நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
Update bro........
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
றுநாள் காலை.

மகேந்திரன் அறையை விட்டு வெளியில் வந்தான்.
கீழே வந்தவன் யுகேந்திரன் வருகைக்காக காத்திருந்தான்.
ஏனோ அவன் வரவில்லை. தானே தம்பியின் அறைக்குச் சென்றான். அவன் சோர்வாக கட்டிலில் படுத்திருந்தான்.
 “என்னண்ணா?”
அண்ணனைக் கண்டதும் சோர்வாகக் கேட்டான்.
“பெரிய இடத்து சிபாரிசைப் பிடிச்சிருக்கே.”
அவனுக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.

“என்னண்ணா சொல்றே?”

“உன் படிப்பிற்காக கிருஷ்ணவேணி என்னிடம் பேசினாள். அதைத்தான் சொல்றேன். இந்த படிப்பை நல்லபடியா முடி. அதன் பிறகு பார்க்கலாம்.”

அதன் பிறகுதான் தம்பியைப் பார்த்தான்.

“என்னடா இன்னும் படுத்துக்கிட்டு இருக்கே?”

“என்னவோ தெரியலைண்ணா. முடியலை.”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கிருஷ்ணவேணி அறைக்குள் நுழைந்தாள்.

“இந்தாங்க சார்.”

மகேந்திரனிடம் கொண்டு வந்த தேநீரை நீட்டினாள்.

அவனும் வாங்கிப்பருக ஆரம்பித்தான்.

“டேய் சோம்பேறி. இன்னும் எழுந்திரிக்க மனசு வரலையா? எழுந்திரு. இன்னிக்கு முக்கியமான செமினார் இருக்கு. சீக்கிரம் போகனும்னு சொன்னேன்ல. ஊம். கிளம்பு.”

அவனும் முயற்சி செய்தான். எழும்போதே தடுமாறினான்.

“என்னடா தடுமாறே?”

பதறிய மகேந்திரன் அவனைத் தாங்கினான்.

அவன் சும்மா சொல்லவில்லை. ஏதோ உடல்நிலை சரியில்லை என்று புரிந்தது.

அவனைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றான்.

திரும்பவும் படுக்கையில் கொண்டு வந்து மெதுவாக அமர வைத்தான்.

தலையணையில் சாய்வாக அமர்ந்த யுகேந்திரனிடம் தேநீரை நீட்டினாள்.

“வேண்டாம் கிருஷ்.”

அவன் மறுத்தான்.

“காலையில் வெறும் வயிற்றோடா இருப்பே. இந்தா குடி.”

அதட்டலாய் கூறியவாறே நீட்டினாள்.

அவன் வாங்கிப் பருகுவதற்காக வாயருகே கொண்டு சென்றான். குமட்டியது. வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வர வாந்தி எடுத்தான். அவனது தலையைப் பற்றினாள்.

“கொடு நான் பிடிச்சுக்கறேன்.”

மகேந்திரன் சொல்ல அவனிடம் யுகேந்திரனை விட்டுவிட்டு குளியல் அறைக்குச் சென்று கப்பை எடுத்து வந்தாள். அவன் வாயருகே நீட்டினாள்.

“வேண்டாம் கிருஷ்.”

அவன் தடுத்தான்.

“என்ன வேண்டாம். உன்னால் எழுந்திரிக்க முடியலைன்னுதான் கொண்டு வந்தேன். சும்மா சங்கோஜப்படாம இரு.”

மென்மையான குரலில் சொன்னாள்.

குடலே பிடுங்கிக்கொண்டு வருவது போல் அவன் தொடர்ந்து வாந்தியெடுத்தான்.

அவள் எந்தவித அருவருப்பும் இல்லாமல் அவனைத் தாங்கி நின்றது கண்டு மகேந்திரனே ஒரு நிமிடம் அசந்து போனான்.

அவன் வயிற்றில் உள்ளது எல்லாம் வெளிவந்த பிறகு அவன் சோர்ந்துபோய் கட்டிலில் சரிந்தான்.

அவனது வாயைத் துடைத்துவிட்டவள் கீழே தரையையும் துடைக்க ஆரம்பித்தாள்.



“நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்.”
மகேந்திரன் தடுத்துப் பார்த்தான்.
ஒரே வாடையா இருக்கு சார். அப்புறம் இந்த வாடையினால் மீண்டும் அவனுக்கு வாந்தி வரும்.”

அவனிடம் மறுப்பாய் பேசியவள் தானே தொடர்ந்து சுத்தம் செய்தாள்.
டெட்டாலைக் கொண்டு அறையை சுத்தம் செய்தவள் மகேந்திரனைப் பார்த்தாள்.
“என்ன?”

“சார். அவனுக்கு கொஞ்சம் டிரஸ்ஸை மாத்தி விடறீங்களா?”

தன் தம்பிக்காக அவள் தன்னிடம் கெஞ்ச வேண்டுமா? யோசித்துக்கொண்டே அவள் சொன்னதை செய்ய ஆரம்பித்தான்.

அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் வனிதாமணி பதட்டத்துடன் வந்தார்.

“என்னாச்சுப்பா?”

பெரிய மகனிடம் விசாரித்தார்.

அவனும் நடந்ததை சொன்னான்.

அவர் யுகேந்திரனை கவலையுடன் பார்த்தார்.

அவனுக்கு முடியாமல் எந்த மாதிரி பாடுபடுவான் என்று கண்கூடாக பார்த்தவர்தானே? அத்துடன் படுத்தியும் வைப்பான்.

சாப்பிட முடியாமல் அவன் அவதிப்படும்போது மற்றவர்கள் எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?
கிருஷ்ணவேணி சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள். அவள் சொல்லித்தான் வனிதாமணி அங்கே வந்ததே.
கிருஷ்ணவேணி கையில் ஒரு கண்ணாடி தம்ளர் வைத்திருந்தாள்.

“இந்தா யுகா. இதைக் குடி.”

“என்னம்மா?” வனிதாமணி கேட்டார்.

“சாத்துக்குடி ஜூஸ் அத்தே. இப்போதைக்கு அவன் வயிறு காலியா இருக்கு. சாப்பிடவும் முடியாது. வயிறு ரொம்ப வெந்து போய் இருக்குன்னு நினைக்கிறேன். அதுதான் தெம்பாயிருக்குமேன்னு ஜூஸ் எடுத்துட்டு வந்தேன்.”

ஆனால் யுகேந்திரன் அதையும் வேண்டாம் என்று மறுத்தான்.

“இப்படித்தான்மா. அவன் முடியவில்லை என்று படுத்துவிட்டால் போட்டு படுத்தி எடுத்துவிடுவான்.”

கவலையுடன் சொன்னார்.

“நான் பார்த்துக்கிறேன் அத்தே.”

அவரிடம் நம்பிக்கையுடன் சொன்னவள் பிடிவாதமாய் கையில் வைத்திருந்த ஜூஸை அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

அவள் விடமாட்டாள் என்று தெரியும்.

“திரும்பவும் வாந்தி வரும் கிருஷ். எனக்கு வேண்டாம்.”

“வெறும் வயித்தோட இருந்தா அதுதான் ரொம்ப படுத்தும். நீ வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. கொஞ்சமாவது வயித்துக்குள் போகும்ல. அடம்பிடிக்காம குடி.”

அவனைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தாள்.

“அத்தே. நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க.”

அவர் கவலையுடன் பார்த்துக்கொண்டே சென்றார்.

இதை எல்லாம் மகேந்திரன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு தானும் அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்தார். மகேந்திரன்தான் அவரை அழைத்திருந்தான்.

அவனை பரிசோதனை செய்துவிட்டு வேக்காளம்தான் என்றுவிட்டு அதற்கான மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார்.

மகேந்திரன் வாங்குவதற்காக சென்றான்.

“கிருஷ். நீ கிளம்பு. இன்னிக்கு செமினாருக்காக நீ எத்தனை கஷ்டப்பட்டு தயார் செய்திருக்கே.”

ஆனால் அவள் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

“கிருஷ். உன்கிட்டதான் சொல்றேன்.”

“எனக்கு காதில் விழுந்தது. உன்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போனால் என்னால் எப்படி செமினார்ல கலந்துக்க முடியும். நான் போகலை.”

அதன் பிறகு அவன் எத்தனை சொல்லியும் அவள் கேட்கவில்லை.

“எனக்கு உடல்நிலை சரியாக எத்தனை நாட்கள் ஆகுமோ? அதுவரைக்கும் நீயும் என்னோடவே இருப்பியா?”



“ஆமாம். இந்த செமஸ்டர்ல நாமதான் லீவே போடலையே. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த மாதிரி சமயத்தில் நீ எந்த மாதிரி படுத்துவேன்னு அத்தை சொல்லியிருக்காங்க. அவங்களால் உன்னை சமாளிக்க முடியாது. அவங்களை நீ ஏமாத்திடுவே. அதனால் நான் கூடவே இருக்கப்போறேன். நீ ஒழுங்கா நான் வேளாவேளைக்குக் கொடுக்கிறதை நீ சாப்பிடனும். என்ன சரியா?”
“சரி.”
Like Reply
மகேந்திரன் வாங்கி வந்த மாத்திரையை சாப்பிட அடம்பிடித்தான்.

“இதப் பாரு. நீ மாத்திரை எல்லாம் சாப்பிட்டாதான் சீக்கிரம் சரியாக முடியும். உன்னோட அண்ணன் நீ இந்த செமஸ்டர்ல நல்ல மதிப்பெண்கள் எடுத்தாதான் நீ விருப்பப்பட்டதை படிக்க முடியும் என்று சொன்னார். நீ இப்படி படுத்திருந்தா எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும்?”
“அண்ணன் சொல்றது இருக்கட்டும். நான் நிறைய மதிப்பெண் வாங்கினா நீ எனக்கு என்ன தருவே?”
உனக்கு என்ன வேணுமோ கேளு. தர்றேன்.”

“இப்ப சொல்லிட்டு அப்புறம் வாக்கு மாறக்கூடாது.”

“வாக்குன்னு என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே?”

“பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.”

“சரி. நீ என்ன கேட்டாலும் தர்றேன். ஆனால் அதுக்கு நீ என்னைவிட ஒரு பாடத்திலாவது ஒரு மதிப்பெண்ணாவது அதிகமா வாங்கனும்.”

“ஒரு பாடத்தில் இல்லை. எல்லா பாடத்திலும் நான் உன்னைவிட அதிக மதிப்பெண் வாங்குவேன். அதன் பிறகு நான் கேட்கிறதை மறுக்காமல் எனக்க தரனும்.”

“தருவேன்.”

“யோசிக்காம சொல்லாதே. இவன் எங்கே நிறைய மார்க் வாங்கப்போறான்னு அலட்சியமா நினைத்து சொல்லாதே.”

“அலட்சியமா நினைக்கலை. நீ என்னைவிட அதிகமான மார்க் வாங்கனும்கிற ஆசையில்தான் சொல்றேன்,”

“சரி. அப்ப கொண்டா அந்த மருந்தை. நான் சாப்பிடறேன்.”

யுகேந்திரனுக்கு உடல்நிலை சீராக ஒருவாரமாயிற்று. இன்னும் முழுக்க சரியாகவில்லை. ஆனால் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டான்.
கிருஷ்ணவேணி தான் பார்த்துக்கொள்வதாகக் கூற வனிதாமணி கவலை படாமல் நிம்மதியானார்.
இந்த ஒருவாரமும் அவள் எப்படி அவனைக் கவனித்துக்கொள்கிறாள் என்று கூட இருந்தே பார்த்தவர்தானே?

ருசியாக சாப்பிடுவதில் யுகேந்திரன் எத்தனை ஆர்வமானவன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவனை வெறும் கஞ்சியைச் சாப்பிடச் சொன்னால் என்ன செய்வான்.

அதனால் சாப்பிட அடம் பண்ணுவான். வனிதாமணி அவனோடு போராட முடியாமல் மிகவும் சிரமப்படுவார்.

இப்போது கிருஷ்ணவேணி அவனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றதால் அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

அவனுக்கு எளிய உணவாக அத்துடன் கொஞ்சம் ருசியாகவும் இருக்கும்படி அவரை சமைத்துத்தரச்சொன்னாள்.

அவளே அவனுக்கு பரிமாறிவிட்டு அவனுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டாள்.

மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்குச் சரியாக கொடுத்தாள்.

அவளுக்காகவே அவன் எழுந்துவிட்டான்.

வீட்டினர் அனைவருக்குமே ஆச்சர்யம்தான்.

அன்று அவர்களுக்குப் பழக்கமான குடும்பம் ஒன்றில் விருந்து. அதற்கு அவர்கள் குடும்பத்தை அழைத்திருந்தனர்.

அன்றைய விழாவிற்கு வனிதாமணி கிளம்பவில்லை. ரவிச்சந்திரன் உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்ததால் அவரும் கிளம்பவில்லை.

வரமாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணவேணியை அவன் கட்டாயப்படுத்தி அழைத்தான்.

மகேந்திரன் அவனை கடிந்துகொண்டபோது கிருஷ்ணவேணி இது மாதிரி பெரிய இடத்து விழாக்களுக்குச் சென்று பழகுவது அவள் நல்லதற்குதான் என்று சொன்னான்.

“உனக்கு இப்போதுதான் உடல்நிலை சரியாகியிருக்கிறது. இப்போது அங்கே வந்து அந்த உணவு வகைகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்று தடுத்துப் பார்த்தான்.

அவனுக்கு தாங்கள் விருந்திற்குப் போகப் போகும் குடும்பத்துப் பையன்கள் மீது அத்தனை நம்பிக்கையில்லை.

அதனாலேயே கிருஷ்ணவேணி அங்கே வருவதை அவன் விரும்பவில்லை.

யுகேந்திரன் வரவில்லை என்றால் அவளும் வரமாட்டாள். என்று எண்ணினான்.

அதை புரிந்துகொள்ளாமல் யுகேந்திரன் கிருஷ்ணவேணியையும் கிளப்பினான்.

அவன் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறானே? கோபமாய் வந்தது.

ஆனால் கிளம்பி வந்து நின்ற கிருஷ்ணவேணியைப் பார்த்து அவனுக்கு மூச்சடைத்தது.

வெண்ணிற ஆடை. அதுவும் அவள் வழக்கமாய் அணியும் சுடிதார் இல்லாமல் புதுமாதிரியான உடை. அவனுக்கு அந்த உடையின் பெயர் தெரியவில்லை.



அத்துடன் கழுத்தில் என்ன வைரமா? அவளிடம் ஏது அத்தனை விலை உயர்ந்த நகை? அவனுக்குப் புரியவில்லை.
அவளைப் பார்த்து வனிதாமணியே வாயடைத்துப்போனார்
“நம்ம கிருஷ்ணவேணியா இது?”

அவரது ஆச்சர்யமான குரலைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வந்தது.
“அம்மா. நான்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். எப்பப்பாரு அந்த சாருலதா கிருஷ்கிட்ட ரொம்ப மட்டமா பேசறா. அவ வாயை அடைக்கத்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன்.”
மகேந்திரனுக்கு கவலை அதிகரித்தது.

இத்தனை அழகாய் இருக்கிறவளை எப்படி அவன்கள் கவனிக்காமல் விடுவான்கள். எந்த கலாட்டாவும் நடக்காம இருக்கனுமே.

அவன் பயந்த மாதிரியே தான் நடந்தது.

எல்லோரது பார்வையும் அவள் மீதேதான்.

சாருலதா கூட அதிர்ச்சியில் வாய்பிளந்தாள்.

இல்லாதவள் என்று அவள்தான் எப்போதும் அவளை சீண்டுவாள். அதற்காக அவளுக்கு பதிலடி கொடுக்க என்றே இவ்வாறு அவளை அழைத்து வந்திருக்கிறான் யுகேந்திரன்.

கிருஷ்ணவேணி கூடவே யுகேந்திரனும் இருந்ததால் அவள் கலகலவென இருந்தது வேறு பார்ப்போரை ஈர்த்தது.

“அந்தக் குட்டி யாருடா? செமையா இருக்கால்ல.”

அந்த வீட்டுப் பையன் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது மகேந்திரன் காதில் விழ அவன் மனம் கொதித்தது.

அவனருகே சென்றான்.

“அவ எங்க வீட்டுப் பொண்ணு. கொஞ்சம் பார்த்துப் பேசு.”
அழுத்தமான குரலில் மகேந்திரன் சொல்ல அவன் வெலவெலத்துப்போனான்.
மகேந்திரன் எத்தகயைவன் என்று அவன் அறிந்தே வைத்திருந்தான். தொழிலில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மிகவும் கண்டிப்பானவன்.

“சாரி சார். தெரியாம சொல்லிட்டேன்.”

அவனும் அத்துடன் விட்டுவிட்டான்.

சாருலதாவிற்கு மனம் கொதித்தது.

அவளும் மகேந்திரன் பேசுவதைக் கேட்டிருந்தாள். எங்க வீட்டுப் பொண்ணாமே. அந்த கிருஷ்ணவேணியை சும்மா விடலாமா?

அவள் தனியே மாட்டுவதற்காக காத்திருந்தாள்.

யுகேந்திரன் மகேந்திரனிடம் வந்தான்.

“அண்ணா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் வீட்டுக்குப் போறேன்.”

“இரு எல்லாரும் போயிடலாம்.”

“இல்லண்ணா. சாப்பிடாமல் போனா கோவிச்சுப்பாங்க. கிருஷ் இங்கேதான் இருக்கா. நீ அவளை அழைச்சுட்டு வந்துடு.”

“நீ எப்படிடா போவே?”

“என்னோட ப்ரண்ட் ஒருத்தன் கொண்டு வந்து விடறேன்னு சொன்னான். நான் அவனோட கிளம்பறேன்.”

அவன் கிளம்பிச்சென்றுவிட்டான்.

அவன் கிருஷ்ணவேணி எங்கே என்று பார்க்க அவள் ஏதோ குளிர்பானம் அருந்திக்கொண்டிருப்பது தெரிந்தது.

யாரோ ஒருவர் வந்து அவன் தோளைத் தட்ட திரும்பிப்பார்த்தான்.

தொழில் முறை நண்பர். அவனிடம் நலம் விசாரித்தார். அவனும் மரியாதைக்காக அவரிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பிப்பார்த்தான்.

கிருஷ்ணவேணி ஏற்கனவே இருந்த இடத்தில் காணவில்லை.

அவளை எங்கே என்று தேடினான்.

அவள் எதற்கோ தடுமாறியவாறு நடந்துகொண்டிருந்தாள்.

அதைக் கண்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

அப்போது யாரோ ஒருவன் அவளை நெருங்க முயன்றபோது

“ஏய்! என்னைத் தொடாதே.” என்று கத்திவிட்டு ஒதுங்கினாள்.

மகேந்திரன் அவளை நெருங்கியதும் அவன் நழுவிவிட்டான்.

“கிருஷ்ணா. என்னாச்சு?” அவள் தோளைத் தொட்டான்.

தன்னைத் தொட்டது அவன்தான் என்று கண்டதும் அவள் ஏதும் பேசவில்லை.

அவள் எதனால் தடுமாறுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவளுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமா என்றே எண்ணிப்பார்க்க முடியவில்லை.

அவள் போதையில் இருக்கிறாளா? மயக்கத்தில் இருக்கிறாளா? என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.



அதை ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் அவளை இந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று அவனது அறிவு சொல்ல அவளை கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச்சென்றான்.
அதைக் கண்ட சாருலதாவிற்கு மனம் கொதித்தது.
அவ எங்க வீட்டுப் பெண் என்று மகேந்திரன் சொன்னதற்காக அவள் கிருஷ்ணவேணியை பழிவாங்க வேண்டும் திட்டம் போட்டுதான் அந்த பானத்தைக் குடிக்க வைத்தாள்.

அவள் போதையில் தடுமாறுவாள். அசிங்கமாக நடந்துகொள்வாள்.
அவள் மகேந்திரன் வீட்டுப்பெண் என்று அவனே தன் வாயால் சொல்லிவிட்டான். அதனால் அவன் குடும்பத்திற்கு அவமானம் வருமாறு நடந்து கொண்ட கிருஷ்ணவேணி மீது கோபம் கொண்டு அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவான்
என்று எண்ணியிருந்தாள்.

அவனோ மற்றவர் அறியும் முன்னரே அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

கார் ஓட்டுகையில் அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யாராக இருக்கும்? என்ற எண்ணம் எழுந்தது.

ஒருவேளை அந்த வீட்டுப் பையனாக இருப்பானோ? இல்லை இப்போது கிருஷ்ணவேணியை நெருங்க முயன்றானே? அவனா?

யார் என்று தெரியாமல் யாரிடம் சண்டைக்குச் செல்வது?

குற்றம் சாட்டுவது என்றால் யுகேந்திரனைத்தான் சொல்ல வேண்டும். இது மாதிரி இடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றுதானே அவளை அழைத்து வரவேண்டாம் என்றேன். அதைத்தான் புரிந்துகொள்ள மாட்டேன் என்றான். அதன் பிறகு அவன் கிளம்பும்போதாவது எல்லாரும் கிளம்பியிருக்கலாம்.

அதற்கும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை.

வீடு வந்துவிட்டது.

காரை நிறுத்தியவன் கிருஷ்ணவேணியை அழைத்துப்பார்த்தான்.

அவள் எழுந்திருக்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவளைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.
கதவைத் திறந்த வனிதாமணி பதறிப்போனார்.
“என்னாச்சுப்பா?”

“ஒன்னுமில்லைம்மா. கொஞ்சம் மயக்கமாகிட்டா. தூங்கி எழுந்தா சரியாகிடும்.”

அவன் பின்னேயே அவரும் வர

“நான் பார்த்துக்கிறேன்மா. நீங்க போய் படுங்க.”

அவரும் சம்மதித்துவிட்டு தனதறைக்குச் சென்றார்.

அவன் அவளைத் தூக்கியவாறே மாடிப்படியில் ஏறினான்.

அவள் அறைக் கதவு பூட்டப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் அவளைக் கட்டிலில் கிடத்தினான்.

அவளது முகத்தை நெருக்கத்தில் பார்க்கும் போது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

சடாரென்று ஒன்று அவன் மனதில் உதித்தது.

அந்த மயக்கத்திலும் யாரோ ஒருவன் தன்னை நெருங்குவது அறிந்து “தொடாதே” என்று அதட்டியவள் தன் மேல் உள்ள நம்பிக்கையால்தான் தன்னை நெருங்க விட்டாள்.

இப்போது தன் மீதுள்ள நம்பிக்கையால்தான் அம்மாவும் மேலே வராமல் தனதறைக்குச் சென்றுவிட்டார்.

சட்டென்று பின்வாங்கினான்.

அவளது முகம் மட்டும் பூ மாதிரி இல்லை. அவளே பூ போன்று மென்மையாகதான் இருக்கிறாள் என்று அவன் மனம் நினைத்தது.

ஒரு போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டவன் அறைக் கதவை சாத்திவிட்டு தனதறைக்குள் நுழைந்தான்.

ன்று எதார்த்தமாக தன் தாயும் தம்பியும் பேசிக்கொள்வதை மகேந்திரன் கேட்க நேர்ந்தது.

“அம்மா. என் தேர்வு எப்படிம்மா?”

“ம் அருமைதான் யுகா.”

“நான்தான் சொன்னேன்ல. உங்களுக்கு அடுத்து என்னை அக்கறையா கவனிச்சுக்க அவளால் மட்டும்தான் முடியும்னு சொன்னேன்லம்மா.”

“நீ சரியாதான் சொல்லியிருக்கே. நான் அப்பாக்கிட்ட பேசிடுறேன். அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம். ஆமா கிருஷ் என்ன சொல்வான்னு தெரியலையே.”

அவர் கவலையுடன் சொல்ல அவனுக்கு அவள் தன்னிடம் கொடுத்த வாக்கு நினைவுக்கு வர,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா.”

என்று நம்பிக்கையுடன் சொன்னான்.

“இது விளையாட்டு இல்லை யுகா. வாழ்க்கை. இதில் ஒருத்தியை கட்டாயப்படுத்தி ஒருத்தனோட வாழ வைக்க முடியாது.”

“அம்மா. நான் இதைப்பத்தி யோசித்தது அவளுக்காகவும்தான் அம்மா. அவள் புரிஞ்சுப்பா.”

அவ்விடத்தை விட்டு நகர்ந்த மகேந்திரனுக்கு ‘தாய்க்குப் பின் தாரம்’ என்ற பழமொழி ஏனோ நினைவுக்கு வந்தது.
தம்பிக்காவது நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதார நினைத்தான்
Like Reply
yourock yourock yourock yourock Heart Heart Heart Heart Heart Super bro
Like Reply
Superb continue
Like Reply
Fantastic story bro continue
Like Reply
yourock Heart .repped
Like Reply
Waiting bro continue
Like Reply
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு
[Image: nivv.jpg]
ருவத் தேர்வுகள் நெருங்குகின்றன என்பதால் கிருஷ்ணவேணியும், யுகேந்திரனும் படிப்பில் மூழ்கினர்.
அன்றைய தினம் யுகேந்திரன் கிருஷ்ணவேணியை விழாவிலிருந்து பாதியிலேயே விட்டுவிட்டு வந்து அவளிடம் யாரோ போதை கலந்த பானத்தைக் குடிக்க வைத்துவிட்டதால் இனி அவளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி தன் தம்பியிடம் அறிவுறுத்தியிருந்தான் மகேந்திரன்.
யுகேந்திரனுமே அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

யார் அதை செய்திருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றைய தினம் அவனுக்கு நீண்ட நேரம் விழாவில் இருக்க முடியவில்லை. அதனால் அவன் சீக்கிரமே கிளம்பி வந்துவிட்டான்.

அதுவும் மகேந்திரன் இருக்கிறான் என்ற தைரியத்தில்தான் அவன் வந்ததே.

அவன் இருந்துமே அவளிடம் யாரோ விளையாடியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே கோபம் வந்தது.

இது மாதிரி விழாக்களுக்கு சென்று பழகிக்கொள்வது கிருஷ்ணவேணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றுதான் அவளை அவன் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றதே.

அவள் படிப்பை முடிக்கும் வரையில்தான் சிறிய பெண். அவளுக்கென்று கடமை இருக்கிறது. அதை அவள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவளை ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

அவளும் அந்தக் கூட்டத்திடம் செல்வதற்கு ஆசைப்படவில்லை. அவளை விட்டால் இங்கேயே தங்கிவிடுவாள்.

ஆனால் அருணோ, அவனது தந்தையோ அதற்குத் தயாராயில்லை.

அவளது பொறுப்பை வந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

எதையாவது கண்டு பயந்து ஓடினால் அதன் பிறகு எப்போதும் நாம் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும். அதனால் நடப்பதை எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பாராம் அருணின் தந்தை கதிரவன்.
கதிரவன் அவளது தந்தையின் நண்பர்.
பெற்றோர் இல்லாத கிருஷ்ணவேணியை தானே அழைத்துச்சென்று வளர்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.

பெண் குழந்தை இல்லாததால் அவர் மனைவியும் அவள் மேல் மிகவும் பிரியமாக இருப்பார். ஆனால் அவளது சொந்தத்திற்கு பயந்தே தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளாமல் கிருஷ்ணவேணியை பாதுகாப்பாக விடுதியில் தங்கிப் படிக்குமாறு அவர் ஏற்பாடு செய்ததே.

தேர்வுகள் முடிந்ததும் கிருஷ்ணவேணி செல்லாவிட்டால் அவளை அழைக்க அவர்களே வந்துவிடுவர். ஆனால் அவனுக்கு அவளை அனுப்பிவைக்க மனம் இல்லை.

அதனால் பரிட்சை முடியும் நாள் அன்று தனது விருப்பத்தை அவளிடம் கூறி அதன் பிறகு கதிரவனிடம் பேசலாம் என்றிருக்கிறான்.

அவரும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்றால் நிச்சயம் மறுக்கமாட்டார்.

யோசனையுடன் அமர்ந்திருக்கும் யுகேந்திரனைப் பார்த்தாள் கிருஷ்ணவேணி.

“அப்படி என்ன பலமான யோசனை?”

கிருஷ்ணவேணி அவனது தோளைத் தட்டினாள்.

அவன் சுயநினைவுக்கு வந்தான்.

“ஒன்னுமில்லை.”

“பொய் சொல்லாதே.”

“இல்லை. பொய் சொல்லலை.”

“சரி. நம்பிட்டேன்.”

அவள் சிரித்தாள்.

அப்போது வனிதாமணி சாப்பிடக் கூப்பிட இருவரும் சென்றனர்.

“கிருஷ்மா. இதை டேஸ்ட் பண்ணு. நல்லாருக்கு.”

எதையோ எடுத்து அவள் தட்டில் வைத்தான்.

அவள் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிறே?”

“நான் உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சுக்கிட்டேயிருக்கேன். ஆனா மறந்துடுறேன்.”

“அப்படி என்ன கேட்கனும்?”

“ஆரம்பத்தில் என்னை நீ கிருஷ்ணான்னு கூப்பிட்டே. வாடி போடின்னுதான் கூப்பிட ஆரம்பிச்சே. இப்போ கொஞ்ச நாளா அப்படி கூப்பிடறது இல்லை. அத்தோட கிருஷ் அப்படின்னு சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சே. இப்ப என்னன்னா கிருஷ்மான்னு புதுசா கூப்பிடறே?”

அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.



“சரி. சரி. பேசாம சாப்பிடுங்க. சாப்பிடறது உடம்பில் ஒட்டாது.”
வனிதாமணி கொஞ்சம் அதட்டலாகக் கூறவே அப்போதைக்கு அந்தப் பேச்சு ஓய்ந்தது.

ருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன.

இடையில் ஒருநாள் மட்டும் இருவருக்கும் ஒரே தேர்வு அறை. அன்றைக்கு அவன் எழுதுவதைப் பார்த்தவளுக்கு திருப்தியாய் இருந்தது.
அவன் எந்தப் பக்கமும் திரும்பாமல் எழுதுவதிலேயே குறியாக இருந்தான்.
அப்போது அவன் தன்னிடம் கேட்ட வாக்கு நினைவிற்கு வந்தது.

அதை நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு கூட வந்தது.

அப்படி என்ன அவனிடம் இல்லாததை என்னிடம் கேட்டுவிடப் போகிறான்?

அவன் கேட்டால் கேட்ட மறுநிமிடமே கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிடுவர் அவன் வீட்டார்.

அப்படியிருக்கையில் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிடப்போகிறான்.

‘இந்த மூன்று வருடங்களில் நான் எனது வேதனையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்கு அவன்தானே காரணம்.’

‘அவன் கேட்டால் நான் என்ன மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்?’

என்று நினைத்தவள் அவன் கேட்கும் போது தான் பதில் சொல்ல முடியாத நிலையில் தவித்து நிற்கப் போவதை அப்போது அறியவில்லை.

ன்றுடன் பருவத் தேர்வுகள் முடிகின்றன.

வனிதாமணியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் கிருஷ்ணவேணி.

பின்னேயே வந்த யுகேந்திரனை கேள்வியாகப் பார்த்தார்.
“அம்மா. இன்னிக்கு நான் பரிட்சை முடிந்த உடன் கிருஷ்ணாகிட்ட பேசிடுவேன்.”
“அவ ஒத்துக்கிடுவாளா யுகா.”

“எனக்கு அப்படித்தான் தோணுது. எதுக்கும் நான் உங்களுக்கு போன் செய்து தர்றேன். அந்த நேரத்தில் நீங்களும் அவகிட்ட பேசுங்க.”

“அவளுக்குப் பிடிக்கலைன்னா கட்டாயப்படுத்தக்கூடாது.”

“அப்படியே செய்யலாம்மா. நீங்க அப்பாகிட்ட சொன்னீங்களா?”

“நான் பேச்சுவாக்கில் சொல்லியிருக்கேன். நீ அவகிட்ட பேசிட்டு வந்த பிறகுதான் தெளிவா சொல்ல முடியும். அதன் பிறகுதான் மகேன்கிட்டயும் சொல்ல முடியும்.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா.”

தாயிடம் விடைபெற்றுச் சென்று காரில் ஏறினான்.

“என்ன அத்தைக்கிட்ட ஸ்பெசலா ஆசிர்வாதம் வாங்கிட்டு வர்ற மாதிரி இருக்கு. அப்ப நீ படிச்சு நிறைய மார்க் வாங்கலையா?”

அவள் கிண்டலாகக் கூறினாள்.

“என்னதான் படிச்சாலும் பெரியவங்க ஆசிர்வாதம் வேணும்.”

அவன் பவ்யமாகக் கூறினான்.

கல்லூரி வந்துவிட இருவரும் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி தங்களது தேர்வறையைக் கண்டுபிடித்துச் சென்றனர்.

தேர்வெழுதி முடித்துவிட்டு யுகேந்திரனுக்காக காத்திருந்தாள் கிருஷ்ணவேணி.

அவன் தயக்கத்தோடு வந்தான்.

“என்ன பரிட்சையை ஒழுங்கா எழுதலையா?”

“அதெல்லாம் நல்லாதான் செய்திருக்கேன்.”

“அப்புறம் ஏன் ரொம்ப தயக்கமா வர்றே?”

“நாம முதல்ல சாப்பிடலாம். அப்புறம் உன்கிட்ட பேச வேண்டியிருக்கு.”

“அதெல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம். நான் ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு செய்யனும்ல. மறந்துட்டியா?”

“அதைப் பத்திதான் பேசனும்.”

“உனக்குதான் வெளிசாப்பாடு ஒத்துக்காதே.”

“இன்னிக்கு ஒருநாள் சாப்பிடறதுனால் எதுவும் ஆயிடாது.”

“டேய். அப்படி என்ன முக்கியமான விசயம் பேசப்போறே?”

“அதான் சாப்பிட்ட பிறகு சொல்றேன்னு சொன்னேன்ல.”

“ஏன் பேசிட்டு அதன் பிறகு சாப்பிட்டா என்ன?”

“நான் பேசறது உனக்குப் பிடிக்காம போகலாம். இல்லைன்னா, நீ சொல்ற பதில் எனக்குப் பிடிக்காம போகலாம். அப்ப சாப்பிடத் தோணாது. அதான் இப்பவே சாப்பிட்டுக்கலாம்னு.”

அவன் சொல்ல சிரித்தாள்.

“டேய். சாப்பாட்டு ராமா. இப்ப உனக்குப் பசிக்குது. அதை நேரடியா சொல்லேன்.”

அவனைக் கிண்டல் பண்ணினாள்.

கல்லூரியிலேயே இருந்த உணவு விடுதியில் இருவரும் நுழைந்து தங்களுக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

யுகேந்திரன் யோசனையோடே சாப்பிட்டான்.



அவனது முகத்தில் தெரிந்த தீவிரம் கண்டு அவளும் விளையாட்டை விட்டு அவனைப் பார்த்தவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்த உடன் கல்லூரியில் இருந்த தோட்டத்திலே இருந்த ஒரு கல்லில் அமர்ந்தான். அவளும் அவன் கூடவே வந்த அமர்ந்தாள்.

அவன் தயக்கத்துடன் அவளை ஏறிட்டான்.
“அப்படி என்னடா பேசப்போறே?”
அப்படி என்னதான் பேசப்போகிறான் என்ற ஆவல் அவளுக்கு எழுந்தது.
கிருஷ்மா. உனக்கு ஞாபகம் இருக்கா? நான் இந்தப் பருவத்தில் உன்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் நான் கேட்பதை நீ தருவதாக சொல்லியிருக்கிறாய்.”

“ஆமா. அதுக்கென்ன? இப்பதானே பரிட்சை எழுதியிருக்கிறோம். ரிசல்ட் வந்த பிறகு நீ கேளு. நான் தர்றேன்.”

“இல்லை. நான் இப்பவே கேட்கப் போறேன். நீ ஊருக்குப் போயிட்டா நான் எப்படி கேட்கிறது?”

சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் பேசிய அவனை கேலியாகப் பார்த்தாள்.

“ஏய். உண்மையைச் சொல்லு. நீ பரிட்சை எல்லாம் ஒழுங்கா எழுதினியா இல்லையா? ரிசல்ட் வந்த பிறகு உன் குட்டு உடைஞ்சிடும்னுதானே இப்பவே கேட்கறே?”

“அதெல்லாம் இல்லை. நான் பரிட்சை ஒழுங்காதான் எழுதியிருக்கேன்.”

“அப்ப என்ன அவசரம்?”

“அவசியம் இருக்கு. அதனால்தான் அவசரப்படறேன்.”

அவன் முகத்தில் தெரிந்த தீவிரம் கண்டு அமைதியானாள்.

அவனும் பேச முயலவில்லை. அப்படி என்னதான் கேட்கப் போகிறான்?

கொஞ்சம் கவலையோடு அவனையேப் பார்த்தாள்.
அவன் அமைதியைக் கலைத்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு “கிருஷ்ணா. உனக்கே தெரியும். உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு?”
“அதுக்கென்ன?”

அடுத்து அவன் பேச ஆரம்பித்ததுமே பயம் வந்தது.

அவன் கண்களில் தெரிந்த புதுசொந்தம் அவளை திகைப்படையச் செய்தது. அவள் தனது திகைப்பை மறைக்கவும் இல்லை. அதைப் பார்த்தவாறே தனது பேச்சைத் தொடர்ந்தான்.

‘வேண்டாம். யுகா. நீ கேட்கப் போறது என்னன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. நீ கேட்கிறதுக்கு என்னால் மறுக்க முடியாது.’

மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

அவன் கடைசியில் கேட்டேவிட்டான். அத்துடன் அவனது தாயையும் பேசச்சொன்னான்.

அவள் அதிர்ச்சியில் திகைத்து அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

பதிலுக்காக எதிர்பார்த்த அவனிடம் அவகாசம் கேட்டாள். அந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் முகத்தை நிமிர்ந்தே பாராமல் அமர்ந்திருந்தாள்.

“சரி வா போகலாம்.”

“இல்லை. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.”

“அதுதான் நீ அவகாசம் கேட்டேல்ல. மெதுவா யோசிச்சுக்கலாம். வா.”

“ப்ளீஸ் யுகா. எனக்குக் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.”

“சரி. நான் போறேன். நீ பத்திரமா வந்துடு.”

தன் காரை நோக்கிச் சென்றவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீர் அவள் கண்களை மறைத்தது.
அவன் கார் சென்றுவிட தேற்ற ஆள் இல்லாததால் அவள் கண்ணீர் கரை கடந்தது. ஆற்றமாட்டாமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
Like Reply
Ayyo bro suspence mela suspence vekkareenga bro but very nice bro yuka kettathu ennanu solliruntha innum nallarukum ok continue
Like Reply
நண்பா நீ மட்டும் என் கையில கிடைத்தால் நசுக்கி தூக்கி எறிச்சிடுவன்.. என்னையா இப்படி சப்பிரைஸ் வைக்கிறாய்.. தாங்க முடியலையா சீக்கிரம் வந்து உடையை... (என் கணிப்பின் படி யுகா தனக்கு அண்ணியா வர தான் கேட்டிருப்பான் என்டு நினைக்கிறன்..)
Like Reply
Ama bro but suspence vechu mudikarathunala ethayum yukikka muditale but super
Like Reply
அப்படி என்னதான் கேட்டான்
Like Reply
யுகேந்திரன் வீட்டிற்குப் போகாமல் தங்கள் கம்பெனிக்குச் சென்றான்.

அதற்குக் காரணம் இடையில் மகேந்திரன் அவனை அழைத்திருந்ததுதான்.
அவனது குரலில் ஏதோ கவலை தெரிந்தது. அதனாலேயே சென்றான்.
“என்ன யுகா. பரிட்சை எல்லாம் எப்படி எழுதினே?”
கேட்டவாறே சாருலதா வந்தாள்.
அவன் தன் கையை கீழே கவிழ்த்துக் காண்பித்தான்.
“ஊத்திக்கும்.”
என்று உதட்டைப் பிதுக்கியவாறே பதில் சொன்னான்.
“என்ன கிருஷ்ணவேணியை காணோம்.”
“அவ கொஞ்ச நேரம் மத்த ப்ரெண்ட்ஸ் கூட இருந்துட்டு வர்றேன்னு சொன்னா. இப்ப அதுக்கென்ன?”
சற்றே எரிச்சலாய் பதில் சொன்னான்.
இன்று என்னவோ சாருலதா கொஞ்சம் அக்கறையோடு பேசுவது போல் பட்டது. அது நடிப்புதான் என்று அவனுக்குத் தெரியும். அவன் அண்ணனின் முன்பு அவள் போடும் வேசம்.
இதற்கொரு முடிவு வராதா?
அண்ணன் என்றுதான் அவளது நடிப்பை புரிந்துகொள்ளப்போகிறான்?
இவள் அண்ணனை விடவேமாட்டாளா?

ஆதங்கமாக வந்தது.
“ஆமா. நீ கிருஷ்ணாகிட்ட உன் விருப்பத்தை சொல்லிட்டியா?”
மகேந்திரன் முன்பே போட்டு உடைத்த மாதிரி அவள் கேட்டதைக் கண்டு அவன் திடுக்கிட்டான்.

இவளுக்கு எப்படி தெரியும்?
என்னையும் வேவு பார்க்க ஆள் வைத்திருக்கிறாளா?
உனக்கு எப்படிக்கா தெரியும்?”

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அதை ஆமோதிப்பது போல் இருந்தது அவன் கேள்வி.

சாருலதா ஜாடையாக மகேந்திரன் முகத்தைப் பார்த்தாள். அது இறுகியிருந்தது.

“இதை யாராவது சொல்லனுமா என்ன? அவளுக்கு பரிட்சை முடியுது. அதன் பிறகு ஊருக்குப் போயிடுவாளே. அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”

“ஏன் அவ ஊருக்குப் போனா என்னால் பேச முடியாதா? இந்த விஞ்ஞான உலகத்தில் அதெல்லாம் பெரிசு மாதிரி பேசறே?”

“இல்லை. உனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”

அவன் தன் பல்லைக் கடித்தான்.

இந்த அண்ணன் முன்பு அவள் என்னவெல்லாம் கேட்கிறாள்?

அவள் யார் என் விசயத்தில் தலையிட?

“நான் அவகிட்ட சொல்லிட்டேன். போதுமா?”

“போதாது. அதுக்கு அவ என்ன சொன்னான்னு சொல்லு.”
“தேவையில்லாம என்னோட விசயத்தில் தலையிடாதேக்கா. அவ என்கிட்ட என்ன பதில் சொன்னான்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”
வெடுக்கென்று அவளை பேசியவன் தன் அண்ணனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.

“நான் இப்ப என்ன கேட்டேன்னு இப்படி கோவிச்சுக்கிட்டு போறான். அவ சம்மதம் சொல்லியிருக்கமாட்டா. அதை என்கிட்ட வந்தா காட்டறது?”

தனக்குள் பேசுவது போல் மகேந்திரன் காதில் விழுமாறு பேசியவள் அவனைக் கவனித்தாள்.

அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. வேலையில் கவனமாக இருந்தது போல்தான் தெரிந்தது.

கல்லுளிமங்கன். தனது தம்பி திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என்றால் கூட அதை இவன் பெரிதுபடுத்தமாட்டான். இவன் என்ன இப்படியே சாமியாராவா இருந்துடப்போறான்.

யுகேந்திரன் சோர்வாக வீட்டினுள்ளே நுழைந்தவன் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தான்.

அப்போது அங்கே வந்த வனிதாமணி அவனருகே அமர்ந்தார்.

“என்னப்பா? கிருஷ்ணா என்ன சொன்னா?”

“அவ எதுவும் சொல்லலைம்மா. யோசிக்க நேரம் கேட்டிருக்கா?”

“இப்ப அவ உன்னோட வரலையா?”

“இல்லைம்மா.”

“சரி மெதுவா வரட்டும். நீ சாப்பிட வா.”

“சாப்பிட்டாச்சும்மா.”

யோசனையோடே சமையல் அறைக்குச் சென்றார்.

யுகேந்திரன் முகத்தில் இது வரைக்கும் காணாத சோர்வு தெரிந்தது.

யுகேந்திரன் நெடுநேரம் யோசனையோடே அமர்ந்திருந்தான்.

வனிதாமணியும் வேலைகளை முடித்துவிட்டு வந்து அவன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கண்விழித்துப்பார்த்தவன் அவரைக் கண்டு திடுக்கிட்டான்.

“அம்மா.”

“என்னப்பா?”

“கொஞ்சம் தலைவலிக்குது. டீ தர்றீங்களா?”

“இதோ எடுத்துட்டு வர்றேன்ப்பா.”

அவர் சமையல் அறைக்குள் நுழைந்ததுமே அவன் தனதறைக்குச் சென்றான்.

கிருஷ்ணவேணி எத்தனை நேரம் அப்படியே அழுதவண்ணம் அமர்ந்திருந்தாள் என்றே தெரியவில்லை.

‘என் மேல் உனக்கு இத்தனைப் பாசமாடா?’

கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

யுகேந்திரன் தன் மேல் வைத்திருந்த பாசம் அவளை மிகவும் நெகிழச்செய்தது.

மிகவும் பிரியமானவன். ஒரு தோழனாய் தான் அவனை நினைத்திருந்தாள்.

தன் மீது இத்தனைப் பாசத்தை அவன் வைப்பதற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது.



அவனைப் போல் தான் அவன் மேல் பாசம் வைக்கவில்லை என்றே தோன்றியது.
அவனைப் போன்று ஏன் தன்னால் அன்பை செலுத்த முடியவில்லை? தன்னையே கேட்டுக்கொண்டாள்.

பதில்தான் கிடைக்கவில்லை.
உடனே அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.
அவன் கேட்டதற்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதற்கே அந்த குற்ற உணர்ச்சிதான் காரணம்.
தனது அலைபேசியை எடுத்துப்பார்த்தாள். அது அணைந்திருந்தது. அவனது வருத்தமான முகமே கண் முன் வந்தது.

உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற கிளம்பிவிட்டாள்.

அவள் இன்று வண்டியையும் எடுத்து வரவில்லை. யுகேந்திரனையும் போகச் சொல்லிவிட்டாள்.

அவள் எத்தனை நேரம் யோசித்திருந்தாளோ? மிகவும் நேரமாகிவிட்டது என்று புரிந்தது.

அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தாள்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது யாரும் அங்கே இல்லை. தனியே நிற்க ஒரு மாதிரியாக இருந்தது.

பேருந்துக்காக காத்திராமல் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்.

ஏதாவது ஆட்டோ வருகிறதா? என்று பார்த்தவாறே நடந்தாள்.

சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ நிறுத்தம் இருப்பதைக் கண்டிருக்கிறாள்.

அவளது நல்ல நேரம் ஒரு ஆட்டோ மட்டும் நின்றிருந்தது.

பேரம் பேசாமல் ஏறி அமர்ந்து செல்லும் இடத்தைச் சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
‘சாரிடா யுகா. நீ கேட்ட உடனே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என் மனம் குழம்பிப்போய் இருந்தது. அதனால் நீ என்ன சொல்ல வர்றேன்னு என்னால் புரிஞ்சுக்க முடியலை.’
Like Reply
நீயும்தான் என்னை விட்டுட்டு எப்படிப் போனே? நான் அப்புறம் வர்றேன்னு சொன்னா நீ போயிடுவியா? இரு அத்தைக்கிட்ட போட்டுக்கொடுக்கிறேன்.’

‘நீ கேட்ட உடனே பதில் சொல்லலைன்னா கோவிச்சுப்பியா?’
‘நீ மட்டும் இத்தனை நாட்கள் உன் மனசில் இருந்ததை என்னிடம் சொன்னியா?’
‘அதற்காக நான் கோபப்படனும்தானே? ஏன் எனக்கு வரமாட்டேங்குது?’
“அம்மா. இதற்கு மேல் ஆட்டோ போகாது போல. இங்கேயே இறங்கிக்கறீங்களா?”
ஆட்டோ ஓட்டுநரின் குரல் அவளை நினைவுலகுக்கு கொண்டு வந்தது.
‘ஏன் ஆட்டோ போகாது?’
அவள் வெளியே பார்த்தாள்.
நிறைய வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருந்தன.
அது முக்கியப் பெரும்புள்ளிகள் வசிக்கும் பகுதி. ஏதாவது வீட்டில் விசேசமா இருக்கும்.
காலையில் போகும்போது கூட ஒன்னும் தெரியலையே?
யோசனையுடன் பார்த்தவள் ஆட்டோவை விட்டு இறங்கினாள். அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை நெருங்க நெருங்க வாகன நெரிசல் அதிகமாய் தெரிந்தது.
தாங்கள் இருக்கும் தெருவில்தான் யார் வீட்டிலோ விசேசம் போல என்று நினைத்தவாறே வாகனங்களுக்கிடையே ஊர்ந்து சென்றாள்.
வந்தவர்களின் முகங்களைப் பார்க்கும்போதும் அவர்கள் கையில் வைத்திருக்கும் மாலைகளைப் பார்க்கும்போதும் நல்ல விசயம் இல்லை என்று புரிந்தது.
அவள் இங்கே தங்கியிருந்தாலும் அக்கம் பக்கம் யார் என்ன என்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
ஒருவருடத்தில் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து விட்டு சென்றுவிடப்போகிறாள் என்ற அசட்டையினால் எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
யாரும் வயதானவர்களுக்கு முடியாமல் இருந்தது போலும்.
தன்னிடம் சொன்னால் தெரியாது என்று அத்தை சொல்லாமல் விட்டிருக்கலாம்.
கண்டிப்பாக அது சாவிற்காக வந்த கூட்டம்தான் என்று தெரிந்த பிறகு வழக்கம் போல் கண் மூடி, இறந்த அந்த ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கட்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
யாரோ? எவரோ?
இப்படி வேண்டிக்கொள்வது அவள் வழக்கம். அதே போல் ஆம்புலன்ஸ் வண்டியில் யாரையாவது ஏற்றிச் செல்லும் போதும் தன்னையறியாமல் அவர்கள் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வாள்.
வீட்டை நெருங்க நெருங்க மனம் நெருடியது.
‘ஏன் என் மனம் இத்தனைப் பதட்டமடைகிறது?’
‘இல்லையில்லை. யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது.’
தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.

மனம் பதட்டமடைந்த பிறகு சிறிது தூரத்தைக் கடப்பதே பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடந்தது போன்ற களைப்பைத் தந்தது.
கால்களை எடுத்து வைக்க முடியவில்லை. மிகவும் பாரமாய் இருந்தது.
அவள் ஆட்டோவில் வந்து இங்கே இறங்குவதற்கு முன் இருந்த மனநிலை அடியோடு மாறிப்போனது.

அவள் பயந்த மாதிரியே அந்தக் கூட்டம் அவர்கள் வீட்டிலிருந்துதான் வந்து போய்க்கொண்டிருந்தது.
‘யாருக்கு என்னவாயிற்று?’
‘எல்லாரும் நல்லாதானே இருந்தார்கள்?’

யாரையும் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

‘இந்த யுகா எங்கே போனான்?’

‘என்ன முட்டாள்தனமாய் யோசிக்கிறே?’

‘யாருக்கு என்னவாயிற்றோ? அப்படி இருக்கையில் யுகாவிற்கு உன்னைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?’

கால்களில் இரும்புக்குண்டை கட்டியது போன்று இருந்தது.

அவளுக்குத் தெரிந்து காலையில் அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது யாரும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாகவே நினைவில்லை.

வனிதாமணி கூட மிகவும் சந்தோசமாகதான் அனுப்பி வைத்தார். அதன் பிறகு கூட…

அவளால் மேற்கொண்டு எதையும் யோசிக்க முடியவில்லை.

யாரிடமும் கேட்கும் தைரியமும் இல்லை.

மெல்ல தடுமாறியவாறே உள்ளே நுழைந்தாள்.
அதோ. அங்கே கதறி அழுவது மகேந்திரனா? ஆண் என்பதையும் மறந்து அழுகின்றானே?
யாருக்கு என்னவாயிற்று? மற்றவர்கள் எல்லாம் எங்கே?

பயத்துடன் கண்களை சுழல விட்டாள்.

‘அங்கே நாற்காலியில் அமர்ந்துகொண்டு தேம்பிக்கொண்டிருப்பது மாமாதானே?’

‘அத்தை. அத்தைக்கு என்னவாயிற்று?’

அவளுக்கு வனிதாமணியின் மங்களகரமான முகம் கண் முன்னே வந்தது.

‘யுகா. நீ எங்கேடா இருக்கே? எங்கேயிருந்தாலும் வாடா. என்ன நடந்ததுன்னு சொல்லுடா? எனக்கு பயமா இருக்கு. என்னால் தாங்க முடியவில்லை.’

மனதிற்குள்ளேயே அரற்றினாள்.

கண்ணாடிப்பெட்டி தெரிந்தது. அதன் மேல் மாலை குவியலாய் இருந்தது.

அவளுக்கு அருகே சென்று பார்க்க பயமாய் இருந்தது.

அவளுக்கு நினைவு தெரியாத வயதில் அவள் இந்த மாதிரி இழப்பைச் சந்தித்திருக்கிறாள்.

அதன் பிறகு அவள் மீது உண்மையான பாசம் வைத்தவர்கள் மிக சொற்பமே.

இப்போது. யார்?

சுற்றிலும் நின்றவர்கள் யாரும் அவள் பார்வைக்கே படவில்லை.

அவள் கண்கள் யுகேந்திரனையும் வனிதாமணியையும்தான் தேடின.

இரும்புக்குண்டாய் கனத்த கால்களை மிகவும் சிரமப்பட்டு நகர்த்தி மெதுவாக அடியெடுத்து வைத்தாள்.

கையில் இருந்த பொருட்கள் எல்லாம் எப்போதோ சிதறி விழுந்திருந்தன.

‘அங்கே யார் பித்துப் பிடித்தாற்போல் அமர்ந்திருப்பது? அத்தையா? அத்தையேதானா?’

‘அப்படின்னா . . .  அப்படின்னா . . . யுகா? யுகா?’

மனம் அரற்றியது.

கண்ணாடிப்பெட்டியை நெருங்கியிருந்தாள்.

அப்போது கண்ணாடிப்பெட்டியின் மேல் குவிந்திருந்த மாலைகளை யாரோ அகற்றி எடுத்துச் சென்றார்கள்.

உள்ளே பார்த்தவளின் கண்கள் நிலைகுத்தி நின்றன.

மாலையின் நடுவே தூங்குவது போல் படுக்க வைக்கப்பட்டிருந்தவன் யுகேந்திரனேதான்.

கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தாள்.

நெஞ்சையடைத்தது. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

‘யுகா…’ மெதுவாக அழைத்தாள்.

அந்த அழைப்பு எட்டாத இடத்திற்குச் சென்றுவிட்டான் என்று அவளுக்குப் புரிய நேரமாயிற்று.
அடுத்த கணம் “யுகாஆஆஆ” என்ற கதறலுடன் கால்கள் மடங்க மயங்கிச் சரிந்தாள்.
Like Reply
ஐயோ என்ன ஆச்சு யுகேந்திரனுக்கு
Like Reply
என்ன நடந்தது ?
யுகாவிற்க்கு???????
Like Reply
Ayyo ipti oru sad turning point please continue quickly
Like Reply
Ahhhh... Ennasu nanba.. Can't expect this... Plzzzzz continue quickly...
Like Reply
Update bro
Like Reply




Users browsing this thread: 38 Guest(s)