நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#41
“சாருக்கா. வீட்டில் யாரும் வரலையா?”

“அவங்க எல்லாம் வர்றாங்க. நான் நம்ம வீட்டோட சேர்ந்துபோகலாம்னு வந்தேன்.”
அவள் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
‘நம்ம வீடாமே.’

மகேந்திரன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். பின்னே உள்ள இருக்கையில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்துகொள்ள அதற்குப் பின்பக்கம் உள்ள இருக்கையில் சிறியவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டனர். மகேந்திரன் காரைக் கிளப்பினான்.

ரிசப்சனுக்கு சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டனர்.

சற்று நேரத்தில் சாருலதாவின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். அவர்களைக் கண்டதும் சாருமதி முகமலர்ச்சியுடன் ஓடிவந்தாள். கிருஷ்ணவேணியை அணைத்துக்கொண்டாள்.

சாருலதாவின் பெற்றோர் நாடகத்தனமான புன்னகையை சிந்தினர். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தனர்.

சாருமதி ஓரக்கண்ணால் மகேந்திரனை நோட்டமிட்டாள்.

அதை கிருஷ்ணவேணி கண்டுவிட்டு தனதருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனின் விலாவில் குத்தி அவன் திரும்பிப்பார்த்த போது ஜாடையாக காட்டினாள்.

அவன் தனக்கு தெரியும் என்று கூறினான்.

சாருமதி நல்லவள். அவள் மகேந்திரனின் மனைவியானால் கூட அவனை நல்லவிதமாக பார்த்துக்கொள்வாள். இந்த சாருலதா அல்லவா அந்த வீட்டிற்குள் நுழைய நினைக்கிறாள்.

பேசாமல் சாருமதியை மகேந்திரன் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.

தனது யோசனையை யுகேந்திரனிடம் கூறினாள்.
அது அவன் காதில் விழுந்ததா? இல்லையா? என்றே தெரியவில்லை

மீண்டும் அவனது விலாவில் இடித்து அவனது கவனத்தை தனது பக்கம் திருப்பினாள்.


அவன் திரும்பிப் பார்த்த பிறகு அவன் பக்கம் சாய்ந்தவள் அவனது காதில் சொன்னாள்.

“யோசனை நல்லாதான் இருக்கு. மதிக்கா வந்தா பின்னேயே அவ குடும்பமும்தானே நம்ம வீட்டுக்கு வரும். அதான் யோசனையா இருக்கு.”

அவர்கள் ரகசியம் பேசுவதை மகேந்திரன் கண்டுவிட்டான்.

எப்போதும் இருவரும் எதையோ பேசி சிரித்தபடிதான் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் பேசுவார்களோ? என்று சலிப்பாக வந்தது.

மணமக்களை பார்த்த மகேந்திரன் திடுக்கிட்டான்.

அவனது மனக்கண்ணில் மாடிப்படியில் தேவதை போன்று கிருஷ்ணவேணி இறங்கி வந்த காட்சியே தோன்றியது. சிறிது நேரத்தில் அதுவும் மறைந்தது.

இப்போது மேடையில் இருக்கும் மணமக்களின் இடத்தில் அவர்கள் ஜோடியாக இருப்பது போன்ற ஒரு காட்சி தோன்ற திடுக்கிட்டான்.

திரும்பி கிருஷ்ணவேணியைப் பார்த்தான். இன்னமும் அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

தனது மனதில் தோன்றிய எண்ணம் சரியில்லை என்று அவனது அறிவு இடித்துரைத்தது.

அதற்கு மேல் தன்னால் அங்கே இருக்க முடியாது என்று தோன்றியது.

தந்தையிடம் தனக்கு முக்கியமான கால் ஒன்று வந்திருப்பதாக சொல்லிவிட்டு தான் கிளம்புவதையும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

செல்லும் அவனை மற்றவர்கள் யோசனையுடன் பார்த்தனர். ரவிச்சந்திரன் மனைவியிடம் அவன் சொன்ன காரணத்தைச் சொன்னார்.
தன் பார்வையை கிருஷ்ணவேணியும் தனது தம்பியும் இருந்த பக்கம் திருப்பாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
காதல் வந்தா இப்படி தான் நடக்கும்
Like Reply
#43
மிக அருமை நண்பரே......
Like Reply
#44
Superb story continue please
Like Reply
#45
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 09 - ராசு

[Image: nivv.jpg]

திருமணம் ஏற்கனவே முடிந்திருந்ததால் மணமக்கள் மேடையில் நிற்க ஆரம்பித்த உடனே பரிசு கொடுக்கிறவர்கள் மேடை ஏற ஆரம்பித்தனர்.

வரவேற்பிலேயே கீர்த்திவாசனையும் அவரது மனைவியையும் பார்த்துவிட்டதால் மற்றவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன் பிறகு பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு பிறகு சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வனிதாமணி சொன்னார்.


அதனால் அங்கு நடந்துகொண்டிருந்த இன்னிசைக் கச்சேரியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.


அங்கே பாடிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து யுகேந்திரன் முகம் வாடியது. அவன் மனவோட்டத்தை அறிந்த கிருஷ்ணவேணி அவனது கையைத் தட்டிக்கொடுத்தாள்.



“யுகா. நான் வேணா கீர்த்திவாசன் அங்கிள்கிட்ட கேட்டு உனக்கு ஒரு வாய்ப்பு வாங்கித்தரவா?”



“கிருஷ். நீயும் என்னைக் கிண்டல் பண்றியா?”



“இல்லைடா. அங்கே பாடறவங்களை விட நீ நல்லா பாடறேன்னு எனக்குத்தோணுது. அதான்.”



“என் மனசு வருத்தப்படக்கூடாதுன்னு சொல்றே. அவர் நல்லாதான் பாடறார்.”



“வனிம்மா. நாம கிளம்பலாமா? மகேந்திரன் வேறு ஏதோ அழைப்பு வந்திருக்குன்னு போனான். நான் போய் என்னாச்சுன்னு பார்க்கிறேன். எனக்கும் முக்கியமான வேலை இருக்கு.”



“என்னங்க இப்படி சொல்றீங்க? நானே எப்பவாவது தான் வெளியில் வரேன். எல்லாரையும் பார்த்துப்பேசிட்டு கிளம்பலாம்னு இருந்தேன்.”



“சரிம்மா. நான் கிளம்பறேன். நீயும் மத்தவங்களும் இருந்துட்டு வாங்க.”



“வந்துட்டு சாப்பிடாம போனா நல்லா இருக்காது. வாங்க போய் பரிசைக் கொடுத்துட்டு சாப்பிடப் போகலாம். அதன் பிறகு நீங்க போங்க. இன்னிக்கு நீங்க காலில் வெந்நீர் கொட்டினாற் போல ஓடினால் நாளைக்கு நம்ம பசங்க கல்யாணத்திற்கு யார் வந்து நின்று பார்ப்பாங்க?”



ரவிச்சந்திரனுக்கும் அது சரியெனப்படவே ஒத்துக்கொண்டார்.

வனிதாமணி தங்களுடன் அமர்ந்திருந்த சாருமதியையும் தங்களுடன் மேடைக்கு அழைத்தார். அவளுக்கு அது சரியெனப்படவில்லை.



நீங்க போங்க அத்தை. நான் அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு நாசூக்காக விலகிக்கொண்டாள்.



அவர்கள் குடும்பமாக மேடை ஏறும்போது எந்த வித உரிமையும் இல்லாத தான் கூட ஏறுவது கூடாது என்று அவள் ஒதுங்கிவிட்டாள்.



ஏற்கனவே தங்கை செய்வதைப் பார்த்து மனம் நொந்திருப்பவள் அவள்.



வனிதாமணி தம்பதியுடன் யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் மேடை ஏறச்சென்றனர்.



அவர்கள் நால்வரும் மேடை ஏறுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சாருலதா எங்கிருந்தோ ஓடிவந்து அவர்களுடன் தானும் சேர்ந்துகொண்டு மேடை ஏறினாள்.



மகேந்திரன் மண்டபத்தை விட்டு வெளியேறியதும் அவளுக்கு அவர்களுடன் சேர்ந்து அமர முடியவில்லை.



அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பது போல் அவள் பக்கமே திரும்பவில்லை.



இதில் அவளது அக்கா சாருமதியும் சேர்ந்துகொண்டது வேறு அவளது எரிச்சலை அதிகப்படுத்தியது. தனது சகோதரியை நினைத்துப் பல்லைக் கடித்துக்கொண்டாள்.



இந்த நேரத்தில் சிரித்த முகமாக இருப்பது ரொம்ப முக்கியம். இல்லை என்றால் அவள் சிரமப்பட்டு செய்துகொண்டு வந்த அலங்காரம் காலை வாரி விட்டுவிடும்.



அவள் எத்தனை திட்டம் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி அந்தக் குடும்பத்துடன் தனக்கு உள்ள உறவை ஊர் அறிய விளம்பரம் செய்து கொண்டிருக்கிறாள்.



அது தெரியாமல் அவளது மக்கு அக்கா அதைக்கெடுக்கிறாளே என்று கோபமாய் வந்தது.



மகேந்திரன் வீட்டிலிருந்தே தன்னை பெண் கேட்டு வரவேண்டும் என்று அவள் விரும்பினாள். ரவிச்சந்திரனுக்கு அந்த எண்ணம் இருக்குமோ? என்னவோ? வனிதாமணிக்கு நிச்சயமாக இருக்காது என்று அவளும் அவளது பெற்றோரும் அறிந்திருந்தனர்.



மகேந்திரன் தொழிலில் நன்றாக காலூன்றிவிட்டான். அவனுக்குத் திருமணம் என்று வந்துவிட்டால் நான் நீ என்று அவனுக்குப் பெண் கொடுக்க போட்டிக் கொண்டு குவிந்துவிடுவார்கள் பெண் வீட்டார்கள்.



இதுவரைக்கும் அப்படி வந்திருக்கவில்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.



ஆனாலும் சாருலதாவை மகேந்திரன் விரும்புகிறான். அவளை இப்போதே தங்கள் வீட்டில் ஒருத்தியாக அவர்கள் நடத்தத்தொடங்கிவிட்டார்கள்.







அவள் அவர்கள் வீட்டுப்பெண் என்று மற்றவர்களுக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த வீட்டு விழாவுக்கு கிளம்பினாலும் அவளும் ஒட்டுப்புல் போன்று வந்து சேர்ந்துகொள்வாள்.
அவர்களுக்கும் எதுவும் சொல்ல முடியாது. மகேந்திரனும் ரவிச்சந்திரனும் என்ன நினைக்கிறார்கள் என்று வனிதாமணிக்குத் தெரியாது. ஆனால் அவரிடம் யுகேந்திரன் வந்து கத்துவான்.
Like Reply
#46
“அவ எதுக்கும்மா நம்ம வீடே கதின்னு கிடக்கிறா? நாம எங்கே போனாலும் உரிமையோட நம்மோடவே வந்து நிற்கிறா. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இது நல்லதுக்கில்லை. அவ என்னமோ மனதில் திட்டத்தோடதான் நடந்துக்கிறா?”

அவர்தான் அவனை கையமர்த்தி வைக்க பாடுபடுவார்.
அவள் அந்த வீட்டுப் பெண் என்று மற்றவர்களுக்கு பறைசாற்றவதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டாள் சாருலதா.
சாருலதாவை தெரியாதவர்கள் வனிதாமணியிடமே அவரது பையனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணா? என்று ஓரிருவர் கேட்டிருக்கின்றனர். அப்படி கேட்டதை அவர் இன்னும் யுகேந்திரனிடம் சொல்லவில்லை. இல்லை என்றால் அவன் கோபப்படுவான்.

அது முற்றிப்போவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் மனதை சதா சிந்தனை அரித்துக்கொண்டிருக்கிறது.

இப்போது கூட தன் மன எரிச்சலை ஆற்றிக்கொள்ளத்தான் அவர் கிருஷ்ணவேணியை இந்த வரவேற்பு விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

அவளும் கூப்பிட்ட உடனே வர விரும்பவில்லை என்று அவளும் யுகேந்திரனும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தவருக்குப் புரிந்தது.

யுகேந்திரனுக்கு மற்றவர்களைக் கண்ட உடன் எடை போடும் திறன் இயற்கையிலேயே கைவந்திருந்தது. இந்த விசயத்தில் அவன் தன்னைப்போல் என்று அவர் மனதிற்குள் நிறைய நேரம் வியந்திருக்கிறார்.

அதனால்தான் கிருஷ்ணவேணியுடனான பழக்கத்தைப் பற்றி அவன் பேசும்போது அவர் தவறாக நினைக்கவில்லை.

மகேந்திரனும் ரவிச்சந்திரனும் பெரும்பாலும் தாமதமாகத்தான் வருவர். யுகேந்திரனோ எங்கு சுற்றினாலும் ஆறு மணி தாண்டியதில்லை. அதற்குள் வீட்டிற்கு வந்திருப்பான்.

இருவரும் வரும் வரைக்கும் இவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அதனால் அவர்கள் வரும் வரைக்கும் அவன் தன் தாயாரோடு பேசிக்கொண்டிருப்பான்.

தனது கல்லூரியில் நடந்த கலாட்டாக்களை அவரிடம் சொல்லிச் சிரிப்பான்.

பள்ளியில் படிக்கும்போதிருந்தே அவனது பழக்கம் அது தான். இதனால் மகனைப்பற்றி அவரால் முழுதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கல்லூரியில் சேர்ந்த பிறகும் பள்ளிப்பையனைப் போலவே அங்கே நடந்ததை ஒப்பிப்பவன் சில நாட்கள் கழித்து அடிக்கடி ஒரு பொண்ணைப் பற்றியே பேசினான்.

அவருக்கு மகன் மேல் எந்த சந்தேகமும் வரவில்லை.

மனதில் கள்ளத்தனம் இருக்கிறவனால் இப்படி வெளிப்படையாகப்பேச முடியாது.

அவனது பேச்சைக்கேட்டு அவருக்குமே கிருஷ்ணவேணி மேல் ஒருவித பாசம் தோன்றிவிட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அவளை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது தான் கணித்ததில் தவறில்லை என்று அவருக்குப் புரிந்தது.

அதனால்தான் யுகேந்திரன் அவளை வீட்டிற்கு அழைத்து வரக்கேட்டபோது சந்தோசமாக சம்மதித்துவிட்டார்.

அதுவும் தனது விருப்பம் பற்றி சொல்லிவிட்டே அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர சம்மதம் கேட்டான். அவனது விருப்பம் தவறானதாக அவருக்குத் தெரியவில்லை.
தன்னுடைய மருமகள் கிருஷ்ணவேணி போன்று நல்லவளாக அமைந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று அவருக்குத் தோன்றியது.
கணவரும் மூத்த மகனும்தான் என்ன சொல்வார்களோ என்று தயக்கமாய் இருந்தது.
அவள் இந்த வீட்டில் வந்து வாழப்போகிறாள் என்றால் வீட்டில் உள்ள இருவருக்கு மட்டும் பிடித்தவளாய் இருந்தால் போதுமா?
இப்போது ரவிச்சந்திரனுக்கும் அவளைப் பிடித்துப்போய்விட்டது என்று அவரது பேச்சிலேயே தெரிகிறது.
கடவுளே! என் மூத்த மகனுக்கும் அவளைப் பிடிக்க வேண்டும். இதுதான் அவரது இப்போதைய வேண்டுதல்.
“அம்மா! வாம்மா. சாப்பிடப்போகலாம். அப்பா காத்துக்கிட்டிருக்கிறார்.”
இளைய மகனின் அழைப்பு அவரை நினைவில் இருந்து மீட்டது.
அவர்கள் உணவுக்கூடத்துக்குச் சென்றனர்.
சாருலதாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள் என்று சொல்லவும் வேண்டுமா?
சாப்பிட்டு முடித்த உடன் ரவிச்சந்திரன் கிளம்பிவிட்டார்.
“நான் போயிட்டு டிரைவரிடம் கார் கொடுத்து விடறேன்” என்றுவிட்டுச் சென்றுவிட்டார்.
அவர் போய்விட்டு டிரைவரை அனுப்ப எப்படியும் நேரமாகும். அதற்குள் சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்து பேசிவிடலாம் என்று கணக்குப் போட்டார்.
அப்போது “ஏய் வனி!” என்ற குதூகலக் குரல் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது.
யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் கூட நின்றுவிட்டனர்.
எதிரில் நின்றிருந்த பெண்மணியை சட்டென அடையாளம் தெரியாமல் விழித்த வனிதாமணி அவரது அழைப்பை நினைவுகூர்ந்து முகம் மலர்ந்தார்.

“மணி…? மணிதானே?”
கேள்வியுடன் பார்த்தார்.

Like Reply
#47
“ஆமா. மணியேதான்.”

என்று சொன்ன அந்தப் பெண்மணி வனிதாமணியை அப்படியே அணைத்துக்கொண்டார்.
அதில் ஒருவித வாஞ்சை தெரிந்தது.
எத்தனை வருடங்களாச்சு உன்னைப் பார்த்து? எப்படி இருக்கே? எத்தனை பிள்ளைங்க? ….”

மூச்சு விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்ட தன் பால்ய சிநேகிதி மணிமேகலையைப் பார்த்து “நீ மாறவேயில்லை” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு ஒரு ஓரமாக கிடந்த நாற்கலிகளில் அமர்ந்திருந்தனர்.

பிள்ளைகள் இருவரும் வனிதாமணியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

அவரை அந்த அளவிற்கு சிரித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி பார்த்ததேயில்லை. ஒரு சின்ன புன்னகையோடு நிறுத்திக்கொள்வார். இப்போது சத்தம் போட்டு சிரிக்கிறார் என்றால்?

அவர்களின் ஆச்சர்யப் பார்வையைப் பார்த்த உடன் வனிதாமணிக்கு வெட்கம் வந்துவிட்டது.

“என்னடா அப்படி பார்க்கிறே?” என்று தன் சின்ன மகனின் முதுகில் செல்லமாய் தட்டினார்.

அவரது முகத்தில் கோபம் தெரியவில்லை. கண்களில் ஒருவித மயக்கம் தெரிந்தது. ஒருவேளை தனது சிறுவயது நினைவுகளில் அவர் ஆழ்ந்திருக்கலாம் என்று அவரைத் தொந்தரவு செய்யாமல் சிறியவர்கள் இருவரும் மற்ற இருவரையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

இருவரும் இத்தனை வருடக்கதையையும் ஒரே நேரத்தில் பேசித்தீர்த்துவிடுவது போல பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.

திருமண வாழ்க்கை அவர்களின் நட்பிற்கு சிறிது இடைவெளி கொடுத்திருந்தது.

திருமணத்திற்குப் பின் தனது நட்பை தொடர்வது என்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
புது இடம் புதிய மனிதர்கள். அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டாம்.

நான் மாறவே இல்லைன்னு நீ சொல்றே? ஆனால் முதல்ல பார்த்தப்ப உயிர்த்தோழியான உனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு நான் மாறித்தானே போயிட்டேன். ஆனால் நீ அப்படியே இருக்கே.”


மணிமேகலை தனது பெருத்த உடலைப் பார்த்து பெருமூச்சுவிட்டவாறே வனிதாமணியிடம் புலம்பினார்.

அவரை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டார் வனிதாமணி.

“நான் நீ மாறவேயில்லைன்னு சொன்னது உன் குணத்தைதான். அதே கோயில் மணி போல கலகலவென்ற பேச்சு. அது என்ன உடம்பு பெருத்துடுச்சுன்னு வருத்தப்படறே? கல்யாணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்துவிட்டால் உடம்பில் மாற்றம் வருவது சகஜம்தானே? அதற்கு ஏன் வருத்தப்படறே?”

“நாம மட்டும் ஏன் இப்படி மாறிடுறோம்?” வருத்தமுடன் கேட்டார் மணிமேகலை.

“பெண்கள் தங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதேயில்லை. குடும்பம் குழந்தைகள்னு அவர்கள் உலகம் சுருங்கிப்போய்விடுவதில் தான், தன்னலம் என்ற எண்ணமும் பின்தங்கிவிடுகிறது. தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும். தனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று யோசிப்பதேயில்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் அதை வீட்டாருக்காக எப்படி செலவழிப்பது என்றுதான் யோசிக்க ஆரம்பிக்கிறாள். உடல்நிலை சரியில்லாமல் போய் படுக்கையில் விழும் நிலை வரும்போதுதான் அவளைப் பற்றிய சிந்தனை அவளுக்கும் அவளது குடும்பத்தாருக்கும் வருகிறது.”

என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் வனிதாமணி.

அவர்கள் பேசி முடிக்கும் வரைக்கும் சிறியவர்கள் இருவரும் அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியிருந்து அவர்களை வேடிக்கை பார்த்து ரசித்தபடி இருந்தனர்.

அதன் பிறகுதான் அவர்களுக்கு சுற்றுப்புறம் ஞாபகத்திற்கு வந்தது.

“இது யாரு? உன் மகனா? ஆமா. உனக்கு இரண்டு பசங்கங்கிறது வரைக்கும் எனக்கு தெரியும். இது யாரு? உன் மருமகளா?”

“ஆமா. என் மருமகள்தான்.”

என்று சொன்ன வனிதாமணி கிருஷ்ணவேணியின் திகைத்த தோற்றத்தைப் பார்த்தவாறே

“என் அண்ணன் பொண்ணு எனக்கு மருமகள்தானே?”

என்றார்.

“உனக்குதான் அண்ணனே இல்லையே?”

“இது என்னோட ஒன்றுவிட்ட அண்ணன் பொண்ணு.” என்று மீண்டும் வனிதாமணி சொன்னார்.

மணிமேகலைக்கும் கிருஷ்ணவேணியைப் பார்த்த உடனே பிடித்துவிட்டது.

அவளை அருகில் அழைத்தார்.

அவரது அருகில் வந்த அவள் காலில் விழுந்தாள். அவளை ஆசிர்வதித்து உச்சி முகர்ந்த மணிமேகலை



“நல்லப் பொண்ணா இருக்கா. கோட்டை விட்டுடாதே.” என்று வனிதாமணியின் காதில் கிசுகிசுத்தார்.
அது பக்கத்தில் நின்றிருந்த யுகேந்திரனின் காதில் விழுந்தது.
Like Reply
#48
நல்லா இருக்கு.
Like Reply
#49
Update bro
Like Reply
#50
good story.....
not much stories in the romance prefix
post more stories in these sections
Like Reply
#51
Waiting for update
Like Reply
#52
“அது நான் இருக்கிற வரைக்கும் நடக்காது மணிம்மா. நான் பார்த்துக்கிறேன். என்னோட அம்மாவிற்கு என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோணவே தோணாது. இதுவே மூத்த மகனா இருந்திருந்தா இந்நேரம் சொல்லியிருப்பாங்க.”

என்று குறைபட்டுக்கொண்டே அவனும் அவரது காலில் விழுந்தான்.
அவர் நெகிழ்ந்துபோனார். அவனையும் ஆசிர்வதித்து உச்சி முகர்ந்தார்.

அவன் மணிம்மா என்று அழைத்தது அவருக்குப் பிடித்திருந்தது. அவன் எப்போதாவது வனிதாமணியையும் வனிம்மா என்றுதான் அழைப்பான்.

“ஏன் வனி பிள்ளைக்கு ஓரவஞ்சனை பண்றே?” என்று மணிமேகலை அவரிடம் கடிந்துகொண்டார்.

“அதெல்லாம் இல்லை மணி. இவன் வேணும்னே வம்பிழுப்பான். சொல்லப்போனா இவனைத்தான் நான் அதிகம் கவனிக்கிறதே. நீ கிருஷ்ணாகிட்ட வேண்டுமானாலும் கேட்டுக்கோ.”

“போனாப் போயிட்டு போறாங்க மணிம்மா. அவங்களை மன்னித்து விட்டுவிடலாம். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு எத்தனை பசங்க. அவங்களை எல்லாம் அழைச்சுட்டு வந்திருக்கீங்களா?”

“இல்லைப்பா.”

“நீங்க அவசியம் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வரனும். அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க. அவங்களை இத்தனை கலகலப்பா நான் இன்னிக்குதான் பார்க்கிறேன்.”

அவரும் அதற்குச் சம்மதித்துவிட்டு பிரியாவிடை பெற்றார். தனது தோழியைப் பார்த்த சந்தோசம் வனிதாமணியின் முகத்தில் நிலைத்திருந்தது.

அவர்கள் கிளம்புவதைப் பார்த்துவிட்டு சாருமதி தலையசைத்து விடைகொடுக்க சாருலதா அவர்களுடன் தொற்றிக்கொள்ள விரைந்து வந்தாள். அவளைக் கண்டுகொள்ளாமல் காரை எடுக்கச் சொல்லி யுகேந்திரன் சொல்லிவிட ஓட்டுநரும் எடுத்து விட்டார்.

முன்னிருக்கையில் அவன் அமர்ந்துகொள்ள பின்னே வனிதாமணியும் கிருஷ்ணவேணியும் அமர்ந்துகொண்டனர்.

கிண்டலாகச் சிரித்துக்கொண்டே சாருலதாவிற்கு கையாட்டி விடைபெற்றான் யுகேந்திரன்.

அதைக் கண்டதும் அவள் முகம் கருத்தது. மனதிற்குள் கருவிக்கொண்டாள்.
“அவளைக் கண்டா ஒதுங்கிப்போக வேண்டியதுதானேடா? அவகிட்ட எல்லாம் எதுக்கு வம்பு வச்சிக்கிறே?”

வனிதாமணி அவனைக் கடிந்துகொண்டார்.


“நானாம்மா வலியக்க அவகிட்ட சண்டைக்குப் போறேன். அவ விடமாட்டேங்கிறாளேம்மா. மதிக்கா மாதிரி அவளும் இருந்தா நான் ஏன்மா அவகிட்ட பிரச்சினைக்குப் போறேன். வரும்போது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம முன்பக்கம் அண்ணாவோட பக்கத்தில் ஏறி உட்கார்ந்தா பார்த்தியாம்மா. நம்ம வீட்டில் உரிமை கொண்டாடறதுக்கு அவ யாரும்மா?”

பொரிந்து தள்ளிவிட்டான்.

அவருக்கும் அவன் சொல்வது எல்லாம் தெரிந்துதான் இருந்தது. சிறியவள் தவறு செய்தாள் என்றால் பெரியவர்களிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லலாம். இங்கே சாருலதா செய்யும் எல்லாமே அவளது பெற்றோர் அறிந்திருந்தனர். சொல்லப்போனால் அவர்களது எண்ணத்தைதான் அவள் செயல்படுத்திக்கொண்டிருக்கிறாள் எனும்போது அவளைப் பற்றி யாரிடம் கூறி கண்டிக்கச் சொல்ல முடியும்.

“ஏன் அத்தை? சாருக்காவைப் பிடிக்கலைன்னா மதிக்காவை யுகாவோட அண்ணாக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்ல. அவங்களும் அவர் மேல் விருப்பப்படறாங்கன்னு தெரியுது. தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க.”

“நீ ஒன்னும் தப்பா சொல்லலைம்மா. மதி நல்லவள்தான். ஆனால் அவ வந்தா அவ குடும்பமும் இங்கே நுழைஞ்சுடும். எந்த உரிமையும் இல்லாதப்பவே சொந்தத்தைக் காரணம் காட்டி அவங்க பண்றது தாங்கலை. உரிமை கிடைச்சுடுச்சுன்னா என்ன பண்ணுவாங்களோ தெரியலையே.”

“எப்படி அத்தே அம்மாவும் பையனும் சொல்லி வைத்த மாதிரியே பேசறீங்க?”

என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.

வீடு வந்து சேர வனிதாமணி அவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

யுகேந்திரனும் அவளிடம் விடைபெற்று சென்றுவிட கிருஷ்ணவேணி தனது அறைக்குச் சென்றாள்.

மகேந்திரனின் அறையில் விளக்கெரிந்தது. அறைக்கதவும் சிறிது திறந்திருந்தது. இன்னும் உறங்கவில்லை போலும் என்று தனது அறைக்குள் நுழைந்தாள்.

அதன் பிறகுதான் அறையில் தண்ணீர் இல்லாதது தெரிந்தது. சரி எடுத்து வரலாம் என்று அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அப்போது மாடியில் இருந்து மகேந்திரன் வந்துகொண்டிருந்தான். அவன் அவளைக் கவனிக்கவில்லை.



தலையைக் கையால் பிடித்தவாறே வந்துகொண்டிருந்தான்.
தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான்.
Like Reply
#53
அவள் மேலும் அங்கேயே நின்றிருக்காமல் கீழே இறங்கினாள். தண்ணீரை எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றவள் அங்கே ஏற்கனவே விளக்கு போடப்பட்டிருந்ததைப் பார்த்து அத்தை அமர்த்த மறந்துவிட்டாரா என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தாள்.

அதன் பிறகு அவள் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் கிருஷ்! எதற்கு இப்படி சிரிக்கிறே?”
கேட்ட யுகேந்திரனைப் பார்த்த அவளுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது.

வனிதாமணி எதற்காக வரவேற்புக்குப் போகும் அவசரத்திலும் சப்பாத்தியும் குருமாவும் செய்துவிட்டு வந்தார் என்று இப்போது புரிந்தது.

வாயில் சப்பாத்தி குருமா வழியதான் அவன் அவளிடம் கேள்வி கேட்டதே.

“டேய் அங்கே பங்சன்ல ஒழுங்கா சாப்பிட வேண்டியதுதானே?”

என்று குறைபட்டுக்கொண்டாள்.

“ஏன் சாப்பிடாம என்ன? சாப்பாடு என்ன ருசி? என்ன ருசி? சைடு டிஷ் எல்லாம் சூப்பர். அதுவும் ஊத்தப்பத்துக்கு பருப்பு போட்டு ஒன்னு வச்சிருந்தான் பாரு. அதை அடிச்சிக்கவே  முடியாது. அப்புறம் பரோட்டாவுக்கு கொண்டைக்கடலை போட்டு குருமா இருந்துச்சில்ல. அது செம டேஸ்ட். இரண்டு இட்லிக்கு மூன்று வகையான சட்னி. பத்தாததற்கு இனிப்பு வகைகள் வேறு.”

“இரண்டு இட்லி சாப்பிட்டதுதான் பத்தலையா? இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?”

“நான் கேட்காம இருப்பேனா? நான் கூப்பிட்ட போது சாப்பாடு வைக்கிறவர் இன்னும் வேணுமான்னு என் பக்கத்தில் இருக்கிறவங்களை எல்லாம் கேட்டாரு. ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை.”

“நீ பிரஷ்டீஜ் பார்த்துக்கிட்டு இருந்துட்டியா?”

“என்னைப் பார்த்தா ஒல்லியா இருக்கேனா? அதனால் நான் அதிகமா சாப்பிட மாட்டேன்னு அவரே முடிவு பண்ணிட்டாரு போல. அதுக்கு நான் என்ன பண்றது? அப்படியும் வெட்கத்தை விட்டு கூப்பிடத்தான் நினைத்தேன். அதற்குள் எனக்குப் பக்கத்தில் சாப்பிட அமர்ந்திருந்தவர்கள் சதி பண்ணிட்டாங்க. சாப்பாட்டோட இலையை மூடி வச்சிட்டு கிளம்பிட்டாங்க. ஆமா! அவங்க எல்லாம் எதற்கு சாப்பிடுவதற்கு பந்திக்கு வர்றாங்க? டீசன்டா சாப்பிடறேன் பேர்வழின்னு பாதி சாப்பாட்டை வீணடிக்கிறாங்க.”

“சரி சரி. வருத்தப்படாதே. இனி நீ போற எல்லா விழாக்களிலும் நாமே சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடற மாதிரி ஏற்பாடு செய்துக்கலாம்.”
என்று அவள் கூற “உனக்கு என்னோட நிலைமை கிண்டலா போச்சு,” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடுவதைத் தொடர்ந்தான்.

அவளுக்குத் தலையைப் பிடித்தவாறே மாடியில் இருந்து இறங்கிய மகேந்திரனின் தோற்றம் கண்முன் வந்தது.


அவன் முன்பே விழாவில் இருந்து கிளம்பிவிட்டானே. சாப்பிட்டிருப்பானா என்ற சந்தேகம் எழுந்தது.

“ஆமா. உங்க அண்ணன் சாப்பிட்டிருப்பாரா?”

“அவன் என்னை மாதிரி இல்லை. அடிக்கடி சாப்பிட மாட்டான்.”

“இல்லை. இன்னிக்கு விழாவிலிருந்து சாப்பிடுவதற்கு முன்பே கிளம்பிவிட்டாரே. அதான் சாப்பிட்டாரா என்று கேட்டேன்.”

“அவன் என்ன சின்னப் பிள்ளையா? அதெல்லாம் சாப்பிட்டிருப்பான். முக்கியமான வேலைன்னு போனான்ல. அங்கேயே வேலை முடிஞ்சதும் அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு வந்திருப்பான்.”

அவளுக்கு என்னவோ அவன் சாப்பிட்டிருப்பான் என்று தோன்றவில்லை. ஆனால் அவனை சாப்பிட வரச்சொல்லி கூப்பிடும் தைரியமும் அவளுக்கில்லை. இப்போது ஏதோ கொஞ்சம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்கிறது. இப்போது போய் தேவையில்லாமல் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தோன்றியது.

இருந்தும் மனம் கேட்காமல் பாலை எடுத்துக் காய்ச்சினாள்.

அவனுக்கு குடிப்பதற்கு டீ போட்டு கொண்டு போகச் சொன்னால் யுகேந்திரன் கொண்டு போய் தருவான்.

வீட்டில் சாப்பாடு இருப்பது தெரிந்திருந்தாலும் மகேந்திரன் எடுத்துச் சாப்பிட்டிருக்க மாட்டான். எப்போதுமே வனிதாமணி எடுத்துவைத்துதான் அவன் சாப்பிட்டிருக்கிறான். அவனாக சமையல் அறைக்கு வந்தது இல்லை.

அப்போது சமையல் அறையின் வாசலில் அரவம் கேட்க இருவரும் திரும்பிப்பார்த்தனர்.

“என்னண்ணா?”

“தண்ணீர் இல்லை. எடுக்க வந்தேன்.”

தண்ணீர் ஜக்கைக் காட்டினான்.



தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பியவனை அழைத்தாள் கிருஷ்ணவேணி. அழைத்த பிறகு எந்த தைரியத்தில் அழைத்தோம் என்று பயத்துடனே பார்த்தாள்.
அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
Like Reply
#54
சாப்பிட்டீங்களா சார்.”

“என்ன…?”
“சாப்பிட்டீஙகளான்னு கேட்டேன் சார்.”
அவன் இல்லையென தலையாட்டினான்.
“உட்காருங்க. எடுத்துவைக்கிறேன்.”
அவள் சொன்ன உடன் கையைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவையும் அவன் எதிரே கொண்டு சென்று வைத்தாள்.
அவன் சாப்பிடத் தொடங்கினான். இதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தான் யுகேந்திரன். (சாப்பிடும் வேலையைத்தான்)
இருவருமே சாப்பிட்டு முடித்த உடன் தட்டை எடுத்து விலக்குவதற்கு எடுத்துப்போட்டாள்.
“கிருஷ். ரொம்ப நேரமாயிடுச்சு. சுத்தம் செய்யக் கிளம்பிடாதே. காலையில் எழுந்து பார்த்துக்கலாம்.”
அவள் சரி என்றாள்.
மகேந்திரனைப் பார்த்து தயங்கி நின்றவள் தயக்கத்தை விடுத்து மீண்டும் அவனிடம் கேட்டாள்.
“சார். பால் தரவா? இல்லை டீ போட்டு தரவா?”
அவன் ஏன் என்பது போல் பார்த்தான்.
“இல்லை. நீங்க மாடியில் இருந்து தலையைப் பிடித்தவாறே இறங்கி வந்தீங்க. அதான் கேட்டேன்.”
தயக்கத்துடன் சொன்னாள்.
“இப்ப பரவாயில்லை. பாலே குடிக்கிறேன்.”
அவன் சொன்ன உடன் பாலில் பனங்கல்கண்டு போட்டு ஆற்றி இளஞ்சூடாக இருவருக்கும் கொடுத்தாள்.
“கிருஷ். நீயும் குடி.”
அவளும் தனக்கு எடுத்துக்கொண்டாள். இங்கே வந்ததில் இருந்து வனிதாமணி பழக்கி வைத்தது.
மூவரும் தங்கள் அறைக்குத் திரும்பினர்.
அறைக்குத் திரும்பிய மகேந்திரனுக்கு தன் மன உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
தன்னைக் கண்ட உடனே தனக்குத் தலைவலி என்று கண்டுபிடித்துவிட்டாளே.
அம்மா மாதிரியே நான் பட்டினியோடு இருப்பது தெரிந்து சாப்பாடு எடுத்துவைத்துக்கொடுத்து சாப்பிட சொன்னவளை நினைத்துக்கொண்டான்.
என்னதான் அவன் அவளை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தாலும் அதை செயல்படுத்த விடாமல் எதுவோ தடுக்கிறது.
வரவேற்பில் மணமக்கள் இடத்தில் தங்களைக் கண்டுவிட்டு மனம் பதறி வேலை இருப்பதாக சொன்னவன் நேரே வீட்டிற்கு வந்து தனது படுக்கையில் படுத்துவிட்டான்.
உறங்க முடியவில்லை,
மனப்புழுக்கம் தாங்காமல் மாடியில் காற்று வாங்கப்போனான்.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட பிறகுதான் கீழே இறங்கி வந்தான்.
தலைவலி நிற்கவில்லை. தண்ணீராவது குடித்துவிட்டு படுக்கலாம் என்றுதான் சமையல் அறைக்கு வந்ததே. ஆனால் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை.
முதலில் மனவேதனையில் தலைவலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவனுக்குப் பசியினால்தான் தலைவலியே உண்டாயிற்று.
அவள் அக்கறையோடு சாப்பாடு எடுத்து வைத்தபோது அவனால் மறுக்க முடியவில்லை.
சாப்பிட்ட உடன் தலைவலியும் போய் விட்டது.
அவளது அக்கறை மனதை நெகிழச்செய்தது.
ஆனால் அவளது “சார்” என்ற அழைப்பு மனதைக் குடைந்தது.
தம்பியை மட்டும் “யுகா” என்று செல்லமாக அழைப்பவள் தன்னை மட்டும் சார் என்று அழைத்து அந்நியப்படுத்துவது மனதை உறுத்தியது.
றுநாள் காலை.
யுகேந்திரன் கிளம்பி வந்து வெகு நேரமாகியும் கிருஷ்ணவேணி எழுந்து வந்திருக்கவில்லை.
வனிதாமணியும் அவனிடம் கேட்டுவிட்டார். கல்லூரிக்குச் செல்ல வேறு நேரமாகிவிட்டது. இத்தனை தாமதப்படுத்த மாட்டாளே என்று அவளது அறைக்கு ஓடினான்.
இன்னும் கதவு மூடியிருந்தது.
கதவைத் தட்டினான்.
அவனது சத்தத்தில அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த மகேந்திரனும் எட்டிப்பார்த்தான்.  
உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. பதட்டமானான். இன்னும் பலமாகத் தட்டியவன் அவளை அழைத்தான்.
Like Reply
#55
என்ன ஆச்சு நண்பா
Like Reply
#56
Update bro
Like Reply
#57
Update
Like Reply
#58
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு

[Image: nivv.jpg]

யுகேந்திரன் பயந்து போய் கதவை பலமாய்த் தட்டினான்.


கிருஷ்ணவேணியால் எழுந்து கதவைத் திறக்க முடியவில்லை. தள்ளாடியவாறே எழுந்து கதவைத் திறந்தாள்.

அவளைக் கண்டதும் யுகேந்திரன் துடித்துப்போனான்.

“என்னாச்சு கிருஷ்?”

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். அதன் பிறகு தரையில் உருள ஆரம்பித்தாள்.

அவளைத் தூக்கச் சென்றவனை அவள் தன் அருகிலேயே விடவில்லை.

“அம்மாஆஆஆஆ,,,”

அங்கிருந்தவாறே யுகேந்திரன் தன் தாயைக் கத்தி அழைத்தான்.

வனிதாமணியும் பதறியவாறே மாடி ஏறி வந்தார்.

அவளைக் கண்ட உடனே என்ன பிரச்சினை என்று அவருக்குப் புரிந்துவிட்டது.

அவரும் அனுபவித்து வந்தவர்தானே?

மாதாந்திர தொந்தரவு அவளைப் போட்டு வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.

குனிந்து அவளைத் தூக்கி கைத்தாங்கலாய் படுக்கைக்கு அழைத்துச்சென்றார்.

“யுகா. நீ கல்லூரிக்குக் கிளம்பு. அவளால் இன்னிக்கு வரமுடியாது.”

“நானும் போகலைம்மா. அவளை இந்த மாதிரி விட்டுவிட்டு என்னால் போக முடியாது.”

“நீ கூட இருந்து என்ன செய்யப்போறே. கொஞ்ச நேரத்தில் அவள் சரியாகிவிடுவாள். நான் பார்த்துக்கொள்கிறேன்.”

அவன் அவளைப் பார்த்தான். அவள் புழுவாய் சுருண்டு கொண்டிருந்தாள்.

“அம்மா. நான் பார்த்துக்கிறேன்னு சொல்றீங்க. அவ துடிக்கிறதை என்னால் பார்க்க முடியலை, ஏதாவது செய்யுங்கம்மா. ஏதாவது செய்யுங்க.”

“என்னடா பண்ண முடியும்?”

“டாக்டரைக் கூப்பிடலாம்ல.”

“இதுக்கெல்லாம் கூப்பிட முடியாது. ஒவ்வொரு மாசமும் மாத்திரை மருந்தை எடுத்துக்க முடியாது. இதெல்லாம் தாங்கிக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இயற்கையாவே உண்டாகிவிட்டது. கிராமத்தில் எனக்கு எங்கம்மா கருப்புக்கலரோ, சோடாவோ வாங்கித்தருவாங்க. கொஞ்ச நேரம் அவ தூங்கினான்னா எல்லாம் சரியாப் போயிடும்.”

அவர் என்னவோ எளிதாகச் சொல்லிவிட்டார்.

ஆனால் புழுவைப் போலத் துடித்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணியால் தூங்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.

“கருப்புக்கலர்னா என்னம்மா?”

“அதெல்லாம் வேண்டாம். நான் அவளுக்குக் கசாயம் வைத்துக்கொடுத்துக்கொள்கிறேன். நீ கிளம்பு.”

அவனை விரட்டிவிட்டார்.

அவனுக்கு மனம் கேளவில்லை,

தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அப்போது சாருலதா அங்கே வந்துகொண்டிருந்தாள்.

அங்கே வந்த உடன் என்ன பிரச்சினை என்று தெரிந்துகொண்டாள்.

அவளுக்கு ஒன்றென்றால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி துடித்துப்போயிருக்கிறார்கள்.

ஆமாம் அந்த மகேந்திரன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட்டாள். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.

அவன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் திரும்பி யுகேந்திரன் கிளம்பி வந்தான்.

அவன் தான் வாங்கி வந்தவற்றை தாயிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த வனிதாமணி நெகிழ்ந்துபோனார். தன் மகனைப் பற்றி பெருமிதம் கொண்டார்.

அதில் பவண்டோ குளிர்பானமும் சோடாவும் இருந்தது.

“அம்மா. வெறும் சோடான்னா குடிக்க முடியுதோ என்னவோ? அதோட கொஞ்சம் எலுமிச்சைப் பழத்தை பிழிஞ்சு கொடுங்க.”

“அவளுக்கு இப்பதான் நான் சோம்பை வெறும் சட்டியில் போட்டு கருக்கி கசாயம் வைத்துக்கொடுத்தேன். அவ கொஞ்சம் தூங்கட்டும். அப்புறமா அவளுக்கு என்ன வேணுமோ நான் பார்த்துக்கொடுக்கிறேன். நீ இப்ப கிளம்பு.”

அப்போதும் மனம் கேளாமல் உள்ளே வந்தவன் சிடி பிளேயரில் ஏதோ ஒரு மெல்லிசையை ஒலிக்கவிட்டு சென்றான்.

அவன் வாங்கி வந்தவற்றை அவளது அறைக்குள்ளே எடுத்துச் சென்ற தனது மகனின் செயலை நினைத்துச் சிரித்தவாறே அவளிடம் சொன்னார்.



அவளது கண்களில் கண்ணீர்.
“என்னம்மா? வலி இன்னும் குறையலையா?”
Like Reply
#59
அவள் ‘இல்லை’ என தலையாட்டினாள்.

அவள் அருகே அமர்ந்தவர் அவளது தலையைக் கோதிவிட்டார்.
“காலை நல்லா நீட்டி படு. தூங்குவதற்கு முயற்சி பண்ணு.”

அதன் பிறகு அவர் அவளிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.

அவளது தலையைக் கோதியவாறே அவளது தோளிலும் மெல்லத் தட்டிக்கொடுத்தார்.

அத்துடன் மெல்லிசையும் சேர்ந்தது. அதனால் அவளுக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது.

அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்த பிறகே அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

அறையின் கதவை மெதுவாக சாற்றிவைத்துவிட்டு வெளியேறினார்.

ல்லூரிக்கு வந்துவிட்டாலும் யுகேந்திரனால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

மதிய நேரமே கிளம்பிவிட்டான்.

அவனைக் கண்டதும் வனிதாமணிக்கு வியப்பு ஏதும் இல்லை.

யுகேந்திரனின் இயல்பே ஒருத்தர் மேல் பாசம் வைத்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

கிருஷ்ணவேணி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் வரவேற்பறையில் வந்து அமர்ந்தான்.

“யுகா. நீ சாப்பிட வா.”
இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். கிருஷ்ணவேணியே கண் விழித்து வரட்டும் என்று அவன் காத்திருந்தான்.

கிருஷ்ணவேணி மெதுவாக கண்விழித்தாள்.

இப்போது அவள் உடல்நிலை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. குளித்தால் தேவலாம் போன்றிருக்க குளியல் அறைக்குள் புகுந்தாள்.

குளித்துவிட்டு வந்தவளுக்கு அங்கிருந்த மேசையில் யுகேந்திரன் வாங்கி வந்திருந்த குளிர்பானங்கள் இருந்தன.

தான் வயிற்றுவலியால் துடிக்கும்போது அதைவிட அதிகமாய் யுகேந்திரன் துடித்ததை அந்த நிலையிலும் அவள் கவனித்திருந்தாள்.

அவன் மட்டுமா?

வனிதாமணி அவளுக்காக கசாயம் வைத்துக்கொடுத்து தான் உறங்கும் வரையில் அருகிலேயே அமர்ந்து ஆறுதலாய் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தாரே?

இதுவரை அவள் வாழ்வில் இந்த இதம் கிடைத்ததில்லை.

உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.

“என்னடாம்மா? இப்ப எப்படியிருக்கு?”

“நல்லாருக்கேன் அத்தே?”

“வா. சாப்பிட்டுவிட்டு வரலாம்.”

அவள் அருகிலேயே அமர்ந்து அவளுக்கு உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தார்.

சாப்பிட்டு முடித்த உடன் அவளும் வரவேற்பறையில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு யுகேந்திரனைப் பார்க்கவே வெட்கமாய் இருந்தது.

எந்த அளவிற்கு மற்றவர்களைப் பதற வைத்துவிட்டாள்.

அது தெரிந்தோ என்னவோ அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சியைப் பற்றி அவளிடம் விமர்சனம் செய்து சூழ்நிலையை கலகலப்பாக்கினான்.

மாலை நேரம் அவர்கள் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

வனிதாமணியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

“மன்னிச்சிடுங்க அத்தே. எல்லாரையும் போட்டு படுத்தி எடுத்திட்டேன். எப்பவாவது இந்த மாதிரி தாங்க முடியாத வலி உண்டாகிடுது.”

“அதற்கு ஏன்மா மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசறே? சொந்தபந்தம்னா சந்தோசத்தில் மட்டும்தான் பங்கெடுத்துக்கனுமா? இந்த மாதிரி நேரத்தில்தான் அனுசரணையா இருக்கனும். இனி நீ என்ன பண்றேன்னா குளியல் வருவதற்கு முன்பே அன்னாசி பழம் பப்பாளி பழம்னு சாப்பிடு.”

“சரித்தே.”

அத்துடன் அதை மறந்துவிட்டு மற்ற விசயங்களை கலகலப்புடன் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அப்போது மகேந்திரனின் கார் வருவதைப் பார்த்த வனிதாமணி உள்ளே சென்றார்.

“அப்ப வயித்துவலின்னு சொல்லிட்டு நாடகம் ஆடினியா?”

சாருலதாவின் குரோதக்குரலில் திரும்பிப் பார்த்தனர்.

அவளும் மகேந்திரனோடு வந்திருக்கிறாள். அவர்களை தோட்டத்தில் பார்த்த உடன் உள்ளே போகாமல் அவர்களிடம் வம்பிழுக்க வந்துவிட்டாள்.

“நாடகம் போடறது எல்லாம் உன்னோட வேலை.”

யுகேந்திரன் கோபத்துடன் அவளுக்குப் பதில் சொன்னான்.

“நானா வயித்துவலின்னு சொல்லி படுத்துக்கிடந்தேன்?”

யுகேந்திரன் ஏதோ சொல்லப்போக கிருஷ்ணவேணி அவனைக் கையமர்த்தினாள்.



சாருலதா வேண்டுமென்றே பேசுகிறாள் என்று அவளுக்குப் புரிந்தது.
அவளுக்கு ஏனோ தன்னைப் பிடிக்கவில்லை. அது ஏனென்றும் தெரியவில்லை.
Like Reply
#60
அவர்கள் சாருலதாவைக் கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பிக்க அவள் எரிச்சல் தாளாமல் உள்ளே வந்தாள்.

என்னதான் மகேந்திரன் காலையில் கிருஷ்ணவேணி உடல்நிலை சரியில்லாமல் போயிருந்ததை கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்குக் கிளம்பினாலும் அங்கே அவனால் வேலையில் சரிவர ஈடுபடமுடியவில்லை. இதோ இப்போது கிளம்பியே வந்துவிட்டான்.
அதைக் கண்ணார கண்டவளுக்கு கிருஷ்ணவேணி மீது கோபம் கோபமாய் வந்தது.

அவள் எப்படியோ அந்த வீட்டில் உள்ளவர்களை எல்லாம் மயக்கி வைத்திருக்கிறாள்.

யாரோ எப்படியோ போகிறார்கள். ஆனால் மகேந்திரன்?

அவனுக்காக தான் தீட்டியிருக்கிற திட்டம்?

எத்தனை வருடக் கனவு?

இவர்கள்தான் தன்னைப் பெண் கேட்க மாட்டேன் என்று அடம் பண்ணிய மாதிரி இருக்கிறார்கள்?

தனது பெற்றோராவது மாப்பிள்ளை கேட்டு வரலாம் என்றால் அக்கா சாருமதி தடையாக இருக்கிறாள்.

முதலில் அவளை வீட்டை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டும்.

அவளும் மகேந்திரனைப் பார்க்கும் பார்வை சரியில்லை.

சாருமதி அவளது அப்பத்தாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ அவளது வீட்டினருக்கு உள்ள கெட்ட குணம் எதுவும் அவளிடம் இல்லை. அதுவே அவளது தாய்க்கு பெரும் குறையாக இருந்தது.

“அந்தக் கிழவியிடம் தெரியாத்தனமா விட்டுட்டேன். அது அவளைக் கெடுத்து வச்சிருக்கு.”

என்ற வசைபாடல் அவளது இறந்துபோன மாமியாருக்கு கிடைக்கும்.
அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் சாருமதிக்குக் கோபம் வரும். ஆனால் வெளிக்காட்ட முடியாது.

அவளுக்குத் துணை என்று அந்த வீட்டில் யாருமில்லை.

ல்லூரியில் உள்ள நூலகத்திற்குப் போய்விட்டு வந்துகொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

யுகேந்திரன் ஏதோ பாட்டு போட்டி இருக்கிறது என்று வேறு கல்லூரிக்குச் சென்றிருந்தான்.

அவளுக்குத் தனிமை போரடித்தது. அதனால் நூலகத்திற்கு வந்து படித்துவிட்டு இப்போது கிளம்புகிறாள்.

இன்று காலையில் அவள் அவனுடன்தான் வந்தாள்.

அவளது ஸ்கூட்டி காலையில் திடீரென்று மக்கர் செய்தது. அதனால் அவன்தான் அழைத்து வந்திருந்தான்.

இப்போது யுகேந்திரன் இல்லாததால் பேருந்து ஏறிச்செல்வதா? இல்லை ஆட்டோ பிடித்துச் செல்வதா? என்று யோசித்தவாறே நடக்க ஆரம்பித்தாள்.

“கிருஷ்ணா.”

அவளை அழைத்தவாறே முரளி ஓடிவந்தான்.

அவனும் அவளது வகுப்பில்தான் படிக்கிறான்.

நிறைய நேரம் அவளிடம் பேச முயற்சிப்பான். யுகேந்திரனைக் கண்டதும் பேசாமல் போய்விடுவான்.

இப்போது அவள் தனியாக இருக்கவே இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று வந்துவிட்டான்.

“சொல்லு முரளி. என்ன வேணும்?”

“நீ ஏன் கல்லூரி விடுதியில் தங்காமல் யுகேந்திரனோட வீட்டில் போய் தங்கியிருக்கே?”

அது எதற்கு உனக்கு என்பதுபோல் அவனைப் பார்த்தவள் பதில் சொல்லாமல் கிளம்பினாள்.

அவன் யார் தன்னைக் கேள்வி கேட்க?

என்று அவளுக்கு கோபமாய் வந்தது.

எதிரே நின்று கையை நீட்டி அவளது வழியை மறித்தான்.

“நான் உன்கிட்டதான் கேட்கிறேன். பதில் சொல்லாமப் போனா என்ன அர்த்தம்?”

“பதில் சொல்லப் பிடிக்கலைன்னு அர்த்தம்?”

“அவன்கிட்ட இருக்கிற பணம்தானே உன்னை அவன்கிட்ட இழுத்துட்டு போயிருக்கு?”

“நீ எப்படி வேணா எண்ணிக்கோ? எனக்கு அதைப் பத்தி கவலையில்லை. நான் எங்கே? எப்படி? இருக்கிறேன்னு உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.”

“இல்லை. எனக்கு அந்த அவசியம் இருக்கு. நான் உன்னைக் காதலிக்கிறேன்.”



அவன் சொன்னதும் அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“கிருஷ்ணா. நல்லா யோசிச்சு முடிவெடு. அவன்கிட்ட பணத்தைத் தவிர என்ன இருக்கு? அழகும் இல்லை. படிப்பும் இல்லை. இது ரெண்டுமே என்கிட்ட இருக்கு. பார்த்தா உனக்கே தெரியும். என்ன என்கிட்ட பணம்தான் இல்லை. அதுக்குன்னு நான் ரொம்ப ஏழைன்னு நினைச்சிடாதே. ஓரளவு நடுத்தர குடும்பம்தான். எனக்கிருக்கிற அறிவுக்கு நான் படித்து முடித்த உடனே வேலை கிடைச்சிடும். நான் உன்னை வசதியா வச்சுப் பார்த்துப்பேன். நீயும் வேலைக்குப் போனா இன்னும் வசதியா இருக்கலாம். தயவு செய்து நீ அவனோட பழக்கத்தை விட்டுரு. பணக்கார பசங்களை நம்பவே முடியாது. அவன் உன்னை ஏமாத்திடுவான்.”
Like Reply




Users browsing this thread: 36 Guest(s)