Posts: 281
Threads: 16
Likes Received: 80 in 68 posts
Likes Given: 34
Joined: Dec 2018
Reputation:
0
Hey hi,, Literally I stumbled upon your way of writing.. I see my olden golden days of Leg. EXBII Writers touch in you.. Giving high amount of love & emotions in a cocktail kinda writing is awesome... Literally you can script this into a movie or short film easily... Keep the good writing coming man
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,850 in 5,159 posts
Likes Given: 19,164
Joined: May 2019
Reputation:
34
மிகவும் எதார்த்தமான மற்றும் கலக்கலான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
17-08-2023, 06:40 AM
(This post was last modified: 17-08-2023, 06:48 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-08-2023, 10:35 PM)Natarajan Rajangam Wrote: தங்களின் இந்த நினைவோ ஒரு பறவை கதை செம்ம செம்ம காமம் கலக்காமல் ஒரு அற்புத காதல் காவியம் பொக்கிஷமாக உள்ளது எந்த இடத்திலும் தொய்வில்லாமல் எழுத்துக்களை எழுதுகிறீர்கள் உங்களின் எழுத்துக்கு அடியேனின் சிறிய கருத்து பதிவு
மிக்க நன்றி நண்பா,இது என்னுடைய மூன்றாவது கதை.முதல் இரண்டு கதைகளில் காமம் இருக்கும்.Views, comments பற்றி கவலைப்படாமல் ஒரு காதல் கதை எழுதலாம் என்று தோன்றியது.ஆனால் நான் எதிர்பார்க்காத அளவு வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.நன்றி.
•
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
(16-08-2023, 11:11 PM)PANNIRUVAEL KHAI Wrote: Hey hi,, Literally I stumbled upon your way of writing.. I see my olden golden days of Leg. EXBII Writers touch in you.. Giving high amount of love & emotions in a cocktail kinda writing is awesome... Literally you can script this into a movie or short film easily... Keep the good writing coming man
தங்களின் வைரமான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.என்னுடைய பதிவுகள் தொடர்ந்து வரும்.
•
Posts: 1,125
Threads: 0
Likes Received: 403 in 362 posts
Likes Given: 670
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 50
Threads: 0
Likes Received: 29 in 22 posts
Likes Given: 1
Joined: Jan 2023
Reputation:
1
nice story bro .semma feel ....
Posts: 177
Threads: 0
Likes Received: 106 in 94 posts
Likes Given: 441
Joined: Oct 2019
Reputation:
0
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
(17-08-2023, 05:04 PM)M.Raja Wrote: Semma love story
நன்றி நண்பா
•
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
(17-08-2023, 11:55 AM)sutha s Wrote: nice story bro .semma feel ....
நன்றி சகோதரி
•
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
17-08-2023, 09:17 PM
(This post was last modified: 05-11-2024, 11:38 AM by Geneliarasigan. Edited 9 times in total. Edited 9 times in total.)
Episode -23
யாரு ராஜா அந்த வில்லி?
அது வேறு யாருமில்லை சஞ்சனா,என் சின்ன தங்கை தான்.அவ என் கூட இருக்கும் போது யாரையும் என்னிடம் நெருங்க விட மாட்டாள்.இந்த மாசம் நான் உன் கூட இருந்ததால் ஊருக்கு போக முடியல.அதனால் அவ என்னை பார்க்க சென்னை வருகிறாள். "ம்"சஞ்சனா எனக்கு ஒரு ஐடியா என் தங்கை ஏன் சென்னை வரணும்,நாம ரெண்டு பேரும் இப்போ கிளம்பினால் கூட நாளை காலை என் சொந்த ஊருக்கு போக முடியும்.நீயும் என் அம்மா,என் தங்கை கிட்ட அறிமுகம் ஆன மாதிரி இருக்கும்.அங்கே போய்ட்டு நான் சொல்ற மாதிரி ஒரு சின்ன கேம் மட்டும் play பண்ணு.
ராஜா சஞ்சனா காதில் அந்த விசயத்தை சொல்ல, "ம்" என்று சந்தோஷமாக தலையாட்டினாள்.
ராஜாவும்,சஞ்சனாவும் சென்னை - பெங்களூர் பைபாஸ் சாலையில் பறந்தனர்.
டேய் இங்கே இருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சென்னைக்கும்,பெங்களூருக்கும் சரியா நடுவில் இருப்பது தான் என்னோட ஊர் சஞ்சனா.
சரியாக காலை 4 மணி அளவில் போய் சேர்ந்தனர்.சிறு நகரம் தான்.இன்னும் மக்கள் நடமாட்டம் தொடங்கவில்லை.
சஞ்சனா,ராஜா கொடுத்த விவரத்தின் படி சரியாக அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.
ராஜாவின் அம்மா வந்து கதவை திறக்க,
யாரும்மா நீ ? அந்த பெண்மணி கேட்க,..
நீங்க தான் ராஜாவோடா அம்மாவா?
ஆமாம்.
அப்போ உங்ககிட்ட தான் ரொம்ப முக்கியமான விசயம் பேசணும்.நான் ராஜா ஆபீஸில் இருந்து வரேன்.உள்ளே போய் பேசலாமா..!!
சரி வாம்மா,அதற்குள் ராஜா தங்கை எழுந்து வர,சஞ்சனா அவளை பார்த்து"நீ தான் திவ்யாவா?
ஆமா நீங்க யாரு?
சொல்றேன்.என் பேரு சஞ்சனா.உங்க அண்ணன் சரியான திருடன்.கூட வேலை செய்யும் பொண்ணுக்கு கிட்ட இருந்து முக்கியமான ஒண்ணை திருடிட்டான்.அதுவும் திருடி ஏமாற்றிவிட்டு இங்கே தான் வந்ததாக தகவல்.அது தான் அவனை கையும் களவுமாக பிடிக்க இங்கே வந்து இருக்கோம்.
எங்க அண்ணன் அந்த மாதிரி எல்லாம் செய்ய கூடிய ஆள் இல்ல.அவன் வேணா ஏமாந்து விட்டு வருவான்.ஆனா மத்தவங்களை ஏமாற்ற மாட்டான்.
ராஜாவின் அம்மாவும் அதற்கு ஆமோதிக்க
ஒருவேளை பாதிக்கபட்ட பொண்ணே வந்து நேரில் சொன்னால் என்ன பண்ணுவீங்க.
நாங்க அப்பவும் நம்ப மாட்டோம் இருவரும் ஒரு சேர சொன்னார்கள்.
சரி உங்க அண்ணன் எங்கே?
அவன் சென்னையில் இருக்கான்.
இல்லை அவன் இங்கே தான் இருக்கான்.நான் உங்க வீட்டை சோதனை போடணும்.
எங்க அண்ணா இங்கே இல்ல.சொன்னா புரிஞ்சிக்கோங்க.
நான் நம்ப மாட்டேன்.சஞ்சனா கீழே நோட்டம் விட்டு மாடிப்படி ஏற,ராஜாவின் தங்கையும் அம்மாவும் பின் தொடர்ந்தனர்.
அம்மா இந்த பொண்ணை ஏம்மா உள்ளே விட்ட,பார்க்க களவாணி பொண்ணு மாறி தெரியுது.
ச்சே இல்லடி ,முகம் லட்சணமா இருக்கு.கண்டிப்பாக நீ நினைக்கிற மாறி இருக்காது.
மூன்று பேர் மொட்டை மாடி வரவும்,ராஜா அங்கே பாய் விரித்து படுத்து கொண்டு இருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி ஆக,
பார்த்தீங்களா யார் இது,உன் அண்ணனை இங்கே ஒளிச்சு வச்சுகிட்டு ரெண்டு பேரும் என்னையே ஏமாத்துறீங்களா..!
டேய் நீ எப்படா வந்தே..!அண்ணா நீ எப்ப வந்தே என்று அவன் தங்கையும் ஓடி வந்து கட்டி கொண்டாள்.
இப்பவாது நான் சொல்வதை உண்மை என்று நம்பறீங்களா ?சஞ்சனா கேட்க
"இப்பவும் சொல்றேன் சஞ்சனா,என் அண்ணன் எதையும் திருட மாட்டான்.அந்த கடவுளே வந்து சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்" என அவன் தங்கை திவ்யா உறுதியாக சொன்னாள்.
நான் தான் அப்பவே சொன்னேனே சஞ்சனா,என் குட்டி ரோசும் சரி,என் அம்மாவும் சரி ,என்னை பற்றி என்ன தான் தப்பா சொன்னாலும் நம்ப மாட்டாங்க.
சஞ்சனா உடனே ராஜாவின் அம்மா காலில் விழுந்தாள்.அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.
நீ நல்லா இரும்மா,முதலில் எழுந்திரு.ராஜா என்னடா இதெல்லாம்?
அம்மா அவ சொன்னது எல்லாம் உண்மை தான்.நான் திருடியது உண்மை தான்.
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே.உண்மையை சொல்லு என்ன நாடகம் நடக்குது இங்கே?அவன் தங்கை கேட்க
நிஜமா தான்டா குட்டி ரோஸ்,அவ மனசை நான் திருடிட்டேன்.அவ உன் அண்ணி.அம்மா அவ உன் மருமகள்.
இதை ஏண்டா என்கிட்ட சொல்லல,என்று அவன் தங்கை பக்கத்தில் உள்ள பைப்பை எடுத்து அடிக்க,
டேய் மூக்கு(ராஜா எப்பவுமே அவன் தங்கையை மூக்கு அல்லது குட்டி ரோஸ் என்றே அழைப்பான்.) அடிக்காதே,நேற்று தான்டா நானே அவகிட்ட என் காதலை சொன்னேன்.இதோ இன்னிக்கு நேராகவே உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டேன் போதுமா?
ம் எனக்கு பிடிக்கல,அவளை எல்லாம் என்னால் அண்ணியாக ஏற்று கொள்ள முடியாது,
டேய் மூக்கு என்னடா இப்படி சொல்ற,அவ ரொம்ப நல்லவடா,,ராஜா முகம் வாட,சஞ்சனாவும் அதிர்ச்சி அடைந்தாள்.
அய்ய, மூஞ்ச பாரு அதுக்குள்ள எப்படி சுருங்கி போச்சு,போய் கட்டிக்க போ ,ராஜா முகம் மலர்ந்தது .
அண்ணி கோவிச்சுக்காதீங்க ,நான் சும்மா தான் விளையாடினேன்.எனக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.அம்மா அண்ணியை கூட்டிட்டு வா நாம கீழே போலாம்.இவன் மேலேயே கிடந்து சாகட்டும்.
டேய் மூக்கு,எப்பவும் நான் வந்தால் என் கூட தான் இருப்பே,இப்ப என்னடா அவ கூட ஒட்டிகிட்ட.
இனிமே அப்படி தான் அண்ணா,
சஞ்சனாவிற்கு அம்மா இல்லாததால் ,ராஜாவின் அம்மாவோடு எளிதாக ஒன்றி விட்டாள்.
திவ்யா சஞ்சனாவை பார்த்து,"ஏன் அண்ணி உங்க அழகுக்கும் அறிவுக்கும் போயும் போயும் இந்த சுமார் மூஞ்சி குமாரை போய் செலக்ட் பண்ணி இருக்கீங்க."
ஏன் திவ்யா,உன் அண்ணனுக்கு என்ன குறைச்சல்.அழகிலும் சரி,அறிவிலும் சரி ஒன்னும் குறைந்தவர் இல்லையே.என்ன வெயிலில் சுற்றி கொஞ்சம் கலர் கம்மி அவ்வளவு தானே
ம் ,நீங்க உங்க காதலனை விட்டு கொடுக்க மாட்டீங்களே,அப்புறம் என் அண்ணா சரியான மங்குனி ஆச்சே.எப்படி அவன் உங்க கிட்ட வந்து காதலை சொன்னான்
மங்குனி மட்டும் இல்ல,இந்த காதல் விசயத்தில் மட்டும் சரியான tubelight.அவனை என்கிட்ட காதல் சொல்ல வைக்க நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்.
அதானே பார்த்தேன்.கடைசி வரை அப்படியே எட்ட நின்று இதயம் முரளி மாதிரி காதலை கூட சொல்லாம ஓடி போய்டுவான்.
ராஜாவின் அம்மா,சஞ்சனாவிற்கு ஜடை பின்னி அலங்காரம் செய்து பூ வைக்க,அவளுக்கு அழுகை வந்து விட்டது.
ஏன் சஞ்சனா அழுவுற,
ஒண்ணுமில்ல அம்மா,நீங்க எனக்கு செய்வதை எல்லாம் பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நீயும் எனக்கு ஒரு பொண்ணு தான் சஞ்சனா,அழக்கூடாது .இதோ இந்த பொண்ணு காலேஜ் முடித்து விட்டால் நாங்க சென்னை தான் வரப்போறோம்.இன்னும் கொஞ்ச நாள் தான் நாம எல்லோரும் ஒண்ணா தான் இருக்க போறோம்.
அன்றைய பொழுதும் இனிமையாகவே கழிந்தது.
ராஜா மற்றும் சஞ்சனா விடைபெற்றனர்.
என்ன அண்ணா,முதல் முறையா அண்ணி வந்து இருக்காங்க.இன்னும் ஒரு நாள் தங்கி இருக்கலாமே.
இல்லடா மூக்கு,நாளைக்கு ரெண்டு பேருமே வேலைக்கு போகனும்.இனிமே அடிக்கடி ரெண்டு பேரும் வரோம். ஓகே வா
சஞ்சனாவிற்கு,ராஜாவின் அம்மாவை மிகவும் பிடித்து விட்டது.அவரை விட்டு பிரிய அவளுக்கு மனமே இல்லை.
சஞ்சனா கவலைப்படாதே,உங்க அப்பாகிட்ட மட்டும் தான் இன்னும் சம்மதம் வாங்கணும். வாங்கிட்டோம் என்றால் சீக்கிரம் டும் டும் டும் தான்
டேய் என் மருமகளை பார்த்து கூட்டிட்டு போடா,பழைய மாதிரி எல்லாம் வண்டிய வேகமாக ஒட்டாதே.
என் வருங்கால பொண்டாட்டியை பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு போதுமா அம்மா!
சஞ்சனா ராஜாவிடம் "டேய் நம்ம கல்யாணத்திற்கு நான் உன் அம்மா,தங்கையிடம் சம்மதம் வாங்கி ஆச்சு.இனி நீ தான் என் அப்பாவிடம் சம்மதம் வாங்கணும் "
"உன் அப்பா ஊரில் இருந்து வந்த உடனே சம்மதம் வாங்கி விட வேண்டியது தான் சஞ்சனா"
இருவர் மனதிலும் சந்தோசம் முழுக்க நிரம்பி வழிந்தது.ஆனால் சஞ்சனா ராஜாவை அவள் அப்பாவிடம் அறிமுகபடுத்தும் பொழுது நடக்க போகும் சம்பவம் இருவர் சந்தோசத்தையும் பறிக்க போகிறது.
அடுத்த நாள்,
என்ன வாசு, நொண்டி நொந்து வர,ராஜா கேட்க.
டேய் எல்லாம் உன் ஆளினால் தான்டா இப்படி ஆச்சு,மனுஷியாடா அவ.கொஞ்சம் கூட பச்சை புள்ளை என்று பார்க்காம போட்டு அடிக்கிறா.ஆனா அவகிட்ட அடி வாங்கின ராசி என் பொண்டாட்டி முதல், போறவன்,வர்றவன் கிட்ட எல்லாம் ரெண்டு நாளாக அடி வாங்கினேன்டா
டேய் அவளை பற்றி மட்டும் குறை சொல்லாதே,உனக்கு அவ அடி கொடுத்து இருந்தாலும்,எனக்கு முந்தா நாள் முழுக்க முழுக்க முத்த மழையில் குளிப்பாட்டிட்டாடா.
அடப்பாவி இப்போ அனுபவிடா அனுபவி.சீக்கிரம் என்னை மாறி கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் பூரிக்கட்டை,துடைப்பகட்டையால் உதை வாங்கும் காலம் வராமலா போகும்.கண்டிப்பாக வரும்டா.
அவ கையால் அடி வாங்க கூட கொடுத்து வைத்து இருக்கணும் போடா...
ராஜா இன்னிக்கு சாயங்காலம் சரக்கு அடிக்கலாமா?
டேய் அது சஞ்சனா போன வருத்தத்தில் சரக்கு அடிச்சதுடா,இதுக்கு மேல எல்லாம் என்னால் சரக்கு அடிக்க முடியாது.
டேய் அது தான் ஒரு தடவை சரக்கு அடிச்சிட்டே இல்ல,இதுக்கு மேல பழகிக்க வேண்டியது தான்.சஞ்சனாவுக்கு தெரியாம சரக்கு அடிச்சா தப்பு இல்ல.அப்புறம் எங்களுக்கு யாரு சரக்கு வாங்கி கொடுப்பா.
அந்த நேரம் சஞ்சனா வந்து தன் கையில் இருந்த பையினால் வாசு தலையில் ஒரு போடு போட,
சிஸ்டர் நீங்க எப்போ வந்தீங்க..!!
நீ அவனை சரக்கு அடிக்க கூப்பிட்டப்ப வந்துட்டேன்.நீ தான் கெட்டு போகிற என்று பார்த்தால் அவனையும் சேர்த்து கெடுக்கிற உன்னை....
இல்ல சிஸ்டர்,எந்த ஒரு பழக்கமும் தீடீரென விட கூடாது.கொஞ்ச கொஞ்சமாக தான் விடனும்.அதை தான் நான் அவனுக்கு பக்குவமாக சொல்லி கொடுத்தேன்.
டேய் அடங்குடா,அவன் என்ன மொடா குடிகாரனா,அன்னிக்கு தான் ஏதோ முதல் முதலாக குடிச்சான். ஓசில குடிப்பதற்கு நீ அலையிற என்று பச்சையா தெரியுது.இன்னொரு தடவ அவனை கூப்பிட்ட அவ்வளவு தான் பார்த்துக்க.
ராஜா இந்தா உனக்கு லஞ்ச்,சஞ்சனா நீட்டினாள்.
அப்பொழுது மூன்று பேருக்கும் ஒருசேர குரூப் மெசேஜ் வந்தது.
என்ன இது இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் மீட்டிங் என்று போட்டு இருக்கு.ஏதோ புது பிளான் அறிமுகம் பண்ண போறத போட்டு இருக்கு.
அப்போ இன்னிக்கு இரவு செம சாப்பாடு தான் வாசு குதுகாலித்தான்.
ஆபிசில்
என்னடா ஜார்ஜ் உன் நிலைமை இப்படி ஆயிடுச்சு,TL வினோத் கூட உன்கிட்ட பம்முவான்.ஆனா புதுசா வந்த சஞ்சனா பொண்ணு இப்படி அசிங்கப்படுத்தி விட்டது.
அது தான்டா பாலாஜி எனக்கு ஒன்னும் புரியல.இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது எனக்கே புதுசு.அதுவும் ராஜா மட்டும் தான் என்கிட்ட அடிக்கடி மோதி கொண்டு இருந்தான்.அதையும் நம்ம மேனேஜர் வச்சி அவனை மட்டம் தட்டி வைத்து இருந்தேன்.ஆனா இவ வந்த பிறகு அவன் அடுத்தடுத்து என்னை கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் தோற்கடித்து விட்டான்.
இப்ப என்ன பண்ண போற ஜார்ஜ்,
அதையும் எனக்கு சஞ்சனா தான் கற்று கொடுத்து இருக்கா பாலாஜி.சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருந்து தான் பழி வாங்க வேண்டும்.
ஆனா உனக்கு தான் அந்த பழக்கம் இல்லையே ஜார்ஜ்,கோபத்தில் அவசரப்பட்டு எதுனா பண்ற,அது அவர்களுக்கு சாதகமாக போய் முடிந்து விடுகிறது.
நீ சரியா தான் சொல்ற பாலாஜி,எனக்கு அவ கிடைக்காத கோபத்தில் என் உடல் முழுவதும் பற்றி கொண்டு எரிகிறது.நான் அவர்கள் ரெண்டு பேர் மட்டும் ஒன்றாக இருப்பதை பார்த்தால் கோபத்தில் என்ன பண்ணுவேன் என்றே தெரியவில்லை.
மாலை மீட்டிங் முடிந்தவுடன் சாப்பிடும் போது சஞ்சனா, ராஜாவுடன் கொஞ்சி குழாவ தான் போகிறாள்.அதை பார்க்க போகும் ஜார்ஜ்ஜினால் ஏற்பட போகும் விளைவு என்ன?
Posts: 3,097
Threads: 0
Likes Received: 1,188 in 1,056 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
(17-08-2023, 10:33 PM)mahesht75 Wrote: super update
நன்றி நண்பா
•
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,850 in 5,159 posts
Likes Given: 19,164
Joined: May 2019
Reputation:
34
Semma Interesting Update Nanba
•
Posts: 177
Threads: 0
Likes Received: 106 in 94 posts
Likes Given: 441
Joined: Oct 2019
Reputation:
0
18-08-2023, 08:33 AM
(This post was last modified: 06-10-2024, 02:35 PM by M.Raja. Edited 2 times in total. Edited 2 times in total.)
செம்ம update
•
Posts: 753
Threads: 0
Likes Received: 318 in 274 posts
Likes Given: 439
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 642
Threads: 0
Likes Received: 332 in 282 posts
Likes Given: 476
Joined: Aug 2019
Reputation:
2
18-08-2023, 04:13 PM
(This post was last modified: 18-08-2023, 04:15 PM by Yesudoss. Edited 1 time in total. Edited 1 time in total.)
very interesting - sanjana lost half of chastity, would arjun come to know this.
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
18-08-2023, 07:27 PM
(This post was last modified: 18-08-2023, 07:28 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-08-2023, 04:13 PM)Yesudoss Wrote: very interesting - sanjana lost half of chastity, would arjun come to know this.
சஞ்சனா,அர்ஜுன் சந்திப்பு அன்று சுவாரசியமான காமெடி நிகழ போகிறது. காத்து இருங்கள் நண்பா
Posts: 177
Threads: 0
Likes Received: 106 in 94 posts
Likes Given: 441
Joined: Oct 2019
Reputation:
0
நண்பா,இன்று இன்னும் update வரல.waiting
Posts: 2,952
Threads: 6
Likes Received: 4,841 in 1,395 posts
Likes Given: 2,276
Joined: Dec 2022
Reputation:
127
18-08-2023, 11:26 PM
(This post was last modified: 19-08-2023, 12:05 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-08-2023, 11:16 PM)M.Raja Wrote: நண்பா,இன்று இன்னும் update வரல.waiting
அடுத்த பதிவு இப்பொழுது தான் எழுதி முடித்தேன் சகோ,இருந்தும் கடைசி பதிவை படித்து யாராவது ஒருவர் தரும் விமர்சனத்திற்காக காத்து இருக்கிறேன்.
•
Posts: 21
Threads: 0
Likes Received: 16 in 14 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Wonderful update. Waiting for the next part
|