27-12-2020, 03:27 PM 
		
	
	
		நன்றி நண்பர்களே.
	
	
	
All is well
	
	
| 
					Adultery இரண்டாம் முடிச்சு
				 | 
| 
		
		
		27-12-2020, 03:28 PM 
		
	 
		காலையில் கணவனுக்கு முன்பு எழுந்து காபி போட கிச்சனுக்கு சென்றாள். அங்கே அவளுடைய மாமியார் காபி போட்டுக் கொண்டிருந்தாள். "அத்தே நான் காபி போடுறேன். நீங்க வாங்க" கொஞ்சம் கூட அலங்காரம் களையாமல் வந்த இந்திராவை மேலிருந்து கீழ் கவனித்து விட்டு, " பரவாயில்லம்மா.. நீ போய் குளிச்சுட்டு வந்துரு. நான் தினமும் பண்றது தானே" "சரி அத்தே" குளிக்கச் சென்றாள். சற்று நேரத்தில் குளித்துவிட்டு தலையில் டவலை சுற்றிக் கொண்டு வந்தாள். மாமியார் காபியை ரெடியா வச்சுருந்தாங்க. "இந்தாம்மா.. இந்த ரெண்டு டம்ளர் எடுத்துக்கோமா. நான் கமல் கிட்ட இதை குடுத்துட்டு வரேன்." " அத்தே என்கிட்ட குடுங்க. நான் போய் குடுக்குறேன்" "பரவாயில்லமா" "அட குடுங்கனு சொல்றேன்." மாமியார் கையிலிருந்த டம்ளரை வாங்கிக் கொண்டாள். " அத்தே இனிமேல் நான் தான் காபி போட்டு எல்லாருக்கும் குடுப்பேன். உங்களுக்கு இனிமேல் ரெஸ்ட்" சொல்லிட்டு காபியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். கமல் மொட்டை மாடியில் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். 
All is well
 
		
		
		27-12-2020, 04:08 PM 
		
	 
		Super bro continue
	 
		
		
		27-12-2020, 05:14 PM 
		
	 
		Why are you posting in bits and pieces. Write a big update and post it a stretch.
	 
		
		
		27-12-2020, 05:43 PM 
		
	 (27-12-2020, 05:14 PM)Chennai Veeran Wrote: Why are you posting in bits and pieces. Write a big update and post it a stretch. Ithu en mulu nera velai illai nanba.. neram kidaikum pothu than type panna mudium. kathai eluthupavargalin soolnilaiyaum purinju kolla vendum. 
All is well
 
		
		
		27-12-2020, 05:46 PM 
		
	 (27-12-2020, 01:51 PM)adams_masala Wrote: How can we help with your financial situation? Send me a message bro. We can help on another. Ungal anbukku nandri nanba... 
All is well
 
		
		
		27-12-2020, 06:57 PM 
		
	 
		கமல் மொட்டை மாடியில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான்.  "குட் மார்னிங் சார்" என்றாள். வியர்வை வழிய தண்டால் செய்து கொண்டிருந்தவன் உடனே மேலே எழுந்து நின்று அண்ணியை பார்த்து சிரித்தான். "குட் மார்னிங் அண்ணி. நீங்க ஏன் இதெல்லாம் கொண்டு வந்துகிட்டு, நானே கீழ வந்து குடிச்சுருப்பேனே." வியர்வையை துடைத்தபடி பேசினான். "ஏன் நான் குடுத்தா குடிக்க மாட்டியா" சிரித்த முகத்துடன் கேட்டாள். "அச்சோ அப்படி இல்ல. உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான் சொன்னேன்." "அதெல்லாம் ஒரு சிரமம் இல்ல. ஆமா நீ போலீஸ் வேலைக்கு எதும் டிரை பண்றியா" " இல்லையே " "இல்ல.. நீ எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி, பாடிய டெவலப் பண்றியே அதான் கேட்டேன்." "அப்படி இல்ல. இது எனக்கு பிடிச்ச விசயம். இது உடம்புக்கும் நல்லதுதானே. அதான்" "ஓகே. ஓகே. சரி காஃபி ஆரிடப் போகுது. சீக்கிரம் குடிச்சுரு." காஃபியை குடித்து முடித்தான். "காலேஜ் லைஃப் எப்படி போகுது. நல்லா என்ஜாய் பண்றியா" "என்ஜாய் இல்ல. பட் ஜாலியா போகுது." "ஹோ நீ படிக்குற புள்ளையா" "படிப்பு தானே முக்கியம்" "நானெல்லாம் காலேஜ் டைம்ல செம்மையா என்ஜாய் பண்ணேன் தெரியுமா. பிரண்ட்ஸ் கூட சேர்ந்து அடிக்கடி காலேஜ் கட் அடிச்சுட்டு போயிறுவேன். நீயும் என்ஜாய் பண்ணிக்கோ. இந்த காலேஜ் லைஃப் அதுக்கு அப்புறம் கிடைக்காது." "பார்ர்ரா.. பாத்தா நல்ல புள்ள மாதிரி இருந்துகிட்டு இந்த வேலையெல்லாம் செஞ்சீங்களா. நீங்க சைலண்ட் டைப்னு நெனச்சேன்." "நானா.. ஹா.. ஹா.. நான் எவ்வளவு வாயடிப்பேன் தெரியுமா. போக போக பாரு. " "ஹா.. ஹா.. அப்படியா. சரி பாக்கலாம்." "சரி நான் கீழ போறேன். நீ காலேஜ் க்கு கிளம்பு. நான் பேசுனா பேசிகிட்டே இருப்பேன். இனிமே இங்க தானே இருக்க போறேன். நிறைய பேசலாம்" டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள். 
All is well
 
		
		
		28-12-2020, 07:16 AM 
		
	 
		Hi nanba, Nalla kondu poringa story ah. Congrats and continue nanba. 
		
		
		30-12-2020, 04:24 PM 
(This post was last modified: 30-12-2020, 04:26 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		இந்திராவின் கலகப்பான பேச்சு வீட்டில் அனைவரையும் கவர்ந்தது. வெகு விரைவிலேயே அனைவருடனும் நெருக்கமாகி விட்டாள்.  கமலும் இந்திராவும் நாளுக்கு நாள் நெருங்கிய நண்பர்களானார்கள். ஆனால் இருவரின் மனதிலும் கடுகளவு கூட தவறான எண்ணம் வரவில்லை. ஜாலியாக பேசினாலும் வரம்புமீறி இருவரும் பேசியது இல்லை. அண்ணி என்கிற மரியாதையுடனே கமல் பழகினான். இந்திராவிற்கு கணவனுடன் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்காத குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. சங்கரும் வேலைக்கு முயற்சி செய்து கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான். ஆறு மாதங்கள் கடந்து விட்டது. சங்கர் டெல்லியில் இருக்கும் நிறுவனத்தில் வேலைக்கு அப்ளை செய்திருந்தான். அங்கிருந்து இண்டர்வியூ லெட்டர் வந்திருந்தது. ஏற்கனவே ஆன்லைனில் இண்டர்வியூ செய்ததில் அவனுடைய வேலை 99% முடிவாகிவிட்டது. ஜஸ்ட் வெரிபிகேசன் முடித்துவிட்டு, அப்பாயின்மென்ட் லெட்டரை வாங்கி செல்லுமாறு அழைத்தனர். சங்கருக்கு மிகுந்த சந்தோசம். வீட்டில் அனைவரிடம் சொல்லிவிட்டு டெல்லிக்கு கிளம்பினான். அவன் கிளம்பிய பின்பு பகல் வேளையில் இந்திரா மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய மாமியார் அங்கே வந்தாள். "இந்திரா உன்கிட்ட ஒன்னு கேக்கனும்" "என்ன அத்தே" " நீ சந்தோசமா இருக்கியா" "நான் சந்தோசமா தான் இருக்கேன்" "நான் கேக்குறது புரியுதா.. நீ சங்கர் கூட சந்தோசமா இருக்கியா" "அது.. சந்தோசமா தான் இருக்கேன் அத்தே" "என்கிட்ட மறைக்காத இந்திரா. தினமும் காலையில நீ வரும் போது பாத்துகிட்டு தான் இருக்கேன். ரெண்டு பேரும் விரும்பிதானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சு." "அத்தே எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல. அவருக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் தள்ளிப் போட்டுருக்கோம். நான் குடுத்த நெருக்கடில என்னைய கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிருச்சு. ஆம்பளைக்கு அடையாளமே வேலை தானே. அவருக்குனு ஒரு அடையாளத்தை தேடிக்கிட்டு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்னு சொன்னாரு. அதான்..." "உன்ன நெனச்சா பெருமையா இருக்குமா. சங்கர் டெல்லிக்கு போயிட்டு வேலையோட தான் வரப்போறான். அதுக்கு உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே." "இல்ல" சிரித்துக் கொண்டாள். " இன்னும் பத்து மாசத்துல ஒரு பேரப்புள்ளய பெத்துக்குடுக்கனும் சரியா" "ஒன்னு என்ன, ரெண்டாவே பெத்து தரேன். கவலையே படாதீங்க." ரெண்டு பேரும் சிரித்துக் கொண்டனர். சங்கர் டெல்லிக்குச் சென்றான். அங்கு வேலை கன்பர்ம் செய்யப்பட்டது. தனது ஊருக்கு அருகிலேயே உள்ள கிளை நிறுவனத்தில் வேலை கிடைத்ததையும் சந்தோசனுடன் போனில் கூறினான். இதைக் கேட்டு வீட்டில் அனைவரும் சந்தோசப்பட்டனர். இரவு டிரெயினில் கிளம்புவதாக சொல்லிவிட்டு போனை வைத்தான். அவர் வரவுக்காக காத்திருந்த அனைவருக்கும் வந்து சேர்ந்தது துயர செய்தி தான். சங்கர் வந்த ரயில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. இந்த செய்தி அனைவரின் தலையிலும் இடியாக இறங்கியது. 
All is well
 
		
		
		30-12-2020, 04:46 PM 
		
	 
		Ada kadavuley. Ithu yenna kodumai. Sari aduthu yennanu parpom. Nalla irukku continue pannunga.
	 
		
		
		30-12-2020, 06:16 PM 
		
	 
		Wow turn point super continue bro waiting for next update
	 
		
		
		31-12-2020, 03:37 AM 
		
	 
		Semma twist bro
	 
		
		
		31-12-2020, 06:40 AM 
		
	 
		Husband died, she is going to have sex with bil. She is not cheating her husband how itcwillbe adultery. Change to misc. Erotica
	 
		
		
		01-01-2021, 05:22 AM 
		
	 
		Wish author and readers a very happy and prosperous New year
	 
		
		
		02-01-2021, 08:49 AM 
		
	 
		Ena oru twist. Annanuku end card potachu ini thampi ah anni ku marriage pani vachu thampium anni um jolly ah Iruka porangalo?
	 
		
		
		08-01-2021, 04:18 PM 
(This post was last modified: 08-01-2021, 04:20 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		பதறியடித்து போய் அவனுடைய பெயரை சொல்லி, ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்த போது, அவனுடைய பெயரை செக் செய்து பார்த்துவிட்டு,  அவன் வந்த பெட்டியில் தீப்பிடித்து எரிந்ததால், யாரையும் அடையாளம் காண முடியாது என கூறிவிட்டனர். அரசாங்க சார்பாகவே அனைவரின் உடலையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அங்கு அனைவரின் குடும்பத்தாரும் அழுது தீர்த்து அடக்கம் செய்தனர்.  அக்கம் பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்து விட்டுச் சென்றனர். அப்போது ஒரு பெண் இந்திரா வந்த நேரம் தான் சங்கரின் இறப்புக்கு காரணம் என்று கூற, விசாலாட்சி கோவமானாள். " இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இப்படியே பேசுவீங்க. பொண்ணு பொறந்த நேரம் சரியில்ல, சமஞ்ச நேரம் சரியில்ல, வீட்டுல காலை வச்ச நேரம் சரியில்ல, புள்ள பெத்த நேரம் சரியில்லனு... என் மகனுக்கு இந்த வயசுல போகனும்னு விதி போயிட்டான். அது ஒரு விபத்து அவ்வளவு தான். இனிமே என் மருமகளை பத்தி ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது." இந்திரா தன் மாமியாரை கட்டிப்பிடித்து அழுதாள். இரண்டு நாட்கள் கடந்தன. இந்திராவின் அப்பாவும், அம்மாவும் இந்திராவை பார்க்க வந்தனர். இந்திராவின் அம்மா பேச ஆரம்பித்தாள். " நாங்க அவ்வளவு சொன்னோம் கேட்டியாடி. இப்போ பாத்தியா, பாதிலயே தாலி அறுத்துகிட்டு நிக்கிற. இதுக்குத் தான்டி பெரியவங்க சொல்றதை கேக்கனும். ஒழுங்கா எங்க கூட வந்துரு. உனக்கு வேற வாழ்க்கையை நாங்க அமைச்சு குடுக்குறோம்." "அம்மா, நீ இதுக்குத் தான் இங்க வந்தியா. நான் கஷ்டத்துல இருக்கும் போது ஆறுதல் சொல்லுவனு பார்த்தா, இப்படி குத்திகாமிக்கிற. நான் இங்க தான் இருப்பேன். இதுதான் என் குடும்பம். நீங்க கெளம்புங்க." "இங்கயே இருந்து உன் வாழ்க்கையை கெடுத்துக்க போறியா. உனக்கு இப்போ தெரியாது. பின்னாடி தான் கவலைப்படுவ. ஒழுங்கா சொல்றதை கேளு." "நான் செத்தாலும் இங்க தான் சாவேன் போதுமா. நான் எங்கயும் வரமாட்டேன்." அழுதாள். இந்திராவின் அம்மாவுடைய கோவம் விசாலாட்சியின் பக்கம் திரும்பியது. " ஏன்மா அவதான் புரியாம பேசுறா, நீங்க சொல்லமாட்டீங்களா. அவ இங்கேயே இருந்து, வாழ்க்கையை கெடுத்துக்கனுமா.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளோட வாழ்க்கை இப்படி பாதிலயே முடிஞ்சுருச்சுனா, இப்படித்தான் இருப்பீங்களா? உங்க குடும்பத்தை நம்பிதானே வந்தா , அவளோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க. " விசாலாட்சி நீண்ட அமைதிக்குப் பின் பேசினாள். " இந்திரா எங்களை நம்பி வந்த பொண்ணு. அவ வாழ்க்கை பாதிலயே முடிஞ்சுபோக நாங்க விட மாட்டோம். இந்திரா என் மருமகளா மட்டும் நினைக்கல. மகளாவும் நெனக்கிறேன். அவ சந்தோசமா வாழனும். இந்திராவுக்கும், என்னோட ரெண்டாவது மகனுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்." விசாலாட்சி இந்த வார்த்தையை சொன்னதும் எல்லாரோட முகத்திலும் அதிர்ச்சி. இந்திராவின் குடும்பத்தாரை தவிர. "அத்தே என்ன சொல்றீங்க" கண்கலங்கியபடி அதிர்ச்சியோட கேட்டாள் இந்திரா. "இந்திரா இது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். இதை நீ எனக்காக ஏத்துக்கிட்டுத்தான்மா ஆகனும்." "அத்தே.. அவங்க எதோ சொல்றாங்கனு இந்த முடிவுக்கு வராதீங்க அத்தே ப்ளீஸ். இந்த வீட்டுல ஒரு மூலைல இருந்துட்டு போறேன்." விசாலாட்சி இந்திராவை ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவை அடைத்தாள். " இந்திரா, நீ இந்த வீட்டுல கடைசி வரை மருமகளா இருக்க ஆசைப்படுறீல. அதே தான் என்னோட ஆசையும். நீ என் மருமகளா இருந்து பேரக்குழந்தையை பெத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்." "அத்தே நீங்களாவது என் கஷ்டத்தை புரிஞ்சுகோங்க." "இந்திரா நீ சங்கரை கல்யாணம் செஞ்சதால இந்த வீட்டுக்கு மருமகளா 
All is well
 
		
		
		08-01-2021, 04:21 PM 
(This post was last modified: 08-01-2021, 04:23 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		ஆயிட்ட. ஆனா ஒரு நாள் கூட அவன் கூட பொண்டாட்டியா குடும்பம் நடத்தலையே. இப்படி ஒரு பொண்ண வாழ்க்கை முழுசும் கண்ணிகழிக்காம வச்சுருக்குறது பெரிய பாவம்மா. " "அத்தே அதை நான் பெருசா எடுத்துக்கல." "இப்போ சொல்லலாம். உன் அம்மா சொன்ன மாதிரி எதிர்காலத்துல எப்போவாது நீ கவலைபட கூடாதுனு தான் சொல்றேன். உன் வாழ்க்கையை கெடுத்துட்டோம்னு உன் அம்மா இப்போ சொல்றமாதிரி, இன்னும் கொஞ்சநாள் கழிச்சு ஊறே பேசும். மத்தவங்களை விடு. என்னோட மனசாட்சியே என்னைய கொன்னுரும்." இந்திரா குழப்பதோட அமைதியாய் நின்றாள். "இதுக்கு மேல உன் காலுல விழுறதை தவிர எனக்கு வேற வழி தெரியலமா" விசாலாட்சி இந்திரா காலில் விழ போனாள். இந்திரா பதறியடித்து தடுத்தாள். " அத்தே.. என்ன பண்றீங்க. நீங்க என் சாமி மாதிரி. அவரு என்னைய விரும்புறதை சொன்னதும், நீங்களே கல்யாணம் பண்ணி வச்சீங்க. என்னோட நேரம் சரியில்லைனு சொன்னதும், அவங்களை திட்டி அனுப்பு றீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன். நான் கல்யாணம் பண்ணிகிறேன்." விசாலாட்சி இந்திராவோட கண்ண தொடச்சிவிட்டு வெளிய கூட்டிட்டு போனாள். ் " இந்திரா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா. சின்னவனுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்." அதற்கு இந்திராவோட அம்மா " படிப்பு முடிஞ்சதும் ஊரறிய கல்யாணம் வச்சுக்கலாம். இப்போதைக்கு நமக்கு மட்டும் தெரியுற மாதிரி ஒரு மஞ்சக்கயிறை கட்ட சொல்லுங்க. எனக்கு அது போதும்." "அம்மா ஏம்மா இப்படி பண்ற" "இந்திரா அவங்க ஆசைப்படியே செஞ்சுருவோம் விடு." விசாலாட்சி விருவிருனு உள்ள போய் மஞ்சள் கயிறை தாலியாக்கி கொண்டு வந்து கமலிடம் நீட்டினாள். "கட்டு" "அம்மா..." இழுத்தான். "கட்டுனு சொல்றேன்ல" மஞ்சள் கயிறை வாங்கிக் கொண்டு இந்திராவிற்கு அருகில் சென்றான். இந்திரா தலை குனிந்தபடி நின்றாள். அவள் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடியே தாலியைக் கட்டினான். தாலியை கட்டியதும் இருவரும் தனித்தனியே விலகி நின்று கொண்டனர். இந்திராவின் அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. 
All is well
 
		
		
		08-01-2021, 04:32 PM 
		
	 
		Super update continue bro
	 
		
		
		08-01-2021, 06:18 PM 
		
	 
		Super brother semmaya pothu update
	 
		
		
		08-01-2021, 06:55 PM 
		
	 
		சூப்பர்
	 | 
| 
					« Next Oldest | Next Newest »
				 |