அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(02-01-2021, 10:19 AM)Doyencamphor Wrote: Happy New year to everyone. Sorry got bit busy. Will try to update by tonight.

நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Excellent screenplay
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply
Waiting for your updates
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
பாகம் - 63 

அதே காலகட்டத்தில், டெல்லியில்,

தன் வாழ்வின் தூண்கள் என்று யாரை எண்ணியிருந்தாளோ, அவர்கள் தனக்கு இழைத்த துரோகத்தினை எண்ணி எண்ணி கண்ணீர்விட்டவளின் காயத்திற்கு, அவள் வடித்த கண்ணீரே மருந்தானது. காலத்திற்கும், கண்ணீருக்கும் ஆறாத காயங்கள் எது? தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது.

இந்த நான்கு வருடங்களில் மதுவின் வாழக்கையை முன்நகர்த்தியா முக்கியமான சில நிகலவுகள்.

*************

கல்லூரி முடிந்து ஒருவருடம் கழித்து,

ரஞ்சித், Nero surgeon ஆகும் முனைப்பில், சிங்கப்பூர் சென்று படிப்பதற்க்கு முன் மதுவுக்கும், அவனுக்கும், நடந்த உரையாடல்.

"அப்புறம், அடுத்து என்ன பிளான்?" சிங்கப்பூர் செல்வதற்கு முன், ஒரு வாரம் சென்னையில் தங்கி விட்டுச் செல்லலாம் என்று, தனது மூட்டை முடிச்சுகளை கட்டிய ரஞ்சித், டாக்சிக்கு காத்திருந்த வேளையில், அருகிலிருந்த மதுவிடம் கேட்டான்.

"உனக்கு டாட்டா காட்டிட்டு, வீட்டுக்கு போகணும்!!" சிரித்தால் மது. சில நிமிட அமைதிக்குப் பின்

"ஐ லவ் யூ!!, மதி!!" மீண்டும் கடந்த ஒரு வருடமாக, மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டிவிட்டால் ரஞ்சித். ரஞ்சித் சொன்னதை நம்பமுடியாமல், வலதும் இடமுமாக தலையசைத்தாள்.

"உன்னை நான் வற்புறுத்துறேனு நினைக்காத!! ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவுதான்!!" என்றவனை பார்த்து சிரித்தாள், மது.

"என்னை, எதுக்கு நீ மதினு கூப்பிடுற?" பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான், ரஞ்சித்.

"ரஞ்சித்!!" மது பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தான் ரஞ்சித்.

"நீ, உன்னோட வெண்ணிலாவ, என்கிட்ட தேடுற, நீ சொல்றத ஒத்துக்கீட்டு, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாகூட உன்னால சந்தோஷமா வாழ முடியாது!!. முதல்ல, அவளத்தாண்டி உன் வாழ்க்கைய பத்தி யோசி!!" நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் மது.

"உன்னால, அவனைத் தாண்டி யோசிக்க முடியுமா மது?" தன் மனதில் பட்டதை கேட்டான் ரஞ்சித்.

"தெரியல!! ஆனா, கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்!! வாழ்க்கையா வாழ்ந்தாகனும்ல!!" சிரித்தவள், சில நொடிகள் யோசித்துவிட்டு.

"ஆனா, கண்டிப்பா அவனோட பிம்பத்தை, என்னால, யார்கிட்டயும் பார்க்க முடியாது!!" தீர்க்கமாக சொன்ன மது, அவனிடம் விடைபெற்று சென்றாள்.

*************

"எனக்கு நீங்க தெய்வம் மாதிரி!!" நாற்பதுகளின் தொடக்கத்தில், தன்னைவிட பத்துப் பதினைந்து வயது மூத்த பெண்மணி, தன் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அழ, உணர்ச்சிக் கொந்தளிப்பில், சிரமப்பட்டால் மது.

12 வயது சிறுவன், கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் அடிபட்டு, பந்தின் தாக்கத்தால் அடி பட்டவுடனேயே சுருண்டு விழுந்திருந்தான். அவனை, ஹாஸ்பிடல் கொண்டு வரும்பொழுது, சுயநினைவை இழந்திருந்தான். அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்ட அன்று, trauma careல் மதுதான், டூட்டி டாக்டர். முதல்உதவி சிகிச்சை அளித்த பின், வழக்கமாக செய்யப்படும் சோதனைகள் முடிவுகளில், அந்தச் சிறுவனின், மண்டையோட்டின் பின்பகுதியில் சின்ன கிராக், அதுவும் போக பந்தின் தாக்கத்தால் concussion தான், மயக்கத்திற்கு காரணம் என்று அறியப்பட்டது. (கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கலாம். நுரையீரல் போல, மூளையும் பஞ்சு போல் மிருதுவானது(ஹி!! ஹி!!). ஒரு உயிரின் மொத்த செயல்பாட்டையும், கட்டுக்குள் வைத்திருக்கும் மூளை, உடலமைப்பில், இருப்பதிலேயே கடினமான எலும்பால் ஆனா, மண்டை ஓட்டினுள், தண்ணீர் போன்ற திரவத்தில், மிதந்து கொண்டிருக்கும். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளில், தலையின் வேகமான அசைவு, அந்தத் திரவத்தின் பாதுகாப்பிலிருந்து மண்டை ஓட்டில் உட்புற சுவர்களில் மூளையானது மோதும் பொழுது, ரத்தக் கசிவோ அல்லது வீக்கமோ ஏற்பட்டு, நினைவு இழக்கும் பாதிப்புதான் இந்த concussion).

மூன்று நாட்களாகியும் நினைவு திரும்பாத சிறுவன், இனி பிழைப்பது கடினம் என்றே முடிவு செய்தது, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த, மதுவும் அங்கமாக இருந்த, மருத்துவக் குழு. நான்காம் நாள் ஏற்பட்ட, ஒரு சின்ன முன்னேற்றம் கொடுத்த நம்பிக்கையில், சிகிச்சைகள் வேகம் எடுக்க, பத்து நாள் கழித்து கண்விழித்தான், அந்த சிறுவன். மருத்துவக் குழுவும் பெரிதாக சாதித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்க, உயிர் பிழைத்த அந்தச் சிறுவனின் பெற்றோர், மருத்துவர்களை தெய்வமேன பார்த்தனர். அவர்கள் அந்த மருத்துவக் குழுவின் தலைவரான கோபால கிருஷ்ணனிடம், நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான், அவர், மதுதான், அவர்கள் மகன் பிழைப்பதற்கு முக்கிய காரணம் என்று கைகாட்டிவிட்டு சென்றிருந்தார். அதன் பின்னால் நடந்ததே, மதுவின் சிரமத்திற்கு காரணம்.

************

இரண்டு நாள் கழித்து,

மது வேளை பார்க்கும் மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான கேன்டினில், மதிய உணவு உண்டு கொண்டிருந்தாள், மது.

"நான் இங்க உட்காரலாமா!! மா??" சத்தம் வந்த திசையைப் பார்த்தாள், மது.

"ஐயோ சார்!! ப்ளீஸ் உட்காருங்க!!" கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே சொன்னாள், மது.

"தாங்யு!! மா!!" அமர்ந்தவர், உணவருந்த தொடங்கினார்.

"இட்ஸ் அண்பேர் சார்!! Dr.சிங்தான் மேக்ஸிமம் எஃபாட் போட்டாரு!! அவர் இருக்கும்போதே, எல்லா கிரெடிட்டையும் எனக்கு கொடுத்தது!!.இட்ஸ் அண்பேர் சார்!!" இரண்டு நாட்களாக சொல்ல வேண்டும் என்று மனதில் இருந்ததை, நேரம் வாய்த்ததும் சொல்லிவிட்டாள், மது. நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தவர்,

"இந்த ரெண்டு வருஷத்துல, இந்த மாதிரி எத்தனை கேஸ் நீ பார்த்து இருக்க?" மதுவைப் பார்த்துக் கேட்டார்.

"ஒரு...... இருபது.... இருபத்தைந்து கேஸ் இருக்கும்!!" திடீர் கேள்வியில் குழம்பினாலும், பதில் அளித்தாள் அது

"நான் ஹெட் இஞ்சுரி கேஸ் கேட்கலா மா!!, கண்காஷன் கேஸ், எத்தனை அட்டென்ட் பண்ணி இருக்க?" தன் கேள்வியை தெளிவாக்கினார்

"இதுதான் பர்ஸ்ட்!!" சில நொடிகள் யோசித்தவள், உதடு பிதுக்கினாள்.

"நானும், Dr. சிங்கும், எங்க சர்வீஸ்ல, இத மாதிரி எத்தனை கேஸ் பார்த்திருப்போம்னு நினைக்கிற?" அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"................" மீண்டும் உதடு பிதுக்கியவள், "எனக்கு எப்படித் தெரியும்?" என்பது போல் தோள்களை உயர்த்தினாள்

"ஜஸ்ட், த்ரோ மீ சம் நம்பர்?"

"ஒரு... அம்பது... அறுபது!!" குத்துமதிப்பாக சொன்னால் மது.

"இட்ஸ் ஜீரோ!!, சீ, ஹெட் இஞ்சுரி ரொம்ப ரெகுலரான ஒன்னு!! நான் உன் வயசுல இருக்கிறப்ப, வருசத்துக்கு, முப்பது, நாற்பது கேஸ் பார்த்திருப்பேன்!! பட், கண்காஷன் எனக்கும் சரி, நீ சொன்ன Dr.சிங்குக்கும் சரி, இதுதான் பர்ஸ்ட் டைம்!! அண்ட், உனக்கே தெரியும், நான் சும்மா பேசணும்னு பேசுற ஆள் கிடையாது!! அதுவும் போக, டாக்டர் சிங், என்கிட்ட சொன்னதத்தான் , நான் அந்த பையனோட, பரேண்டஸ் கிட்ட சொன்னேன்!!. நீயும் தமிழங்கிரதால இல்ல!!. You deserve it. Characters are not made in crisis, they are exhibited!!. You exhibited your talent in a crisis. That's it!! இன்னும், அந்த பாராட்டுக்களுக்கு, தகுதி இல்லை உனக்கு தோணுச்சுன்னா, ஐ டேக் பேக் மை வேர்டஸ்!!" என்றவர், எழுந்து கை கழுவச் சென்றார். சுய கழிவிரக்கத்தில் இருந்து, தன்னை மீட்டுக்கொள்ள, போராடிக்கொண்டிருந்த மதுவிற்கு, பெரும் தாக்கத்தைத் அந்த தருணம் அது.

****************

இரண்டு வாரங்கள் கழித்து,

"நான் எப்ப? திரும்பவும் கிரிக்கெட் விளையாட முடியும்?" எப்பொழுதும் போல் தினசரி பரிசோதனைக்கு சென்றிருந்த மதுவைப் பார்த்து, சாவை நெருங்கி, தொட்டுவிட்டு, அதன் பிடியில் இருந்து, தப்பிவந்த அந்த சிறுவன் கேட்டான். கொஞ்சம் உடல்நிலை தேறியதும், அவன் கேட்ட கேள்வியில், மதுவும் திகைத்துத்தான் போனாள். சமாளித்துக்கொண்டு.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!!" என்றவள், அவன் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள்.

அந்தச் சிறுவனின் அன்னையோ, எரித்துவிடுவது போல் தன் மகனை முறைத்துக் கொண்டிருந்தாள். அன்றைய பரிசோதனை சுற்றை முடித்து கொண்டு, தனது அறைக்கு வந்த மதுவின் நினைவில் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, அவனது அம்மா கொடுத்த எதிர்வினையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கள்ளம் கபடமில்லாத சிறுவர்களின் உலகம் மிகவும் அலாதியானதுதான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற, தனக்குள் சிரித்தவள், அந்தச் சிறுவனின் அம்மா முறைத்தது நினைவுக்கு வர, தான் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தவள், அடக்க மாட்டாமல் வாய்விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பை இடையூறு செய்தது, தொலைபேசி அழைப்பு. ரஞ்சித் தான் அழைத்திருந்தான். அழைப்பை எடுத்து தொலைபேசியை காதுக்கு கொடுத்தவள்,

"இன்னும் ஹாஸ்பிடல்ல தான இருக்க?" ஹலோ என்று சொல்வதற்கு முன்னமே, ரஞ்சித் கேட்க, அப்பொழுததான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, அவன் டெல்லி வருகிறேன் என்று சொன்னது, மதுவுக்கு.

"இல்லையே!! வீட்டுக்கு வந்துட்டேன்!!" சமாளித்தாள்.

"தேங்க் காட்!!, கதவ திற!!, நான் வெளியே தான் வெயிட் பண்றேன்!!" என்று ரஞ்சித்து சொல்லவும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்த மது

"ஒரு, 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுறியா?" "என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தாள்.

"இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்க?" நான்கு வருட நட்பில், மதுவை முழுதாக புரிந்து வைத்திருந்தான் ரஞ்சித்.

"சாரி டா!! சாரி டா!!" என்று வழிந்தாள்.

"பொய் சொன்னதுக்கும், என்ன வெயிட் பண்ண வச்சதுக்கும், உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்னு, நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள, ஒழுங்கா வந்து சேரு!!" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

மது வேலைபார்த்த ஹாஸ்பிடல் அருகே, மிகவும் பாதுகாப்பான, ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் ஒன்றில்தான் வசித்து வந்தாள். குடியிருப்பவர்களையும், அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் படிப்பை முடித்தவன், இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்கு பின், இப்பொழுதுதான் மதுவைப் பார்க்க டெல்லி வருகிறான், ரஞ்சித்.

*********************

20 நிமிடம் கழித்து,

அப்பார்ட்மெண்ட் வாயிலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள், மது.

"மேடம்!! உங்கள பாக்குறதுக்கு விசிட்டர் வந்து இருக்காங்க!!" மதுவை கவனித்துவிட்ட காவலாளி, அவளிடம் ஓடி வந்து சொன்னார்.

இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சித், அப்புறம், இங்கு மருத்துவமனையில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், புதிதாக நடப்பு வட்டத்தில் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களை மட்டுமே, தன்னை பார்க்கவரும் விருந்தினர்களாக பதிவு செய்திருந்தாள் மது. "எதுக்காக ரஞ்சித் விசிட்டர் ரூம்ல வெயிட் பண்ணனும்" என்ற சிந்தனையுடனே, வாயில் கதவின் அருகிலேயே இருந்த விசிட்டர் அறைக்குள் நுழைந்தவள், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள். பின் சுதாகரித்துக் கொண்டவள்,

"இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது??" என்றவள், விறுவிறுவென்று தனது அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி நடந்தாள்.

"பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!! பானு மா!!" என்ற சிவகாமியின் கெஞ்சல், அவள் நடையின் வேகத்தை கூட்டியது. முதலில் வேகமாக நடக்க ஆரம்பித்தவள், சிவகாமியை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளிகளிடம், அவள் கெஞ்சுவது காதில் விழ, ஓட ஆரம்பித்தாள்.

அப்பார்ட்மெண்டில் நுழைந்தவள், தன் தோள் பையை சோபாவில் எறிந்தாள். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, அமைதியாக அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்து, இரண்டு நிமிடம் கூட இருக்காது, அவளது தொலைபேசி அடித்தது, அதை எடுத்து காதுக்கு கொடுக்க,

"மேடம், உங்கள பாக்க வந்தத விசிட்டர், மயங்கி விழுந்துட்டாங்க!!" காவலாளி அறையில் ஒருவர் பேச, அவள் உள்ளம் முரண்டு பிடித்தாலும், கால்கள் ஏனோ வாயிற்கதவை நோக்கி விரைந்தது. எதிரே வந்து கொண்டிருந்த, ரஞ்சித்தை கவனியாமல் ஓட்டமும் நடையுமாக பதட்டமாக கடந்து சென்று அவளை கேள்வியாக பார்த்தவன், பின் அவள் பின்னால் சென்றான். பார்வையாளர் அறையிலிருந்த ஷோபாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் சிவகாமி. ஏற்கனவே தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தது முகத்தில். ஒரு நிமிடம் தன் தாயின் நிலையை நினைத்து கலங்கித்தான் போனாள் மது.

"ஆம்புலன்ஸ்க்கு சொன்னீங்களா?" சிவகாமியைப் பரிசோதித்தவள், வாயில் காவலர்களிடம் வினவினார். அவர்கள் இல்லை என்று தலையசைக்க, அவள் ஆம்புலன்சுக்கு அழைக்க முயற்சிக்கையில் தான்

"வேண்டாம், கார்ல கொண்டு போகலாம்!!" என்ற ரஞ்சித்தின் சத்தம் கேட்டு அவனை பார்த்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில், மது வேலை செய்யும் மருத்துவமனையிலேயே, அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் சிவகாமி. மருத்துவமனையில் நுழைந்ததும், அட்மிட் செய்வதற்கான படிவம் ரஞ்சித்தின் கைகளில் கொடுக்கப்பட, அவனோ, செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, அவன் கையிலிருந்து அதை வாங்கிய மது கடகடவென பூர்த்தி செய்து கொடுத்தாள். ஏதோ ஒரு அவசர நிலைக்கு உதவுகிறாள் என்றுதான் அதுவரை நினைத்திருந்தால் ரஞ்சித், பின் கடந்த இரண்டு வருடத்தில் பழகிய நபராக இருக்கக்கூடும் என்று நினைத்தான்.

பத்து நிமிடம் கழித்து,

"கவலைப்படுவதற்கு ஒண்ணுமில்ல!!, ஹைபர்தென்ஷன், ஹை B.P.!! செட்டேட் கொடுத்திருக்கோம்!! இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு வரைக்கும் அபசர்வேசன்ல்அ வச்சிருக்கலாம்!!, ஸ்டேபில இருந்தா, நாளை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!!" என்ற, மருத்துவர், அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

மருத்துவர் சென்றதும், சிவகாமியின் அருகில் அமர்ந்தவள், தன் அன்னையைப் பார்த்தாள். அவள் மறக்க நினைத்த வாழ்வின் எண்ணங்கள், மனதை நிரப்பிக்கொள்ள, மதுவின் மனதோ, உலைகலன்யென, பலதரப்பட்ட உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கிடந்தது. தன் எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவள், உறங்கிக் கொண்டிருக்கும், தன் தாயை நிமிர்ந்து பார்த்தாள். கடைசியாகப் பார்ப்பதைக் காட்டிலும், சற்று மெலிந்து இருந்தால், தோலின் மினுமினுப்பு காணாமல் போயிருந்தது, முடிகளில் பாதி நரைத்திருந்தது. சிவகாமியை யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு சென்ற பொழுது, "பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!!" என்ற தன் தாயின் வார்த்தைகளில் இருந்த வலி, இப்போதுதான் மதுவின் மனதை எட்டியது. மனதை எட்டிய வலி, கண்ணீராக, கண்களின் வழியே வலிய, துடைத்துக் கொண்டுவளை

"யாரு இவங்க?" ரஞ்சித்தின் கேள்வி, அவளை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. மதுவின் கண்களில் வழிந்த கண்ணீர், ரஞ்சித்தின் அமைதியையும் கலைத்திருந்தது.

"அம்மா!!" கண்களில் இருந்து மீண்டும் கண் நீர் வெளியேறியது.

முதலில் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தின் மனதில் ஆயிரம் கேள்விகள். ஆனால் சூழ்நிலை கருதி, தக்க சமயம் வரும்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியானான்.

************


தொடர்ச்சி......
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
தொடர்ச்சி......

மறுநாள் காலை

"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான்உள்ளே நுழைந்ததும் பார்த்தால்மது.

"என்கிட்ட தான்இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள்தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள்தலையை குனிந்து கொண்டாள்சிவகாமி.

அதிகாலையில்தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம்வாயில் காவலர் ஒருவர் வந்துதற்பொழுதுசிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.

"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல்எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,

"நீபோய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம்தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.

அன்று மாலை மணி,

"உன்னோட பிளைட் டிக்கெட்இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டைதன் தாயிடம் நீட்டியவள்மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள்மது.

எப்பவும் சொல்லாத சிவகாமிமது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள்சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.

"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேசஎனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.

"எனக்குத் தெரியும்எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள்கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"என்ன மன்னிக்கவே மாட்டியாபானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால்சிவகாமி.

"உன்னஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள்ரஞ்சித் அறையில் நுழைந்ததும்கண்களை துடைத்துக் கொண்டாள்

உள்ளே வந்த ரஞ்சித்மதுவின் காதில் ஏதோ சொன்னான்அவனிடம்அவள் "தேங்க்ஸ்" என்றதும்அவன் அங்கிருந்து நகர்ந்தான்சிவகாமியிடம் திரும்பிய மது,

"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளைகெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள்சிவகாமிஒரு பெருமூச்சு விட்ட மது.

"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள்அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம்அந்த அறையைவிட்டு வெளியேறினாள்மது.

*************

இன்று இரவு,

"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.

"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித்சிவகாமிவாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான்அதை வாங்கி மதுஅதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல்கபோர்டு திறந்துஅதைஅதற்குள் வைத்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால்ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,

"சரிஇப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால்ரஞ்சித்திடம் பேசுவதற்குஇப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.

"நெக்ஸ்ட் வீக்பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித்சொன்ன செய்தியும்அவனது சிரிப்பும்மதுவைசிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டதுபின்னர் அது தொடர்பான பேச்சிலேயேஅடுத்த அரை மணி நேரம் செல்லதூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள்மது.

"மதி!!" மதுகதவை அடைக்கும்முன்அவள் பெயர் சொல்லி அழைத்தான்ரஞ்சித்.

"உனக்கும்உங்கம்மாக்கும்என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட்முடிஞ்சாஅவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,

"உன்னாலவெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள்விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.

"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித்போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.

**************

மற்ற உறவுகளை போல் அல்லாமல்பெற்றவர்களும்உடன்பிறந்தவர்களும்நமக்கு கொடுக்கப்பட்ட உறவுமற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதுபிடித்திருக்கிறதோஇல்லையோஅவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோஇல்லையோசாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவுஅதுநான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும்அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்துகசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம்அதுவரைஅவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியதுகாந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலைஉறவுகளும்சமூகம் அண்ணார்ந்து பார்த்தஎப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம்அந்த கம்பீரம் அவள்எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லைகாலத்தாலோவிதியாலோஇழந்த மதியாலோநிகழ்ந்த ஒரு நிகழ்வுதாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.

துணை இல்லாமல்இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதைகடந்த நான்கைந்து வருடங்களில்தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள்மதுஅப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல்முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்ததுஅந்த வார்த்தைகள் கூடஉடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்ததுஉண்மையைச் சொல்லப் போனால்அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல்அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கைகுடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டிவாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்

அதே நேரத்தில்தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூடஅதற்கு மது கொடுத்த விலைஅவளது வாழ்க்கை என்பதால்தன் தாயை மன்னிக்கும் மனநிலையைதான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள்இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும்குறுகிய காலமென்றாலும்உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன்கொடுப்பினை போன்றதொரு வாழ்வைமணியுடன் வாழ்ந்திருந்தாள்அவள்அனைத்தையும் தாண்டிவாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின்மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமாஅப்படி முடியும் என்றால்தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானாஅவனின் வாழ்வில்தனது முக்கியத்துவம்அவ்வளவுதானாஅடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்குஎல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளைஅவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஇரு கேள்விகளுக்கும் விடையை எண்ணிஎண்ணிஅவள் எத்தனை முறை கலங்கினாள்கண்ணீர் விட்டாள்என்பதை காலம் மட்டுமே அறியும்இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால்அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு

**************

மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்குஇரண்டு வாரங்களுக்கு முன்மதுவின் வாழ்வில்

தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும்அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்கமதுஅந்தச் சிறுவனுக்குஅன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளைஆராய்ந்து கொண்டிருந்தாள்ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான்மதுஎன்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும்அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால்பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால்அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,

"ஒன்னும் இல்ல பயப்படாதஇளம் வயதிலேயேஉயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்

பின் தன் கவனத்தைமருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள்அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,

"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறதுமயக்கம்இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தாகெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும்பெற்றோரின் முகத்தில் நிம்மதிசிறுவனின் முகத்தில்அதே பரிதவிப்புஅதைக் கண்ட மதுஎன்ன? என்பது போல்அந்த சிறுவனைப் பார்த்தாள்

"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்லவிளையாட முடியுமாமுடியாதாஎன்றுதான் என்பதை உணர்ந்த மதுசிரித்து விட்டாள்அந்தச் சிறுவனின் பெற்றோரோஅவனை எரித்து விடுவதுபோல்முறைத்துக் கொண்டிருந்தனர்.

"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள்மது.

ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்புஅவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியதுஅதுவும் இல்லாமல்ஒரு டாக்டராகஅந்த சிறுவன்முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும்அந்த சிறுவன்அறையிலிருந்து வெளியேறியதும்அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள்ஒருவாராகஅவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள்அவர்கள் சம்மதித்ததும்மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள்இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன்மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,

"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்டதன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டுஅழ ஆரம்பித்துவிட்டான்அந்தச் சிறுவன்அவன் அழுகையை நிறுத்துவதுபெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்குசிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில்மது நெகிழ்ந்திருந்த வேலையில்பட்டெனஅவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்அந்தச் சிறுவன்தமிழ்நாட்டைப் போல் அல்லாமல்வட இந்தியாவில்பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதுவழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும்அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லைஅவள்அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.

*************

அன்று இரவு,

சாப்பிட்டு முடித்தவளுக்குஅந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்ததுமனதில்அந்தச் சிறுவனின் பரிதவிப்புதிரும்பத்திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்ததுசிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில்இதேபோன்ற பரிதவிப்புடன்இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றதுஅவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போகமுகம் வெளிறியதுகண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

***************

நிகழ்காலம்.

அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்ததுஅவினாஷ் தாக்கறின்கிரீன் பவர் நிறுவனத்தைகையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடுஅதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டிஒரு மின்னஞ்சல் அனுப்பினான்மணிஅவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கஅந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்ததுஅடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்துஅப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன்டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன்தனதுஅலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.

கதவை திறந்தவன்வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா. 

*************
[+] 9 users Like Doyencamphor's post
Like Reply
Bro oru pathatrathodaiya vachirukinga avan senjathu manikamudiyatha kutram but avankitta ivanga firste ella unmaiyum solliruntha avan ivangalathandi poiirukamattanla. First ivanga relationship brother sister mode la irrunthuthan lovers ananga. Ivanga avanga ammakum manikum pesavavathu vaipu kudukanumla. Sethuvachirunga bro madhuvaiyum maniyaiyum.
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
Semma update brother.. meendum madhuvai pathathil mikka maghilchi...... good Going.....
[+] 1 user Likes manikandan123's post
Like Reply
Super bro.
Mathuvin nilamai, aval thaai meethu vandha irakkam aanal avalai mannikka thondra villai yendra kovam, vaalvil avan illai athey neram avanai thavira veru oruvan illai yndra Mana balam ovvoru nilaiyilum avan meethu aval konda kaadhal ninauvugal yendru avanai manathil sumanthu vaalgiral. Aanal yeppo unaruval thaayum, kaadhalanum avalukkaga mattum yethaiyum seiya thunivargal, udal thevai avargalukku perithalla yenbathai. Arumai. Superb writing.
[+] 1 user Likes praaj's post
Like Reply
சூப்பர் ப்ரோ என்ன நடக்குது எப்டி நடக்குது எதனால நடக்குது எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் இதெல்லாம் எதுமே தெரியாத மாதிரி கொண்டு போரீன்க பாருங்க எப்பா சாமி முடியலே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அடுத்த படைப்பு விரைவில்
[+] 2 users Like Muralirk's post
Like Reply
Extraordinary
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
நண்பா நீ வேற லேவல்  update fast
[+] 1 user Likes Vimal555's post
Like Reply
டாப்பு டக்கரு!!
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
Rocking update
[+] 2 users Like Ajay Kailash's post
Like Reply
Wonderful narration... Waiting for an update
[+] 1 user Likes vijayxossipy's post
Like Reply
Bro thakku pudika mudiyala eapada aduthu update varumnu iruku sema bro onga story
[+] 1 user Likes Kusuvidu's post
Like Reply
யோவ் தெறி அப்டேட். பட்மறுபடியும் சஸ்பென்சா ஓ கடவுளே .
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
இந்த மது பயபுள்ள அவ அம்மா குடுத்த பேக் பாத்திருப்பா அவ பெயரில் இருக்கும் பங்குகள் சம்பந்தமா பாக்க வந்திருப்பாளா இருக்கும். மணி செய்த தவறுக்கு தண்டனை உண்டு. ஆனால் காரணகர்த்தாவாக இருக்கும் மதுவுக்கு என்ன தண்டனை. மணி சாவதா தண்டனை.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Happy with the response and comments. Thank you everyone. Will try to post the next update by tonight or tomorrow.
Like Reply
(04-01-2021, 02:14 PM)Doyencamphor Wrote: Happy with the response and comments. Thank you everyone. Will try to post the next update by tonight or tomorrow.

Yeppo vandhalum sari Ana yepdilam varumnu aarvama erukku. Avanga APPA, Amma, sivagami nu yen yaridamum than unmaiyana nilai yennanu Evan sollala. Eva yen aval Amma sivagami ta ennum pesala.
Like Reply
(04-01-2021, 02:27 PM)praaj Wrote: Yeppo vandhalum sari Ana yepdilam varumnu aarvama erukku. Avanga APPA, Amma, sivagami nu yen yaridamum than unmaiyana nilai yennanu Evan sollala. Eva yen aval Amma sivagami ta ennum pesala.

தன் வலிகளை பெற்றோரிடம் சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு மணிக்கு வாய்த்திருந்தால், அவன் என் சிவகாமியை தேடி செல்லப் போகிறான்? இரண்டாவது கேள்விக்கு கடைசி பதிப்பிலேயே பதில் இருக்கிறது.
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)