Misc. Erotica "ஏன் இந்த ம(த)யக்கம்?" (Completed)
#21
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. அடுத்த பகுதி நாளை மதியத்திற்குள் உங்கள் பார்வைக்கு..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

நான் குளிரில் நடுங்கி கொண்டிருக்க அதை பார்த்து அவன் என்னை நோக்கி நெருங்கி வந்தான். அவன் என்னை நோக்கி வரும் போது ஒருபக்கம் அவன் மீதிருக்கும் மயக்கத்தில் சந்தோஷமாகவும் மறுபக்கம் தயக்கத்தினால் ஏதாவது செய்துவிடுவானோ என கொஞ்சம் பயமாகவும் இருந்தது. என் பக்கத்தில் வந்து அவன் போட்டியிருந்த ரெயின்கோர்ட்டை கலட்டி என் கையை பிடித்து முன்னால் இழுத்து போர்த்திவிட்டான்.

அந்த மழையிலும் தொடர்ந்து அடிக்கும் காற்றினால் ஏற்பட்ட குளிரிலும் அவன் விட்ட மூச்சுக்காற்று என் உடம்பில் படாமல் இருக்கவில்லை. அவனின் மூச்சுக்காற்று என் பரிசத்தில் பட்டதும் அதுவரை கொஞ்சம் அடங்கியிருந்த என் காம உணர்ச்சிகள் மீண்டும் கிளர்ச்சியடைந்து எழ ஆரம்பித்தன. இது மாதிரி என் பரிசத்தை அவனின் கைகள் ஏற்கெனவே ஒருமுறை தொட்டு இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு அவன் அந்த அபார்ட்மெண்டிற்கு வந்து குடியேறிய சில தினங்கள் தான் ஆகியிருந்தன. அவன் மட்டும் மொட்டைமாடியில் நின்று காலையில் ஏதோ எக்ஸசைஸ் பண்ணிட்டு இருந்தான். நான் வருவதை  கூட கவனிக்காமல் அவனுடைய வேலையிலே கவனமாக இருந்தான். ஆனால் நானோ அவனையே பார்த்து ரசித்துக் கொண்டே ஏதோ ஒரு மயக்கத்தில் அவன் மீது போய் மோதி எங்களின் இருவரின் கால்களும் பிண்ணி கீழ விழபோகும் போது சரியாக திரும்பி என் இடுப்பில் ஒருகையும் தோள்பட்டையில் ஒருகை வைத்து பிடித்து என்னை விழாமல் தடுத்து நிறுத்தினான்.

என்னை அவன் அப்போது தொட்ட போது எந்த மாதிரி ஓர் உணர்வை உணர்ந்தேனோ அதே உணர்வு இன்று என் பரிசத்தை தொட்டு ரெயின்கோர்ட் போட்டுவிடும் போது உணர்ந்தேன்.. அவனாக என்னை விட்டு விலகி செல்லும் வரை அந்த உணர்விலே மிதந்து கொண்டிருந்தேன். அவன் விலகி செல்லும் வரை அவனுடைய மூச்சுக்காற்றை நானும் சுவாசித்துக் கொண்டு தான் இருந்தேன்.

அதே மாதிரி எனக்கு எதிரில் நின்ற அவனும் மழையில் நனைந்த என் பரிசத்தின் மேல் ஒருவித மயக்கத்தில் இருக்கிறான் என்பதை அவனுடையை பார்வை தெளிவாக காட்டியது. ஆனால் என்னை போன்றே ஒரு சிறு தயக்கம் அவனுக்குள்ளும் இருக்கிறது. அவன் விலகும் சில வினாடிகள் வரை உணர்ச்சிகள் விட்ட ஆழான சூடான மூச்சுக்காற்றை அவனும் சுவாசித்து இருக்கிறான். அதனால் உடனே என்னை விட்டு விலகாமல் சில வினாடிகள் இருந்து மெதுவாக என்னை விட்டு விலகியிருக்கிறான்.

இப்படி இருவருக்குள்ளும் ஒருவித மயக்கமும் தயக்கமும் அனைத்திற்கும் இருந்துக் கொண்டே இருந்தது. இருவரின் மன ஓட்டங்கள், எண்ணங்கள் ஒன்றாக இருந்தாலும் தயக்கத்தை யார் முதலில் உடைத்து தாகத்தை தீர்ப்பது என ஒரு குழப்பத்துடன் தயக்கமும் இருந்தது. பின் அவன் தான் எங்களுக்குள்ள இருந்த தயக்கத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.. அவனை போன்றே அவனின் குரலும் இனிமையாக இருந்தது.

"நீங்க அக்ஸரா அபார்மெண்ட்ல குடியிருக்கீங்க தான.. பி பிளாக் 204ல" ஒருவித தயக்கத்தோடு கேட்க

"ம்ம். ஆமா.. அங்க தான் குடியிருக்கேன்" தயக்கத்தோடு பதிலளித்தேன்..

"மழைல எங்க போய்ட்டு வரீங்க.. அதுவும் இப்படி மழை பெஞ்சிட்டு இருக்கும் போது  லக்கேஜ் வேற அதிகமாக இருக்கு." அக்கறையோடு கேட்க

"இல்ல.. என் ஹஸ்பண்ட் வேலை விசயமா வெளியூர் போயிருக்காங்க. அதான் என் அம்மாவ போய் ஒரு எட்டு பாத்திட்டு வந்திடலாம் ஒரு வாரத்துக்கு முன்னோடியே போய்ட்டேன். இன்னிக்கு ஹஸ்பண்ட் ஊர்ல இருந்து வந்திடுவேன் சொன்னதுனால ஊர்ல இருந்து திரும்பினேன். வர வழியில மழையினால பஸ் லேட்.. இங்கையும் விடாம மழை பெய்திட்டே இருந்திருக்கு.. அது தெரியாம கிளம்பி வந்திட்டேன்.." ஏதோ குறுட்டு தைரியத்தில் அவன் கேட்க கேள்விக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை குடுத்துவிட்டேன்.

நான் சொன்னதையும் கண் இமைக்காமல் சிரித்த முகத்துடன் அவனும் ரசித்து கேட்டான். அவன் என்னையும் நான் பேசியதை ரசிக்கிறான் என்பதே எனக்கு ஒருவித வார்த்தையால் சொல்லிவிட முடியாத மயக்கத்தையும், கிறக்கத்தையும் தந்தது. அந்த உணர்வே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை உயிர்த்தெழ செய்தது.. அவனுடைய இந்த பேச்சு தொடருமா என தெரியவில்லை. தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.. நான் நினைத்த மாதிரி அவன் மீண்டும் பேச்சை தொடங்கினான்.. ஆனால் ஒரு தயக்கம் இன்னும் அவனிடம் இருப்பது தெளிவாக அவன் அணுகுமுறையில் இருந்து தெரிந்தது.

"இது தான் தாம்பரம் போறதுக்கு லாஸ்ட் டிரெயின் டிக்கெட் எடுக்கும் போது சொன்னாங்க.."

"ம்ம் ஆமா.. நா டிக்கெட் எடுத்திட்டு வந்து நின்னுட்டு இருந்தேன்.. அப்பதான் அனொன்ஸ் பண்ணாங்க.. கொஞ்ச நேரத்துல உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது. பஸ் இன்னும் லேட்டா வந்து இருந்தா என்ன பண்ணியிருப்பேன் எனக்கே தெரியல."

"ஏன் டிரெயின் இல்லைனா என்ன பஸ் இல்ல கேப் புக் பண்ணி போக வேண்டிதான"

"டிரெயின் போனாலே தாம்பரம் போய் சேர  ஒன் ஹவர் மேல ஆகும். பஸ் இல்ல கேப் புக் பண்ணி இந்த ரோட் டிராபிக்ல போய் சேர இன்னும் ஒன் ஹவர் ஆனா கூட ஆச்சரியம் பட ஒன்னுமில்ல.."

"ம்ம். ஆமா.. அதுவும் உண்மை தான்."

"பஸ்ல பிரச்சனை இல்ல. கேப் புக் பண்ணி தனியா போனதில்ல.. எனக்கு தனியா இருக்கனும், தனியா டிராவல் பண்ணனும்னாலே பயம்.. அதான் டிரெயின் போயிடலாம் முடிவு பண்ணி வந்தேன் அண்ட் மொபைல் எல்லாம் பேக் உள்ள இருக்கு. அதலாம் இப்படி பெய்திட்டு இருக்க மழைல எடுத்து கேப் புக் பண்ணி லக்கேஜ் வச்சிட்டு போறது முடியாத ஒன்னு.."

"ம்ம்.. கரெக்ட் தான்.."

"கேப் இந்த மழைல புக் பண்ணினா கிடைக்கும் கன்பார்ம் சொல்ல முடியாது.."

"ம்ம். எஸ்.. நீங்க சொல்ற மாதிரி கேப் கரைட் டைம் கிடைக்கலனா கஷ்டம் தான்..

அவன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பலநாட்கள் பார்த்து நன்றாக பழகிவள் போல் பேசி பதிலளித்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. அவனிடம் இந்த பயணத்தில் இன்னும் பேச்சை வளர்க்க விரும்பினேன். அவனுடன் பேசுவது ஏதோ புதுவித வித்தியாசமான உணர்வை தந்தது.. இதற்கு முன் கிராமத்தில் இருந்த போது தெரிந்த ஆணிடம் பேசி பழகியிருக்கிறேன்.

ஆனால் இவனை பார்த்ததிலிருந்து ஒருவித மயக்கம், பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு தயக்கம், எல்லாம் இருந்தாலும் அந்த தயக்கம் கூட எனக்கு ஒருவித ஆர்வமான மயக்கத்தையே அவன் மீது தந்தது. அது அவன் மீதான காதலா? இல்லை எந்த பெண்ணையும் வசிகரிக்கும் தோற்ற உடலமைப்பின் மீதான ஒரு காம மயக்கமா? என தெரியவில்லை. எது எப்படியோ இன்னும் இருக்கும் சில நிமிடங்களை வீணாக்காமல் அவனுடன் பேசி அவனின் பேச்சை கேட்க விரும்பினேன். இவை எல்லாவற்றையும் சில நொடி பொழுதில் என் மனதிலே நினைத்து முடித்தேன்..

"இங்க டிரெயின் டிக்கெட் எடுத்திட்டு வந்து நிக்கும் போது என் பக்கத்தில தெரிஞ்ச ஆள் யாரும் இல்லாதது கூட கொஞ்சம் பயமா தான் இருந்தது.."

"ஓகோ.. தென்..?"

"உன்ன.. இல்ல.. உங்கள நடந்து வரும் போது பாத்தேன்." மறுபடியும் தயக்கத்தோடு சொல்ல

"ஓ.. ஐ..சி.." இருவரிடமும் சில வினாடிகள் அமைதி நிலவியது.

"ஆனா அது நீ... இல்ல நீங்க தானா சரியா எனக்கு தெரியல. அதான் அமைதியா கூப்பிடமா இருந்திட்டேன்."

"ம்ம். இட்ஸ் ஓகே.."

"பின்ன தான் தெரிஞ்சுது அது நீ.. நீங்க தான்.."

"நான் தான் தெரிஞ்சுதும் தென் பேசியிருக்கலாமே?" என ஒரு தயக்கத்தோடு சொல்ல

"ம்ம். பேசியிருக்கலாம் தான். ஆனா நானா வந்து எப்படி என்ன பேசுறது தெரியாம தான் பேசாம இருந்திட்டேன்."

"எஸ்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. நாம முன்ன பின்ன பேசினது கூட இல்ல.. உங்களோட தயக்கம் கரெக்ட் தான்."

"ம்ம். ஆமா நாம பாத்திகிட்டது கூட கம்மி தான். பேசினது கிடையாது. அதான் அமைதியா.. அப்படியே.." தயங்கிட்டே சொல்ல..

"ம்ம். பரவாயில்ல. தட்ஸ் நோ பிராப்ளம்.."

"ம்ம். ஓகே.."

"பின்ன ஏன் சன்பாத் மாதிரி ரெயின் பாத் எடுத்தீங்க..? "

"மழைல நனைஞ்சிட்டு வந்தத சொல்றீங்களா?"

"நோ. நோ.. டிரெயின் ஏறின பிறகு திரும்பி  ரெயின்பாத் எடுத்தீங்கள அத சொல்றேன்.."

"ஓஹோ.. அது வந்து மழைனா ரொம்ப புடிக்கும்.. அது இந்த மாதிரி சாரல் மழை பெய்யும் போது பாத்து அதே ரசிச்சிட்டே இருப்பேன்.."

"ம்ம்.. சூப்பர்.."

"வீட்டுல இருந்த இந்த மாதிரி ரசிக்க முடியாது. நா.. நாம இருக்குற அபார்மெண்ட்ல பால்கனியே கிடையாது. சோ ரசிக்க மூடியாது. இப்ப தான் மழைய ரசிக்குறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அத ரசிச்சிட்டு இருந்தேன்.."

"ம்ம்.. மழைய ரசிச்சிட்டு இருந்தீங்க. தட்ஸ் ஓகே.. பட் எப்படி மழைல குளிச்சீங்க.."

"நா குளிக்கல.. அதுவா குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு.."

"ஹா.. ஹா.."

"காத்தும் மழையும் சேர்ந்து வந்தது.. வெளியில தலைல வச்சு இருந்ததுனால மழை என்னைய குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு.."

"ஹா.. ஹா. நல்லா பேசுறீங்க.."

"ஹிம்.."

அதன் பின் அவனை பற்றி நிறைய விஷயங்கள் அவனாகவே சொன்னான். அவனுடைய படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நிறையவே பேசினோம். இடையிடையே என்ன பற்றியும் கேட்கும் கேள்விக்கும் பதில் சொன்னேன். அவனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அதனாலே நான் முதல் முறையாக அவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

"இந்த நேரத்துல தான் ஓர்க் முடிச்சு வருவீங்களா?"

"ம்ம். ஆமா.. இன்னிக்கு கொஞ்சம் ஒர்க் இருந்தது. அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. டெய்லி இதுக்கு முன்னாடி டிரெயின்ல போய்விடுவேன்.."

"ம்ம்.. ஓர்க் இருந்தது கூட ஒருவிதத்துல நல்லது தான். எப்பவும் போற மாதிரி போய் இருந்தா நா இப்போ தனியா இந்த மழைல பயந்துட்டே டிராவல் பண்ணிட்டு இருப்பேன்.."

"ஹா.. ஹா.. இன்னும் நைட் ஆகல.. அதுக்குள்ள பயமா?"

"ஆமா.. எனக்கு தனியா போறதுனா பயம் தான்.. தெரிஞ்ச ஆள் யாயாவது இருக்கனும்.."

"ஓ.. அது கல்யாணம் ஆகாத பையனா இருந்தா கூட ஓகே தானா?"

அவன் இந்த கேள்வியை ஏன் கேட்டான் என தெரியவில்லை.. ஆனால் நான்,

"தெரிஞ்ச ஆளா இருந்தா கூட அவங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சி இருந்தா டிராவலே பண்ணுவேன்.."

"ஓ.. அப்போ என்ன பத்தி தெரியுமா?"

அவன் இந்த கேள்வி கேட்கும் போது டிரெயின் ஏதோ ஸ்டேஷனில் நிற்பதற்காக திடீரென ப்ரேக் போடப்பட்டது. அதனால் அவன் சற்று தடுமாறி முன்னால் வந்து என் முகத்தின் இருபக்கத்திலும் கை வைத்து ஊன்றி நிற்க அவன் முகம் என் முகத்திற்கு மிக அருகில் இருந்தது.

இனியும் இந்த மயக்கம் தொடரும்...
[+] 5 users Like SamarSaran's post
Like Reply
#23
Fantastic writing
[+] 1 user Likes Steven Rajaa's post
Like Reply
#24
Amazing narration as if everything is happening in front of eyes.
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
#25
Fantastic updates
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#26
Superbbbbbb
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#27
very nice
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
#28
Superrrr
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
#29
Thank you so much
@Steven Raja
@Losliyafan
@Omprakash71
@chellaporukki
@jiivajothii
@karthikraj2020
Like Reply
#30
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

ட்ரெயின் சென்று கொண்டிருந்த போது நிற்பதற்காக போடப்பட்ட திடீர் ப்ரேக்கினால் அவன் முன்னால் வந்து என் மேல் இடிக்காமல் இருக்க என் முகத்தின் மேல் படாமல் இரு பக்கத்திலும் கை வைத்து நின்றான். அப்போது எங்கள் இருவரின் கண்களும் மிக அருகில் சந்தித்துக் கொண்டன. உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடி விடுமோ என்ற பயத்தில் நடுங்கி துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. எனக்கு மிக நெருக்கத்தில் அவன் வந்து இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஒருவித பயமும் எனக்குள் இருந்தது. இப்போதும்
அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்..

"நா கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல" எனக்கு மிக நெருக்கத்தில் அப்படியே நின்று கேட்க அவனின் மூச்சுக்காற்றால் என் உடல் உஷ்ணம் ஏறி காம சூட்டில் கொதிக்க ஆரம்பித்தது. அவன் மிக நெருக்கத்தில் இருந்ததால் என் வாயில் இருந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது.

"என்ன கேட்டீங்க?" பயத்துடன் திக்கி திணறி சொன்னேன்..

"என்ன பத்தி உங்களுக்கு தெரியுமா?" கேட்டேன்..

"ம்ம்.. இல்ல.. ம்கூம்.." குழப்பமாக சொல்ல..

"ம்ம் தெரியுமா? இல்ல ம்கூம் தெரியாதா?"ஏதாவது ஒன்னு சொல்லுங்க.." நெருக்கத்தில் சிரித்துக் கொண்டே கேட்டான்.

"ம்ம். தெரியும்.. ஆனா உன்ன.. உங்கள பத்தி முழுசா எல்லாம் தெரியாது.."

"ம்ம். ஓகே.. பாத்த மனுசனா இருந்த கூட முழுசா தெரியாம டிராவல் பண்ணமாட்டேன் சொன்னீங்க.. இப்ப பண்ணிட்டு இருக்கீங்க"

"இல்ல.. உன்ன.. உங்கள பாத்த வரை நல்லவரா தெரிஞ்சிங்க.. அதுமட்டுமில்ல நா போற ஏரியாக்கு உங்கள தவிர வேற யாரும் வரக்கூடிய ஆளும் இல்ல.. அதான்.." சொல்லிவிட்டு அவனின் கையின் கீழ் குனிந்து அவனுக்கு எதிர்திசையில் வந்து நின்று ஒரு பெருமூச்சுவிட்டேன்..

இருவருக்குமிடைய சில பல வினாடிகள் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எங்களின் கண்கள், உதடுகள், மனம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பேசி உறவாடிக் கொண்டிருந்தன. எங்களின் இருவரின் எண்ணங்களும் என்னவென்று எங்களின் கண்களிலும் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. இருவரும் என்ன நினைக்கிறோம் என்பதை எங்கள் இருவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கம் எங்களுக்குள் நாங்கள் பார்த்து இந்த பயணத்தில் சந்தித்த அந்த தருணத்தில் இருந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. அந்த தயக்கம் இந்த நொடி வரை தொடர்கிறது..

நாங்கள் இருவரும் அதன் பின் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே வெளியில் தூரிக் கொண்டிருக்கும் மழையையும், இயற்கையும், வானத்தில் தெரிந்த வானவில்லையும், சாலையும் செல்லும் வாகனங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் பார்த்தும், ரசிக்க வேண்டியதை ரசித்துக் கொண்டும் அந்த பயணத்தை தொடர்ந்தோம்.. இடையிடையே இருவரின் கண்களும் பார்த்து சந்தித்துக் கொண்டன. ஆனாலும் எனக்கு திரும்பி பேச சிறு தயக்கம் இருந்தது. அவனும் ஏன் பேசாமலே இருக்கிறான் என தெரியவில்லை. ஒருவேளை என் மனநிலை மாதிரி அவனுக்கும் இருந்து அவனும் தயக்கத்தில் பேசாமல் இருக்கிறானோ என்ற எண்ணங்கள் தான் மனதின் ஓட்டங்களாக இருந்தன.

இந்த ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை சில நிமிடங்கள் பயம் கலந்த தயக்கத்துடன் பேச்சு, பல நிமிடங்கள் அமைதி என இது மாதிரி தான் எங்கள் இருவரின் மன ஓட்டங்கள் இருந்தன. அடுத்த ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்பதற்காக ப்ரேக் போட இந்த முறை நான் நிலைதடுமாறி அவன் மீது மோத அவனின் கை என் பரிசத்தை தொட்டு பிடித்திருந்தது. இது முதல்முறை இல்லை.  இரண்டாவது முறை. ஆம் இதற்கு முன் இதே மாதிரி சம்பவம் அபார்மெண்டிலும் இதே போல் எதிர்பாராத விதமாக ஒருமுறை நடந்தது. அந்த நினைவு தான் என் மூளைக்கு சட்டென்று எட்டியது..

துணியை அலசி மாடியில் துணி காய போடுவதற்காக ஈர நைட்டியுடன் துவைத்த துணிகளை எல்லாம் வாளியில் எடுத்துக் கொண்டு மாடிப்படியில் ஏறி அங்கிருந்த கதவை திறக்க எதிர்திசையில் இருந்து அவனும் கதவை தள்ள ஒரு வினாடி நிலைதடுமாறி படியில் விழ போக அவனின் கையால் என் கையை பிடித்து முன்னால் இழுக்க அவனின் பரந்து விரிந்த மார்பினில் மோதி நின்றேன். அந்த சமயத்தில் எங்களின் இருவரின் மார்ப்பும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.. நைட்டியின் உள்ளே உள்ளாடை இல்லாத என் மாங்கனிகள்(முலைகள்) அவனின் மார்ப்பின் பட்டு அவனும் அந்த பரிசத்தின் மென்மையை உணர்ந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த முறையும் அப்படி தான். என் நிலைதடுமாற்றத்தினால் ஏற்கெனவே மழை மற்றும் அவனின் சில செய்கையால் காம எண்ணங்கள் மனதில் வந்து காம உணர்ச்சிகளை கிளப்பிவிட்டு முலைக்காம்பை விறைக்க செய்து போட்டியிருந்த உள்ளாடை, சுடிதாரை மீறி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. இப்போது போட்ட ப்ரேக்கினால் அவன் மீது போய் மோத என் மாங்கனியின் மென்மையை கண்டிப்பாக இந்த முறையும்  உணர்ந்திருப்பான். அதை நினைக்கவே மழையினால் ஈரமாகி என் பெண்மை(புண்டை) மதனநீர் துளி கசிய செய்து இன்னும் ஈரமாக்கியது..

எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நூல் செல்லும் அளவுக்கு தான் இடைவெளி இருந்தது. பின்னால் இருந்து யாரேனும் பார்த்தால் அதுக்கூட தெரியாது. அந்தளவுக்கு மிக நெருக்கமாக அவனுடன் ஓட்டி இருந்தேன். அவனுடைய கை அன்று பிடித்தது போலவே ஒரு இறுக்கத்துடன் என் கையை பற்றியிருந்தது. என் கையை பிடித்ததிலிருந்தே அவனின் ஆண்மை தன்மை என்னவென்று தெரிந்தது. அது ஒருபக்கம் அவன் மீதிருந்த மயக்க்தினால் சுகமாக இருந்ததால் தயக்கத்தை உடைத்து அவனை அப்படி கட்டியணைக்க தான் தோன்றியது.. ஆனால் இந்த முறையும் என்னால் முடியவில்லை.. ஒருவித தயக்கத்தினால் அவனை விட்டு விலகி நின்றேன்..

அவனை விட்டு விலகி நின்றாலும் அவனின் கை இன்னும் என் கையை இறுக்கமாக பிடித்திருப்பது போலவே உணர்ந்தேன். அது ஒரு மாதிரி நல்உணர்வை தந்தது. அவனின் முரட்டுதனமான ஆண்மை தனத்தில் அடங்கி ஒடுங்கி இருக்கவே ஆசைப்பட்டேன். அது எப்படி எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை. இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அடுத்த ஸ்டேஷன் வந்தடைந்தது.. அவன் தான் என் நினைவை கலைத்தான்.

"தாம்பரம் ஸ்டேஷன் வர போகுது.. நா போய் என் பேக் எடுத்துட்டு வரேன்" சொல்லவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்து சென்றான்..
சில வினாடிகளில் அவன் தோளில் கருப்பு நிற காலேஜ் பேக்கை மாட்டிக் கொண்டு வந்தான். அவனையும் அவன் செய்யும் செய்கையையும் ரசித்துக் கொண்டே இருந்தேன். இதோ அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டது.

"அடுத்த ஸ்டேஷன்ல நாம இறங்கனும் பக்கத்துல வந்துட்டோம்.. உங்க லக்கேஜ்  கைல எடுத்து வச்சுக்கோங்க.." சொன்னவுடன் தான் இந்த உலகத்திற்கு வந்து நான் கொண்டு வந்த இரண்டு டிராவல் பேக்கையும் தேடி பிடித்து எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

"உங்க லக்கேஜ் கைல பிடிச்சுட்டு நில்லுங்க. அப்ப தான் சீக்கிரம் இறங்க முடியும்.." சொல்ல இரண்டு கையில் இரண்டு பையை தூக்கி கொண்டு தள்ளாடி நின்றேன்.

நான் பையை தூக்க முடியாமல் தள்ளாடியதை பார்த்து என் வலதுகை மேல் அவனின் கைவிரல் பட மின்சாரம் தாக்கியது போல் இருந்தவுடன் பையை பிடித்திருந்த விரலை ஒன்றொன்றாக நழுவ விட வலதுகையில் இருந்த பை கீழே விழுந்தது..

"நீங்க பேக் பிடிச்சு பேலேன்ஸ் பண்ணி நிக்க முடியாம இருந்தீங்க அதான் வாங்கலாம் கையை பிடிச்சேன்" தயங்கிட்டே சொல்ல

"பரவாயில்ல.. கேட்டு இருந்தா நானே குடுத்திருப்பேன்.." சொல்ல அவன் உடனே

"எத குடுத்திருப்பீங்க..?" கேட்க..

"பைய தான் குடுத்திருப்பேன். வேற எதையும் இல்ல" நமுட்டு சிரிப்புடன் சொல்ல அதே சமயம் தாம்பரத்தில் ட்ரெயின் நிற்க அந்த நமுட்டு சிரிப்புடனே தலையை குனிந்து ட்ரெயினை விட்டு இறங்கினேன்..

அங்கும் மழை சின்ன சின்ன தூரலாக பெய்துக் கொண்டு தான் இருந்தது. ஏற்கெனவே பெரிய மழையாக பெய்திருக்கும் போல ப்ளாட்பாரத்திலே சில இடங்களில் தண்ணி அதிகமாக இருந்தது. நான் கீழே இறங்கியதும் அவன் குடுத்த ரெயின்கோட் கலட்டி குடுக்க,

"பரவாயில்ல மழை தான் பெஞ்சிட்டு இருக்குல போட்டுக்கோங்க.."

"இல்ல உனக்கு?" (முதல்தடவை அவனை ஒருமையில் அழைத்து பேசுகிறேன்.. இனி இப்படியே தான் தொடரும்.)

"எனக்கு இல்லைனா பரவாயில்ல.. நோ ப்ராப்ளம்.."

"இப்படியே மழைல நனைஞ்சிட்டே வா நடந்து வருவ.."

"கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் நடந்திடலாம் வாங்க.. முதல்ல வெளில போய் ரோடு என்ன கண்டிஷன்ல இருக்கு பாக்கலாம். தென் டிசைடு வாட் நெக்ஸ்ட்.."

"ம்ம். சரி வா போய் பார்க்கலாம்.."

இருவரும் வெளியில் வந்து பார்க்கும் போது பெய்த மழையில் ரோட்டில் மழைநீர் ஆறு மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும்

"தண்ணீ ரோடு ஃபுல்லா ஓடிட்டே இருக்கு.. இதுல எப்படி நடந்து போறது. மழை வேற இன்னும் நிக்காம பெய்திட்டு தான் இருக்கு. ஒரு ஆட்டோ வேணா கேளு. அதுல போய்டலாம்.."

"ஆட்டோனா இந்த டைம்ல அதிகமா கேப்பான்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல.." அவன் தயங்கிட்டே சொல்ல..

"அட இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? நீ ஆட்டோ வருமா மட்டும் கேளு.. எவ்வளவு கேட்டாலும் நானே குடுத்துக்கிறேன்.. ஒரு பிரச்சனையும் இல்ல.. எனக்கு வீடு போய் சேர்ந்தா போதும்.."

"சரி இருங்க.. ஸ்டாண்டுல போய் கேட்டு வரேன்.."

அவன் கொஞ்ச தூரம் சென்று ஆட்டோகாரனிடம் கைவிரல் ஒன்று  இரண்டு என காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் அவர்கள் இருவரும் பேசி முடித்து ஆட்டோ நானிருக்கும் இடத்தை நோக்கி வந்தது.

அந்த ஆட்டோவில் முதலில் நான் ஏறி உட்கார்ந்து ஒரு பையை என் மடியில் வைத்துக் கொண்டேன். அவன் தோளில் மாட்டியிருந்த பையை கலட்டி என்னை சீட்டுக்கு பின்பக்கம் வைக்க சொல்லிவிட்டான். என்னுடைய மற்றொரு பையை எடுத்து அவனின் மடியில் வைத்துக் கொண்டு என்னை ஒட்டி உட்கார்ந்தான்.. எங்கள் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசியபடி தான் இருந்தது. ஆட்டோ கிழம்பயதும் அவனின் கையை எங்கே வைப்பதென்று தெரியாமல் மடியில் இருந்த பையின் மேல் வைக்க அந்த சமயம் ஆட்டோ ஒரு குழியில் இறங்கி ஏற அவன் கையினுடைய முட்டிப் பகுதி(கை மடங்கும்  இடத்தில் இருக்கும் பகுதி) சரியாக என் முலையை நச்சென்று அழுத்தியது.

இந்த மயக்கம் இனியும் தொடரும்..
[+] 7 users Like SamarSaran's post
Like Reply
#31
very intresting story boss
[+] 1 user Likes anu 69's post
Like Reply
#32
Super update. Your writing is very good.
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#33
This story is really beautiful
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
#34
Super update
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#35
Arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
#36
Beautiful update
[+] 1 user Likes Kamalesh Nathan's post
Like Reply
#37
Amazing
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#38
Nice updates
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
#39
Very interesting narration
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
#40
Thank you so much
@anu 69
@Rakasiyananban
@Dumeelkumar
@Omprakash_71
@Thangaraasu
@Kamalesh Nathan
@Rangushki
@Ananthukutty
@Rowdyponnu
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)