Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
#41
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி இந்த வாரத்திலும் யாரையும் போட முடியவில்லை என்ற மிகவும் வருத்தத்தில் வீட்டிற்கு போனான் . வீட்டிற்கு போகும் முன் ஒரு பாரில் போயி நிறைய சரக்கு அடித்தான் .

எல்லாம் இந்த சுவாதி முண்டையால்தான் அவள இன்னைக்கு வீட்டுக்கு போயி வச்சுக்கணும் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு போனான் .பின் வீட்டிற்கு போயி கதவை திறந்து வேகமாக அந்த கதவை கோபத்தோடு பலமாக சத்தம் வரும்படி அடித்து விட்டு சாத்தினான் .

கதவு வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டு சுவாதி வெளியே வந்தாள் .அங்கு விக்கி போதையில் தள்ளாடி கொண்டு இருப்பது தெரிந்தது .அவள் அவன் இருக்கும் நிலையை பார்த்து என்ன ஆச்சு விக்கி என்றாள் .ம்ம் என்ன ஆச்சா எல்லாம் மண்ணா போச்சுடி இந்த விக்கி எனக்குன்னு ஒரு பெரிய கோட்டையே கட்டி வாழ்ந்து கிட்டு இருந்தேண்டி அத எவனாலயும் ஒன்னும் பண்ண முடியல

எங்க அம்மா ,வள்ளி ,மணின்னு யாருமே என் கோட்டைய ஒன்னும் பண்ண முடியல ஆனா நீ வந்த உடனே எல்லாத்தையும் ஒரே நாள்ல அந்த கோட்டைய மன்னாக்கிட்ட்யெடி பாவி என்று கத்தினான் .அதை கேட்டு என்ன விக்கி தண்ணி அதிகமா அடிச்சுட்டியா என்றாள் .ஏன் அதுக்கும் அந்த விஜயசாந்தி IPS கிட்ட சொல்லி போலிஸ் கிட்ட கம்பலைன் பண்ண போறயா போ தாயு போ போயி நல்லா என்னையே பத்தி கம்பலைன் பண்ணு

அவங்க வந்து என்னையே பிடிச்சு ஜெயில போடட்டும் என்றான் .ஐயோ அப்படி எல்லாம் இல்ல விக்கி என்றாள் .இல்ல இல்ல எனக்கும் ஜெயில் தேவைதான் ஏன்னா நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் .

அன்னைக்கு நீ பப்ல ஓவரா குடிச்சுட்டு கீழ விழுந்த பாரு .நான் உன்னையே யாருன்னு தெரியாம வேற ஏவ கூடயாச்சும் போயிருக்கனும் . அன்னைக்கு உன்னையே அங்க இருந்து கூப்பிட்டு போனது தப்பு அதுக்கு அப்புறம் நீ கார் கதவ திறந்து விழ பாத்த பாரு அப்ப நீ விழுந்து சாவனும்னு விட்ருக்கணும் அங்க உன்னையே காப்பதுனேன் பாரு அதுவும் என் தப்பு

அதுக்கு அப்புறம் நடு ரோட்ல நின்னுகிட்டு வர மாட்டேன்னு போதைல அழுதியே அப்ப உன்ன நடுரோட்லயே கிடன்னு விட்டு போயிருக்கனும் .அன்னைக்கு எவன் ஆச்சும் உன்னையே கெடுத்துருப்பான் . இன்னைக்கு நான் உன்னையே கெடுத்தென்னு சொல்லிகிட்டு இருக்க மாட்ட அப்புறம் உன்னையே உன் ஹாஸ்டலயாச்சும் விட்டு வந்துருக்கணும் வார்டன் கிட்ட மாட்டி உன் மானம் ஆச்சும் போயிருக்கும் . அன்னைக்கே பொட்டி படுக்கைய எடுத்துட்டு ஊருக்கும் போயிருப்ப

அதுக்கு அப்புறம் என் அப்பர்ட்மெண்ட்க்கு உன்னையே கூப்பிட்டு போனது தப்பு என் அப்பர்ட்மெண்ட்ல நீ சூசைட்க்கு ட்ரை பண்ணப்ப உன்னையே தடுத்து மறுபடியும் உன்ன காப்பத்துனது தப்பு இப்படி நான் உனக்கு பண்ணது எல்லாமே தப்பு

எல்லாத்தையும் விட பெரிய தப்பு நான் உன் கூட செக்ஸ் வச்சது .சாரி சாரி நீ என் கூட செக்ஸ் வைக்க விட்டது . சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு

விக்கி அவன் விரலை தன் முகத்திற்கு நேரே நீட்டி கொண்டு அப்படி இவ கிட்ட என்ன இருக்குன்னு இவ கூட செக்ஸ் வச்ச என்று சொல்லி அவனை அவனே கன்னத்தில் அடித்து கொண்டான் . ஓகே உனக்குன்னு ஒரு கொள்கை இருக்குல அடுத்தவன் பிகர தொட கூடாதுன்னு அதாச்சும் உனக்கு தோணிருக்க வேண்டாம் உன் புத்தில உரைசுருக்க வேணாம் ஏண்டா முட்டாள் விக்கி.டேவிட் சொன்ன மாதிரி பொட்ட நாய கூட விட மாட்டியா நீ பொருக்கி நாயே என்று சொல்லி மீண்டும் அவனை அவனே அடித்து கொண்டான் .

அதுவும் இவ யாரு உன் பிரண்டோட லவர் அதாச்சும் தெரிய வேணாம் என்று சொல்லி அடித்து கொண்டே அழுதான் .இவளால என் பெஸ்ட் பிரண்ட் இப்ப என் கூட பேசல பின் சுவாதியை பார்த்தான் .அவள் ஒன்றும் சொல்லமால் சும்மா அவனை பார்த்து கொண்டு மட்டும் இருந்தாள் .

அதை பார்த்து விக்கி என்னடி அப்படியே சிலை மாதிரி நிக்குற என்றான் .பேசி முடிச்சுட்டியா நான் தூங்க போவா என்றாள் சாதாரணமாக . இருடி உன்னையே இன்னும் கொஞ்சம் திட்டனும் என்றான் தள்ளாடி கொண்டே .ஒகே திட்டி முடி என்று ஒரு சேரை எடுத்து போட்டு உக்காந்தாள் .விக்கி அவளை திட்ட ஆரம்பித்தான் .

உன்னையே எல்லாம் டேவிட் கூப்புட்டு வந்து இவதான் என் லவர்ன்னு சொன்னான் பாரு அப்பவே சொன்னேன் இந்த முகறையா போயி ஏண்டா லவ் பண்றே உனக்கு கண்ணு எதுவும் தெரியலையான்னு அப்பவே கேட்டேன் என்றான் .சரி இதை கேட்டு அவள் கோபப்பட்டு வெளியே போவாள் என்று நினைத்துதான் அவன் திட்ட ஆரம்பித்தான் .

ஆனால் அவளோ கூலாக ஒ அப்படியா என்றாள் .என்ன அப்படியா நல்ல வேலை அவன் எப்ப செஞ்ச புண்ணியமோ உன்னையே விட்டுட்டு இப்ப வேற ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான் கொடுத்து வச்சவன் உன்ன மாதிரி ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சுட்டான் என்றான் . சரி மேல சொல்லு என்றாள் . விக்கி அவள் மிகவும் அமைதியாகவும் கூலாகவும் இருப்பதால் திட்ட முடியமால் திணறினான் .அவளை திட்ட முடியாமல் திணறி கொண்டு இருந்தான் .

ம்ம் நீயாலம் ஒரு பொன்னா ,நீ ஒரு பேய் நீ ஒரு பிசாசு என்றான் ,ம்ம் அப்புறம் விக்கி என்றாள் . விக்கி வாந்தி எடுப்பது போல் செய்து விட்டு நீயாலம் கர்ப்பமானதலதண்டி வாந்தி வாந்தியா எடுக்குற நான் உன் முஞ்சிய பாத்ததுல இருந்து வாந்தி எடுக்குறேன் முஞ்சியாடி இது உன் முகறையெல்லாம் மூனு நிமிசத்துக்கு மேல பாக்க எவனாலயும் முடியுமா என்றான் .

சரி அழகை பத்தி திட்டினால் எந்த ஒரு பொன்னுக்கும் கோபம் வரும் .ஆனால் சுவாதி அதற்கு கூட அசரமால் அப்படியே இருந்தாள்.விக்கிக்கு அடித்த சரக்கின் போதை எல்லாம் அவள் அப்படியே இருப்பதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி கொண்டு இருந்தது .என்ன இவ என்ன சொன்னாலும் கோப படமால் இருக்கிறாள் என்று விக்கி கொஞ்ச நேரம் அமைதி ஆனான் .

பின் சுவாதி சாதாரணமாக என்ன விக்கி புல்லா திட்டி முடிச்சிட்டியா இப்ப நான் தூங்க போவா என்றாள் .இல்ல நீ போகாத நான் இன்னும் முடிக்கல என்றான் .சரி சீக்கிரம் திட்டுடா என்றாள் .விக்கி யோசித்தான் என்னடா இவ என்ன திட்டுனாலும் கொஞ்சம் கூட கோபபட மாட்டிங்குரா என்று யோசித்து கொண்டு வேற வழியே இல்லை இவள இப்படித்தான் திட்டி ஆகணும் அப்பதான் கோப பட்டு வீட்ட விட்டு வெளிய போவா என்று யோசித்து கொண்டு சொன்னான் .

ம்ம் நீ ஒரு தேவிடியா என்றான் .ஆமா விக்கி நான் அதான் என்றாள் கொஞ்சம் கூட கோபபடமாள் .ஆமாடி நீ ஒரு தேவிடியா அதான் உன்னையே டேவிட் வேணாம்ன்னு சொல்லிட்டான் அவன் மட்டும் இல்ல எவனுமே உன்னையே வேணும்னு சொல்ல மாட்டான் ஏனா நீ ஒரு தேவிடியா இப்ப கூட எவனும் உனக்கு கிடைக்கலன்னுதான் நீ எவனோக்கோ பிறக்க போற குழந்தைய என் குழந்தைன்னு பொய் சொல்லி என் கூட இருந்து என்னையே மயக்க பாக்குற அதானே உன் திட்டம் என்றான் .

ஆமா நீ சொல்ற எல்லாமே உணமைதான் நான் ஒரு தேவிடியா நான் பல பேர் கூட செக்ஸ் வச்சுருக்கேன் அப்புறம் இந்த குழந்தை உன் குழந்தை இல்ல . எனக்கு எவனும் கிடைக்கததால உன்னையே மயக்க வந்துருக்கேன் எல்லாமே நீ சொல்ற மாதிரிதான் சரி இதுக்கு மேல நீ திட்டனும்னா நீ பாட்டுக்கு திட்டி கிட்டே இரு .நான் போயி தூங்குரென் .காலைல வேலைக்கு போகணும் சோ Good Night விக்கி என்று சொல்லி விட்டு போயி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் போயி உக்காந்தாள் .

என்னடா இவ இந்த மாதிரி ஒரு வார்த்தைய உண்மையான தேவிடியாவ பாத்து சொன்னா கூட அவ உடனே கோபப்படுவா இவ என்ன அதுக்கு கூட கோப படாம அசால்ட்டா திட்டியாச்சா தூங்க போறேன்னு சொல்லிட்டு போறா இவள விட கூடாது என்று நினைத்து கொண்டு மீண்டும் கதவை தட்டினான் .கதவ திறடி நான் இன்னும் உன்னையே அசிங்கமா திட்டனும் என்று கதவை சத்தம் வருமாறு பலமாக தட்டினான் .

அவன் தட்டுவதை கேட்ட சுவாதி காதில் ஹெட்செட் மாட்டி அவனை கண்டு கொள்ளமால் பாட்டு கேக்க ஆரம்பித்தாள் .வெளியே அவன் கதவ திறடி தேவிடியா நான் உன்ன திட்டனும் என்று தட்டி கொண்டு இருந்தான் .சுவாதி ஒரு பக்கம் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாலும் வெளியே விக்கி திட்டியதை நினைத்து பார்த்து அவள் அழுக ஆரம்பித்தாள் . அவளை அறியமால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தார தாரையாக வந்தது .

பின் எதையோ நினைத்தவள் போல தன் வயிற்ரை தொட்டு பார்த்து விட்டு என்னடா அம்மா அழுகுறான்னு பாக்குறியா சும்மதான்ப்பா அழுதேன் என்ன பண்ண எல்லாம் உனக்கக்கதான் அம்மா இவளவு தூரம் பொறுமையா இருக்கேன் . நீ எப்ப வெளிய வரியோ உடனே நம்ம இந்த நாட்ட விட்டே போயிடுவோம் சரியா . இனிமேல் உன் முன்னாடி அம்மா அழுக மாட்டேன் சரியா என்று சொல்லி விட்டு தன் வயற்றை தடவி தன் கைகளால் முத்தமிட்டாள் .

வா இப்ப அம்மாவும் நீயும் பாட்டு கேப்போம் என்று சொல்லிவிட்டு பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்தாள் .வெளியே விக்கி கதவை தட்டி தட்டி பார்த்து விட்டு டயார்ட் ஆகி அங்கேயே தூங்கி விட்டான் .பின் ஒரு காலையில் எழுந்தான் .எழுந்து நைட் அடித்த சரக்கின் ஹங் ஓவரால் தலையை பிடித்து கொண்டு மீண்டும் கண்ணை மட்டும் மூடி கொண்டு நைட் நடந்ததை நினைத்து பார்த்தான் . அவனுக்கு சுவாதியை திட்டியது ஒரளவு ஞாபகம் இருந்தது .சே இருந்தாலும் நாம நைட் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் சுவாதிய நாம நைட்ட்டு அப்படி அவளவு தூரம் திட்டி இருக்க கூடாது பாவம் .

இருந்தாலும் அவ அசரவே இல்லையே ஏன் ஒரு வேல நைட் வீட்ட விட்டு போக பயந்து இருப்பா இப்ப எந்திருச்சு போயிடுவா ஏன்னா எந்த பொன்னும் நாம நைட் அவளவு தூரம் திட்டனது கேட்டுட்டு இருக்க மாட்டா சோ சுவாதி கண்டிப்பா போயிடுவா அப்புறம் .அவ போயிட்டா நிம்மதிதான் என்று கண்களை மூடி கூப்புர படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தான் .பின் யாரோ அவனை எழுப்புவது போல இருந்தது .திரும்பி பார்த்தால் சுவாதி கையில் தம்பலரோடு நின்று கொண்டு இருந்தாள் .ஹலோ குட் மார்னிங் என்று சிரித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் .

தொடரும்....

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 5 users Like Rajiss's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

என்னடா இது நைட் நம்ம திட்டனதுக்கு இந்நேரம் வீட்ட விட்டு ஓடிருப்பானு பாத்தா இவ என்னனா பொண்டாட்டி மாதிரி நம்மள எழுப்பி காப்பி போட்டு கொண்டு வந்து நிக்கிறா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி நைட் நான் திட்டனதுக்கு விஷம் கலந்த காப்பி கொண்டு வந்துருக்கியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விஷம்தான் வாங்கி குடி என்றாள். பின் எழுந்து அதை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் எதையோ யோசித்து அமைதியாக இருந்து விட்டு சுவாதி என் மேல கோபமா இருக்கியா என கேட்டான் .அவள் இல்லையே என்றாள் .சுவாதி நைட் நான் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டேன் சோ ஐ ஆம் சாரி என்றான் .

அதலாம் நான் அப்பவே மறந்துட்டேன் . நீ முதல அத குடி என்றாள் .விக்கியும் டம்பளரை எடுத்து குடித்தான் .உடனே அதை வெளியே தூப்பினான் .என்னடி இது நிஜமாவே விசமா என கேட்டான் . இல்லடா அது பச்ச முட்டைய தண்ணில போட்டு கொண்டு வந்து இருக்கேன் என்றாள் எதுக்குடி இந்த தண்டனை நைட் உன்ன திட்டனதுக்கா என்றான் .

டேய் அது தண்டனை இல்லடா மருந்து என்றாள் .எனக்கு எதுக்குடி மருந்து நானா கர்ப்பமா இருக்கேன் நீதானா கர்ப்பமா இருக்க என்றான் .டேய் லூசு நைட் நீ அடிச்ச சரக்கால இப்ப உனக்கு ஹங் ஓவர் ஆகி தலை வலிக்குதா என கேட்டாள் .ஹே ஹே நாங்கலாம் எவளோ சரக்கு அடிச்சாலும் அப்படியே இருப்போம் .அப்படியா அப்ப உனக்கு தலை ரொம்ப வலிச்சா குடி வலிக்காம இருந்தா அத கீழ உத்திட்டு போயி வேலைய பாரு என்று சொல்லி விட்டு போனாள் .

அவள் அந்த பக்கம் அவள் ரூமிற்கு போனவுடன் அதை ஒரு நிமிஷம் பார்த்தான் .அவனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது .இருந்தாலும் வார வாரம் அவன் சனி ஞாயிறு இரண்டு கிழமைகலும் அதிகமாக சரக்கு அடிப்பது வழக்கம் .அதானால் எப்போதுமே திங்கள் கிழமை அவனுக்கு ஹங் ஓவரால அதிகமா தலை வலிக்கும் அதானல திங்கள் கிழமை அவனால ஆபிஸ்ல ஒழுங்கா வேலை பாக்க முடியாம தினருனான் .

அந்த ஹங் ஓவரா எப்படியாச்சும் போக்கணும்னு அவனே நினைச்சான் ஆனா அவனுக்கு வழி எதுவும் கிடைக்கல .ஆனா இப்ப சுவாதி கொடுத்தத குடிக்காலம்னு யோசிச்சான் . இருந்தாலும் நைட் அவன் அவள திட்டனதுக்கு எதுவும் பழி வாங்குற மாதிரி கொடுத்தான்னா என்று யோசித்து விட்டு அவளிடிமே கேப்போம் என்று முடிவு பண்ணி அவள் ரூம் கதவை தட்டினான் .

என்ன விக்கி என்றாள் .ஹ இம்ச இது உண்மைலேயே ஹங் ஓவர் தலை வலிய போக்குமா இல்ல எதுவும் நீ என்னையே பழி வாங்குற மாதிரி எதுவும் கொடுத்துருக்கியா என கேட்டான் . ஆமா இவரு என் குடும்பத்தையே கொன்னுட்டாரு நான் இவர பழி வாங்க போறேன் .சும்மா குடிடா இது ஹங் ஓவருக்கு நல்லா கேக்கும் என்றாள் .

ஆமா இத எப்படி குடிக்க என்றான் .அத கண்ண மூடிகிட்டு ஒரே தடவளே குடிச்சுடு .குடிச்ச உடனே வாந்தி வர மாதிரி இருக்கும் .அத கொஞ்சம் பொறுத்துக்கோ என்றாள் .உன்ன நம்பித்தான் குடிக்கிறேன் ஏமாத்திடாதா என்று சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு ஒரே கல்ப்ல் குடித்தான் .அப்பா ஒரு மாதிரிதான் இருக்கு என்றான் .சரி நான் கிளம்புறேன் என்றான் .

விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் என்றாள் .அடி போடி உனக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் பேசணும் பேசணும்கிட்டு . எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு . நான் கிளம்புறேன் நீ பாட்டுக்கு அந்த சுவத்து கிட்ட பேசி கிட்டு இரு நான் வரேன் .என்று சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போயி குளித்து கிளம்ப போனான் .

பின் குளித்து முடித்து ட்ரெஸ் எல்லாம் மாட்டி விட்டு ரூமை விட்டு வெளியேறி ஆபிஸ் கிளம்பினான் .அங்கு ஹாலில் சுவாதி நின்று கொண்டு இருந்தாள் . அவள் மீண்டும் விக்கி என்றாள் .சாரி சுவாதி எதுவா இருந்தாலும் இவினிங் பேசுவோம் இப்ப நான் போகணும் என்றான் .அதத்தான் நானும் கேக்க வந்தேன் .என்னையே போற வழில என் ஏப் எம் ஸ்டேசன்ல இறக்கி விட்டிரியா ப்ளிஸ் என்றாள் .

அதை கேட்டு விக்கி கோபத்தோடு என்னையே என்ன உனக்கு வேலைக் காரன்னு நினைச்சியா எப்ப பாத்தாலும் உனக்கு வண்டி ஒட்டவும் உன் திங்க்ஸ் தூக்கவும் இருக்கறதுக்கு என்னால முடியாது நீ ஆட்டோ பிடிச்சு போ என்றான் .

சரி இவனிடிம் எத்தனை முறை கெஞ்சுவது என்று நினைத்து கொண்டு சரி விக்கி நீ போ நான் அஞ்சலி அக்காவுக்கு போன் பண்ணிக்கிறேன் என்றாள் .அதை கேட்டு என்ன மறுபடியும் ப்ளாக் மெயிலா என கேட்டான் விக்கி .

ஐயோ நீ நினைக்கிற மாதிரி இல்ல விக்கி அவங்களுக்கு போன் போட்டா அவங்க ஆபிஸ்ல யார்கிட்டயாச்சும் கார் வாங்கிட்டு வருவாங்க நான் அவங்க கூட போயிக்கிறேன் என்றாள் .

அது அப்படி இருக்கணும் என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான் . மீண்டும் சுவாதி விக்கி என்றாள் .என்னடி நிம்மதியா ஆபிஸ் கூட போக விட மாட்டியா என்றான் எரிச்சலோடு .இல்ல விக்கி வீட்டுக்கு ஸ்பேர் கீ இருந்தா எனக்கு ஒன்னு தா என்றாள் .விக்கி வேகமாக புது வீடுல அதனால ஸ்பேர் கீயெலாம் இல்ல என்றான் .அப்புறம் எப்படி நான் பூட்றது திறக்கிறது என கேட்டாள் .

ம்ம் நான் கிளம்புறப்பயே நீயும் கிளம்பு நான் வரெப்பயெ நீயும் வா என்றான் .சரி விக்கி அப்படியே பண்றேன் என்று சொல்லி விட்டு சுவாதியும் வீட்டை விட்டு கிளம்பினாள் . சரி நான் போறேன் நீ ஆட்டோல போவியோ இல்ல உங்க அஞ்சலி அக்காவ வர சொல்லி போவியோ என்னையே ஆள விடு என்றான் .ஓகே விக்கி நீ போ பாய் என்றாள் .ஆமா நிம்மதிய எல்லாம் கெடுத்துட்டு பாயம் பாய் என்று நினைத்து கொண்டு ஒன்னும் சொல்லமால் வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்பினான் .

பின்னர் சுவாதி அஞ்சலிக்கு போன் எதுவும் பண்ணவில்லை .அவளே மெதுவாக நடந்து ரோட்டிற்கு சென்று ஆட்டோ பிடிச்சு போனாள்.

விக்கி ஆபிஸ் போனான் .அவனுக்கு எப்போதும் ஏற்படும் திங்கள் கிழமை ஹங் ஓவர் தலைவலி இன்று சுத்தமாக அடிக்க வில்லை சொல்ல போனால் எந்த திங்கள் கிழமையும் இல்லாமால் இந்த திங்கள் கிழமை அவன் ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்தான் .

பரவல இம்ச கொடுத்த மருந்து நல்ல வேலை செய்யது என்று நினைத்து கொண்டான் .அவன் சுறுசுறுப்பாக வேலை பாரப்பதை பார்த்து மணி கேட்டான் .ஹ என்னடா எப்பவும் திங்கள் கிழமை தலை வலிக்குத்துன்னு தலைய பிடிச்சுகிட்டே இருப்ப .இன்னைக்கு என்ன ரொம்ப பிரசா இருக்க என்ன விஷயம் என்றான் .

ஒன்னும் இல்லடா இந்த வாரம் சரக்கு கொஞ்சம் கம்மியா அடிச்சேன் அவளவுதான் என்றான் .சரி இருக்கட்டும் அடுத்த வாரம் வள்ளிக்கு வளைகாப்பு எங்க வீட்ல வச்சுருக்கோம் நீ மறக்காம வந்துரு என்றான் .

என்னடா முத வளைகாப்பு வைக்கலன்னு சொன்ன இப்ப வைக்கிறே என கேட்டான் விக்கி . சும்மாதாண்டா எங்க அப்பர்ட்மெண்ட்ல இருக்கவங்கள வச்சே பண்ணிகிராலம்னு இருக்கோம் என்றான் மணி .

நான் எதுக்குடா அதுக்கு வளைகாப்பு எல்லாம் லேடிஸ் மேட்டர் .அது மட்டும் இல்லாம அங்க டேவிட் வேற வருவான் அதனால நான் வரலடா என்றான் . என்னமோ வள்ளி சொல்ல சொன்னா சொன்னேன் அப்புறம் உன் பாடு அவ பாடு என்றான் மணி .அவ கிட்ட நான் வர முடியாதுன்னு சொல்லு என்றான் விக்கி .

அத நீயே சொல்லிடு அப்புறம் வள்ளி சுவாதி எங்க இருக்கான்னு கேட்டா என்றான் .அதை கேட்டதும் விக்கிக்கு பக் என்றானது .சரி சமாளிப்போம் என்று நினைத்து கொண்டு அவ எங்க இருப்பான்னு எனக்கு என்ன தெரியும் என்றான் விக்கி .

இல்லடா வள்ளி அவளுக்கு போன் ரெண்டு மூனு தடவ போட்ருக்கா ஆனா அவ எடுக்கவே இல்லையாம் அதான் என்னையே நேர்ல பாத்து அவள வளைகாப்புக்கு கூப்பிட சொன்னா என்றான் மணி .ஒரு வேலை டேவிட் மேல இருக்க கோபத்துல எடுக்காம விட்ருப்பா அவள எதுக்கு தேவை இல்லாம இன்வைட் பண்ணிக்கிட்டு என்றான் விக்கி .

அதுக்கு இல்லடா அவளும் நம்ம குரூப்ல ஒருத்திதான என்றான் மணி .குரூப்பா அத கலைஞ்சு பல மாசம் ஆச்சு என்றான் விக்கி .நீ சொல்றதும் கரெக்ட்தான் நான் அவள கூப்பிடாமயெ இருக்கேன் என்றான் மணி .அதான் எல்லாத்துக்கும் நல்லது என்றான் .

பின் விக்கி ஆபிஸ் முடிவதற்கு முன் போனை எடுத்து இண்டர்காமில் வருணை வர சொல்லுங்க என்றான் . வருண் அவன் கீழே வேலை பார்க்கும் மும்பை பையன் அவனுக்கு மும்பை அத்துப்படி அது மட்டும் இல்லாம ஆபிஸ்ல ஒரளவு அவன் பேச்சலர் நாலா மணி கிட்ட பேச முடியாத விசயத்த அவன் கிட்ட பேசுவான் .

அவன் உள்ளே வந்தான் .வருண் மும்பைல வீக் டேஸ்ல எந்த பப் ரொம்ப நேரம் திறந்து இருக்கும் என கேட்டான் .விக்கிக்கு ஹெங் ஓவர் இல்லாட்டியும் இரண்டு வாரம் யாரையும் போடததால அவனுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு அதுக்குதான் கேட்டான் .

என்ன பாய் எப்பவுமே வீக் எண்டுல மட்டும்தானே பப்க்கு போவீங்க இப்ப என்ன வார முத நாளே போறீங்க என கேட்டான் வருண் .இந்த வாரம் ஒரு வேலையல போக முடியலடா அது மட்டும் இல்லாம இப்ப 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பன்றாங்கே அதான் எதுவும் ரொம்ப நேரம் திறந்து வச்சுருக்க பப் இருக்கா என கேட்டான் விக்கி .

வருண் சிறிது நேரம் யோசித்து விட்டு எனக்கு ஒரு இடம் தெரியும் ஆனா உங்க கிட்ட சொல்லத்தான் மனசு வரல என்றான் .ஏன்டா என்ன ஆச்சு என விக்கி கேட்டான் .அது ஒன்னும் இல்ல அங்க என் லவ்வர கூப்பிட்டு வருவேன் அதான் என்று இழுத்தான் .

அதுக்கு என்னடா இங்கதான் நான் உனக்கு பாஸ் அங்க சாதரான ஆள்தானே என்றான் .அது வந்து பைய்யா என்று இழுத்தான் .அட சும்மா சொல்றா என்றான் விக்கி .நீங்க பாட்டுக்கு நான் அங்குட்டு போனவுடனே என் லவ்வரா கரெக்ட் பண்ணிடிங்கன்னா என்றான் .அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்கி அடப்பாவி என்னையே பத்தியும் என் கொள்கைய பத்தியும் இந்த ஆபிஸ்க்கே தெரியும் உனக்கு தெரியாதா என்றான் .

அட போங்கண்ணே நீங்களும் உங்க கொள்கையும் எப்ப நீங்க உங்க பெஸ்ட் பிரண்டோட லவ்வர் கூட செக்ஸ் வச்சிங்கல அப்பவே போயிடுச்சு பாய் என்றான் .அடி பாவி சுவாதி உன்னால என் பேரு ஆபிஸ் வரைக்கும் நாறிடுச்சுடி என்று நினைத்து கொண்டு சரிடா நீ சொல்லவே வேணாம் போயி வேலைய பாருடா என்றான் .கோபிச்காதிங்க பாய் நான் உங்கள நம்பி சொல்றேன் .நோட் பண்ணிகொங்க என்றான் .

அப்பா நீயாச்சும் நம்பினியே என்று அவனிடிம் அட்ரஸ் வாங்கி கொண்டான் .பின் வேலை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயி பிரஸ் அப் ஆகிட்டு பப்புக்கு போனும் என்று நினைத்து கொண்டு வேகமாக ஆபிஸ் விட்டு வெளியேறினான் . அங்க ஆபிஸ்க்கு வெளியே சுவாதி நின்று கொண்டு இருந்தாள் .

இவ ஏன் இங்க நிக்குற என்று விக்கி கடுப்போடு நினைத்து கொண்டு மணி எங்கிட்டும் பாக்குரதுக்குல அவள மறைக்கணும் அப்படின்னு நினைச்சுசுகிட்டு கார எடுத்துட்டு வேகமாக அவ கிட்ட போனான் போயி கதவை திறந்தான் .அவள் ஏதோ சொல்ல வந்தாள் .முதலல வண்டில ஏறுடி என்று அவளை அவசரப்படுத்தினான் .அவளும் வேகமாக காரில் ஏறினாள் .பின் யாரும் பாக்குறாங்களா என்று சுற்றிலும் பார்த்து விட்டு வேகமாக வண்டியை எடுத்தான் .

தொடரும்

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
[+] 7 users Like Rajiss's post
Like Reply
#43
Excellent update
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
#44
Very interesting and hottest update
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#45
Arumai...
Ithu kandippa sex story aaga iruka mudiyathu..
Oru nalla romantic story aaga irukkum nnu ethir
Pakkiren...

Waiting for upcoming parts..
[+] 1 user Likes Maaran04's post
Like Reply
#46
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

காரில் ஏறியதும் வண்டியை வேகமாக ஒட்டி ஆபிஸ் விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி போயி காரை நிப்பாட்டி விட்டு விக்கி சுற்றும் முற்றும் பார்த்தான் . பின் விக்கி காரில் இருந்து கொண்டே சுவாதியை திட்ட ஆரம்பித்தான் . உன்னையே யாருடி என் ஆபிஸ் பக்கம் வர சொன்னது என்றான்

இல்ல விக்கி எனக்கு இன்னைக்கு ஏப் ஏம்ல 3 ப்ரோக்ராம்தான் கொடுத்தாங்க 3 மணிக்கு எல்லாம் ஆபிஸ விட்டு வெளிய வந்துட்டேன் என் கிட்ட வீட்டு ஸ்பேர் கீ இல்லையா அதனால ஒரு மணி நேரம் பார்க் போனான் . அப்புறம் 5 மணிக்கு உன் ஆபிஸ் முடியும்ன்னு தெரியும் அதான் அப்படியே இங்க வந்தேன் .அப்படியே உன் கூட கார்லயே போயிருலாம் பாரு அதுக்குதான் வந்தேன் என்றாள்

ஆபிஸ் சீக்கிரம் முடிஞ்சா வேற எங்காச்சும் போக வேண்டியதுதானே ஏன் என் ஆபிஸ்க்கு வந்து என்னையே உயிர வாங்குற எங்கிட்டும் மணி ஏதும் உன்னையே பாத்து தொலைச்சுருந்தா அவளவுதான் என்றான் .ஓகே விக்கி இனி மேல் உன் ஆபிஸ் பக்கம் வர மாட்டேன் போதுமா .அப்புறம் மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என கேட்டாள் .ம்ம் இருக்காங்க இருக்காங்க என்றான் .விக்கி வள்ளி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதை அவளிடிம் சொல்லமால் மறைத்தான் .

பின் வீடு வந்தது இருவரும் அவரவர் ரூமிற்கு போனார்கள் .பின் ஒரு ஆறு மணியை போல விக்கி ரூம் கதவை சுவாதி தட்டினாள் .என்ன என்று கோபத்தோடு வந்தான் .விக்கி கோபப்படாம கொஞ்ச நேரம் இங்க ஹாலுக்கு வா கொஞ்ச நேரம் பேசுவோம் என்றாள் .

என்ன பேசுறது என்றான் .சும்மா இங்க வா என்றாள் .இருவரும் ஹாலிற்கு போனார்கள் .விக்கி நாம ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் பண்ணிகிருவோமா என்றாள் .ஹே நீ என்ன சினிமா அதிகம் பாப்பியா என்றான் .ஏன் அப்படி கேக்குற என்றாள் .அன்னைக்கு என்னன்னா ஓகே கண்மணி படத்துல வர மாதிரி ஒண்ணா இருப்போம்னு சொல்லி இங்க வந்துட்ட

இப்ப என்னன்னா பிரியமானவளே படத்துல வர மாதிரி ஒப்பந்தம் போடுவோம்ன்னு சொல்ற என்றான் .டேய் முதல சொல்றத கேளுடா என்றாள் சரி சொல்லு என்றான் .இங்க பாரு விக்கி உனக்கு என் மேல கோபம் நிறையவே இருக்குன்னு எனக்கு தெரியும் ஏன்னா நான் உன்னோட பிரண்ட பிரிச்சுட்டேன் உன் சுதந்திரத்த பறிச்சுட்டேன் அதுக்கு எல்லாம் நான் மன்னிப்பு கேட்டா கூட உன் கோபம் குறையாதுன்னு தெரியும்

இருந்தாலும் எனக்கு வேற வழி இல்ல விக்கி கொஞ்சம் புரிஞ்சுக்கோ இந்தா அடுத்த வாரம் எனக்கு நாலாவது மாசம் ஆரம்பிச்சுடும் அப்புறம் ஒரு 6 மாசம் குழந்தை பிறந்ததும் ஒரு ரெண்டு மாசம் அப்புறம் நான் போயிருவேன் அது வரைக்கும் பொறுத்துக்கோ நீ வேணும்னா இத ஒரு அப்பர்ட்மெண்ட் ஆவும் என் ரூம் உன் பக்கத்து அப்பர்ட்மெண்ட் ஆவும் நினைச்சுக்கோ நான் உன்னோட ஒரு nighbouor மாதிரி நினைச்சுக்கோ என்றாள் .

என்ன நேத்து நைட் நான் திட்டனதுக்காக இப்படி சொல்றியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விக்கி என்றாள் .என்ன என் மேல கோபமா என்றான் .ஆமா விக்கி கோபம்தான் ஆனா உன் மேல இல்ல என் மேல என்றாள் .அதை கேட்டு விக்கி சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனான் .சரி விக்கி நான் எப்பவுமே நடந்தத பத்தி பேச விரும்பல இனி நடக்க போறத பத்தி பேசித்தான் பழக்கம் .

இங்க பாரு விக்கி இது என்ன இருந்தாலும் உன் வீடு நான் இன்னும் ஒரு மூனு மாசம் வேலைக்கு போவேன் அதனால அந்த 3 மாசமும் நான் உனக்கு வாடகை மாதிரி ஒரு குறிப்பிட்ட அமௌண்ட் தரேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹே பணம்லாம் என் கிட்ட நிறைய இருக்கு நீ ஒன்னும் தர வேணாம் என்றான் . அதுக்கு இல்ல விக்கி அட்லீஸ்ட் பேரருக்கு டிப்ஸ் கொடுக்கவாச்சும் யூஸ் ஆகும்ல என்றாள் .அதலாம் முடியாது என்றான் .ஹ நான் உன்கிட்ட இருந்து நிறைய பறிச்சுட்டேன்னு எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு

அத போக்கவாச்சும் வாங்கிக்கோ என்றாள் .ஹே இந்த பழைய ட்ரிக் எல்லாம் வேணாம் நான் உன்கிட்ட இருந்து வாடகை மாதிரி பணம் வாங்குனா நீ பணம் கொடுத்துருக்கேன்கிற திமிருல வெளிய போக மாட்ட அதானே என்று சொல்லி சிரித்தான் .நீ பணம் வாங்காட்டியும் நான் வெளிய போக மாட்டேன் அது எப்படின்னு உனக்கும் தெரியும் சோ பணம் வாங்குறது உனக்கு நல்லது என்றாள் .

ஓகே வாங்கி தொலைக்கிறேன் என்றான் .விக்கி அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி நீ என்ஜாய் பண்ண யார வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கூப்பிட்டு வா ஏன்னா இது உன் வீடு நீ எப்படி வேணும்னாலும் இருக்காலம் ஆனா யாரையாச்சும் கூப்பிட்டு வரதுக்கு முன்னாடி என் செல்லுக்கு ஒரு sms பண்ணிடு நான் பாட்டுக்கு என் ரூம் கதவ நல்ல பூட்டிட்டு வெளியேவே வராம இருந்துக்கிறேன் .

இனிமேல் உன்கிட்ட நான் எந்த ஹெல்பும் கேக்க மாட்டேன் .உன் ஆபிஸ்க்கு கூட வர மாட்டேன் சோ என்னால உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல .

அப்புறம் டெய்லி நைட் நான் டின்னர் வீட்லயே ரெடி பண்றேன் உனக்கு பிடிச்சா சாப்பிடு இல்லாட்டி வேணாம் .இவளவுதான் விக்கி நான் சொல்ல வந்தது என்றாள் .

பரவல நான் கூட நைட் நான் திட்ட திட்ட நீ சும்மா இருக்கியான்னு நினைச்சேன் .ஆனா இப்ப நீ இவளவு தூரம் பயந்துருக்கியா என்றான் .பயம் இல்ல விக்கி எனக்கு வேற வழி தெரியல என்றாள் .ம்ம் என்று சொல்லிவிட்டு விக்கி அமைதி ஆனான் .இருவருமே அமைதியாக இருந்தார்கள் .

ஓகே விக்கி உனக்கு என் கிட்ட எதாச்சும் சொல்லனுமா இல்ல கேக்கணுமா என்றாள் . உடனே விக்கி எப்ப என் வீட்ட விட்டு போவ என கேட்டான் .இன்னும் 8 மாசம் வேற எதாச்சும் என்றாள் .ம்ம் உண்மைல இந்த குழந்தை என் குழந்தையா என்றான் .ஆரம்பிச்ட்டாண்டா என்று சுவாதி நினைத்து கொண்டு இந்த கேள்விக்கு உண்மைய சொன்ன சந்தொசப்படுவியா இல்ல பொய் சொன்ன சந்தொசப்படுவியா என்றாள் .விக்கி சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் சொல்ல வேண்டாம் இத பத்தி என்றான் .

வேற எதாச்சும் இருக்கா இல்ல அவளவுதானா என்றாள் .இல்ல இன்னும் இருக்கு என்றான் .சரி சொல்லு என்றாள் ,நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறது என் க்ரூப்ல யாருக்கும் தெரியாது இல்ல என கேட்டான் .

உன் க்ரூப்ன்னா யாரு என கேட்டாள் . அதாண்டி வள்ளி ,மணி ,டேவிட் என்றான் .ஒ சரி சரி அவங்க யாருக்கும் தெரியாது என்றாள் .ம்ம் நல்லதுதான் நீ கனடா போற வரைக்கும் அவங்க யாருக்கும் நீ இங்க இருக்கிறதோ இல்ல இதுக்கு நான்தான் காரணம்னோ தெரிய கூடாது புரிஞ்சுதா என்றான் .

ம்ம் புரிஞ்ச்சு என்றாள் .சொல்லா போன நீ அவங்கள யாரையும் இந்த 8 மாசத்துல பாக்க கூட கூடாது ,மீறி அவங்கள பாத்து இது தெரிஞ்சா நான் நீ போலீஸ்ல சொன்னாலும் பரவலன்னு உன்னையே வீட்ட விட்டு அனுப்பிருவேன் ஓகேவா என்றான் .

என்ன விக்கி என்னையே பிரியமானவளே ,ஓகே கண்மணி படம் மாதிரி பண்றேன்னு சொல்லிட்டு நீ என்னமோ நாட்டமை விஜயகுமார் மாதிரி என்னையே ஊர விட்டு ஒதுக்கி வைக்கிற என்று சொல்லி சிரித்தாள் .அதலாம் தெரியாது அவங்க யாருக்கும் நீ இங்க இருக்கிறது தெரிய கூடாது .குறிப்பா டேவிட்டுக்கு

சும்மா அவன கடுப்பு ஏத்துறேன்னு நினைச்சுகிட்டு போன வட்டம் மாதிரி இந்த வட்டம் மாட்டி விட்ட அவளவுதான் உன்ன நான் இந்த வட்டம் கொலையே பண்ணிருவேன் என்றான் .ஓகே ஓகே நான் யாரையும் பாக்க மாட்டேன் . யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்றாள் .அது என்றான் விக்கி .

அப்புறம் விக்கி நான் இன்னொன்னு உங்கிட்ட கேக்கணும் என்றாள் .என்ன என்றான் கடுப்போடு . என்னைக்காச்சும் எவளும் கிடைக்காம இருந்தா என் கிட்ட வந்து செக்ஸ் வைக்கனும்னு சொல்லி என்னையே கம்பெல் பண்ண கூடாது .ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் அப்புறம் நாம ரெண்டு பேருக்கும் இடைல செக்ஸ் ரிலேசன் வேணாம்னு நினைக்கிறேன் என்றாள் .

அம்மா தாயே உன்கிட்ட ஒரு தடவ செக்ஸ் வச்சதுக்கே நான் எல்லாத்தையும் இழந்துட்டு நிம்மதி இல்லாம இருக்கேன் .இதுல இன்னொரு தடவ வேற வச்சா அவளவுதான் என் வாழ்க்கை விளங்கிரும் இந்த மும்பை இல்ல இந்த உலகத்திலையே பொண்ணுக இல்லாம போயி நீ மட்டும்தான் பொண்ணுன்னு இருந்தா கூட உன்னையே நான் தொட மாட்டேன் என்றான்

பின் சுவாதி சொன்னாள் ஓகே விக்கி தேங்க்ஸ் என்றாள் .எதுக்கு என்றான் .கார்ல எத்திகிட்டத்துக்கு என்றாள் .பின் விக்கியும் by the by உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .எப்பவும் திங்கள் கிழமை ஹங் ஓவரால தலை வலி வந்து ரொம்ப கஷ்டப்படுவேன் வொர்க்ல கன்சென்ட்ரட் பண்ணவே முடியாது ஆனா இன்னைக்கு நீ கொடுத்த மருந்தால எனக்கு ஓரளவு பிரசாவும் இருந்துச்சு தலை வலியும் இல்லாம இருந்துச்சு அதுக்குதான் என்றான் .

ம்ம் சரி என்றாள் .ஆமா உனக்கு எப்படி தெரியும் இது ஹங் ஓவருக்கு மருந்தாகும்னு என கேட்டான் .அது காலேஜ்ல ஹாஸ்டல் டே அப்ப முத முத சரக்கு அடிச்சுட்டு இப்படி ஓவரா ஹெங் ஓவர் ஆகி கிடந்தேன்னா அப்ப என் சீனியர் இத கொடுத்து குடிக்க சொன்னங்க கேட்டுக்குச்சு என்றாள் .அடி பாவி காலேஜ்லே குடிக்க ஆரம்பிச்சுட்டியா என்றான் .ஏன் ஆம்பிளகதான் காலேஜ்லே குடிக்கனுமா நாங்க குடிக்க கூடாதா என்றாள் .

குடிக்கலாம் குடிக்கலாம் தாரளமா குடிக்கலாம் என்று சொல்லிவிட்டு சிரித்தான் .அவளும் சிரித்தாள் .பின் இருவரும் அமைதியாகி விட்டு ஓகே விக்கி நான் போயி என் ரூம்ல உக்காந்து என் வொர்க் பாக்குறேன் என்றாள் ,ம்ம் நானும்தான் என்றான் .

பின் இருவரும் அவரவர் ரூமிற்கு போனார்கள் .சுவாதி அவள் ரூமிற்கு போயி அடுத்த நாள் ஏப் எமில் பேசுவதற்கு ஸ்கிரிப்ட் எழுதி கொண்டு இருந்தாள் .விக்கி கொஞ்ச நேரம் தூங்கி விட்டு ஆறு மணி போல குளித்து முடித்து விட்டு வருண் சொன்ன பப்ற்கு கிளம்பினான் .

அந்த பபப்பிற்கு போனவுடன் கண்களை பெண்களை தேடி நோட்டமிட்டான்..

தொடரும்...

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
[+] 5 users Like Rajiss's post
Like Reply
#47
Waiting for next part...

Kathaiyai paathilaye stop panirathinga..

Ena mari oru silarkaga vachum
Post continuously.

Nandri
[+] 1 user Likes Karthiga22's post
Like Reply
#48
Lovely updates
[+] 1 user Likes jiljilrani's post
Like Reply
#49
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

கருத்துக்கள் பகிர்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள் பல...

விக்கி கிட்டத்தட்ட ரெண்டு வாரம் கழித்து பப்ற்கு போனாதால் மிகுந்த உற்சாகதோடும் ரொம்ப சந்தோசத்தோடும் போனான் . ஆனால் அன்று திங்கள் கிழமை என்பதால் அதிகமாக பெண்கள் இல்லை .

இருந்தாலும் எவளையாச்சும் கரெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருந்தான் .பின் பப்பில் உள்ள பாரில் குடித்து விட்டு பின் அங்கு கொஞ்சம் போல நடனமாடி கொண்டு இருந்த கூட்டத்திற்குள் கலந்தான் .

அங்கு நன்கு இசைக்கு ஏற்ப துள்ளி குதித்து ஆடி கொண்டு இருந்தான் . ஆனால் அங்கு இருந்த கொஞ்ச கூட்டமும் ஜோடி ஜோடியாக வந்து இருந்ததால் எல்லாரும் ஜோடி ஜோடியாக ஆடி கொண்டு இருந்தனர் .அவனுக்கு என்று யாரும் கிடைக்கவில்லை .விக்கியும் நடனமாடி கொண்டே அங்கிட்டும் இங்கிட்டும் போயி பார்த்தான் , ஒருத்தியும் துணைக்கு ஆட அவனுக்கு கிடைக்கவில்லை .

வெறுத்து போயி மீண்டும் பாருக்கு போயி பார் டெண்டரிடிம் சரக்கு வாங்கி அடித்து கொண்டு இருந்தான் . சே என்ன பப்டா இது ஒருத்தி கூட சிங்கிளா மாட்ட மாட்டிங்கிரா எல்லாம் ஜோடியாத்தான் இருக்குதுக .இதே பழைய பப்னா இந்நேரம் எவளாச்சும் கண்டிப்பா மாட்டி இருப்பா நம்மளும் நிம்மதியா விளையாடிகிட்டு இருப்போம் .இது என்ன இப்படி இருக்கு என்று விக்கி நினைத்து கொண்டு இருக்கும் போது யாரோ அவனை பின்னால் இருந்து கூப்பிடவது போல இருந்து திரும்பினான் .

அது வருண் . என்ன பையா அட்ரஸ் வாங்குன உடனே இங்கதான் வந்துட்டிங்க போல என்றான் .ஆமா உடனே வந்து இருந்தானாப்புல எவளும் கிடைச்சு இருப்பாளுக்கும் இந்த பப் வேஸ்ட்டா இதோட அட்ரஸ் ஏண்டா கொடுத்த என்றான் விக்கி .அட போங்க பையா இன்னைக்கு திங்கள் கிழமைனால கூட்டம் கம்மியா இருக்கு நீங்க வீக் என்ட்ஸ்ல வந்து பாருங்க சூப்பரா இருக்கும் என்றான் வருண் .

வீக் என்ட்ல எல்லா பப்ம் நல்லாத்தான் இருக்கும் .சரி அது இருக்கட்டும் எனக்குத்தான் எவளையாச்சும் போட்டு ஆகணும்னு திங்கள் கிழமை வந்து இருக்கேன் நீ என்ன திங்கள் கிழமை வந்துருக்க என்ன உன் லவ்வர் டெய்லி இங்க வரணும்னு சொல்ரளா என்றான் விக்கி . பாய் மெல்ல பேசுங்க என்றான் வருண் .ஏன்டா என கேட்டான் விக்கி .

வருண் அவன் காதில் மெல்ல கிசு கிசுத்தான் பாய் நான் இங்க என் ஆளோட வரல என்றான் .அப்புறம் என்றான் .வேற ஒருத்தி கூட வந்து இருக்கேன் என்றான் வருண் .ஏன்டா உன் லவ் எதுவும் பிரேக் ஆப் ஆகிடுச்சா என்றான் விக்கி .பிரேக் ஆப் எல்லாம் ஆகல அவ ஒரு வேலை விசயமா குஜராத் வரைக்கும் போயிருக்கா வர எப்படியும் ரெண்டு வாரம் ஆகும்

ஏற்கனவே அவ வொர்க் இருக்குன்னு சொல்லி கொஞ்ச நாளா செக்ஸ்க்கு வரல .எனக்கு ஒரு மாசமா செக்ஸ் வைக்காம இருக்கறது ஒரு மாதிரி இருந்துச்சு .நீங்க வேற காலைல ஆபிஸ்ல பப் அது இதுன்னு சொல்லி எனக்கும் மூட் வர வச்சுட்டிங்க அதான் என் ஸ்கூல் பிரண்ட் ஒருத்திக்கு போன் போட்டேன் அவ சும்மாதான் இருந்தா அதான் அவள கூப்பிட்டு இங்க வந்துட்டேன் .

அடப்பாவிகளா எல்லாரும் என்னையே கெட்டவன்னு சொல்லிட்டு நீங்க எனக்கும் மேல இருக்கிங்களேடா என்று விக்கி நினைத்து கொண்டான் .அப்புறம் இப்ப எங்கடா நீ கூப்பிட்டு வந்தவ என்றான் விக்கி . டாயிலெட் போயிருக்கா இப்ப வந்துருவா

பாய் அவ வந்ததுக்கு அப்புறம் எங்கிட்டும் நீங்க அவள கரெக்ட் பண்ணிடதிங்க என்றான் .டேய் இன்னும் என்னையே நீ நம்பலையா என்றான் விக்கி .அதுக்கு இல்ல பாய் இருந்தாலும் உங்களுக்கு ஒரு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்கேன் என்றான் வருண் .அப்படி என்னடா எனக்கு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்க என்று கேட்டான் .எல்லாம் உங்களுக்கு பிடிச்ச சர்பரைஸ் தான் ,இந்தா அதே வருது பாருங்க என்று வருண் காட்டிய பக்கம் இருந்து இரண்டு பெண்கள் வந்து கொண்டு இருந்தார்கள் .

பாய் அதுல லெப்ட்ல வரரது நான் கரெக்ட் பண்ண ஆளு ,ரைட்ல வரரது அவ பிரண்டு முடிஞ்சா அவள கரெக்ட் பண்ணி இன்னைக்கு நைட் வச்சுக்கோங்க என்றான் .ம்ம் பரவலடா என் பிளிங்க்ஸ் புரிஞ்சுகிட்டு நல்லது செஞ்சு இருக்க என்றான் விக்கி .

அந்த இரண்டு பெண்களும் பக்கத்தில் வந்தார்கள் ஹ இதான் என் பாஸ் என்று அவரகளிடிம் விக்கியை அறிமுகப்படுத்தினான் .அப்புறம் இது ரியா என்று வருண் அவன் ஆள் என்று முதலிலே சொன்னவளை காட்டினான் . பின் இது சிமி ரியாவோட பிரண்டு என்று அறிமுக படுத்தி வைத்தான் .

இரண்டு பேரிடிமும் சிரித்து கொண்டே ஹாய் என்றான் .ஓகே பாய் நானும் ரியாவும் போயி டான்ஸ் ஆட போறோம் என்று சொல்லி விட்டு வருண் ரியாவை கூப்பிட்டு ஆட போயி விட்டான் .இப்போது விக்கியும் சிமியும் மட்டும் இருந்தார்கள் .இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் .சோ நீங்கதான் வருனோட பாஸா என கேட்டாள் சிமி .

ம்ம் கம்பெனிலதான் அவனுக்கு பாஸ் இங்க அவனுக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று சொல்லி சிரித்தான் . அவளும் சிரித்தாள் .பின் இருவரும் கண்டதையும் பற்றி கொஞ்ச நேரம் பேசி சிரித்து விட்டு ஹ நம்மளும் டான்ஸ் ஆடுவோமா என்றாள் சிமி .நானும் அததான் நினைச்சேன் என்று சொல்லி சிரித்தான் விக்கி .பின் அவளோடு டான்ஸ் ஆடும் இடத்திற்கு சென்றான் .பின் அவள் கையை பிடித்து வழக்கம் போல அவன் டான்ஸ் மூவ்கலை அவளிடிம் காட்டி கொண்டு இருந்தான் .

டான்ஸ் ஆடுவது போல அவள் முதுகை தடவி கொண்டும் அவள் இடுப்பை பிடித்து கொண்டும் அவள் கழுத்தில் இவன் மூச்சு காற்று படும் படியும் ஆடி அவளை சூடெற்றினான் . பின் ஒரு பாடல் முடிந்து அவர்கள் இருவரும் நடனத்தை முடித்து விட்டு அங்கு உள்ள சேரில் உக்காந்தார்கள் . வாவ் நீங்க இவளவு சூப்பரா டான்ஸ் ஆடுவிங்கன்னு எனக்கு தெரியாது இட்ஸ் அமைசிங் என்றாள் சிமி .

அப்படி எல்லாம் இல்ல சும்மா நார்மல் தான் என்றான் .அப்புறம் டின்னர் எங்க என்றாள் .இங்கதான் எதவாது ஹோட்டல சாப்பிட்டு போனும் என்றான் .ஹ நானும் உன் கூட join பண்ணிக்கிறேன் என்றாள் .ஒ சுயர் என்றான் .அப்புறம் என்றாள் .அப்புறம் என்ன தெரியல என்றான் .ஹே டின்னர் சாப்பிட ஹோட்டல் போகாம பேசாம என் அப்பர்ட்மெண்ட் வரியா என்றாள் .அத தானே எதிர் பாத்தேன் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தாலும் எடுத்த உடனே மூவ் பண்ண வேணாம் என்று நினைத்து கொண்டு

உங்க வீட்ல யார் இந்நேரம் சமையல் நமக்காக பண்ணி வைப்பா என்றான் .வீட்ல யாரும் இல்ல நம்மதான் பண்ணனும் என்றாள் . ஆஹா சூப்பர் இவ வீட்டுக்கே போயி என்ஜாய் பண்ணிட்டு வந்துடலாம் . நம்ம வீட்டுக்கு போக தேவை இல்லை

இருந்தாலும் கொஞ்ச நேரம் நல்லவனா நடிப்போம் என்று நினைத்து கொண்டு வீட்ல யாருமே இல்லாம இருக்கப்ப நான் வந்த நல்லா இருக்குமா தப்பு இல்லை என்றான் . உடனே சிமி அவன் காதருகே வந்து டேய் ரொம்ப நல்லவனா நடிக்க ட்ரை பண்ணாத அது உனக்கு வர மாட்டிங்குது நீ டான்ஸ் ஆடுன மூவ் வச்சே கண்டுபிடிச்சுட்டேன் நீ எதுக்கு ட்ரை பண்றன்னு சோ சீக்கிரம் வா என் அப்பர்ட்மெண்ட்டுக்கு என்றாள்.பின் அவனை பார்த்து சிரித்து கொண்டே கண் அடித்தாள் .

அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு இப்பவே போவோமா என்றான் .ம்ம் போலாம் ஒரு நிமிஷம் ரியாவும் வருணும் வந்துக்கிரட்டும் . சொல்லிட்டு போவோம் என்றாள் .

ஹ by the by உன் அப்பர்ட்மெண்ட்க்கு நான் வர்ரதுல ஒரு பிரச்சினையும் வரதுல ஏன்னா என்னோட பழைய அப்பர்ட்மெண்ட்ல எல்லாம் இதுக்கு பல பிரச்சினை பண்ணாங்க பக்கத்துல இருக்க பொறமை பிடிச்சவாங்கே என்றான் .ஒரு பிரச்சினையும் வராது என்றாள் . அப்புறம் அப்பா அம்மா எல்லாம் எங்க போனாங்க என்றான் .அவங்க இங்க இல்ல மனிப்புர்ல இருக்காங்க .நான் மட்டும்தான் இங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்றாள் .

Good ஆனா மும்பைல ஒரு பொன்னா எப்படி தனியா இருக்கே என கேட்டான் . நான் தனியா இல்ல என் லவ்வர் கூட லிவிங் டுகதர்ல இருக்கேன் . என்று சிமி சொன்னவுடன் அதை கேட்டு அதிர்ச்சியாகி விக்கி குடித்து கொண்டு இருந்த சரக்கை தூப்பினான் . அதை பார்த்த சிமி யே பயப்படாத அவன் வொர்க் விசயமா அமெரிக்கா போயிருக்கான் .இப்ப வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன் அதனால ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் .

ஒரு நிமிஷம் சிமி நான் இந்த வருண் கிட்ட ஒன்னு கேட்டு வந்துறேன் என்று அவளிடிம் சொல்லிவிட்டு ரியாவுடன் ஆடி கொண்டு இருந்த வருணை தனியாக பிரித்தாள் .எதுக்கு பாய் கூப்பிட்டிங்க இப்பதான் நானும் என் ஆளும் ஒரு ப்லொவ்ல டான்ஸ் ஆடி கிட்டு இருந்தோம் என்றான் .டேய் அவ என்னையே அவ அப்பர்ட்மெண்ட்க்கு கூப்பிடுரா டா என்றான் .

நல்லதுதானே அதுக்குதானே ஆசை பட்டிங்க அப்புறம் என்ன என்றான் வருண் .பிரச்சினை அது இல்லாடா என்றான் .அப்புறம் வேற என்ன பாஸ் பிரச்சினை என்றான் ,அவ வேற ஒருத்தனோட லவ்வர் என்றான் விக்கி .அதை கேட்டு வருண் சிரித்தான் நீங்க இன்னும் அந்த கொள்கைய விடலையா என்று சிரித்து கொண்டே சொன்னான் .அதை பார்த்து கடுப்பான விக்கி அவனிடிம் டேய் சிரிக்காதடா என்றான் .

பாஸ் இந்த காலத்துல அவன் அவன் அடுத்தவன் பொண்டாட்டியவே போட்டு கிட்டு இருக்காங்கே நீங்க என்னனா அடுத்தவன் லவ்வர போட மாட்டேன்னு சொல்றிங்க அது மட்டும் இல்லாம அடுத்தவன லவ் பண்ணாத பொண்ணுதான் வேணும்னா நீங்க நேத்து ஏஜ் அட்டெண்ட் பண்ண பொன்னுகலதான் பிடிக்கணும் அதனால உங்க கொள்கைய துராமா வச்சுட்டு அவ கூட போயி என்ஜாய் பண்ணுங்க என்றான் வருண் .

என்னால என் கொள்கைய மீற முடியாது என்றான் விக்கி .பாஸ் அப்ப சுவாதி மட்டும் என்னவாம் அவளும் அடுத்தவனோட லவ்வர்தானே அவ கூட மட்டும் செக்ஸ் வைக்கும் போது உங்க கொள்கை எங்க போச்சாம் என்றான் .அதை கேட்டு விக்கி கோபப்பட்டான் ,ஆனால் கோபத்தை வெளி காட்டமால் சொன்னான் டேய் அது நான் தெளிவா இல்லாததால நடந்த ஒரு விபத்து மாதிரி

அந்த விபத்துல என் கொள்கை லைட்டா சிதைஞ்சு இருக்காலம் ஆனா இது ஒரு கொலை மாதிரி நான் தெரிஞ்சே என் கொள்கையவும் இன்னொருத்தனோட நம்பிக்கையவும் கொல்ல விரும்பல சோ குட் நைட் .சிமி கிட்ட எனக்கு உடம்புக்கு முடியலன்னு சொல்லிரு நான் வேற வழில அவளுக்கு தெரியாம போயிக்கிறேன் என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான் .அவன் போகும் போது வருண் கூப்பிட்டு பார்த்தான் .ஆனால் விக்கி கண்டு கொள்ளவில்லை .

பின் காரில் ஏறி உக்காந்தான் . இன்றும் யாரையும் அவனால போட முடியமால் போனாலும் அவன் அன்று போல இன்றுஅவன் கொள்கையை மீறததால் ஒரு மன நிறைவுடன் காரை எடுத்து வீட்டிற்கு போனான் .

தொடரும்....

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#50
Feel good story
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
#51
(02-11-2021, 06:13 AM)Santhosh Stanley Wrote: Feel good story

நன்றி brother...
Like Reply
#52
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

பின் விக்கி காரில் ஏறி கொண்டு ஓகே விக்கி இனி எதுனாலும் வீக் எண்டுல பாத்துக்குவோம் அதான் நல்லது என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டு காரை மெதுவாக ஓட்டினான் .

பின் காரில் உள்ள ஏப் எமை தட்டினான் அவன் ஏப் எம்மை தட்டிய நேரம் அதில் சுவாதி பேசி கொண்டு இருந்தாள் .வணக்கம் நேயர்களே இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் .நான் உங்க பேவரைட் ஆர் ஜே சுவாதி வணக்கம் சொல்லுங்க யார் பேசுறது என்றாள் .

ம்ம் இம்ச இந்நேரம் ப்ரோக்ராம் பண்ணுது அப்ப வீட்ல இருக்காதா .சரி அதுவும் நல்லதுதான் நிம்மதியா வீட்ல இருப்போம் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .

பின் வீட்டிற்கு போனான் .ஆனால் நேற்று போல இன்று கதவை கோபத்தோடு திறக்கவில்லை .நல்ல சந்தோசத்தோடு விசில் அடித்து கொண்டே திறந்தான் .அவன் சந்தோசமாக இருக்க காரணம் அவன் யாரையும் போடா விட்டியும் அவன் கொள்கையில் இந்த முறை தவறமால் இருப்பது.

பின் சுவாதி ரூமை பார்த்தான் .அது பூட்டி இருந்தது .சரி அவள பத்தி நமக்கு என்ன கவலை நம்ம டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலில் உக்காந்து அப்படியே டிவி பார்க்க ஆரம்பித்தான் ,அவன் ஒரு மியூசிக் சேனலை வைத்து விட்டு பாட்டு பாத்து கொண்டு இருந்தான் , பின் அவன் நன்கு பாடலை ரசித்து பார்த்து கொண்டு இருந்த போது அவன் செல்லுக்கு ஒரு SMS வந்தது ,

அது சுவாதியிடம் இருந்து hai are you there ? and with a girl ? என்று வந்தது . அதை எடுத்து விக்கி no i am single and i am in home என்று பதில் sms அனுப்புனான் . பின் மெல்ல சுவாதி அவள் ரூம் கதவை திறந்து எட்டி பார்த்தாள் .அங்கு விக்கி இருப்பதை பார்த்து கதவை திறந்து வெளியே வந்தாள் .

ஹே ரூம்ல இருக்கும் போது ஏதோ டிவி சத்தம் கேட்டுச்சு அதான் நீ இருக்கியா இல்ல வேற யாரும் புகுந்துட்டான்களோன்னு நினைச்சுதான் SMS பண்ணேன் . மத்தபடி ஒன்னும் இல்ல ஏதும் உன்னையே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றாள் ,அதலாம் இல்ல ஹ நீ என்ன ரேடியோல இப்பதான் பேசிகிட்டு இருந்த எப்ப வந்த என்றான் .ஹ அது லைவ் கிடையாது நான் மதியம் பேசுன ரெகார்டட் ப்ரோக்ராம் என்றாள் .

ம்ம் ஓகே என்றான் மெல்ல .ஹ என்ன ரொம்ப டல்லா இருக்க இன்னைக்கும் பப் க்ளோஸ் பண்ணிட்டாங்களா என்றாள் .அப்படி எல்லாம் இல்ல பப் எல்லாம் திறந்து தான் இருந்துச்சு என்றான் .அப்புறம் பொண்ணு கிடைக்கலையா என்றாள் .பொன்னும் கிடைச்சுச்சு நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன் என்றான் .

பின் விக்கிக்கு பசி எடுத்தது அவன் வரும் வழியிலும் எங்கும் சாப்பிட வில்லை அதனால் அவன் பசியை போக்க எழுந்து போயி பிரிட்ஜில் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க போனான் .

அவன் அந்த பக்கம் போனதும் சுவாதி ஹாலுக்கு வந்தாள் விக்கி if you dont mind நானும் கொஞ்ச நேரம் டிவி பாத்துகிறேன் .சும்மா லேப்டாப் பாத்து பாத்து கிட்டு இருக்க போர் அடிக்குது என்றாள் .ஒகே சுயர் என்றான் .பின் பிரிட்ஜில் இருந்து பழைய பழங்கள் ஒன்று இரண்டை எடுத்து தின்னு கொண்டு இருந்தான் .அதை பார்த்த சுவாதி டேய் உனக்கு பசிச்சா கிச்சன்ல சாப்பாடு இருக்கு எடுத்து சாப்பிடு என்றாள் .

விக்கிக்கு பசி இருந்தாலும் அவள் சாப்பாட்டை எடுத்து சாப்பிட மனம் வரல இல்ல பசிக்கல சும்மாதான் ப்ருட்ஸ் சாப்பிடறேன் என்றான் .ஹ நான் ஏதும் சாப்பட்ட வச்சு ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன் நீ சும்மா சாப்பிடு நான் வாடைகைல கழிச்சுகிறேன் என்றாள் சிரித்து கொண்டே .அதை கேட்ட விக்கி ஒகே என்ன வச்சு இருக்க என்றான் . சோறுதான் என்றாள் .என்னது சோறா என்றான் .

ஆமா நைட் சோறு சாப்பிட்டாதான் வயிறும் நிறையும் ,தூக்கமும் நல்லா வரும் என்றாள் .விக்கிக்கு அவள் சொன்னது எங்கயோ கேட்டது போல இருந்தது .ஆமாம் அவன் வீட்டில் இருந்த போது அவன் அம்மாவிடம் நைட் ஏன் சோறு வச்ச என்று திட்டிய போது அவன் அம்மா சொன்ன வார்த்தை சோறு சாப்பிட்டா நல்ல வயிறும் நிறையும் தூக்கமும் வரும் அதனால சாப்பிடு சாமி என்று அவன் அம்மா சொன்ன அதே வார்த்தைகள் .

விக்கி அதை நினைத்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் ,பின்னர் விக்கி விக்கி என்று சுவாதி கூப்பிடவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .ஏன் சோறு பிடிக்காதா என்றாள் .அவன் அப்படி இல்ல சோறு எங்க இருக்குன்னு சொல்லு நான் சாப்புடறேன் என்றான் .அந்த கிச்சன்ல ஹாட் பாக்ஸ்ல இருக்கு என்றாள் .பின் விக்கியாக போயி சோற்றை தட்டில் வைத்து சாப்பிட்டு கொண்டே கிச்சனுக்கு வந்தான் .

சுவாதி ஏதோ ஒரு ஆங்கில சேனல் வைத்து படம் பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் ஹாலுக்கு வந்து அவளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள சோபாவில் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் . பின்னர் அவனை பார்த்து சுவாதி கேட்டாள் விக்கி சாப்பாடு பரவலையா என கேட்டாள் .ம்ம் சாப்பிடும் போது பேச கூடாது .சாப்பிட்டு முடிச்சுட்டு சொல்றேன் என்றான் .பின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தான் . அவன் தட்டை பார்த்தாள் .அவன் வின்ஜனம் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .

டேய் வெஞ்சனம் வச்சு சாப்பிடுடா என்றாள் .வெஞ்சனமா அது எங்க இருக்கு என்று பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான் .இரு நானே போயி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு சுவாதி போயி அவனுக்கு வெஞ்சன்மும் ஹாட் பாக்ஸ் மற்றும் ரச பாத்திரமும் எடுத்து வந்து வைத்தாள் . பின் விக்கி அதை அவனே எடுத்து சாப்பிட்டான் .

யே இது என்ன காய் என்றான் .அவர காய் என்றாள் .காய் எல்லாம் நான் வீட்ல வச்சுருக்கவே இல்லையே எப்ப வாங்குன என கேட்டான் .நீ பப்க்கு போனப்ப வீட்ட பூட்டாம போயிட்ட நாந்தான் போயி சமையல் பண்றதுக்காக போயி வாங்கிட்டு வந்தேன் .ஒகே என்று சொல்லி விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான் .டேய் ரசம் இருக்கு எடுத்துக்கோ என்றாள். சரி என்று சொல்லி விட்டு நல்லா சாப்பிட்டான் .ஹாட் பாக்சில் இருந்த சோறு முழுதையும் காலி பண்ணினான்

சாப்பிட்டு முடித்து விட்டு வந்து உக்காந்தான் .என்ன சாப்பாடு ஓகேவா என்று கேட்டாள் .உண்மையை சொல்ல போனாள் விக்கி ரொம்ப நாள் கழித்து சோறே அன்றுதான் சாப்பிட்டு உள்ளான் .என்னதான் அவனிடிம் பணம் நிறைய இருந்தாலும் மும்பையில் அவன் எப்போதும் துரித உணவுகளான பிசாவும் பர்கரும் இல்லை பிரைட் ரைஸ்ம் தான் சாப்பிட்டு வந்து இருக்கிறான் .எப்போதுவாதுதான் வள்ளி வீட்டிற்கு போயி சோறு சாப்புடுவான் ,இன்று சுவாதி அவன் அம்மா வார்த்தைகளை மட்டும் அல்ல

ஒரு விளம்பரத்தில் காட்டுவது போல அவன் அம்மா சமையலையும் நினைவு படுத்தி விட்டாள் .அன்றுதான் ரொம்ப நாள் கழித்து அவன் வயிறு மட்டும் அல்ல மனதும் நிறைந்து விட்டது .இருந்தாலும் சுவாதியை நேரடியாக புகழ விக்கிக்கு மனசு வர வில்லை .பரவல ஏதோ இருக்கு என்றான் சாதாரணமாக .ஒ அவேறேஜ் ஆச்சும் இருந்துச்சா என கேட்டாள் .அடி பாவி சூப்பரா இருந்துச்சுடி என்று சொல்லாலம் என்று நினைத்தான் . ஆனால் ம்ம் ஆமா அவேறேஜா தான் இருந்துச்சு குறிப்பா ரசமும் அந்த காயும் ரொம்ப சுமார் என்றான் .ஆனால் விக்கி அந்த ரெண்டையும் தான் மிகவும் ரசித்து சாப்பிட்டு இருந்தான் .

சாரி விக்கி கொஞ்சம் அவசரத்துல சமைச்சது அதனால் தான் அப்படி இருக்கு நான் நாளைக்கு நல்லா பண்றேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹலோ நீ என்ன என் பொண்டாட்டியா ஏதோ ஒரு அவசரத்துக்கு சாப்பிட்டேன் டெய்லி லாம் சாப்பாடு போட்டு என்னையே மயக்கலாம்னு பாக்காத விக்கி சாப்பாடுக்கு எல்லாம் மயங்குற ஆள் இல்ல என்றான் .

ஐயோ இவர் பெரிய மன்மதன் இவர மயக்க பாக்குறோம் ஏதோ பாவம் ஒரு பிரண்டா நினைச்சு வீட்டு சாப்பாடு கொடுப்போம்ன்னு பாத்தா ரொம்பதான் பிகு பண்றே போடா எனக்கும் வேல மிச்சம் என்றாள் .

அவனும் போடி என்று சொல்லி விட்டு தூங்க போனான் .ஆனால் அவன் ரூமுக்கு போயி அப்பா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நல்லா சாப்பிட்டு இருக்கோம் .பரவல இம்சை நல்லாத்தான் சமைக்குது .என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஏப்பம் விட்டுவிட்டு தண்ணியை குடித்து விட்டு தூங்கினான் .ரொம்ப நாள் கழித்து அன்றுதான் நல்லாவும் தூங்கினான் .

அடுத்த நாள் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது .முந்தைய இரவில் நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தான் .பப்பில் அவன் செக்ஸ் ஆசைக்கு என்று ஒரு பெண் கிடைத்தும் அவளை தன் கொள்கைக்காக விட்டு கொடுத்தது வீட்டிற்கு வந்து சுவாதி சாப்பாட்டால் அவன் அம்மா அவனுக்கு ஞாபகம் வந்தது என்று எல்லாத்தையும் நினைத்து பார்த்தான் .

எல்லாவற்றிற்கும் மேலாக அன்று அவன் யார் கூடவும் உடலறுவு கொள்ளா விட்டாலும் நிம்மதியாக இரவு தூங்கியாதல் ஒரு வித சந்தோசத்தோடு எழுந்தான் .பின் சவரில் நன்கு பாட்டு பாடி கொண்டே குளித்து விட்டு உற்சாகத்தோடு ஆபிஸ் கிளம்பினான் .அப்போது அவன் கிளம்பும் போது சுவாதி கூப்பிட்டாள் . அதனால் எரிச்சலடைந்து ஏன் ஆபிஸ் போறப்ப கூப்பிடுர என்றான் ,அது வந்து என்று சுவாதி இழுத்தாள் .

இங்க பாரு நைட் நீ கொடுத்த சாப்பாடுக்காக எல்லாம் உன்னையே என் கார்ல உன் ஏப் எமுக்கு கொண்டு போயி விட முடியாது என்றான் ,நான் அத கேக்க வரலடா என்றான் .

பின்ன என்ன கேக்க வந்த என்றான் . அது எப்ப ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வருவ என கேட்டாள் .நீ என்ன என் பொண்டாட்டியா உனக்கு நான் எப்ப வருவேன்னு சொல்லி கிட்டு இருக்க என்றான் ,டேய் லூசு அதுக்கு இல்லடா வீட்டுக்கு கீ உன்கிட்ட மட்டும்தான் இருக்கு அதான் நீ வர டைத்துக்கு வீட்டுக்கு வர என்றாள் .

அதலாம் எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது .நீ முன்னாடி வந்த வெளிய உக்காந்து வெயிட் பண்ணு என்றான் .ஓகே விக்கி நான் வெயிட் பண்றேன் நீ ஆபிஸ் போ என்றாள் .

பின் இருவருமே கிளம்பி வெளியேறினார்கள் .விக்கி காரில் உக்காந்து இருந்தான் .சுவாதி நடந்து கொண்டு இருந்தான் .காரில் உக்காந்து யோசித்தான் சே நைட் அவ போட்ட சோறுக்காக வாச்சும் அவள திட்டாம இருந்து இருக்காலம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

உண்மையில் விக்கியிடிம் வீட்டிற்கு ரெண்டு கீ வைத்து இருந்தான் . ஆனால் வேண்டுமென்றே தான் அவன் சுவாதியிடம் பொய் சொல்லி அதை தரமால் வைத்து இருந்தான் .

பின்னர் காரை மெல்ல மூவ் பண்ணி அவ கிட்ட போயி நிப்பாட்டி ஆரன் அடித்தான் .பின் இவன் கார் கண்ணாடியை திறந்து அவளை கூப்பிட்டான் .இங்க பாரு என்னால உன்னையே கார்ல எல்லாம் ஏத்தி கொண்டு போயி விட முடியாது ஆனா ஸ்பேர் கீ தரேன் என்றான்

அவள் அடப்பாவி வச்சுகிட்டே தான் பொய் சொன்னாயா என்று நினைத்து கொண்டு அவனிடிம் தேங்க்ஸ் விக்கி என்று சும்மா சிரித்து கொண்டு வாங்கினாள் .இங்க பாரு வீட்டு சாவியவே கொடுத்துட்டேன்ன்னு என் கிட்ட வேற ஏதும் நீ எதிர் பாக்க கூடாது சரியா என்றான் .

சரி சரி உன்கிட்ட ஒன்னும் எதிர் பாக்கல நீ கிளம்பு என்றாள் .அவனும் கார் கண்ணாடியை ஏற்றி விட்டு வேகமாக போனான் .சுவாதியும் அவள் வழக்கம் போல ரோட்டிற்கு போயி ஆட்டோ பிடித்து போனாள் .

தொடரும்..

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்...
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#53
Lovely story updates.
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply
#54
மிகவும் அருமையான பதிவுகளுக்கு நன்றி நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#55
வாசகர்கள் அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...

தீப திருநாள் வாழ்த்துக்கள்.?

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி ரொம்ப உற்சாகத்தோடு ஆபிஸ் போனான் .பின் அன்று முழுதும் மிகவும் உற்சாகமாக வேலை பார்த்தான் .

அப்புறம் லஞ்ச் டைத்தின் போது மணி வருண் விக்கி எல்லாரும் ஒன்றாக சாப்பாடு வாங்க நின்ற போது மணி அவனிடிம் கேட்டான், என்னடா நாளை கழிச்சு திபாவளி என்ன பிளான்.

நான் என்ன ஃபேமிலி மேன் ஆ உங்களை மாதிரி கொண்டாட..
நிறைய சரக்க வாங்கி வச்சு
நைட் மோட்ட மாடிக்கு போய் வானத்துல வெடிக்கிற வெடியை பாத்துட்டு சரக்கு அடிக்க வேண்டியது தான்..

இல்ல எதும் தமிழ் பொண்ணுங்க மாட்டுன என்ஜாய் பண்ண வேண்டியது தான். என சொல்ல..

வருண் சொன்னா பாஸ் பேசாம எங்க விட்டுக்கு வாங்க நல்ல செலிப்பிரேட் பண்ணலாம் என்று சொல்ல...

மணி அதுல வேண்டா நீ என் விட்டுக்கு வாடா.. வள்ளி நல்ல சிக்கன் மட்டன் சமைப்பா.. ஒரு கட்டு கட்டிட்டு..
அப்படியே செலிப்பிரேட் பண்ணலாம் என்ன சொல்ற..

விக்கி சாப்பாடு என்றவுடன்..
(நேற்று சுவாதி சமையல் நியாபகம் வர அப்படியே அமர்ந்து இருக்க)

டேய் என்னடா யோசனை.

ஒன்னும் இல்ல என்று மழுப்பலாக சிரிக்க..

என்னடா ரெண்டு நாளா ரொம்ப பிரசாவும் சந்தோசமாவும் வேலை செய்யறியே என்ன விஷயம் என்றான் .அதாலம் ஒன்னும் இல்லடா என்றான் .

பின் மணி கேண்டின் சாப்பாடு வாங்க வர அதை பார்த்த விக்கி டேய் ஆமா நி‌‌ ஏண்டா இங்க எப்பயுமே வீட்டு சாப்பாடுதானே கொண்டு வருவ.

இன்னைக்கு என்ன புதுசா கேண்டின்ல வாங்கி சாப்புடுற ஏன் வள்ளிக்கு என்ன ஆச்சு என கேட்டான் .அது வள்ளிக்கு இப்ப 5 மாசம் ஆச்சா அதுனால அவள அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்னு சொல்லி நான்தான் சமைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ,அதான் கேண்டின் சாப்பாடு என்றான் .

அப்பறம் எப்படி நாளை கழிச்சு சமைப்பாங்க என வருண் கேக்க
அன்னைக்கு வேற வழி இல்ல சமைச்சு தான் ஆகணும்..

அப்புறம் வருண் விக்கிக்கு மணி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட ஆரம்பிக்க. விக்கி அதை எடுத்து வாயில் வைத்தான் . ஆனால் அதன் சுவை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .

காரணம் இரவு அவன் சாப்பிட்ட சுவாதியின் சாப்பாடு அந்த சாப்பாட்டின் ருசி இன்னும் அவன் நாவிலே இருந்தது .அதையும் இதையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு அந்த டேஸ்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அதனால இதை சாப்பிட்மாலே இருக்காலம் என்று நினைத்து கொண்டான் .

அவன் சாப்பாடு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை பார்த்து மணி கேட்டான் ஏண்டா சாப்பட்ட ஒதுக்கி வைக்கிறே என கேட்டான் . மணி நீ கேட்டலே ஏன்டா ரொம்ப பிரசா இருக்கேன்னு ஏன் தெரியுமா என கேட்டான் .

ஏன்டா என்றான் மணி நேத்து ஒரு இடத்துல சோறு சாப்பிட்டேன் . அப்படியே நம்ம தமிழ் நாட்டு சமையல் இன்னும் சொல்ல போனா எங்க அம்மா சமைச்ச மாதிரி இருந்துச்சு அந்த சாப்பாட சாப்பிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறும் நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு நிம்மதியா தூங்கினேன்.

அதான் நான் பிரசா இருக்க காரணம் . அதான் அப்படி ஒரு நல்ல சாப்பட சாப்பிட்டு இப்படி ஒரு சாப்பட சாப்புடுனுமான்னுதான் சாப்பிடல என்றான் விக்கி .ம்ம் அப்படி என்ன நல்லா இருந்துருக்க போகுது என் பொண்டாட்டி சமையல விடவா என்றான் மணி .

ம்ம் போடா நாந்தேன் உன் பொண்டாட்டி சமையல் எல்லாம் அதுல பாதி கூட வராது என்றான் விக்கி . அப்படி எங்க பாய் சாப்பிட்டிங்க ஹோட்டல் பேர சொல்லுங்க என்றான் வருண் .

ஆஹா கரெக்ட்டா மாட்டி விடரதுக்குன்னே வருது பாரு என்று நினைத்து கொண்டு அது ஒரு சின்ன ஹோட்டல்டா உனக்கு தெரியாது அத பத்தி என்றான் விக்கி .

அதை கேட்டு பாஸ் மும்பைல எனக்கு தெரியாத இடம் வேறயா இருக்க போகுது நீங்க எங்க சாப்பிடிங்க சொல்லுங்க என்றான் வருண் ,ஆமாடா சொல்றா ஒரு நாள் நானும் சாப்பிடனும் அப்படி என்ன அது என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு பாக்கணும் என்றான் மணி .

இவங்க கிட்ட சொல்லாமையே இருந்துருக்கலாம் போல என்று நினைத்து கொண்டு அது நான் போதையோடு ஏதோ ஒரு ரோட்டு கடைல சாப்பிட்டனா அதனால நான் இடத்த பாக்கல என்று சொல்லி சமாளித்தான் .

ஒ சரக்கு அடிச்சுட்டு சாப்பிட்டியா அதான் அப்படி என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு புகழுர என்றான் மணி .விக்கி விட்டு கொடுக்கமால் அதலாம் உன் பொண்டாட்டி சமயல விட நான் சாப்பிட்ட சாப்பாடு சூப்பர் தான் என்றான் விக்கி .

பின் இவங்கலொடு இருந்தால் மாட்டிகிருவோம் என்று நினைத்து கொண்டு நான் போயி பசிக்கு டீ மட்டும் சாப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி அங்கு இருந்து நழுவினான் .

பின் டீ குடித்துக்  கொண்டே சுவாதியின் சாப்பாட்டை நினைத்து பார்த்தான் . உண்மைலே அவ சமையல் நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தான் ,

அவன் சுவாதி சமையலை பற்றி நினைக்கும் போது சுவாதியும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தாள் .உடனே விக்கி அவனை அவனே திட்டி கொண்டான் .விக்கி வெட்டியா சாப்பாட்டுக்கு எல்லாம் அவ கிட்ட விழுந்துடாத என்று சொல்லி கொண்டான் .

பின் வருண் அவன் ஆபிஸ் ரூமிற்கு வந்தான் ,வந்து கதவை சாத்தி விட்டு பாஸ் சொல்லுங்க யார போட்டிங்க என்றான் வருண் .என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்றான் விக்கி .

இல்ல நைட் பப்ல ஒரு பொண்ணு கிடைச்சும் நீங்க விட்டுட்டு போயி காலைல இவளவு சந்தோசமா இருக்கிங்கன்னா பப் விட்டு போனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு பிகர கரெக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க அதான் இன்னைக்கு உங்க முகத்துல ஒரு சந்தோஷ கலை தெரியுது அதனால சொல்லுங்க யார போட்டிங்க என்றான் .

டேய் அதான் சொன்னேன்னே நேத்து எங்க ஊரு சமையல் சாப்பிட்டேன் அதான் சந்தோசமா இருக்கேன்னு என்றான் விக்கி .பாஸ் நீங்க அத மணிக்காக சொன்ன பொய் என்றான் வருண் .

இல்லடா அதான் உண்மை என்றான் விக்கி .பாஸ் சாப்பட்டுக்காக எல்லாம் யாரும் இவளவு சந்தோசமா இருக்க மாட்டாங்க சோ உணமைய சொல்லுங்க என்றான் .

அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி நீங்க உண்மை சொன்னாலும் ஓகே பொய் சொன்னாலும் ஓகே ஆனா நேத்து நீங்க பப் விட்டு சிங்களா போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு அதுனால திபாவளி க்கு 2 நாள் க்கு அப்பறம் என் தம்பி ஒரு சின்ன பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கான் .

நீங்க அதுக்கு வரிங்க அங்க வர எவளையச்சும் கரெக்ட் பண்ணி டபுளா போறீங்க சந்தோசமா இருக்கீங்க என்றான் வருண் .அங்க சிமி வர மாட்டாளா என்றான் விக்கி .அவ வருவா என்றான் வருண் .

டேய் அப்புறம் எப்படி நான் வர்றது என்றான் விக்கி .அதலாம் அவ கிட்ட நேத்து நைட் உங்க பாலிசி சொல்லி அவள சமாளிச்சேன் ஆனா பெட்லதான் அவள சமாளிக்க முடியல என்றான் வருண் .

என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .ஆமா நீங்க பாட்டுக்கு கொள்கை அது இதுன்னு சொல்லி அவள விட்டுட்டு போயிட்டிங்க அப்புறம் ரெண்டு பேரையும் நான் சமாளிக்க வேண்டியதா போச்சு என்றான் வருண் .

அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .எப்படி இருந்துச்சு த்ரீசம் என்றான் .ஐயோ இனிமேல் நான் என் லவ்வர் கூட மட்டும் செக்ஸ் வச்சுக்கிறேன் என்றான் வருண் . ஏன்டா என கேட்டான் விக்கி .

அயோ ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி போடறதுக்குள்ள உயிரே போயிடுச்சு உண்மைல நீங்க கிரேட் பாஸ் எப்படித்தான் பல பேர போடறிங்களோ என்றான் வருண் .அதை கேட்டு விக்கி ஒன்னும் சொல்லமால் மேலும் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .

அதன் பின் மாலை வழக்கம் போல ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போனான் .
திபாவளி 3 நாள் லிவ் எ‌ன்பதா‌ல் எவளையாது போட் டே ஆகணும் என்று விட்டுக்குள் நுழைய
அங்கு சுவாதி இவனுக்கு முன்பாக வந்து உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்ததும் ஹாய் என்றாள் .

ஆனால் பதிலுக்கு விக்கி ஒன்றும் சொல்லமால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு ரூமிற்கு போயி கதவை சாத்தினான் .பின் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தான் .மணி 7 ஆகி இருந்தது பின் சுவாதி வெளியே ஹாலில் இருப்பதை பார்த்து ஹே நான் வெளிய போறேன் .

எப்படியும் வரும் போது ஒரு பொன்னொடதான் வருவேன் . அதுனால ஹால்ல இருக்காம போயி உன் ரூம்ல இரு என்றான் .ஓகே டா நான் இப்பவே என் ரூமுக்குள்ள போயிக்கிறேன் .

நாளைக்கு காலைல வரைக்கும் வெளியே வர மாட்டேன் .நீயா வர சொல்றப்ப வரேன் என்றாள்.ரொம்ப நல்லது (ஒரு 3 நாள் நி‌‌ அப்படி தான் இருக்க வேண்டி வரும் என்று நினைத்து கொண்டு) நான் வரேன் என்றான் .

பின் விக்கி விட்டை விட்டு அவன் மெயின் ரோடு செல்லும் வழியிலேயே
கார் வீல் ஒரு மாதிரியா ஒலட்ட
என்ன என்று இறங்கி பார்க்க..
டயர் பஞ்சர் ஆக..

அவன் கடுப்பாகி டயர் ஐ உதைக்க..

பழைய அப்பார்ட்மெண்ட் கிட்ட மெக்கானிக் நம்பர் இருக்கும் இங்கு அறிமுகம் இல்லாததால் நடந்தே மெயின் ரோடு சென்று கடையை கண்டு பிடிக்கவே நேரமாகி விட்டது.
பின்பு வண்டி ரெடி ஆக 9.30 ஆகி விட்டது இதுக்கு மேல போய் என்ன பன்ன என்று சரக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு ரூமுக்கு திரும்பி சென்றான்.

போய் எல்லாத்தையும் ஹால் ல வச்சுட்டு சரக்கு அடிக்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வெளிய வந்து சுவாதி ரூம் கதவை தட்டி விட்டு கிச்சன் சென்றான்.

அவள் கதவை திறக்ககாமல் உள்ளேயே இருக்க..

அவன் சோஃபா உக்காந்து வெளிய வராததும் நல்லது தான் என்று டிவி போட்டு குடிக்க ஆரம்பிக்க..

சுவாதி மெதுவாக கதவை திறக்க..
அவன் ஹால்ல இருப்பதை பார்த்து.
அதுக்குள்ள வந்துட்ட..

ஆமா வண்டி பஞ்சர் அதான்..

Oohh அவன் சரக்கு அடிப்பதை பார்த்து சரி விக்கி நான்  துங்க போறேன்.
நீ என்ஜாய் பண்ணு..

விக்கி சிரித்து கொண்டே..
பயப்படத திட்டலாம் மாட்டேன்.

இல்ல விக்கி டையார்ட் a இருக்கு அதான்.. குட் நைட் என்று சொல்லி
துங்க சென்றுவிட்டாள்.

விக்கி குடித்து விட்டு அப்படியே துங்கி விட..

மறுநாள் சுவாதி எழுந்து சமைக்க தயாராகி கொண்டு இருக்க..

இவன் எழுந்ததும் குட் மார்னிங்..
காஃபி வேண்டுமா என...

சரி எண்பது போல அவன் தலையாட்டியபடி முகம் கழுவி வர..

அவள் டேபிள் ல இருக்கு காஃபி..

தாங்க்ஸ் ஃபார் தி காஃபி..

உனக்கும் லீவு தான் a சேர்த்து சமைக்கவா..

அவன் யோசிக்க எப்படியும் ஈவ் தான் வெளிய போகன்னு அதுனால
சரி என்று சொல்ல..

அவளும் சமைத்து விட்டு குளிக்க சென்று விட்டாள்..

பின் வெளியே வந்து இருவரும் சாப்பிட...

அப்பறம் விக்கி நாளைக்கு தீபாவளி என்ன ஸ்பெஷல்...

ஒன்னும் இல்ல...

என்னடா இப்படி சொல்ற..
எனக்கு என்ன இன்னிக்கி சாயங்காலம் எதாச்சும் ஒரு தமிழ் பொண்ண கரெக்ட் பண்ணா திபாவளி சிறப்பா முடிஞ்சிடும் என்று சொல்ல..

(இவன் எந்த ஜென்மத்திலும் திருந்த போறது இல்ல என்று எண்ணிய படி)
ம்ம் சிறப்பு...

கூட்டிட்டு வரும்போது மறந்துராம மெசேஜ் மட்டும் பண்ணிடு...

ம்ம்ம் சாப்பாடு எப்படி..

நன்றாக இருந்தும்..
ஓகே பரவாயில்லை..
என்று கூறினான்.

பின் நைட் ஃபுல் லா என்ஜாய் பன்னனும் நா போய் துங்கபோறேன் என்று டேபிள் மேல் இருந்த சரக்கை எடுத்து ஒரு ஸ்மால் போட்டு ஓகே
பாத்துக்க..

என்று அவன் ரூம் சென்றான்.

தொடரும்...

வாசகர்கள் அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...

தீப திருநாள் வாழ்த்துக்கள்.?


கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#56
SUPERBBBBBBB
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
#57
Great update.
Wish You and Family a Happy Deepawali.
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#58
அருமை

Happy Diwali brother..
And all..

இன்னிக்கு எதும் update வரும் pola
[+] 1 user Likes Maaran04's post
Like Reply
#59
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
வாசகர்கள் அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...

தீப திருநாள் வாழ்த்துக்கள்.?

பின்பு மாலை எழுந்து குளித்து விட்டு நன்றாக டிரஸ் போட்டு

கண்ணாடியை பார்த்த படி

"விக்கி இன்னிக்கு போற 2 வருசம் முன்ன ஒரு தமிழ் ஃபிகர் a கரெக்ட் பன்னி போட்ட மாதிரி
இ‌ந்த தீபாவளியை தெறிக்க விடுற"

என்று தனக்கு தானே அறிவுரை செல்லியபடி வெளிய வந்து பாக்க
சுவாதி இல்லை..

இவ முகத்தை பாத்துட்டு போனா ஒருத்தியும் சிக்கமாட்டுது.
என்று எண்ணிய படி கார் எடுத்து தெருவை தாண்டிய பின்பு..

சுவாதி க்கு மெசேஜ் பண்ணினா நான் வரப்ப மெசேஜ் பண்றேன்..

நீ ரூமுக்குள் இருந்துக என..

அவள் கிளம்பிட்டயா..?
ஓகே ஓகே.  நான் வெளிய வர மாட்டேன் என்று அனுப்பினாள்.

பின் அவன் வழக்கமாக செல்லும் பப் புக்கு சென்றும் கார் பார்க் பன்ன
வழக்கத்தை விட 2-3 மடங்கு கூட்டம் இருந்தது..

இ‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் தமிழ் பிகர் எப்படி கண்டு பிடிக்க.....

விக்கி விட்டுடாத
விடா முயற்சி
விஸ்வரூப வெற்றி...
என்று எண்ணிய படி உள்ளே நுழைய..

அங்கு அனைவரும் குதித்து ஆடிய படி இருக்க... விக்கி அவர்கள் மத்தியில் குதித்து ஆடிய படி பார் இருக்கு இடத்திற்கு வர...

பார் அடெண்டர் என்ன சர் ஆள வீக் எண்டு ல முன்ன மாதிரி பாக்க முடியல என்று சொல்ல..

ஒரு வேல விசயமா வெளியூர் போய் இருந்தேன் அதான்..

அதான் a பாத்தேன் உள்ளூர் ல இருந்தா வராமல இருந்து இருப்பிங்க

சரக்கை அடித்து கொண்டே...

நோட்டம் விட..

இம்முறை சுவாதி என் ரூம் மேட் என்று பொய் சொல்லியாச்சும்.

பிரச்சனை இல்லாம பாத்துக்கணும்..

அப்படி எண்ணிய படி இருக்க ஒரு
பெண் தென்னிந்திய பெண் போல இருக்க அவளது பெண் தோழிகளுடன் ஆடி கொண்டு இருக்க.

அதில் நால்வரில் மூவர் அப்படி இருக்க..

ட்ரை பண்ணலாம் என்று.. எழுந்து
அருகில் நின்று மெதுவாக சரக்கு கிலாஸ் கையில் வைத்து குடித்த படி ஆடிக்கொண்டு இருக்க..

அவ்வப்போது அவர்கள் மேல் இடிப்பதும் விலகுவது என்று இருக்க..

பப் இல் அனைத்து மொழியில் உள்ள தீபாவளி குத்து பாடல்கள் போட்டுட்டு இருக்க..

அப்போ அவர்கள் அனைவரும் விடாது.. இங்கிலீஷ் அண்ட் இந்தி இல் பேசிய படி இருக்க..

அதில் ஒருத்தி என்னை பார்த்து சிரித்தபடி ஆடி கொண்டு இருக்க நான்

டான்ஸ் ஆட கையை நீட்ட அவளும் என் கைய புடிச்சு ஆட..

ஆடிய படி அவள் இடுப்பு முதுகு என்று பட்டும் படாமல் தொட்டபடி இருக்க.
அப்போது அவளிடம் பேச இவங்க எல்லாம் உங்க ஃபிரண்ட்ஸ் a என..
இந்தியில் கேக்க..

ஆம் என்று பதில் அளித்தாள்..

நிங்க பாத்தா சவுத் இந்தியன் கேர்ள் மாதிரியே இருக்கிங்கன்னு சொல்ல..

அவள் சிரித்தபடி நான் நார்த் இந்தியன் கேர்ள்தா லுக் ல அப்படி இருக்கும்..

(விக்கி அழகா தான் இருக்கா பேசாமல் இவளயே இன்னக்கி ட்ரை பண்ணலாம் ஆ என்று எண்ணிய படி
இன்னு எவ்ளோ பேர் இருக்காங்க வேற எங்கயும் ட்ரை பண்ணலாம்)

இது எதோ கலப்படம் (south + north) போல என்று நினைத்து கொண்டு அவளை விட்டு விலகி மிண்டும் பார் க்கு  செல்ல..

பாம்பே ல தமிழ் பொண்ணுங்க இல்லவே போல என்று பார் அடெண்டரிடம் சொல்ல..

அதுக்கு ஒரு வழி இருக்கு சார்.. என
என்னயா..

என் கூட வாங்க என்று DJ இடம் அழைத்து சென்று..
இப்போ தமிழ் பாட்டு போட சொல்றேன் அதுக்கு ரீஆக்ஷன் பண்றவங்க எல்லாம் தமிழ் மக்கள்..
ஓகே வா என்று சொல்ல
அப்படியே அவனை அனைத்து சூப்பர் ஐடியா பிரதர்..
என்று சொல்ல அவன்

"தீபாவளி தல தீபாவளி" பாட்ட போட..

சிலர் அந்த மியூசிக் கேட்ட உடனே
யே என்று கத்தியா படி ஆட...

பாட்டு ஆரம்பிக்கும் முன் அனைவரும் ஒன்றாக கூடி ஆரம்பிக்க..

நானும் அவர்களுடன் சேர்ந்து ஆட..
அதில் இருக்கும் அனைவரயும் நோட்டம் விட்ட படி அடி முடித்து விட்டு
கொண்டு இருக்க ஒரு பெண் தனியாக என்னை போல் ஆடி கொண்டு இருக்க நான் அவள் அருகில் சென்று அவள் மேல் தடவிய படி ஆட முதலில் கண்டு கொள்லாம இருந்தவ பின் என்ன நோக்கி திரும்ப பாட்டு மாறியது..

நான் அவளிடம் நன்றக ஆடுறிங்க என்று சொல்ல...

அவள் தாங்க்ஸ்
சால்வி டான்ஸ்..
என்று  கேக்க

அவள் ம்ம்ம் யா.. என்று கூற..

ஒரு இந்தி பாட்டு பீட் அதிகமாக உள்ள பாட்டு மாற அவள் நன்றாக நான் குதித்து ஆட அவளின் முலை மேலும் கீழுமாக ஏறி இறங்க அவள் கைகளை பற்றிய படி ஆட நான் அவளது மேலாக தடவிய படி அவள் அங்கங்களை தடவி கொண்டு இருக்க...

அவள் அல்றேஅடி சரக்கு அடித்து போதை யில் ஆடி கொண்டு இருக்க..

மெல்ல அவளிடம் நிங்க பாம்பே or தமிழ்நாடு என..

பாம்பே ல இருக்க தமிழ் பொண்ணு என்று சொல்லி கொண்டு இருக்க (ஆக குட்டி சிக்கிருச்சு என்று எண்ணி)
அவள் இடுப்பை பிடுத்து கொண்டு..

ட்ரிங்ஸ் சாப்பிடலாம் அ
ம்ம் என்று சொல்ல..

சுயர் என்று என்னுடன் வர..

நான் விக்கி நிங்க..
நான் ஜெயஸ்ரீ.
சரக்கு அடித்த படி
இங்க பாம்பேல என்ன பண்றிங்க..

நான் சென்னை ல தான் வேர் க் பண்றேன். அடிக்கடி ப்ராஜக்ட் விஷயமாக பாம்பே வருவேன்..

இதுலாம் நான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணது இல்ல அதா நான் பாட்டுக்கு தனியா ஆடிட்டு இருந்தேன்..

தனியா வா வந்த..

இல்ல ஃபிரண்ட்ஸ்  மேல இருக்காங்க என்று சொல்ல..

Ohh (இவள் அதுக்கு சரி பட்டு வருவாளா என்று யோசிக்க..)

வாங்க டான்ஸ் ஆடலாம் என்று விக்கியை இழுக்க..

அவளும் போதையில் என்னுடன் நன்றாக. நெருக்கமாக ஆட அவளை இறுக்கி அணைத்த படி ஆடி கொண்டு இருக்க அவளது முலை ஸ்பரிசம்
என்னுள் எதோ செய்து கொண்டு இருக்க...

நான் மறு கைய எடுத்து அவள் புட்டதில் வைத்து என் பக்கமாக நெருக்க அவளும் எதிர்ப்பு எதும் இல்லாது காமமாக சிரிக்க..

நான் உனக்கு ஓகே ஆ..
என்று கேக்க..

என்ன சொல்லன்னு தெரியல...

என் ரூம் க்கு போகலாமா...
சிறிது யோசிக்க பின் போகலாம்
என்றாள்.

நான் கடவுள் இருக்கான் விக்கி என்று நினைத்துக் கொண்டு..

பார் க்கு வந்து நாளைக்கு ஃப்ரீ தான் a என ம்ம்ம் யென் கேக்குற..

இல்ல நான் சரக்கு செத்து வாங்க போறேன்.. உனக்கும் வாங்க வா
ம்ம்  ஒட்கா வாங்குங்க என்று சொல்ல
அவள் இறுதியாக 2 ரவுண்ட் சரக்கை ஒரே இதகாக அடிக்க..

ம்ம் பப் விட்டு வெளியே வர அவள் நண்பர்கள் க்கு கால் செய்து நான் நாளைக்கு ரூம் வருவதாக சொல்லிவிட்டு வைக்க..

நான் சுவாதிக்கு மெசேஜ் I am on the way to home with girl என அனுப்பினேன்.

வெளியே வந்து இவளிடம் சுவாதி பத்தி சொல்லிரு என எண்ணிய படி..
அவளிடம்

என் ரூம் க்கு ஒரு ப்ராப்ளம் இருக்கு

என்ன எண்பது போல் பாக்க
நான் இருக்கது ஒரு வீடு என் கூட ஒரு பொண்ணு இன்னொரு ரூம் ல
ரூம் மென்ட் ஆ இருக்கா..
அவ்ளோ தான் வேற ஒன்னும் இல்ல..

அவ நம்மள டிஸ்டர்ப் பண்ணவும் மட்டா என
ந‌ன்றாக போதையில் இருக்க எனக்கு ஓகே என்றாள்..

சரி என்று வண்டிய எடுத்து கொண்டு வருகையில் அவள் ஒரு பியர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

ம்ம் நிறைய குடிப்பியா என..

வெளியூர் நாலா நிறைய உள்ளூர் நா கம்மி தான் என்று சொல்லியபடி அடித்து முடித்தாள்..

விட்டுக்கு வந்து கார் நிப்பாட்டி அவளை பார்க்க நன்றாக துங்கி கொண்டு இருக்க..

போச்சு டா..
என்று கிலே இறங்கி அவள் கதவை திறக்க அவளை எழுப்ப அவள் கண்ணை திறக்க முடியாம‌ல் சிரமப்பட்டு கொண்டு இருந்தால்...

அவளை துக்கி கொண்டு விட்டு கதவை திறக்க

ஹால்ல யாரும் இல்லை சோபா மேல் போட்டு என்ன பன்ன இவள வச்சு..

வண்டியில் இருந்து சரக்கை எடுத்து வந்து பிரிட்ஜ் ல் வைத்து விட்டு ஒரு பியர் எடுத்து டிவி ஆன் பன்னி பாத்துட்டு இருக்க..

சுவாதி டிவி ஓடுவது தெரிந்தும்.
அவனுக்கு எந்த இடைஞ்சல் குடுக்க வேண்டாமென்று ரூம் உள்ளேயே இருந்து விட்டாள்..

காலையில் எழுந்து வெளியே வர
ஜெயஸ்ரீ இன்னும் சோபா ல படுத்து இருக்க...

விக்கியும் சிங்கிள் சோபா ல அமர்ந்த படியே துங்கி கொண்டு இருக்க..

நம்ம வெளிய வந்தா கத்துவாநோ

என்று எண்ணிய படி
ரூம் உள்ளே சென்று விக்கி க்கு கால் பண்ணினா..

அவன் ஃபோன் எடுத்துட்டு..
அடென் பண்ணாம வெளிய தான் இருக்கேன் சுவாதி வா என்று அவளுக்கு கேக்கும் படி கத்த...

அவள் வெளியே வந்து அவனை மெதுவாக எழுப்பி டேய் யாருடா இது
நைட் ஒன்னும் பண்ணலையா என..

இதுவா அத ஏன் கேக்குற

எல்லாம் என் தலையெழுத்து என்று
(நடந்ததை கூற..)

ஜெயஸ்ரீ மெதுவாக இவர்கள் பேசியது
கேட்டு அசைய ஆரம்பித்தாள்..

எழுந்துடா போல நான் வேனா உள்ள போய்ட வா..

வேண்டாம் சுவாதி அவளுக்கு உன்ன பத்தி சொல்லிடென். நி என் ரூம் மென்ட்ன்னு..

இவள எப்படி அனுப்புவது என்று தெரியல...

(சுவாதி மனத்தின் உள்ள நீ ஓகே சொன்னா உன் சோல்மேட் ஆ கூட இருப்பேன்.)

ஜெயஸ்ரீ எழுந்து கண்கள் விரிய பயத்துடன்... படக் என எழுந்து உட்கார்ந்து விக்கி மற்றும் சுவாதி யை பார்த்து யார் நிங்க என்று கேட்க..

விக்கி நினைச்சேன்...

சுவாதி குறுக்கிட்டு..

நேத்து நடந்தது எதும் நியாபகம் இல்லையா என்று கேக்க..

இல்ல எனக்கு லிமிட் தாண்டினால் எதும் நியாபகம் இருக்காது..
நான் எப்படி இங்க வந்தேன்..

சுவாதி அவளா ஒரு கதைய சொல ஆரம்பிச்சுடா..

நேத்து நானும் இவரும் நைட் வரும் போது ஒரு ஆள் உன் கூட இருந்து 2 பேரும் சண்ட போட்டு இருந்திங்க அந்த ஆள் தப்பா நடந்துக்க பாத்தா..

நாங்க அவன்ட இருந்து காப்பாற்றி இங்க கொண்டு வந்துட்டோம் என்று சொல்ல..

விக்கி சுவாதி யை பார்த்து பலே என்பது போல சைகை காட்ட..

சுவாதி அவள் அரு‌கி‌ல் அமர்ந்து நி‌‌ எப்படி இங்க என்று சொல் ல

அவள் இருக்கும் ஹோட்டல் சொல்ல வாங்க இந்த பொண்ண அவங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட விட்டு விட்டு வரலாம் என்று சொல்ல..

Cab புக் பன்னி அனுப்பலாம் ஆ..
என்றும் விக்கி கேக்க ஏற்கனவே அவ பயந்த மாதிரி இருக்கா என்று சொல்ல...

அதும் சரி தான் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று சம்மதிக்க..

சுவாதி இருங்க 3 பேருக்கும் காஃபி போடுற என்று எழுந்து கிச்சன் சென்றாள்..

ஜெயஸ்ரீ ஒரு வித பயத்துடன் இருக்க..
விக்கி அவளிடம் எதும் பேசாமல் இருக்க..

ஜெயஸ்ரீ  ஃபோன் அடித்தது...
அது அவள் பேன்ட் பாக்கெட் ல் இருக்க எடுத்து பார்த்தாள் அவளது பாய் பிரண்ட் கால் பண்ணினா..

அவ எடுத்து நடந்ததை கூற...
ஒரு "அக்காவும் அவங்க ஹஸ்பண்ட்" தான் என்ன காப்பாத்தி அவங்க விட்டுள்ல வச்சு இருக்காங்க என்று சொல்ல

கிச்சன் ல இருந்து சுவாதி சிரித்த படியே வந்து அமர்ந்தாள்..
விக்கி என்ன என்பது போல் பார்க்க
ஒண்ணுமில்ல என்று சொன்ன..

ஜெயஸ்ரீ பேசி முடிக்க..
இந்தா காஃபி எடுத்துக்க என்று சொல்லி கொடுத்து விட்டு...
பின்பு கிளம்பி அந்த பெண் இருக்கும் ஹோட்டல் ல இறக்கி விட்டாங்க..

அவ கார் ல போகும் போது

அக்கா நிங்க ரெம்ப லக்கி..
என்று சொல்ல..
ஏண் ம்மா அப்படி சொல்ல..

உங்க ஹஸ்பண்ட் நிங்க எது சொன்னாலும் மறுத்து பேசவே மாட்டாரு போல என்று சொல்ல..

அவ மிரர் ல விலக்கிய பாக்க அவன் சுவாதி யை பார்த்து இருவரும் புன்னகையுடன்.. இருக்க..

அக்கா உங்களுக்கு எத்தனாவது மாசம்..

சுவாதி  4 என்றாள்..

பின்பு அந்த ஹோட்டல் வர அவரது நண்பர்கள் வந்தவுடன்
"ஹாப்பி தீபாவளி டூ ஆல்" என சொல்லிவிட்டு கிளம்பினர்.
(விக்கிக்கு அப்போ தான் நினைவு வர)  

நானும் சுவாதி யும் கார்ல்ல ஏறி
கொஞ்ச துரம் வந்த பின்பு..

அப்பாடா என்று விக்கி சொல்ல..

ரெம்ப தாங்க்ஸ் சுவாதி இத சால்வ் பன்னதுக்கு என்று சொல்ல..

இதுல என்ன..
அப்புறம் " ஹாப்பி தீபாவளி" டூ யூ
என
விக்கியும் " ஹாப்பி தீபாவளி" என்று சொல்ல..


அந்த பொண்ணு சொன்னது சரி தான் இன்னிக்கு நீ ரெம்ப பேசவே இல்லையா..
ஆமா என்ன பன்ன ன்னு தெரியல..
நீ ஒன்னு பன்ன அப்படியே நானும் விட்டு விட்டேன்..
எல்லாம் நல்ல படியாக முடிஞ்சி.
பின் சுவாதி பின்னாடி அமர்ந்து சிரிப்பத பார்த்த விக்கி..

நீ ஏன் சிரிக்கிற என்று தெரிதுடி ..
நம்மள புருஷன் பெண்டாட்டி ன்னு அந்த பொண்ணு சொன்னது நினைச்சு தான் a..

எ‌ன்று சொல்ல அதுவும் தான்..
பின்ன வேற என்ன...

அந்த பொண்ணுக்கும் ஆள் இருக்கு
நீ போட்டு இருந்தா மறுபடியும்
பீல் பண்ணிட்டு இருப்ப என்று சொல்லி சிரித்தாள்..
விக்கி ஆமால நல்ல வேளை..

வழியில் சிக்கன் கடைய பார்த்து விக்கி விக்கி ஒரு 10 மினிட்ஸ் கார் ஸ்டாப் பண்ணேன் பிளீஸ்..
ஏண்டி சிக்கன் மட்டும் வாங்கிட்டு வந்துறேன்.
பிரியாணி செய்யணும் ஆசை...
ஓகே என்று ஒரு ஓரமாக நிப்பா‌ட்ட‌..

அவள் இறங்கி கடைக்கு அருகில் செல்ல ரெம்ப கூட்டம் இருக்க அப்போது தான் பணம் கொண்டு வரல என்று தெரிந்து..
மிண்டும் கார் க்கு திரும்பினா..
விக்கி என்ன எண்பது போல் பாக்க..
பணம் கொண்டு வரல பர்ஸ் வீட்டுல இருக்கு கூட்டம் நிறைய இருக்கு..

பின் விக்கி நீ கார் ல இரு நான் வாங்கிட்டு வரேன்..

என்று கடையை நோக்கி நடந்தான்..

தொடரும்..

வாசகர்கள் அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...

தீப திருநாள் வாழ்த்துக்கள்... 

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
[+] 3 users Like Rajiss's post
Like Reply
#60
கலக்கல் பதிவு நண்பரே
தீபாவளி வாழ்த்துக்கள்
[+] 1 user Likes karimeduramu's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)