நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#81
மிக அருமையான கதை. அழகிய எழுத்துநடை. சூப்பர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
yourock yourock yourock
Like Reply
#83
என்னமோ ராத்திரி முழுவதும் நீதான் ஓட்டினது போல் சொல்றே? உன் அண்ணாதானே பாதி நேரம் ஓட்டிட்டு வந்தார். இப்ப அவரே எழுந்து வந்துட்டார் தெரியுமா?”

“அப்படியா? அவன் மனுசனே கிடையாது கிருஷ். ஒரு இயந்திரம். அவனுக்கெல்லாம் தூக்கமே வராது. தயவுசெய்து என்னைக் கொஞ்ச நேரம் தூங்க விடேன்.”
“டேய்- நீ தூங்கறதுக்காக வகுப்பு நடக்காம இருக்குமா
“ப்ளீஸ். ப்ளீஸ். நான் தூங்கறேன்.”

அவன் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

இனி அவன் இப்போதைக்குக் கிளம்ப மாட்டான் என்று புரிய அவள் மட்டும் அன்று கல்லூரிக்குக் கிளம்பினாள்.

கேந்திரனுக்கு தலையை வலிக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமான வேலை இருந்ததால்தான் காலையில் எழுந்து வந்துவிட்டான்.

முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தது அவனை சோர்வடையச் செய்தது.

வந்த வேலையை முடித்துவிட்டுக் கிளம்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இன்று யுகேந்திரன் கல்லூரிக்குச் செல்லாமல் கிருஷ்ணவேணி மட்டும் சென்றது அவன் நினைவிற்கு வந்தது.

அப்படியே அவளையும் அழைத்துச்சென்று விடலாமா? என்று அவன் மனதில் தோன்ற உன்னை திருத்தவே முடியாதா? என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.

அவன் கிளம்புவது தெரிந்து சாருலதாவும் வந்து ஒட்டிக்கொண்டாள். அப்போது அவளுக்கு ஏதோ அழைப்பு வர எடுத்துப் பேசினாள்.

அவனுக்கு எரிச்சலாய் வந்தது. உறவுக்காரி என்று எந்த அளவிற்கு அவளைப் பொறுத்துக்கொள்வது?

தான் வேலை செய்பவள் என்று என்றைக்காவது நினைத்துப் பார்க்கிறாளா?
என்னவோ பொழுது போக்கிற்காக வேலைக்கு வருவது போல் அவன் கிளம்பிய உடனே தானும் கிளம்பி விடுகிறாளே?
கிருஷ்ணவேணியின் கல்லூரிக்குச் செல்லும் முடிவைத் தவிர்த்துவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் காரை விடப்போனவனை தடுத்தாள் சாருலதா.

“ஏன்?”

“இல்லை. இன்னிக்கு யுகேந்திரன் வரலை. கிருஷ்ணவேணி மட்டும் வந்திருக்கிறாள். அவளையும் அழைத்துச்சென்றுவிடலாமே.”

சொன்ன அவளை அதிசயமாய் பார்த்தான்.

அவளா சொன்னாள். கிருஷ்ணவேணியை பரம எதிரி போல் பார்ப்பவள் இப்போது அவள் மீது கொண்ட கரிசனை எப்படி?

இருந்தும் அவள் சொன்னதை செய்தான். சாருலதா ஏதோ பரபரப்பில் இருப்பது போல் தெரிந்தது.

“அத்தான் அங்கே பாருங்க. அது நம்ம கிருஷ்ணவேணிதானே?”

சொன்ன அவள் தன் குரலில் தெரிந்த குதூகலத்தை மறைக்க முயன்றாள்.

‘சரியான நேரத்தில் சரியான தகவலை தான் சொல்லியிருக்கிறான்.’

யாரையோ மனதார மெச்சிக்கொண்டாள்.

அங்கே பார்த்த மகேந்திரனுக்கு முகம் கடுத்தது.

அங்கே கிருஷ்ணவேணி யாரோ ஒருவனுடன் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.

அவன் அவள் தோளைத் தட்டியவாறே தன் காரின் முன்னிருக்கை வரை அழைத்துச்சென்று அவளுக்காக கதவைத் திறந்து உட்கார வைத்தான்.

பிறகு அவன் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்துச்சென்றான்.

சாருலதா ஜாடையாக மகேந்திரனைப் பார்த்தாள். அவள் அருகில் இருக்கிறாள் என்ற காரணத்தினாலே தனது மனவோட்டத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மகேந்திரன் எதுவும் நடவாதது போல் தானும் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

சாருலதா கூட இல்லாது இருந்திருந்தால் அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்திருப்பான். இப்போது அது முடியவில்லை.

கார் ஓட்டும்போது எல்லாம் அந்தப் புதியவனே நினைவில் நின்றான்.

அவன் அழகன் என்பதை விட பணக்காரன் என்பதும் தெரிந்தது. அவன் ஓட்டி வந்த கார் மிக விலை உயர்ந்தது.

கிருஷ்ணவேணி எப்படிப்பட்டவள் என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் வீடு வந்துவிட்டது. யுகேந்திரன் மட்டும் வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்தான். அதைப் பார்த்ததுமே அவள் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை என்று புரிந்தது.

காலையில் இருந்த தலைவலி இப்போது இன்னும் அதிகமானது.



யாரையும் கண்டுகொள்ளாமல் தனது அறைக்குச் செல்வதற்கு மாடிப்படி மீது கால் வைத்தவனை யுகேந்திரனின் குரல் தடுத்தது.
“அண்ணா. ஏன் சோர்வா இருக்கே
Like Reply
#84
தலைவலி.”

ஒற்றை வார்த்தையாய் பதில் சொன்னான்.
“இருண்ணா. அம்மா உன் கார் சத்தம் கேட்ட உடனே சமையல் அறைக்குப் போனாங்க. உனக்கு குடிக்க சூடா ஏதாவது கொண்டு வருவாங்க. நீ குடிச்சுட்டுப் போய் ஓய்வெடுத்துக்கோ.”
அக்கறையாய் சொன்னவனை மறுக்க முடியாமல் அவனருகே வந்து அமர்ந்தான்.

வனிதாமணி மகேந்திரனுக்கும் சாருலதாவிற்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

சுக்கு தட்டிப் போட்ட அந்த பானம் தலைவலி நேரத்தில் குடிப்பதற்கு இதமாக இருந்தது.

குடித்த பிறகு தனது அறைக்குப் போய் விட்டான்.

“என்ன யுகேந்திரன்? நீ மட்டும் தனியா உட்கார்ந்திருக்கே? உன் கிருஷ் இன்னும் வரலை?”

குரலில் குத்தல் தெறிக்க கேட்டாள்.

“அவளுக்குத் தெரிந்த யாரோ வந்திருக்கிறார்களாம். பார்த்துவிட்டு வரதா சொல்லியிருக்கா.”

அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

மகேந்திரன் அங்கே அமர்ந்திருக்கும்போதே அந்தக் கேள்வியை அவன் முன்னே கேட்க வேண்டும் என்று அவள் வாய் துறுதுறுத்தது.

அவளுக்கு என்னவோ கிருஷ்ணவேணியை அறவே பிடிக்கவில்லை.

முன்பு அவன் யுகேந்திரனைக் கட்டிக்கொண்டாள் எனக்கு என்ன என்று தோன்றியது. இப்போது அவனுக்காகக் கூட அவள் இங்கே இருக்க கூடாது என்று தோன்றுகிறது.
மகேந்திரனின் பார்வையில் அவளை கெட்டவளாகக் காட்டிவிட்டால் பிறகு அவனே அவளை வெளியேற்றிவிடுவான்.
அவனது பேச்சை மீறி மற்றவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

அந்தக் குடும்பத்தில் மகேந்திரனின் பேச்சிற்கு எந்த அளவிற்கு மரியாதை இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

அன்றைய இரவு உணவு முடித்து தனது அறைக்குத் திரும்பியவனிடம் வேலை மெனக்கெட்டுப்போய் பேச்சுக் கொடுத்தாள். கிருஷ்ணவேணி அன்றைய இரவு சாப்பிட வரவில்லை.

ரொம்ப முக்கியமான ஆள் வந்திருக்கிதாகவும் அதனால் தான் தாமதமாக வருவதாகவும் வீட்டுக்கு தகவல் சொன்ன கிருஷ்ணவேணி தாமதமாகதான் சாப்பிட்டுவிட்டு வந்தாள் என்ற மிக முக்கியமான தகவலை மகேந்திரனிடம் சொன்னால்தான் தனக்கு அன்றைய இரவு உறக்கமே வரும் என்று அவள் முடிவெடுத்து சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

அதுவும் அந்த முக்கியமான ஆள் ஆணா? பொண்ணா? என்று எதையும் கிருஷ்ணவேணி வீட்டாருக்குத் தெரிவிக்கவில்லை என்ற அதிமுக்கியமான தகவலையும் சேர்த்தே சொல்லிவிட்டுச் சென்றாள்.

படுக்கையில் வந்து விழுந்தவனுக்கு அன்றும் உறக்கம் வருமா? என்ற சந்தேகம்தான்.

மனதிலே கிருஷ்ணவேணியின் தோளில் உரிமையாய் கைபோட்டு காரில் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த ஆணழகன் யார்? என்ற கேள்விதான் முதன்மையாய் இருந்தது.

கிருஷ்ணவேணி எப்படிப்பட்டவள்?
அவள் எப்படியிருந்தாலும் தம்பி ஏற்றுக்கொண்டுவிடுவான் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.
Like Reply
#85
கதையில் புதிய திருப்பமா
Like Reply
#86
Super..... continue
Like Reply
#87
arumaiyaana kathal kathai
Like Reply
#88
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு
[Image: nivv.jpg]
கேந்திரன் கண் விழித்தான். இரவில் எந்த நேரத்தில் உறங்க ஆரம்பித்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஆனாலும் வழக்கம் போல் அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.
குளியல் அறைக்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்தவன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

எதிரே கிருஷ்ணவேணி அறை வெளிப்பக்கமாக சாத்தியிருந்தது. அவள் எழுந்து கீழே சென்றுவிட்டாள் என்று புரிந்தது.

அவனும் கீழே சென்றான். யுகேந்திரனையும், கிருஷ்ணவேணியையும் காணவில்லை. தோட்டத்துப் பக்கத்தில் இருந்து சத்தம் வந்தது. எட்டிப் பார்த்தான். இருவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் எதைப் பற்றியோ சுவாரசியாமாகப் பேசிக்கொண்டும் இருந்தனர்.

அவனைக் கண்டதும் வனிதாமணி தேநீர் எடுத்து வந்தார்.

அதை வாங்கி அமைதியாகப் பருக ஆரம்பித்தான். ஆனால் அவன் மனதில் அமைதி இருக்கவில்லை.

கிருஷ்ணவேணி யாருடன் சென்றாள்? அவள் நல்லவளா? கெட்டவளா? பணத்திற்காக அடிபோட்டுதான் தங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாளா? அவள் ஏமாற்றிவிட்டால் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் தம்பியின் கதி என்னாவது?

இவை எல்லாம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

நடைப்பயிற்சி முடித்த இருவரும் உள்ளே வந்தனர்.

தன்னுடைய அறைக்குப் போய் குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு கிருஷ்ணவேணி செல்ல யுகேந்திரன் மட்டும் சோம்பிப்போய் அப்படியே அண்ணனின் அருகில் அமர்ந்துவிட்டான்.
“உன்னோடதானே கிருஷ்ணாவும் நடந்தா. அவ எவ்வளவு நல்ல பிள்ளையா குளிக்கப் போயிட்டா. சோம்பேறி. போய் குளித்துவிட்டு வாடா.”
அங்கே வந்த வனிதாமணி மகனைக் கண்டித்தார்.

“அட போங்கம்மா. நான் டீ குடித்துவிட்டுத்தான் குளிக்கப் போவேன். ஏற்கனவே மகன் களைச்சுப் போய் வந்திருக்கிறானே? அவனுக்கு டீ கொடுப்போம்னு தோன்றியதா உங்களுக்கு?”

செல்லமாய் சலித்துக்கொண்டான்.

“நீ என்னிக்குதான் திருந்தப் போறியோ?”

புலம்பிக்கொண்டே உள்ளே சென்றார்.

“ஏன்டா அவங்களை சிரமப்படுத்தறே? அவங்க சொல்றதை செய்ய வேண்டியதுதானே?”

“போண்ணா. நீ வேற. அவ என்னடான்னா காலையில் எழுந்து நடடான்னு என்னை தூங்கவே விடமாட்டேங்கிறா. இந்த ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்களே? என்னை மட்டுமே தொந்தரவு செய்யறாங்க. ஏன் நீயும்தான் இந்த வீட்டில் இருக்கிறே? உன்னை ஏதாவது சொல்றாங்களா?”

“உன் அண்ணன் எப்பவும் எதையும் சொல்ற மாதிரி நடந்துக்கிறதுல்ல.”

மீண்டும் அவனைத் திட்டியவாறே தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து நீட்டினார்.

“அம்மா. திட்டிட்டே தர்றீங்களே? எனக்கு செரிக்குமா? எனக்கு ஒன்னும் வேண்டாம் போங்க.”

“சரி போறேன்.”  என்று எடுத்துக்கொண்டுக் கிளம்பியவரை கெஞ்சலான குரலில் கூப்பிட்டான்.

அவர் சிரித்துக்கொண்டே நீட்ட அவனும் வாங்கிப் பருகினான்.

“போனாப் போயிட்டுப் போறேன்னு தர்றேன். நீ குளிச்சுட்டு வந்த பிறகுதான் காலை சாப்பாடு தருவேன்.”

கண்டிப்பான குரலில் சொன்னார்.

“அம்மா. இதெல்லாம் அநியாயம்.”

“உனக்குப் புடிச்ச சாப்பாடுதான் செஞ்சிருக்கேன். நீ வரலைன்னா அப்புறம் வெளியில் போய்தான் சாப்பிடனும்.”

“எனக்கு வெளிச்சாப்பாடு அவ்வளவா ஒத்துக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதாம்மா. அதனால்தானே என்னோட நண்பர்கள் கிண்டலை எல்லாம் பொறுத்துக்கிட்டு மதியத்திற்கு வீட்டிலேர்ந்து சாப்பாடு எடுத்துட்டுப்போறேன். என் மீது கருணை காட்டுங்கம்மா.”

அவர் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

“டேய் அரட்டை. அம்மா சொன்னதை செய்யாமல் இருந்தால்தான் உனக்கு சாப்பாடு இல்லைன்னு சொன்னாங்க. போய் குளிச்சுட்டு வாயேன்டா.”

“இப்பதானே கஷ்டப்பட்டு நடந்துட்டு வர்றேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேனே?”

பாவமான குரலில் கேட்டவனைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

இப்படிப்பட்டவனை அந்த கிருஷ்ணவேணி ஏமாற்றினாள் என்றால் அவனால் தாங்கிக்கொள்ள முடியுமா?



அப்போது சாருலதா தனது அறையை விட்டு வெளியில் வந்தாள்.
“ஆன்ட்டி. எனக்கு கொஞ்சம் டீ தர்றீங்களா?
Like Reply
#89
வரவேற்பறையில் அவர்கள் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிரே இருந்த மற்றொரு சோஃபாவில் அமர்ந்தாள். எழுந்து முகம் கழுவிய கையோடு அப்படியே வந்திருக்கிறாள். குளிக்கவில்லை. ஆனாலும் சிறு ஒப்பனை தெரிந்தது.

இரவு போட்டிருந்த நைட்டியோடு வந்திருந்தாள். அது அவள் உடலோடு ஒட்டி இருந்தது.
ஆண்கள் இருவருக்கும் அவளை நிமிர்ந்து பார்ப்பது கடினமாக இருந்தது.
வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.

அவளுக்காக தேநீர் கொண்டு வந்த வனிதாமணிக்கும் அவளைப் பார்த்து சங்கடமாய் இருந்தது.

‘என்ன பெண் இவள்? வயதுப் பையன்கள் இரண்டு பேர் இருக்கும் வீட்டில் இப்படியா வந்து நிற்பாள்? ஒரு துண்டையாவது தோளில் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் அல்லவா?’

நினைத்ததை வாய் விட்டுச் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பியபடி உள்ளே சென்றார்.

ஆண்கள் இருவரும் கிளம்பி தங்கள் அறைக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

“அத்தான். உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”

பீடிகையோடு ஆரம்பித்தாள்.

மகேந்திரன் பார்க்க வேண்டும் என்றுதானே அவள் அந்த இரவு உடையோடு மெனக்கெட்டு அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்தது.

அதில் தான் அழகாய் இருப்பதாய் அவளுக்குத் தோன்றும்.

அந்த மகேந்திரன் சாமியார் மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாது காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தால் இந்தச் சொத்தை ஆளுவதற்கு என்று வேறு எவளையாவது அந்த அத்தைக் கிழவி கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது என்று பயம் அவளுக்கு.

பார்ப்பதற்கு தன் கணவனுக்கு மரியாதை கொடுப்பது போல் தோன்றும். ஆனால் கடைசியில் பார்த்தால் அந்த அத்தைக் கிழவியின் பேச்சை அந்தக் கிழவன் தாண்டமாட்டான்.
இந்த வயதில் கூடத் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாள்

மகனுக்குத் திருமண வயது கடந்து போகிறதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.

இனி தான்தான் களத்தில் இறங்கனும் என்று முடிவெடுத்துவிட்டாள்.

இது அத்தனையும் அவளது பெற்றோர் போதனை. அந்த அளவிற்கு அவர்கள் இந்த வீட்டின் சொத்திற்காக பேராசைப் பிடித்து அலைகிறார்கள்.

சாருலதா மகேந்திரன் அருகில் வர அவன் பதற்றத்தோடு எழுந்துவிட்டான்.

“என்ன சொல்லு.”

அருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனுக்குக் கேட்கக் கூடாது என்பதுபோல் அவனிடம் ரகசியமாய் பேச முயன்றவளை கையை நீட்டித் தடுத்தான்.

“அங்கே இருந்தே சொல்லு.”

அவள் முகம் கருத்தது.

“நேத்தைக்கு சொன்னேனே? அந்த கிருஷ்ணவேணி பத்தி. நீங்க உங்க தம்பிக்கிட்ட விசாரித்தீங்களா?”

“என்னத்த விசாரிக்கனும்?”

“என்ன அத்தான் இப்படி இருக்கீங்க? நம்ம யுகேந்திரன் அப்பாவி. அந்த கிருஷ்ணவேணி எமகாதகி. அவ யுகேந்திரனை ஏமாத்திக்கிட்டு இருக்கா.”

அவள் பேசியது அருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனுக்குக் காதில் கேட்டது.

அவள் போட்டுக்கொடுக்கிறாள் என்று புரிந்தது.

தன் மேல் தவறு இருந்தால்தானே பயப்படனும்.

கிருஷ்ணா எப்படிப்பட்டவள்? அவளைப் பற்றிக் குறை கூறும் தகுதி கூட இவளுக்குக் கிடையாது. இந்த வீட்டில் கிருஷ்ணா வந்து தங்கிய இத்தனை நாட்களில்இ ஒரு நாள் கூட அரைகுறை ஆடையோடு வந்து அவர்கள் முன்னே நின்றது இல்லை. முகம் சுளிக்கிற மாதிரி ஒரு நாள் கூட அவள் உடை உடுத்தியதில்லை.

எளிமையான உடையாக இருந்தாலும் கம்பீரமாகதான் அவளைக் காட்டும்.

இவள் போன்று பகட்டான ஆடைகளை அணிவதில்லை.

இருந்தும் அண்ணனின் மனதில் விசத்தைத் தூவுகிறாள்.

அதை வளர விடுவது நல்லதில்லை. படிப்பு முடிந்த உடன் கிருஷ்ணா கிளம்பிப்போறதாக இருந்தால் அண்ணன் எதை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடலாம். ஆனால் கிருஷ்ணா இந்த வீட்டில் வாழப்போகிறவள்.

அவளைப் பற்றி யார் தவறாக நினைத்தாலும் அது தன் ஆசைக்குத் தடையாக இருக்கும்.

உடனே அண்ணனின் மனதில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த சாருலதா பேசியதைப் பார்த்தால் ஏற்கனவே ஏதோ அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள். அதன் தொடர்ச்சியாகதான் இந்த ரகசியப் பேச்சு.

“என்னாச்சுண்ணா? என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா நீ தாராளமா கேட்கலாம்.”

அவன் சொல்லிவிட்டாலும் மகேந்திரன் தயங்கினான்.

தம்பிக்குப் பிடித்த பெண்ணைப் பத்தி தான் தவறாகப் பேசினால் அதனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகிவிட்டால் அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அவனுக்குத் தோன்றியது.



ஆனால் அந்தத் தயக்கம் சாருலதாவிற்கு இல்லையே?
அவள் கேட்டுவிட்டாள்.
Like Reply
#90
“நேத்து அந்த கிருஷ்ணவேணி யாரோ ஒரு பணக்காரனோடு ரொம்ப நெருக்கமாய் காரில் ஏறிப்போனாள். அந்த ஆள் யாருன்னு உனக்குத் தெரியுமா?”

அவன் தன் அண்ணனைப் பார்த்தான்.
அவன் முகத்திலும் கேள்வி இருந்தது.
“அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு நீ பதில் சொல்லு சாருக்கா? கிருஷ்ணவேணி ஒரு பணக்கார ஆணோட நெருக்கமா காரில் ஏறிப்போனதைப் பற்றி யார் உன்கிட்ட சொன்னா?”

“அதை யாராவது வந்து சொல்லியிருந்தா நாங்க நம்பியிருக்கவே மாட்டோம். இல்லையா அத்தான்?”

அவள் தன்னுடன் மகேந்திரனையும் கூட்டுச் சேர்த்தாள்.

“அப்படின்னா அவ போனது உங்களுக்கு எப்படி தெரியும்?”

கூர்மையான விழிகளுடன் பார்த்தவாறே அவளிடம் கேட்டான்.

“நாங்கதான் நேராவே பார்த்தோம்.”

“உங்களுக்கு எங்கள் கல்லூரி இருக்கும் இடம் சம்பந்தமே இல்லாதது. அப்படியிருக்க நீங்க எப்படி பார்த்தீங்க?”

“அது வந்து நீ வரலைன்ன உடனே கிருஷ்ணவேணியை அழைக்கப் போனோமா? அப்பதான் பார்த்தோம்.”

“நீங்க அழைக்க வர்றீங்கன்னு கிருஷ்ணாக்கிட்ட சொன்னீங்களா? இல்லை அவ உங்களை அழைக்க வாங்கன்னு கூப்பிட்டாளா?”

“அவ எப்படி கூப்பிட முடியும்? நாங்க என்ன அவ வேலைக்காரங்களா? அவ ஒன்னும் கூப்பிடலை. எனக்கு அவ போன் நம்பர் தெரியாததால் அவகிட்ட நானும் கூப்பிட்டுப் பேசலை.”

“என்ன திடீர்னு அவ மேல் அக்கறை? கிருஷ்ணாவைக் கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது. அப்படியிருக்க அவ தனியா வருவான்னு நினைவு வைத்து அவளை அழைக்கப் போயிருக்கீங்களே?”
கேட்டுவிட்டு நக்கலாய் ஒரு பார்வைப் பார்த்தான்.
அவள் விழி பிதுங்கிவிட்டது.

“அது… அது வந்து…”

அவள் இழுத்தாள்.

“நீங்க கிருஷ்ணாவைப் பத்தி ரொம்பக் கவலைப்பட வேண்டாம். அவ என்னோட தோழி. அவ மேல் அக்கறை காட்டுறதுக்கு எங்க குடும்பம் இருக்கு. நான் அவளைப் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க.”   

அழுத்தம் திருத்தமாய் சொன்னான். தன் அண்ணன் பக்கம் திரும்பினான்.

“அண்ணா. உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா நீ நேராவே கேட்கலாம். நாம ரெண்டு பேரும் உடன்பிறந்தவங்க. நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுக்கு நடுவில் வேற யாரையும் விடக்கூடாது.”

அவன் சமாதானமாய் தம்பியின் தோளைத் தட்டினான்.

“நீ கிருஷ்ணாவை சந்தேகப்படறியா அண்ணா?”

அவன் மறுப்பாய் எதையும் சொல்லவில்லை. அதைக் கண்டதும் யுகேந்திரனுக்கு வருத்தமாய் இருந்தது.

“அண்ணா. அவளை நேற்று காரில் அழைத்துச் சென்றது அவளோட அங்கிளோட சன் அருண்தான். ஊருக்கு எப்பவாவது வரும்போது கல்லூரி விடுதிக்குச் சென்று அவளைப் பார்த்துட்டுப் போவார். எனக்கும் நல்லா தெரியும். இப்ப கிருஷ்ணா நம்ம வீட்டில் இருக்கிறதால் அவளை கல்லூரியில் வந்து பார்த்துட்டு போயிருக்கிறார். என்னிடம் கூட போனில் பேசினார்.”

“ஏன் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திருக்கலாமே?”

சாருலதா கேட்க அவன் பல்லைக் கடித்தான்.

‘இவ அடங்கவே மாட்டாளா? நம்ம வீடாமே?’

“கிருஷ்ணா எங்க வீட்டில் தங்கியிருக்கிறாள்னு அவருக்குத் தெரியும்தான். இருந்தாலும் பழக்கப்படாத இடத்திற்கு வர அவருக்கு ஒரு மாதிரியாக இருந்ததாக என்னிடம் சொன்னார். எங்க கிருஷ்ணாவை நீங்க பார்த்துக்கிறதே பெரிசு. இதில் நாங்க வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பலைன்னு சொன்னார். நான்தான் அவரைத் திட்டினேன். கிருஷ்ணாவோட உறவுக்காரங்க எங்களுக்கும் உறவுக்காரங்கதான்னு அவரிடம் சொல்லி கண்டிப்பா வீட்டுக்கு வரனும்னு சொன்னேன். இப்ப ஏதோ முக்கியமான வேலையா வந்திருக்கிறதாகவும், அடுத்த முறை வரும்போது நிச்சயமாக வருவதாகவும் சொன்னார்.”

நீண்டதாகப் பேசி முடித்து பெருமூச்சு வாங்கினான்.
அதன் பின்னர் அவரவர் கடமை அழைக்க கிளம்பிவிட்டனர்.
Like Reply
#91
சரியான பதில்
Like Reply
#92
Super
Like Reply
#93
ருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஒரேயொரு பருவம் முடிந்துவிட்டால் அவர்கள் பட்டம் பெற்றுவிடலாம்.

கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் படிப்பில் கவனம் செலுத்தினர். அவன் கொஞ்சம் சோம்பியிருந்தாலும் அவள் விடவில்லை.

இருவரும் படிப்பில் மும்முரமாய் இருந்ததால் மற்றவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

அன்றுதான் அந்தப் பருவத்திற்கான இறுதித் தேர்வு. என்னவோ அதிசமாய் அவர்கள் இருவருக்கும் ஒரே அறையில் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைத்தது.
இடையிடையில் பார்க்கும்போது யுகேந்திரன் மும்முரமாய் தேர்வு எழுதினான். அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.
இந்த முறை அவன் நிறைய மதிப்பெண்கள் பெற்றுவிடுவான் என்று நம்பினாள். அவளும் தேர்வு எழுதுவதில் கவனமானாள்.

எதார்த்தமாக திரும்பிப்பார்க்கும்போது யுகேந்திரன் எழுதுவதை நிறுத்திவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தான்.

இன்னும் தேர்வு முடிவதற்கு நேரமிருந்தது. அதற்குள்ளா எழுதிவிட்டான். அவன் மிக நிதானமாக அல்லவா எழுதுவான். அப்படியிருக்க இத்தனை சீக்கிரம் எழுதி முடித்திருக்க வாய்ப்பிருக்காதே. அவன் தன்னைப் பார்த்தால் எழுத சொல்லலாம் என்று அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பினால்தானே?

அவன் செய்ய வேண்டியதை தேர்வு அறைக்கண்காணிப்பாளர் செய்துவிட அவள் பதறிப்போய் எழுதத்தொடங்கினாள்.

அந்தப் பேராசிரியை அவளை நோக்கி வந்துவிட்டார்.

“என்னம்மா? ஏதாவது வேண்டுமா? உடல்நிலை சரியில்லையா?”

அவள் நன்றாகப் படிப்பவள் என்று தெரிந்ததால் அவளை சந்தேகப்படாமல் விசாரித்தார்.

“ஒன்னுமில்லை மேம்.”

“பதட்டப்படாம எழுது. என்ன சரியா?”

அவளை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.
‘அடப்பாவி. இப்படி என்னை மாட்டி விட்டுட்டியேடா.’
மனதிற்குள் யுகேந்திரனை திட்டியவாறே எழுதி முடிக்க வேண்டியவற்றை வேகமாக எழுதத் தொடங்கினாள்.

தேர்வு நேரம் முடிந்ததும் மணி ஒலிக்க விடைத்தாள்களை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தாள்.

யுகேந்திரன் சிரிப்புடன் வந்தான்.

“என்ன கிருஷ்? நல்லா மாட்டினியா?”

“அடப்பாவி. அப்ப உனக்கு எல்லாம் தெரியுமா?”

அவன் ஆமெனத் தலையாட்டினான்.

“செய்யறது எல்லாம் செய்துட்டு சிரிக்கிறியா?”

அவள் அவன் முதுகில் தட்டினாள்.

“பரிட்சை எழுதறதை விட்டுட்டு நீ என்னை வேடிக்கைப் பார்த்துட்டு என்னைக் குறை சொன்னா நான் என்ன செய்யறது?”

“நீயும் ஒழுங்கா எழுதியிருந்தா நான் ஏன்டா உன்னைப் பார்க்கப் போறேன்?”

“நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல. பாஸ் ஆற அளவுக்கு நான் எழுதிடுவேன்னு. அப்புறம் என்ன கவலை உனக்கு?”

“‘எல்லாமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சதுதானே? அப்படியிருக்கிறப்ப எழுதறதுக்குக்கூடவா நீ சோம்பேறித்தனம் படுவே?”

செல்லமாய் கடிந்துகொண்டாள்.

“நான் என்ன பண்றது? எனக்குப் பிடிக்காத பாடத்தைப் படிக்கச் சொன்னா நான் இப்படித்தான் படிப்பேன்.”

அவள் அமைதியாகிவிட்டாள்.

இதைப் பற்றி மகேந்திரனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

யுகேந்திரன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்.

ரவிச்சந்திரன் கூட அவனது விருப்பத்தை வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டாராம். மகேந்திரன் ஒத்துக்கொள்ளவில்லையாம். எப்போதுமே அவனது முடிவு நல்லவிதமாய்தான் இதுவரைக்கும் இருந்திருக்கிறது. அதனால் ரவிச்சந்திரன் எப்போதும் மகன் எடுக்கும் முடிவிற்கு சம்மதம் சொல்லிவிடுவாராம்.

அதனால்தான் அவள் மகேந்திரனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


ஆனால் அவள் பேசுவதற்கு சரியான நேரமே கிடைக்கவில்லை. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
Like Reply
#94
ன்று மாலை கல்லூரிவிட்டு வந்த போது சாருலதாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவன் யோசனையோடு வந்தவர்களை வரவேற்றவன் அவர்கள் வந்த காரணத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துவிட்டான்.
கிருஷ்ணவேணியும் மரியாதை நிமித்தம் வரவேற்றுவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவளைக் கண்ட அவர்களின் முகத்தில் தெரிந்த மாற்றமே அவளை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னது. வேண்டாவெறுப்பாய் மற்றவர்களுக்காக சிரித்துவைத்தனர். அதனால்தான் அவள் அங்கேயே இராமல் தனது அறைக்குச் சென்றது. அவர்கள் யுகேந்திரனின் உறவினர்கள். அவர்களுடன் தனக்கு என்ன பேச்சு? என்று சென்றுவிட்டாள். இதுவே சாருமதி வந்திருந்தால் அவளையும் தனது அறைக்கு அழைத்து வந்திருப்பாள். ஏனோ அவள் வரவில்லை.
இரவு உணவிற்கு யுகேந்திரன் அழைக்க வரும் வரையில் அவள் தனது அறையை விட்டு நகரவில்லை. அவர்கள் இருந்தால் என்ன செய்வது என்று பேசாமல் இருந்துவிட்டாள்.
என்ன கிருஷ்? இவ்வளவு நேரம் தனியாவே உட்கார்ந்துட்டே? நீ உடை மாற்றிவிட்டு வருவேன்னு நினைத்தேன்.”

“கொஞ்சம் களைப்பா இருந்தது. அதுதான் படுத்துட்டேன்.”

அவனது முகத்தைப் பாராமல் சொன்னாள்.

அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் இன்னும் இருப்பார்களோ? என்ற தயக்கத்துடன்தான் சென்றாள். ஆனால் அவர்கள் யாரும் இல்லை. அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்கள் எதற்காக வந்தார்கள்? என்று சாப்பிடும்போது பேச்சு வந்தது.

சாருமதிக்குத் திருமணமாம். திடீரென்று நல்ல சம்மந்தம் வந்ததால் பேசி முடித்துவிட்டார்களாம். பெரியவளுக்கு திருமணம் முடிந்தால்தானே இளையவள் சாருலதாவிற்கும் கூடிய விரைவில் திருமணம் நடத்த முடியும் என்று நீட்டி முழக்கிப் பேசியிருந்தாள் சாருலதாவின் தாயார்.

சாருமதிக்குத் திருமணம் என்றதும் உண்மையிலேயே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

நல்ல பெண். அவள் மேல் பிரியம் உள்ளவள்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தோட்டத்தில் உலாவினர்.

“மதிக்காகிட்ட பேசலாமா?”
“சரி.” என்ற யுகேந்திரன் உடனே தனது அலைபேசியில் இருந்து அவளது எண்ணிற்கு அழைத்தான்
மறுமுனையில் பேசிய சாருமதியிடம் தங்களது சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

அவள் வெட்கத்தால் சரிவர பேசவில்லை. உம் கொட்டியதோடு சரி.

பேசி முடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தனர்.

“நாம மதிக்காவுக்காக என்னென்ன யோசித்தோம்?”

கிருஷ்ணவேணி யுகேந்திரனிடம் கேட்டாள்.

“யோசித்தோம் என்று சொல்லாதே. யோசித்தேன் என்று சொல்லு. நீதான் மதிக்காவுக்கு அண்ணா மேல் விருப்பம் இருக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னே. இப்பப்பாரு சந்தோசமா கல்யாணப் பொண்ணா வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கிறா.”

“ஆமா. எனக்கு ஆச்சர்யமா இருக்கு.”

சிறிதுநேரம் பேசாமல் இருந்த கிருஷ்ணவேணி மீண்டும் யுகேந்திரனைப் பார்த்தாள்.

“ஆனா ஒன்னு. மதிக்கா மட்டும் உங்க அண்ணாவை காதலித்து அவர்கள் திருமணமும் நடந்திருந்தா ரொம்ப போரடிச்சிருக்கும்.”

“ஏன்?”

“ரெண்டு பேரும் பேசாமடந்தை. அப்புறம் வாழ்க்கை எப்படியிருக்கும்?”

இருவரும் சிரித்தனர்.

“நீ சொல்றது சரிதான் கிருஷ். அண்ணாவுக்கு கலகலப்பா இருக்கிற பொண்ணுதான் சரிவரும். அப்பதான் காம்பன்சேட் ஆகும்.”

“கிட்டத்தட்ட என்னை மாதிரி ஒருத்திதான் மகேனுக்கு பொருத்தம்னு சொல்றே?”

வாய்விட்டு கேட்டுவிட்ட கிருஷ்ணவேணி நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

கீழே குனிந்திருந்த யுகேந்திரன் அதைக் கேட்டானோ? இல்லையோ? அவனுக்குப் பின்னே நின்றிருந்த மகேந்திரன் கேட்டுவிட்டான். அவன் பார்வையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.

‘திட்டுவானோ?’ பயந்தவள் அவள் யுகேந்திரனுக்குப் பின்னே பதுங்கினாள்.

“எதுக்கு கண்டபடி பேசி இப்படி முழிக்கனும்?”

யுகேந்திரன் கிசுகிசுத்த குரலில் கடிந்தான்.

அவளுக்கும் தான் பேசியது அதிகம் என்று புரிந்தது. அமைதியானாள்.

“வா. போகலாம். அண்ணா உள்ளே போயிட்டான்.”

அமைதியான குரலில் பேசினான்.

அவனும் தவறாக எண்ணிவிட்டானா?

“யுகா.”

“இப்ப எதுவும் பேச வேண்டாம்.”



இருவரும் உள்ளே சென்றுவிட வேறுபக்கமாய் ஒதுங்கியிருந்த மகேந்திரனுக்கு அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழுந்திருந்தது.
அவள் பேசியது தன் தம்பிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பேச்சைத் தவிர்த்து உள்ளே செல்கிறான் என்று எண்ணிக்கொண்டான்.
Like Reply
#95
அவன் மனக்கண்ணில் “கிட்டத்தட்ட என்னை மாதிரி ஒருத்திதான் மகேனுக்கு பொருத்தம்னு சொல்றே?” என்று சிரித்தவாறே கேட்ட கிருஷ்ணவேணிதான் வந்து நின்றாள்.

சாருமதி கிருஷ்ணவேணிக்குத் தனியே அழைப்பு விடுத்திருந்தாள். தங்கள் வீட்டார் அவளை ஒரு பொருட்டாக மதித்து அழைப்பு விட்டிருக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவர்கள் பார்வையில் பணக்காரர்கள்தான் உறவினர்கள். மற்றவர்களை எக்காரணம் கொண்டும் சீந்த மாட்டார்கள்.
அவளுக்கு கிருஷ்ணவேணி போன்று தனது சகோதரியும் பிரியமானவளாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாய் இருந்தது.
அன்று அவளும் யுகேந்திரனும் பேசியபோது அவளால் முழு மனதோடு பேச இயலவில்லை. என்றாவது நடக்கப் போவதுதான். இதை அவள் எதிர்பார்த்திருந்தாள்தான். ஆனால் அவள் இடைஞ்சலாக இருக்கிறாள் என்று இத்தனை சீக்கிரம் தன்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் வேலையைச் செய்வார்கள் என்று அவள் நினைக்கவேயில்லை. அதனால் அவள் தன் மனதைத் தேற்றிக்கொள்ள சிறிது காலம் பிடித்தது.

“அவளை வீட்டில் வைத்திருக்கிறது பிரச்சினையை மடியிலேயே வைச்சிருக்கிற மாதிரி. நீ பிறந்த போது முடியலைன்னு கொஞ்ச நாள் என் மாமியார்க் கிழவிக்கிட்ட அவளை விட்டேன். அந்தக் கிழவி சாகுறதுக்குள். அவளை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டுதான் போச்சு. நானும் எவ்வளவோ அவளை திருத்த முயற்சி எடுத்தேன். அவ மட்டும் சரியா இருந்திருந்தா நீங்க ரெண்டு பேருமே இந்நேரம் அந்த வீட்டில் வாக்கப்பட்டு இருக்கலாம். அதான் இவளை வீட்டை விட்டு அனுப்பிவிடலாம்னு இந்த கல்யாண ஏற்பாட்டை அவசர அவசரமா ஏற்பாடு செய்யறோம்.”

சாருலதாவிடம் அவளது அன்னை பேசியது கேட்ட சாருமதி வறண்ட புன்னகையை சிந்தினாள்.

அவளுக்கு மகேந்திரன் மீது ஈடுபாடு உண்டுதான். ஆனால் தனது குடும்பத்தாரின் குணம் பற்றி அறிய நேர்ந்தபோது தனது ஆசையை அவளே குழிதோண்டி புதைத்துவிட்டாள்.

தன்னுடைய காதல் கட்டாயம் மகேந்திரன் வீட்டில் நிம்மதியின்மையைதான் விளைவிக்கும் என்று புரிந்துகொண்டாள்.

அதன் பிறகு அவனைக் காணும்போது அவளுக்கு ஏக்கமாய் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் தனது மனதைத் தேற்றிக்கொண்டு வேறு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாள்.

சாருமதியின் திருமணத்திற்கு கிருஷ்ணவேணியும் தயாராகிவிட்டாள். சாருமதியின் அழைப்பு வந்திருக்காவிட்டாலும் கண்டிப்பாக அவளுக்காக சென்றிருப்பாள்.

அத்துடன் யாரோ ஒரு நண்பர் வீட்டு விசேசத்திற்கே அவளை விட்டுவிடாமல் அழைத்துச்சென்றார் வனிதாமணி. இப்போது உறவினர் வீட்டு திருமணத்திற்கு விட்டுவிடுவாரா?

சாருமதிக்காக மோதிரம் ஒன்றை வாங்கியிருந்தாள். பரிசு வாங்க யுகேந்திரனும் கூட வந்திருந்தான்.

அவள் ஆசையுடன் வாங்குவதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்குத் தேவையானது பாசம் மட்டுமே. அந்தப் பாசத்தை அவளிடம் காட்டிவிட்டால் அவர்களுக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள். இதை ஏன் அவள் மனதை காயப்படுத்துகிறவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
திருமண மண்டபத்தில் நுழைந்தவர்களை வீட்டினர் வரவேற்றனர். அவளைக் கண்ட சாருலதா முகத்தைச் சுளித்தாள். அதை கிருஷ்ணவேணி கண்டுகொள்ளவில்லை.
யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் மணமகள் அறையை நோக்கிச் செல்ல வனிதாமணி தானும் வருவதாகச் சொல்லி அவர்களுடன் சென்றார்.

அவர்களைக் கண்டதும் சாருமதி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

“என்னம்மா கல்யாணப் பொண்ணு? எப்படியிருக்கே?”

வனிதாமணி கேட்டவாறே அவளை பிரியத்துடன் அணைத்துக்கொண்டார்.

“நல்லாருக்கேன் அத்தை.”

கிருஷ்ணவேணி அவள் அருகே வந்தாள்.

“வாழ்த்துக்கள் அக்கா.”

என்றவள் அவள் கையைப் பற்றி மோதிர விரலில் தான் வாங்கி வந்த மோதிரத்தை மாட்டியவள் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“இதெல்லாம் எதற்கு கிருஷ்?” நெகிழ்ந்துபோனவளாய் கேட்டாள் சாருமதி.

“இந்த தங்கச்சி நினைவா ஏதாவது தரனுமே?”

“அதை மேடையில் தந்திருக்கலாமே?”

“அங்கே இப்படி கட்டிப்பிடிச்சு கன்னத்தில் முத்தமிட்டு தந்து ஒருவரோட கோபத்தை ஏன் வாங்கிக்கனும்? அதுவும் நான் உங்களுக்காக தான் தர்றேன். மத்தவங்களுக்காக இல்லை.”

அவளைப் பற்றி தெரிந்திருந்த சாருமதி அதற்குமேல் பேசவில்லை.

மற்ற இருவரும் கிளம்ப கிருஷ்ணவேணியை தன்னுடனே இருத்திக்கொண்டாள் சாருமதி.



அப்போது மட்டுமல்ல. திருமண சடங்குகள் நடந்த போதும் தன்னுடனே இருத்திக்கொண்டாள்.
அந்த வீட்டாருக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. மகேந்திரனுக்கு முன்பு அவர்கள் நல்லவர்களாய் தெரிவது மிகவும் முக்கியம்.
Like Reply
#96
அருமையாக இருக்கிறது நண்பா
Like Reply
#97
இடையில் யுகேந்திரன் வந்து சாப்பிட அழைத்த போது அவன் பசி தாங்க மாட்டான் என்று அவனை சாப்பிடச் சொல்லிவிட்டாள். அவள் மணமக்கள் சாப்பிட வரும்போது வருவதாகச் சொல்லிவிட்டாள்.

சாருமதிக்கு அவளைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.
அவளை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறாள். தான் சொன்னதற்காக கூடவே நிற்கிறாள்.
அவளுக்கு இருக்கும் பாசம் கூட தன் உடன் பிறந்த தங்கைக்கு இல்லையே. தமக்கை திருமணமாகி புகுந்த வீட்டிற்குப் போகப் போகிறாள். அவளுடன் நேரம் செலவிடுவோம் என்று அவளுக்குத் தோன்றுகிறதா?

அவள் சாருலதா எங்கே என்று பார்த்தாள். அவள் மகேந்திரன் குடும்பத்தாரோடு உணவருந்தச் செல்வது தெரிந்தது.

ஒரு விரக்திப் புன்னகையுடன் மேடைக்கு வந்தவர்களிடம் கடனே என்று பரிசுப் பொருட்களைப் பெற்று புகைப்படம் எடுப்பதற்கு நின்றாள்.

ஒரு வழியாக உறவினர்கள் கூட்டம் குறைய மணமக்களை உணவருந்த அழைத்தனர். சாருமதி தன்னுடனே நின்றுகொண்டிருந்த கிருஷ்ணவேணியை விட்டுவிடாமல் அழைத்துச்சென்றாள்.

அவளும் வனிதாமணியிடம் சொல்லிக்கொண்டு சாப்பிட சென்றாள். அவள் எப்போது தனியாக மாட்டுவாள் என்று காத்திருந்த சாருலதாவும் அவர்களைப் பின்தொடர்ந்தாள். தன்னுடன் ஒரு தோழியையும் அழைத்துச்சென்றாள். இல்லை என்றால் அவள் நினைத்த காரியத்தை எப்படி செய்வது?

மணமக்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் கிருஷ்ணவேணி. அப்போது அங்கே பரிமாறுவது போன்று சாருலதா வந்து சேர்ந்தாள். அதைக் கண்ட சாருமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால் அவள் பேச ஆரம்பித்ததும் தங்கை மேல் வெறுப்பு அதிகமாகியது.

“சில பேர் பணக்கார வீட்டுத் திருமணத்திற்கு கூப்பிட்டா பல்லை இளிச்சுக்கிட்டு கையை வீசிக்கிட்டு வந்துடறாங்க. பாவம். இந்த மாதிரி எல்லாம் சாப்பாடு சாப்பிட்டு பழக்கம் இருக்காதுல்ல‘. போனாப் போயிட்டு போறாங்கன்னு விடறமாதிரி இருக்கு. நல்ல நாளும் அதுவுமா அன்னதானம் செய்தா நல்லதுதானே?”

சாருலதா தனது தோழியிடம் பேசிக்கொண்டே கிருஷ்ணவேணியை ஜாடையாகப் பார்த்தாள்.

கிருஷ்ணவேணியின் உடல் விரைத்தது. உணவு சாப்பிடுவதை நிறுத்தினாள். இது மாதிரி எத்தனையோ பேச்சுக்களை கேட்டவள்தான். இப்போது எழுந்துபோனால் சாருமதி வருத்தப்படுவாள். ஆனால் உணவு தொண்டைக்குழியை விட்டு தாண்ட மாட்டேன் என்று அடம்பிடித்தது.

சாருமதிக்கு கோபம் வந்தது.
இப்போது ஜாடையாகப் பேசுகிறாள். அவளிடம் கேட்கப் போனால் நான் என்ன கிருஷ்ணவேணியையா பேசினேன். பொதுவா சொன்னேன் என்று மறுப்பாள்.
மற்றவர்களுக்கு இப்போது அவள் யாரைச் சொல்கிறாள் என்று தெரியாது. நான் கேட்கப் போய் கிருஷ்ணவேணிதான் என்று மற்றவர்களுக்குத் தெரிந்துபோனால் அவள் கூனிக்குறுகிப்போவாள்.

அவள் மெதுவே கிருஷ்ணவேணியைத் தட்டிக்கொடுத்தாள். அவளும் சுதாரித்துக்கொண்டாள்.

சாருமதி தனது தங்கையை அழைத்தாள்.

“அக்கா. வேண்டாங்க்கா. என்னால் பிரச்சினை வேண்டாம்.”

கிருஷ்ணவேணி தடுத்தாள். அதை சாருமதி கண்டுகொள்ளவில்லை. மீண்டும் சாருலதாவை அழைத்தாள். அதுதானே அவளுக்கும் வேண்டும். தன்னை தமக்கை திட்டப்போகிறாள். நான் என்ன கிருஷ்ணவேணியைப் பற்றியா பேசினேன். என்று மற்றவர்களுக்கு அவளைத்தான் நான் திட்டினேன் என்று காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவளிடம் சாருமதி ஒரு மோதிரத்தைக் கழட்டி நீட்டினாள்.

அது சாருலதா பெருமையுடன் தனது சகோதரிக்கு மேடையில் அணிவித்தது.

“இது கொஞ்சம் லூசா இருக்கு லதா. நீ பத்திரமா வச்சுக்கோ. அப்புறம் நகைக்கடையில் கொடுத்து சரி செய்திடலாம்.”

என்று சொன்னவள் அதன் பிறகு அவளைக் கண்டு கொள்ளாமல் கிருஷ்ணவேணி பக்கம் திரும்பினாள்.

“அது எப்படி கிருஷ்? என்னோட தங்கச்சி என் கூடவே இருக்கா. அவளுக்கு என்னோட விரல் அளவு தெரியலை. நீ எப்படி சரியா என்னோட விரல் அளவு தெரிஞ்சு இந்த மோதிரம் வாங்கினே? இந்த மாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா? நான் இனி இதை என் விரலை விட்டு கழட்ட மாட்டேன்.”



மற்றவர்களுக்குக் கேட்கும்படி பேசியவள் கிருஷ்ணவேணியை சாப்பிட வலியுறுத்தினாள்.
தன் தங்கைக்கு இப்போது வைத்த குட்டு போதும் என்று தோன்றியது. அவள் தன்னை முறைப்பதைக் கண்டும் அவள் பயப்படவில்லை. இனி எப்போதும் பயப்பட போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். அவள் இப்போது அடுத்த வீட்டு பெண்ணாகி விட்டாள்.
அத்துடன் இப்போது மட்டும் அந்த இடத்தில் யுகேந்திரன் இருந்திருந்தால் சாருலதா பேசிய பேச்சிற்கு என்ன பண்ணியிருப்பானோ? நல்லவேளை அவன் இல்லை என்று நிம்மதி உண்டாகியது.

அவள் சாப்பிட்டுவிட்டு வர மணமக்களை அழைத்துச்செல்ல நேரம் வந்துவிட்டதால் மாப்பிள்ளை வீட்டினர் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அதன் பிறகு வீட்டாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களும் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த உடனே கல்யாண சாப்பாடு சாப்பிட்டது என்னவோ போலிருப்பதாகச் சொல்லிவிட்டு தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான் யுகேந்திரன்.

தனது அறைக்கு வந்த கிருஷ்ணவேணிக்கு ஏனோ மனம் சரியில்லை.

சாருலதா ஏன் தன்னை விரோதி போல் பாவிக்க வேண்டும்?

தான் அவளுக்கு என்ன கெடுதல் செய்தோம்?

எத்தனைதான் யோசித்தாலும் அவளுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

ஏனோ உறங்கப் பிடிக்கவில்லை.

மாடிக்குச் சென்று இயற்கைக் காற்றில் நின்றால் தேவலாம் போலிருந்தது.

அங்கே ஏற்கனவே மகேந்திரன் நின்றுகொண்டிருந்தான்.

அவளுக்குத் தனது பிரச்சினை பின்னுக்குப் போனது. அவனிடம் யுகேந்திரன் பற்றி இப்போது பேசலாமா என்று யோசித்தாள்.

உடனேயே பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவள் அவனை நெருங்கினாள்.

அவன் என்ன என்று பார்வையாலேயே வினவினான்.
அவளுக்கு அப்போதுதான் தான் அதிகப் பிரசிங்கித்தனமாக பேச வந்தது புரிந்தது. என் குடும்ப விசயத்தில் தலையிட நீ யார்? என்று கேட்டுவிட்டான் என்றால்.
அவளுக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“என்ன?”

அவன் குரல் அதட்டலாய் ஒலித்ததோ?

“நா…நா…ன்… நான் யுகா பத்தி பேச வந்தேன் சார்.”

ஒருவழியாகச் சொல்லி முடித்துவிட்டாள்.

“யுகா பத்திப் பேச என்ன இருக்கு?”

கோபமுடன் கேட்டான்.

அவள் ஒரு வழியாக சொல்லி முடித்துவிட்டாள்.

அவன் அவளை முறைத்தான்.

“அறிவிருக்கா உனக்கு?”
அவன் கேட்ட தொனியில் அவளுக்குள் நடுக்கம் பரவியது. தான் தேவையில்லாமல் அவனிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்டது புரிந்தது. திகைத்து விழித்தாள்
Like Reply
#98
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு
[Image: nivv.jpg]
றிவிருக்கா உனக்கு?”
மகேந்திரன் கேட்ட தொனியில் கிருஷ்ணவேணிக்குள் நடுக்கம் பரவியது.
அவளுக்குத் தான் அப்படி என்ன தவறாகப் பேசி விட்டோம் என்றே புரியவில்லை.

தான் தேவையில்லாமல் அவனிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்டது மட்டும் அவளுக்குப் புரிந்தது. திகைத்து விழித்தாள்.

“என்ன திரு திருன்னு முழிக்கிறே?”

அதற்கும் அதட்டலாய் கேட்டான்.

அவள் பதில் சொல்ல முடியாமல் பேசாமல் நின்றாள்.

சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள எடுத்துக் கொண்டான்.

பெருமூச்சை விட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டவன் அவளை நோக்கினான்.

மீண்டும் திட்டப் போகிறானோ? என்ற பயத்தில் அவனைப் பார்த்தாள்.

தன்னைக் காப்பாற்ற யுகேந்திரன் கூட வரமாட்டானே. அவள் மகேந்திரனிடம் பேசப் போவது அவனுக்குத் தெரியாதே.

அவன் என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறான் என்று தெரியாமல் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் வந்துவிட்டது புரிந்தது.

“இதப் பாரு. இந்த வீட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் வாரிசு. உனக்குத் தெரியும்தானே?”
அவள் ஆமென்று தலையாட்டினாள்
“அவனுக்கு இந்த சொத்தில் சம பங்கு உண்டு. அத்தோட அவன் எங்க எல்லோருக்கும் செல்லம் என்பதால் அவனுக்கு நிறையவே கொடுப்போம். அப்ப அவனுக்குன்னு வர்ற பங்குக்கான சொத்தை அவனால் எப்படி நிர்வகிக்க முடியும்? அதற்கான அறிவு அவனுக்கு வேண்டாமா? அவன் சொத்தைப் பெருக்க வேண்டாம். ஆனால் கிடைக்கிறதை கோட்டை விடாமல் இருக்க வேண்டுமல்லவா? பாட்டு கூத்து என்று அலைந்தால் அவனால் எப்படி சொத்தை நிர்வாகம் செய்ய முடியும்?”

அவளுக்கு அந்தக் கோணம் புதிது. அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை அப்படியே யுகேந்திரனிடம் சொன்னால் அவனும் புரிந்துகொள்வான்தானே?

அதையே அவள் மகேந்திரனிடம் சொன்னாள்.

அவன் அவளை முறைத்தான். மீண்டும் திட்டப் போகிறானோ? என்று பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“இதை எப்படி நான் யுகாவிடம் சொல்ல முடியும்? அவனிடம் சொன்னால் என்ன செய்வான்? எனக்கு சொத்து வேண்டாம். எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கங்க. ஏன் சொத்தைப் பிரிக்கனும்? என்று கேட்பான்.”

அவன் சொன்ன போது யுகேந்திரன் அப்படி சொல்லக்கூடியவன்தான் என்று புரிந்தது. அவளுக்குமே ஏன் சொத்தைப் பிரிக்கனும் என்று தோன்றியது.

அவளது பார்வையைக் கொண்டே அவள் மனதைப் புரிந்துகொண்டவன் சிறிது நேரம் கண்களை மூடி தனக்குள் பேசுவது புரிந்தது.

“எங்களுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துக்கொடுத்து அவனை தனிமைப்படுத்தனும் என்று ஆசையா என்ன? நாளைக்கே அவனுக்கு திருமணம் ஆகும். அப்போது அவனுக்கு தனியே சொத்து வேணும் என்று அந்தப் பெண் எண்ணினால்? அப்போதுதானே அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.”

ஒருவேளை மகேந்திரனுக்கும் திருமணம் ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு உண்டு. அதுவும் அந்த சாருலதாவை மகேந்திரன் விரும்புகிறான் என்றால் அப்படி நடக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

யுகேந்திரன் திருமணத்தைப் பற்றி அவன் பேசியதும் அவள் அமைதியானது கண்டு மகேந்திரன் மனம் வருந்தினான்.

அவள் திருமணத்திற்குப் பிறகு தம்பியைப் பிரித்துவிடுவாள் என்று நினைக்கவே மனம் தாளவில்லை. ஆனால் அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்றும் மனதின் ஒருபக்கம் அவனிடம் அறிவுறுத்தியது.

அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“நீ சொல்றதைப் பத்தி நான் அப்பவிடம் பேசுகிறேன். இப்போதைக்கு அவன் விருப்பப்படியே செய்யட்டும். அதன் பிறகு அவன் தொழிலைப் பொறுப்பேத்துக்கனும். பாட்டே தொழிலா வச்சுக்க முடியாது.”

அவன் தெளிவாகச் சொல்லிவிட அவள் நன்றி கூறிவிட்டு சந்தோசத்தோடு தனது அறைக்குச் செல்லத் திரும்பினாள்.

“ஆனால் ஒரு விசயம்.”

அவனது குரல் அவளை நிறுத்தியது.

நின்று திரும்பிப் பார்த்தாள்.



“அவனது தேர்வு முடிவைப் பார்த்தேன். எனக்குத் திருப்திகரமா இல்லை. இந்தக் கடைசி பருவத்தில் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுக்கனும். அப்படி எடுத்தாதான் அவனோட விருப்பத்துக்கு நான் சம்மதிக்க முடியும்.”
“கண்டிப்பா அவன் நல்ல மதிப்பெண்கள் எடுப்பான்.
அவள் நிச்சயமாகச் சொன்னாள்.

அவளுக்குத்தான் நன்றாகத் தெரியுமே. யுகேந்திரன் வேண்டுமென்றேதான் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கிறான் என்று.
அவள் சந்தோசத்துடன் செல்ல, அவனுக்கு உறக்கமே தொலைந்தது.
அவ்வளவு நிச்சயமா? அவள் சொன்னால் நிறைய மதிப்பெண்கள் எடுப்பானா?

தன் தம்பிக்காக இன்னொருவள் சிபாரிசு செய்ய வந்தது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

தனக்கும் தன் தம்பிக்கும் நடுவில் அவள் வருமளவிற்கு தங்கள் உறவு இருக்கிறதா? அந்த நினைவே அவன் மனதை உறுத்தியது.

அப்போது தங்களை விட அவளைப் பெரிதாக நினைக்கிறானா?
நேரம் போவதே தெரியாமல் நின்றவன் பிறகு தனது அறைக்குச் சென்றான்.
Like Reply
#99
Super bro continues
Like Reply
Super ji pls continue
Like Reply




Users browsing this thread: 42 Guest(s)