Adultery விதியின் வழி
Semma Interesting Update Nanba super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
உங்கள் எல்லோருடைய கருத்துக்கும், வாழ்த்துக்கும் என்னுடைய நன்றிகள். முன்னே மாதிரி கதை எழுத சரியான நேரமும், தனிமையும் அமையவில்லை. கிடைக்கும் நேரத்தில் கதையை அடிக்கடி நகர்த்த முயறிச்சிக்குறேன்.

கதையில் காம சுவை சில பகுதிகளில் இருக்காது. கதையின் போக்குக்கு தேவையான நிகழ்வுகளை கோர்த்து எழுதி வருகிறேன். காமத்தை மட்டும் எதிர்பார்த்து கதையை படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

இதோ அடுத்த பகுதி. படித்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
[+] 1 user Likes Aisshu's post
Like Reply
Part 20

 
மறுநாள் காலேஜ் ஸ்ட்ரைக் முடிந்து திறப்பதாக அறிவிப்பு வந்து இருந்தது.  காலை சோம்பலுடன் எழுந்த நந்தினி அருகில் உமா இல்லை என்று உணர்ந்து கடிகாரத்தில் மணி பார்த்தாள்.  6:30 என்று காட்டியது.  அப்படியே எழுந்து வெளியே வரும் போது உமா அடுப்படியில் குளித்து விட்டு சமைத்து கொண்டு இருந்தாள்.
 
"அம்மா.. எப்போ எந்திரிசீங்க.. இவ்வளவு வேலைய செய்ய ஆரம்பிச்சுடீங்க"
 
"ஹ்ம்ம் இந்தா காபி.  குடிச்சிட்டு காலேஜ் கிளம்பு"
 
"அம்மா நான் இனிமே காலேஜ் போகலம்மா" அவள் காபி சிப் பண்ணி கொண்டே இருக்க, உமா அவளை பார்த்து
 
"ஏண்டி"
 
"அம்மா எனக்கு கீர்த்தியை பார்க்க விரும்பல"
 
"ஏய் உதைபடுவே.. நான் தான் படிக்காம இப்படி கஷ்டப்படுறேன்.  உனக்கு இப்படி ஒரு அருமையான காலேஜ் ல படிக்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு.  மொதல்ல கிளம்புற வழிய பாரு"
 
"அம்மா.." என்று சிணுங்கினாள்.
 
"நானும் வேலைக்கு கிளம்புறேன்.  என்னை நம்பி மும்பை வரை ட்ரைனிங் அனுப்பினாங்க.  அவுங்களுக்கு நான் உண்மையா இருக்க வேணாமா"
 
நந்தினி சிறிது யோசித்தாள். "சரிம்மா.. ஆனா நீ என்ன ட்ராப் பண்ண வர வேணாம்.  அங்கே நீ வந்தா கீர்த்தி சார் பார்த்தா நீ கஷ்டப்படுவே.  நான் நடந்தே போயிக்கிறேன்"
 
"சரி சரி.. படிப்புல கோட்டை விட்டுடாதே"
 
நந்தினி டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் ஓடினாள்.  உமா லஞ்ச் ரெடி பண்ணி பாக்ஸ் ல பேக் பண்ணி வைத்தாள்.  நந்தினி குளித்து வந்ததும் இருவரும் உப்மா சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
 
--------------------------------------------
 
கதிரும் கீர்த்தியும் அன்று இரவு ரொம்ப பேசிக்காமல் படுக்க சென்றிருந்தனர்.  இரவெல்லாம் தூக்கம் வராமல புரண்டு புரண்டு படுத்தனர்.
 
கதிரின் மனதில் "அம்மா இறந்த அப்புறம் தனிமைல அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க.  அவுங்களுக்கு துணை ஒன்னு தேடி இருக்கும் போது, நான் அதுக்கு தடையா இருக்கேனே"
 
கீர்த்தி மனதில் "அம்மா இழந்த பையன்.  அவள் இருந்து இருந்தா முன்னாடியே அவ கிட்ட சொல்லி இருப்பான்.  இப்போ அவனோட காதலுக்கு நான் தடையா இருக்கேனே"
 
இருவரும் அப்படியே தூங்கினர்.  மறுநாள் எழுந்து பார்க்க கதிர் வழக்கம் போல எழுந்து சமைத்து கொண்டு இருந்தான்.  கீர்த்தி அவனை பார்த்ததும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது.
 
"டேய் சாரி டா.."
 
"அப்பா.. எதுக்கு ப்பா சாரி எல்லாம்.  பிளாஸ்க் ல காபி போட்டு வச்சு இருக்கேன்.  எடுத்து குடிங்க மொதல்ல"
 
"ஏய் உண்மைல உனக்கு வருத்தமா இல்லை.. வருத்தமா இல்லாத மாதிரி நடிக்குறியா"
 
"ஐயோ அப்பா இப்போ வருத்தப்பட்டு என்ன ஆக போகுது.  நீங்க காலேஜ் கிளம்புற வழிய பாருங்க.  நானும் வேலைக்கு கிளம்புறேன்"
 
கீர்த்தியும் கதிரும் குளித்து விட்டு அவரவர் வேலைக்கு கிளம்பினர்.
 
--------------------------------------------
 
கீர்த்தி பஸ்ஸில் நந்தினி பார்த்தாலும், நந்தினி இப்போது அவரருகில் அமர்வது இல்லை.  அதே போல அங்கே கதிர் உமா ஒண்ணா தான் வேலை செய்தாலும், வேலை விஷயம் பத்தி மட்டும் பேசும் போது கலந்து கொண்டனர்.  மற்ற விஷயங்கள் பேசி கொள்ளவில்லை.  யார் மேலேயும் குற்றம் இல்லை.  விதியின் வழி இது தான் என்று புரிந்து கொள்ள நால்வராலும் முடியவில்லை.
 
ரெண்டு மூன்று நாட்கள் அப்படியே ஓடியது.
 
ஒரு நாள் கதிர் வேலை நேரத்தில் உமாவிடம் சென்று.  "கொஞ்சம் மேலே வர்றீங்களா.. உங்க கிட்ட தனியா பேசணும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.  உமாவும் அந்த இடத்தில எதுவும் பேசாமல் அவனோடு சென்றாள்.  அவள் வேலை பார்க்கும் ஹோட்டல் மொட்டை மாடிக்கு சென்றனர்.
 
கதிர் "உமா..i am terribly சாரி.  அன்னைக்கு எங்க அப்பா அப்படி பேசி இருக்க கூடாது.  நானும் அப்படி நடந்துகிட்டு இருந்திருக்க கூடாது"
 
உமாவின் கண்கள் நீர் கோர்த்தது.  அவள் அவனை பார்த்து கொண்டு இருக்க.
 
"உமா.. என்னால என்ன பண்ணணு தெரியல.. இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்த வாழ்க்கை இப்போ ஏதோ நரகமா மாறிடுச்சு.  அப்படியே கண் காணாத இடத்துக்கு போயிடலாமான்னு தோணுது" கதிரின் கண்களில் இருந்து சில துளி நீர் வழிந்தது.
 
உமா மெல்ல பேசினாள்.."கதிர் இதுல யாரை சொல்லியும் தப்பு இல்லை.  இது தான் விதி.  நாம சேரக்கூடாது என்று தலையெழுத்து"
 
"ஹ்ம்ம்"
 
"என்ன நாம கொஞ்சம் அவசரப்படாம இருந்திருக்கலாம்"
 
கதிர் ஒரு மாதிரி அவளை பார்த்து விட்டு "ஏய் உமா.. நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே.. "
 
"ஹ்ம்ம்.. என்ன"
 
"எங்க அப்பா பாவம்.. அம்மா இறந்ததுல இருந்து ரொம்ப depression ல இருந்து வெளியே வந்தாரு.  இப்போ அவரு ஆசைப்பட்டதையும் அடைய முடியாம போனா அவர் ரொம்ப கஷ்டப்படுவார்...அதனாலே.."
 
"ஹ்ம்ம்"
 
"அதனாலே.. எப்படி சொல்லனு தெரியல"
 
"சொல்லு"
 
"எங்க அப்பா, நந்தினி சேர்வதற்கு.. நாம ஏன் தடையா இருக்கணும்.  அவுங்க சந்தோஷமா இருக்கலாமே"
 
உமா அவனை பார்த்து கொண்டே இருக்க.
 
"என்ன உமா நான் சொல்லுறது புரியுதா"
 
"ஹ்ம்ம்.. உங்க அப்பாக்கும், என்னோட பொண்ணு நந்தினிக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லுறியா"
 
"ஹ்ம்ம்"
 
"அவுங்க சேர்ந்தா மட்டும் நானும் நீயும் பாதுக்காம வாழ முடியுமா.. இல்லை நாம பாத்துக்கும் போது நினைவு எதுவும் வராதா.."
 
"உமா.. நான் அது தான் யோசிச்சேன்.  அவுங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் வெளிநாட்டுல எங்கயாவது வேலை வாங்கிட்டு போயிடலாம்னு இருக்கேன்"
 
"ஓ சார் போயிடுவார்.. நான் மட்டும் அவுங்கள எப்படி face பண்ணுவேன்."
 
"ஹ்ம்ம்.. சாரி உமா.. எங்க அப்பாவுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுது.  ஆனா அது உன்னை கஷ்டப்படுத்துது. "
 
அப்படியே சில விஷயங்கள் பேசிட மனசு கொஞ்சம் லேசானது.
 
இதே போல நந்தினி ஒரு நாள் மதியம் ஸ்டாஃப் ரூம் லஞ்ச் சமயம் சென்றாள்.  அங்கே கீர்த்தி தனியாக இருந்தார்.  பாடத்தில் ஏதோ சந்தேகம் கேப்பது போல நின்று கொண்டு "சார்.. கொஞ்சம் தனியா பேசணும்.  ஈவினிங் காபி ஷாப் ல மீட் பண்ணலாமா"
 
"ஹ்ம்ம்.. சரி"
 
இருவரும் அன்று மலை காபி ஷாப்பில் உக்காந்து இருக்க கீர்த்தி "சாரி நந்தினி.. நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது.  ஏதோ ஒரு ஆத்திரத்துல அப்படி பேசிட்டேன்"
 
"ஹ்ம்ம்.. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க."
 
"ஆமா.. பாவம் உன்னை வழக்கவே அவுங்க வாழ்க்கைல குறிக்கோள இருந்து இருக்காங்க.  அவுங்கள போயி அப்படி பேசிட்டேன்"
 
"அது தான் சார் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்து இருக்கேன்"
 
"என் கிட்ட என்ன ஹெல்ப்"
 
"அது வந்து சார்.  என்னோட அம்மா இவ்வளவு நாள் தனிமைல இறந்துட்டாங்க.  இப்போ அவுங்கள ஒரு துணை,, அது தான் கதிர்.. தேர்ந்தெடுத்தாங்க.. அதுல நான் வேற தடையா இருக்கேன்.. அதனாலே.. நாம ஏன் தடையா இருக்கணும் னு.."
 
கீர்த்தி அவள் முகத்தை பார்த்து கொண்டே "என்ன சொல்ல வர்றே நந்து"
 
"சார்.. எங்க அம்மாக்கும், கதிர்க்கும் கல்யாணம் நடக்கட்டும்.. நம்ம காதலை மறந்துடலாம்" என்று போட்டுடைத்தாள்.
 
கீர்த்தி அவளை பார்த்துக்கொண்டே "ஏன் நந்து இந்த பிரச்சனை நாம விட்டுக்கொடுத்தா தீர்ந்துடும்னு நினைக்குறியா"
 
"ஹ்ம்ம்"
 
"அவுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீயும் நானும் பாத்துக்க முடியுமா.. இல்லை நம்ம பழைய நினைவு வராம தான் போகுமா"
 
கதிர் உமா பேசிக்கொண்டது போல கீர்த்தி நந்தினி மேலும் பேசி கொள்ள அவர்களுக்குள் ஒரு வித மனப்போராட்டம் கொஞ்சம் லேசானது.
 
--------------------------------------------
 
இரண்டு வாரங்கள் அப்படியே ஓடியது.  இனிமையா இருந்த வாழ்க்கைல இப்போ வெறுமை தான் இருந்தது.  முன்னே போல சிரித்து பேச முடியவில்லை.  கிண்டல் கேலி இல்லை.  இப்படியே வாழ்க்கை ஓடினாள் பைத்தியம் பிடித்து விடும் என்று .தோன்றியது.
 
ஒரு நாள் கீர்த்தி பைக் ஒட்டி கொண்டு சென்று இருந்தார். சில மணி நேரம் கழித்து கதிருக்கு போன் வந்தது
 
"நான் சப் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.  கீர்த்தி உங்களுக்கு என்ன வேணும்."
 
"அவர் என்னோட அப்பா சார்"
 
"ஹ்ம்ம். இங்கே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வரைக்கும்  கொஞ்சம் வர முடியுமா"
 
"என்ன ஆச்சு சார் அப்பாக்கு"
 
"பதட்டப்படாதீங்க.. சின்ன ஆக்சிடன்ட் தான்.  நேரில் வாங்க"
 
கதிர் ஒரு வித பதட்டத்துடன் வேகமாக ஆஸ்பத்திரி ஓடினான்.  அங்கே வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவர் வந்து "சார் அப்பாவை நான் தான் கூட்டிட்டு வந்தேன்.. கொஞ்சம் கவனிங்க சார்" என்று அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க பார்த்தான்.  அப்போது இன்ஸ்பெக்டர் வந்து "ஏய் இவுங்கள எல்லாம் கிளியர் பண்ணு.." என்று சத்தம் போட்டார்.
 
"கதிர் உள்ளே வாங்க."
 
அவர் பின்னாடியே போக 3வது மாடியில் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் கீர்த்தி மயங்கி கிடந்தார்.  டாக்டர் அவரை பார்த்து விட்டு அங்கே இருந்த அட்மினிடம் "சார் கிட்ட அந்த போர்மில் கையெழுத்து வாங்கிடு" என்று சென்றார்.  கதிருக்கு என்ன என்று புரியவில்லை.
 
இன்ஸ்பெக்டர் "கதிர் உங்க அப்பா இன்னைக்கு காலைல பைக் ல போகும் போது எதிர்ல வந்த ஒரு கார் மேல இடிச்சிட்டார்.  தலைல, கால்ல பலத்த காயம்.  அவருக்கு first aid கொடுத்தாச்சு.  இப்போ ஆபரேஷன் தியேட்டர்ல கொஞ்சம் கிளீன், தையல், ட்ரெஸ்ஸிங் பண்ணனும்.  கால்ல தான் fracture.  அதுல மயங்கிட்டார்.  டாக்டர் பயப்படுற மாதிரி பெருசா சொல்லல"
 
கதிர் அங்கே இருந்த சேரில் அப்படியே உக்கார்ந்தான்.  இன்ஸ்பெக்டர் "சார் அந்த கார் ட்ரைவர் பார்த்தா நல்லவனா தான் தெரியுறான்.  உங்க அப்பா தான் தப்பான வழியில் வந்து இடிச்சிட்டார்ன்னு தோணுது.  அவருக்கு நினைவு திரும்பினதுக்கு அப்புறம் வந்து விசாரிச்சுக்குறேன்.  நான் கிளம்புறேன்.  நீங்க பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
 
ஒரு மணி நேரம் கடந்து இருக்கும்.  உள்ளே இருந்து "அம்மா வலிக்குதே" என்று குரல் கத்த கதிர் எட்டி பார்த்தான்.  கீர்த்தி தான் கால்களை புடித்து கொண்டு வலியில் துடித்து அழுவது தெரிந்தது.  கொஞ்சம் நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார்.  "உங்க அப்பா தானா.. கொஞ்சம் கூட வலிய தாங்கிக்க மாட்டேங்குறார்"
 
"அவருக்கு தலைல அடிபட்டதுல பெருசா ஒன்னும் ப்ராப்ளேம் இல்லை.  வலது கால் தொடை இடுப்பும் சேருற ஜாயிண்ட் ல fracture.  அது கொஞ்சம் நேரம் எடுத்து தான் சரி ஆகும்."
 
மருந்து சீட்டு வாங்கி விட்டு வெளியே வந்து சேரில் உக்கார்ந்தான்.  கீர்த்தி இன்னும் பாதி மயக்கத்தில் தான் இருந்தார்.  கதிர் உமாவுக்கு போன் போட்டான். நடந்த ஆக்ஸிடன்ட் பத்தி சொன்னான்.  உமாவும், நந்தினியும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தனர்.  கதிரிடம் எல்லாம் விசாரித்து முடிக்கும் போது நர்ஸ் வந்து "அவருக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு.  உள்ள வாங்க" என்று கூட்டி கொண்டு போனார்.
 
மூவரும் கீர்த்தி அருகே செல்ல, பார்த்தவுடன் நந்தினி கண்களில் பொலபொல என்று கண்ணீர் வடிந்தது.  அவள் உடனே உணர்ச்சியில் "ஏய் கீர்த்து.. வண்டிய பாத்து ஓட்ட மாட்டே.. இப்படி படுத்து இருக்கே.."
 
கீர்த்தி அவளை பார்த்து புன்னகைத்து கொஞ்சம் பேச கஷ்டப்பட்டர். "நான் என்ன வேணும்னே வண்டிய இடிச்சேன்.  ஏதோ ஒரு ஞாபகத்துல.."
 
கதிர் "அப்பா.. ரொம்ப வலிக்குதா..டாக்டர் கத்துனீங்கன்னு சொன்னார்"
 
"ஹ்ம்ம்.. கால நடத்த முடியல"
 
"ரெஸ்ட் எடுங்க.."
 
உமா அவரை பார்த்து "சார்.. கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல"
 
கீர்த்தி அவள் முகத்தை பார்க்க கொஞ்சம் வருத்தப்பட்டார்.  அன்னைக்கு அப்படி பேசினதுக்காக. "ஹ்ம்ம்.. விதி அடிபடணும்னு இருந்திருக்கு" என்று சிரிக்க முற்பட்டார்.
 
"நல்லா ரெஸ்ட் எடுங்க சார்"
 
சொல்லிவிட்டு மூவரும் ரூம் விட்டு வெளியே வந்தனர்.  உமா "கதிர் நீ அப்பாவை பாத்துக்கோ.  நான் வீட்டுக்கு போய் நந்தினி கிட்ட உனக்கும் அப்பாக்கும் டின்னர் கொடுத்து விடுறேன்"
 
"இருக்கட்டும் உமா.. நான் இங்கேயே ஹோட்டல்ல பாத்துக்குறேன்"
 
"ஏய்.. ஹோட்டல்ல நீ சாப்பிட்டுக்கலாம்..அப்பா எப்படி... ஒரு அரை மணி நேரத்துல செஞ்சு கொடுத்து விடுறேன்"
 
உமாவும் நந்தினியும் வீட்டுக்கு சென்று கொஞ்சம் ரசம் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், மோர். எடுத்து பேக் பண்ணினாள்.  நந்தினி எடுத்து கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் கொடுத்தாள்.  கீர்த்தி கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் வீட்டு சாப்பாடு கொடுத்த தெம்பில் சீக்கிரம் சாப்பிட்டு முடித்தார்.
 
மறுநாள் காலையும் உமா அவர்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் செய்து கொடுத்து விட்டாள்.  அன்று மதியம் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணிவிடலாம் என்று டாக்டர் சொன்னார்.  இனிமே வீட்ல ஒரு மாசம் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லி எழுதி தந்தார்.  கீர்த்தி தலைல, காலில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. நந்தினியும், கதிரும் கீர்த்தியை புடித்து கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு சின்ன வண்டி ஏற்பாடு செய்து வீடு வந்து சேர்ந்தனர்.
 
அப்போது உமாவும் கீர்த்தி வீட்டுக்கு வந்து இருந்தாள்.  அவரை பெட்டில் படுக்க வைத்து விட்டு மூவரும் வெளிய வந்தனர்.
 
கதிர் "உமா.. ரொம்ப தேங்க்ஸ்.. நீ பண்ண இந்த உதவிக்கு"
 
உமா "ஏய்.. எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.."
 
நந்தினி "ஆமா கதிர்.. நாங்க இருக்கோம்.. என்ன வேணும்னாலும் ஹெல்ப் பண்ண."
 
உமா அன்று இரவு வரை உணவு செய்து கொடுத்து இருந்ததில் கதிருக்கு அப்பாவை கவனிக்க முடிந்தது.  மறுநாள் வேலைக்கு போக வேண்டும்.  அப்பாவை எப்படி பாத்துக்க.. என்று யோசிக்க ஆரம்பித்தான்.
 
--------------------------------------------
 
இந்த சம்பவத்தால் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Like Reply
Fantastic Story Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Aishu always good writer
Like Reply
Super update
Like Reply
Super update bro sema twist itha accident scene ithu Nala story sema mass update erukum nenaikura
Like Reply
Today any update?
Like Reply
கதையை அழகாக சென்று கொண்டு இருக்கிறது, ஜோடிகள் எப்போது சேருவார்கள் எப்படி சேருவார்கள் சேர்ந்த பின் அவர்கள் உறவு எப்படி இருக்கும் என்பது ஆர்வமா இருக்கிறது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
Very nice update
Like Reply
Nandhini not taken any precautions and should have got pregnant by now.
If mapillai is also mamanar for uma. Step father is also step brother for nandhini. What a combo.
Like Reply
விதியின் விளையாட்டு மிகவும் அருமையாக விளையாடுகிறது.

தொடருங்கள் நண்பா
Like Reply
Beautiful bro
Like Reply
Any update?
Like Reply
Bro இந்த வாரம் அப்டேட் இருக்கா
Like Reply
Excellent come back after long break...
Please try to give frequent updates
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Waiting for climax
Like Reply
Tonight any update boss?
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
இந்த கதையை தொடர்ந்து படித்து ஆர்வமும் ஆதரவும் கொடுக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. சரியாக நேரம் கிடைக்காததால் வேகமாக கதையை எழுத முடியவில்லை. பொறுத்து கொண்டு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

ஒரு சிறு பகுதி எழுதி இருக்கிறேன். பதிவிடுகிறேன் உங்கள் பார்வைக்கு.
[+] 1 user Likes Aisshu's post
Like Reply
Part 21

 
அன்று இரவு கதிர் அப்பா ரூம்ல படுத்தான்.  நடுநடுவே அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்தான்.  மறுநாள் காலை அவரை கைத்தாங்களா புடித்து பாத்ரூம் கூட்டி சென்றான்.  கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.  கொஞ்சம் வேகமாக ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச் செய்து முடித்தான்.  மணி 8:30 ஆனதும் கீர்த்தியை தனியாக விட்டு செல்ல கதிர் யோசித்தான்.  கீர்த்தி "நான் பாத்துக்குறேன்.  அது தான் குக் பண்ணிட்டியே"
 
"இல்லைப்பா.. பகல் நேரத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னா"
 
"நான் பாத்துக்குறேன்.  walker இருக்கு.  பழகிப்பேன்.  நீ போயிட்டு வா"
 
கதிர் பாதி மனசோடு வேலைக்கு போனான்.
 
கதிர் ஹோட்டலுக்குள் நுழையும் போது உமா வேலையில் இருந்தாள்.  அவனை பார்த்தும் கொஞ்சம் பழைய விஷயங்கள் ஞாபகம் வர, அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு வேலையில் மும்முரமாக இருந்தாள்.  கதிர் அவ்வப்போது உமா வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தான்.  ஆனால் அவளோ தவிர்த்து வந்தாள்.  மதியம் வரை நேரம் ஓடியது.  ஒரு சமயத்தில் உமா மனசில் "பாவம் ஒரு கர்டசிகாக கீர்த்தி எப்படி இருக்கார் ன்னு கேக்க தோணுச்சு".  கொஞ்சம் யோசித்து கொண்டே இருந்தாள்.  அப்போது கதிர் அவள் அருகே வர
 
உமா "கதிர்.. என்ன அப்பாக்கு எப்படி இருக்கு"
 
"இப்போவாவது கேக்கணும்னு தோணுச்சே" என்று ஒரு சோர்வுடன் நகர்ந்தான்.
 
"கதிர் அது வந்து அன்னைக்கு நாம பேசினதுல இருந்து எனக்கு என்னவோ நாம பிரிஞ்சிடுறது தான் நல்லதுன்னு தோணுது."
 
"ஹ்ம்ம்.. அது.. தெரியலை.." என்று வார்த்தை வராமல் முழுங்கினான்.
 
"சரி.. உங்க அப்பா வீட்ல தனியா விட்டுட்டு எப்படி வந்தே"
 
"அது தான் கொஞ்சம் படபடப்பா இருக்கு.  அவர் பாத்துக்குறேன்னு சொன்னார்.  சாப்பாடு ரெடி பண்ணிட்டு வந்துட்டேன்.  இன்னைக்கு இங்கே வேலை நெறய இருக்கு"
 
"நம்ம மேனஜர் கிட்ட கேட்டு ஒரு வாரம் லீவு எடுத்துட்டு போயி அப்பாவை பாரு"
 
"ஆமா அவர் கிட்ட பேசணும்"
 
அப்போ மேனேஜர் அங்கே வந்தார்.  "கதிர் நாளைல இருந்து 2 வாரத்துக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி நம்ம ஹோட்டல்ல ட்ரைனிங் நடத்துறாங்க.  அவுங்களுக்கு உன்னை தான் இன்ச்சார்ஜ் போட்டு இருக்கேன்.  இது நல்ல சான்ஸ்.  அவுங்க தங்குறதுல இருந்து கிளம்புற வரைக்கும் நீ தான் பாத்துக்கணும்.  அந்த கம்பெனி CEO கூட ஒரு சில நாள் வருவார்.  இது உனக்கு ஒரு நல்ல அனுபவமா இருக்கும்"
 
கதிர் அவன் கேக்க வந்த லீவு பத்தி என்ன சொல்ல என்று உமாவை பார்த்தன்.  உமாவுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தாள்.
 
மேனேஜர் "என்ன கதிர் இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லுறேன்.. ஆர் யு ஓகே"
 
உமா "சார் கதிரோட அப்பாவுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆக்சிடென்ட் ஆகி தலைல கால்ல அடிபட்டு இருக்கார்.  இன்னைக்கு கூட அப்பாவை தனியா விட்டுட்டு வந்ததை நினைச்சு தான் கதிர் இப்படி இருக்கான்"
 
மேனேஜர் "ஓ சாரி கதிர். எனக்கு இது தெரியாம அந்த இன்னொரு அஸ்சிஸ்டன்டுக்கு லீவு கொடுத்துட்டேன்.  anyway நீ போயி உங்க அப்பாவை பாத்துக்கோ.  நான் எப்படி பாத்துக்குறதுன்னு ஏதாவது ஐடியா யோசிக்கிறேன்" சொல்லிவிட்டு அவர் முகத்தில் ஒரு வித குழப்பத்துடன் நகர்ந்தார்.
 
அவர் சென்றதும் உமா கதிரை பார்த்து "நம்ம மேனேஜர் எவ்வளவு நல்லவர் ல.  நமக்கு ட்ரைனிங். இப்போ உன்னோட கஷ்டம் எல்லாம் புரிஞ்சுக்குறார்.  சரி அவர் தான் சொல்லிட்டாரே.. நீ கிளம்பு.  நான் பாத்துக்குறேன்"
 
கதிர் கிளம்பி வீடு செல்லும் போது மதியம் 3 மணி தாண்டி இருந்தது.  அவன் வீட்டுக்குள் வந்ததும் கீர்த்தி படுத்தவாறே "என்னடா.. சீக்கிரம் வந்துட்டே"
 
"இல்லைப்பா மனசு சரி இல்லை. அது தான்"
 
"நல்ல வேலை.. வந்துட்டே.. மதியம் எப்படியோ எழுந்து சாப்பிட்டுட்டேன்.  ஆனா இப்போ எந்திரிச்சி பாத்ரூம் போக தான் பயமா இருந்தது.  வழுக்கிடுமோன்னு.  போயிட்டு வந்துடுறேன்"
 
அவர் எழும்ப முயற்சிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டார்.  கதிர் அவரை கைத்தாங்கலாக புடித்து தூங்கிவிட்டான்.  வால்கெர் வைத்து மெல்ல நடந்து பாத்ரூம் சென்று வந்தார்.  வரும் போதும் கதிர் கொஞ்சம் உதவி செய்தான்.  அங்கேயே அவருக்கு கொஞ்சம் டவல் பாத் மட்டும் எடுக்க ஹெல்ப் பண்ணினான்.  அவருக்கும் கொஞ்சம் ஃபிரெஷ் ஃபீல் வந்தது.  கதிர் கிச்சனில் இருந்த பாத்திரங்களை கழுவிவிட்டு ஸ்டவ்வில் பாலை காயவைக்கும் போது வீட்டு மணி அடித்தது.  கதவை திறந்தான்.  உமா, நந்தினி இருவரும் நின்று கொண்டு  இருந்தனர். கையில் கொஞ்சம் பழங்கள் வாங்கி கொண்டு வந்திருந்தனர்.
 
"உள்ளே வாங்க"
 
கீர்த்தியும் வாள்கெர் வைத்து நடந்து ஹால் வந்து இருந்தார் "வாங்க உமா.. வா நந்தினி"
 
அவர்களுக்குள் பேச ஒரு வித நெருடல் இருந்தது.  கதிர் "உமா, நந்தினி எனக்கும் அப்பாக்கும் டீ போட்டுட்டு இருந்தேன்.  உங்களுக்கு டீ லைட் ஆ இல்லை ஸ்ட்ராங்கா"
 
உமா "இருக்கட்டும் கதிர் வேலைல இருந்து நேர இங்கே வந்துட்டேன்.  வீட்ல போயி குடிச்சுக்குறோம்"
 
கதிர் "ஐயோ உமா.. எங்களுக்கு போட போறேன்.  உங்களுக்கும் கொஞ்சம் போட போறேன். எனக்கு என்ன கஷ்டம் என்று கிட்சன் சென்றான்."
 
உமா, கீர்த்தி, நந்தினி என்ன பேச என்று தெரியாமல் ஒரு மாதிரி பார்த்து கொண்டு இருக்க
 
உமா "சார்.. இப்போ எப்படி வலி இருக்கா"
 
"தலைல வலி இல்லை.  ஆனா கால் முட்டி தான் ரொம்ப வலிக்குது."
 
"கால் மூட்டில என்ன பண்ணி இருக்காங்க"
 
"உங்களுக்கு தெரியாதா.  கால் முட்டி ல fracture அதனாலே, மெட்டல் பிளேட் வச்சு இருக்காங்க.  அது செட் ஆக 2 வாரம் ஆகும்.  பிசியோதெரபி எடுக்க ஆரம்பிக்கணும்"
 
"ஓ இவ்வளவு பண்ணி இருக்காங்களா"
 
"ஹ்ம்ம்.. அது கொஞ்சம் நடக்கும் போது உள்ளே ஏதோ ஒரு பீல், பயம் இருக்கும்"
 
"மதியம் எப்படி மேனேஜ் பண்ணீங்க"
 
"அது அப்போ நடந்து ஹால் வந்துட்டேன்.  சாப்பிட்ட பிறகு பாத்திரம் எல்லாம் எடுத்து கிச்சேன்ல போட தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.  அதுக்கு அப்புறம் பாத்ரூம் போகவும் ரொம்ப பயந்தேன்"
 
அதுக்கு மேலே என்ன பேச ன்னு தெரியாம உமா விழித்தாள்.  நந்தினி ஏதாவது பேசினா உமா தப்பா நினைப்பாளோ என்று அமைதியா இருந்தாள்.
 
கீர்த்தி நந்தினி முகத்தை பார்க்க, நந்தினி வேறு பக்கம் திரும்புவதை உமா கவனித்தாள்.  இப்படி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.
 
கீர்த்தி நந்தினி பார்த்து "நந்து.. சாரி.. நந்தினி.. காலேஜ் ல பாடம் எப்படி போகுது.  என்னோட லீவு பத்தி பிரின்சிபால் கிட்ட சொல்லி இருந்தேன்."
 
"அல்டெர்னட் ப்ரொபசர் இன்னைக்கு வந்தார்.  நீங்க நடத்துன பாடத்தை எல்லாம் ஒரு தடவை ரிவைஸ் பண்ணினார்.  இன்னும் கொஞ்சம் மட்டும் நடத்தணும்னு சொன்னார்.  செமஸ்டர் எக்ஸாம் இன்னும் ஒரு மாசத்துல வர்றது பத்தி நோட்டீஸ் வந்தது."
 
"ஓ அப்படியா.. இன்னும் ஒரு சாப்டர் முடிக்கல.  நான் ப்ரொபசர் கிட்ட பேசுறேன்"
 
அப்போ கதிர் டீ எடுத்து கொண்டு வந்து டேபிளில் வைக்க எல்லோரும் எடுத்து கொண்டனர்.  உமா கதிரிடம் "கதிர் நீ போன அப்புறம் மேனேஜர்க்கு அவரோட பாஸ் செம்ம டோஸ் விட்டாரு போல.  அந்த கார்பொரேட் ட்ரைனிங் ரொம்ப இம்போர்ட்டண்ட் போல"
 
கீர்த்தி "என்ன விஷயம் உமா.. என்ன ஆச்சு"
 
"அது வந்து கதிர் உங்க விஷயமா மேனேஜர் கிட்ட சொல்லி லீவு வாங்கிட்டு வந்துட்டான்.  ஆனா நெக்ஸ்ட் 2 வாரம் எங்க ஹோட்டல்ல ஒரு கார்பொரேட் கம்பெனி ட்ரைனிங் க்காக புக் பண்ணி இருக்காங்க.  மேனேஜர் கதிரை ஃபுல் பாத்துக்க சொன்னார்.  ஆனா இப்போ உங்க நிலமைல அவனால பாத்துக்க முடியாதுன்னு மேனேஜர் லீவு கொடுத்துட்டார்.  ஆனா பாவம் இப்போ அவர் அங்கே மாட்டிகிட்டு முழிக்கிறார்"
 
கீர்த்தி தன்னாலே தான் இப்படி ஆனது என்று மனம் நொந்து என்ன சொல்ல என்று முழித்தார்.
 
கதிர் "அப்பா கவலைப்படாதீங்க.  அவர் பாத்துப்பார்"
 
கீர்த்தி "உன்னோட career என்னாலே ஸ்பாயில் ஆயிடுச்சுல்லே"
 
கதிர் "ஐயோ அப்பா.  நீங்க ரெஸ்ட் எடுங்க.  இன்னும் 2 வாரத்துல எல்லாம் சரி ஆகிடும்"
 
கீர்த்தி "ஆனா இந்த மாதிரி opportunity இனிமே எப்போ வருமோ"
 
உமா "ஐயோ சார்.  விதி நமக்கு என்ன எழுதி வச்சு இருக்கோ, அது தான் நடக்கும்.  நீங்க கவலைப்படுறதால எதுவும் மாறிட போறது இல்லை.  கண்டிப்பா கதிருக்கு இதைவிட நல்ல opportunity அமையும்.  உங்கள விட கதிரை நான் ரொம்ப நம்புறேன்"
 
கீர்த்தி உமாவின் பேச்சை கேட்டு அவள் கதிர் மேல் வைத்து இருந்த நம்பிக்கை வார்த்தையில் ஒரு வித உணர்ச்சி இருப்பதை உணர்ந்தார்.
 
நந்தினி வெகு நேரம் பேசாமல் இருந்துவிட்டு "ஏன் ம்மா நான் வேணும்னா..." கொஞ்சம் முழுங்கி "கீர்த்து..சே.. கீர்த்தி சார்.. நான் வேணும்னா லீவு போட்டு பாத்துக்கட்டுமா"
 
உமா உடனே லேசான புன்முறுவலுடன் "ஏன் டி உனக்கு சமைக்கவே தெரியாது, என்னைக்காவது நீ சாப்பிட்ட பாத்திரத்தை நீ கழுவி இருப்பியா.. இதுல பெரிய மனுஷியாட்டம் அவரை எப்படி பாத்துப்பே"
 
நந்தினி "போங்கம்மா.. நான் போறேன்" என்று சிணுங்கி கொண்டு எழுந்து புறப்பட தயாரானாள்.
 
உமா "ஏய் இருடி..உண்மைய தானே சொன்னேன்.  நாளைக்கு கீர்த்தி சாருக்கு இது தெரிஞ்சு கஷ்டப்படக்கூடாதுல்ல" எதுக்கு அப்படி பேசினோம் என்று தெரியாமல் வாய் உளறியதை நினைத்து ஒரு வினாடி அப்படியே இருந்தாள்.
 
அப்போது உமாவுக்கு அவர் மேனேஜர் கால் வந்தது.  உமா போனை எடுத்து கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று அட்டென்ட் செய்தாள்.
 
"ஹலோ சார் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க.  ஏதாவது அவசரமா"
 
"ஆமா உமா.  நான் கொஞ்சம் மத்தவங்கள வச்சு மேனேஜ் பண்ணிடலாம்னு நினைச்சேன்.  ஆனா முடியாது போல.  அது தான் இப்போ கதிர் வீட்ல அவுங்க அப்பா நிலைமை எப்படி இருக்கு"
 
"கதிர் வீட்டுக்கு தான் சார் வந்து இருக்கேன்.  ரொம்ப சீரியஸ் இல்லை.  ஆனா அப்பாவால நடக்க முடியல.  ஒரு ஆள் சப்போர்ட் எப்படியும் ஒரு 2 வாரம் தேவைப்படும்னு நினைக்குறேன்"
 
"ஓ.. சரி சரி.. ஏதாவது நர்ஸ் ஏற்பாடு பண்ணினா கதிர் அப்பாவுக்கு உபயோகமா இருக்குமா"
 
"இப்போ அது பத்தி தான் பேசிட்டு இருந்தோம்"
 
கதிர் அங்கே வர உமா கதிரிடம் போன் கொடுத்தாள்.
 
"சார்"
 
"கதிர் சாரி இந்த நிலமைல உங்கள டிஸ்டர்ப் பண்ண.  எனக்கு வேற வழி தெரியல.  உங்க சப்போர்ட் கொஞ்சம் சீக்கிரமா தேவைப்படுது.  அப்பாவுக்கு ஏதாவது நர்ஸ் ஏற்பாடு பண்ணா உங்களால ஆபீஸ் வர முடியுமா"
 
"ஹ்ம்ம்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க சார்.  நான் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லுறேன்"
 
"ஓகே கதிர்.. என்ன தப்பா எடுத்துக்காதீங்க.  மேலிடத்துல இருந்து பிரஷர்"
 
"சரி சார்." சொல்லிவிட்டு போன் வைத்தான்.
 
அவன் வருவதற்குள் கீர்த்தியை உமாவும், நந்தினியும் கைத்தாங்கலாக புடித்து கொண்டு உள்ளே கூட்டி சென்று கொண்டு இருந்தனர்.  அவர்கள் அவரை படுக்க வைத்து விட்டு வெளியே வந்ததும் கதிர் "உமா உனக்கு தெரிஞ்சு நர்ஸ் யாராவது இருக்காங்களா"
 
"தெரியலையே கதிர்"
 
கதிர் கொஞ்சம் நேரம் அப்படியே யோசிச்சிட்டு "உமா.. கேக்ககூடாது தான்.  இருந்தாலும் மனசு கேக்கல.. உங்களால ஒரு வாரம் பாத்துக்க முடியுமா"
 
அவன் அப்படி கேட்டதும் உமாவுக்கு கீர்த்தி பேசிய வார்த்தைகள் எல்லாம் கண்முன்னே வந்து போனது.  ஒரு சில வினாடி அப்படியே உறைந்து இருந்தாள்.  மேனேஜர் சொன்ன வார்த்தைகள்.  அவள் மனதில் ஒரு வித போராட்டம்.  கீர்த்தியை தன்னோட பொண்ணோட லவர் னு நினைக்கவா, இல்லை தன்னோட காதலனோட அப்பாவா.  அதுவும் அவரை பார்த்துக்கணும்னா அடிக்கடி பேச வேண்டி இருக்கும்.  அதுல இருக்குற சங்கோஜம்..மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்வி ஒரே நேரத்தில் ஓடியது.
 
"சாரி உமா.. உன்னோட மனசுல என்ன ஓடுதுன்னு புரியுது.  கேக்கணும்னு தோணுச்சு"
 
"கதிர் என்னால எப்படி பாத்துக்க முடியும்.  அதுவும் அவரை தனியா கவனிச்சுக்கணும்னா நமக்குள்ளே என்ன உறவுன்னு யோசிக்க தோணும்.  எல்லாமே ஒரு மாயை மாதிரி இருக்கு.  விதி ஏன் இப்படி விளையாடுது"
 
"இட்ஸ் ஓகே உமா.. நான் மேனேஜர் கிட்ட சொல்லிக்கிறேன்"
 
நந்தினி அப்போது வந்து "என்ன கதிர் அம்மா சோகமா ஆகிட்டாங்க"
 
கதிர் "ஒன்னும் இல்லை.. எங்க ஹோட்டல் மேனேஜர் கால் பண்ணாரு.  அவர் கேட்டதை பண்ண முடியல.  சரி நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு டின்னர் இங்கேயே சாப்பிடுங்களேன்"
 
உமா "அதெல்லாம் வேணாம். ஏற்கனவே நீ நெறய வேலை பாத்துட்டு இருக்கே"
 
நந்தினி மனதில் முன்னே வீட்ல சேர்ந்து டின்னர் சாப்பிட்டு முடிச்சதும் தான் கீர்த்தியுடன் நடந்த முத்த அனுபவம் அவள் மனதில் வந்தது.  ஆனா இப்போ இப்படி நிலமைல இருப்பது ஒரு வித வெறுப்பை தந்தது.
 
கதிர் "ஐயோ உமா.. நான் விருந்துக்கு கூப்பிடல.. நீங்களும் கூட இருந்து ஹெல்ப் பண்ணா டின்னர் சீக்கிரமா முடிச்சிடுவேன்"
 
நந்தினி "ஓ சார் க்கு எங்களை வேலை வாங்குற ஐடியா போல"
 
உமா "ஏய் சும்மா இருடி"
 
அவர்கள் பேச்சில் ஒரு வித இறுக்கம் குறைந்து கொஞ்சம் மற்ற விஷயங்கள் பேச ஆரம்பித்தனர்.  உமாவும், நந்தினியும் நைட் டின்னர் ஜாயின் பண்ண ஒத்துக்கிட்ட மூவரும் சேர்ந்து வேகா வேகமாக சமைத்து முடித்தனர்.  நடுநடுவே நந்தினி காலேஜ் விஷயம் பத்தி, வேறு சில விஷயங்கள் பேசினார்.  ஆனால் அவர்களுக்குள் இருந்த காதல், பழைய நினைவுகளை பத்தி மட்டும் பேசுவதை தவிர்த்தனர்.
 
சமைத்து முடித்த பிறகு, கீர்த்திக்கு கொஞ்சம் உதவி செய்தனர்.  அவரையும் புடித்து கொண்டு வந்து சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர்.  கலகலப்பாக சிரித்து பேசினார்.  கிண்டல் கேலி பேச்சு எல்லாம் சேர்ந்து இருந்தது இப்போது.
 
எல்லாம் முடித்து விட்டு கிளம்பும் போது உமா கதிரிடம் "கதிர் மேனேஜர் போன் பண்ணி நாளை மறுநாளில் இருந்து ஆபீஸ் க்கு வர்றேன்னு சொல்லிடு"
 
"ஏய் விளையாடுறியா.. அப்பா தனியா விட்டுட்டு போக முடியாது"
 
"நான் சொல்ல வந்ததை முழுசா கேளு.. நான் உங்க அப்பாவை ஒரு வாரம் பகல் நேரத்துல பாத்துக்குறேன்.  எனக்கு என்னவோ உன்னையும், உங்க அப்பாவையும் தனியா விட்டுட்டு போக மனசே வரலை"
 
அவள் சொல்லி முடித்ததும் கதிர் அவளை பார்த்து உடனே கட்டி புடித்தான்.  நந்தினி அவர்கள் கட்டி புடித்து இருப்பதை பார்த்து வெக்கத்தில் அந்த பக்கம் திரும்பினாள்.
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)