Posts: 2,304
Threads: 6
Likes Received: 2,346 in 859 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
131
(04-11-2022, 03:19 PM)praaj Wrote: Ithu Oru nalla kadhaiyaga varum yendru purikirathu, aanal niraya kelvi erukku.
1. Evlo sambarichu yen slum la erukkan.
2. Avan asai engineer ana avan APPA aasai doctor appointment athaiye padikrannu avan appata solli erukkalame.
3. Avan APPA friend yen evanukku sothu tharanum athu yepdi evanukku mannadiye theriyum.
4. Avan APPA padippu matha selavukku panam vangikirannu sonna andha panam yengey.
5. Aval friend husband Evan APPA Amma marriage mannadiye setha Ava pasanga yepdi evana vida chinna pasamgala erukka mudiyum.
6. Yendha ammavum yarukkavo pillaigala piriya matta apdi erukka Ava friend yen sinna kulanthaigala hostel anupunana.
7 Mana kastamla erukka avan Amma yen 1 time kooda poi children's pakala.
Ithu yellam yeppo mudivu varum nu papom.
Next update yeppo.
உங்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதில் வரும் பதிவுகளில் கண்டிப்பாக கிடைக்கும்
விமர்சனங்கள் குறைவதாலும் எனக்கும் கண்களில் சிறிய பிரச்சினை இருப்பதாலும் அப்டேட் செய்வதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது நண்பா
Posts: 316
Threads: 2
Likes Received: 123 in 110 posts
Likes Given: 7
Joined: Sep 2019
Reputation:
1
(04-11-2022, 04:54 PM)Ananthakumar Wrote: உங்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதில் வரும் பதிவுகளில் கண்டிப்பாக கிடைக்கும்
விமர்சனங்கள் குறைவதாலும் எனக்கும் கண்களில் சிறிய பிரச்சினை இருப்பதாலும் அப்டேட் செய்வதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது நண்பா
Neenga porumaiya kooda podunga bro. Comments inime kooda varum paarunga. Story flashback apa tha naeraya comments varum
•
Posts: 2,304
Threads: 6
Likes Received: 2,346 in 859 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
131
ஆடிட்டர் ராஜாராமன் இன்பராணியிடம் தனியாக பேச வேண்டும் என்றதும் இவர் வேறு தன்னுடைய மகனை பற்றி என்ன பேசப் போகின்றாரோ என்று மனதில் தோன்றிய குழப்பத்துடன் இவர் தனது மகன் அருணை பற்றி என்ன சொல்ல போகிறாரோ என்ற குழப்பம் கலந்த தயக்கத்துடன் அவரையும் விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றாள்.
அவரும் அருண் ராஜா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒருநாள் தன்னை வந்து சந்தித்து உங்களால் எனக்கு கல்வி கடனுக்கு ஒரு சுயுரிட்டி கையெழுத்து மட்டும் போட்டு தரமுடியுமா என்று தயங்கிக் கொண்டே கேட்டான்.
அருணிடம் சுமாராக எவ்வளவு தொகை கல்வி கடன் தேவைப்படும் என்று கேட்டதற்கு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் தேவைப்படும் என்றான்.
அந்த சமயத்தில் தான் இப்பொழுது மும்பையில் தங்கியிருந்து படித்து கொண்டிருக்கும் என்னுடைய மகளின் உயர் கல்விக்காக நானும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் கல்வி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை.
அதுமட்டுமல்லாமல் அருண் கேட்ட தொகையும் கொஞ்சம் பெரிய அளவில் இருந்தது, அதுமட்டுமல்லாமல் பெரிய பணக்காரணான அருண் ஏன் தன்னுடைய பணத்தை உபயோகிக்காமல் இப்படி கல்வி கடன் கேட்கிறான் என்ற குழப்பத்தின் காரணமாக என்னால் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை.
அந்த சமயத்தில் நீங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட புதிது என்பதால் உங்களை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தேன்.
அதனால் வேறு யாரிடமாவது உதவி கேட்கும் படி கூறி அனுப்பி வைத்தேன்.மறுநாளில் அருணை உங்கள் ஸ்பின்னிங் மில்லின் வாசலில் வைத்து உங்கள் இரண்டாவது கணவர் சங்கருடன் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தேன்.
அவன் பேசி முடித்து விட்டு செல்லும் போது அவனுடைய முகத்தில் ஒருவித சந்தோஷம் இருந்தது.எனவே நான் அவனுடைய பணப்பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என்று நினைத்தேன்.
அவனும் அதன் பிறகு என்னை வந்து பார்க்கவில்லை.ஆனால் கடந்த மாதம் ஒருமுறை நான் மும்பையில் தங்கியிருந்து படித்து கொண்டிருக்கும் என்னுடைய மகளை சந்திக்க சென்றேன்.
வழக்கமாக எப்போதும் ஃப்ளைட் மூலம் சென்று வரும் நான் அந்த முறை மட்டும் ரயிலில் பர்ஸ்ட் ஏசி வகுப்பில் கிளம்பி சென்றேன்.இடையில் ஒரு ஸ்டேஷனில் மற்றொரு ரயில் கிராஷ் செய்வதற்கு நான் சென்ற ரயில் கொஞ்சம் அதிக நேரம் நின்றது.
நான் பொழுது போகாமல் அந்த ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.அப்போது அருண் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியில் இருந்து ஒரு பேக்கோடு இறங்கி வந்தான்.
நான் தான் அவனை கூர்ந்து கவனித்தேன். ஆனால் அவன் என்னை கவனிக்கவில்லை.
அவன் அங்கே ரயில்வே ஸ்டாலில் ஒரு உணவு பொட்டலம் வாங்கி கொண்டு அங்கே இருந்த ஸ்டேஷன் குடிநீர் பைப்பில் தன்னிடம் காலியாக இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொண்டு நான் அவனிடம் பேசுவதற்கு அழைக்கும் முன்பாகவே கிளம்பி போய் விட்டான்.
எனக்கு அவனின் நடவடிக்கைகள் ஆச்சரியமாக இருந்தது.அவன் சாதாரணமாக ரயிலில் பயணம் செய்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.அதிலும் சாதாரணமாக ஹிந்திகாரர்கள் படுக்க விடாமல் தொந்தரவு செய்யும் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸில் பயணம் செய்து கொண்டு ரெயில் நிலையத்தில் விற்பனை செய்யும் உணவு வாங்கி கொண்டு பயணம் செய்தது வேதனையாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்காமல் அந்த ரெயில்வே ஸ்டேஷனில் பைப்பில் வந்த தண்ணீரை பிடித்து கொண்டு சென்றது மனதில் வேதனையை கொடுத்தது.
எனக்கு ஒருவேளை அன்று அங்கே நான் பார்த்தது அது நம்முடைய அருணாக இருக்க வாய்ப்பில்லையோ அவனைப் போலவே இருக்கும் வேறு யாரையாவது இருக்குமோ என்று நினைத்தேன்.
ஆனால் கடந்த வாரத்தில் ஒருநாள் என்னுடைய மகள் அவள் படிக்கும் கல்லூரியின் சார்பில் அவள் ஏதோ சமூக சேவை செய்ய மும்பை அந்தேரியின் சேரிப் பகுதிக்கு சென்று இருக்கிறாள்.
அவள் ஏற்கனவே அருள்ராஜ் சார் எங்கள் வீட்டிற்கு ஒருமுறை வந்த போது அருணையும் கூடவே அழைத்து கொண்டு வந்திருந்தார்.அப்பொழுது என்னுடைய மகள் அருணிடம் பேசி பழகி இருக்கிறாள்.
அவள் அங்கே அந்த சேரிப் பகுதியில் நம்முடைய அருண் நடந்து வருவதைப் பார்த்து இருக்கிறாள்.
அங்கு அவனை பார்த்ததும் பேசி இருக்கிறாள். அப்பொழுது அருண் அங்கு என்னுடைய மகளிடம் தான் தன்னுடைய நண்பனிடம் இது போன்ற சேரிப் பகுதியில் ஒரு மாதம் முழுவதும் தங்கி இருந்து விட்டு வருகிறேன் என்று சவால் விட்டேன்.அதற்காக இங்கு வந்து தங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறான்.
மேலும் நான் இங்கு தங்கியிருப்பதாக தயவுசெய்து வீட்டில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.
இதையெல்லாம் என்னுடைய மகள் அவளாகவே என்னிடம் கூறினாள்.ஆனால் எனக்கு தான் இதையெல்லாம் நினைத்தால் மனதுக்குள் நெருடலாக இருக்கிறது.
ஒருவேளை அருள்ராஜ் சார் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் அருண் இப்பொழுது இது போல் கேலி கூத்தாடி போன்று நடக்காமல் உங்கள் இருவரோடும் இருந்து ஒழுக்கமாக வாழ்ந்து இருப்பான் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய இரண்டாம் கணவர் சங்கர் சாருக்கு ஒருவேளை அருணை கண்டித்து வளர்க்க மனம் வரவில்லை என்று நினைக்கிறேன்.
அதனால் முடிந்த வரையில் நீங்கள் அருண் மீது ஒரு கண் வைத்து ஜாக்கிரதையாக கண்காணிப்பு செய்யுங்கள் மேடம்.ஏனென்றால் உயிலின் படி பிற்காலத்தில் அவன் தான் உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் உங்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இன்பராணி அவரிடம் தன்னுடைய குடும்ப கவுரவத்தை விட்டு கொடுக்க மனம் இல்லாமல், அருண் தன்னிடம் சாதாரண மக்கள் வாழும் நார்மல் வாழ்க்கை பற்றி அறிய ரயிலில் நார்த் இண்டியா வரை போய் ஒருமாத காலத்தில் திரும்பி வருகிறேன் என்று கூறி விட்டு தான் கிளம்பி சென்றான்.
ஆனால் நீங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் அவன் மிகவும் மோசமான இடத்தில் தங்கி இருப்பது போல தெரிகிறது.
உங்களுடைய மகள் அருணை கடைசியாக எங்கே பார்த்ததாக கூறினால் என்று சொல்லுங்கள்,நான் நாளைக்கு அவனைப் போய் பார்த்து பேசி அழைத்து கொண்டு வருகிறேன் என்று அவரிடம் விவரங்களை சேகரித்து விட்டு அவரிடம் இனிமேல் அருணை பற்றி நீங்கள் கவலை படாமல் போய் வாருங்கள்.
இனிமேல் அருணை இன்னும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்கிறேன்.இந்த விஷயம் நம் இருவரைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தாள்.
இன்பராணிக்கு தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை நினைத்து மலைப்பாக இருந்தது.
தன்னுடைய மகனை குறித்து இருவரும் கூறியதை கேட்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியான தன்னுடைய மகன் கேவலம் ஐம்பது லட்ச ரூபாய்க்கு கடன் ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று ஒருவரிடம் கேட்டதை நினைத்து ஆச்சரியம் அடைந்தாள்.
அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அங்கே பணம் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் வேறொருவரிடம் எஜுகேஸனல் லோனுக்கு கையெழுத்து கேட்டு அழைந்ததாக கேள்வி பட்டதை நினைத்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தாள்.
ஆனால் அவன் திருச்சியில் எத்தனையோ தரமான எஞ்சினியரிங் இருக்கும் போது நான் சென்னையில் ஹாஸ்டலில் தங்கி தான் எஞ்சினியரிங் படிப்பேன் என்று அடம்பிடித்து எஞ்சினியரிங் படிக்க டொனேஷன் மட்டுமே கிட்டத்தட்ட பத்து லட்சம் கொடுத்து மீண்டும் கல்லூரி ஃபீஸ் ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து அது தனியாக ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தார்.
பிறகு ஏன் அவன் இப்படி பணத்திற்காக ஒவ்வொரு நபரிடம் கேட்டு அழைந்தான் என்று நினைத்தாள்.
தேவையான பணத்தை தன்னிடம் கேட்டு இருந்தால் தான் அவனுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்து இருப்பேனே.ஏன் தன்னிடம் கேட்கவில்லை.தன்னை ஏன் அவன் சந்தித்து பேச கூட நினைக்கவில்லை என்று நினைத்து கொண்டாள்.
ஆனால் அருண் அவளை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த பிறகு மீண்டும் ஒருநாள் ஒருமுறை தன்னுடைய கல்லூரியில் தன்னை சந்திக்க வந்து விட்டு தான் அவனை சந்திக்க கூச்சமாக இருந்ததால் அவனிடம் இப்பொழுது பார்க்க முடியாது என்று மறுத்து அவனை அப்படியே அனுப்பி விட்டதை நினைத்து பார்த்தாள்.
ஒருவேளை அப்பொழுது தன்னிடம் பணம் கேட்டு தான் அங்கு வந்திருப்பானோ என்று நினைத்து கொண்டாள்.ஆனால் தன்னுடைய கணவன் சங்கர் அவனுக்காக ஒவ்வொரு நாளும் கவனமாய் அவனுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்தாரே என்று யோசித்து குழப்பம் அடைந்தாள்.
அப்போது தான் அவளுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது.தான் இரண்டாவது திருமணம் செய்ததில் இருந்து தன்னுடைய மகனை ஒருமுறை கூட நேருக்கு நேராக பார்த்து பேசவில்லை.ஏன் அவன் சாப்பிட்டானா இல்லையா என்று கூட கேட்டதில்லை என்று ஞாபகம் வந்தது.
ஆனால் தான் வயதுக்கு வந்த பையனை வைத்துக் கொண்டு அவனுக்கு வாலிப வயதில் ஒரு நல்ல வழியில் நடத்த புதிதாக இன்னொரு திருமணம் செய்து கொண்டதால் அவனை நேருக்கு நேர் சந்திக்க கூச்சப்பட்டு தூரத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் அவன் மிகவும் சந்தோஷமாக இருப்பது போல தான் தெரிந்தது.
பிறகு ஏன் அவன் இப்படி பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாக கூறுகின்றனர் என்று என்னினாள்.
தன்னுடைய காதல் கணவன் அருள்ராஜ் இறந்து சில நாட்களிலேயே அருணுக்கு வாலிப வயதில் அவனை சரியாக வழி நடத்த ஒரு நண்பன் போன்ற அப்பா வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் இரண்டாம் திருமணமாக சங்கரை திருமணம் செய்து கொண்டது தவறோ என்று நினைத்தாள்.
தன்னுடைய மகன் தன்னுடைய கணவன் அருள்ராஜ் உயிரோடு இருந்தவரை தானும் அவனும் எந்தவொரு தேவைக்கும் யாரையும் எதிர்பார்த்து இருந்ததில்லை.அவர் தங்களின் முகத்தை பார்த்தே தங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்து விடுவார்.
தன்னுடைய மகனை பொருத்தவரை அவர் ஏதாவது மறந்தால் கூட தான் அவனின் தேவையை அறிந்து பூர்த்தி செய்து இருக்கிறேன்.
என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய மகன் இப்படி பணத்திற்காக நாயாக பேயாக அழைந்து இருக்கிறான்.அதுவும் தன்னுடைய கண்களுக்கு தெரியவில்லை.ஒருவேளை தன்னுடைய கண்களுக்கு தெரியாமல் மற்றவர்கள் மூலம் மறைக்க பட்டுப்விட்டதோ என்று சந்தேகப்பட்டாள்.
ஆனால் தன்னுடைய இரண்டாவது கணவர் சங்கர் அருணை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து அவனுடன் நட்புடன் பழகுவதை பலமுறை இருவரும் அறியாமல் தூரத்தில் இருந்து தன்னுடைய கண்களால் கண்டு ஆனந்த கண்ணீரில் நனைந்து போய் இருக்கிறாள்.
அதுவும் ஆடிட்டர் கூறியதில் இருந்து கடைசியில் சங்கர் அவனுடைய பணத்திற்கு ஏதோ ஏற்பாடு செய்து கொடுத்ததாக தான் தெரிகிறது.பின்னர் ஏன் அவன் இப்படி கால் பாயாக மாறி விட்டான் என்று பலவாறு யோசனை செய்தாள்.
ஆடிட்டரின் மகள் கூறியதை கேட்டதும் கண்டிப்பாக தன்னுடைய மகன் அங்கே மும்பையில் தான் தற்போது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
அதுமட்டுமல்லாமல் அவள் தன்னுடைய மகனை சந்தித்து பேசியது இங்கு சென்னையில் கலைவாணியின் புண்டைக்குள்ளே ஓத்து பணம் வாங்கிக் கொண்டு தன்னை சந்தித்து விட்டு அனிதாவை ஓத்து விட்டு சென்ற நாளாக இருக்க வேண்டும்.
இங்கே தங்கள் வீட்டில் இருக்கும் போது பெரும்பாலும் சுத்தமான மற்றும் சூடான வெந்நீர் மட்டுமே குடிப்பவன் ரெயில்வே ஸ்டேஷனில் சாப்பாடு வாங்கி கொண்டு பைப்பில் தண்ணீர் பிடித்து சென்றதாக கூறியதை கேட்டு ஒரு பெற்ற தாயாக துடிதுடித்து போனாள்.
ஆடிட்டரின் மகளிடமும் அவன் ஏதாவது கதையை தான் கூறி அவளை சமாளித்து அனுப்பி இருக்க வேண்டும்.
ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது.
தனக்கு தெரியாமல் தன்னையும் தன்னுடைய மகனையும் சுற்றி ஏதோ பெரிய அளவிலான சம்பவம் நடந்து முடிந்து இருக்கிறது.
அது இன்னும் தன்னுடைய மகனின் வாழ்க்கையில் இன்னும் விடாமல் துரத்தும் கருப்பாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நினைத்து கொண்டாள்.
ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் கூட இருக்கலாம்.ஆனால் அது எதுவென்றாலும் தன்னுடைய மகன் அருணை நேரில் சந்தித்து அவன் மூலமாக வெளியே தெரிய வந்தால் மட்டுமே உண்மை தெரியும் என்று புரிந்து கொண்டாள்.
இனிமேலும் தாமதித்தால் கண்டிப்பாக தன்னுடைய மகன் தன்னுடைய இருப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
உடனடியாக தன்னுடைய கல்லூரிக்கு அழைத்து தனக்கு மூன்று நாட்கள் பெர்சனல் லீவ் வேண்டும் என்று கேட்டாள்.அவள் இதுவரை அதிகமாக விடுமுறை எடுக்காத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக விடுமுறை கொடுத்தது.
அடுத்ததாக முன்னெச்சரிக்கையாக தன்னுடைய அளவுக்கு சரியான அளவில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை வாங்கி கொண்டாள்.
ஆன்லைன் மூலமாக மும்பையில் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள நல்ல ஒரு ஸ்டார் ஹோட்டலில் இரண்டு நாட்கள் ரூம் புக் செய்து கொண்டாள்.
தன்னுடைய கணவன் சங்கரிடம் இது குறித்து கூறாமல் தன்னையும் தன்னுடைய தோழி கலைவாணியையும் அரசாங்கம் தாங்கள் இருவரும் சென்ற கான்பரன்ஸில் முடிவான கருத்து குறித்து இறுதி முடிவு குறித்து விவாதிக்க அழைத்து இருப்பதாகவும் திரும்பி வர மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என்று கூறி அனுமதி வாங்கி கொண்டு அன்றைய தினமே மதுரையில் இருந்து மும்பையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அடைந்தாள்.
ஹோட்டலில் தன்னை ரிப்ரெஸ் செய்து கொண்டு கிளம்பி பர்தாவை அணிந்து கொண்டு மூன்று மணியளவில் ஓலா டேக்ஸி புக் செய்து கொண்டு ஓலா டிரைவரிடம் ஆடிட்டரின் மகள் கூறிய ஏரியாவில் தன்னை டிராப் செய்யும்படி கூறினாள்.
ஓலா டிரைவர் ஸ்டார் ஹோட்டலில் இருந்து கிளம்பியவள் தன்னை டிராப் செய்யும்படி கூறிய இடத்தை கேட்டு அவளை ஒருவிதமாக பார்த்தான்.அதன் பிறகு அந்த டிரைவர் ஒருவேளை சமூக சேவை செய்ய இந்த பெண் செல்வார்கள் என்று நினைத்து கொண்டான்.
அந்த டிரைவர் தன்னை இடத்தை கூறியதும் வித்தியாசமாக பார்த்ததை இன்பராணியும் கவனிக்கவே செய்தாள்.இந்த டிரைவர் ஏன் இப்படி பார்க்கிறான் என்று கூட நினைத்தாள்.அதற்கான பதில் அங்கே சென்ற இடத்தில் கிடைத்தது.
டேக்ஸி டிரைவர் அவள் சொன்ன இடத்தில் டிராப் செய்து விட்டு கிளம்பி போய்விட்டான்.
அவன் விட்டு சென்ற இடத்தை பார்த்தவளுக்கு குமட்டல் வர ஆரம்பித்தது.ஏனென்றால் அந்த இடத்தில் தெருவில் ரோடு எதுவும் சரியாக இல்லை.குண்டும் குழியுமாக இருந்தது.
குழியாக இருந்த பகுதியில் சாக்கடை தண்ணீர் வெளியேறி ரோட்டில் ஓடியது. பன்றிக் குட்டிகள் தங்கள் தாயுடன் ஊச் ட்ர் ஊச் என்ற சத்தத்துடன் அங்கங்கே குதித்து ஓடி சாக்கடைக்குள் தங்கள் முகத்தை நுழைத்து தங்கள் இரையை தேடி ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்ச தூரம் மட்டுமே மூக்கை பொத்திக்கொண்டு அந்த தெருவில் நடந்து சென்றவள்.அதற்கு மேலும் நாற்றம் பொறுக்க முடியாமல் இப்படி ஒரு அருவருப்பான இடத்தில் தன்னுடைய மகன் கண்டிப்பாக தங்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்து மீண்டும் தனது மகனை டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கூறி தேடச் சொல்லலாம் என்று நினைத்து திரும்பி செல்ல முடிவு செய்தாள்.
ஆனால் அவளுடைய எண்ணத்தில் தீயை வைக்கும் விதமாக அவளுடைய மகன் அந்த சாக்கடை தெருவில் எந்தவொரு அருவருப்பும் இல்லாமல் மூக்கை பொத்தாமல் எந்தவொரு முகச்சுளிப்பும் இல்லாமல் நார்மலாக நடந்து வந்து அவளை கடந்து சென்றான்.
அப்படி அவளை கடந்து செல்லும்போது அவள் அருகில் வந்ததும் ஒரு நிமிடம் அங்கே நின்று தன்னுடைய மூச்சை ஒருமுறை ஆழமாக இழுத்து சுவாசித்து கொண்டு தன்னுடைய சிறிய வீட்டை நோக்கி நடந்தான்.
ராணிக்கு தன்னுடைய மகன் தன் அருகில் நின்று தன்னுடைய மூச்சை இழுத்துக் கொண்டதை வைத்து எங்கே அவன் தன்னை தெறிந்து கொண்டானோ என்று நினைத்து பயந்தாள்.
தாய்க்கு மட்டுமல்ல அதன் குட்டிக்கும் கூட தன்னுடைய தாய் எப்படி எந்தவொரு மாறு வேடத்தில் இருந்தாலும் தன்னுடைய தாயை அடையாளம் காண முடியும் என்று புரியவில்லை.
அவன் தன்னை விட்டு நேராக சென்றதும் தன்னுடைய மகன் தன்னை அடையாளம் காணவில்லை என்று நினைத்து கொண்டு அவன் தன்னை திரும்பி பார்க்கும் முன்பு பக்கத்து சந்தில் சென்று ஒளிந்து கொண்டு தன்னுடைய மகனையும் அவன் தங்கியிருக்கும் வீட்டை நோட்டம் விட்டாள்.
அவளுடைய மகன் அருண் சாதாரண பார்மல் பேண்ட் மற்றும் சேர்ட் அணிந்து கால்களில் ஷு அணிந்து தோளில் ஒரு லேப்டாப் பேக் மற்றும் ஒருகையில் லேபிள் அணியும் கோர்ட் ஒன்றை வைத்திருந்தான்.
அவனை அந்த கோலத்தில் பார்த்தவளுக்கு தான் அவனை கடைசியாக திட்டியதால் அவன் அவசரமாக சென்னையில் தன்னுடைய டிசியை இங்கு தான் எங்கேயாவது அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான் போல என்று மனதுக்குள் தோன்றியது.
கையில் கோர்ட் இருப்பதை கண்டு எஞ்சினியரிங் படிப்பை படிப்பவர்களுக்கு லேபிள் என்ன வேலை இருக்கப் போகிறது என்று குழப்பமாகவே இருந்தது.
அவள் பலவாறு கற்பனை செய்து கொண்டு இருக்கும்போதே அவளுடைய மகன் அருண் ஒரு துருப்பிடித்த இரும்பு படி வழியாக மேலே இருக்கும் வீட்டில் ஒரு சிறிய அளவிலான அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.
அவள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் ஒரு கொஞ்சம் பழைய ஷார்ட்ஸ் மற்றும் புதிய டி சர்ட் அணிந்து கொண்டு வெளியே வந்தவன், கீழே இருந்த கழிப்பறையில் சென்று கைகால் கழுவி விட்டு கீழே இருந்த வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு சிறிய அண்டா மற்றும் சிறிய குண்டானாக ஒவ்வொன்றாக எடுத்து வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இரவு நேர டிபன் கடை தள்ளுவண்டியில் அடுக்கினான்.
அவனோடு சேர்ந்து கொஞ்சம் வயதான ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து அந்த வேலையை செய்தனர்.
அந்த பெண் அருணிடம் அந்த டி சர்ட்டை காண்பித்து கொஞ்சம் கண்டிப்புடன் ஏதோ வற்புறுத்தி கூறினாள். அருணும் அந்த பெண்ணிடம் பதிலுக்கு ஏதோ கூறினான்.அதன் பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள்.
எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பிறகு அந்த ஆண் ஒரு பாத்திரத்தில் ஏதோ அருணிடம் கொடுத்தார்.அருண் அதை வாங்கி கொண்டு மேலே தன்னுடைய அறையில் வைத்து விட்டு மீண்டும் கீழே வந்தான்.
அதன் பிறகு அருணும் அந்த ஆணும் சேர்ந்து வண்டியை தள்ளிக்கொண்டு இன்பராணி ஒளிந்து கொண்டிருந்த சந்துப் பகுதியை தாண்டி சென்றனர்.அந்தப் பெண்மணி அவர்களுக்கு பின்னால் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
அவர்கள் அவள் ஒளிந்திருக்கும் பகுதியை கடந்து செல்லும்போது அந்த தள்ளுவண்டியில் இருந்து சட்னி சாம்பார் மற்றும் சால்னா வாசனை வீசியது.அதனால் அவர்கள் இரவு நேரத்தில் இட்லி தோசை மற்றும் பரோட்டா விற்பனை செய்ய செல்கின்றார்கள் என்று புரிந்தது.
அருண் அணிந்திருந்த டீ சர்ட்டை கவனித்து பார்க்கும் போது,அது இரண்டு வருடங்களுக்கு முன்பு அருண் அவர்கள் குடும்பத்தோடு இருந்தபோது அவள் அவளுடைய முதல் கணவன் அருள்ராஜ் சாகும் முன்பாக கொண்டாடிய கடைசி பிறந்த நாளுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த விலை உயர்ந்த டி சர்ட் என்று புரிந்தது.
அப்பொழுதுதான் அவளுக்கு இன்று தான் தன்னுடைய முதல் கணவன் அருள்ராஜ் பிறந்த நாள் என்று ஞாபகத்திற்கு வந்தது.அருண் தன்னுடைய அப்பாவின் ஞாபகமாக இன்று அதை அணிந்து கொண்டு வெளியே செல்வது புரிந்தது.
இன்று அநாதையாக இருந்த தன்னை காதலித்து மணந்த தன்னுடைய முதல் கணவனின் பிறந்த நாளை கூட தான் மறந்து விட்ட நன்றி கெட்ட மனதை எண்ணி மனக்கஷ்டம் அடைந்தாள்.
அதேநேரம் தன்னுடைய மகன் இன்னும் தன்னுடைய அப்பாவை மனதுக்குள் சுமந்து கொண்டு இருக்கிறான் என்றால்,தானும் அவனுக்கு நல்ல அப்பாவாக மட்டுமல்லாமல் ஒரு தோழனாகவும் நல்ல வழிகாட்டியாகவும் இருப்பேன் என்று பட்டுப் போன தன்னுடைய வாழ்க்கையில் நுழைந்த இரண்டாம் கணவன் சங்கரும் அவனுக்கு நல்ல பெற்றோராக நடந்து கொள்ளவில்லை என்று புரிந்து கொண்டாள்.
அவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு அந்த தெருவை கடந்து தன்னுடைய கண் பார்வையை விட்டு மறைந்து சென்றதும்,அவள் மறைந்திருந்த சந்து பகுதியிலிருந்து வெளியே வந்தாள்.
மாதம் மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் கல்லூரி படிப்பிற்கு வீட்டிலிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான் அதுவும் போதாதென்று பெண்களின் கற்போடு விளையாடி ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து லட்ச ரூபாய் சம்பாதிக்கிறான்.
அதன் பிறகு ஏன் இப்படி இந்த ஏழை வேஷம் போட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்பனை செய்ய வண்டியை தள்ளி கொண்டு செல்கிறான் என்று நினைத்து கொண்டாள்.
அங்கே இருந்த சாக்கடை நாற்றம் பொறுக்க முடியாமல் ஒருகையால் மூக்கை பொத்திக்கொண்டு ஒருகையால் தன்னுடைய பர்தா மற்றும் சேலை பாவாடை இரண்டையும் சாக்கடை சேற்றில் படாதவாறு தூக்கி பிடித்து கொண்டு நேராக தன்னுடைய மகன் தங்கியிருந்த அறைக்கு துருப்பிடித்த ஏணியின் வழியாக சென்றாள்.
அந்த ஏணியில் ஏறுவதற்கே அவளுக்கு பயமாக இருந்தது.ஏணி அங்கங்கே உடைந்து சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
அறையின் வாசலில் மரத்தால் ஆன ஒரு கதவு இருந்தது.அதில் ஒரு சிறிய இரும்பு பூட்டு போட்டு பூட்டி இருந்தான்.
கதவின் மேல் அங்கங்கே சிறிய சிறிய விதவிதமான ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது.அதில் யதார்த்தமாக லேசாக கையை வைத்து தடவியபோது கை லேசாக பள்ளத்தில் சென்றது.அதனால் தன்னுடைய மகன் கதவில் இருக்கும் ஓட்டையை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.
கதவின் சற்று தள்ளி பக்கத்தில் ஒரு சிறிய ஜன்னல் இருப்பதை கண்டாள்.அதில் ஜன்னல் கதவு இல்லாமல் ஒரு தினசரி காலண்டர் அட்டை மட்டுமே திரை போல தொங்கிக் கொண்டிருந்தது.
அதை தூக்கி உள்ளே இருப்பதை கவனித்தாள்.அது இருவர் படுத்து உறங்கி கொள்ளும் அளவுக்கு சரியான அளவில் இருந்தது.
அங்கே ஒரு மூலையில் ஒரு மேஜை இருந்தது. அதன் மேல் ஒரு போர்வை போர்த்தி இருந்தது.அதன் ஓரத்தில் ஐந்து சட்டை மற்றும் ஐந்து பேண்ட் அடுக்கி வைக்க பட்டிருந்தது.அதன் பக்கத்தில் ஒரு அயர்ன் பாக்ஸ் இருந்தது.
மேஜைக்கு அடுத்து ஒரு ஆணியில் அவனுடைய வெள்ளை நிற கோர்ட் இரண்டு தொங்கி கொண்டிருந்தது.அதன் மேல் ஒரு ஸ்டெதஸ்கோப் தொங்கி கொண்டு இருந்தது.
மேஜைக்கு பக்கத்தில் ஒரு குட்டி அறை இருந்தது தெரியவந்தது.அது பார்ப்பதற்கு சின்ன ஒருவர் மட்டுமே நின்று சமைக்க போதுமான சமையல் அறை போல இருந்தது.
அறையின் அடுத்த பக்கத்தில் ஏதோ லைட் மெதுவாக மின்னி மின்னி எரிவதைக் கண்டு அங்கே தன்னுடைய பார்வையை திருப்பினாள்.
அங்கே இருந்த இரண்டு ஃபோட்டோ மற்றும் அதன் கீழே தமிழில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை வாசித்து பார்த்தவள் தான் ஒரு தாயாக இன்னும் எப்படி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து உயிரோடு இருக்கும் செத்த பிணம் போலாளானாள்.
அங்கே இருந்த சுவரில் அவளுடைய முதல் கணவன் அருள்ராஜ் போட்டோ இருந்தது.அவருடைய போட்டோவின் கீழே அப்பா உங்கள் விருப்பங்களில் ஒன்றை நிறைவேற்ற நான் இப்பொழுது ஏழைகளுக்கு உதவும் வகையில் மருத்துவ படிப்பை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்
ஆனால் உங்களுடைய இன்னொரு விருப்பத்தை நிறைவேற்ற முடியாத அளவுக்கு சூழ்நிலை கைதியாக இப்பொழுது இருக்கிறேன் என்று எழுதி இருந்தது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் அருள்ராஜ் தெய்வீக கலையோடு நீ மருத்துவம் படிப்பதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.என்னுடைய அடுத்த ஆசையையும் நிறைவேற்ற உன்னாலே முடியும்.
அதற்கான காலம் விரைவில் கனிந்து வரும் என்பது போல புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தார்.அதன் கீழ் சுவரில் அணையா விளக்கு ஒன்று மெதுவாக மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்தது.
அடுத்ததாக இன்பராணியின் ஃபோட்டோ சிரித்த முகத்துடன் காட்சி அளித்தது.
ஆனால் அதன் கீழ் தந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்க என்னை பெற்ற தாயாகிய "உன்னாலே நான் ஒரு கால் பாய் ஆனேன்" என்று எழுதி இருந்தது.
இருவருக்கும் கீழே அருண் ராஜா ஐந்து வயது குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றிருந்தது
அதில் நான் வளர்ந்து பெரிய ஆணாக மாறாமல் குழந்தையாகவே இருந்து இருக்கலாம்.
இந்த நேரத்தில் நான் என்னுடைய அப்பா அருள்ராஜ் மற்றும் என்னை வளர்த்த அம்மா அப்பா ரஞ்சனியம்மா மற்றும் கிருபா அப்பா மற்றும் தாத்தா வைரவன் மற்றும் பாட்டி வனஜா எல்லோரையுமே மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று எழுதி வைத்திருந்தான்.
The following 11 users Like Ananthakumar's post:11 users Like Ananthakumar's post
• alisabir064, Babyhot, james@bond@007, karthikhse12, KILANDIL, manigopal, Sanjukrishna, Seetha, spspeed, Thebeesx, utchamdeva
Posts: 145
Threads: 0
Likes Received: 62 in 58 posts
Likes Given: 76
Joined: Jul 2019
Reputation:
0
Awesome bro avanoda feeling arumaiya sollirukinga. Ivan ippadi aanathukku avan amma eppadi karanam ellathukkumana bathillukku waiting. Rombha nalla irrunthuthu padika.
•
Posts: 746
Threads: 0
Likes Received: 232 in 205 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
Super bro.
Arumaiya kadhai kondu poringa theliva sollala vendiya yellam solringa.
Avana yepdi kanru pidikira avan eppo nilai yenna.
Eni avan epdi aaga karanam yenna eval avan vaalkai parthu erukka aana avanta athu Vera Mari solla Patti erukkanum eruvarukkum yerpatta pirivin kaaranam yennanu therinjikanum. Papom eni yenna aguthunnu.
•
Posts: 2,602
Threads: 0
Likes Received: 1,281 in 1,041 posts
Likes Given: 1,300
Joined: May 2019
Reputation:
20
அருமையான பதிவு அதிலும் இன்பராணி எதிர்பாராத திருப்பங்கள் இரண்டாவது திருமணம் அதில் இருந்து தெரிகிறது இதற்கு பின்னால் சங்கர் திட்டம் எல்லாம் நடக்கிறது என்று. அருண் ஏன் கால்பாய் ஆனா தெரிவதற்கு காத்திருக்கிறேன் நண்பா. உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது
•
Posts: 14,357
Threads: 1
Likes Received: 5,715 in 5,039 posts
Likes Given: 16,965
Joined: May 2019
Reputation:
34
அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 211
Threads: 0
Likes Received: 94 in 79 posts
Likes Given: 924
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 8,505
Threads: 10
Likes Received: 7,671 in 4,164 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
252
super bro
Posts: 3,091
Threads: 0
Likes Received: 1,187 in 1,055 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 23
Threads: 1
Likes Received: 9 in 8 posts
Likes Given: 0
Joined: May 2022
Reputation:
0
•
Posts: 684
Threads: 1
Likes Received: 692 in 407 posts
Likes Given: 386
Joined: May 2022
Reputation:
20
நீங்கள் ஆரம்பத்தில் கூறியதை போல ஒவ்வொரு பதிவை பதிவு செய்யும் போது அவனுடைய நிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது நண்பா
இனி ராஜா ஏன் இப்படி தன்னுடைய அம்மா தான் தன்னுடைய கால் பாய் நிலைக்கு காரணம் என்று கூறினான் என்று கூறினால் நன்றாக இருக்கும் நண்பா
•
Posts: 243
Threads: 0
Likes Received: 81 in 65 posts
Likes Given: 53
Joined: May 2019
Reputation:
1
நண்பரே உங்கள் கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த கதையில் தாயும் மகனும் இரண்டாம் கணவனால் ஏமாற்ற படுகிறார்கள் என்று நினைக்கிறேன் அதை இன்பராணி எப்படி கண்டுபிடிக்க போகிறாள் எப்படி தன் மகனை மீட்கிறாள் ராஜா ஏன் கால்பாய் ஆனான் என்பதே கதை இதை நீங்கள் மிகவும் அற்புதமாக கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
•
Posts: 550
Threads: 0
Likes Received: 215 in 188 posts
Likes Given: 778
Joined: Oct 2019
Reputation:
0
இயல்பான கதை சொல்லும் விதம் அருமை
•
Posts: 316
Threads: 2
Likes Received: 123 in 110 posts
Likes Given: 7
Joined: Sep 2019
Reputation:
1
Super update bro. Waiting for her to meet her son
•
Posts: 449
Threads: 3
Likes Received: 297 in 241 posts
Likes Given: 441
Joined: Oct 2022
Reputation:
9
இன்று தான் கதையை வாசிக்க முடிந்தது நண்பா
கதை அருமையாக இருக்கிறது நண்பா
•
Posts: 208
Threads: 0
Likes Received: 119 in 86 posts
Likes Given: 225
Joined: May 2022
Reputation:
0
Bro, Today just read this story, Well narrated....
Pls. continue .....
•
Posts: 226
Threads: 1
Likes Received: 136 in 100 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
inga comment pannalama okok.. Bro story semma.. but health mukkiyam. Mudiyumna browserla font size perusakkikonga. its will help u
•
Posts: 2,304
Threads: 6
Likes Received: 2,346 in 859 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
131
08-11-2022, 07:45 PM
(This post was last modified: 08-11-2022, 07:49 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை படித்து விட்டு விமர்சனம் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
நண்பர் மகேஷ் கூறியது கிட்டத்தட்ட 70 %உண்மை தான்
ஆனால் அதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் சம்பவங்கள் இருக்கிறது
எழுதி கொண்டு இருக்கிறேன் முடித்ததும் விரைவில் பதிவு செய்கிறேன்
யாரும் நான் தனிப்பட்ட முறையில் விளக்கம் கொடுக்கவில்லை என்று நினைத்து வருத்தப் பட வேண்டாம் ப்ளீஸ்
உங்களுடைய விமர்சனத்தை வைத்து தான் நான் என்னுடைய கதையை உற்சாகமாக எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பர்களே
Posts: 312
Threads: 0
Likes Received: 105 in 83 posts
Likes Given: 393
Joined: Jul 2019
Reputation:
1
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதை எழுதும் கதாசிரியர்கள் முக்கியமான கதாசிரியர் நீங்கள் clp);
•
|