Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
21-06-2023, 09:10 PM
ஆடி வந்ததும், தேடி வந்தது.
அன்பு ரசிகர்களே!
ஆடுத்த மாதம் ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதத்தில் புதிதாக கல்யாணமான தம்பதியரை பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பது எல்லா குடும்பங்களிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.
கல்யாணத்திற்கு அப்புறம்தான் பெண் இன்பம் எல்லாம். அதற்கு அப்புறம்தான் இல்லற சுகம். அது வரை கடமை,...கடமை,...கடமை. என்று இயற்கையாக உடலில் தோன்றும் பாலுணர்வு ஆசைகளுக்கு தடை போட்டு, கனவுகளைத் தேக்கிவைத்து கல்யாணத்திற்கு அப்புறம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தவர்களை, ஆசையை நிறைவேற்றிக் கொள்ள காத்திருந்தவர்களை, கல்யாணம் முடிந்து முதலிரவுக்காக ஏங்கும் மண மக்களை ஆடி மாதம் என்று பிரித்து வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த கதை மூலமாக சுவை பட சொல்லி இருக்கிறேன்.
இது உங்களுக்கான ஆடி மாத ஸ்பெஷல்.
படித்து விட்டு மறக்காமல் கருத்துகளை பதிவிட்டு, ஆதரவும் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கதையை தொடர்கிறேன். இந்த கதையின் ஒரு பகுதியோ, சில பகுதிகளோ ஏற்கனவே வேறு தளங்களில் வெளி வந்த கதைகள்தான். அவற்றை கலந்து உங்களுக்காக ஒரு மசாலாவாக சமைத்து பரிமாறுகிறேன். என் கதைக்கு கருவாக இருந்த அந்த கதாசிரியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
அன்புடன்,
மோனார்.
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
ஆடி மாதத்தின் சிறப்புகள்.
ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இந்த மாதத்தில்தான். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல் வடமாவட்டங்களில் முக்கியமான நிகழ்வு.
அதனுடன், கத்தரி, மொச்சையுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டுக் குழம்பையும் அம்மனுக்கு படைப்பது அற்புதமான நிகழ்வு. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தீ மிதிப்பது, பால் குடம் எடுப்பது, பொங்கல் வைப்பது போன்றவை அதிகம் நடைபெறும் மாதம் ஆடி. அம்மியே பறக்கும் ஆடிக் காற்றில், தொற்று நோய்களும் வேகமாக பரவும் என்பதாலேயே, வீடுகளின் முன்பு வேப்பங்குலை கட்டப்படுகிறது.
பருவமழை தொடங்கும் ஆடி மாதத்தில் ஆறுகள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடும். விவசாய நிலங்களை செழிக்க வைப்பதற்காக ஓடி வரும் ஆடி நீர்ப்பெருக்கை, வணங்கி விவசாயிகள் வரவேற்பார்கள்.
ஆடி மாதத்தில் ஆண்டியும் அரசானாகலாம்... எப்படி?
கரைகளை நிறைத்தபடி, சுழன்றோடும் காவிரியை கர்ப்பிணியாக பாவித்து, வழிபடுவது டெல்டா மாவட்டங்களில் ஒரு முக்கிய பண்டிகை. காவிரிக்கு கலவை சாதம் படையலிடும் மக்கள், புதுமணத் தம்பதிகளுக்கு புதிய மஞ்சள் கயிறுகளை அணிவிப்பதும் ஆடிப்பெருக்கு பண்டிகையின் ஓர் அங்கம்.
ஆடியில் விதைத்தால் பருவமழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீரால் பயிர்கள் செழித்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும். அதன் காரணமாகவே, ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொல்லாடல் நமது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நிலத்தை உழுது, விதை போட்டு கையில் இருக்கும் அத்தனை காசு, பணத்தையும் செலவழித்து இருப்பார்கள் நம் விவசாயிகள்.
அப்போது, அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாது என்பதால், அறிமுகமானது ஆடித் தள்ளுபடி. அதை சாதகமாக பயன்படுத்தி, தீபாவளிக்கு முன்பு தேங்கியுள்ள சரக்குகளை ஆடித் தள்ளுபடியில் அள்ளிக் கொடுத்தார்கள் துணிக்கடை வியாபாரிகள்.
ஆரம்பத்தில் துணிக்கடைகளில் தொடங்கிய ஆடித் தள்ளுபடி, இன்று அத்தனை பொருட்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது வியாபார தந்திரம் மட்டுமே. இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதில்லை என்பதோடு, புதிதாக திருமணமான தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது என்பதும் தமிழ் மக்களின் முக்கிய விதி.
ஆடி மாதத்தில் கருத்தரித்தால், இதிலிருந்து 10வது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு, வெப்பத்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பதே நம் முன்னோர்கள் வகுத்த முக்கியமான அறிவியல் காரணம்.
Also see... ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!
இதே ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது தென் மாவட்டங்களில். பெண்கள் குழுவாக சேர்ந்து பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து, படையலிட்டு சாப்பிடுவது வழக்கம்.
ஆண்களுக்கு தெரியாமல், தனி அறையில் நோன்பிருக்கும் பெண்கள் படையலிடும் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிட்டால் ஆகாது என்பது ஐதீகம்.
Also see... ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா?
மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை நாளில் திதி கொடுத்து, ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவதும் முக்கிய நிகழ்வு. இதுபோன்ற பல்வேறு பண்டிகை மற்றும் முக்கிய நிகழ்வுகளுடன் தனிச் சிறப்பை கொண்டது அனைவரும் போற்றும் ஆடி மாதம்..
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
ஆடி மாதத்தின் 40 சிறப்பம்சங்களை இங்கு விரிவாகக் காணலாம்.
1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். அதாவது சூரியன் தெற்கு பக்கமாக வலம் வரும்
2. இந்த புண்ணிய கால கட்டத்தில் மக்கள் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம்.
3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.
4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.
7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.
9. கேரளாவில் ஆடி மாதத்தை இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.
10. ஆடி அமாவாசை அன்று மறைந்த
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பௌர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.
12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.
13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.
14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.
15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.
17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.
18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.
19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.
26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.
27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.
34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
39. ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
Posts: 422
Threads: 0
Likes Received: 155 in 119 posts
Likes Given: 424
Joined: Jul 2019
Reputation:
1
ஏதோ ஒரு பெரிய சம்பவம் இருக்கு போல
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,858 in 5,163 posts
Likes Given: 19,913
Joined: May 2019
Reputation:
34
செம்ம வித்தியாசமான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 1,311
Threads: 24
Likes Received: 5,058 in 913 posts
Likes Given: 695
Joined: Feb 2022
Reputation:
82
நண்பரே.. ஆடி மாதத்தின் சிறப்புகளை கூகுளில் இருந்து எடுத்து இங்கே பதிவு செய்வதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை...
❤️ காமம் கடல் போன்றது ❤️
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
(21-06-2023, 10:46 PM)Terrorraj Wrote: ஏதோ ஒரு பெரிய சம்பவம் இருக்கு போல
நிச்சயம். ஒரு பெரிய சம்பவம்தான்.
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
(22-06-2023, 07:44 AM)omprakash_71 Wrote: செம்ம வித்தியாசமான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
?
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
(22-06-2023, 05:38 PM)monor Wrote: நன்றி.
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
(22-06-2023, 04:07 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே.. ஆடி மாதத்தின் சிறப்புகளை கூகுளில் இருந்து எடுத்து இங்கே பதிவு செய்வதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை...
ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் நண்பரே.
•
Posts: 167
Threads: 1
Likes Received: 153 in 74 posts
Likes Given: 68
Joined: May 2022
Reputation:
3
(22-06-2023, 05:45 PM)monor Wrote: ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் நண்பரே.
இங்கே வந்தவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று இனி யாரும் குற்றம் சொல்ல முடியாது. இது போன்ற நல்ல விஷயங்களும் இங்கே உண்டு என்று இனி சொல்லிக் கொள்ளலாம். :)
•
Posts: 209
Threads: 3
Likes Received: 79 in 62 posts
Likes Given: 18
Joined: Mar 2022
Reputation:
1
•
Posts: 1,311
Threads: 24
Likes Received: 5,058 in 913 posts
Likes Given: 695
Joined: Feb 2022
Reputation:
82
•
Posts: 1,311
Threads: 24
Likes Received: 5,058 in 913 posts
Likes Given: 695
Joined: Feb 2022
Reputation:
82
(22-06-2023, 05:45 PM)monor Wrote: ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் நண்பரே.
பாத்து நண்பா.. படிப்பவர்கள் சாமி வந்து ஆடப் போகிறார்கள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
•
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
⭐ அக்காலத்தில் ஒரு சமயம் பார்வதி சிவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்களின் தேகத்தில் பாதியை மகா விஷ்ணுவுக்கு அளிக்க வேண்டும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் பொதிகை மலையில் தவம் இருந்தால் உனது வேண்டுகோள் நிறைவேறும் என்றார்.
⭐ பார்வதி தேவியும் ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடி பவுர்ணமி அன்று பார்வதி தேவிக்கு உத்திரம் நட்சத்திரத்தில் சங்கர நாராயணராக காட்சி தந்தார். இதனால் ஆடித்த பசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
⭐ கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், ‘கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.
⭐ ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடிப்பூரம்” அன்று ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. ‘ஆடிப்பூரம்” நாளில் ஆண்டாளை வணங்கிடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
⭐ கஜேந்திரன் என்ற யானையை ஒரு முறை முதலை ஒன்று கவ்வியது. வலியால் யானை, ஆதிமூலமே! என்று திருமாலை அழைத்தது. யானையின் அலறலைக் கேட்ட திருமால் தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று கஜேந்திர யானையை காப்பாற்றியது ஆடிமாதத்தில் தான்.
⭐ விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
⭐ ஆடி மாத பவுர்ணமி நாளில் ஹயக்கீரிவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. ஏனெனில் ஹயக்கீரிவர் அவதாரம் நிகழ்ந்தது ஆடி மாதத்தில் தான்.
⭐ ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தபடுகின்றது. குருக்களுக்கெல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசர். எனவே ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.
இத்தனை சிறப்புமிக்க ஆடி மாதத்தில் கடவுள்களை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்!
ஆடி மாத விரதங்கள்
*ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மவுன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, பக்தர்களின் அசையாத நம்பிக்கை.*
*இம்மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.*
* ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.*
* ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.*
* வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி -செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.*
*ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.*
* ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.*
*ஆடிமாதம் முழுவதும் பக்தி நிறைந்த நாளாக காணப்படுவதால் விரதம் இருந்து வழிப்பட்டு வேண்டியதை அருளும் இறைவனை வணங்குவோம்.*
ஆடி முதல் நாளில் இருந்து ஒரு மண்டலம் எப்போதும் குலசேகர ஆழ்வார் பாடிய பிரபந்தத்தை பாராயணம் செய்திடல் சிறப்பு.
“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே
பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே”.குலசேகர ஆழ்வார்..
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
23-06-2023, 08:25 PM
(This post was last modified: 23-06-2023, 08:28 PM by monor. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆடி மாதத்தில் புது மணத் தம்பதிகளை ஏன் பிரித்து வைத்திருக்கிறார்கள்?
ஆடி என்றவுடன் நம் நினைவிற்கு வருகின்ற நிகழ்வு புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பதுதான், ஆனி கடைசி தேதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது.
அதையும் மீறி சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையையும் பரப்பி வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் யோகபலம் பெற்றநாளில் பரிகாரங்கள் செய்தால், பெற்றோர்களுக்கு தோஷங்கள் விலகி யோகங்கள் வந்துசேரும். பிள்ளைகளாலும் எந்த தொல்லையும் ஏற்படாது என்ற பரிகாமும் சொல்லப்பட்டுள்ளது.
ஏன் திருமணமான முதல் வருட ஆடியில் மட்டும்தான் கருத்தரிக்க வேண்டுமா என்ன? இரண்டாவது வருட ஆடியில் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? அல்லது இரண்டாவது குழந்தைதான் ஆடியில் கருவாக உருவாகாதா? அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டுமா? என இது போன்ற கேள்விகளும் நம் மனதில் எழாமல் இல்லை.
ஆனால் ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.
இப்படி எல்லாம் ஆடி மாதத்தின் பெருமைகளை, நாம் தெரிந்து கொண்டாலும், அந்த ஆடி மாதத்தில் அந்த அம்பிகையும், சிவனும் இணைந்தது போல, பிரித்து வைக்கப்பட்ட தம்பதியர், ஜோடி மாறி ஒன்று கூடினால்,......
அப்படி ஒரு கருவை மையமாக வைத்து, சில கதைகளை சுட்டு, இன்னொரு கதை போல புணைந்து ஆடி மாதத்தின் பரிசாக உங்களுக்கு நான் தர இருக்கிறேன்.
கதையின் தலைப்பு
ஆடி வந்ததும், தேடி வந்தது.
படிக்கக் காத்திருங்கள். படித்ததும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
அன்புடன் மோனார்.
Posts: 3,755
Threads: 22
Likes Received: 5,083 in 2,308 posts
Likes Given: 5
Joined: Apr 2020
Reputation:
56
•
|