றி
•
Posts: 380
Threads: 0
Likes Received: 143 in 122 posts
Likes Given: 160
Joined: Aug 2019
Reputation:
1
Hats off to your writing. Never read a romantic historical story like this.
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
பாகம் - 106
மன்னர் காலம்
மகேந்திரவர்மன் போட்ட திட்டம் வேலை செய்தது.கோட்டையின் பின்பகுதியில் தேடிச் செல்ல நதியின் ஓசை கேட்டது.
நதியின் அருகே நிலா வெளிச்சத்தில் யாரோ நடந்து வருவது போல தோன்றியது..ஆனால் திடீரென அவ்வுருவம் காணாமல் போனது.
மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களுக்கு பயத்தில் கை கால் நடுங்கின.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு உருவம் வந்து ஒரு வீரனை கொத்தி போனது..இப்படியே காத்தவராயன் மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களை ஒவ்வொருவராய் பலி வாங்கி விட்டான். அடுத்து மீதம் இருந்தது மகேந்திரவர்மன் மட்டுமே..
மகேந்திரவர்மனையும் காற்றாக வந்து தூக்கி தூக்கி போட்டான்.கடைசியில் அரண்மனை மொட்டை மாடியில் தூக்கி வீச மகேந்திரவர்மன் உருண்டு புரண்டு விழுந்தார்.
கை கால்கள் எங்கும் காயங்கள் உண்டாக மகேந்திரவர்மன் கத்தினார்.."டேய் காத்தவராயா..இது உன் இடம்,எனக்கு இப்போ கூட பயம் இல்லை.ஆவியாக இருப்பதால் உனக்கு பலம் கூடி இருந்தும் பயந்தாங்கொள்ளி போல இப்படி ஒளிந்து இருந்து போர் புரிகிறாயே..!வெக்கமா இல்ல..!உன்னை மும்முறை தோற்கடித்த மதிவதனியின் தந்தை போருக்கு அழைக்கிறேன்..தைரியம் இருந்தால் நேருக்கு நேர் போட்டிக்கு வாடா..!"
காத்தவராயன் விராடன் உடலில் மகேந்திரவர்மன் தோன்றினான்..
"பல வருடங்களுக்கு முன்பே,என்னிடம் தோற்று ஓடிய கோழை தானே நீ..!இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்..அன்று உனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தேன்..இன்று அதற்கு வாய்ப்பே இல்லை.மதிவதனி போன்ற அற்புதமான பேரழகியை பெற்று,அவளை எனக்கு அனுபவிக்க கொடுத்த உனக்கு மட்டும் மரணத்தில் சலுகை தரலாம் என நினைக்கிறேன்..உன்னோட முடிவு எப்படி இருக்க வேண்டும் என சொல்,அல்லது வலியில்லாத மரணம் நானே தரட்டுமா.."
மன்னரின் முகம் கோபத்தால் சிவந்தது."துஷ்டனே..!இதுவரை மாயமந்திரங்களை பயன்படுத்தி தந்திரமாக வெற்றி பெற்று கொண்டு இருந்தாய்.அதையும் என் மகள் உடைத்து உன் கையாலாகாததனத்தை வெளி உலகுக்கு காட்டி விட்டாள்..இன்று உனக்கு முடிவுரை எழுதும் நாள்"என மகேந்திரவர்மன் வாளை சுழற்றினார்.
மன்னன் பேச்சை கேட்டு காத்தவராயனுக்கும் கோபம் வந்தது. "மாமனார் என்று போனால் போகிறது என்று உன்னை விட்டு வைத்தால் உன் வாய் எல்லை மீறி விட்டது.இப்பவே உன்னை கொன்று பித்ரு லோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்"என காத்தவராயன் மகேந்திரவர்மன் மீது பாய்ந்தான்..
இரண்டு பேருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பாகியது..ஒருவரையொருவர் விட்டு கொடுக்காமல் மொட்டை மாடியில் சண்டை போட்டனர்.சில சமயம் காத்தவராயன் பின்வாங்க நேர்ந்தது.முன்பு போரில் என்னிடம் தோற்ற அதே மகேந்திரவர்மன் இவன்தானா. !என காத்தவராயனுக்கு சந்தேகம் வந்தது..
காத்தவராயனும், மகேந்திரவர்மனும் நீண்ட சண்டையிட்டு கொண்டே இருக்க,ஒரு கணத்தில் காத்தவராயன் கையில் இருந்த வாள் நழுவியது.
"காத்தவராயா.உன்னை பற்றி கிளப்பி விட்ட வதந்திகளை நம்பி போரில் ஏமாந்து விட்டேன்.ஆனால் என் மகள் உன்னை தோற்கடித்து வெல்லும் வழியை காட்டி விட்டாள்..இன்றோடு நீ தொலைந்தாய்.."என மகேந்திரவர்மன் அவன் மீது வாளோடு பாய காத்தவராயன் உடனே மாயமாய் மறைந்தான்.அங்கங்கே தோன்றி,மறைந்து காத்தவராயன்,மகேந்திரவர்மனை அலைக்கழிக்க,கடைசியாக மொட்டை மாடியில் இருந்த முற்றம் போன்ற அமைப்பில் மன்னன் முட்டி கொண்டான்..அதில் கண்ணாடி பதிக்கப்பட்டு கீழே விலாசினி இருப்பதை பார்க்க முடிந்தது..அதை பார்த்து மகேந்திரவர்மன் அயர்ந்து,"கோட்டை முழுக்க தேடினோமோ இந்த அறை கோட்டையில் தானே இருக்கிறது.இதை எப்படி தவற விட்டோம்"என அவர் யோசித்து தடுமாறி நின்றார்..
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு,மின்னல் போல் அந்த முற்றத்தின் மேலே தோன்றிய காத்தவராயன் மகேந்திரவர்மன் மார்பில் எட்டி உதைத்தான்.அவன் உதைத்த வேகத்தில் மன்னரும் பின்னாடி காற்றில் பறந்து கீழே விழுந்து மயக்கம் அடைய,அவர் மார்பில் வாளை பாய்ச்ச தயாரானான் காத்தவராயன்.
"அது என்னுடைய ரகசிய அறை..மகேந்திரவர்மா..!யாராலும் கண்டுபிடிக்க முடியாது.அந்த ரகசியத்தை அறியாமலேயே மயக்கத்திலேயே செத்து போ.."என காத்தவராயன் வாளை ஓங்கிய நேரம்"நில் காத்தவராயா..!இன்னும் ஒரு அடி நீ வாளை கீழே இறக்கினால் இவள் கழுத்தை அறுத்து போட்டு விடுவேன்.."என ஒரு பெண்ணின் உடலை அக்ரூரர் தரையில் கிடத்தினார்.
காத்தவராயன் கடகடவென சிரித்தான்.."என்ன அக்ரூரரே !விளையாட்டு காட்டியது போதும்.நீயாவது உன் மகளை கொல்வதாவது.."என காத்தவராயன் சிரித்து கொண்டே , மன்னன் நெஞ்சில் வாளை பாய்ச்ச கீழே இறக்கினான்.
"நான் பொய் உரைக்கவில்லை காத்தவராயா..!விலாசினி உடம்பில் உயிர் இருந்தால் தானே,அவள் வயிற்றில் வளரும் சிசுவை கொண்டு உன் உடலை பெற முடியும்.இதோ இப்பொழுதே இவளை அழிக்கிறேன்.."என படாரென அவள் நெஞ்சில் வாளை பாய்ச்சி விட்டார். விலாசினி அலறல் சத்தம் "விராடா...."என்று பயங்கரமா கேட்டது..அது விராடன் உடம்பில் இருந்த அவன் ஆத்மாவை தட்டி எழுப்பியது.
இதை பார்த்த காத்தவராயன் பதறவில்லை.ஆனால் விராடன் ஆத்மா பதறியது..அது காத்தவராயன் ஆவியை முந்தி கொண்டு மேலே வர விராடனுக்கு நினைவு வந்தது..
கீழே துடித்து கொண்டு இருந்த விலாசினியை பார்த்ததும் அவன் கண்கள் கலங்கியது. விலாசினியை பார்த்தான்,அவன் கையில் இருந்த வாளை பார்த்தான்.காத்தவராயன் ஆவி மீண்டும் உடலில் அவன் ஆத்மாவை மீறி ஆக்கிரமிப்பதை உணர்ந்தான்.நொடி பொழுதும் தாமதிக்கவில்லை..! தன் கழுத்தை தானே அறுத்து கொண்டான்..அவன் ரத்ததுளிகள் பட்டு மகேந்திரவர்மனுக்கு விழிப்பு வந்தது..
விராடன் உடலை காத்தவராயன் மீண்டும் ஆக்கிரமித்தாலும், விராடன் உடலில் உயிர் பிரிந்து கொண்டு இருப்பதை உணர்ந்தான்.."அக்ரூரரே..நீ ஜகஜால கில்லாடி தான். விராடன் உடலில் இருந்து என்னை வெளியே வரவைக்க நீர் போட்ட திட்டம் வெற்றி அடைந்தது.ஆனால் உன் மகள் உனக்கு கிடைக்க மாட்டாள்.."என காத்தவராயன் திரும்பி முற்றத்தை உற்று பார்க்க அதன் கண்ணாடி உடைந்து ஒரு துண்டு விலாசினி மார்பில் குத்தி அவள் உடல் துடிதுடிக்க ஆரம்பித்தது.மயக்கத்திலேயே விலாசினி உயிர் பிரிய ஆரம்பிக்க,இங்கே விராடன் உடலில் இருந்து காத்தவராயன் ஆவி வெளியே வர,அதற்காகவே காத்து இருந்த அக்ரூரர்.உடனே தன் மடியில் கட்டி எடுத்து வந்து இருந்த ஜாடியை எடுத்து மந்திரங்களை பிரயோகித்து அக்ரூரர் காத்தவராயனை ஜாடியில் அடைத்தார்.
சற்றும் தாமதிக்காமல் தன்னிடம் உள்ள மூலிகைகளை எடுத்து விராடன் கழுத்தில் கட்டு போட்டு,ஒவ்வொரு வாயுவாக அவன் உடம்பில் புகுத்தி கொண்டே வந்தார்.சரியாக 40 நிமிடங்களுக்கு பிறகு விராடன் இதயம் துடிக்க ஆரம்பித்தது..
மகேந்திரவர்மன் நடப்பது ஒன்றும் புரியாமல் பாத்து கொண்டு இருக்க,அவர் கண்முன்னேயே அக்ரூரர் வெட்டிய விலாசினி உடல் மறைந்தது..மன்னன் ஒடி சென்று முற்றத்தில் எட்டிப்பார்க்க அங்கே விலாசினி மார்பில் கண்ணாடி பாய்ந்து இரத்தம் வழிய இறந்து கிடந்தாள்.
"இது விலாசினி என்றால் இங்கே சற்றுமுன் இறந்து கிடந்த பெண் யார்..!அவள் உடல் எப்படி மாயமாய் மறைந்தது"என குழம்பினார்.
"அக்ரூரரே..!என்ன இது மாயம்..!இங்கே இறந்து கிடந்த பெண் உடல் எங்கே போனது.."
"அது நான் உருவாக்கிய மாய விலாசினி மன்னா..!காத்தவராயனை மீறி விராடன் ஆத்மாவை வரவைக்க நான் நடத்திய நாடகம் அது.அது மாய விலாசினி என்று காத்தவராயனுக்கு நன்றாக தெரியும்.அவள் கழுத்தை நான் அறுத்த பொழுது அதில் இருந்து இரத்தம் வராது.அதை காத்தவராயன் நன்றாக பார்த்தான்.ஆனால் விலாசினியை நேசித்த விராடனுக்கு அது தெரியாது.அவனுக்கு பிரியமான விலாசினி உயிர் பிரிந்ததை அவன் அறிந்தால் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு தெரியும்.அப்படி அவன் உயிர் வெளியேறும் பொழுது காத்தவராயன் ஆவியும் வெளிவந்து தீரவேண்டும்.அப்படி வெளிவந்த ஆவியை உடனே சிறை பிடித்து விட்டேன்.."
"ஆனால் இப்போ இவ்வளவு நேரம் விராடன் உடலில் என்ன செய்து கொண்டு இருந்தீர்..அக்ரூரரே..!"
"அவன் உடலில் மீண்டும் அவன் உயிரை சேர்ப்பித்தேன்."என்று அக்ரூரர் கூற மன்னன் ஆச்சரியம் அடைந்தான்.
"என்ன..!உடலில் பிரிந்த உயிரை மீண்டும் சேர்க்க முடியுமா.."என அவர் கேட்க
"ம்..முடியும்..நம் உடலில் ஒன்பது வாயுக்கள் உள்ளன மன்னா.உயிர் பிரியும் பொழுது எட்டு வாயுக்கள் உடனே வெளியேறி விடும்.ஆனால் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் கடைசியாக தான் வெளியேறும்.அந்த தனஞ்செயன் வாயு மட்டும் உடலில் இருந்து விட்டால் மீண்டும் உயிரை உடலில் சேர்ப்பித்து விட முடியும்..அதை தான் நான் இப்பொழுது செய்தேன்".
"அப்போ உடனே வாருங்கள் அக்ரூரரே..!விலாசினியின் இறந்த உடல் எனக்கு தெரியும்.அவளுக்கும் உயிர் தர முயற்சி செய்யலாம்.."
அக்ரூரர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கண்ணீருடன்,"அது முடியாது மன்னா..!என் மகளின் உடல் சவமாகி விட்டது.அதாவது அவள் உடலில் இருந்து தனஞ்செயன் வாயு இந்நேரம் பிரிந்து போய் இருக்கும்.நான் ஒரு கணக்கு போட்டேன்,ஆனால் காத்தவராயன் வேறு ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விட்டான்.அதாவது விராடன் உயிர் பிரியும் அதே நேரத்தில் விலாசினி உயிரையும் பிரியும்படி செய்து விட்டான். உயிர் பிரிந்த பிறகு தனஞ்செயன் வாயு உடலில் 30 நிமிடங்கள் மட்டுமே தங்கி இருக்கும்.அதனால் என்னால் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.விராடனா..!இல்லை என் மகளா..!சுயநலமா..இல்லை பொது நலமா..என்ற கேள்வி வரும் பொழுது நான் இம்முறை பொது நலன் என்று தான் என் மனம் சொன்னது..அதனால் என் மகளை விட்டுவிட்டு விராடனை மட்டும் உயிர்ப்பித்தேன்."என்று அவர் அழுது கொண்டே சொல்லி முடித்தார்.
அவர் அழுகை கோபமாக மாறியது..அந்த கோபம் காத்தவராயன் மீது திரும்பியது.
"காத்தவராயா..!உனக்கு நான் சாபம் இடுகிறேன்.நீ ஆவியாக இருப்பதால் தானே ஒவ்வொரு உடலில் புகுந்து ஆட்டம் போடுகிறாய்.இதற்கு மேல் உடலுக்கு சொந்தக்காரன் அனுமதி தந்தால் மட்டுமே நீ அந்த உடலுக்குள் பிரவேசிக்க முடியும். மானிட உடலில் இதற்கு மேல் உன்னால் போகவே முடியாது என்ற சாபத்தை உனக்கு என்னால் தர முடியும்.ஆனால் சில காரணங்களுக்காக சாபத்தை இவ்வாறு கொடுக்கிறேன்.."என அவர் சபித்த உடன் வானம் இடி இடித்து மழை பொழிய ஆரம்பித்தது.
விராடன் உடலில் அசைவுகள் தெரிய ஆரம்பித்தது..
விராடன் கண்விழித்து பார்த்து,அக்ரூரரை பார்த்து கோபம் கொண்டு,"ச்சீ நீங்கள் எல்லாம் ஒரு தந்தையா..என்னை காதல் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக உங்க மகளை நீங்களே கொன்று விட்டீர்களே..!இது அநியாயம்..!"
மகேந்திரவர்மன் உடனே அவனிடம்,"அவரை குற்றம் சொல்லாதே விராடா..!அவர் மீது ஏதும் தவறு இல்லை."
"யோவ் முதலில் நீ யாருய்யா.."என விரக்தியில் கத்தினான்.
"நான் தான் உன் தாத்தா.. மதிவதனியின் தந்தை.."என்று சொன்னவுடன் விராடனுக்கு கோபம் வந்தது.
அவன் கோபத்துடன் "பிறந்தவுடன் என்னை தூக்கி எறிந்து சென்ற ஒருவளின் தந்தையா நீ..!அவளை பெற்ற உன்னை தான் முதலில் கொல்ல வேண்டும்."என கத்தினான்..
மதிவதனி பற்றி குறைகூறிய உடன் மகேந்திரவர்மனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது."முட்டாளே..!தன்னோட சுயநலத்துக்காக நீ பிறந்தவுடன் உன்னை கொல்ல முயன்ற காத்தவராயன் நல்லவனா..!அல்லது உன்னையும் காப்பாற்றி,எதிர்காலத்தில் காத்தவராயனால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என தவம் செய்ய சென்ற மதிவதனி நல்லவளா..!ஏன் இதை உன்னை வளர்த்த தாய் சொல்லவில்லையா.."
விராடன் தலைகுனிந்து"சொன்னாங்க..!" என்று மெல்லிய குரலில் சொன்னான்.
"தெரிந்தும் ஏன் மாயமலை வந்தாய்..!"என கோபமாய் கேட்க,
"விலாசினி மீது கொண்ட மோகம்,அவளை அடைய அக்ரூரரை எதிர்க்க,எனக்கு என் தந்தையின் உதவி தேவைப்பட்டது.அதனால் இங்கு வந்து என் தந்தையின் உதவியை கேட்டேன்.."
"பிறகு உன் தந்தை என்ன செய்தான் தெரியுமா..!"என மன்னன் கேட்டார்.
விராடன் புரியாமல் விழித்தான்..
"உன் உடலை ஆக்கிரமித்து, தன் மகன் காதலித்த பெண் என்றும் பாராமல் அவளிடம் உடலுறவு கொண்டான்.மேலும் அவள் வயிற்றில் உருவான கருவிற்கு சென்ற சக்தியையும் பிடுங்கி கொண்டான்.அதனால் உன் ஆத்மாவை தட்டி எழுப்ப அக்ரூரர் மாய விலாசினியை உருவாக்கி கொல்வது போல நடித்தார்.ஆனால் இதை அறிந்த காத்தவராயன் உண்மையிலேயே விலாசினியை கொன்று விட்டான்..அக்ரூரருக்கு அவர் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்தும் உன்னை தான் காப்பாற்றினார்."என்று மகேந்திரவர்மன் சொல்லி முடிக்க விராடன் உண்மை அறிந்து அக்ரூரர் காலில் விழுந்தான்.
அக்ரூரர் அவனை எழுப்பி,மதிவதனி இருக்குமிடம் செல்ல வேண்டிய நேரம் இது.." என சொன்னார்.. விலாசினி உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க மிக சிரமப்பட்டனர்.கடைசியில் அறையில் சுவரை ஒவ்வொரு இடமாய் தட்டி பார்க்க ஒரு இடத்தில் வித்தியாசமான சத்தம் வந்தது.தடவி பார்க்க அது கண்ணாடி போல தெரிந்தது.விராடா,நீ மகேந்திரவர்மனுடன் மேலே சென்று முற்றத்தின் வழியே உள்ளே இறங்கு" என்றார்.அவனுக்கு சியாமந்தக ரத்தினமணியை அணிவித்தார்.
அவர் சொல்படியே விராடன் செய்தான்.அவன் கயிற்றின் மூலம் உள்ளே இறங்கிய உடனே சியாமந்தக ரத்தினமணியின் ஒளி கண்ணாடி வழியே அக்ரூரருக்கு மெலிதாக தெரிந்தது.காலால் அதை எட்டி உதைக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து வழி கிடைத்தது.
விலாசினி உடலோடு அனைவரும் மதிவதனி இருக்குமிடம் கொண்டு சென்றனர்.
மரமாய் நின்ற மதிவதனியிடம் மௌன மொழியில் பேச அவர்களுக்கு நிறைய விடைகள் கிடைத்தது.
மதிவதனி மௌன மொழியில் விராடனிடம்,"விராடா..நீ பிறந்த உடனே உன்னை கைவிட்டு வரும் சூழ்நிலை எனக்கு..!ஒருவேளை உனக்காக என் உடலை துறக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பா காத்தவராயன் என்னையும்,உன்னையும் கொன்று இருப்பான்..என்னால் இப்போ உனக்கு ஒரு உதவி செய்ய முடியும். விலாசினி உடம்பில் உள்ள கருவை என்னால் உனக்கு வளர்த்து தர முடியும்"என சொல்ல மூவரும் புரியாமல் விழித்தனர்.
"விலாசினி தான் இறந்து விட்டாளே..!இது எப்படி நடக்கும்?"என மூவரும் குழம்பினார்கள்.
கடைசியில் மதிவதனியே கூறினாள்."அக்ரூரரே.. விலாசினி உடம்பில் தேவ அணு கலந்து உள்ளது என உங்களுக்கு தெரியும்..தேவஅணு மூலம் உருவான சிசு அன்னை இறந்தாலும் அவள் வயிற்றில் ஒரு நாள் முழுக்க உயிரோடு இருக்கும்.என் மரத்தின் நடுப்பகுதியில் குழியை உருவாக்கி அவள் வயிற்றில் உள்ள சிசுவை அதில் வைத்து பின்பு மூடிவிடுங்கள்.நான் அந்த சிசுவை வளர்த்து விராடன் கையில் ஒப்படைக்கிறேன்"என்று அவள் கூற மூவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
அக்ரூரர் தன் மந்திர சக்தியின் மூலம் விலாசினி வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து மரத்தின் நடுப்பகுதியில் வைத்து அதன் வழியை அடைத்தார். நூறாவது நாள் குழந்தை உருவாகிய உடன் விராடன் எடுத்து கொண்டான்.
தான் நினைத்தது நடக்கவில்லை என்று தெரிந்த உடனே விலாசினியை கொன்ற தன் தந்தையும்,ஆனால் குழந்தையை மீட்டு உருவாக்கி கொடுத்த தன் தாயையும் ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்த்தான்.
சியாமந்தக மணியை அக்ரூரர் ,விராடனிடம் கொடுத்துவிட்டு "இதை உன் வம்சாவளியினர் பாதுகாத்து வா விராடா..மதிவதனி மறுபிறப்பு எடுத்து வரும் பொழுது, இதை நீ அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
விராடன் தன் சொந்த நாட்டுக்கு செல்லாமல் மகேந்திரவர்மன் உடன் சென்றுவிட்டான்.அங்கு இருந்து மகேந்திரபுரி நாட்டை ஆண்டு வந்தான். ஆவியாய் திரிந்து கொண்டு இருந்த விலாசினிக்கு அக்ரூரர் சில சக்திகளை கொடுத்து அவளை சகோச்சியாக மாற்றி யட்சிகளின் ராணியாக மாற்றினார்.காத்தவராயனை முழுமையாக அழிக்க தளம் அமைக்கப்பட்டு விட்டது.
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(04-08-2024, 06:15 PM)jiivajothii Wrote: Hats off to your writing. Never read a romantic historical story like this.
Thank you
•
|