Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
Fantastc
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!

கதையின் நிறை குறைகளை விரிவாக தெரிவித்தால் அடுத்த பகுதியை விரைவாக பதிவிடுவதற்கு முயற்சி செய்கிறேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
(24-02-2024, 07:02 PM)feelmystory Wrote:
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!

கதையின் நிறை குறைகளை விரிவாக தெரிவித்தால் அடுத்த பகுதியை விரைவாக பதிவிடுவதற்கு முயற்சி செய்கிறேன்.

oru kuraiyum ila brother unga flowla elutnunga
[+] 1 user Likes Zombieraj60's post
Like Reply
அருமையான பதிவு நண்பா.

இந்தக் கதையின் தொடர்ச்சியை வாசிப்பதற்காக 2020 ல் இருந்து காத்திருக்கிறேன்.மீண்டும் இக்கதையை தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் பாதியில் நிறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இதுவரை நீங்கள் பதிவிட்டுள்ள பதிவுகளை பல முறை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிக்கும்போது முதல் முறை வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மிகவும் ப்ரெஷ்ஷான கதை!

வாழ்த்துக்கள்!!

yourock yourock
Like Reply
I think the supporting characters are given importance more and it can be reduced and lead characters can be concentrated. other than that the story is awesome.
Like Reply
Excellent bro
Like Reply
Nicee
Like Reply
Super
Like Reply
Unga style la yaezhuthu brother that's what I want, Continue Writing.
Like Reply
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!

விரைவில் இந்த கதையை நிறைவு செய்துவிட்டு நெஞ்சை தீண்டும் அம்பு...! கதையை தொடர்ந்து எழுதுவேன்.

மேலும் உன்னால் தவிக்கும் மனமே...! கதையின் பழைய திரியை ரீஸ்டோர் செய்தபோது அதில் சில பகுதிகளை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன் என்பதை இப்போதுதான் கவனித்தேன்.

அதை பழைய திரியில் பதிவு செய்ய முடியவில்லை என்பதால் மீண்டும் அந்த கதையை புதிய திரியில் அப்டேட் செய்கிறேன்.

புதிதாக படிக்கும் நண்பர்கள் உன்னால் தவிக்கும் மனமே...! கதைக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

7

 
நான் மதுமிதாவின் கையால் அறை வாங்கிய பிறகு தினேஷை பார்த்தேன். அவன் அந்த இடத்தைவிட்டு தலை தெறிக்க ஓடினான்.

அதன் பின் மெல்ல தலையை திருப்பி மதுமிதாவை பார்த்தேன். அவள் மிகுந்த கோபத்துடன் என்னிடம் சீறினாள்.
 
"விக்ரம்! உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது? ஏன்டா வெக்கமே இல்லாம திரும்ப திரும்ப வந்து தொல்ல பண்ணிட்டு இருக்கே?” என்றாள்.
 
நான் அப்படி என்ன இவளுக்கு தொல்லை கொடுத்துவிட்டேன் என நினைத்தவாறு அவளை ஏக்கத்துடன் பார்த்தேன். அவள் தொடர்ந்து பேசினாள்.
 
"நீ இத்தன நாளா ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துட்டு திடீர்னு எதுக்குடா கம்மியா எடுத்தே? உன்னோட மார்க்க எனக்கு பிச்சை போடுறியா?”
 
இவள் இப்படி கேட்டதற்கு பதிலாக என்னை செருப்பால் கூட அடித்து இருக்கலாம். நான் கூனிகுறுகி அவமானப்பட்டு கூச்சத்தில் நெளிந்தேன். இருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிக்கலாம் என்று முயற்சி செய்தேன்.
 
“மதுமிதா! நான் சொல்றத கொஞ்சம் கேளு ப்ளீஸ்! நீ நல்லா படிச்சதுனாலதான் முதல் மார்க் வாங்குனே! இதுல என்னோட தப்பு எதுவுமே இல்ல!" என்று கெஞ்சினேன்.
 
"சும்மா நடிக்காத விக்ரம்! நான் திரும்ப பர்ஸ்ட் மார்க் எடுத்தது ரொம்ப சந்தோசமாதான் இருந்துச்சு! ஆனா அதுக்கபுறம் எப்படி எடுத்தேன்னு யோசிச்சு பாத்தேன்! நான் எப்பவும் போலதான் படிச்சேன்! எப்படி இவன் என்னைய விட மார்க் ரொம்ப கம்மியா எடுத்தான்னு டீச்சர்ஸ் கிட்ட கேக்கும் போதுதான் நீ கொஸ்டீனுக்கு பதில் எழுதாம விட்டதா சொன்னாங்க! அப்பதான் நீ எனக்கு விட்டுக்கொடுத்தது தெரிஞ்சுது! இது உனக்கே அசிங்கமா தெரியலயாடா?"
 
அவள் கேட்டுவிட்டு கேவலமான பார்வை பார்த்தாள்.
 
இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவளையே உற்று நோக்கினேன்.
 
அவள் தொடர்ந்து என்னை வசைபாடிக்கொண்டே இருந்தாள்.
 
ஒரு கட்டத்திற்கு மேல் அவள் சொல்வதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
 
என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறாளே என்று எரிச்சல்தான் வந்தது.
 
"நீ இப்ப பேசுறத நிறுத்தப்போறியா இல்லையா?"
 
அவளை எதிர்த்து பலமாக சத்தம் போட்டேன்.
 
நான் இப்படி கத்துவேன் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 
அப்படியே பயத்தில் மிரண்டுபோய் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள்.
 
"ஆமா! வேணும்னே கம்மியாதான் மார்க் எடுத்தேன்! எல்லாம் உன்னைய சந்தோஷப்படுத்துறதுக்குதான் பண்ணுனேன்! இதுல உனக்கு என்ன பிரச்சனை?"
 
"என்னைய சந்தோஷப்படுத்த நீ யாருடா?"
 
"உன்னைய பொறுத்தவரைக்கும் நான் யாரோ ஒருத்தனாவே இருந்துட்டு போறேன்! ஆனா நீதான் அந்த பொண்ணுங்குற விஷயம் தெரிஞ்சதுல இருந்து உன்கூட பேசி பழகி எப்படியாவது ஃப்ரெண்ட்ஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன்! அது இனி நடக்காதுன்னு தெரிஞ்சுபோச்சு! அதான் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டேன்! இப்போ இதுக்கு என்ன சொல்லப்போற ?”
 
மதுமிதாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
 
அவளுடைய அந்த அமைதி நான் தொடர்ந்து பேசுவதற்கு சாதகமாக அமைந்தது.
 
என்னுடைய மனதில் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டி தீர்க்கலாம் என்று அதே கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்.
 
“ஏன்டி! எப்பயோ கண்காட்சில நான் பண்ண தப்புக்காக எல்லா பசங்களையும் நீ அடிக்கிறது கொஞ்சம்கூட சரி இல்ல!”
 
“உன்னோட அண்ணன் வெங்கட் ரொம்ப பாவம்டி! உன்கிட்ட கேக்காம பேனாவ எடுத்து எழுதுனது அவ்வளவு பெரிய தப்பா? அதுக்கு போயி அவன் மண்டைய உடைச்சு தையல் போடவச்சுருக்கே!”
 
“அவன் நினைச்சுருந்தா உன்னைய திரும்ப அடிச்சுருப்பான்! ஆனா அடிக்கல ஏன் தெரியுமா? எல்லாத்துக்கும் உன்மேல அவன் வச்சுருக்க பாசம்தான் காரணம்! பசங்க எல்லாருமே தப்பானவங்க இல்லடி. இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது!" என்று நெற்றியில் அடித்துக்கொண்டேன்.
 
அவள் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை தொடர்ந்து பேசினேன்.
 
"நான் கண்காட்சில உன்னோட மனச புரிஞ்சுக்காம நடந்துகிட்டது தப்புதான்! அதுக்கு என்ன காரணம் தெரியுமா?”
 
“உனக்கும் எனக்கும் ஒரே காரணம்தான்”
 
“நான் படிச்சது பசங்க மட்டும் படிக்குற ஸ்கூல்! நீ படிச்சது பொண்ணுங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்!”
 
“பட் ஒரு சின்ன வித்தியாசம்! உனக்கு என்னைய பாத்ததும் பேசுனும்னு தோணுச்சு! ஆனா எனக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசுறதுன்னே தெரியால! ஏன்னா பொண்ணுங்க எல்லாருமே பசங்கள பேசியே கவுத்துடுவாங்கன்னு தப்பா நினைச்சுட்டு இருந்தேன்”
 
“அந்த மாதிரி ஒரு சூழ்நிலைலதான் நீ வந்து பேசுனதும் நானும் உன்கிட்ட தெரியாம அப்படி நடந்துகிட்டேன்!”
 
“அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்ததும் அம்மாகிட்ட நடந்தது எல்லாத்தையும் சொன்னேன்! நீ அந்த பொண்ண அடிச்சது ரொம்ப தப்பு! இனிமே அப்படி நடந்துக்கவே கூடாதுன்னு சொல்லி நிறையா அட்வைஸ் பண்ணாங்க!”
 
“அதுல இருந்து எனக்கு பொண்ணுங்க மேல ரொம்ப மதிப்பு வந்துருச்சு! அதான் இந்த வாட்ச்ச இன்னும் ஆசையா கையில கட்டியிருக்கேன்” என்றதும் அவளுடைய பார்வை கைகடிகாரத்தை நோக்கி சென்றது.
 
அதை கலைக்கும் விதமாக மேலும் பேசினேன்.
 
"உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?" என்றதும் மீண்டும் என்னுடைய முகத்தை பார்த்தாள்.
 
"ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வந்ததும் உன்கிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்! ஆனா நீ பேசுனா அடிப்பேன்னு சொல்லி எல்லாரும் என்னைய ரொம்ப பயமுறுத்துனாங்க! சரின்னு அந்த ஆசைய கைவிட்டுட்டேன்!”
 
“நான் பர்ஸ்ட் மார்க் வாங்குனதுக்கு அப்புறம்தான் நீ யாருனு எனக்கு தெரிஞ்சுது”
 
“அதுல இருந்து உன்னைய எப்படியாச்சும் என்கூட பேச வைக்கனும்னு தினேஷ் ரொம்ப கஷ்டப்பட்டான்”
 
“நானும் உன்கிட்ட பேசனுங்குற ஆசையில இப்படியெல்லாம் செஞ்சு இன்னிக்கி உன்னோட கையாலேயே அடியும் வாங்கிட்டேன்!
 
“நான் உன்னைய அடிச்சதுக்கு கடவுளா பாத்து கொடுத்த தண்டனையா இதை நினைச்சுக்குறேன்!
 
“இனிமே உனக்கு என்னால எந்த தொந்தரவும் இருக்காது! நீ நிம்மதியா இருக்கலாம்! ஆனா எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?" என்று கேட்டேன்.
 
உடனே மதுமிதா என்ன செய்ய வேண்டும் என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

"உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன்! இனிமே பசங்க யாரையும் அடிக்காத! அவங்க எல்லாரும் ரொம்ப பாவம்டி!"
 
அவள் எந்த பதிலும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
 
சரி இதற்குமேல் பேச எதுவும் இல்லை என்று நினைக்கும்போதுதான் கடிகாரத்தை பார்த்தேன்.
 
இவளிடமே இனி பேசப்போவதில்லை! இது மட்டும் எதற்காக என்னுடைய கையில் இருக்க வேண்டும் என்று யோசித்து கையில் கட்டியிருந்த கடிகாரத்தை கழட்டினேன்.
 
"என்னைய பிடிக்காதவங்களோட பொருள் எனக்கு தேவையே இல்ல! இனிமே இத நீயே வச்சுக்கோ!"
 
அவளது வலது கையை பிடித்து கைக்கடிகாரத்தை அதில் வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் விறுவிறுவென நடந்தேன்.
 
வேகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறினேன்.
 
அங்கே பள்ளியின் வாயிற்கதவுக்கு பக்கத்தில் காம்பௌன்ட் சுவரை ஒட்டினாற்போல் தினேஷ் நின்றுக்கொண்டிருந்தான்.
 
என்னை பார்த்ததும் என்னுடைய சைக்கிளை பிடித்து நிறுத்தினான்.
 
நான் கோபமாக அவனை பார்த்து முறைத்தேன். அவன் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"என்ன மச்சி! என்னாச்சு?"
 
"ஒன்னும் ஆகல சைக்கிள்ல இருந்து கைய எடு நான் கிளம்பனும்!"
 
"விட்டுட்டு வந்துட்டேன்னு கோபமா மச்சி?"
 
"இல்ல ரொம்ப சந்தோசமா இருக்கேன்! முதல்ல வழிய விடுடா நான் போறேன்"
 
"என்னடா இப்படி கோவப்படுற? நீயும் மதுமிதாவும் பெர்ஸனலா பேசிட்டு இருப்பீங்கன்னுதான் வெளியே ஓடி வந்துட்டேன்!"
 
"ஏன்டா! அடி வாங்குனது பெர்ஸனலா?"
 
"அப்போ அது பெர்ஸனல் இல்லையா மச்சி?"
 
"நாயே! நீ அவகிட்ட அடிவாங்குனதுக்கு என்னையும் சேத்து பழி வாங்கிட்டேல்ல! இப்போ உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே!"
 
"என்ன மச்சி இப்படியெல்லாம் பேசுற? உனக்கு போயி அப்படி பண்ணுவேனா?"
 
தினேஷ் பரிதாபப்படுவது போல் முகத்தை வைத்தான்.
 
"டேய்! ரொம்ப நடிக்காதடா உன்னோட மூஞ்சிக்கு அதெல்லாம் செட்டே ஆகல!"
 
"கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ!” என்று கூறிவிட்டு அமைதியாக பார்த்தான்.
 
"என்னடா தினேஷ்! பேசாம என்னையே பாத்துட்டு இருக்கே?"
 
"உன்னைய எங்கடா பாத்தேன்! உனக்கு பின்னாடி மதுமிதா ஸ்கூலுக்குள்ள இருந்து வெளியே வந்துட்டு இருக்குறா! அதத்தான் பாக்குறேன்!”
 
நான் என்னுடைய தலையை திருப்பி பார்த்தேன்.
 
பள்ளியை விட்டு வெளியே வந்தவள் நாங்கள் நிற்பதை கண்டுக்கொள்ளாமல் வேகமாக சைக்கிளை இயக்கி அங்கிருந்து நகர்ந்தாள்.
 
அவள் என் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
திடீரென்று என் முதுகை தட்டி "மச்சி என்னடா பண்றே?" என்று தினேஷ் கேட்டதும்தான் நினைவுக்கு வந்தேன். சட்டேன்று திரும்பி அவன் முகத்தை பார்த்தேன்.
 
"என்னடா ஆச்சு ஒரு மாதிரியா இருக்கே? அவளுக்கும் உனக்கும் இப்ப என்னதான் நடந்துச்சு?"
 
"தினேஷ்! அதபத்தி பேச வேணாம்டா!"
 
"இப்ப சொல்ல போறியா இல்லையா?" என்று முறைத்தான்.
 
"சரி சொல்லி தொலைக்குறேன்! அதுக்காக இப்படில்லாம் முறைக்காத காமெடியா இருக்கு!"
 
"அது இருந்துட்டு போகுது சொல்லி தொலைடா!"
 
"நான் வேணும்னே மார்க் கம்மியா வாங்குனது அவளுக்கு தெரிஞ்சுபோச்சுடா! அதுக்குதான் அடிச்சுட்டா!"
 
"நல்லவேள நான் தப்பிச்சேன்!"
 
"என்னடா சொன்னே?"
 
"ஒன்னும் சொல்லல மச்சி! யூ கண்டினியூ!"
 
"அதுக்கப்புறம் இனிமே உனக்கு எந்த தொல்லையும் பண்ணமாட்டேன்! நான் செஞ்சது எல்லாம் தப்புதான்! இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன்னு கோவமா சொல்லிட்டு வந்துட்டேன்!"
 
"என்னடா இப்படி சொல்லிட்டு வந்துட்டே?"
 
"அப்புறம் என்ன பண்ண சொல்றே?"
 
"ஹ்ம்ம்... என்கிட்டே இன்னொரு ஐடியா இருக்கு மச்சி! செமையா ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்குறேன்!"
 
"என்னோட கால்ல ஷீ இருக்கு மச்சி! கழட்டி உன்னோட மூஞ்சில அடிச்சா செமையா வலிக்கும்!"
 
"சரி விடு! இதோட எல்லாத்தையும் நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டியா?"
 
"ஆமாடா எவ்வளவுதான் நாமளும் கெஞ்சிகிட்டு இருக்குறது? நமக்கு வேற வேலையே கிடையாதா?"
 
"சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்! ஆனாலும் வேற எதாச்சும் பண்ணலாம்னு எனக்கு தோணுதுடா!"
 
"நீ அடிவாங்காம இங்க இருந்து வரமாட்டேனு நினைக்குறேன்?"
 
"ஒகே மச்சி! உனக்கு பிடிக்கலைனா வேணாம்!"
 
"ஹ்ம்ம்... சரி இந்த அறை வாங்குனது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்! ஃப்ரெண்ட்ஸ் யாருகிட்டயும் சொல்லிடாத!"
 
"முயற்சி பண்றேன்!"
 
"டேய் தினேஷ்! ப்ளீஸ் சொல்லிடாதடா!”
 
"ஹ்ம்ம்... அந்த பயம் இருக்கனும்!”
 
“போடா டேய்”
 
நான் சலிப்புடன் சொன்னேன்.
 
“சரிடா! நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்! நீ ஒன்னும் கவலைப்படாத! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!"
 
"டேய் தினேஷ்! இந்த டயலாக் இனிமே பேசுனே கொன்னேபுடுவேன்!"
 
"ஸாரி மச்சி! இனிமே பேசல! வா கிளம்பலாம்!" என்று இளித்தான்.

அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அன்று இரவு தூங்கும்போது மதுமிதாவின் நினைவு முன்பை விட அதிகரித்து இருப்பதை உணர்ந்தேன்.
 
கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ என்று மனதிற்குள் உறுத்தியது. இனி யோசித்து என்ன பயன்? எல்லாம் முடிந்தது என்று அப்படியே தூங்கினேன்.
 
அடுத்தநாள் எப்போதும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்று என்னுடைய இடத்தில் அமர்ந்தேன். மதுமிதாவை திரும்பி பார்க்காமல் அருகில் இருந்த தினேஷிடம் பேசி நேரத்தை போக்கினேன்.
 
சிறிது நேரத்தில் ஆசிரியர் வந்து பாடத்தை எடுக்கத் தொடங்கினார். நான் அதை கவனிக்க தொடங்கினேன்.
 
மதியம் உணவு இடைவேளை வந்தது. நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.
 
அப்போது வெங்கட்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
 
"ஹே! எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!"
 
"என்னடா சொல்லணும்?" தினேஷ்தான் கேட்டான்.
 
"நேத்து ஈவ்னிங்! மதுமிதா வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட பேசிட்டா!"
 
வெங்கட் சந்தோசத்துடன் சொன்னான்.
 
"எப்பிடிடா?"
 
எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டே உற்சாகத்தில் துள்ளினார்கள்.
 
மதுமிதா எப்படி இவனிடம் வந்து பேசினாள் என்று எனக்கு மட்டும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
 
ஒரு வேளை நான் கோபத்தில் திட்டியதால் எல்லா விஷயத்தையும் இவனிடம் கூறிவிட்டாளா என்ற பயத்துடன் துடித்தேன்.
 
"எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க சொல்றேன்!" என்று வெங்கட் பேச ஆரம்பித்தான்.
[+] 5 users Like feelmystory's post
Like Reply
நேற்று மாலை வெங்கட் அவனுடைய அறையில் அமர்ந்து புத்தகத்தை வைத்துக்கொண்டு எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

"ச்சே எவ்வளவுதான் படிச்சாலும் பாஸ் மட்டும்தான் ஆக முடியுது! அதிகமா மார்க் வாங்கவே முடியல! இந்த விக்ரம்! மதுமிதா! எல்லாரும் எப்படிதான் நல்லா படிச்சு நிறையா மார்க் வாங்குறாங்களோ! விக்ரம்கிட்ட டவுட் கேக்கலாம்னு நினைச்சா அவன் பதில் சொல்லுவானானு தெரியாது! மதுமிதாகிட்ட பேச போனாலே அடிப்பா! நாம என்னதான் பண்றது?" என்று புலம்பியவாறு பாடத்தை படித்தான்.
 
அப்போது அவனுக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது.
 
"அண்ணா...!"
 
"இந்த வாய்ஸ எங்கயோ கேட்டு இருக்கேனே!" என்றவாறு யோசித்தான்.
 
திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது.
 
"அய்யோ...!!! மதுமிதாவா என்னைய கூப்பிடுறா?"
 
வேகமாக இடப்பக்கம் தலையை திருப்பி பார்த்தான்.
 
அங்கே யாரும் இல்லை.
 
"ச்சே... எல்லாம் பிரம்மையா இருக்கும்! உன்கிட்ட கனவுல கூட வந்து அவ பேசவே மாட்டா" என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கினான்.
 
இப்போது அவனது வலது பக்க தோள்பட்டையில் சொட்டு சொட்டாக நீர் துளிகள் விழுவதை போல் உணர்ந்தான்.
 
"என்னது ரூமுக்குள்ள மழையா பெய்யுது?" என்று திரும்பி பார்த்தான்.
 
மதுமிதா அவனுக்கு வலது பக்கத்தில் நின்றுவாறு சத்தம் வராமல் அழுதுக்கொண்டிருந்தாள்.
 
அவளது கண்ணீர் துளிகள்தான் வெங்கட்டின் தோள்ப்பட்டையில் விழுந்த நீர் துளிகள் என்று தெரிந்ததும் ஏன் இவள் இப்படி அழுகிறாள் என்று புரியாமல் அவளது முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
 
"அண்ணா! என்னைய மன்னிச்சிடு!" என்று சொல்லிவிட்டு தொடர்ந்தது அழுதாள்.
 
மதுமிதா தன்னிடம் வந்து பேசியதை நம்ப முடியாமல் வெங்கட் உறைந்து போனான்.
 
அவளாக வந்து என்னிடம் பேசும்வரை நான் பேசவே மாட்டேன் என்று உறுதியுடன் இருந்தவனின் முகம் சட்டென்று மாறி மகிழ்ச்சி கடலில் தத்தளித்தது.
 
என்னுடைய தங்கையா என்னிடம் வந்து பேசுகிறாள் என்று ஆச்சர்யத்துடன் அவளது முகத்தை பார்த்தான்.
 
"ப்ளீஸ்ணா! நான் உன்னைய ரொம்ப நோகடிச்சுட்டேன்! என்னைய மன்னிச்சுடு!"
 
அவள் கூறிக்கொண்டே வெங்கியின் கைகளை பிடித்தபடி அழுதாள்.
 
இப்போதுதான் வெங்கட் அதிர்ச்சியில் இருந்து விலகி பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா! அழாத! முதல்ல உக்காரு!"
 
அருகில் இருந்த சேரில் அவளை அமர வைத்தான்.
 
அவள் கொஞ்சம் தயக்கத்துடன் அமர்ந்து மீண்டும் அழுதாள்.
 
"இப்ப அழாதன்னு சொல்லுறேன்ல! கேக்க மாட்டியா? என்று அவளது கண்களை துடைத்தான்.
 
"நீ... எ..என்...னைய... மன்னிச்சுட்டேன்னு சொ...சொல்...லுணா ப்ளீஸ்!"
 
அவள் திக்கிக்கொண்டே பேசினாள்.
 
"சரி நான் உன்னைய மன்னிச்சுட்டேன் போதுமா?"
 
"அத கொஞ்சம் சிரிச்சுட்டு சொன்னாதான் என்னவாம்?"
 
அவள் கண்களை துடைத்துக்கொண்டு முகத்தை உம் என வைத்துக்கொண்டாள். அதனால் வெங்கட்டின் முகத்தில் மெதுவாக புன்னகை தோன்றியது.
 
"சத்தியமா உன்னைய மன்னிச்சுட்டேன்!"
 
அவளது தலையில் கை வைத்து சிரித்தான்.
 
"ரொம்ப தேங்க்ஸ்ணா! நான் அப்போ அடிச்சது உனக்கு இன்னும் வலிக்குதா?”
 
வெங்கட்டின் நெற்றியை பாசத்துடன் தடவினாள்.
 
"அடிச்சு ரெண்டு வருஷம் ஆனதுக்கு அப்புறம் வந்து கேக்குறியா?” வெங்கட் பொய்யாக கோபித்துக்கொண்டான்.
 
"இல்லணா! ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன்! இனிமே பண்ண மாட்டேன்!" என்று அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
 
"நிஜமாதான் சொல்றியா? என்னால நம்பாவே முடியல!"
 
"சத்தியமாதான் சொல்லுறேன்! உன்னைய மட்டும் இல்ல இனிமே யாரையும் தேவையில்லாம அடிக்கமாட்டேன்! ப்ளீஸ் என்னைய நம்புணா!" என்று கெஞ்சினாள்.
 
உண்மையாகவே மதுமிதா மாறிவிட்டாள் என்றுதான் வெங்கட்டுக்கு தோன்றியது.
 
திடீரென்று எப்படி இவளுக்குள் இந்த மாற்றம் வந்தது?
 
என்ன காரணமாக இருக்கும்?
 
ஒருவேளை விக்ரமின் செயலாக இருக்குமோ என்று யோசித்தான்.
 
எதற்கு இப்படி குழம்ப வேண்டும் அவளிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா! எப்படி நீ திடீர்னு மாறுனே! உன்னோட மாற்றத்துக்கு யாரு காரணம்?"
 
இந்த கேள்விக்கு மதுமிதா சற்று தடுமாற்றம் அடைந்தாள்! இருந்தாலும் அதை சமாளித்துக் கொண்டு பேசினாள்.
 
"திடீர்னுலாம் ஒன்னும் மாறல! உன்கிட்ட ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சேன்! ஆனா நீ என்னைய தப்பா நினைச்சுட்டு இருப்பியோனு யோசிச்சேன். பட் இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல பேசி ஆகணும்னு முடிவு பண்ணி பேசிட்டேன்!" என்று புன்னகைத்தாள்.
 
"ஹ்ம்ம்... நான் கூட விக்ரம் அதிகமா மார்க் வாங்குனதுதான் நீ மாறுனதுக்கு காரணமோனு நினைச்சுட்டேன்!"
 
"அவன் மார்க் வாங்குனா நான் எதுக்கு மாறனும்? என்னோட அண்ணன் கிட்ட பேசுறதுக்கு எந்த காரணமும் தேவையில்ல!" என்று சீறினாள்.

"தங்கச்சிமா! இப்ப எதுக்கு கோவப்படுற? நான் தெரியாம கேட்டுட்டேன்! நீ என்கிட்ட வந்து பேசுனது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?"
 
வெங்கட் பாசத்துடன் அவளது கன்னத்தை தட்டினான்.
 
"ஸாரிண்ணா! இனிமே கோவப்பட மாட்டேன்! உன்கிட்ட பேசுனது எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு!"
 
"இனிமே எனக்கும் எந்த காரணமும் தேவை இல்ல" என்று சிரித்தான்.
 
"சரிண்ணா! ஏதோ படிக்க முடியலன்னு புலம்பிட்டு இருந்தியே! என்னதான் ஆச்சு?"
 
தனிமையில் இருப்பதாக நினைத்து புலம்பியதை மதுமிதா கேட்டுவிட்டாளே என்று வெங்கட்டுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
 
"அதெல்லாம் ஒன்னும் இல்ல! சும்மாதான் யோசிச்சுட்டு இருந்தேன்!"
 
"ஏன் இப்படி தயங்குறே? இனிமே நாம ஒன்னாவே படிக்கலாம்! உனக்கு எந்த டவுட் வந்தாலும் என்கிட்ட கேளு! எனக்கு தெரியலனா டீச்சர்ஸ் கிட்ட கேக்கலாம் ஒகேயா?"
 
இத்தனை நாளாக கஷ்டத்தில் இருந்த வெங்கட்டுக்கு இது மிகுந்த சந்தோசத்தை அளித்தது.
 
"சரி மதுமிதா! எதுவா இருந்தாலும் கண்டிப்பா கேக்குறேன்" என்று மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான்.
 
"அப்படிதான் இருக்கனும்! மை டியர் ஸ்வீட் அண்ணா!"
 
வெங்கட்டின் கன்னத்தை பாசத்துடன் கிள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
இவ்வாறு நடந்ததை அனைத்தையும் நண்பர்களிடம் வெங்கட் கூறி முடித்தான்.
 
"சூப்பர் மச்சி! அப்படியே பாசமலர் படத்த ரீமேக் பண்ண மாதிரி இருந்துச்சு!”
 
தினேஷ் அவனை கிண்டல் செய்தான்.
 
"ஹ்ம்ம்..."
 
அதை மட்டும் சொல்லிவிட்டு வெங்கட் அவனை முறைத்தான்.
 
“ஹீ... ஹீ... ஹீ...” என்று தினேஷ் இளித்தான்.
 
எல்லோரும் அதை பார்த்து சிரித்ததும் வெங்கட்டும் புன்னகைத்தான்.
 
"வெங்கி! எப்படியோ அவள பேச வச்சுட்டே!" என்று காயத்ரி கை கொடுத்தாள்.
 
"சூப்பர் வெங்கி! இனிமே அவ எங்க கிட்டலாம் பேசுவாளா?" என்று ரம்யா கேட்டாள்.
 
"ஹ்ம்ம்... கண்டிப்பா பேசுவா! இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கூட சாப்பிடுறதுக்கு வரேன்னு சொல்லிருக்கா! உங்களுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே?"
 
“இதுல என்னடா பிரச்சனை? அவ எங்ககூட நார்மலா பேசுனா ரொம்ப சந்தோசமா இருக்கும்!” என்றனர்.
 
அவள் வெங்கியிடம் என்னை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வரப்போகிறாள். நான் என்ன செய்ய போகிறேன் என்று புரியாமல் என்னுடைய இதயத்துடிப்பு அதிகரித்தது.
 
அப்போது கார்த்தி வெங்கியிடம் பேசினான்.
 
"டேய் வெங்கி! மதுமிதா உன்கிட்ட வந்து பேசுனதுக்கு காரணம் விக்ரம் இல்லையா?"
 
"இல்லடா விக்ரம்லாம் ஒரு காரணமே இல்ல! அவளாவே தப்பு பண்ணிடோம்னு உணர்ந்து திருந்திட்டா! இனிமே நீங்க யாரும் அவளுக்கு முன்னாடி இப்படி கேக்காதீங்க!" என்று வெங்கட் எச்சரித்தான்.
 
ஆனால் அவளுடைய மாற்றத்திற்கு காரணம் விக்ரம்தான் என்பதை வெங்கட் தவிர எல்லோரும் புரிந்துக்கொண்டனர். இருந்தாலும் வெங்கி சொன்னதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து அமைதி காத்தனர்.
 
சில நிமிடங்களுக்கு பிறகு...
 
"ஹே! அங்க பாருங்க அவ வந்துட்டா" ரம்யாதான் கத்தினாள்.
 
எங்களை நோக்கி... மதுமிதா நடந்து வருவதை கவனித்தேன்.
 
நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை பார்த்து கையசைத்து அழைத்தனர்.

அவளும் சிரித்த முகத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தாள்.
 
நான் எதுவும் செய்ய தோணாமல் சாப்பிட ஆரம்பித்தேன்.
 
"என்ன மச்சி! ஒரு மாதிரி இருக்கே?" தினேஷ்தான் கேட்டான்.
 
"ஏன் உனக்கு தெரியாதா?"
 
"மச்சி அவளோட மாற்றத்துக்கு நீதான் காரணம்னு எல்லாருக்கும் தெரியும்! வெங்கட் இருக்கான்னுதான் யாரும் பேச மாட்றாங்க! நீ ஒன்னும் கவலப்படாத!"
 
"அதெல்லாம் ஓகேடா! இப்ப அவ இங்க வந்து எல்லார் கிட்டயும் பேசபோறா! நான் என்ன பண்றது?"
 
"நீ எதையும் கண்டுக்காம இரு! என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்!"
 
“சரி எது வேணாலும் நடந்துட்டு போகட்டும்!” என தைரியமாக இருந்தேன்.
 
அப்போது மதுமிதா எங்கள் அருகில் வந்து நின்றாள்.
 
"இங்க வந்து உட்காருடி!"
 
ரம்யா அவளது அருகில் வந்து அமர சொன்னாள்.
 
கொஞ்சம் தயக்கத்துடன் வந்து அமர்ந்தவள் எல்லோரிடமும் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

முதலில் கார்த்தியிடம்தான் பேசினாள்.
 
"ஸாரி கார்த்தி! ஒரு தடவ உன்னைய தெரியாம அடிச்சுட்டேன்! என்னைய மன்னிச்சுடு ப்ளீஸ்!" என்றாள்.
 
“அதெல்லாம் பரவாயில்ல” என்று சிரித்தான்.
 
காயத்ரி! ரம்யா! இருவரிடமும் கடுமையாக நடந்துக்கொண்டதை எண்ணி வருத்தம் அடைந்து மன்னிப்பு கேட்டாள். இறுதியாக தினேஷிடமும் மன்னிப்பு கேட்டு முடித்தாள்.
 
அனைவரும் அவளை மன்னித்து பேசி மகிழ்ந்தனர்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
தங்கையின் மாற்றத்தை பார்த்து வெங்கியின் முகம் புன்னகையுடன் காணப்பட்டது.

எல்லோரிடமும் நன்றாக பேசுபவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று நினைக்கும்போது எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
 
அப்படி இருக்கும் வேளையில்தான் காயத்ரி மதுமிதாவிடம் ஒன்று கேட்டாள்.
 
"எங்க கூட மட்டும் பேசிட்டு இருக்கே! விக்ரம் கூட பேச மாட்டியா?"
 
அதற்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று பதறியவாறு மதுமிதாவின் முகத்தை பார்த்தேன்.
 
"இவனிடம் என்ன பேசுவது?” என்பது போல் ஏளனமாக என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
 
நான் முகத்தை திருப்பி கொண்டேன்.
 
அவளது பார்வை புரிந்து என்னைப்பற்றி வேறு எதுவும் கேள்விகள் கேட்காமல் அனைவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்தனர்.
 
விக்ரம் அதிகமாக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மதுமிதா கோபமாக இருக்கிறாள். இப்போது அதைப்பற்றி கேட்டால் தன்னிடமும் பேசாமல் சென்று விடுவாள் என்று வெங்கியும் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டான்.
 
இப்போது நான் மட்டும் மகிழ்ச்சி இழந்து காணப்பட்டேன். அதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அவளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
 
எனக்கு அதற்கு மேல் அங்கே இருப்பதற்கு மனம் இல்லை. அதனால் வேகமாக சாப்பிட்டு முடித்தேன்.
 
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! கிளாஸுக்கு போறேன்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
 
வகுப்பறைக்கு சென்று தனியாக அமர்ந்து மனதிற்குள்ளேயே அழுது புலம்பினேன்.
 
சிறிது நேரத்தில் என்னுடைய நண்பர்கள் அனைவரும் அவளிடம் சிரித்து பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தனர். அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்தார்கள்.

மதுமிதா என்னை ஏறிட்டுக் கூட பார்க்காமல் அவளுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
 
இவள் நிச்சயமாக என்னிடம் பேசவே மாட்டாள் என்று நான் நன்றாக புரிந்துக்கொண்டு மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தேன்.
 
"என்னடா இப்படி மூஞ்சிய உர்ருன்னு வச்சு இருக்கே? ரிலாக்ஸா இருடா!"
 
தினேஷ் நிலைமை புரியாமல் சொன்னான்.
 
நான் எதுவும் பதில் பேசவில்லை.
 
அவனும் என்னை கண்டுக்கொள்ளாமல் மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினான். அதன்பிறகு ஆசிரியர் வந்த காரணத்தால் கவலையுடன் வகுப்பை கவனிக்க தொடங்கினேன்.
 
ஒரு வழியாக மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்தது. மதுமிதா எப்போதும் போல் கிளம்பினாள். ஆனால் அதில் ஒரே ஒரு மாற்றம் கூடவே வெங்கியையும் வர சொல்லி அழைத்து சென்றாள்.
 
இப்படியே அனைவரும் கிளம்பினார்கள். நான் மட்டும் அங்கிருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோகத்துடன் அமர்ந்தேன்.
 
"டேய்! இப்போ நீ வர போறியா இல்லையா?"
 
அருகில் இருந்த தினேஷ்தான் கத்தினான்.
 
"நான் வரல! நீ போடா!"
 
"நீ இப்படி அவளையே நினைச்சுட்டு இரு! நான் கிளம்புறேன் போடா!"
 
தினேஷ் கோபமாக வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
 
நான் அவனை தடுப்பதற்கு மனமில்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
மதுமிதாவிடம் எப்படியெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் இன்று தனியாக அமர்ந்திருக்கிறேன்.
 
அவள் என்னை பற்றி புரிந்துக்கொள்ள வாய்ப்பே இல்லையா?
 
அதோடு இனி எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லையா?
 
இப்படியே நீண்ட நேரம் அழுது புலம்பினேன்.
 
ஆனால் திடீரென்று எனக்கு மனதில் ஒன்று தோன்றியது.
 
நான் எதற்காக இப்படி அழ வேண்டும்?
 
அவள் என்னிடம் பேசாமல் இருந்தால் வாழவே முடியாதா?
 
ஏன் முடியாது?
 
இனிமேல் நான் உண்டு! என்னுடைய படிப்பு உண்டு! என்று இருந்தால் நிச்சயம் முடியும்.

எதை பற்றியும் கவலைப்படவே கூடாது என்று கண்களை வேகமாக துடைத்தேன்.
 
இப்படி தனியாக அமர்ந்து புலம்புவது தவறு என்று தீர்மானித்து தெளிவான மனதுடன் வகுப்பைவிட்டு வெளியேறினேன்.
 
சிறிது நேரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் சென்றடைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் மட்டும் தனியாக இருந்தது.
 
இனி எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அது உணர்த்துவது போல் எனக்கு தெரிந்தது.
 
சைக்கிளை எடுக்கலாம் என்று கை வைத்தேன்.
 
அப்போதுதான் அந்த குரல் கேட்டது.
 
"டேய்! விக்ரம்!"
 
அது மதுமிதாவின் குரல்தான்.
 
இவள் இன்னும் கிளம்ப வில்லையா?
 
எதற்காக என்னை அழைக்கிறாள்?
 
அந்த பயத்துடன் திரும்பி பார்த்தேன்.

"இவ்வளவு நேரம் கிளாஸ்ல உக்காந்துட்டு என்னடா பண்ணே?"
 
கண்கள் சிவக்க கோபத்தில் கத்தினாள்.
 
என்ன இவள் இப்படி கத்துகிறாள்!
 
இதற்கெல்லாம் பயந்துவிடக்கூடாது என்று நானும் பேசினேன்.
 
"நான் எங்க இருந்தா உனக்கென்ன? முதல்ல வழிய விடு நான் வீட்டுக்கு போகனும்"
 
நான் சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க சென்றேன்.
 
உடனே அவள் என்னை விடாமல் கையை பிடித்து இழுத்தாள்.
 
"ஏன்டி! இப்படி தொல்ல பண்றே? என்னைய நிம்மதியா இருக்க விட மாட்டியா?"
 
மனதில் தேங்கி இருக்கும் வலியுடன் கேட்டேன்.
 
"நீ நிம்மதியா இருக்கதான்டா இப்படி இழுக்குறேன்!"
 
மதுமிதா அப்படி சொல்லும்போதே அவளது முகத்தில் கோபம் மறைந்து புன்னகை தோன்றியது.
 
என்ன இவள் சிரிக்கிறாள்?
 
இவளுக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா என்று குழம்பினேன்.
 
"நீ என்ன லூசு ஆகிட்டியா?"
 
"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்! முதல்ல உன்னோட கைய குடு!"
 
வேகமாக எனது இடது கையை பற்றி இழுத்தாள்.
 
"எதுக்குடி இப்போ இழுக்குறே? "என்று கத்தினேன்.
 
"விக்ரம்! இது எப்பவும் உன்கிட்டதான் இருக்கணும்!"
 
மதுமிதா சொல்லிக்கொண்டே நேற்று நான் அவளிடம் கொடுத்த கைக்கடிகாரத்தை என்னுடைய கையில் கட்டினாள்.
 
நான் அப்படியே ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தேன்.
 
இவளாக முன்வந்து கடிகாரத்தை கட்டிவிடுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் என்னுடைய கோபம் முழுவதும் காற்றில் பறந்து சென்றது.
 
நானும் அவளது முகத்தை பார்த்து மெல்ல சிரிக்க தொடங்கினேன்.
 
அவள் என்னுடைய கைகளை பற்றியபடியே சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள்.
 
"நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா?"

இதற்குத்தானே இவ்வளவு நாட்களாக ஏங்கிக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கும்போதே என் கண்களின் ஓரத்தில் இருந்து நீர் துளிகள் எட்டிப்பார்த்து மெல்ல வழிந்தது!
[+] 6 users Like feelmystory's post
Like Reply
Wow wow wow what a beautiful narration, super brother vaerra level Sago
Like Reply
romba nalla kondu poringa brother adutha updateku waiting
Like Reply
Sema story... Continue
Like Reply
சூப்பர் update bro, அதே போல் நெஞ்சை தீண்டும் அம்பு கதைக்கும் update podunga bro.அந்த கதையும் இதே போல வீருவீருப்பாக போகும்.
Like Reply
Extraordinary update
Like Reply
"சிறிது நேரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் சென்றடைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் மட்டும் தனியாக இருந்தது.
 
இனி எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அது உணர்த்துவது போல் எனக்கு தெரிந்தது."



அருமையான வரிகள்!!
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
Marvelous
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)