Posts: 128
Threads: 2
Likes Received: 93 in 49 posts
Likes Given: 12
Joined: Oct 2023
Reputation:
2
நான் மாலை வேலை முடிந்து வழக்கம் போல வீட்டுக்கு சென்றேன்
அதுல்யா.. அதுல்யா.. என்று குரல் கொடுத்து கொண்டே உள்ளே நுழைந்தேன்
எந்த பதில் குரலும் இல்லை
எனக்கு ஆச்சரியமாக இருந்தது..
நான் வாசலில் செருப்பை கழட்டும் சத்தம் கேட்டதுமே கிச்சனில் என்ன வேலையாக இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து என்னை கட்டி அனைத்து கொள்ளும் என் அன்பு மனைவி அதுல்யாவை காணவில்லை
என்னடா இவன் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கிறானே என்று ஆச்சரிய படுகிறீர்களா
நாங்கள் புதிதாக திருமணம் ஆனா ஜோடி என்று நினைக்கிறீர்களா..
அதெல்லாம் ஒன்றும் இல்லை..
எங்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது
இருந்தாலும் திருமணம் ஆனா புதிதில் எங்கள் அன்பு எப்படி இருந்ததோ..
எப்படி எங்கள் பழக்கவழக்கங்கள் இருந்ததோ.. இம்மி அளவு குறையாது இன்று வரை அப்படியே இருக்கிறது
சிலர் சொல்வார்கள் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. என்று
ஆனால் அந்த பழமொழி எங்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்புடையதாக இல்லை
திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் என் குரல் கேட்டதும் ஓடோடி வந்து என்னை இறுக்கி கட்டி கொள்வாள் என் அதுல்யா..
என் முகம் முழுவதும் முத்தம் கொடுப்பாள் என் அதுல்யா..
இன்னும் அவள் முத்தம் அவள் முதல் ராத்திரியில் கொடுத்த அதே முதல் முத்தத்தின் இனிப்பு மாறாததாகவே இருக்கும்
இதுவரை நாங்கள் இணை பிரிந்ததே இல்லை
அதுல்... ஏய் அது.. என்று நான் கிட்சன் பாத்ரூம் மொட்டை மாடி.. பெட் ரூம் எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன்
எங்கே போனாள் என் அன்பு மனைவி.. என் ஆசை மனைவி.. என் காதல் மனைவி..
என் மனைவியை தேட ஆரம்பித்தேன்
தொடரும் 1
Posts: 1,074
Threads: 1
Likes Received: 422 in 321 posts
Likes Given: 34
Joined: Feb 2019
Reputation:
7
பொருத்தமான படங்களுடன் சுவாரஸ்யமாக கதை ஆரம்பமாகியிருக்கிறது ! கொஞ்சம் பெரிய பாகமாக இருந்தால் நல்லது. சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !
•
Posts: 128
Threads: 2
Likes Received: 93 in 49 posts
Likes Given: 12
Joined: Oct 2023
Reputation:
2
அதுல்யா போன்க்கு போன் அடித்தேன்
ஸ்விட்ச் ஆப் என்று வந்தது
அவளுடைய தோழிகள் அத்தனை பேருக்கும் போன் அடித்து கேட்டு பார்த்து விட்டேன்
யாருக்குமே அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை
என் மனைவி அதுல்யா எங்கே போனாள்..
அவளுக்கு என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தேன்
அப்போதுதான் காலையில் எனக்கு வந்த ஒரு மிரட்டல் போன் கால் பற்றி நியாபகம் வந்தது
டேய் ரவி.. நீ 4 மாசமா வட்டியும் கட்டளை.. அசலும் செட்டில் பண்ணல..
இன்னைக்கு ஒருநாள் டைம் உனக்கு
பணத்தை செட்டில் பண்ணல.. உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன்.. என்று கந்து வட்டிக்கு விடும் கந்தசாமி மிரட்டி இருந்தான்
கந்தசாமி அண்ணே இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்க அண்ணே
பொங்கலுக்கு போனஸ் பணம் வரும்..
கண்டிப்பா வட்டியையாவது கட்டிடறேண்ணே
நான் கந்து வட்டி கந்தசாமியிடம் கெஞ்சி கதறி கேட்டது நியாபகம் வந்தது
சொன்னபடி பணம் தராததால் அதுல்யாவை தூக்கிட்டானா..
நான் கந்து வட்டி கந்தசாமிக்கு போன் அடிச்சேன்
அண்ணே
சொல்லுடா ரவி.. பணத்தை ரெடி பண்ணிட்டியா..
இன்னும் இல்லண்ணே.. ஆனா அதுக்காக இப்படியாண்ணே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னோட ஒய்ப்பை கூட்டிட்டு போவீங்க..
டேய் ரவி.. என்ன சொல்ற.. உன் பொண்டாட்டியை நான் கூட்டிட்டு வந்தேன்னா.. என்னடா சொல்ற..
காலைல சொன்னிங்களே அண்ணே
சொன்னபடியே செஞ்சிட்டிங்களே அண்ணே..
டேய் நான் உன் பொண்டாட்டியை தூக்கலடா.. என்றார் கந்து வட்டி கந்தசாமி
அதை கேட்டு நான் அதிர்ந்தேன்
தொடரும் 2
Posts: 604
Threads: 0
Likes Received: 216 in 187 posts
Likes Given: 330
Joined: Aug 2019
Reputation:
1
Super update. She would have ran with another man.
Posts: 11,723
Threads: 1
Likes Received: 4,289 in 3,884 posts
Likes Given: 11,643
Joined: May 2019
Reputation:
23
மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 128
Threads: 2
Likes Received: 93 in 49 posts
Likes Given: 12
Joined: Oct 2023
Reputation:
2
கந்து வட்டி கந்தசாமி அப்படி சொல்லியும் என்னால் நம்ப முடியவில்லை
எதுக்கும் ஒரு எட்டு அவர் வீட்டுக்கு போய் நேரடியாக பார்த்து விடுவோம் என்று கிளம்பினேன்
பைக் கந்து வட்டி கந்தசாமி வீட்டை நெருங்கி கொண்டு இருந்தது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அப்போது என் மொபைல் அலறியது
டிரைவ் பண்ணும்போது செல் போன் உபயோகிக்க கூடாது என்று நம் அரசாங்கம் நிறைய இடத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தது என் நினைவுக்கு வந்தது
அதனால் வண்டியை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு போன் அட்டென்ட் பண்ணேன்
டேய் ரவி நான் ஹரி பேசுறேண்டா..
சொல்லுடா ஹரி.. என்னடா திடீர்ன்னு போன் என்று கேட்டேன்
ஹரியும் நானும் சின்ன வயதில் இருந்தே ரொம்ப கிளோஸ் நண்பர்கள்
எல் கே ஜி முதல் காலேஜ் வரை ஒன்றாகவே படித்தவர்கள்
டேய் ரவி.. உன் பொண்டாட்டி அதுல்யாவையா தேடிட்டு இருக்க..
ஆமாண்டா மச்சான்.. உனக்கு எப்படி தெரியும்
நான் இப்போ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பேசுறேண்டா
உன் பொண்டாட்டியை ரெண்டு பேரு மும்பை ரயில்ல ஏத்திட்டு போறானுங்கடா..
நீ உடனே சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துடு ரவி என்றான் ஹரி
சரிடா மச்சான் நான் இப்போ உடனே அங்கே வர்றேன்.. என்று போனை வைத்து விட்டு பைக்கை ரயில் நிலையம் நோக்கி திருப்பினேன்
அதுல்யா எதுக்கு பாம்பே போறா..
அவளா போறாளா.. இல்ல எவனாவது கடத்திட்டு போறானா..
நான் யோசித்து கொண்டே பைக்கை ஓட்டினேன்
காரணம் நான் கடன் வாங்காத ஆட்களே இல்லை..
ரெண்டு பேருகூட அதுல்யா மும்பை போறான்னு ஹரி சொன்னானே..
யார் அந்த ரெண்டு பேர்
நான் கடன் வாங்கிய நபர்களில் மும்பையை சார்ந்தவர்கள் யார் யார் என்று மனதுக்குள்ளேயே ஒரு லிஸ்ட் எடுத்து கொண்டு பைக்கை இன்னும் வேகம் கூட்டினேன்
தொடரும் 3
Posts: 781
Threads: 0
Likes Received: 246 in 223 posts
Likes Given: 332
Joined: Oct 2019
Reputation:
1
Super. Now athulya will go to red light area and earn more money and pay all the credits.
•
Posts: 949
Threads: 0
Likes Received: 334 in 295 posts
Likes Given: 412
Joined: Jul 2019
Reputation:
3
Super update. Looks like a thriller.
•
Posts: 128
Threads: 2
Likes Received: 93 in 49 posts
Likes Given: 12
Joined: Oct 2023
Reputation:
2
நான் கடன் வாங்கியவர்களின் லிஸ்ட்டை என் மனக்கண் கொண்டு வந்தேன்..
15 பேரு லோக்கல் சென்னை ஆட்கள்
3 பேரு மதுரையில் வாங்கி இருந்தேன்..
1 திருச்சி நண்பனிடம் கைமாத்து வாங்கி இருந்தேன்..
ஆங் சேட்டு கடையில் வேலை செய்யும் பட்டேல் சந்த் திடம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்
சேட்டு ராஜஸ்தான் காரன்.. அவன் மாதம் ஒரு முறை மும்பை சென்று வருவான்..
இன்னொருத்தன் செந்தில்.. அவன் தன்னுடைய பிஸ்னஸ் விஷயமாக அடிக்கடி மும்பை போய் போய் வருவான்..
பட்டேல் சந்த் மேலும் செந்தில் மேலும்தான் எனக்கு சந்தேகம் வந்தது..
நிச்சயம் என் அதுல்யாவை அவர்கள் இருவரும் தான் கடத்தி இருப்பார்கள் என்று முடிவு பண்ணேன்
ரயில்வே ஸ்டேஷன் அடைத்தேன்..
நீ போய் முதல்ல உன் பொண்டாட்டிய காப்பாத்து.. வண்டிய நான் பார்க்கிங் பண்ணிக்கிறேன்.. என்று என் நண்பன் ஹரி என் வண்டியை வாங்கி கொண்டான்
நான் ஸ்டேஷன் உள்ளே ஓடினேன்
மும்பை போகும் ரயிலில் தொத்தி ஏறினேன்..
உள்ளே ஒவ்வொரு சீட்டாக தேடி தேடி பார்த்து கொண்டே போனேன்..
எங்கேயுமே என்னுடைய பொண்டாட்டி அதுல்யா இல்லை..
ஆனால் ஒரு பெட்டியில் சந்தேகம்படும்படியாக 3 பேர் அமர்ந்து இருந்தார்கள்..
இரண்டு முரட்டு ஆசாமிகளுக்கு நடுவில் ஒரு பெண் உக்காந்து இருந்தாள்
ஆனால் ** பெண் போல கருப்பு பர்தா அணிந்து உடல் முகம் முழுவதும் மூடி இருந்தாள்
பக்கத்தில் அமர்ந்து இருந்த முரட்டு ஆசாமிகளை பார்த்தேன்..
ஒருத்தன் மதுரைக்காரன் போல மீசை.. நெற்றியில் பெரிய பெரிய பட்டை விபூதி வைத்து இருந்தான்..
பார்க்க விருமாண்டி ஸ்டைலில் இருந்தான்
அந்த ** பெண் அருகில் இந்த பக்கம் அமர்ந்து இருந்தவனும் ** இல்லை..
அவனும் நெற்றியில் சின்னதாய் ஒரு ஐயங்கார் நாமம் இட்டு இருந்தான்..
இரண்டு இந்து ஆண்களுக்கு நடுவில் எப்படி ஒரு ** பெண் என்று எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது..
அதுவும் அவர்கள் 3 பேரும் ரொம்ப நெருக்கமாக ஒட்டி உரசி உக்காந்து இருந்தார்கள்
அந்த சின்ன சந்தேகத்துடன் அவர்களுக்கு முன்னால் இருந்த இருக்கையில் நான் சென்று அமர்ந்தேன்..
அவர்கள் 3 போரையும் நான் நோட்டம் விட ஆரம்பித்தேன்
ரயில் மும்பை நோக்கி மெல்ல நகர துவங்கியது
தொடரும் 4
Posts: 169
Threads: 0
Likes Received: 102 in 77 posts
Likes Given: 77
Joined: Sep 2019
Reputation:
0
Very soon she will earn more money and the husband will give kadan to many people.
•